என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. மோமோ விளையாட்டின் விபரீதத்தை சொல்லி குழந்தைகள் பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.
“வெளுத்ததெல்லாம் பால்” என நினைக்கும் வயது சிறுவர்களுக்கு உரியது. “எனக்கு எல்லாம் தெரியும்“ என நினைக்கும் வயது பதின்வயதுகளுக்கு உரியது. இவர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் மோமோ! உயிர்க்கொல்லி விளையாட்டு என்றவுடன் சட்டென உங்கள் நினைவுக்கு புளூவேல் விளையாட்டு வந்திருக்கும். கடந்த 2016, 2017களில் சுமார் 130 உயிர்களைப் பலிவாங்கிய விளையாட்டு அது. ஐம்பது நாட்கள், ஐம்பது சவால்கள். ஐம்பதாவது சவால் தற்கொலை செய்து கொள்வது என்பது தான் புளூவேல் விளையாட்டின் அடிப்படை.அந்த வலையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் தான்.
இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான். இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும்வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை.
“ஹாய்“ என வெகு சாதாரணமாக ஏதோ ஒரு எண்ணிலிருந்து வருகின்ற வாட்ஸ்அப் மெசேஜ் தான் மோமோவின் தொடக்கப் புள்ளி. பதிலுக்கு ஒரு ஹாய் அனுப்பினால், ‘என் பெயரை மோமோ என பதிவு செய்து கொள். நாம் நண்பர்களாக இருப்போம்“ என அடுத்த மெசேஜ் வரும். பதிவு செய்தால் ஒரு பயமுறுத்தும் பெண்ணின் படம் டிஸ்ப்ளே பிக்சராக தெரியும்.
அந்த படத்தை வடிவமைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த மெடோரி ஹாயான்ஷி எனும் கலைஞர். ஆனால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சரி, விஷயத்துக்கு வருவோம். கள்ளம் கபடமில்லாத பிள்ளைகள் அந்த எண்ணைச் சேமித்து வைத்தால் அடுத்தடுத்த மெசேஜ்கள் வரும். முதலில் வெகு சாதாரணமாக ‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?‘ என்பது போல உரையாடல்கள் ஆரம்பித்து வளரும். ஒரு சின்னப் பெண் பூசணிக்காய் ஒன்றை வைத்திருப்பது போலவோ அல்லது மக்கள் கூட்டம் போலவோ வெகு சாதாரணமான சில புகைப்படங்களும் வரும்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திசை மாறும். செல்பி எடுத்து அனுப்பு, அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பு என்பது போல உரையாடல் நீளும். சில நாட்களுக்குப் பின் விபரீதமான செயல்களைச் செய்யச் சொல்லி மெசேஜ் வரும். அதை மறுக்கும் போது அந்தரங்கத்தை வெளியிடுவேன் என்றோ, நெருக்கமானவர்களை ஏதாவது செய்து விடுவேன் என்றோ மிரட்டல் வரும். தலையில்லாத மனிதர்கள், கோரமான அச்சுறுத்தும் புகைப்படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும்.
“இதோ செத்துப் போனவர்களுடைய புகைப்படங்கள்“ இதே போல நீயும் செத்துப் போ என்பது போல புகைப்படங்கள் மன உளைச்சலை அதிகரிக்கும். நான் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உன் தோழி இன்னும் வீடு போய் சேரவில்லை என தற்போதைய தகவலைச் சொல்லி வெலவெலக்க வைக்கும். கடைசியில் மன அழுத்தத்தின் உச்சத்தில் போய் தற்கொலை செய்ய வைக்கும். அதை வீடியோவாகவும் பதிவு செய்யவும் வைக்கும். மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இத்தகைய வாட்ஸ் அப் எண்கள் வலை வீசுகின்றன. இவை ஒரு சில எண்கள் அல்ல. ஒரு சில எண்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய குழு என்பதை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பார்ப்பதற்கு எளிதான விஷயம் போல தோற்றமளிக்கும் மோமோவில் கண்ணுக்குத் தெரியாத பல பகீர் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.
முதலாவதாக, மோமோ அனுப்புகின்ற படங்கள் சாதாரண படங்கள் அல்ல. அவை மால்வேர் எனப்படும் வைரஸ்களைத் தாங்கி வருகின்ற படங்கள். இணையத் தாக்குதல் வெறுமனே நடக்காது. நாம் உள்ளிருந்து கதவைத் திறக்காமல் யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாது இல்லையா ? அதே போல, நாம் அனுமதி கொடுக்காமல் யாரும் நமது நெட்வர்க்கை உடைக்க முடியாது.
மோமோ அனுப்புகிற படங்களை நாம் டவுன்லோட் செய்யும் போது அந்த மால்வேர் நமது மொபைலுக்குள் புகுந்து சமர்த்தாய் அமர்ந்து கொள்கிறது. முதலில் நமது முன்பக்க கேமராவை அது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அது இங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நம்மையறியாமலேயே மோமோவுக்கு வீடியோவாகக் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. நமது முக பாவனைகள், நாம் யாரிடம் பேசுகிறோம், நமது மனநிலை எப்படி இருக்கிறது, பயப்படுகிறோமா என்பதையெல்லாம் அது கண்காணிக்கிறது.
இரண்டாவதாக நமது மொபைலுக்குள் இருக்கின்ற தகவல்களையெல்லாம் அப்படியே அபேஸ் செய்கிறது. தனிநபர் ரகசியங்கள் வெளியே செல்லும் போது அது எத்தகைய அச்சுறுத்தலுக்கும் விதையாகி விடுகிறது. மூன்றாவதாக, அடுத்தவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோ மனநிலை கொண்டவர்களுக்கு மோமோ விளையாட்டு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது. தாங்கள் கவனிக்கப்படுகிறோம், தங்களைப் பற்றி உலகமே பேசுகிறது, தாங்கள் நினைத்தால் ஒருவரை சாகடிக்க முடியும் என்பதெல்லாம் அவர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.
சரி, இந்த மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ?
குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள்.புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.
எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள். வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்.
குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள்.
தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.
சேவியர்
இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான். இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும்வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை.
“ஹாய்“ என வெகு சாதாரணமாக ஏதோ ஒரு எண்ணிலிருந்து வருகின்ற வாட்ஸ்அப் மெசேஜ் தான் மோமோவின் தொடக்கப் புள்ளி. பதிலுக்கு ஒரு ஹாய் அனுப்பினால், ‘என் பெயரை மோமோ என பதிவு செய்து கொள். நாம் நண்பர்களாக இருப்போம்“ என அடுத்த மெசேஜ் வரும். பதிவு செய்தால் ஒரு பயமுறுத்தும் பெண்ணின் படம் டிஸ்ப்ளே பிக்சராக தெரியும்.
அந்த படத்தை வடிவமைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த மெடோரி ஹாயான்ஷி எனும் கலைஞர். ஆனால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சரி, விஷயத்துக்கு வருவோம். கள்ளம் கபடமில்லாத பிள்ளைகள் அந்த எண்ணைச் சேமித்து வைத்தால் அடுத்தடுத்த மெசேஜ்கள் வரும். முதலில் வெகு சாதாரணமாக ‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?‘ என்பது போல உரையாடல்கள் ஆரம்பித்து வளரும். ஒரு சின்னப் பெண் பூசணிக்காய் ஒன்றை வைத்திருப்பது போலவோ அல்லது மக்கள் கூட்டம் போலவோ வெகு சாதாரணமான சில புகைப்படங்களும் வரும்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திசை மாறும். செல்பி எடுத்து அனுப்பு, அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பு என்பது போல உரையாடல் நீளும். சில நாட்களுக்குப் பின் விபரீதமான செயல்களைச் செய்யச் சொல்லி மெசேஜ் வரும். அதை மறுக்கும் போது அந்தரங்கத்தை வெளியிடுவேன் என்றோ, நெருக்கமானவர்களை ஏதாவது செய்து விடுவேன் என்றோ மிரட்டல் வரும். தலையில்லாத மனிதர்கள், கோரமான அச்சுறுத்தும் புகைப்படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும்.
“இதோ செத்துப் போனவர்களுடைய புகைப்படங்கள்“ இதே போல நீயும் செத்துப் போ என்பது போல புகைப்படங்கள் மன உளைச்சலை அதிகரிக்கும். நான் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உன் தோழி இன்னும் வீடு போய் சேரவில்லை என தற்போதைய தகவலைச் சொல்லி வெலவெலக்க வைக்கும். கடைசியில் மன அழுத்தத்தின் உச்சத்தில் போய் தற்கொலை செய்ய வைக்கும். அதை வீடியோவாகவும் பதிவு செய்யவும் வைக்கும். மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இத்தகைய வாட்ஸ் அப் எண்கள் வலை வீசுகின்றன. இவை ஒரு சில எண்கள் அல்ல. ஒரு சில எண்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய குழு என்பதை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பார்ப்பதற்கு எளிதான விஷயம் போல தோற்றமளிக்கும் மோமோவில் கண்ணுக்குத் தெரியாத பல பகீர் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.
முதலாவதாக, மோமோ அனுப்புகின்ற படங்கள் சாதாரண படங்கள் அல்ல. அவை மால்வேர் எனப்படும் வைரஸ்களைத் தாங்கி வருகின்ற படங்கள். இணையத் தாக்குதல் வெறுமனே நடக்காது. நாம் உள்ளிருந்து கதவைத் திறக்காமல் யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாது இல்லையா ? அதே போல, நாம் அனுமதி கொடுக்காமல் யாரும் நமது நெட்வர்க்கை உடைக்க முடியாது.
மோமோ அனுப்புகிற படங்களை நாம் டவுன்லோட் செய்யும் போது அந்த மால்வேர் நமது மொபைலுக்குள் புகுந்து சமர்த்தாய் அமர்ந்து கொள்கிறது. முதலில் நமது முன்பக்க கேமராவை அது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அது இங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நம்மையறியாமலேயே மோமோவுக்கு வீடியோவாகக் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. நமது முக பாவனைகள், நாம் யாரிடம் பேசுகிறோம், நமது மனநிலை எப்படி இருக்கிறது, பயப்படுகிறோமா என்பதையெல்லாம் அது கண்காணிக்கிறது.
இரண்டாவதாக நமது மொபைலுக்குள் இருக்கின்ற தகவல்களையெல்லாம் அப்படியே அபேஸ் செய்கிறது. தனிநபர் ரகசியங்கள் வெளியே செல்லும் போது அது எத்தகைய அச்சுறுத்தலுக்கும் விதையாகி விடுகிறது. மூன்றாவதாக, அடுத்தவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோ மனநிலை கொண்டவர்களுக்கு மோமோ விளையாட்டு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது. தாங்கள் கவனிக்கப்படுகிறோம், தங்களைப் பற்றி உலகமே பேசுகிறது, தாங்கள் நினைத்தால் ஒருவரை சாகடிக்க முடியும் என்பதெல்லாம் அவர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.
சரி, இந்த மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ?
குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள்.புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.
எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள். வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்.
குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள்.
தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.
சேவியர்
ஓட்ஸ் வைட்டமின்கள், தாது உப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை கொண்டது என்பதாலும் இது ஆரோக்கிய உணவில் உயர்ந்த இடத்தினைப் பிடிக்கின்றது.
ஓட்ஸ்: இந்த தானிய உணவு கடந்த சில வருடங்களாக நம் நாட்டில் அதிக பழக்கத்தில் உள்ளது. வெளி நாட்டில் அதிக பழக்கத்தில் இருக்கும் இந்த உணவு நமக்கும் நன்கு பழகி விட்டது. இந்த உணவில் தான் எல்லா நன்மையும் என எதனையும் குறிப்பிட்டு வலியுறுத்தப்படுவதில்லை. காரணம் ஒவ்வொருவர் விருப்பம் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு உணவிலும் என்ன நன்மை, தீமை உள்ளது என்பதனை அனைவரும் அறிவது அவசியமே. அவ்வகையில் அதிகம் பேசப்படும் ஓட்ஸ் தானிய உணவினைப் பற்றி நாம் மீண்டும் பார்ப்போம்.
ஓட்ஸ் ஒரு முழு தானிய உணவு. ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவது மிகச் சிறந்த நார்சத்து கொண்டது என்பதாலும், வைட்டமின்கள், தாது உப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை கொண்டது என்பதாலும் இது ஆரோக்கிய உணவில் உயர்ந்த இடத்தினைப் பிடிக்கின்றது. மேலும் இருதய நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக இது பரிந்துரைக்கப்படுகின்றது.
சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினை உணவில் நன்கு கட்டுபடுத்துவதாலும், கெட்ட கொழுப்பினை நன்கு கட்டுப்படுத்துவதாலும் இந்த ஓட்ஸ் உணவிற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது.
இன்று ஓட்ஸ் கஞ்சி, ரொட்டி, பிஸ்கட், ஓட்ஸ் தோசை, இட்லி என்று நம் உணவுப் பழக்கத்திற்கேற்ப கிடைக்கின்றது. 30 கிராம் ஓட்ஸில் 117 கலோரி சத்து உள்ளது. 66 சதவீத கார்போஹைடிரேட் (மாவுசத்து), 17 சதவீதம் புரதம், 7 சதவீத கொழுப்பு, 11 சதவீத நார்சத்து உள்ளது.
100 கிராம் ஓட்ஸில் கலோரி சத்து-389, கொழுப்பு-6.9 கிராம், நீர்-8 சதவீதம், புரதம் 16.9 கி., மாவுசத்து-66.3 கி., சர்க்கரை இல்லை, நார்சத்து 10.6 கி உள்ளது.
ஓட்ஸில் உள்ள புரதம் மற்ற தானிய உணவில் உள்ளதைவிட அதிகமாக உள்ளது. மேலும் இது ‘க்ளூடன்’ இல்லாத உணவு. எனவே க்ளூடன் அலர்ஜி உள்ளவர்கள் ஓட்ஸ் உணவினை நன்கு எடுத்துக் கொள்ள முடியும்.
வைட்டமின்கள், தாது உப்புகள்:
* மங்கனீஸ்: முழு தானிய உணவுகளில் அதிகம் இருக்கும். இந்த மங்கனீஸ் ஓட்ஸிலும் நிறைய உள்ளது. உடல் வளர்ச்சி செயல்பாட்டிற்கும் மிக முக்கியமானது.
* இதிலுள்ள பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியம், திசுக்கள் ஆரோக்கியம் இதற்கு உதவுகின்றது.
* காப்பர்: நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது. இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுவது.
* வைட்டமின் பி1-தயமின், இரும்பு, செலினியம், மக்னீசியம், ஸிங்க் ஆகியவை நல்ல அளவில் உள்ளன.
ஓட்ஸின் நன்மைகள்:
* இருதய நோய் பாதிப்புகள் வெகுவாய் குறைகின்றன.
* உயர் ரத்த அழுத்தம் குறைகின்றது.
* நீரிழிவு நோய் 2-ம் பிரிவு வெகுவாய் கட்டுப்படுகின்றது.
* அதிக பசி ஏற்படாமல் கட்டுப்படுத்துகின்றது.
* க்ளூடன் இல்லாத உணவு.
* நோய் எதிர்ப்பு சக்தியினை நன்கு கூட்டுகின்றது.
பொதுவில் ஓட்ஸ் உணவு பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சிலருக்கு கோதுமை ‘க்ளூடன்’ அலர்ஜி போல் ஓட்சும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவர்கள் ஓட்ஸினை அடியோடு தவிர்க்க வேண்டும்.
பசி:- உடலின் செயல்பாட்டிற்கு சக்தி வேண்டும் என்பதன் வெளிப்பாடே பசி. பசி ஏற்படும் பொழுது வயிற்றில் ஒரு வித உணர்வு ஏற்படும். அதையே ‘பசி வயிற்றை கிள்ளுகின்றது’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றோம். அந்நேரம் சாப்பிடவில்லை என்றால் தலைவலிக்கும், எரிச்சல் வரும், எதிலும் கவனம் செலுத்த முடியாது.
சிலருக்கு சாப்பிட்டு பல மணி நேரம் சென்றுதான் பசி ஏற்படும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. பலருக்கு சரியாக காலை, மாலை, இரவு என்ற முறையில் பசி ஏற்படும். இதுவும் அவர்கள் தன் உடலையும் மனதையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதைக் காட்டும். ஆனால் சிலர் சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள்ளாக பசிக்கின்றது என்பர். சிறு பிள்ளைகள் இப்படி கேட்கும் பொழுது பிஸ்கட், சாக்லேட் கேட்கும். அதை அவர்களது குழந்தைதனமான தந்திரம் என்று விட்டு விடுவோம்.

ஆனால் சில வளர்ந்தவர்கள் தனக்கு அடிக்கடி பசி ஏற்படுகின்றது என்று கூறும் பொழுது அதனைப் பற்றி நன்கு கவனிக்க வேண்டும். நம் உணவு முறை சரிவர இல்லாத காரணத்தினால் அடிக்கடி பசி ஏற்படலாம்.
தேவையான அளவு புரதம் உணவில் இல்லாமை:
புரதத்திற்கு ஒரு குணம் உண்டு. குறைந்த கலோரி சத்தில் வயிறு நிறைந்த உணர்வினைத் தரும். பசி உணர்வை தூண்டும். ஹார்மோன்களின் அளவும் இதனால் கட்டுப்படுத்தப்படும். புரதம் இல்லாத உணவினை உட்கொள்பவர்களுக்கு எளிதில் பசி எடுக்கும். எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். இரவு உணவிற்குப் பிறகு சிப்ஸ், முறுக்கு போன்றவைகளை கொறித்துக் கொண்டே இருக்கும் பழக்கம் நீங்கும். இதன் காரணமாக கூடிக் கொண்டே போகும் எடை குறையும்.
இதனைப் பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இதனை உறுதி செய்தன.ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் நன்கு சேர்த்துக் கொண்டால் அதிக பசி அடங்கும்.
அசைவம், மீன், முட்டை இவைகளில் சிறந்த அளவு புரதம் உள்ளது. பால், தயிர், பால் சார்ந்த பொருட்கள் பருப்பு, கொட்டைகள், விதைகள், முழு தானிய உணவுகள் இவற்றில் புரதம் உள்ளது.
எனவேதான் நம் பாரம்பரிய உணவில் இட்லி-வடை, பொங்கல்-வடை, பருப்பு பாயாசம், வேர்கடலை உருண்டை, பொட்டுகடலை உருண்டை என்ற உணவுகள் சேர்க்கப்பட்டு இருந்தன.
• அடிக்கடி பசி எடுப்பதற்கு மற்றொரு காரணம் ஒருவர் போதுமான அளவு தூங்குவதில்லை. தூக்கம் மூளையின் சிறந்த செயல் பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், நாட்பட்ட நோய்கள் பாதிப்புஇல்லாமல் இருப்பதற்கும் அவசியமாகின்றது. தூக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு சற்று புரதத்தினை உணவில் கூட்டிய பொழுது அவர்கள் நன்கு தூங்கினர். பசியின் பாதிப்பும் அதிகம் குறைந்தது.
• அதிகம் நார் சத்து இல்லாத உணவினை உண்பதும் அடிக்கடி பசி ஏற்பட காரணம் ஆகின்றது. வெள்ளை பிரெட், மைதாவால் ஆன பிஸ்கட்டுகள், நான், கேக், சோடா, மிட்டாய் போன்ற உணவுகள் ரத்தத்தில் எளிதில் சர்க்கரையினை ஏற்றி விடும். இதனால் அதிக இன்சுலின் சுரந்து இந்த சர்க்கரை அளவினை குறைக்க முற்படும். திடீரென ஏறும் சர்க்கரை, பின் அதிக இன்சுலின் சுரப்பதினால் திடீரென இறங்கும் சர்க்கரை பசியினை ஏற்படுத்தும். ஆகவே மேற்கூறிய உணவுகளை அதிகம் தவிர்த்து விடுவது நல்லது.
• மிகக் குறைவான கொழுப்பு உணவும் அடிக்கடி பசியினை ஏற்படுத்தும். பலர் கொழுப்பை கண்டு அதிகம் பயந்து விடுகின்றனர். நமக்கு நல்ல கொழுப்பும் தேவைதான். கொழுப்பு சேர்த்த உணவால் பசி எடுக்க சற்று நீண்ட நேரம் பிடிக்கும்.சீஸ், முட்டை, மீன், சியா விதை, பாதாம், வால்நட், ஆலிவ் தேங்காய் எண்ணெய் போன்றவற்றினை ஒவ்வொரு வேளை உணவிலும் ஏதாவது ஓரிரு பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• நீங்கள் தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அடிக்கடி பசிப்பது போல் தோன்றும். எனவே தேவையான அளவு நீர் குடியுங்கள். நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.
• உணவில் நார்சத்து இல்லையென்றாலும் அடிக்கடி பசி ஏற்படும். எனவே உணவில் நார்சத்து மிக அவசியம்.
• அநேகர் உணவு உண்ணும் பொழுது டி.வி. பார்த்துக் கொண்டோ, செல்போன் பார்த்துக் கொண்டோ அல்லது செல்போனில் பேசிக் கொண்டோ உணவை உண்கின்றனர். இதனால் அவர்கள் அவசரம் அவசரமாக உண்கிறார்கள். இதனால் முழுமையாக மென்று உண்ண முடிவதில்லை. சிலர் வறுத்த, பொறித்த உணவுகளை அதிகம் உண்டு விடுகின்றனர். இதனாலும் அடிக்கடி பசி ஏற்படும். எனவே உண்ணும் பொழுது அமைதியாய், பேசாமல் உணவினைப் பார்த்து பொறுமையாய் மென்று சாப்பிடவும்.
• மிக அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் அதிக பசி ஏற்படும்.
• அதிக மது அருந்துபவர்களுக்கு அதிக பசி ஏற்படும். ஏனெனில் வயிறு நிறைவினை உணர்த்தும் ஹார்மோன் குறைந்து விடுவதால் அதிக பசி உணர்வு ஏற்படும்.
• புட்டிகளில் காற்று அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் சூப், ஷேக்ஸ் இப்படி திரவு உணவு வகைகளையே சிலர் உண்பர். இவர்களுக்கு திட உணவினை உட்கொண்ட நிறைவு இராது. இதன் காரணமாக அடிக்கடி பசி ஏற்படும்.
• மிகுந்த ஸடிரெஸ் உள்ளவர்களுக்கு அதிக கார்டிலால் ஹார்மோன் சுரப்பதால் அடிக்கடி பசி ஏற்படும்.
• சில குறிப்பிட்ட பிரிவு மருந்துகள் அதிக பசியினை ஏற்படுத்தும்.
• அவசரம், அவசரமாக உணவை மெல்லாமல் அப்படியே விழுங்குபவர் களுக்கு அதிக பசி ஏற்படும்.
• சர்க்கரை நோய் உடையவர்கள், தைராய்டு அதிகம் சுரப்பவர்கள் மற்றும் மன உளைச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு மருத்துவ காரணங்களால் அடிக்கடி பசி ஏற்படும்.
ஓட்ஸ் ஒரு முழு தானிய உணவு. ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவது மிகச் சிறந்த நார்சத்து கொண்டது என்பதாலும், வைட்டமின்கள், தாது உப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை கொண்டது என்பதாலும் இது ஆரோக்கிய உணவில் உயர்ந்த இடத்தினைப் பிடிக்கின்றது. மேலும் இருதய நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக இது பரிந்துரைக்கப்படுகின்றது.
சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினை உணவில் நன்கு கட்டுபடுத்துவதாலும், கெட்ட கொழுப்பினை நன்கு கட்டுப்படுத்துவதாலும் இந்த ஓட்ஸ் உணவிற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது.
இன்று ஓட்ஸ் கஞ்சி, ரொட்டி, பிஸ்கட், ஓட்ஸ் தோசை, இட்லி என்று நம் உணவுப் பழக்கத்திற்கேற்ப கிடைக்கின்றது. 30 கிராம் ஓட்ஸில் 117 கலோரி சத்து உள்ளது. 66 சதவீத கார்போஹைடிரேட் (மாவுசத்து), 17 சதவீதம் புரதம், 7 சதவீத கொழுப்பு, 11 சதவீத நார்சத்து உள்ளது.
100 கிராம் ஓட்ஸில் கலோரி சத்து-389, கொழுப்பு-6.9 கிராம், நீர்-8 சதவீதம், புரதம் 16.9 கி., மாவுசத்து-66.3 கி., சர்க்கரை இல்லை, நார்சத்து 10.6 கி உள்ளது.
ஓட்ஸில் உள்ள புரதம் மற்ற தானிய உணவில் உள்ளதைவிட அதிகமாக உள்ளது. மேலும் இது ‘க்ளூடன்’ இல்லாத உணவு. எனவே க்ளூடன் அலர்ஜி உள்ளவர்கள் ஓட்ஸ் உணவினை நன்கு எடுத்துக் கொள்ள முடியும்.
வைட்டமின்கள், தாது உப்புகள்:
* மங்கனீஸ்: முழு தானிய உணவுகளில் அதிகம் இருக்கும். இந்த மங்கனீஸ் ஓட்ஸிலும் நிறைய உள்ளது. உடல் வளர்ச்சி செயல்பாட்டிற்கும் மிக முக்கியமானது.
* இதிலுள்ள பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியம், திசுக்கள் ஆரோக்கியம் இதற்கு உதவுகின்றது.
* காப்பர்: நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது. இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுவது.
* வைட்டமின் பி1-தயமின், இரும்பு, செலினியம், மக்னீசியம், ஸிங்க் ஆகியவை நல்ல அளவில் உள்ளன.
ஓட்ஸின் நன்மைகள்:
* இருதய நோய் பாதிப்புகள் வெகுவாய் குறைகின்றன.
* உயர் ரத்த அழுத்தம் குறைகின்றது.
* நீரிழிவு நோய் 2-ம் பிரிவு வெகுவாய் கட்டுப்படுகின்றது.
* அதிக பசி ஏற்படாமல் கட்டுப்படுத்துகின்றது.
* க்ளூடன் இல்லாத உணவு.
* நோய் எதிர்ப்பு சக்தியினை நன்கு கூட்டுகின்றது.
பொதுவில் ஓட்ஸ் உணவு பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சிலருக்கு கோதுமை ‘க்ளூடன்’ அலர்ஜி போல் ஓட்சும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவர்கள் ஓட்ஸினை அடியோடு தவிர்க்க வேண்டும்.
பசி:- உடலின் செயல்பாட்டிற்கு சக்தி வேண்டும் என்பதன் வெளிப்பாடே பசி. பசி ஏற்படும் பொழுது வயிற்றில் ஒரு வித உணர்வு ஏற்படும். அதையே ‘பசி வயிற்றை கிள்ளுகின்றது’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றோம். அந்நேரம் சாப்பிடவில்லை என்றால் தலைவலிக்கும், எரிச்சல் வரும், எதிலும் கவனம் செலுத்த முடியாது.
சிலருக்கு சாப்பிட்டு பல மணி நேரம் சென்றுதான் பசி ஏற்படும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. பலருக்கு சரியாக காலை, மாலை, இரவு என்ற முறையில் பசி ஏற்படும். இதுவும் அவர்கள் தன் உடலையும் மனதையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதைக் காட்டும். ஆனால் சிலர் சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள்ளாக பசிக்கின்றது என்பர். சிறு பிள்ளைகள் இப்படி கேட்கும் பொழுது பிஸ்கட், சாக்லேட் கேட்கும். அதை அவர்களது குழந்தைதனமான தந்திரம் என்று விட்டு விடுவோம்.

ஆனால் சில வளர்ந்தவர்கள் தனக்கு அடிக்கடி பசி ஏற்படுகின்றது என்று கூறும் பொழுது அதனைப் பற்றி நன்கு கவனிக்க வேண்டும். நம் உணவு முறை சரிவர இல்லாத காரணத்தினால் அடிக்கடி பசி ஏற்படலாம்.
தேவையான அளவு புரதம் உணவில் இல்லாமை:
புரதத்திற்கு ஒரு குணம் உண்டு. குறைந்த கலோரி சத்தில் வயிறு நிறைந்த உணர்வினைத் தரும். பசி உணர்வை தூண்டும். ஹார்மோன்களின் அளவும் இதனால் கட்டுப்படுத்தப்படும். புரதம் இல்லாத உணவினை உட்கொள்பவர்களுக்கு எளிதில் பசி எடுக்கும். எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். இரவு உணவிற்குப் பிறகு சிப்ஸ், முறுக்கு போன்றவைகளை கொறித்துக் கொண்டே இருக்கும் பழக்கம் நீங்கும். இதன் காரணமாக கூடிக் கொண்டே போகும் எடை குறையும்.
இதனைப் பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இதனை உறுதி செய்தன.ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் நன்கு சேர்த்துக் கொண்டால் அதிக பசி அடங்கும்.
அசைவம், மீன், முட்டை இவைகளில் சிறந்த அளவு புரதம் உள்ளது. பால், தயிர், பால் சார்ந்த பொருட்கள் பருப்பு, கொட்டைகள், விதைகள், முழு தானிய உணவுகள் இவற்றில் புரதம் உள்ளது.
எனவேதான் நம் பாரம்பரிய உணவில் இட்லி-வடை, பொங்கல்-வடை, பருப்பு பாயாசம், வேர்கடலை உருண்டை, பொட்டுகடலை உருண்டை என்ற உணவுகள் சேர்க்கப்பட்டு இருந்தன.
• அடிக்கடி பசி எடுப்பதற்கு மற்றொரு காரணம் ஒருவர் போதுமான அளவு தூங்குவதில்லை. தூக்கம் மூளையின் சிறந்த செயல் பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், நாட்பட்ட நோய்கள் பாதிப்புஇல்லாமல் இருப்பதற்கும் அவசியமாகின்றது. தூக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு சற்று புரதத்தினை உணவில் கூட்டிய பொழுது அவர்கள் நன்கு தூங்கினர். பசியின் பாதிப்பும் அதிகம் குறைந்தது.
• அதிகம் நார் சத்து இல்லாத உணவினை உண்பதும் அடிக்கடி பசி ஏற்பட காரணம் ஆகின்றது. வெள்ளை பிரெட், மைதாவால் ஆன பிஸ்கட்டுகள், நான், கேக், சோடா, மிட்டாய் போன்ற உணவுகள் ரத்தத்தில் எளிதில் சர்க்கரையினை ஏற்றி விடும். இதனால் அதிக இன்சுலின் சுரந்து இந்த சர்க்கரை அளவினை குறைக்க முற்படும். திடீரென ஏறும் சர்க்கரை, பின் அதிக இன்சுலின் சுரப்பதினால் திடீரென இறங்கும் சர்க்கரை பசியினை ஏற்படுத்தும். ஆகவே மேற்கூறிய உணவுகளை அதிகம் தவிர்த்து விடுவது நல்லது.
• மிகக் குறைவான கொழுப்பு உணவும் அடிக்கடி பசியினை ஏற்படுத்தும். பலர் கொழுப்பை கண்டு அதிகம் பயந்து விடுகின்றனர். நமக்கு நல்ல கொழுப்பும் தேவைதான். கொழுப்பு சேர்த்த உணவால் பசி எடுக்க சற்று நீண்ட நேரம் பிடிக்கும்.சீஸ், முட்டை, மீன், சியா விதை, பாதாம், வால்நட், ஆலிவ் தேங்காய் எண்ணெய் போன்றவற்றினை ஒவ்வொரு வேளை உணவிலும் ஏதாவது ஓரிரு பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• நீங்கள் தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அடிக்கடி பசிப்பது போல் தோன்றும். எனவே தேவையான அளவு நீர் குடியுங்கள். நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.
• உணவில் நார்சத்து இல்லையென்றாலும் அடிக்கடி பசி ஏற்படும். எனவே உணவில் நார்சத்து மிக அவசியம்.
• அநேகர் உணவு உண்ணும் பொழுது டி.வி. பார்த்துக் கொண்டோ, செல்போன் பார்த்துக் கொண்டோ அல்லது செல்போனில் பேசிக் கொண்டோ உணவை உண்கின்றனர். இதனால் அவர்கள் அவசரம் அவசரமாக உண்கிறார்கள். இதனால் முழுமையாக மென்று உண்ண முடிவதில்லை. சிலர் வறுத்த, பொறித்த உணவுகளை அதிகம் உண்டு விடுகின்றனர். இதனாலும் அடிக்கடி பசி ஏற்படும். எனவே உண்ணும் பொழுது அமைதியாய், பேசாமல் உணவினைப் பார்த்து பொறுமையாய் மென்று சாப்பிடவும்.
• மிக அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் அதிக பசி ஏற்படும்.
• அதிக மது அருந்துபவர்களுக்கு அதிக பசி ஏற்படும். ஏனெனில் வயிறு நிறைவினை உணர்த்தும் ஹார்மோன் குறைந்து விடுவதால் அதிக பசி உணர்வு ஏற்படும்.
• புட்டிகளில் காற்று அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் சூப், ஷேக்ஸ் இப்படி திரவு உணவு வகைகளையே சிலர் உண்பர். இவர்களுக்கு திட உணவினை உட்கொண்ட நிறைவு இராது. இதன் காரணமாக அடிக்கடி பசி ஏற்படும்.
• மிகுந்த ஸடிரெஸ் உள்ளவர்களுக்கு அதிக கார்டிலால் ஹார்மோன் சுரப்பதால் அடிக்கடி பசி ஏற்படும்.
• சில குறிப்பிட்ட பிரிவு மருந்துகள் அதிக பசியினை ஏற்படுத்தும்.
• அவசரம், அவசரமாக உணவை மெல்லாமல் அப்படியே விழுங்குபவர் களுக்கு அதிக பசி ஏற்படும்.
• சர்க்கரை நோய் உடையவர்கள், தைராய்டு அதிகம் சுரப்பவர்கள் மற்றும் மன உளைச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு மருத்துவ காரணங்களால் அடிக்கடி பசி ஏற்படும்.
அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
செரிமானத்தின் போது குடலில் உண்டாகும் வாயு, எப்போதாவது வெளியேறுவது இயல்புதான். ஆனால் அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் (Fermentation) காரணமாகவே வாயு ஏற்படுகிறது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில் மலம் வெளியேறாமல் நீண்ட நேரம் குடற்பகுதியில் தேங்கும். கூடுதல் நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறும். உணவுப் பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாயு ஏற்படலாம்.
குடற்பகுதியில் வாழும் நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு ஒரு காரணம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரைகளின் விளைவாகவும் குடற்பகுதியில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். சில நேரங்களில், சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் கூடும்போதும் (Small Intestinal Bacterial Overgrowth) வாய்வுப் பிரச்னை உண்டாகும்.

பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராஃபினோஸ் (Raffinose), உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயுப் பெருக்கம் ஏற்படலாம். பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாயு உண்டாக்கும் வஸ்துக்களே. இவற்றைச் சமைக்கும் போது அதிகளவில் மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ளலாம். மிளகு மற்றும் சீரகத்துக்கு இருக்கும் வாய்வகற்றி செய்கை காரணமாக, குடலில் வாயு உண்டாகாது. இருப்பினும் வாயுத் தொல்லை இருப்பவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைப்பது நல்லது. வாயு நிரப்பப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள், குடலில் வாயுவை அதிகளவில் சேர்ப்பதோடு வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும்.
பாலில் உள்ள 'லாக்டோஸ்' (Lactose) சிலருக்கு வாயுப் பிரச்சனையை உருவாக்கலாம். பழங்களில் உள்ள ‘ஃப்ரக்டோஸ்’ (Fructose) மற்றும் செயற்கை சுவையூட்டிகளில் உள்ள ‘சார்பிடால்’ (Sorbitol) போன்றவற்றைச் செரிக்க முடியாத போதும் வாயுப் பெருக்கம் உண்டாகும். சார்பிடால் என்பது, இனிப்புச் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய்யில் பொறித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாயுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், உடலுக்கு அதிக நன்மை செய்வதாயிருப்பினும் சிலருக்கு வாயுவை உருவாக்கலாம்.
பெருங்குடல் சார்ந்த நோய்கள், குளுடன் புரதத்தைச் செரிக்க முடியாமல் போவது, செரிமான தசைகளில் பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், வயிற்றுப் புண் போன்றவற்றின் காரணமாக, அந்தந்த நோய்க் குறிகுணங்களுடன், ஒரு நாளில் பல முறை வாயு வெளியேறும்.
குடலில் சேரும் வாயுக்களில் கரியமில வாயு, ஹைட்ரஜன், நைட்ரஜன், மீதேன், ஆக்சிஜன் போன்றவை அடக்கம். சில நேரங்களில் கந்தகம் சேர்ந்த கூட்டுப்பொருள்கள் உருவாவதால், நாற்றம் உண்டாகிறது.
அடிக்கடி வாயு வெளியேறுவதைத் தடுக்கும் உணவுகள்/மருந்துகள்
புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். சித்த மருந்துகளில், இஞ்சித் தேன், இஞ்சி ரசாயனம், சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும். தயிர்ச்சுண்டி சூரணம் எனும் மருந்து, வாயுப் பிரச்னையோடு சேர்த்து, வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவற்றை உடனடியாக குறைக்கும்.
அந்த டயட், இந்த டயட் என மாற்றி மாற்றி உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, உணவில் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்!
சப்பாத்தி, புலாவ், சாதம், நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லூர் சிக்கன் வறுவல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
சீரகத்தூள் - 5 கிராம்
மிளகுத்தூள் - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சைப்பழம் - அரை பழம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
கடலைமாவு - 10 கிராம்
அரிசிமாவு - 5 கிராம்
கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
வெள்ளை எள் - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5 கிராம்
குடைமிளகாய் - 50 கிராம்
வெங்காயத்தாள் - சிறிதளவு
காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

செய்முறை :
கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.
சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.
சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது).
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும்.
அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெடி.
சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
சீரகத்தூள் - 5 கிராம்
மிளகுத்தூள் - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சைப்பழம் - அரை பழம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
கடலைமாவு - 10 கிராம்
அரிசிமாவு - 5 கிராம்
கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
வெள்ளை எள் - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5 கிராம்
குடைமிளகாய் - 50 கிராம்
வெங்காயத்தாள் - சிறிதளவு
காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.
சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.
சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது).
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும்.
அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெடி.
ஆண்கள் கலக்கி கொண்டிருந்த கால் டாக்சி துறையில் இப்போது பெண்களும் பலமாக காலூன்றிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த கால் டாக்சி துறையில் இப்போது பெண்களும் பலமாக காலூன்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கார் டிரைவர்களாக பணிபுரிவதோடு மட்டுமின்றி, புதிதாக கால் டாக்சி நிறுவனங்களையும் தொடங்கி நடத்துகிறார்கள்.
பெரும்பாலான பெண்கள் நிரந்தரமாகவும், சிலர் பகுதி நேரமாகவும் டிரைவர் பணியை தொடர்கிறார்கள். இவர்களுக்கு முறையாக கார் ஓட்டும் பயிற்சியும், பொதுமக்களுடன் இனிமையாக பேசிப் பழகும் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு விசேஷ பாதுகாப்பு பயிற்சிகள், மனோதிட பயிற்சிகள், தியான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான நேரங்களில் சுயமாக முடிவெடுக்கும் தைரியத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆபத்துகளை துணிச்சலாக சமாளிக்கும் முறைகளையும் கற்றிருக்கிறார்கள். இத்தகைய பயிற்சிகள் அனைத்தையும் அவர்கள் பெற ஒரு வருடமாகியிருக்கிறது.
இந்த பெண் கால் டாக்சி டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இன்முகத்தோடு பழகுகிறார்கள். அது மட்டுமின்றி ஏதாவது பொருட்களை அவர்கள் காரில் மறந்துவிட்டுச் சென்றாலும், தேடிப்பிடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிவிடுகிறார்கள். பெண்கள் எந்த நேரமும் பயமின்றி பாதுகாப்புடன் பயணிக்கலாம் என்ற சூழலை இந்த கால் டாக்சி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
இரவு நேர பணி செய்யும் பெண்கள், தனியாக பயணிக்கும் பெண்கள்தான் எங்கள் வாடிக்கையாளர்கள். சில நிறுவனங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே பயணிப்பார்கள். அவர்களுக்கும் நாங்கள் கார் ஓட்டுகிறோம். கடைசியாக இறங்கும் பெண்ணை வீட்டில் இறக்கிவிட்டு, வீட்டில் இருப்பவர்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு திரும்புவோம். இதன் மூலம் வீட்டில் உள்ளவர் களுக்கு மனநிறைவும், நிம்மதியும் கிடைக்க நாங்கள் காரணமாக இருக்கிறோம்.
எங்கள் டிரைவர்கள் பெண்கள் என்பதால் அவர்களும் முழுநேரமும் எங்கள் கண்காணிப்பிலே இருப்பார்கள். அவர்கள் வீடு போய் சேரும் வரை எங்கள் தகவல்தொழில்நுட்பம் அவர்களை பின்தொடரும். அவர்கள் எப்பொழுதும் கண்ட்ரோல் ரூமுடன் தொடர்பிலேயே இருப்பார்கள். டெல்லி காவல்துறையின் தொடர்பும் எங்கள் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கிறது. பயமின்றி கார் ஓட்டி பலரது பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
கார் ஓட்டுவது மட்டும் வேலையல்ல. பொதுமக்களிடம் நாகரிகமாக பழகுவது, அவசரகாலத்தில் உதவுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எல்லாமே எங்கள் பெண் டிரைவர்களின் பணியின் ஓர் அங்கம்தான். அதனாலேயே மக்கள் எங்கள் சேவையை பெரிதும் விரும்புகிறார்கள். நடிகர் அமீர்கான் டெல்லி வந்தால் எங்கள் நிறுவத்தில்தான் கார் பதிவு செய்வார். தனக்கு மிகவும் பிடித்த நிறுவனம் என்று பலமுறை எங்களை பாராட்டி இருக்கிறார். தொழிலதிபர்கள், நடிகைகள், முக்கிய புள்ளிகள் என் பல தரப்பினரும் எங்கள் பெண் டிரைவர்களின் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆதரவற்ற பெண்கள் பலர் நம்பிக்கையோடு எங்களுடன் சேர்ந்து ஓட்டுனர் பயிற்சி பெற்று இன்று நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள்.
பெரும்பாலான பெண்கள் நிரந்தரமாகவும், சிலர் பகுதி நேரமாகவும் டிரைவர் பணியை தொடர்கிறார்கள். இவர்களுக்கு முறையாக கார் ஓட்டும் பயிற்சியும், பொதுமக்களுடன் இனிமையாக பேசிப் பழகும் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு விசேஷ பாதுகாப்பு பயிற்சிகள், மனோதிட பயிற்சிகள், தியான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான நேரங்களில் சுயமாக முடிவெடுக்கும் தைரியத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆபத்துகளை துணிச்சலாக சமாளிக்கும் முறைகளையும் கற்றிருக்கிறார்கள். இத்தகைய பயிற்சிகள் அனைத்தையும் அவர்கள் பெற ஒரு வருடமாகியிருக்கிறது.
இந்த பெண் கால் டாக்சி டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இன்முகத்தோடு பழகுகிறார்கள். அது மட்டுமின்றி ஏதாவது பொருட்களை அவர்கள் காரில் மறந்துவிட்டுச் சென்றாலும், தேடிப்பிடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிவிடுகிறார்கள். பெண்கள் எந்த நேரமும் பயமின்றி பாதுகாப்புடன் பயணிக்கலாம் என்ற சூழலை இந்த கால் டாக்சி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
இரவு நேர பணி செய்யும் பெண்கள், தனியாக பயணிக்கும் பெண்கள்தான் எங்கள் வாடிக்கையாளர்கள். சில நிறுவனங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே பயணிப்பார்கள். அவர்களுக்கும் நாங்கள் கார் ஓட்டுகிறோம். கடைசியாக இறங்கும் பெண்ணை வீட்டில் இறக்கிவிட்டு, வீட்டில் இருப்பவர்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு திரும்புவோம். இதன் மூலம் வீட்டில் உள்ளவர் களுக்கு மனநிறைவும், நிம்மதியும் கிடைக்க நாங்கள் காரணமாக இருக்கிறோம்.
எங்கள் டிரைவர்கள் பெண்கள் என்பதால் அவர்களும் முழுநேரமும் எங்கள் கண்காணிப்பிலே இருப்பார்கள். அவர்கள் வீடு போய் சேரும் வரை எங்கள் தகவல்தொழில்நுட்பம் அவர்களை பின்தொடரும். அவர்கள் எப்பொழுதும் கண்ட்ரோல் ரூமுடன் தொடர்பிலேயே இருப்பார்கள். டெல்லி காவல்துறையின் தொடர்பும் எங்கள் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கிறது. பயமின்றி கார் ஓட்டி பலரது பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
கார் ஓட்டுவது மட்டும் வேலையல்ல. பொதுமக்களிடம் நாகரிகமாக பழகுவது, அவசரகாலத்தில் உதவுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எல்லாமே எங்கள் பெண் டிரைவர்களின் பணியின் ஓர் அங்கம்தான். அதனாலேயே மக்கள் எங்கள் சேவையை பெரிதும் விரும்புகிறார்கள். நடிகர் அமீர்கான் டெல்லி வந்தால் எங்கள் நிறுவத்தில்தான் கார் பதிவு செய்வார். தனக்கு மிகவும் பிடித்த நிறுவனம் என்று பலமுறை எங்களை பாராட்டி இருக்கிறார். தொழிலதிபர்கள், நடிகைகள், முக்கிய புள்ளிகள் என் பல தரப்பினரும் எங்கள் பெண் டிரைவர்களின் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆதரவற்ற பெண்கள் பலர் நம்பிக்கையோடு எங்களுடன் சேர்ந்து ஓட்டுனர் பயிற்சி பெற்று இன்று நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள்.
கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கல்லீரல் சுருக்கம் ஏற்படுவதற்கான காரணத்தையும், தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.
தற்போது அருந்தியதன் காரணமாக, கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச் செரிக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான சத்துக்களாக அனுப்பிவைக்கப்படுகிறது. உடலுக்கு அவசியம் தேவையான சில வகைப் புரதச்சத்துக்களும் கல்லீரலில் உற்பத்தி ஆகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகப் பெரிய பொறுப்பும் கல்லீரலுக்கு உள்ளது.
உணவு மற்றும் தண்ணீரின் மூலம் உடலுக்குள் பரவக்கூடியது ஹெபடைட்டிஸ் ஏ. இந்த வைரஸால் மஞ்சள் காமாலை வரும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், சில மாதங்களிலேயே சரி செய்ய முடியும். ஹெபடைட்டிஸ் பி, ரத்தம் மூலமாகவும் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாகவும் பரவும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவும். இந்த வைரஸ் தாக்குதலால் விரைவில் கல்லீரல் பாதிக்கப்பட்டு, செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனை இன்றி கண்டறிய இயலாது. 10-15 வருடங்கள்கூட உடலில் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரைலை சிதைவு அடையவைக்கும். ஹெபடைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி இப்போது கிடைப்பதால், இதன் பாதிப்பு குறைந்துள்ளது.
ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படும். இதற்குத் தடுப்பூசி கிடையாது. மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இது. சமீபத்தில் இதற்கு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்நோயைக் குணப்படுத்த முடியும்.
ஆல்கஹாலை கல்லீரல் ‘ஆல்கஹால் டீஹைட்ரோகீனஸ்’ (Alchohol dehydrogenase) என்ற என்சைம் மூலமாகச் செரிமானம் செய்கிறது. அதிக அளவு மது அருந்தும்போது, ஆல்கஹாலில் இருக்கும் சில வகை வேதிப்பொருட்கள், கல்லீரலின் பணிகளைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில், கல்லீரல் சிதைவடைந்து, கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியும். அந்த நேரத்தில் கல்லீரலின் செயல்திறன் முற்றிலுமாக இழந்து, இவர்களுக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்வதால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்படலாம். உலக அளவில் கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைபவர்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், மது அதிகம் அருந்துபவர்களே என்பது முக்கியமான செய்தி.
ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்கூட, சில சமயங்களில் அதிகக் கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து (Fatty liver) கொழுப்புக் கல்லீரல் நோய் ஏற்படலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேரும்போது 20 - 30 வருடங்கள் கழித்துக் கல்லீரல் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும்போது அதில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் சேர்ந்து நாளடைவில் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும்.

வெகு சிலருக்கு அதிகமாக மது அருந்துவதால், ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் எனும் நோய் ஏற்படும். இந்த நோய் முற்றினால், மூன்றே மாதங்களில் மரணம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தினமும் மது அருந்துபவர்களுக்கு, வயது வித்தியாசமின்றி திடீரென இந்த நோய் தாக்கும்.
கல்லீரல் சுருக்கம் தடுக்க டிப்ஸ்
மதுவைத் தவிர்த்தால், பெரும்பாலான கல்லீரல் பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. சிலர் வாரத்துக்கு ஒரு முறைதானே மது அருந்துகிறோம் என்று, அதிக அளவில் எடுத்துக்கொள்வார்கள். இதுவும் தவறு.
மற்ற உறுப்புகளுக்கு இல்லாத சிறப்பு, கல்லீரலுக்கு உள்ளது. அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வது. கல்லீரல் 30 சதவிகிதம் வரை வேலை செய்தால்கூடப் போதுமானது. எனவே, மது அருந்துபவர்கள், கல்லீரல் பாதிப்பு அடைந்திருக்கிறதா என, முன்கூட்டியே கண்டறிந்து, மதுவைத் தவிர்த்தால், கல்லீரலைப் பாதுகாக்க முடியும்.
கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test), ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசானிக் பரிசோதனை மூலம், கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும். கல்லீரல் சுருக்கம் நோய்க்கு முந்தைய நிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த ஃபைப்ரோசிஸ் நிலையில்தான், உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, பசி இன்மை, மன அழுத்தம், வயிறு வலி போன்றவை ஏற்படும். ஃபைப்ரோசிஸ் நிலையை அறிய, கல்லீரல் பயாப்சி எடுப்பதற்குப் பதிலாக தற்போது ஃபைப்ரோஸ்கேன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், கல்லீரலையும் உயிரையும் பாதுகாக்க முடியும்.
மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்வதும் கல்லீரலைப் பாதிக்கும். இதையும் தவிர்க்க வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச் செரிக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான சத்துக்களாக அனுப்பிவைக்கப்படுகிறது. உடலுக்கு அவசியம் தேவையான சில வகைப் புரதச்சத்துக்களும் கல்லீரலில் உற்பத்தி ஆகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகப் பெரிய பொறுப்பும் கல்லீரலுக்கு உள்ளது.
உணவு மற்றும் தண்ணீரின் மூலம் உடலுக்குள் பரவக்கூடியது ஹெபடைட்டிஸ் ஏ. இந்த வைரஸால் மஞ்சள் காமாலை வரும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், சில மாதங்களிலேயே சரி செய்ய முடியும். ஹெபடைட்டிஸ் பி, ரத்தம் மூலமாகவும் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாகவும் பரவும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவும். இந்த வைரஸ் தாக்குதலால் விரைவில் கல்லீரல் பாதிக்கப்பட்டு, செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனை இன்றி கண்டறிய இயலாது. 10-15 வருடங்கள்கூட உடலில் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரைலை சிதைவு அடையவைக்கும். ஹெபடைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி இப்போது கிடைப்பதால், இதன் பாதிப்பு குறைந்துள்ளது.
ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படும். இதற்குத் தடுப்பூசி கிடையாது. மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இது. சமீபத்தில் இதற்கு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்நோயைக் குணப்படுத்த முடியும்.
ஆல்கஹாலை கல்லீரல் ‘ஆல்கஹால் டீஹைட்ரோகீனஸ்’ (Alchohol dehydrogenase) என்ற என்சைம் மூலமாகச் செரிமானம் செய்கிறது. அதிக அளவு மது அருந்தும்போது, ஆல்கஹாலில் இருக்கும் சில வகை வேதிப்பொருட்கள், கல்லீரலின் பணிகளைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில், கல்லீரல் சிதைவடைந்து, கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியும். அந்த நேரத்தில் கல்லீரலின் செயல்திறன் முற்றிலுமாக இழந்து, இவர்களுக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்வதால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்படலாம். உலக அளவில் கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைபவர்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், மது அதிகம் அருந்துபவர்களே என்பது முக்கியமான செய்தி.
ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்கூட, சில சமயங்களில் அதிகக் கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து (Fatty liver) கொழுப்புக் கல்லீரல் நோய் ஏற்படலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேரும்போது 20 - 30 வருடங்கள் கழித்துக் கல்லீரல் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும்போது அதில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் சேர்ந்து நாளடைவில் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும்.

வெகு சிலருக்கு அதிகமாக மது அருந்துவதால், ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் எனும் நோய் ஏற்படும். இந்த நோய் முற்றினால், மூன்றே மாதங்களில் மரணம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தினமும் மது அருந்துபவர்களுக்கு, வயது வித்தியாசமின்றி திடீரென இந்த நோய் தாக்கும்.
கல்லீரல் சுருக்கம் தடுக்க டிப்ஸ்
மதுவைத் தவிர்த்தால், பெரும்பாலான கல்லீரல் பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. சிலர் வாரத்துக்கு ஒரு முறைதானே மது அருந்துகிறோம் என்று, அதிக அளவில் எடுத்துக்கொள்வார்கள். இதுவும் தவறு.
மற்ற உறுப்புகளுக்கு இல்லாத சிறப்பு, கல்லீரலுக்கு உள்ளது. அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வது. கல்லீரல் 30 சதவிகிதம் வரை வேலை செய்தால்கூடப் போதுமானது. எனவே, மது அருந்துபவர்கள், கல்லீரல் பாதிப்பு அடைந்திருக்கிறதா என, முன்கூட்டியே கண்டறிந்து, மதுவைத் தவிர்த்தால், கல்லீரலைப் பாதுகாக்க முடியும்.
கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test), ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசானிக் பரிசோதனை மூலம், கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும். கல்லீரல் சுருக்கம் நோய்க்கு முந்தைய நிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த ஃபைப்ரோசிஸ் நிலையில்தான், உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, பசி இன்மை, மன அழுத்தம், வயிறு வலி போன்றவை ஏற்படும். ஃபைப்ரோசிஸ் நிலையை அறிய, கல்லீரல் பயாப்சி எடுப்பதற்குப் பதிலாக தற்போது ஃபைப்ரோஸ்கேன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், கல்லீரலையும் உயிரையும் பாதுகாக்க முடியும்.
மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்வதும் கல்லீரலைப் பாதிக்கும். இதையும் தவிர்க்க வேண்டும்.
சேமியா சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு பழங்கள் போட்டு தயிர் சேமியா செய்து கொத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 200 கிராம்
தயிர் - ஒரு கப்,
மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்.
தாளிக்க :
மிளகு - 10,
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

செய்முறை :
சேமியாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.
இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு உருகியதும், தாளிக்கும் பொருட்களை சேர்தது தாளித்து சேமியா கலவையுடன் சேர்க்கவும்.
பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.
சேமியா - 200 கிராம்
தயிர் - ஒரு கப்,
மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்.
தாளிக்க :
மிளகு - 10,
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
காய்ந்த மிளகாய் (கிள்ளியது) - 2

செய்முறை :
சேமியாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.
இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு உருகியதும், தாளிக்கும் பொருட்களை சேர்தது தாளித்து சேமியா கலவையுடன் சேர்க்கவும்.
பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான தயிர் சேமியா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ளது இந்த சர்வாங்காசனம். லவிதமான மனக்கோளாறுகளை நீக்கி மனோசக்தியை மிகச் செய்கிறது. இந்த இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பெயர் விளக்கம்: ‘சர்வ’ என்றால் எல்லாம் என்று பொருள். ‘அங்க’ என்றால் உடல் பகுதி என்று பொருள். இந்த ஆசன பயிற்சியில் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் தைராய்டு, பாரா தைராய்டு, பிட்யூட்டரி போன்ற நாளமில்லா சுரப்பிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் எல்லா உறுப்புகளும் பயன்பெறுகின்றன என்பதனால் இந்த ஆசனம் சர்வாங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: சவாசனத்தில் படுத்து, கால்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகள் இரண்டும் உடலோடு ஒட்டியபடி நீட்டி வைக்கவும். உள்ளங்கைகளும் தரையோடு படிந்திருக்கட்டும். இந்த நிலையில் மூச்சை உள்ளுக்குள் இழுக்கவும். மூச்சை வெளியே விட்டபடி கால்களை மடித்து வயிற்றுப் பகுதியை முழங்கால்கள் தொடும்படி கொண்டு போய் முதுகை தரையிலிருந்து தூக்கி
கால்களை உயர்த்தவும். அதே நேரத்தில் முழங்கைகளை தரைவிரிப்பில் நன்றாக ஊன்றி பிருஷ்ட பாகத்தை இரு உள்ளங்கை களாலும் தாங்கிப் பிடித்து முழங்கால்களை மேலே உயர்த்தி கால்களை நேராக நிமிர்த்தவும். கால்களை உயர உயர பிருஷ்டபாகத்திலிருந்து கைகளை கீழே கொண்டு போய் மார்பு கூட்டுக்குப் பின்புறம் உள்ளங்கைகளை நிறுத்தி உடல் எடை இரு கைகளிலும் சமமாக இருக்கும்படி தாங்கிக் கொள்ளவும்.
கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளாமல் தளர்ந்த நிலையில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். தாடைப்பாகம் நெஞ்சில் பதியட்டும். 3 முதல் 5 நிமிடம் இந்த ஆசனத்தில் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும் ஆரம்பப் பயிற்சியில் முடிந்த அளவு காலம் (சில வினாடிகள்) பயிற்சி செய்யவும். பிறகு கால்களை மடக்கி கைகளால் பிருஷ்டபாகத்தை வழுக்கி கீழே இறக்கி கைகளையும், கால்களையும் நேராக நீட்டி வைத்து சவாசன நிலைக்கு செல்லவும்.

உடலை கைகளால் தாங்காமலேயே மேலே தூக்கக் கூடிய அளவு பயிற்சியில் முன்னேற்றம் அடையும்போது கால் முட்டிகளை மடக்காமல் தலைக்குப் பின்னால் கால்களை கொண்டுபோய், கால்களை மேலே உயர்த்தி சர்வாங்காசனத்தை செய்ய வேண்டும். பயிற்சியை முடிக்கும் போதும் கால்களை மடக்காமல் கீழே இறக்க வேண்டும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: தொண்டை, கழுத்து மற்றும் உடல் எடையை சமமாக இரு தோள்களிலும் தாங்கச் செய்வதின் மீதும், உடலை தளர்வாக வைத்துக் கொள்வதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
தடைக்குறிப்பு: கல்லீரல், மண்ணீரல் மற்றும் கண்டச்சுரப்பி வீக்கம் கழுத்து நரம்புக் கோளாறு, கழுத்தில் அறுவை சிகிச்சை, உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு மிக பல உஷ்ணமான ரத்த நாளமுள்ள கண்கள், இடம் பெயர்ந்த டிஸ்க், உடலில் மிக அசுத்தமான ரத்தம் போன்ற எந்தவிதமான குறைபாடுகள் இருந்தாலும் சர்வாங்காசனம் செய்யக்கூடாது.
பயன்கள்: சிறுவயதினரின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து போன்று உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தைராய்டு, பாரா தைராய்டு, சுரப்பியை நன்கு இயங்கச் செய்கிறது. அச்சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குகிறது. மற்றும் தைமஸ் சுரப்பி செயல்படத் தூண்டுகிறது. பலவிதமான மனக்கோளாறுகளை நீக்கி மனோசக்தியை மிகச் செய்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும். குரல் வளம் சிறப்பாக அமையும். சளி, இருமல், நரம்பு பலகீனம், மார்புவலி, தொண்டை வலி, தொண்டை சதை வளர்ச்சி, தலைவலி, அண்டவாயு நீங்க உதவுகிறது. ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ளது.
செய்முறை: சவாசனத்தில் படுத்து, கால்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகள் இரண்டும் உடலோடு ஒட்டியபடி நீட்டி வைக்கவும். உள்ளங்கைகளும் தரையோடு படிந்திருக்கட்டும். இந்த நிலையில் மூச்சை உள்ளுக்குள் இழுக்கவும். மூச்சை வெளியே விட்டபடி கால்களை மடித்து வயிற்றுப் பகுதியை முழங்கால்கள் தொடும்படி கொண்டு போய் முதுகை தரையிலிருந்து தூக்கி
கால்களை உயர்த்தவும். அதே நேரத்தில் முழங்கைகளை தரைவிரிப்பில் நன்றாக ஊன்றி பிருஷ்ட பாகத்தை இரு உள்ளங்கை களாலும் தாங்கிப் பிடித்து முழங்கால்களை மேலே உயர்த்தி கால்களை நேராக நிமிர்த்தவும். கால்களை உயர உயர பிருஷ்டபாகத்திலிருந்து கைகளை கீழே கொண்டு போய் மார்பு கூட்டுக்குப் பின்புறம் உள்ளங்கைகளை நிறுத்தி உடல் எடை இரு கைகளிலும் சமமாக இருக்கும்படி தாங்கிக் கொள்ளவும்.
கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளாமல் தளர்ந்த நிலையில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். தாடைப்பாகம் நெஞ்சில் பதியட்டும். 3 முதல் 5 நிமிடம் இந்த ஆசனத்தில் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும் ஆரம்பப் பயிற்சியில் முடிந்த அளவு காலம் (சில வினாடிகள்) பயிற்சி செய்யவும். பிறகு கால்களை மடக்கி கைகளால் பிருஷ்டபாகத்தை வழுக்கி கீழே இறக்கி கைகளையும், கால்களையும் நேராக நீட்டி வைத்து சவாசன நிலைக்கு செல்லவும்.
உடலில் கழுத்து, முதுகுப் பகுதிகளில் வளையும் தன்மை குறைவாக உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் மேற்கண்ட முறைப்படி பயிற்சி செய்து வரவும்.

உடலை கைகளால் தாங்காமலேயே மேலே தூக்கக் கூடிய அளவு பயிற்சியில் முன்னேற்றம் அடையும்போது கால் முட்டிகளை மடக்காமல் தலைக்குப் பின்னால் கால்களை கொண்டுபோய், கால்களை மேலே உயர்த்தி சர்வாங்காசனத்தை செய்ய வேண்டும். பயிற்சியை முடிக்கும் போதும் கால்களை மடக்காமல் கீழே இறக்க வேண்டும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: தொண்டை, கழுத்து மற்றும் உடல் எடையை சமமாக இரு தோள்களிலும் தாங்கச் செய்வதின் மீதும், உடலை தளர்வாக வைத்துக் கொள்வதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு: உடலை கீழே இறக்கும் போது தலையை தரைவிரிப்பிலிருந்து மேலே தூக்காமல் முதுகை கீழே இறக்கி கால்களை கீழே இறக்கவும்.
பயன்கள்: சிறுவயதினரின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து போன்று உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தைராய்டு, பாரா தைராய்டு, சுரப்பியை நன்கு இயங்கச் செய்கிறது. அச்சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குகிறது. மற்றும் தைமஸ் சுரப்பி செயல்படத் தூண்டுகிறது. பலவிதமான மனக்கோளாறுகளை நீக்கி மனோசக்தியை மிகச் செய்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும். குரல் வளம் சிறப்பாக அமையும். சளி, இருமல், நரம்பு பலகீனம், மார்புவலி, தொண்டை வலி, தொண்டை சதை வளர்ச்சி, தலைவலி, அண்டவாயு நீங்க உதவுகிறது. ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ளது.
தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
குழந்தைக்கு ஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில நேரங்களில் 12 முறை வரை கூட சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது இருக்கும். இது இயற்கையானது தான். பொதுவாக, குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் ஊட்ட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது. குழந்தைக்கு பசி இருப்பது தெரியவந்தால் பால் ஊட்ட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பால் குடிப்பதே போதுமானதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு பல முறை உணவு தேவைப்படும். எனவே, பால் கொடுப்பதில் வரைமுறை எதுவும் இல்லை. சில குழந்தைகள் சில நேரங்களில் பாலை அடிக்கடி துப்பி விடும். இதுவும் இயற்கையானது தான். கவலைப்படத் தேவை இல்லை.
பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் எதையும் தரக்கூடாது. 6 மாதத்திற்கு மேல் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உணவுகளைக் கொடுக்கலாம்.
குழந்தை கருப்பாக மலம் கழித்தாலும், குழந்தை சரியான அளவில் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து விட்டு பிறகு தாய்ப்பாலைத் தொடரவும்.
குழந்தைக்கு ஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில நேரங்களில் 12 முறை வரை கூட சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது இருக்கும். இது இயற்கையானது தான். பொதுவாக, குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் ஊட்ட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது. குழந்தைக்கு பசி இருப்பது தெரியவந்தால் பால் ஊட்ட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பால் குடிப்பதே போதுமானதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு பல முறை உணவு தேவைப்படும். எனவே, பால் கொடுப்பதில் வரைமுறை எதுவும் இல்லை. சில குழந்தைகள் சில நேரங்களில் பாலை அடிக்கடி துப்பி விடும். இதுவும் இயற்கையானது தான். கவலைப்படத் தேவை இல்லை.
பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் எதையும் தரக்கூடாது. 6 மாதத்திற்கு மேல் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உணவுகளைக் கொடுக்கலாம்.
குழந்தை கருப்பாக மலம் கழித்தாலும், குழந்தை சரியான அளவில் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து விட்டு பிறகு தாய்ப்பாலைத் தொடரவும்.
சர்க்கரை நோயாளிகள் கம்பு, கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிறுகீரை - 200 கிராம்
பச்சரிசி மாவு - 100 கிராம்
கம்பு மாவு - 300 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
நெய் - 50 கிராம்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பூண்டுப்பல் - 8
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டுப்பல்லை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
முந்திரி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்கிக் கொள்ளவும்.
சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கழுவி, தண்ணீரை வடிக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், கீரையைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
கீரையில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக சுண்டியதும், நெய் சேர்த்துக் கிளறி நன்கு வதக்கி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் கம்பு மாவைக் கொட்டி, இத்துடன் வதக்கிய கீரையைச் சேர்த்து, வெங்காயம், நன்றாகத் தட்டியப் பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையுடன், வறுத்துப் பொடித்தவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தளதளவென கரைத்துக் கொள்ளவும். (மாவை கெட்டியாகக் கரைத்தால் கம்பு மாவு வேகாது).
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.
சிறுகீரை - 200 கிராம்
பச்சரிசி மாவு - 100 கிராம்
கம்பு மாவு - 300 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
நெய் - 50 கிராம்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பூண்டுப்பல் - 8
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டுப்பல்லை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
முந்திரி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்கிக் கொள்ளவும்.
சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கழுவி, தண்ணீரை வடிக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், கீரையைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
கீரையில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக சுண்டியதும், நெய் சேர்த்துக் கிளறி நன்கு வதக்கி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் கம்பு மாவைக் கொட்டி, இத்துடன் வதக்கிய கீரையைச் சேர்த்து, வெங்காயம், நன்றாகத் தட்டியப் பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையுடன், வறுத்துப் பொடித்தவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தளதளவென கரைத்துக் கொள்ளவும். (மாவை கெட்டியாகக் கரைத்தால் கம்பு மாவு வேகாது).
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான கம்பு சிறுகீரை அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.
சேலை என்றாலே அதை நூலால் நெய்யப்பட்ட காந்தம் எனலாம். சேலைகள் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பெரிதும் கவர்கின்றது.
என்ன தான் மெடி, சுடிதார், ஜீன்ஸ் என ஆயிரம் உடைகள் வந்தாலும், சேலை கட்டி வீதியில் உலாவரும் பெண்கள் வெளிப்படுத்தும் அழகே அழகுதான்.
அதனால் தான் கவியரசு வைரமுத்து ‘சேலைச் சோலையே...’ என்று பாடி சேலையை சோலைக்கு ஒப்புமைப்படுத்தி மகிழ்கிறார். இன்னொரு கவிஞர்கூட, காஞ்சிப் பட்டு உடுத்திக் கஸ்தூரிப் பொட்டுவைத்து நேரில் தோன்றும் பெண்ணொருத்தி தேவதைபோல் தோற்றமளிப்பதாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அன்றாடம் சேலையின் பெருமைகள் நமது செவிகளில் தேன் பாய்ச்சி கொண்டுதானே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற சேலைகளுக்கு, அவை தோன்றி வளர்ந்து முழுமை பெற்றதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைத் தெரிந்துகொள்ள நமக்கெல்லாம் ஆவல் பிறக்கிறதல்லவா?
சேலை, சீலை, சீரை இந்த மூன்று சொற்களுமே பண்டைக்காலத்தில் துணி என்ற பொதுவான பொருளையே குறிப்பதாக விளங்கின. இப்போதுதான் அவை பெண்கள் தங்கள் இடையில் தொடங்கி உடல் முழுவதும் சுற்றிக்கொள்ளும், ஆடை வகையாகக் கருதப்படுகிறது.
இந்தியப் பெண்கள் பின்பற்றும் சேலை அலங்காரம் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்ணுடைகளிலும் தலைசிறந்ததாகப் புகழப்படுகின்றது.
இந்தியாவில் பெண்கள், சேலை உடுத்திக்கொள்வது எப்போது தோன்றியது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆதியில் பெண்கள் தங்கள் இடையில் சொருகிக் கொண்ட சிறுதுணி வளர்ச்சியடைந்து சேலையாக மாறி இருக்காலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் பெண்கள் தற்போது அணியும் கண்ணைக் கவரும் சேலை முறை ஆரிய மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே தோன்றியது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம்.
பண்டைக்காலத்தில் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடுகளான சுமேரியா, அசிரியா, எகிப்து பகுதிகளில் (ஏறக்குறைய கி.மு. 3500-ம் ஆண்டு) பயன்படுத்தியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிற ஒரு சேலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அது இந்தியச் சேலை வகையைப் போலவே தோற்றமளிக்கிறதாம்.
ஆதியில் பெண்கள், இடையை மறைக்க ஒரு துணியையும், மார்பை மறைக்க தாவணி போன்றதொரு துணியையும் பயன்படுத்தியிருக்கலாம். முந்தானை அணியும் முறை வேதகாலத்திலேயே உண்டாகியிருக்கலாம். தார்போட்டுக்கட்டும் பழக்கம் மத்திய இந்தியாவில் தோன்றி தென்னாட்டுக்குப் பரவியதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

டாக்டர் குரியே என்பவர் சேலையின் வளர்ச்சிக் காலத்தை மூன்று பிரிவாகப்பிரிக்கிறார். ஆதிகாலம் முதல் கி.மு. 320 வரை முதல் பிரிவு. இக்காலத்தின் இறுதியில் தோன்றிய சிற்பங்களும் இலக்கியங்களும் தார்போட்டுக்கட்டும் முறை, தார் போடாமல் கட்டும் முறை, சேலை ரவிக்கை அணியும் முறை ஆகிய மூன்று வகைகளில், பெண்கள் சேலையை உடுத்தி வந்ததாகச் சுட்டிக்காட்டுகின்றன.
இரண்டாவது காலம் கி.மு. 320-ல் இருந்து கி.பி. 320 வரை. இக்காலத்தில்தான் முன்கொசுவம் வைத்துக் கட்டும்முறை, குடகு முறை பாவாடை-தாவணி அணியும் முறை ஆகியவை தோன்றியதாம்.
மூன்றாவது பிரிவு கி.பி. 320-ல் இருந்து 1100 வரை உள்ள காலத்தை உள்ளடக்கியது. நிலப்பகுதியின் சூழ்நிலைக்கும், தட்ப வெப்பநிலைக்கும் ஏற்றாற்போல் சேலை அணியும் முறையில் பல மாறுதல்கள் தோன்றியது இக்காலத்தில் தான்.
ராஜசேகரர் என்பவர் 10-ம் நூற்றாண்டில் இருந்து சேலை கட்டும் முறையை நான்கு வகைகளாகப் பிரித்திருக்கின்றார். ஒன்று, முன் கொசுவம் வைத்து, இடையில் உடுத்தி முந்தானையை இடத்தோளில் போட்டுக் கொள்ளுதல். இவற்றில் வங்காளம், குஜராத் பகுதிகளில் முந்தானை இடும் முறை மாறுபடுகின்றது.
இரண்டாவதாக, தார் போட்டுக் கட்டும் முறை. இம்முறை மராட்டியத்திலும், மத்திய இந்தியாவிலும் அதிகமாக் காணப்படுகிறது. மூன்றாவது, பாவாடை, தாவணி அணியும் முறை. இதில் சேலையின் அளவு குறைந்தும், பாவாடை பெரியதாகவும் காணப்படும். அடுத்தது, ஆதிவாசிகளும், மலைவாழ் மக்களும் உடுத்தும் அகலம் குறைந்த சேலை முறை.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், ராஜசேகரர் கூறிய நான்கு முறைப்படிதான் சேலை கட்டும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் தற்போது பெண்கள் ஒரே மாதிரி சேலை உடுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். தார்போட்டுக் கட்டும் பழைய முறைகள் முற்றிலும் இந்தியாவில் அழிந்துவிடவில்லை. ஆனால் முன் கொசுவம் வைத்துக் கட்டும் முறையையே இளம்பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
இறுதியாக புதுமைகள் விரும்பும் தமிழ் பெண்களுக்கு ஒரு செய்தி. சேலை என்பது நீங்கள் உடம்பில் சுற்றிக்கொள்ள உபயோகப்படுத்தும் ஆடைவகை மட்டுமல்ல. அது நமது பாரம்பரியம். அது நமது கலாசாரம். அது உங்களைத் தமிழ் இனப் பெண்கள் என்று உலகமே அறிந்து புரிந்து கொள்ளப் பயன்படும் அடையாளமும்கூட.
தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக அன்னிய முறை ஆடைகளையே பெரிதும் விரும்பி அணிகிறார்கள். புதுமைகளை வரவேற்க வேண்டியதுதான்.
ஆனால், அவை நம் அடையாளங்களையே அழித்து ஒழித்துவிடக்கூடிய அளவுக்கு ஆதரவு கரம் நீட்டலாமா? சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.
எழுத்தாளர் எல்.பிரைட்
என்ன தான் மெடி, சுடிதார், ஜீன்ஸ் என ஆயிரம் உடைகள் வந்தாலும், சேலை கட்டி வீதியில் உலாவரும் பெண்கள் வெளிப்படுத்தும் அழகே அழகுதான்.
அதனால் தான் கவியரசு வைரமுத்து ‘சேலைச் சோலையே...’ என்று பாடி சேலையை சோலைக்கு ஒப்புமைப்படுத்தி மகிழ்கிறார். இன்னொரு கவிஞர்கூட, காஞ்சிப் பட்டு உடுத்திக் கஸ்தூரிப் பொட்டுவைத்து நேரில் தோன்றும் பெண்ணொருத்தி தேவதைபோல் தோற்றமளிப்பதாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அன்றாடம் சேலையின் பெருமைகள் நமது செவிகளில் தேன் பாய்ச்சி கொண்டுதானே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற சேலைகளுக்கு, அவை தோன்றி வளர்ந்து முழுமை பெற்றதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைத் தெரிந்துகொள்ள நமக்கெல்லாம் ஆவல் பிறக்கிறதல்லவா?
சேலை, சீலை, சீரை இந்த மூன்று சொற்களுமே பண்டைக்காலத்தில் துணி என்ற பொதுவான பொருளையே குறிப்பதாக விளங்கின. இப்போதுதான் அவை பெண்கள் தங்கள் இடையில் தொடங்கி உடல் முழுவதும் சுற்றிக்கொள்ளும், ஆடை வகையாகக் கருதப்படுகிறது.
இந்தியப் பெண்கள் பின்பற்றும் சேலை அலங்காரம் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்ணுடைகளிலும் தலைசிறந்ததாகப் புகழப்படுகின்றது.
இந்தியாவில் பெண்கள், சேலை உடுத்திக்கொள்வது எப்போது தோன்றியது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆதியில் பெண்கள் தங்கள் இடையில் சொருகிக் கொண்ட சிறுதுணி வளர்ச்சியடைந்து சேலையாக மாறி இருக்காலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் பெண்கள் தற்போது அணியும் கண்ணைக் கவரும் சேலை முறை ஆரிய மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே தோன்றியது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம்.
பண்டைக்காலத்தில் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடுகளான சுமேரியா, அசிரியா, எகிப்து பகுதிகளில் (ஏறக்குறைய கி.மு. 3500-ம் ஆண்டு) பயன்படுத்தியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிற ஒரு சேலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அது இந்தியச் சேலை வகையைப் போலவே தோற்றமளிக்கிறதாம்.
ஆதியில் பெண்கள், இடையை மறைக்க ஒரு துணியையும், மார்பை மறைக்க தாவணி போன்றதொரு துணியையும் பயன்படுத்தியிருக்கலாம். முந்தானை அணியும் முறை வேதகாலத்திலேயே உண்டாகியிருக்கலாம். தார்போட்டுக்கட்டும் பழக்கம் மத்திய இந்தியாவில் தோன்றி தென்னாட்டுக்குப் பரவியதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

டாக்டர் குரியே என்பவர் சேலையின் வளர்ச்சிக் காலத்தை மூன்று பிரிவாகப்பிரிக்கிறார். ஆதிகாலம் முதல் கி.மு. 320 வரை முதல் பிரிவு. இக்காலத்தின் இறுதியில் தோன்றிய சிற்பங்களும் இலக்கியங்களும் தார்போட்டுக்கட்டும் முறை, தார் போடாமல் கட்டும் முறை, சேலை ரவிக்கை அணியும் முறை ஆகிய மூன்று வகைகளில், பெண்கள் சேலையை உடுத்தி வந்ததாகச் சுட்டிக்காட்டுகின்றன.
இரண்டாவது காலம் கி.மு. 320-ல் இருந்து கி.பி. 320 வரை. இக்காலத்தில்தான் முன்கொசுவம் வைத்துக் கட்டும்முறை, குடகு முறை பாவாடை-தாவணி அணியும் முறை ஆகியவை தோன்றியதாம்.
மூன்றாவது பிரிவு கி.பி. 320-ல் இருந்து 1100 வரை உள்ள காலத்தை உள்ளடக்கியது. நிலப்பகுதியின் சூழ்நிலைக்கும், தட்ப வெப்பநிலைக்கும் ஏற்றாற்போல் சேலை அணியும் முறையில் பல மாறுதல்கள் தோன்றியது இக்காலத்தில் தான்.
ராஜசேகரர் என்பவர் 10-ம் நூற்றாண்டில் இருந்து சேலை கட்டும் முறையை நான்கு வகைகளாகப் பிரித்திருக்கின்றார். ஒன்று, முன் கொசுவம் வைத்து, இடையில் உடுத்தி முந்தானையை இடத்தோளில் போட்டுக் கொள்ளுதல். இவற்றில் வங்காளம், குஜராத் பகுதிகளில் முந்தானை இடும் முறை மாறுபடுகின்றது.
இரண்டாவதாக, தார் போட்டுக் கட்டும் முறை. இம்முறை மராட்டியத்திலும், மத்திய இந்தியாவிலும் அதிகமாக் காணப்படுகிறது. மூன்றாவது, பாவாடை, தாவணி அணியும் முறை. இதில் சேலையின் அளவு குறைந்தும், பாவாடை பெரியதாகவும் காணப்படும். அடுத்தது, ஆதிவாசிகளும், மலைவாழ் மக்களும் உடுத்தும் அகலம் குறைந்த சேலை முறை.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், ராஜசேகரர் கூறிய நான்கு முறைப்படிதான் சேலை கட்டும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் தற்போது பெண்கள் ஒரே மாதிரி சேலை உடுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். தார்போட்டுக் கட்டும் பழைய முறைகள் முற்றிலும் இந்தியாவில் அழிந்துவிடவில்லை. ஆனால் முன் கொசுவம் வைத்துக் கட்டும் முறையையே இளம்பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
இறுதியாக புதுமைகள் விரும்பும் தமிழ் பெண்களுக்கு ஒரு செய்தி. சேலை என்பது நீங்கள் உடம்பில் சுற்றிக்கொள்ள உபயோகப்படுத்தும் ஆடைவகை மட்டுமல்ல. அது நமது பாரம்பரியம். அது நமது கலாசாரம். அது உங்களைத் தமிழ் இனப் பெண்கள் என்று உலகமே அறிந்து புரிந்து கொள்ளப் பயன்படும் அடையாளமும்கூட.
தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக அன்னிய முறை ஆடைகளையே பெரிதும் விரும்பி அணிகிறார்கள். புதுமைகளை வரவேற்க வேண்டியதுதான்.
ஆனால், அவை நம் அடையாளங்களையே அழித்து ஒழித்துவிடக்கூடிய அளவுக்கு ஆதரவு கரம் நீட்டலாமா? சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.
எழுத்தாளர் எல்.பிரைட்
தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள்.
உலகில் 85 சதவீதம் பேர் வலது கை பழக்கம் உடையவர்கள். மீதம் இருப்பவர்கள் இடக்கை பழக்கம் கொண்டவர்கள்.
நமது மூளை வலது, இடது என இரு பகுதிகளைக் கொண்டது. நமது உடலின் வலது பாகம், உதாரணமாக வலது கை, வலது கால் போன்றவைகளின் இயக்கம் மூளையின் இடது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது. அதே போல நமது உடலின் இடது பாகம் மூளையின் வலது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், முன்பு குறிப்பிட்டபடி சுமார் பதினைந்து சதவீதத்தினருக்கு இது மாறுபட்டிருக்கும்.
இப்படி மூளையில் வலம், இடம் மாறுபாட்டிற்கு முக்கியக் காரணம் நமது மரபணுக்களில் உள்ள மாற்றமே. பெற்றோரில் ஒருவருக்கு இடதுகை பழக்கம் இருந்தால் குழந்தைகளில் அந்த மரபணு ஒருவேளை கடத்தப்பட்டால், அவர்களும் இடது கை பழக்கமுடையவர்களாக வருவார்கள்.
இது எந்த வகையிலும் குறைபாடு ஆகாது. மிக இயல்பானது.
நமது மூளையின் இடது பகுதியில் தர்க்க ரீதியான முடிவுகள், கணிதம், அறிவியல் போன்றவைகள் இயங்கும் வகையில் அமைந்துள்ளன. வலது பகுதியில் கலை, படைப்பு, கற்பனை, இசை, உள்ளுணர்வு இவைகள் உருவாகின்றன.
பெரும்பான்மையான 85 சதவீதத்தினருக்கு மொழியாற்றல், பேச்சு இவை மூளையின் இடது பகுதியிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி நமது வலது கையின் செயல்பாடுகளை மூளையின் இடது பகுதி இயக்குகிறது. நாம் அறிந்த மொழியையும், சொல் வளங்களும், எழுத்துகளும் இப்பகுதியில் தான் பதிந்து உள்ளது.
நமது வலது கையின் செயல்பாடுகளுக்கான பகுதியும் இங்கு உள்ளதால், வலது கையில் எழுதுவது இயல்பாகவும் இலகுவாகவும் உண்டாகிறது. இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு இது மூளையில் அப்படியே நேர் எதிராக வலது பக்கமிருக்கும். ஆகவே அவர்கள் இடது கையை பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.
தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். ஏதாவது பொருளை எடுக்க வேண்டும் என்றால், குழந்தையின் இடது கைதான் முதலில் வரும். அதைப் பார்த்தவுடன் பதறி, வலது கையை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பார்கள்.
முதன் முதலாக எழுத கற்றுக் கொள்ளும்போது, குழந்தையை வலது கையால் எழுதுகோலை பயன்படுத்த வைப்பார்கள். இயற்கையாக இடது கையால் இலகுவாக செய்ய வேண்டிய ஒன்றை கடினத்துடன், குழப்பத்துடனும் பழக வேண்டி இருக்கும். சிரமப்பட்டாலும், கொஞ்ச நாளில் குழந்தை வலது கைக்கு பழகிவிடும். பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.
நாம் இங்கு புரிந்துக் கொள்ளவேண்டியது, இதற்கு அந்த குழந்தை கொடுக்க வேண்டிய விலை அதிகம்.

அதாவது, இடது கையாளர்களை வலது கைக்கு மாற்றும்போது இன்னொரு சிக்கலும் உருவாகிறது. அவர்களின் இடது பகுதி மூளைக்கு அதிக அளவில் பாரம் ஏற்படுகிறது. மேலும், அவர்களது வலது பக்கத்து மூளையின் வேலை பளு கணிசமாக குறைகிறது. இதனால் மூளையின் வலது, இடது பகுதிகளின் செயல்பாடுகளில் சமநிலை பாதிக்கப்படுகிறது.
வலது பகுதி குறைவாக வேலைசெய்து பழகிக் கொள்வதால், அப்பகுதியிலுள்ள படைப்பு, கற்பனை போன்றவற்றுக்கு ஊற்றாக விளங்க வேண்டியவைகளும் மட்டுப்பட வாய்ப்பு உள்ளது.
பல ஆய்வுகள் கூறுவதுயாதெனில், இடது கை பழக்கம் உள்ளவர்கள், அதிக அளவில் வலது பக்க மூளையை பயன்படுத்துவதால், அவர்களிடம் படைப்பாற்றல் அதிகமாக காணப்படும் என்று கூறுகின்றனர். உலக புகழ்ப்பெற்ற அறிஞர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இடதுகை பழக்கம் கொண்டவர்களுக்கு உதாரணமாக உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில், நமது நாட்டில் உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அன்னை தெரசா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் இடது கை பழக்கமுடையவர்களே.
அதே நேரத்தில், இவ்வுலகில் மனிதனின் கண்டுபிடிப்புகள், உருவாக்கப்படும் பொருட்கள் எல்லாம் பெரும்பான்மை மக்களான வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளன. இடக்கையாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை.
அன்றாடம் பயன்படுத்தும் பாட்டில், பெட்டி, கதவு கைப்பிடி, கத்தரிக்கோல் என வலது கைப்பழக்கம் உடையவர்களுக்கு வசதியாக உருவாக்கப்படுகிறது. இவற்றை இடது கைப்பழக்கம் உடையவர்கள் சிரமப்பட்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த முடியாமலே போய்விடுகிறது.
அதுமட்டுமின்றி நமது சமூகத்தில் உலவி வரும் எண்ணற்ற மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஒரு பொருளை இடது கையால் அளிப்பது தவறானது மற்றும் மரியாதை குறைவானது என்று கருதுவது. இடது கையாளர்களை இது எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று உணர வேண்டும்.
பல வீடுகளில் குழந்தை வளரும்போது இடது கையை பயன்படுத்தும்போது, தப்பு என்று சொல்லி வலது கைக்கு பழக்குவர். சில மேதாவிகள் இதனை மூளை குறைபாடு என்று கருதி அதை சரி செய்ய முயற்சிப்பது மோசமான ஒன்று.
ஏற்கனவே சொன்னது போல், இடது கைப் பழக்கம் என்பது குறைபாடு அல்ல. மனிதர்கள் எப்படி தோற்றம், அமைப்பு, நிறத்தில் வெவ்வேறு வகையினர் உள்ளனரோ அதுபோன்று இவர்களும் இன்னொரு வகையினர். அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் சிறந்த பண்பாக இருக்க முடியும்.
மாறாக எங்களைப் போன்று நீயும் வலதுகைக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானது. மேலும் அது பெரும்பான்மையினரின் ஆதிக்க மனப்பான்மைக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி உலக இடக்கை பழக்கமுடையவர்கள் நாளாக நினைவு கூறப்படுகிறது. அதை வாய்ப்பாக கருதி, மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களும் நம்மை போன்றவர்கள் என்கிற மனப்பான்மையை வளர்க்கவும், இவ்வுலகத்தில் உருவாக்கப்படும் பொருட்களை அவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கவும் வழிக்கோலுவோம்.
நல்லினி, வழக்கறிஞர்
நமது மூளை வலது, இடது என இரு பகுதிகளைக் கொண்டது. நமது உடலின் வலது பாகம், உதாரணமாக வலது கை, வலது கால் போன்றவைகளின் இயக்கம் மூளையின் இடது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது. அதே போல நமது உடலின் இடது பாகம் மூளையின் வலது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், முன்பு குறிப்பிட்டபடி சுமார் பதினைந்து சதவீதத்தினருக்கு இது மாறுபட்டிருக்கும்.
இப்படி மூளையில் வலம், இடம் மாறுபாட்டிற்கு முக்கியக் காரணம் நமது மரபணுக்களில் உள்ள மாற்றமே. பெற்றோரில் ஒருவருக்கு இடதுகை பழக்கம் இருந்தால் குழந்தைகளில் அந்த மரபணு ஒருவேளை கடத்தப்பட்டால், அவர்களும் இடது கை பழக்கமுடையவர்களாக வருவார்கள்.
இது எந்த வகையிலும் குறைபாடு ஆகாது. மிக இயல்பானது.
நமது மூளையின் இடது பகுதியில் தர்க்க ரீதியான முடிவுகள், கணிதம், அறிவியல் போன்றவைகள் இயங்கும் வகையில் அமைந்துள்ளன. வலது பகுதியில் கலை, படைப்பு, கற்பனை, இசை, உள்ளுணர்வு இவைகள் உருவாகின்றன.
பெரும்பான்மையான 85 சதவீதத்தினருக்கு மொழியாற்றல், பேச்சு இவை மூளையின் இடது பகுதியிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி நமது வலது கையின் செயல்பாடுகளை மூளையின் இடது பகுதி இயக்குகிறது. நாம் அறிந்த மொழியையும், சொல் வளங்களும், எழுத்துகளும் இப்பகுதியில் தான் பதிந்து உள்ளது.
நமது வலது கையின் செயல்பாடுகளுக்கான பகுதியும் இங்கு உள்ளதால், வலது கையில் எழுதுவது இயல்பாகவும் இலகுவாகவும் உண்டாகிறது. இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு இது மூளையில் அப்படியே நேர் எதிராக வலது பக்கமிருக்கும். ஆகவே அவர்கள் இடது கையை பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.
தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். ஏதாவது பொருளை எடுக்க வேண்டும் என்றால், குழந்தையின் இடது கைதான் முதலில் வரும். அதைப் பார்த்தவுடன் பதறி, வலது கையை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பார்கள்.
முதன் முதலாக எழுத கற்றுக் கொள்ளும்போது, குழந்தையை வலது கையால் எழுதுகோலை பயன்படுத்த வைப்பார்கள். இயற்கையாக இடது கையால் இலகுவாக செய்ய வேண்டிய ஒன்றை கடினத்துடன், குழப்பத்துடனும் பழக வேண்டி இருக்கும். சிரமப்பட்டாலும், கொஞ்ச நாளில் குழந்தை வலது கைக்கு பழகிவிடும். பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.
நாம் இங்கு புரிந்துக் கொள்ளவேண்டியது, இதற்கு அந்த குழந்தை கொடுக்க வேண்டிய விலை அதிகம்.

அதாவது, இடது கையாளர்களை வலது கைக்கு மாற்றும்போது இன்னொரு சிக்கலும் உருவாகிறது. அவர்களின் இடது பகுதி மூளைக்கு அதிக அளவில் பாரம் ஏற்படுகிறது. மேலும், அவர்களது வலது பக்கத்து மூளையின் வேலை பளு கணிசமாக குறைகிறது. இதனால் மூளையின் வலது, இடது பகுதிகளின் செயல்பாடுகளில் சமநிலை பாதிக்கப்படுகிறது.
வலது பகுதி குறைவாக வேலைசெய்து பழகிக் கொள்வதால், அப்பகுதியிலுள்ள படைப்பு, கற்பனை போன்றவற்றுக்கு ஊற்றாக விளங்க வேண்டியவைகளும் மட்டுப்பட வாய்ப்பு உள்ளது.
பல ஆய்வுகள் கூறுவதுயாதெனில், இடது கை பழக்கம் உள்ளவர்கள், அதிக அளவில் வலது பக்க மூளையை பயன்படுத்துவதால், அவர்களிடம் படைப்பாற்றல் அதிகமாக காணப்படும் என்று கூறுகின்றனர். உலக புகழ்ப்பெற்ற அறிஞர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இடதுகை பழக்கம் கொண்டவர்களுக்கு உதாரணமாக உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில், நமது நாட்டில் உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அன்னை தெரசா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் இடது கை பழக்கமுடையவர்களே.
அதே நேரத்தில், இவ்வுலகில் மனிதனின் கண்டுபிடிப்புகள், உருவாக்கப்படும் பொருட்கள் எல்லாம் பெரும்பான்மை மக்களான வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளன. இடக்கையாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை.
அன்றாடம் பயன்படுத்தும் பாட்டில், பெட்டி, கதவு கைப்பிடி, கத்தரிக்கோல் என வலது கைப்பழக்கம் உடையவர்களுக்கு வசதியாக உருவாக்கப்படுகிறது. இவற்றை இடது கைப்பழக்கம் உடையவர்கள் சிரமப்பட்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த முடியாமலே போய்விடுகிறது.
அதுமட்டுமின்றி நமது சமூகத்தில் உலவி வரும் எண்ணற்ற மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஒரு பொருளை இடது கையால் அளிப்பது தவறானது மற்றும் மரியாதை குறைவானது என்று கருதுவது. இடது கையாளர்களை இது எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று உணர வேண்டும்.
பல வீடுகளில் குழந்தை வளரும்போது இடது கையை பயன்படுத்தும்போது, தப்பு என்று சொல்லி வலது கைக்கு பழக்குவர். சில மேதாவிகள் இதனை மூளை குறைபாடு என்று கருதி அதை சரி செய்ய முயற்சிப்பது மோசமான ஒன்று.
ஏற்கனவே சொன்னது போல், இடது கைப் பழக்கம் என்பது குறைபாடு அல்ல. மனிதர்கள் எப்படி தோற்றம், அமைப்பு, நிறத்தில் வெவ்வேறு வகையினர் உள்ளனரோ அதுபோன்று இவர்களும் இன்னொரு வகையினர். அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் சிறந்த பண்பாக இருக்க முடியும்.
மாறாக எங்களைப் போன்று நீயும் வலதுகைக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானது. மேலும் அது பெரும்பான்மையினரின் ஆதிக்க மனப்பான்மைக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி உலக இடக்கை பழக்கமுடையவர்கள் நாளாக நினைவு கூறப்படுகிறது. அதை வாய்ப்பாக கருதி, மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களும் நம்மை போன்றவர்கள் என்கிற மனப்பான்மையை வளர்க்கவும், இவ்வுலகத்தில் உருவாக்கப்படும் பொருட்களை அவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கவும் வழிக்கோலுவோம்.
நல்லினி, வழக்கறிஞர்






