என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன.
    இந்தியாவில் பண்டிகை நேர ஷாப்பிங் எனும் தீபாவளியின் போது மட்டுமே அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி ஷாப்பிங் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக தீபாவளி தொடங்கும் முன்னரே அதற்கான ஆயத்தப்பணி ஏற்பாடு செய்யப்படுகிறது. தீபாவளி நேரம் ஷாப்பிங் என்பது பெரிய பொருளாதார சந்தை முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே சிறு தொழில் முதல் பெரிய தொழில் வரை அனைத்தும் தீபாவளி நேர விற்பனையை வைத்தே பெரிய லாபத்தை அடைய வேண்டியுள்ளது. அனைத்து விதமான பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்கின் போது விற்பனையாகின்றன. அதாவது ஆடைகள், பட்டாசு, தங்கம், வெள்ளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாலணிகள், அனைத்துவிதமான அலங்காரப் பொருட்கள், விளக்குகள், பேன்சி உலோக நகைகள் என்றவாறு அனைத்துமே தீபாவளி நேர ஷாப்பிங்ல் இடம்பெறுகின்றன.

    எத்தனை முறை ஷாப்பிங் செய்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் எதையோ மறந்துவிட்டோம் என மீண்டும் கடைக்கு செல்வோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் கூட நாம் இன்னும் அதிக பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடி இருக்கலாம் என்றே தோன்றும். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என தயாராகும் பொருட்களின் அணிவரிசை நீண்டு கொண்டே போகும்.

    தீபாவளிக்கு ஏற்ற தயாரிப்பு பணிகள்:-

    தீபாவளிக்கு எற்றவாறு புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆடைகள் முதல் நகைகள் வரை அனைத்தும் தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கப்படுகிறது. பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல் ஆண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஆடைகள், அணிகலன்கள் போன்றவையும் இந்த தீபாவளிக்கு புதுசு என்றவாறே தயாரிக்கப்படுகின்றன. டிசைனர் பேக், பர்ஸ், கலர்புல் காலணி, புதிய ஹேர்ஸ்டைல் என தங்கள் உருவமைப்பையே தீபாவளிக்கு என புதியதாய் மாற்றி விடுகின்றனர்.

    ஓராண்டு தயாரிப்பு ஒரு சிலநாளில் விற்பனை:-

    தீபாவளிக்கு என ஆடைகள், பட்டாசு மற்றும் உபயோகப்பொருட்கள் தயாரிப்பு என்பது ஓராண்டு அதிக வேலையாட்கள் கொண்டு தயாரிக்கப்படும். பின்னர் அதனை அந்தந்த பிராந்திய விருப்பத்திற்கு ஏற்ப கடைகளுக்கு பிரித்தளித்து அதன் விற்பனையை கண்காணிப்பர். தீபாவளி நெருங்க நெருங்க தான் அதன் மவுசும், தெரியவரும். பட்டாசு என்பது அதிக பாதுகாப்புடன் நிறைய பணியாளர்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனை தீபாவளிக்கு சில நாள் முன்பு வாங்கி மகிழும் போது தயாரிப்பாளர்களின் மகிழ்வும் வெளிப்படும்.

    மின்னணு பொருட்களும் விலையுயர் ஆபரணங்களும்

    தீபாவளி ஷாப்பிங்-யில் தற்போது ஏராளமான மின்னனு பொருட்கள் இடம்பெறுகின்றன. அன்றாட பயன்பாட்டு பொருள் முதல் பொழுது போக்கு சாதனங்கள் வரை எண்ணற்ற புதிய புதிய பொருட்களை தீபாவளி சமயத்தில் வாங்குகின்றனர். அதுபோல் தங்கம், வைர, பிளாட்டின நகைகள் என்பதுடன் வெள்ளி பொருட்கள் போன்றவாறு விலையுயர்ந்த பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்-யில் இடம் பெறுகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் என்பது ஆண்டு தோறும் நடைபெற்றாலும் தீபாவளி சமயத்தில் தான் அதிகளவில் இதன் விற்பனை அதிகரிக்கிறது எனலாம்.

    பணப்பெருக்கமும் வாங்கும் தன்மை அதிகரிப்பும்:-

    ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றன. இந்த தீபாவளி போனஸ் தான் மக்களின் வாங்கும் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. சம்பளத்தை தவிர கூடுதலாக இந்த வருவாய் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், அதனை அதிக மகிழ்ச்சி படுத்தும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமும் இணைந்து விடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் தங்களால் இயன்ற சிறு ஷாப்பிங் செய்தாவது தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியில் மனதார இணைந்துவிடுகின்றனர்.

    வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.
    வெந்தயம் கொஞ்சம் கசக்கும். அது தரும் பலன்களோ மிகவும் இனிக்கும். மேதி, வெந்தை, மெந்தியம் என பல்வேறு பெயர்களை கொண்ட வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும்.

    சிறுநீர் பெருக்கி, காமம்பெருக்கி, உரமாக்கி என பல செய்கைகளையும் கொண்டது. ‘வெச்சென்ற மேனி மிகவுங் குளிர்ச்சியதாம் அச்சமில்லை வெந்தயத்துக்காய்ஞ்‘ என வெந்தயம் சார்ந்த பாடல், அதன் குளிர்ச்சித்தன்மை குறித்தும், பித்தம் சார்ந்த நோய்களுக்கான பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கிறது.

    வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் மெலிந்தவர்கள், வெந்தயம் சேர்த்து தயாரித்த அடையை, கருணைக்கிழங்குடன் சாப்பிட்டால் உடல் பருமனாகும் என்கிறது, சித்தர் தேரையரின் பாடல்.

    ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாகச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.

    பிரசவித்த பெண்ணுக்கு பால்சுரப்பு அதிகரிக்க வெந்தய களி, வெந்தய கஞ்சி வைத்துக்கொடுக்கும் நடைமுறை கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடித்து, கோதுமை மாவும் கருப்பட்டியும் சேர்த்து தயாரிக்கும் இனிப்புக் களி‘ பால்சுரப்பை அதிகரிக்க செய்யும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வெந்தயத்துடன் பாதாம்பருப்பு சேர்த்து செய்யப்படும் வெந்தய லட்டுகள்‘ பண்டிகைக்கால பலகாரமாக மட்டுமல்லாமல், பிரசவித்த பெண்ணுக்கு பால்பெருக்கும் உணவாகவும் இருக்கிறது.

    நீரிழிவு கட்டுப்பாட்டில் வெந்தயத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. சாப்பிட்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவு மற்றும் மூன்று மாதங்களுக்கான ரத்த சர்க்கரை இருப்பைக் காட்டும் எச்பிஎ1சி‘ அளவீட்டைக் குறைக்கவும் வெந்தயம் உதவும். ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையை, செல்கள் பயன்படுத்தும்விதமாக நொதிகளை சுரக்கச் செய்து, குளூக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையின் பொக்கிஷமாகவே நீரிழிவாளர்கள் வெந்தயத்தைப் பார்க்கலாம்.

    சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களின் அளவை குறைக்கவும் வெந்தயம் பயன்படும். ரத்தத்தில் நுழைந்த கிருமிகளை அழிக்கும் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை வெந்தயம் துரிதப்படுத்தும். அமினோ அமிலங்கள் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து, இரும்புச்சத்து, தயாமின் என நுண்ணூட்டங்களுக்கும் வெந்தயத்தில் குறைவில்லை.
    நீங்கள் எடுத்துக்கொண்டத் துறை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அதில் மிகப்பெரிய சாதனை புரியவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பணியாற்றுங்கள் வெற்றி உங்களைத் தானாகத் தேடிவரும்.
    நமது வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் லட்சியமும் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்திருப்போம். அவர்கள் தம்முடைய தலைவிதி இது தான் என்று வாழ்க்கையில் எந்தஒரு லட்சியமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் தற்செயலாக வெற்றி பெற்று விடுகிறார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் விரக்தியினாலும் மகிழ்ச்சி இன்மையாலும் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுகிறார்கள். தற்செயலாகவோ அல்லது சிபாரிசின் மூலமாகவோ ஒருவர் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு பயம் இருக்கும். ஆனால் தன்னுடைய திறமை மற்றும் உழைப்பின் மூலம் உயர்ந்த நிலைக்கு வந்தவர்களுக்கு பயம் இருக்காது. கீழே விழுந்தாலும் மீண்டும் உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு மிக முக்கியமாக மூன்று தடைகள் உள்ளன அவைகள் பயம், கவலை மற்றும் சோம்பல் ஆகும். பயமும் தயக்கமும் உள்ளவர்களை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். பயம் மற்றும் கவலைக்கு காரணம் தேவையற்ற சந்தேகம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகும். பெரும்பாலும் இவைகள் நம்முடைய எதிர்மறை கற்பனையின் மூலம் ஏற்படுகிறது. நம்முடைய தேவையற்ற பயத்தைப் போக்க வேண்டுமென்றால், நாம் எதைக்கண்டு பயப்படுகிறோமோ அதை எதிர் நோக்க முயற்சிக்க வேண்டும். நாம் நம்முடைய சிறு வயதுமுதலே தெரிந்தோ தெரியாமலோ தேவையற்ற எதிர்மறைக் கற்பனையை வளர்த்து விடுகிறோம் அதுதான் நம்முடன் நம்வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது. அதிலிருந்து நம்மால் நிச்சயம் விடுபடமுடியும் அதற்கு தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தேவை.

    உயிரோடு இருக்கும் மனிதன் தனக்காக கட்டிக் கொள்ளும் கல்லறைதான் சோம்பல். சோம்பலில் சுகம் காண்பவன் தன்னைத் தேடிவரும் நல்ல பல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் புறக்கணித்துவிடுகிறான். ஆனால், எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பவர்கள் தமக்கு வரும் தடைகளை வெற்றிப் படிகளாக மாற்றுகின்றனர். ஒருமுறை வந்த வாய்ப்பு மீண்டும் வருவதில்லை அப்படிவந்தால் அது மற்றொரு வாய்ப்பாகத்தான் கருதமுடியும். வாய்ப்புகள் வரும்போது தங்கள் மனக்கதவுகளை திறந்து வையுங்கள். சோம்பலே வாழ்க்கையானால் சோகமே வருமானம் ஆகும். எல்லாவாய்ப்புகளிலும் உள்ள சிறந்தவற்றையே பாருங்கள்.

    பயம், சோம்பல், கவலை, தாழ்வு மனப்பான்மை ஆகியவைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக பின்னப்பட்ட சிலந்தியின் வலையைப்போன்றது. அதில் நாம் ஒரு பூச்சியைப் போல மாட்டிக்கொண்டோம். அந்த கூட்டிலிருந்து விடுபடவேண்டுமென்றால் நமக்கு யாரும் உதவமுன்வரமாட்டார்கள் நாம் தான் முயற்சிசெய்து வெளியே வரவேண்டும். நாம் நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.

    மக்கள் பெரும்பாலும் தோல்வியடைவதற்கான காரணம் திறமையில்லாமையோ அல்லது அறிவில்லாமையோ அல்ல மாறாக விருப்பமில்லாமை, சிறந்தவழிகாட்டி இல்லாமை, ஒழுக்கமில்லாமை மற்றும் அர்ப்பணிப்புத்தன்மை இல்லாமை ஆகும். நாம் எப்படி வாழ்வது, எப்படி பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி சரியான முடிவுகளை எடுப்பது போன்றவற்றை எந்த பள்ளிகூடமும் கல்லூரியும் கற்றுக் கொடுப்பதில்லை. நாம் தான் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் இது நம் அனுபவத்தின்மூலமே பெறமுடியும்.

    சில கடினமான வேலைகள் வரும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அதை நிராகரிக்காதீர்கள் இதுபோன்ற கடினமான வேலைகள் செய்யும் போதுதான் நம்முடைய திறமை வெளிப்படும். எந்த ஒரு செயலையும் எல்லோரும் செய்துவருகின்ற நடைமுறையாக இருந்தாலும் அதில் ஒருவர் ஏனைய மற்றவர்களைவிட மிகச்சிறப்பாக, மிகஅழகாக, விரைவாக அதிக மாறுபாட்டுடன் செய்து பிறரது கவனத்தை ஈர்த்து பாராட்டு பெறுகிறார்களோ அவர்களே திறமைசாலிகள் ஆவர்.

    நமது முன்னோர்கள் ஞானிகளாகவும், அறிஞர்களாகவும், யோகிகளாகவும், முனிவர்களாகவும், தியாகிகளாகவும், மாமன்னர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். அந்த பரம்பரையில் வந்த நாம் இன்று தன்னம்பிக்கையற்று தைரியம் இல்லாமல் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறோம். முயற்சி இல்லாமல் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. நீங்கள் எடுத்துக்கொண்டத் துறை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அதில் இதுவரை பணியாற்றியவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னவெல்லாம் சாதித்தார்களோ அவற்றுக்கெல்லாம் மேலாக இன்னும் மிகப்பெரிய சாதனை புரியவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பணியாற்றுங்கள் வெற்றி உங்களைத் தானாகத் தேடிவரும்.

    ர.அறிவழகன், சென்னை.
    குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் விருப்பம் தான்.. அதிலும் பிஷ் ஃப்ரைடு ரைஸ் என்றால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். இன்று பிஷ் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - ஒரு கப்
    வறுத்த மீன் - 2 துண்டுகள்
    சோயா சாஸ் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தக்காளி சாஸ் - 1
    வினிகர் - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 2
    முட்டை - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 1
    கேரட், பீன்ஸ், கோஸ் - ஒரு கப்
    நெய் - 3 ஸ்பூன்
    பூண்டு - 4 பல்



    செய்முறை :

    வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும்.

    சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும்.

    முட்டையை உதிரியாக பொரித்து வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேகவிடவும்.

    அடுத்து அதில் பொரித்த முட்டை, வறுத்த மீன் மற்றும் சாதத்தை கொட்டி கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு நகைகள். வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல.
    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு அல்லது ரூபி பதிக்கப்பட்ட நகைகள். நவரத்தினங்களில் ஒன்றான ரூபி அல்லது கெம்பு கல் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உலோகங்களில் பதிக்கக்கூடியவை. மேலும் இக்கல் வைரம், பச்சைக்கல், முத்து போன்றவற்றுடன் இணைத்து பதிக்கவும் ஏற்றதாகும்.

    கெம்பு கற்கள் பின்க், பர்ப்புள், சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றாலும் பொதுவாக கருஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறமே பெரும்பாலும் விரும்பப்படுகிறது. இது கொரண்டம் (அலுமினியம் ஆக்சைட்) என்ற தாதுவின் ஒரு வகையாகும். இந்த தாதுவில் உள்ள கிரோமியம் என்ற வேதிப்பொருளினால் சிவப்பு நிறம் இந்த கற்களுக்கு கிடைக்கிறது.

    கெம்பு கற்களில் மியான்மார் அல்லது பர்மாவில் கிடைக்கும் கற்களுக்கு விலை அதிகம் இருக்கிறது. பொதுவாக ஒரு கேரட் எடையுள்ள கற்களுக்கு 7 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையில் அதன் நிறம், எடை, அளவு, சுத்தம் மற்றும் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

    வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல. மிகவும் மெல்லிய வகை நகைகளை விட சற்று எடை கூடுதலான நகைகளில் கெம்பு அருமையாக இருக்கும். டெம்பிள் ஜூவல்லரி நகைகளிலும், ஜிமிக்கி போன்ற பிரதான நகைகளிலும் பதிக்கப்படும்போது கெம்பு கற்கள் மிக நேர்த்தியாகவும், எடுப்பாகவும் இருக்கும். பொதுவாக பச்சை மற்றும் நீல நிற கற்கள் சிவந்த நிறம் உள்ளவர்களுக்கு அதிக எடுப்பாக இருக்கும். ஆனால் கெம்பு கற்கள் பதிக்கப்பட்ட சிவப்பு நிற கற்கள் கொண்ட நகைகள் மாநிறம் மற்றும் கருத்த நிறம் உள்ள பெண்களுக்கும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

    கெம்பு கற்கள், பச்சை நிற கற்கள், முத்து போன்றவற்றுடன் சேர்த்தும் பதிக்கப்படுகிறது. கெம்பும், முத்தும் பதித்த ஜிமிக்கி, வளையல், நெக்லஸ் போன்ற நகைகள் செட்டாக அணியும்போது மிக நேர்த்தியாகவும், அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தையும் அளிக்கும்.

    இன்று பல நகைக்கடைகளில் மணமகளுக்கு திருமண நகைகளாக முழு கெம்பு செட் நகைகள் கிடைக்கின்றன. கம்மல், தொங்கட்டான் அல்லது ஜிமிக்கி, வளையல், மோதிரம், நெக்லஸ், ஆரம், மாங்காய் மாலை போன்ற மாலைகள், ஒட்டியானம், நெத்திச்சுட்டி, டாலர் என்று ‘ப்ரைடல் ரூபி செட்’ நகைகள் கிடைக்கின்றன. பழமையும், புதுமையும் கலந்து நகைகள் அணிய விரும்பும் இளம் பெண்களுக்கும் பல புதுமையான டிசைன்களில் கெம்பு பதித்த நகைகள் அருமையான தேர்வாக இருக்கும். 
    பச்சிளம் குழந்தையை தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பச்சிளம் குழந்தையை பாதுகாப்பாக தூக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
    குழந்தைகள் என்றாலே ஒரு தனி சந்தோசம், உற்சாகம் நமக்கு தானாக பிறந்துவிடும். அப்படி கைக்குழந்தைகளை நாம் பார்க்கும் போது தூக்க வேண்டும், செல்லமாக விளையாட வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் நமக்கு எழுவதும் உண்டு. அதை ஒரு மாதிரி நாம் நிறைவேற்றுவதும் உண்டு.

    ஆனால் கைக்குழந்தைகள் விஷயத்தில் 100 சதவீதம் கவனமாக இருக்கவேண்டும். சிலர் தங்கள் ஆசைக்கு குழந்தைகளை விரும்பம் போல் கையாள்வார்கள். ஆனால் அது ஆபத்தில் தான் முடியும்.

    பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை சரியாக நிற்காமல் இருக்கும். இந்த பருவத்தில் குழந்தையை சட்டென்று தூக்குதல் மிகப்பெரிய ஆபத்தான செயல்.

    அதே நேரம் குழந்தையைச் சரியாகத் தூக்காமல்போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி போன்ற கஷ்டங்கள் வந்துவிடும். இப்படி வந்தால் எங்களில் பலர் உடனே சுய மருத்துவம் செய்ய தொடங்கி விடுவார்கள். ஆனால் இப்படி செய்தல் ஆகாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அத்துடன் குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். இதை பலர் சரியாக செய்வதில்லை.

    மீண்டும் கை அணைப்பில் இருந்து இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்கவேண்டும்.

    இப்படி குழந்தைகள் விஷயத்தில் நாம் நிறைந்த கவனம் செலுத்த வேண்டும்.

    நமது அலுவலகக் குடும்பத்துடன் ஒன்றி இருக்கவும் நண்பர்களை நண்பர்களாகவே தொடர்ச் செய்வதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
    நமது ஒரு நாள் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தியே நாம் நம் அலுவலகத்தில் தான் செலவழிப்போம். அந்த நேரத்தை மகிழ்ச்சியும் நிம்மதியும் குழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நமது அலுவலகக் குடும்பத்துடன் ஒன்றி இருக்கவும் நண்பர்களை நண்பர்களாகவே தொடர்ச் செய்வதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

    அலுவலகத்தில் உங்களுக்கென தனி நட்பு வட்டம் இருந்தாலும் உடன் பணி செய்வோர் அனைவரிடமும் நல்ல நட்பு முறையில் ஆன உறவு அவசியம். சுமூகமான, எளிதாக அணுகக்கூடியவராக உங்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடன் இருப்போர் குறித்து அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள். அனைவரிடமும் சமமாக பழகுங்கள்.

    உங்களுக்கும் உடன் பணியாற்றுவோரில் சிலருக்கும் இடையில் சில பிடித்தமான விஷயங்களில் ஒற்றுமை இருக்கும். அதை அறிந்துகொண்டு நட்பு பாராட்டுவது கூடுதல் பலமாக அமையும்.

    அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அடுத்தவர் பற்றி புரளியும் புரணியும் பேசுவதை தவிர்க்கவும். எப்போதும் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்போருக்கும் ஒரு பாஸிட்டிவான அலைகளைக் கொடுங்கள்.

    உங்கள் உடன் இருக்கும் நண்பர்கள் உங்கள் மூலமாக சலிப்பு அடையக் கூடாது. ஆர்வமிக்க சந்திப்புகள், பேச்சுகள், உரைகள் என ஆராவராமக உங்கள் வட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
    இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. இன்று ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வல்லாரை கீரை - அரை கட்டு
    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    மிளகு - கால் டீஸ்பூன்
    புளி - ஒரு கோலி குண்டு அளவு
    எண்ணெய் - தேவைகேற்ப
    உப்பு - தேவைகேற்ப
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பில்லை - சிறிதளவு



    செய்முறை :

    வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைக்கவும்.

    அதே கடாயில் சுத்தம் செய்த வல்லாரைக்கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, புளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    பிறகு, கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கிளறி இறக்கவும்.

    ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் வாடிக்கையான நோய் ஆகிவிட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையா? என சந்தேகம் பலருக்கும் ஏற்படும். ஆனால் உண்மையில் சர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுமா? இல்லையான என பார்ப்போம்.

    சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டு விடுகிறது. நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குறையத் தொடங்குவதாகக் கவலைபடுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது.



    இதனால் விறைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், உடலுறவுக்கான உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறட்சியடைதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

    பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள். ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம்.

    ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, பதற்றம், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.

    இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.
    மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே, முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும். உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில், கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.

    செய்முறை :

    கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

    பலன்கள்

    வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.

    பள்ளிச் செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர, காலையில் மலம் கழிக்கும் பிரச்சனை இருக்காது. மந்த குணம், பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

    மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்னைகள் வராது.

    முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.

    மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க, 5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

    சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற  பிரச்சனையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச் சாறு போன்றவற்றை அருந்திய அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம்.

    மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
    டெங்குவை குணப்படுத்த சித்த மருத்துவத்தின் மூலம் கிடைத்துள்ள நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலை சாரும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை விரட்டுவதில் துரிதமாக செயல்படுகின்றன.
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு, இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்குவை குணப்படுத்த ஆங்கில மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகள் இருந்தாலும் நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற சித்த மருத்துவத்தின் மூலம் கிடைத்துள்ள நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலை சாரும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை விரட்டுவதில் துரிதமாக செயல்படுகின்றன.

    இதனால் தான் நிலவேம்பு கசாயம் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப் பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதை கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள். இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும். தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்கன் குன்யா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், நீர்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு வலி, உடல் வலி, எய்ட்ஸ் நோயான பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை குணமாக்க முடியும். மேலும் நிலவேம்பு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாகும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

    நிலவேம்பு வேறு-நிலவேம்பு கசாயம் வேறு. டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகின்ற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் சேர்க்கப்படுவதில்லை அதனுடன் 9 பொருட்கள் சேர்த்து நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது. அதாவது நிலவேம்பு என்கின்ற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய் புடலை, கோரைகிழங்கு, சந்தன சிறாய், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி விட்டு, ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்கவைக்கவேண்டும்.

    இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்கவேண்டும். இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்திற்குள் குடிக்கவேண்டும். தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. காய்ச்சல் இருப்பவர்கள் காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்கவேண்டும். காய்ச்சல் நிற்கும் வரை குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் வாரம் 3 முறை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

    நிலவேம்பு கசாயம் 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள் ஆகும். இந்த கசாயத்தை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. சித்தர்கள் எழுதிய நூல்களில் உள்ள மருந்துகளை பாரம்பரியமிக்க சித்த மருத்துவர்களை கொண்டு ஆராய்ச்சி செய்து அதன்மூலம் தான் மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சித்தர்கள் மருந்து தயாரிக்கும் முறையே தனித்தன்மை வாய்ந்ததாகும். அதாவது சுவை, வீரியம், விபாகம், பஞ்சபூத கூட்டுறவு கலவை சேர்ந்துதான் மருந்து தயாரிக்கப்படும்.

    எனவே, சித்த மருந்தால் எந்த வித பக்க விளைவோ, பாதிப்போ ஒரு காலமும் ஏற்படாது. இதனால் தான் தற்போது அனைவரும் சித்த மருத்துவத்தை நாடி வருகிறார்கள். நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத் தன்மையை முறிக்கும். எனவே 9 வகையான மூலிகை சேர்ந்த நிலவேம்பு கசாயம் உடலுக்கு நன்மை அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பப்பாளி இலை சாரும், மலைவேம்பு சாரும் ரத்தத்தட்டுகளை அதிகரிக்கும். எனவே, மக்கள் யாரும் பயப்படாமல் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்.

    பன்றிக்காய்ச்சல் உள்ளவர்களுக்கு காய்ச்சல், குமட்டல், வாந்தி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, குளிர் நடுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர் என்கின்ற கசாயம் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த கசாயம் ஆடாதோடை, அக்ரகாரம், கற்பூரவல்லி, திப்பிலி, சீந்தில், கடுக்காய் தோல், நிலவேம்பு, கோஸ்டம், சிறுதேக்கு, முள்ளி, வட்டத்திருப்பி, லவங்கம், கோரை கிழங்கு, சுக்கு, சிறுகாஞ்சோறி ஆகிய 15 வகையான மூலிகைகளை சம அளவு எடுத்து பொடியாக்கவேண்டும்.

    அந்த பொடியில் 5 கிராம் எடுத்து கபசுரக்குடிநீர் கசாயத்தை 200 மில்லி தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மில்லியாக்கி வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படும். இந்த கசாயத்தை 3 மணி நேரத்தில் குடிக்கவேண்டும். அதன் பிறகு குடிக்கக்கூடாது. இந்த கபசுரக்குடிநீர் கசாயம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். இதை சித்த மருத்துவ டாக்டரின் அறிவுரைப்படி பயன்படுத்தவேண்டும். தன்னிச்சையாக பயன்படுத்தவேண்டாம்.

    டாக்டர் சுபாஷ்சந்திரன்,

    அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர், நெல்லை.
    சிக்கன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று பாலக்கீரை சிக்கன் சேர்த்து சூப்பரான பாலக் சிக்கன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கட்டு
    சிக்கன் - 1/2 கிலோ
    வெங்காயம் - 300 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.

    சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×