search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vallarai Keerai Chutney"

    இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. இன்று ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வல்லாரை கீரை - அரை கட்டு
    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    மிளகு - கால் டீஸ்பூன்
    புளி - ஒரு கோலி குண்டு அளவு
    எண்ணெய் - தேவைகேற்ப
    உப்பு - தேவைகேற்ப
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பில்லை - சிறிதளவு



    செய்முறை :

    வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைக்கவும்.

    அதே கடாயில் சுத்தம் செய்த வல்லாரைக்கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, புளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    பிறகு, கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கிளறி இறக்கவும்.

    ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×