என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது.
    இது ஒரு புது கலாசாரம். 18 முதல் 30 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் பல வருடங்களாக ஒன்றாகப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது, அவர்கள் வாழ்க்கை. ஆனால் அப்படிப்பட்ட சிலரிடம், ‘நீங்கள் நண்பர்களா?’ என்று கேட்டால், இல்லை என்கிறார்கள். ‘காதலர்களா?’ என்று கேட்டால், அதற்கும் இல்லை என்றுதான் பதில் தருகிறார்கள். ‘அப்படியானால் உங்கள் நட்பிற்கும், பழக்கத்திற்கும் என்ன பெயர்?’ என்று கேட்டால், பதில் சொல்லத் தெரியாமல் சிரிக்கிறார்கள். ஆனால் அப்படி ஜோடியாக பழகும் அவர்கள் இருவரும், காதல் ஜோடியைவிடவும் நெருக்கமான தம்பதிகளைவிடவும் மிக அதிகமான அளவு தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். அந்தரங்கமான தகவல்களைக்கூட அலசிக்கொள்கிறார்கள்.

    ‘சரி, பெயர் சூட்டப்படாத இந்த புதிய கலாசார நட்பில் எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லையே’ என்று நிம்மதி பெருமூச்சு விட முடியவில்லை. ஏனென்றால், இத்தகைய நட்பை விட்டு விலக முடியாமலும்- காதலராகவோ, கணவராகவோ அங்கீகரித்து வாழ்க்கையில் சேர்க்க முடியாமலும் பல பெண்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த தவிப்பு அவர்கள் பணிசார்ந்த எதிர்காலத்தையும், (திருமணம் போன்ற) வாழ்க்கை சார்ந்த எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

    பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய நட்புக்கு அவரவருக்கு தக்கபடி பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், தங்கள் தோழியை ‘ஹாப் கேர்ள் பிரெண்ட்’ என்கிறார்கள். பெண்கள், தங்கள் தோழர்களை ‘ஹாப் பாய் பிரெண்ட்’ என்றழைக்கிறார்கள். இப்படிப்பட்ட பாதி காதலர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

    இவர்கள் வயதைக் கடந்தும், பருவத்தை கடந்தும் நட்பு பாராட்டி வருகிறார்கள். 18 வயது முதல் 70 வயது வரை இப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது என்பதை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும். நட்பு அதன் எல்லையோடு நட்பாக மட்டும் இருக்க வேண்டும்.

    விழிப்பாக இருப்பது எப்படி?

    இதுபோன்ற உறவுகளில் இருப்பவர்களை அலசி ஆராய்ந்தபோது, இந்த நட்பால் அவர்களுக்கு ஓரளவு பலன் இருந்தாலும், பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. அதனால் இதுபோன்ற உறவுகளில் விழிப்பாக இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    பள்ளிக்காலத்தில் இருந்தே ஆண்கள்- பெண்களோடும், பெண்கள் - ஆண்களோடும் சகஜமாக நட்பு பாராட்டத் தொடங்கவேண்டும். அப்படி நட்பு பாராட்டினால் நட்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் எதிர்காலத்தில் நட்புக்கு எல்லை வகுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.



    பள்ளிக்காலத்திலே எதிர்பாலினரிடம் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கல்லூரி காலத்திலோ அல்லது பணிபுரியும் காலத்திலோ, தன்னை உணர்ந்த நண்பர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் அளவுக்கு மீறிய நிலையில் பழகும்போது, அது இத்தகைய நட்பாகிவிடுகிறது. (பள்ளிக் காலத்திலே ஆண், பெண் நட்பை சகஜமாக எதிர்கொள்வது இதற்கு நல்ல தீர்வு)

    பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசும் வழக்கம் இல்லாதவர் களிடமும், பிரிந்திருக்கும் பெற்றோர்களிடம் வளருகிறவர்களிடமும், தங்கள் எதிர்காலத்தை பற்றிய கவலை இருக்கும். எதிர்காலம் நிச்சயமற்றதாகவும், பாதுகாப்பாற்றதாகவும் இருப்பதாக கருதும் அவர்களிடம் தன்னம்பிக்கை குறையும். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறவர், பாதுகாப்பு அளிக்கத் தகுதியானவர் என்று கருது பவர்களிடம் இத்தகைய நட்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். (பெற்றோர்களிடம் மனம்விட்டுப்பேசுவதும், அவர்கள் மூலம் பாதுகாப்பு கிடைப்பதும் இதற்கு நல்ல தீர்வு)

    ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் குறிப்பிடும்படியான ரகசியங்கள் இருக்கவே செய்யும். இப்படிப்பட்ட ‘பாதி பெண் தோழிகள்’ உறவில் இருக்கும்போது பெரும்பாலான பெண்கள் தங்கள் சிறுவயது பாலியல் கசப்புகள் முதல் குடும்ப ரகசியங்கள் வரை அனைத்தையும் ஆண் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த அந்தரங்க பகிர்வுகள் எதிர்காலத்தில் அந்த பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. (அதனால் இத்தகைய உறவில் இருக்கும் பெண்கள், நண்பர்களிடம் எதை பேசவேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள்)

    நண்பர், காதலர், கணவர் என்ற ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஒரு நண்பரால் நல்ல காதலராகவும், சிறந்த கணவராகவும் ஆக முடியும். அப்படி படிப் படியாக அந்த உறவை உயர்த்திச் செல்ல தைரியம் வேண்டும். அதிக தன்னம்பிக்கையும் அவசியம். ஆனால் இந்த ஹாப் கேர்ள் பிரெண்ட், ஹாப் பாய் பிரெண்ட் போன்றவர்கள் அந்த அளவுக்கு தைரியம் இல்லாதவர்கள். அதே நேரத்தில் அந்த ஆண், நண்பர் என்ற பெயரை வைத்துக்கொண்டு காதலராகவும், கணவராகவும் மறைமுகமாக செயல்பட அவர் விரும்புவார். அதற்கு ஒத்துழைக்காவிட்டால் பிரச்சினையை உருவாக்குவார். (அதனால் இப்படிப்பட்ட நண்பர் களிடம் எப்போதும் விழிப்பாக பழகுங்கள்)

    இப்படி நண்பர்களாக பழகும் பெண்களில் பலர், தனது நண்பனை உயிருக்கும் மேலாக கருதுகிறார்கள். இதனால் அவர்களது சொல்படி நடந்து பெற்றோர்களை கூட பகைத்துக்கொள்கிறார்கள். (எந்த நண்பனும், பெற்றோருக்கு நிகரில்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

    இத்தகைய நட்பில் இருக்கும் ஆண்களும், பெண்களும் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். பின்பு இந்த நட்பில் இருக்கும் ஆண், இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போது, அவருடன் நட்பில் இருக்கும் பெண்ணுக்கு திருமண வயது கடந்து போயிருக்கும். அதன் பின்பு அவள் எதிர்பார்த்ததுபோல் அவளுக்கு வரன் அமையாது. பின்பு ஏதாவது ஒருவர் கிடைத்தால்போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவாள். அப்போது அவளுக்கு வாழ்க்கை ஏமாற்றமாகிவிடும். (தனக்கு எப்படிப்பட்ட நண்பர் இருந்தாலும் வாழ்க்கைக்கு கணவர் தேவை என்பதை பெண்கள் புரிந்து நட்பு பாராட்டவேண்டும். சரியான பருவத்தில் தகுதியானவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்).

    - விஜயலட்சுமி பந்தையன்.
    கருவுறும்போது பெண்கள் எப்படி உடல், மனரீதியிலான மாற்றங்களைச் சந்திக்கிறார்களோ, அதேபோல் இந்த பிரசவத்திற்கு பிறகான காலத்திலும் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.
    எல்லா தாய்மார்களுக்கும், குழந்தை பிறந்தவுடனேயே தங்கள் குழந்தையின் மீது பிணைப்பு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. பல தாய்மார்களுக்கு இந்தப் பிணைப்பு உடனடியாக வராது. கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை பிரசவவலியை அனுபவித்த பிறகுதான், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

    இதன் காரணமாக அவள் மிகவும் சோர்வாகயிருப்பாள். சிசேரியன் என்றால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாய்க்கு அது சார்ந்த வலி, சோர்வு இரண்டுமே இருக்கும். அலுத்துக் களைத்திருக்கும் தாயின் மனம் ஓய்வை நாடும். இதற்கிடையே, அந்த நேரத்தில் பிறந்த பிஞ்சுக்குழந்தை அழுதுகொண்டே இருக்கும். நேரம் பார்த்து, தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருபக்கம் உடல் அவஸ்தைகள், மறுபக்கம் குழந்தைப் பராமரிப்பு என்று அழுத்த, அந்தத் தாய்க்கு தூக்கம் சரியாகயிருக்காது.

    பல தாய்மார்களுக்கு பிரசவித்த உடனேயே தங்கள் குழந்தை மேல் பிணைப்பு வந்துவிடுவதில்லை. அதற்கு அவர்களுக்குக் குறைந்தது இரண்டு வாரங்களாவது தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு மூன்று மாதங்கள்கூட பிடிக்கலாம். ஏனென்றால், குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்கள்வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது, சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது என்றிருக்கத்தான் தாய்க்கு நேரம் சரியாக இருக்கும்.

    மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தை, தாயின் செய்கைகளுக்குப் பதில் கொடுக்க ஆரம்பிக்கும். தாய் சிரித்தால் குழந்தையும் சிரிக்கும். கொஞ்சி அழைத்தால், திரும்பிப் பார்க்கும். தாயுடன் விளையாட ஆரம்பிக்கும். இப்படித்தான் ஒரு தாய்க்குத் தன் குழந்தை மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிணைப்பு வர ஆரம்பிக்கும். அதனால் போஸ்ட்பார்ட்டம் காலகட்டத்தில், ‘என்னடா நமக்கு நம் குழந்தையின் மேல் பிணைப்பே வரவில்லை’ என்று தாய் வருந்தவேண்டிய அவசியம் இல்லை.



    கருவுற்ற காலத்தில் மனஅழுத்தத்தைச் சந்தித்த பெண்கள், குழந்தைப் பேற்றுக்குப் பிறகு மறுபடியும் அதே பிரச்னையைச் சந்திக்க அதிகளவில்  வாய்ப்பிருக்கிறது. சரியாகச் சாப்பிடாமல், போராடி குழந்தை பெற்று, குழந்தை பிறந்த பிறகு சரியாகத் தூங்காமல் நாள்களை நகர்த்தவேண்டிய சூழ்நிலை ஒரு தாய்க்கு ஏற்படுகிறது. குறிப்பாக முதல் குழந்தையின் தாய் என்றால், அந்தத் தாய்க்கு குழந்தை வளர்ப்பு குறித்த பயமும், சந்தேகங்களும், குழப்பங்களும் நிறைய இருக்கும். ‘நான் ஒரு சிறந்த அம்மாவாக இருக்க முடியுமா… என் குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியுமா?’ என்று அவர்கள் அதிகம் கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.

    ‘இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, நாங்க உன்கூட இருக்கோம்… கவலைப்படாதே’ என்று ஆற்றவும் தேற்றவும் வீட்டில் பெரியவர்கள் இருக்கும்பட்சத்தில் இந்த நிலையிலிருந்து ஒரு பெண்ணால் சுலபமாக வெளியே வந்துவிட முடியும். அப்படி உதவிக்கு யாரும் இல்லாமல் வீடு, குழந்தை வளர்ப்பு என்று சகலத்தையும் தான் ஒருவர் மட்டுமே பார்த்தாக வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் அதிகளவில் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். கோபம், அழுகை, இயலாமை, சோர்வு இவையெல்லாம் அவர்களை ஆட்கொண்டுவிடுகின்றன.

    இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது. அதனால் அந்தப் பெண்ணின் தாய் அல்லது மாமியார் அவருடன் இருப்பது நலம். இவை எல்லாவற்றையும்விட, போஸ்ட்பார்ட்டம் நிலையை ஒரு பெண் இயல்பாகக் கடக்க அந்தப் பெண்ணின் கணவர் அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    பாலூட்டுதல் தவிர்த்து, ஒரு தந்தை, தாய்க்கு இணையாகக் குழந்தையை எல்லாவிதத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். பிரசவத்துக்காக மாமியார் வீட்டிலிருக்கும் மனைவியையும் குழந்தையையும் வார இறுதி நாள்களில் வெறுமனே பார்த்துவிட்டுப்  போவதை மட்டும் செய்யாமல், குழந்தையைத் தூங்கவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்து மனைவிக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம். அன்பாக, ஆதரவாக மனைவியிடம் பேசலாம். கணவரின் இது போன்ற சின்னச் சின்ன உதவிகள், மெனக்கெடல்கள் பிரசவித்த பெண் தன்னை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மீட்டெடுக்கக் கைகொடுக்கும்.’’
    விளையாட்டுப் பொருட்கள் குழந்தைப் பருவத்தின் மிகப்பெரிய புதையல். அது பாதுகாப்பற்றதாக இருந்தால் உடல்நலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
    விளையாட்டுப் பொருட்கள் என்பது விளையாட்டுக்கானது மட்டும் அல்ல… குழந்தையின் புத்திக்கூர்மை, இணைந்து செயல்படும் இயல்பு, அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புஉணர்வு என்று பலவகைகளிலும் குழந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள்.

    அந்தக் காலத்தில், செப்பு சாமான், மரப்பாச்சி பொம்மை, பல்லாங்குழி, தாயக்கட்டை போன்ற விளையாட்டுப் பொருட்கள் தரத்திலும் பயன்பாட்டிலும் சிறந்ததாக இருந்தது. ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு வாங்கித்தரும் விளையாட்டுப் பொருட்களில் காரீயம் உள்ளிட்ட ரசாயனங்கள் ஒளிந்திருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு டாய்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றி தெரிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியம்.

    சீன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஃபர், செயற்கை நாரிழை கேசம் கொண்ட பொம்மைகள், பெயின்ட், தரம் குறைந்த கலர் க்ரயான்ஸ், சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள், விலை குறைந்த, தரமற்ற பொம்மைகளில் பாலிவினைல் க்ளோரைட் (polyvinyl chloride (PVC)) உள்ளிட்ட மோசமான ரசாயனங்கள் கலந்திருக்கும். அவற்றை, குழந்தை வாயில் வைத்தால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுபோக்கு, நுரையீரல் பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.

    கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சிறு பொம்மைகள், சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள் ஆபத்தானவை. ஏனெனில் குழந்தைகள் அவற்றை விழுங்கி விடலாம்.

    மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பவுன்ஸர் (ரப்பர்) பந்தை வாங்கிக்கொடுத்தால் அதை பிடிக்கப்போய் விழவோ, சுவரில் மோதிக்கொள்ளவோ நேரிடும் என்பதால் அதிகம் மேலெழும்பாத சாஃப்ட் பந்து வாங்கிக்கொடுப்பது பாதுகாப்பானது.

    குழந்தைகள் பேட்டரியை நக்குவது, கடிப்பது, வாயில் போட்டுக்கொள்வது போன்ற செயல்களைச் செய்யும்போது அதில் உள்ள கரிப்பொருள் அவர்கள் வயிற்றுக்குள் சென்றால் விஷமாகிவிடும். எனவே, பேட்டரியில் இயங்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    சிந்தடிக் ஆடைகள் வியர்வையை உறிஞ்சாது என்பதால் தளர்வான காட்டன் உடைகளை வாங்கி தரலாம்.

    ஸ்டடி டேபிள், பேபி சார் என அவர்களுக்கான பொருட்கள் ஃபேன்ஸியாக இருப்பதைவிட, உறுதியானதாக இருக்கட்டும்.

    விளையாட்டுப் பொருளின் பேக்கிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாகப் படித்து, வயதுக்கு ஏற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.

    எடை இல்லாத விளையாட்டுப் பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களாக வாங்கிக்கொடுக்கவும்.
    தினமும் வெந்தய டீ குடித்தால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும். இன்று வெந்தய டீ போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 3 கப்
    நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

    வெந்தயத்தின் சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அதில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    நாட்டு சர்க்கரை நன்றாக கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகவும்.

    சத்தான வெந்தய டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளி சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும். தக்காளியை எதனுடன் சேர்த்து மசாஜ் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

    * தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.

    * தக்காளியை துண்டை தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது.

    * தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.

    * முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.

    * கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.

    * ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது.

    * தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.
     
    இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். இன்று முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    முதல் நிலை செய்முறை:

    ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    இரண்டாம் நிலைசெய்முறை :

    ஆள்காட்டி விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    பின் மோதிர விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    மூன்றாம் நிலைசெய்முறை :

    ஐந்து விரல்களின் நுனிகளும் ஒன்றாக சேர்ந்திருக்குமாறு வைக்கவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    தினமும் காலை, மாலை மூன்று நிலைகளையும் 3 - 5 நிமிடம் செய்யவும்.

    பலன்கள்: சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.
    நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்...?

    சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படி செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ, செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளை கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று நினைக்கலாம்.

    ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரி பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கம்ப்யூட்டர் கீ போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணை கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

    லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன. தனிநபர் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே, கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதும் அமைகிறது.



    பலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும், தும்முவதும் சகஜம். இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரைப்பை குடல் அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் எளிதாக தொற்ற வாய்ப்பாகிவிடும்.

    நம்மில் எத்தனை பேர் கம்ப்யூட்டரையும், மவுசையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம்? கீ போர்டில் தூசுப்படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் இது அலுவலக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள்வார்கள் என்ற நினைப்புடன் வேலை செய்பவர்களும் உள்ளனர்.

    குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்கு களையோ, சிறிய குப்பையையோ அகற்றலாம். மெல்லிய துணியின் மூலம் இவற்றை துடைத்தெடுக்கலாம்.
    சிக்கன் குழம்பு வகைகளில் தனியா (கொத்தமல்லி) சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. இதை சப்பாத்தி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் துண்டுகள் - 1 கிலோ
    கொத்தமல்லி இலை - 2 கட்டு
    புதினா இலை - 1 கட்டு
    வெங்காயம் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தயிர் - 250 மில்லி லிட்டர்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி இலை, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் பச்சைமிளகாய், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

    சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    மீதமுள்ள மிளகாய் தூள், தயிரை சேர்க்கவும்.

    அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.

    அடுத்து மூடி போட்டு சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

    வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தேர்வுக்குச் செல்வதும் மனதில் ஒருவித பயத்தை கட்டாயம் ஏற்படுத்தி விடும். இன்டர்வியூவில் இதை எல்லாம் செய்தால் வேலை நிச்சயமாக கிடைக்கும்.
    என்னதான் கல்லூரியில் படிக்கும் போது நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அடுத்தகட்டமாக வேலைக்குச் செல்வது அனைவருக்குமே புதுவித அனுபவத்தை அளிக்கக்கூடியதாகும். குறிப்பாக வேலைக்காகத் தயாராவதும், நேர்காணல்,

    தேர்வுக்குச் செல்வதும் மனதில் ஒருவித பயத்தை கட்டாயம் ஏற்படுத்தி விடும். சிலர் நேர்காணலுக்காக முன்கூட்டியே பயிற்சிகள் எடுத்திருந்தாலும் இறுதியில் நம் எதிரே அமர்ந்து கேள்வி கேட்போரைக் கண்டு அஞ்சியே சொதிப்பி விடுவோம். இப்படி பலரது வாழ்வில் நடந்திருக்கலாம், நடக்கவும் நேரிடலாம். அதற்கு முன்னதாக இன்டர்வியூ-வில் வெற்றிகரமாகச் செயல்பட என்னவெல்லாம் செய்யலாம் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

    * பெரும்பாலும் நம் தோல்விகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இந்த பயமே. முடிந்தவரை பயத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது பிறரிடம் பயமின்றி இருப்பதைப் போல செயல்படுங்கள். அதுவே உங்களுக்குள் மன தைரியத்தை மேலும் ஊக்குவித்து உங்களைத் திடமாக்கும்.

    * இன்டர்வியூக்கு முன் காத்திருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற கூகுளில் சென்று ஏதேனும் படியுங்கள். அல்லது ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் நேரத்தைச் செலவிடுங்கள். அவை உங்களது பொது அறிவை மேலும் பலப்படுத்தும். அன்றாட நடப்பைக் கூட அவற்றின் மூலம் அறிய முடியும்.

    * சில சமயங்களில் நேர்காணலின் போது இந்த நிறுவனம் குறித்து கூறுங்கள் என்ற கேள்வியும் கூடக் கேட்கப்படும். வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிறுவனம் குறித்து அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். மேலாளர், நிர்வாகி, தலைவர், நிறுவப்பட்ட வருடம் உள்ளிட்டவற்றை அறிந்து வைத்துக் கொள்வதன் மூலம் உங்களது மீதான மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும்.

    * வேலை கிடைத்தால் மட்டும் போதும், கொடுத்த வேலையை அப்படியே செய்வேன் என்பதைப் போல பதில் அளிக்காமல் தனக்கான பணியை, நிறுவனத் தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு முன்நோக்கி எடுத்துச் செல்லும் வகையிலான பதில்களைக் கூறுங்கள். வேலையளிப்போரே இதில் மெய் சிலிர்த்துவிடுவார்.

    * இந்த இன்டர்வியூ உங்களுக்கு முதன் முறையாக இருந்தாலும் கூட அதனை வெளிக்காட்டாமல் இருங்கள். நிமிர்ந்து அமர்தல், தெளிவாகப் பதில் அளித்தல் உள்ளிட்டவற்றின் மூலம் உங்கள் எதிரே இருப்பவரைக் கவர்ந்திழுங்கள்.



    * ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளீர்கள் என்றால் பழைய நிறுவனத்தைக் குறித்து எக்காரணத்தைக் கொண்டும் தவறாகக் கூறிவிடாதீர்கள். ஏனெனில் பிற்காலத்தில் தற்போது விண்ணப்பித்துள்ள நிறுவனம் குறித்தும் நீங்கள் தவறாகக் கூறலாம் என்ற மன நிலையை ஏற்படுத்தி விடும்.

    * நேர்காணலின் போது எனக்கு அது தெரியும், இது தெரியும் என்ற தேவையற்ற பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். உங்களுக்குத் தெரிந்தால் கூட அதுகுறித்தான முழுத் தகவலையும் வெளிப்படுத்தாமல் ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் உங்களிடம் கேட்கப்படும் கேள்விகள் வளர்ந்துகொண்டே போகும்.

    * பெரும்பாலும் நேர்காணல் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று தான் உங்களைப் பற்றிக் கூறுங்கள் (Tell me about yourself). இக்கேள்விக்கு உங்களிடம் உள்ள சிறந்த குணங்களை மட்டுமே கூறுங்கள், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை போன்ற தனித்திறன்களை மட்டும் கூறுங்கள். முடிந்தவரை உங்களது வீக்னெஸை சொல்லாமல் இருங்கள்.

    * ஆள் பாதி ஆடை பாதி என்பதைப் போலவே நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் போதும், தேர்விற்குச் செல்லும் போதும் நன்றாகப் படித்திருந்தாலும், ஆடையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேலை நீங்கள் சந்தைப் படுத்துதல் போன்ற நிறுவனத்திற்கு தேர்விற்குச் சென்றுள்ளீர்கள் என்றால் சிறந்த ஆடை அணிந்திருப்பது கட்டாயம்.

    * உங்களிடம் நேர்காணலில் ஈடுபட்டுள்ள வேலையளிப்போரின் கண்களை மட்டுமே பார்த்துபேசுங்கள். நீங்கள் கேள்விகளுக்கு தவறான பதில் அளித்தாலும் உங்களது கண்களின் மூலம் வெளிப்படும் உணர்வு சில சமயங்களில் கூடுதலான மதிப்பெண்களை இடும். குறிப்பாக, நீங்கள் எந்த மனநிலையில் உள்ளீர்கள், உங்களது சிந்தனை உள்ளிட்டவற்றைக் கண்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். இதற்கான காரணத்தையும், அதை சரிசெய்யும் வழிமுறையையும் பார்க்கலாம்.
    பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். அதுவரை சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை யூனிஃபார்மைப் பார்த்ததுமே அழத்தொடங்கும். பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 

    காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும்.

    பாதுகாப்பற்ற பள்ளிச் சூழல், புதிய பள்ளிக்கூடத்துக்கு மாற்றுவது போன்ற காரணிகளும் இந்த போபியாவைத் தூண்டலாம். வளர்ந்த மாணவர்களில் சிலருக்குத் திடீரெனப் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் போகலாம். பள்ளியில் அவர்களுக்கு நிகழ்ந்த ஏதேனும் சம்பவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.



    அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.

    சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பால் பவுடரை வெறுமனே அப்படியே சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய சருமத்தின் நிறத்தை கூட்ட வேண்டுமென்றால் அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன.
    பால் பவுடர் உங்களுடைய சருமத்தைக் கலராக்குவதற்கு மிகச் சிறந்த ஒரு மேஜிக்கல் பொருள். பொதுவாக சருமத்தை சுத்தம் செய்யவும் அழகைக் கூட்டவும் கிளன்சிங்குக்காக பாலை பயன்படுத்துவோம். பால் பவுடர் எப்படி உங்களுடைய சருமத்தில் அந்த அதிசயத்தை உண்டாக்கப் போகிறது என்பதைப் பற்றி கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.

    பால் பவுடரை வெறுமனே அப்படியே சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய சருமத்தின் நிறத்தை கூட்ட வேண்டுமென்றால் அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி சில குறிப்பிட்ட பொருள்களுடன் பால் பவுடரைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அவை என்னென்ன என்று விரிவாகப் பார்க்கவாம்.

    * எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.

    தேவையான பொருள்கள் :

    பால் பவுடர் - ஒரு ஸ்பூன்
    எலுமிச்சை சாறு (ஃபிரஷ்) - 2 ஸ்பூன்

    பயன்படுத்தும் முறை :

    ஒரு ஸ்பூன் பால் பவடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.



    * தேவையான பொருள்கள்

    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    கனிந்த பப்பாளி - 1 டேபிள் ஸ்பூன்
    ரோஸ்வாட்டர் - சில துளிகள்

    பயன்படுத்தும் முறை

    மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல ஆகிவிடும். மீண்டும் சில துளிகள் ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்யலாம். ஓரிரு முறையிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை அடைவீர்கள்.

    * தேவையான பொருள்கள்

    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிது
    எலுமிச்சை சாறு - சில துளிகள்

    பயன்படுத்தும் முறை

    ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

    சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 3 பொருட்களும் சித்தர் இலக்கியத்துள் திரிகடுகம் எனப்படுகிறது. உடலில் அதிக கபம் உள்ளவர்கள் திப்பிலி அடங்கிய திரிகடுகம் பால் தயாரித்து குடித்தால் கபம் நீங்கும்.
    தேவையான பொருட்கள் :

    பால் - ½ லிட்டர்
    தண்ணீர் - ½ லிட்டர்
    முந்திரி பருப்பு - 20 கிராம்
    பாதாம் பருப்பு - 20 கிராம்
    சுக்குப்பொடி - ½ தேக்கரண்டி
    மிளகுப்பொடி - ½ தேக்கரண்டி
    திப்பிலிபொடி - சிறிதளவு (ஒரு சிட்டிகை)
    மஞ்சள் பொடி - ¼ தேக்கரண்டி
    ஜாதிக்காய்த்தூள் - 1 சிட்டிகை
    ஏலக்காய்த்தூள் - ½ தேக்கரண்டி
    பனங்கல்கண்டு - தேவையானது அல்லது காய்ச்சி வடித்த வெல்லப்பாகு.



    செய்முறை :

    முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பை ஊறவைத்து(ஒரு மணி நேரம்) அம்மியில் அல்லது மிக்சியில் மை போல் அரைத்துக் கொள்ளவும்.

    பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர், அரை லிட்டர் பால் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

    பொங்கி வரும்போது தீயைக் குறைத்துக் கொண்டு அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள எல்லா பொடிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து கரண்டியில் கலக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

    கமகமவென்று வாசம் வரும்போது இறக்கி விடவும். சற்று ஆறவிடவும்.

    குடிக்கிற பக்குவத்தில் சூடாக இருக்கும்போது இனிப்பு கலந்து குடிக்கவும். இது சளி, இருமலுக்கு சாப்பிட நல்லது. கபத்தை கரைத்து, சுறுசுறுப்பு அளிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×