என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
புதிதாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமின்றி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் தாங்கள் அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள்.
புதிதாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமின்றி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் தாங்கள் அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள். ஃபிட்னஸ் ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் தாங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெற முடியும்.
எடுத்தவுடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கக்கூடாது. உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், ‘வார்ம் அப்’ பயிற்சிகள் செய்வது அவசியம். அப்போதுதான் பயிற்சிகளுக்குப்பின் தசைகளில் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் குறைக்க முடியும். வார்ம் அப் செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் கிடைக்கும்.
பெண்கள் ட்ரெட் மில், வாக்கிங், ரன்னிங் போன்றவையே தங்களுக்கு போதுமென்று நினைக்கிறார்கள். இதுமட்டும் போதாது. கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும். அதற்கு சின்னச்சின்ன தசைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஒரே மாதிரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயம் உண்டாகும். அப்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலிக்கும். எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசொலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு வலு சேர்ப்பதில் முக்கியமானவை.
சரியான உபகரணங்கள் இல்லாமல், முறையான பயிற்சியின்றி செய்யும் பயிற்சிகள் தசைகள் வலுவிழப்பு, தசை உறுதித்தன்மையில் சமநிலையின்மை போன்ற விளைவுகளை உண்டாக்கும். அதிவேகமாக, சரியான பொசிஷனில் செய்யாத, அதே நேரத்தில் மிக அதிகமாக செய்யும் பயிற்சிகளும் தசைகளில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
அளவுக்கதிகமான எடைதூக்கி பயிற்சி செய்வதும் தவறு. பயிற்சியாளரின் அறிவுரையின்றி தாங்களாகவே கண்ணில் தெரியும் உபகரணங்களை தூக்கி பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் திசுக்கள் சேதமடைந்து விரைவில் உடற்பயிற்சி செய்வதையே இடையில் நிறுத்தி விடுவார்கள். பளு தூக்கி செய்யும் போது மூச்சு நுட்பங்களை பயிற்சியாளர் சொல்லித் தருவார். இல்லையென்றால், ஹெர்னியா என்கிற ஆண்களுக்கு குடல் இறங்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை இறங்குவது போன்று உள்ளுறுப்புகள் சேதமடைய வாய்ப்புண்டு. பளு தூக்குவதைப் பொருத்தமட்டில் ஒருவருக்கு, இவ்வளவு எடை, இத்தனை முறை செய்யலாம் என குறிப்பிட்ட விதிகள் இருக்கிறது. அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
எடுத்தவுடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கக்கூடாது. உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், ‘வார்ம் அப்’ பயிற்சிகள் செய்வது அவசியம். அப்போதுதான் பயிற்சிகளுக்குப்பின் தசைகளில் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் குறைக்க முடியும். வார்ம் அப் செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் கிடைக்கும்.
பெண்கள் ட்ரெட் மில், வாக்கிங், ரன்னிங் போன்றவையே தங்களுக்கு போதுமென்று நினைக்கிறார்கள். இதுமட்டும் போதாது. கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும். அதற்கு சின்னச்சின்ன தசைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஒரே மாதிரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயம் உண்டாகும். அப்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலிக்கும். எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசொலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு வலு சேர்ப்பதில் முக்கியமானவை.
சரியான உபகரணங்கள் இல்லாமல், முறையான பயிற்சியின்றி செய்யும் பயிற்சிகள் தசைகள் வலுவிழப்பு, தசை உறுதித்தன்மையில் சமநிலையின்மை போன்ற விளைவுகளை உண்டாக்கும். அதிவேகமாக, சரியான பொசிஷனில் செய்யாத, அதே நேரத்தில் மிக அதிகமாக செய்யும் பயிற்சிகளும் தசைகளில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
அளவுக்கதிகமான எடைதூக்கி பயிற்சி செய்வதும் தவறு. பயிற்சியாளரின் அறிவுரையின்றி தாங்களாகவே கண்ணில் தெரியும் உபகரணங்களை தூக்கி பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் திசுக்கள் சேதமடைந்து விரைவில் உடற்பயிற்சி செய்வதையே இடையில் நிறுத்தி விடுவார்கள். பளு தூக்கி செய்யும் போது மூச்சு நுட்பங்களை பயிற்சியாளர் சொல்லித் தருவார். இல்லையென்றால், ஹெர்னியா என்கிற ஆண்களுக்கு குடல் இறங்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை இறங்குவது போன்று உள்ளுறுப்புகள் சேதமடைய வாய்ப்புண்டு. பளு தூக்குவதைப் பொருத்தமட்டில் ஒருவருக்கு, இவ்வளவு எடை, இத்தனை முறை செய்யலாம் என குறிப்பிட்ட விதிகள் இருக்கிறது. அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
நமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது.
இளைய தலைமுறையினருக்கு, நவீன தொழில்நுட்பங்களின் மீதும், புதுப்புது அப்ளிகேஷன்கள் மீதும் தீராத ஆர்வம் இருக்கிறது. இதன் விளைவாக சந்தைக்கு வரும் புதுப்புது கேட்ஜெட்களையும், அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி பார்க்க ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக அப்ளிகேஷன் உலகில் தங்களை சிறந்தவர்களாக முன்நிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள்.
இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப, இன்றைய வைரல் விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதுடன், அப்ளிகேஷன் உலகிலும் அப்-டேட்டாக இருக்கிறார்கள். ‘‘இது மிகவும் பழைய அப்ளிகேஷன், இன்றைக்கு இதுதான் புது டிரெண்டிங்’’ என்று நண்பர்களோடு சிலாகிப்பதோடு, ‘‘அந்த ‘ஆப்’பில் அவ்வளவு சலுகை கிடைக்கிறது, இந்த ‘ஆப்’பில் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தினேன்’’ என்று தற்பெருமை பேசுவதற்கும் ஆசைப்படுகிறார்கள்.
இவர்களது மனநிலைக்கேற்ப, அப்ளிகேஷன் நிறுவனங்களும் சலுகை மழை பொழிந்து வருகிறார்கள். ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ போன்ற பணபரிமாற்ற அப்ளிகேஷன்கள் ‘ஸ்கிராட்ச் கார்ட்’ வகையிலான சலுகைகளையும், அமெசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனையகங்கள் ‘கேஷ் பேக்’ சலுகைகளையும் வழங்குகின்றன.
பிரபல அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, பிரபலமில்லாத ‘ஆப்’களிலும் சலுகைகள் மலிந்துகிடக்கிறது. இப்படி சலுகைகளை அள்ளி வழங்கும் எல்லா ‘ஆப்’களையும் பற்றி நாம் இங்கு ஆய்வு செய்யப்போவதில்லை. சுவையான உணவுகளையும், சூடான சலுகைகளையும் இளைஞர்களுக்கு வழங்கி வரும் சில உணவு ‘ஆப்’களின் நன்மை, தீமைகள் பற்றி மட்டுமே அலசிப்பார்க்க இருக்கிறோம்.
வங்கி, அலுவலகம், டிக்கெட் முன்பதிவு மையம், செல்போன் ரீ-சார்ஜ் கடை, மின்வாரிய அலுவலகம், இறைச்சி-மீன் மார்க்கெட்... போன்ற எல்லா தேவைகளும், நம்முடைய ஸ்மார்ட் போனிற்குள் அப்ளிகேஷன்களாக வந்துவிட்டன. அந்தவரிசையில் தற்போது ஓட்டல்களும், உணவு ‘ஆப்’ வடிவில் நம் ஸ்மார்ட்போனிற்குள் வந்துவிட்டன.
ஊபர் ஈட்ஸ், ஸ்விகி, சோமாட்டோ, பாசோஸ்... என பல பெயர்களில் வந்திருக்கும் ‘ஆப்’ ஓட்டல்களில் உங்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தால், அவை சில நிமிடங்களிலேயே உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அது பிரியாணியாக இருந்தாலும் சரி, பீட்சா-பர்கராக இருந்தாலும் சரி, ஆர்டர் செய்த 15 நிமிடங்களுக்குள் உணவு உங்களை தேடி பறந்துவந்துவிடும்.
இத்தகைய உணவு ‘ஆப்’களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களைப் பெற்று வழங்குவதற்காகவே பிரபலமான உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அதனால் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவை, ‘ஆப்’களின் மூலம் ஆர்டர் செய்தால், அதை அந்த ‘ஆப்’ நிறுவனத்தின் விநியோக பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள், சுடச்சுட டெலிவரி செய்துவிடுவார்கள்.
“நாம் இருக்கும் இடத்திலேயே நாம் விரும்பிய உணவு பொருள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்ற அடிப்படையில்தான் இந்த உணவு ‘ஆப்’கள் இயங்குகின்றன. எனக்கு அந்த ஓட்டலில் இருந்து ‘பிரியாணி’, இந்த கடையில் இருந்து ‘பிஷ் பிங்கர்’, அந்த கடையில் இருந்து ‘ஐஸ் கிரீம்’, இந்த கடையில் இருந்து ‘பீட்சா’ என எதை ஆர்டர் செய்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதால், பல லட்சங்களில் தொடங்கி சில ஆயிரங்களில் வருமானம் ஈட்டும் இளையோர் வரை இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் பரவலாகி வருகிறது.
இரவுப் பணியில் இருக்கின்ற பலரும் உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் சேவையை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் அருகிலுள்ள எந்தக் கடையாவது திறந்திருக்குமா, நமக்கு பிடித்தது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்த பலரும் இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிகாலை 2 மணி வரை இந்த சேவை கிடைப்பது அவர்களுக்கு ஒருவிதத்தில் ஆறுதல்.

உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் சில அடையாளம் தெரியாத கடைகளின் சுவையான உணவுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சிறிய அளவில் இருக்கின்ற கடைகளும் உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் இட்லியும், பழச்சாறும், ஐஸ்கிரீமும் விற்பனை செய்யும் நிலை உருவாகி வருகிறது. இத்தகைய ‘ஆப்’கள் பொருளாதார சுழற்சிக்கு உதவுகின்றன எனினும், ஆடம்பரத்துக்கும், வீண் செலவுக்குமே வழிவகுக்கின்றன என்பது உண்மை.
அவசரத் தேவைக்காக உணவு ‘ஆப்’களை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்க, ஆடம்பரத்துக்காகவும் பகட்டுக்காகவும் இவற்றைப் பயன்படுத்துவது பலரிடம் அதிகரித்து வருகிறது. அதாவது, பணத்தைக் காரணமின்றி வீண் விரயம் செய்யும் ஒருவித மனநிலை நமது இளையோர் மத்தியில் வளர்ந்து வருகிறது என்று சொல்லலாம். பணம் இருந்தால் எதையும் நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்க முடியும் என்ற தவறான எண்ணமும் இத்தகைய ‘ஆப்’களின் பயன்பாட்டால் வளர்ச்சி அடைகிறது.
நமது பணத்தை யாருக்காக, எப்படி, பயனுள்ள விதத்தில் செலவிடுவது என்பதை இக்கால இளையோர் உணர்ந்து கொள்வது அவசியம். நமது பெற்றோரும் உடன்பிறந்தோரும் உறவினர்களும் வறுமையில் வாடும் வேளையில், நாம் சம்பாதித்த பணம் என்பதற்காக வீண் செலவு செய்வது முட்டாள்தனமானது. நமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது.
இளையோர் தங்களைத் தனிமனிதராக மட்டும் பார்க்காமல், ஒரு குடும்பத்தின், சமூகத்தின் அங்கத்தினராகப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு, உணவு சேவை ‘ஆப்’ நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். ‘ஆப்’கள் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்ற உணவுப் பொருட்கள் பல நேரங்களில் தரமற்றவையாக இருக்கின்றன என்பது அவற்றில் முக்கியமானக் குற்றச்சாட்டு. இதன் விளைவாக, மத்திய அரசு இத்தகைய நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளையும், ஒழுங்குகளையும் கட்டாயமாக்கியது. அரசிடம் பதிவு செய்யாத கடைகளின் உணவுப் பொருட்களை ‘ஆப்’ நிறுவனங்கள் விநியோகம் செய்யக்கூடாது என்பது கட்டுப்பாடுகளில் முக்கியமானது.
அரசின் கட்டுப்பாடுகள், எந்த அளவுக்கு தரமான உணவை நாம் பெறுவதற்கு உறுதி அளிக்கின்றன என்பது கேள்விக்குறியே. உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ‘ஆப்’ நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ள உணவகங்கள் அல்லது கடைகள், வெளியே அனுப்பப்படும் உணவுப்பொருட்களை அவசர கதியில் தயாரித்து அனுப்புகின்றன. நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரிக்கும் முறையில் ‘ஆப்’ வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை உணவகங்கள் தயாரிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இரண்டாவதாக, ‘ஆப்’ நிறுவனங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் எண்ணிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே உணவுப் பொட்டலங்கள் தயாராகிவிடுகின்றன. விநியோகத்தில் ஏற்படும் கால தாமதம், அந்த உணவுப் பொருட்களின் தரத்தைக் குறைத்து விடுகிறது. சில நேரங்களில், உணவகங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொட்டலங்களை ‘ஆப்’ நிறுவனங்களின் குடோன்களுக்கு அனுப்பி விடுகின்றன. ஆர்டருக்கு ஏற்ப அந்நிறுவனங்களில் இருந்தே அவை விநியோகிக்கப்படுவதால் தரத்தில் குறைபாடு காணப்படுகிறது என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.
மூன்றாவதாக, குறிப்பிட்ட உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் சில ‘ஆப்’ நிறுவனங்கள், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நாம் ஆர்டர் செய்யும் கடைகளின் பெயரில் உணவுப்பொருட்கள் பார்சல் செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை அந்த உணவகங்களில் தயார் செய்யப்படாததால் சுவையிலும் தரத்திலும் மாறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய உரிமை பெற்ற ‘ஆப்’ நிறுவனங்கள், சுகாதாரமற்ற குடோன்களில் உணவு தயாரிப்பதாகவும் சில சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை உணவு ‘ஆப்’ நிறுவனங்கள் மறுக்கின்றன. வாடிக்கையாளர்களின் ஆர்டர் பெறப்பட்ட பிறகே தங்கள் பணியாளர்கள் குறிப்பிட்ட கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி விநியோகிப்பதாகவும், முன்கூட்டியே வாங்கி சேமித்து வைக்கின்ற வழக்கம் இல்லை என்றும், சொந்தமாக தயாரித்து விநியோகிப்பதை விடவும் கடைகளில் வாங்கி விநியோகம் செய்வதே தங்களுக்கு எளிதானது என்றும் ‘ஆப்’ நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிக வருவாய் ஈட்டும் இளையோரின் செலவையும் ஆடம்பரத்தையும் ‘ஆப்’ உணவு சேவை நிறுவனங்கள் அதிகரித்தாலும், பல ஏழைகளின் வருமானத்துக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றன. ஒரு ஆர்டருக்கு, ரூபாய் 40 விநியோக கட்டணமாக கிடைப்பதால் சிலர் பகுதி நேர வேலையாகவும், பலர் முழு நேர வேலையாகவும் செய்து வருகிறார்கள். ஆனால், தங்கள் பணியாளர்களின் நலனில் இந்த நிறுவனங்கள் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு நியமிக்கப்படும் உணவு விநியோகப் பணியாளர்களுக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.
சில ‘ஆப்’ நிறுவனங்கள், தங்கள் விநியோக பணியாளர்களுக்கு குறிப்பிட்ட மாதச் சம்பளம் நிர்ணயிக்காமல், கிடைக்கின்ற ஆர்டர்களுக்கு ஏற்ப கமிஷனை மட்டுமே சம்பளமாக வழங்கும் அவல நிலையும் உள்ளது. ‘உணவு ஆப்’கள் ஒருபுறம் முன்னேற்றமாகவும் ஆடம்பரமாகவும் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பல்வேறு சோகங்களையும் குழப்பங்களையும் பாதுகாப்பில்லாத நிலையையும் கொண்டிருக்கின்றன.
ஆகவே, உணவு சேவை நிறுவனங்களின் ‘ஆப்’களைப் பயன்படுத்துவோர் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிந்து பயன்படுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு சரியானப் பாதுகாப்பும், சம்பளமும் கொடுக்காத, தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்யாத நிறுவனங்களை தவிர்ப்பதும் நல்லது. அதேசமயம் அதிகம் பணம் செலவழிப்பது மட்டுமே உணவின் தரத்திற்கும் சுகாதாரத்திற்கும் உத்தரவாதமாக அமையாது. ஆடம்பரத்துக்காக அன்றி, அவசரத்துக்காக மட்டும் சரியான உணவு ‘ஆப்’களைத் தேர்வு செய்து பயன்படுத்துவோம்.
உணவிற்கு மட்டுமே பாதுகாப்பு
உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் விநியோக பணியாளர்கள், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு வண்ண டீ-சர்ட்களில் ‘விர்’ என பறந்துக்கொண்டிருக்கிறார்கள். உணவை துரிதமாக கொண்டு சேர்த்தால்தான், இவர்களுக்கு நல்ல விமர்சனங்களும், அடுத்தடுத்த ஆர்டர்களும் கிடைக்குமாம். உணவை தாமதமாக கொண்டு சேர்த்தாலோ, உணவு பொட்டலங்கள் சேதமடைந்திருந்தாலோ, ஆர்டர் செய்தவர்கள் கடும் கோபக்காரர்களாக நடந்து கொள்வதுடன், விநியோக பணியாளர் மீது தவறான விமர்சனங்களையும் பதிவிடுகிறார்கள். இதனால் அவர்களது அடுத்தடுத்த ஆர்டர்கள் மறைமுகமாக பறிக்கப்படுவதுடன், அவர்களது வருமானமும் வெகுவாக குறைக்கப்படுகிறது.
விநியோக பணியாளர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதைவிட, உணவை பாதுகாப்பாகவும், துரிதகதியிலும் விநியோகிக்கவேண்டும் என்பதே பெரும்பாலான உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் குறிக்கோளாகஇருக்கிறது.
போலி ஆர்டர்கள்
உணவு ‘ஆப்’ நிறுவனங்கள், விநியோக ஊழியர்களிடம் கண்டிப்போடு நடந்துக்கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன. உணவை ஓட்டல்களில் இருந்து வாங்கி, அதை உரியவரிடத்தில் சேர்ப்பதுதான், விநியோக ஊழியர்களின் வேலை. ஆனால் சில சமயங்களில் உணவை ஆர்டர் செய்தவர், அதை பாதியிலேயே ரத்து செய்வதுண்டு. அப்படி பாதியிலேயே ரத்து செய்யப்படும் உணவை ஓட்டல் நிறுவனங்களும் ஏற்றுக்கொள் வதில்லை.
சுருக்கமாக சொன்னால், அந்த உணவு விநியோக ஊழியர்களுக்கானதாகி விடுகிறது. மேலும் ரத்து செய்த ஆர்டருக்கான விநியோக கட்டணமும் வழங்கப்படும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர், நண்பர்களின் உதவியோடு போலி ஆர்டர்களை அரங்கேற்றுகிறார்கள். பின்னர் அதை பாதியிலேயே ரத்தும் செய்து விடுகின்றனர். அவர்களது திட்டப்படி உணவிற்கு உணவும், பணத்திற்கும் பணமும் கிடைத்துவிடுகிறது. இப்படியே 6 போலி ஆர்டர்களை அரங்கேற்றினால், உணவு+கட்டணம் ஆகியவற்றுடன் போனஸ் தொகையும் கிடைத்து விடுமாம். இந்த பார்முலாவை பலரும் பயன்படுத்துவதால், ‘ஆப்’ நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன.
டே. ஆக்னல் ஜோஸ்
இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப, இன்றைய வைரல் விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதுடன், அப்ளிகேஷன் உலகிலும் அப்-டேட்டாக இருக்கிறார்கள். ‘‘இது மிகவும் பழைய அப்ளிகேஷன், இன்றைக்கு இதுதான் புது டிரெண்டிங்’’ என்று நண்பர்களோடு சிலாகிப்பதோடு, ‘‘அந்த ‘ஆப்’பில் அவ்வளவு சலுகை கிடைக்கிறது, இந்த ‘ஆப்’பில் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தினேன்’’ என்று தற்பெருமை பேசுவதற்கும் ஆசைப்படுகிறார்கள்.
இவர்களது மனநிலைக்கேற்ப, அப்ளிகேஷன் நிறுவனங்களும் சலுகை மழை பொழிந்து வருகிறார்கள். ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ போன்ற பணபரிமாற்ற அப்ளிகேஷன்கள் ‘ஸ்கிராட்ச் கார்ட்’ வகையிலான சலுகைகளையும், அமெசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனையகங்கள் ‘கேஷ் பேக்’ சலுகைகளையும் வழங்குகின்றன.
பிரபல அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, பிரபலமில்லாத ‘ஆப்’களிலும் சலுகைகள் மலிந்துகிடக்கிறது. இப்படி சலுகைகளை அள்ளி வழங்கும் எல்லா ‘ஆப்’களையும் பற்றி நாம் இங்கு ஆய்வு செய்யப்போவதில்லை. சுவையான உணவுகளையும், சூடான சலுகைகளையும் இளைஞர்களுக்கு வழங்கி வரும் சில உணவு ‘ஆப்’களின் நன்மை, தீமைகள் பற்றி மட்டுமே அலசிப்பார்க்க இருக்கிறோம்.
வங்கி, அலுவலகம், டிக்கெட் முன்பதிவு மையம், செல்போன் ரீ-சார்ஜ் கடை, மின்வாரிய அலுவலகம், இறைச்சி-மீன் மார்க்கெட்... போன்ற எல்லா தேவைகளும், நம்முடைய ஸ்மார்ட் போனிற்குள் அப்ளிகேஷன்களாக வந்துவிட்டன. அந்தவரிசையில் தற்போது ஓட்டல்களும், உணவு ‘ஆப்’ வடிவில் நம் ஸ்மார்ட்போனிற்குள் வந்துவிட்டன.
ஊபர் ஈட்ஸ், ஸ்விகி, சோமாட்டோ, பாசோஸ்... என பல பெயர்களில் வந்திருக்கும் ‘ஆப்’ ஓட்டல்களில் உங்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தால், அவை சில நிமிடங்களிலேயே உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அது பிரியாணியாக இருந்தாலும் சரி, பீட்சா-பர்கராக இருந்தாலும் சரி, ஆர்டர் செய்த 15 நிமிடங்களுக்குள் உணவு உங்களை தேடி பறந்துவந்துவிடும்.
இத்தகைய உணவு ‘ஆப்’களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களைப் பெற்று வழங்குவதற்காகவே பிரபலமான உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அதனால் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவை, ‘ஆப்’களின் மூலம் ஆர்டர் செய்தால், அதை அந்த ‘ஆப்’ நிறுவனத்தின் விநியோக பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள், சுடச்சுட டெலிவரி செய்துவிடுவார்கள்.
“நாம் இருக்கும் இடத்திலேயே நாம் விரும்பிய உணவு பொருள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்ற அடிப்படையில்தான் இந்த உணவு ‘ஆப்’கள் இயங்குகின்றன. எனக்கு அந்த ஓட்டலில் இருந்து ‘பிரியாணி’, இந்த கடையில் இருந்து ‘பிஷ் பிங்கர்’, அந்த கடையில் இருந்து ‘ஐஸ் கிரீம்’, இந்த கடையில் இருந்து ‘பீட்சா’ என எதை ஆர்டர் செய்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதால், பல லட்சங்களில் தொடங்கி சில ஆயிரங்களில் வருமானம் ஈட்டும் இளையோர் வரை இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் பரவலாகி வருகிறது.
இரவுப் பணியில் இருக்கின்ற பலரும் உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் சேவையை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் அருகிலுள்ள எந்தக் கடையாவது திறந்திருக்குமா, நமக்கு பிடித்தது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்த பலரும் இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிகாலை 2 மணி வரை இந்த சேவை கிடைப்பது அவர்களுக்கு ஒருவிதத்தில் ஆறுதல்.

உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் சில அடையாளம் தெரியாத கடைகளின் சுவையான உணவுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சிறிய அளவில் இருக்கின்ற கடைகளும் உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் இட்லியும், பழச்சாறும், ஐஸ்கிரீமும் விற்பனை செய்யும் நிலை உருவாகி வருகிறது. இத்தகைய ‘ஆப்’கள் பொருளாதார சுழற்சிக்கு உதவுகின்றன எனினும், ஆடம்பரத்துக்கும், வீண் செலவுக்குமே வழிவகுக்கின்றன என்பது உண்மை.
அவசரத் தேவைக்காக உணவு ‘ஆப்’களை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்க, ஆடம்பரத்துக்காகவும் பகட்டுக்காகவும் இவற்றைப் பயன்படுத்துவது பலரிடம் அதிகரித்து வருகிறது. அதாவது, பணத்தைக் காரணமின்றி வீண் விரயம் செய்யும் ஒருவித மனநிலை நமது இளையோர் மத்தியில் வளர்ந்து வருகிறது என்று சொல்லலாம். பணம் இருந்தால் எதையும் நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்க முடியும் என்ற தவறான எண்ணமும் இத்தகைய ‘ஆப்’களின் பயன்பாட்டால் வளர்ச்சி அடைகிறது.
நமது பணத்தை யாருக்காக, எப்படி, பயனுள்ள விதத்தில் செலவிடுவது என்பதை இக்கால இளையோர் உணர்ந்து கொள்வது அவசியம். நமது பெற்றோரும் உடன்பிறந்தோரும் உறவினர்களும் வறுமையில் வாடும் வேளையில், நாம் சம்பாதித்த பணம் என்பதற்காக வீண் செலவு செய்வது முட்டாள்தனமானது. நமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது.
இளையோர் தங்களைத் தனிமனிதராக மட்டும் பார்க்காமல், ஒரு குடும்பத்தின், சமூகத்தின் அங்கத்தினராகப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு, உணவு சேவை ‘ஆப்’ நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். ‘ஆப்’கள் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்ற உணவுப் பொருட்கள் பல நேரங்களில் தரமற்றவையாக இருக்கின்றன என்பது அவற்றில் முக்கியமானக் குற்றச்சாட்டு. இதன் விளைவாக, மத்திய அரசு இத்தகைய நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளையும், ஒழுங்குகளையும் கட்டாயமாக்கியது. அரசிடம் பதிவு செய்யாத கடைகளின் உணவுப் பொருட்களை ‘ஆப்’ நிறுவனங்கள் விநியோகம் செய்யக்கூடாது என்பது கட்டுப்பாடுகளில் முக்கியமானது.
அரசின் கட்டுப்பாடுகள், எந்த அளவுக்கு தரமான உணவை நாம் பெறுவதற்கு உறுதி அளிக்கின்றன என்பது கேள்விக்குறியே. உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ‘ஆப்’ நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ள உணவகங்கள் அல்லது கடைகள், வெளியே அனுப்பப்படும் உணவுப்பொருட்களை அவசர கதியில் தயாரித்து அனுப்புகின்றன. நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரிக்கும் முறையில் ‘ஆப்’ வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை உணவகங்கள் தயாரிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இரண்டாவதாக, ‘ஆப்’ நிறுவனங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் எண்ணிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே உணவுப் பொட்டலங்கள் தயாராகிவிடுகின்றன. விநியோகத்தில் ஏற்படும் கால தாமதம், அந்த உணவுப் பொருட்களின் தரத்தைக் குறைத்து விடுகிறது. சில நேரங்களில், உணவகங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொட்டலங்களை ‘ஆப்’ நிறுவனங்களின் குடோன்களுக்கு அனுப்பி விடுகின்றன. ஆர்டருக்கு ஏற்ப அந்நிறுவனங்களில் இருந்தே அவை விநியோகிக்கப்படுவதால் தரத்தில் குறைபாடு காணப்படுகிறது என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.
மூன்றாவதாக, குறிப்பிட்ட உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் சில ‘ஆப்’ நிறுவனங்கள், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நாம் ஆர்டர் செய்யும் கடைகளின் பெயரில் உணவுப்பொருட்கள் பார்சல் செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை அந்த உணவகங்களில் தயார் செய்யப்படாததால் சுவையிலும் தரத்திலும் மாறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய உரிமை பெற்ற ‘ஆப்’ நிறுவனங்கள், சுகாதாரமற்ற குடோன்களில் உணவு தயாரிப்பதாகவும் சில சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை உணவு ‘ஆப்’ நிறுவனங்கள் மறுக்கின்றன. வாடிக்கையாளர்களின் ஆர்டர் பெறப்பட்ட பிறகே தங்கள் பணியாளர்கள் குறிப்பிட்ட கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி விநியோகிப்பதாகவும், முன்கூட்டியே வாங்கி சேமித்து வைக்கின்ற வழக்கம் இல்லை என்றும், சொந்தமாக தயாரித்து விநியோகிப்பதை விடவும் கடைகளில் வாங்கி விநியோகம் செய்வதே தங்களுக்கு எளிதானது என்றும் ‘ஆப்’ நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிக வருவாய் ஈட்டும் இளையோரின் செலவையும் ஆடம்பரத்தையும் ‘ஆப்’ உணவு சேவை நிறுவனங்கள் அதிகரித்தாலும், பல ஏழைகளின் வருமானத்துக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றன. ஒரு ஆர்டருக்கு, ரூபாய் 40 விநியோக கட்டணமாக கிடைப்பதால் சிலர் பகுதி நேர வேலையாகவும், பலர் முழு நேர வேலையாகவும் செய்து வருகிறார்கள். ஆனால், தங்கள் பணியாளர்களின் நலனில் இந்த நிறுவனங்கள் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு நியமிக்கப்படும் உணவு விநியோகப் பணியாளர்களுக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.
சில ‘ஆப்’ நிறுவனங்கள், தங்கள் விநியோக பணியாளர்களுக்கு குறிப்பிட்ட மாதச் சம்பளம் நிர்ணயிக்காமல், கிடைக்கின்ற ஆர்டர்களுக்கு ஏற்ப கமிஷனை மட்டுமே சம்பளமாக வழங்கும் அவல நிலையும் உள்ளது. ‘உணவு ஆப்’கள் ஒருபுறம் முன்னேற்றமாகவும் ஆடம்பரமாகவும் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பல்வேறு சோகங்களையும் குழப்பங்களையும் பாதுகாப்பில்லாத நிலையையும் கொண்டிருக்கின்றன.
ஆகவே, உணவு சேவை நிறுவனங்களின் ‘ஆப்’களைப் பயன்படுத்துவோர் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிந்து பயன்படுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு சரியானப் பாதுகாப்பும், சம்பளமும் கொடுக்காத, தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்யாத நிறுவனங்களை தவிர்ப்பதும் நல்லது. அதேசமயம் அதிகம் பணம் செலவழிப்பது மட்டுமே உணவின் தரத்திற்கும் சுகாதாரத்திற்கும் உத்தரவாதமாக அமையாது. ஆடம்பரத்துக்காக அன்றி, அவசரத்துக்காக மட்டும் சரியான உணவு ‘ஆப்’களைத் தேர்வு செய்து பயன்படுத்துவோம்.
உணவிற்கு மட்டுமே பாதுகாப்பு
உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் விநியோக பணியாளர்கள், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு வண்ண டீ-சர்ட்களில் ‘விர்’ என பறந்துக்கொண்டிருக்கிறார்கள். உணவை துரிதமாக கொண்டு சேர்த்தால்தான், இவர்களுக்கு நல்ல விமர்சனங்களும், அடுத்தடுத்த ஆர்டர்களும் கிடைக்குமாம். உணவை தாமதமாக கொண்டு சேர்த்தாலோ, உணவு பொட்டலங்கள் சேதமடைந்திருந்தாலோ, ஆர்டர் செய்தவர்கள் கடும் கோபக்காரர்களாக நடந்து கொள்வதுடன், விநியோக பணியாளர் மீது தவறான விமர்சனங்களையும் பதிவிடுகிறார்கள். இதனால் அவர்களது அடுத்தடுத்த ஆர்டர்கள் மறைமுகமாக பறிக்கப்படுவதுடன், அவர்களது வருமானமும் வெகுவாக குறைக்கப்படுகிறது.
விநியோக பணியாளர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதைவிட, உணவை பாதுகாப்பாகவும், துரிதகதியிலும் விநியோகிக்கவேண்டும் என்பதே பெரும்பாலான உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் குறிக்கோளாகஇருக்கிறது.
போலி ஆர்டர்கள்
உணவு ‘ஆப்’ நிறுவனங்கள், விநியோக ஊழியர்களிடம் கண்டிப்போடு நடந்துக்கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன. உணவை ஓட்டல்களில் இருந்து வாங்கி, அதை உரியவரிடத்தில் சேர்ப்பதுதான், விநியோக ஊழியர்களின் வேலை. ஆனால் சில சமயங்களில் உணவை ஆர்டர் செய்தவர், அதை பாதியிலேயே ரத்து செய்வதுண்டு. அப்படி பாதியிலேயே ரத்து செய்யப்படும் உணவை ஓட்டல் நிறுவனங்களும் ஏற்றுக்கொள் வதில்லை.
சுருக்கமாக சொன்னால், அந்த உணவு விநியோக ஊழியர்களுக்கானதாகி விடுகிறது. மேலும் ரத்து செய்த ஆர்டருக்கான விநியோக கட்டணமும் வழங்கப்படும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர், நண்பர்களின் உதவியோடு போலி ஆர்டர்களை அரங்கேற்றுகிறார்கள். பின்னர் அதை பாதியிலேயே ரத்தும் செய்து விடுகின்றனர். அவர்களது திட்டப்படி உணவிற்கு உணவும், பணத்திற்கும் பணமும் கிடைத்துவிடுகிறது. இப்படியே 6 போலி ஆர்டர்களை அரங்கேற்றினால், உணவு+கட்டணம் ஆகியவற்றுடன் போனஸ் தொகையும் கிடைத்து விடுமாம். இந்த பார்முலாவை பலரும் பயன்படுத்துவதால், ‘ஆப்’ நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன.
டே. ஆக்னல் ஜோஸ்
டிரை நட்ஸ், கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காய்ந்த கருப்பு திராட்சை - ஒரு கைப்பிடி,
பசலைக்கீரை - ஒரு சிறிய கட்டு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,

செய்முறை :
பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி பசலைக்கீரை, மிளகுத்துள், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் காய்ந்த கருப்பு திராட்சை, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
காய்ந்த கருப்பு திராட்சை - ஒரு கைப்பிடி,
பசலைக்கீரை - ஒரு சிறிய கட்டு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி பசலைக்கீரை, மிளகுத்துள், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் காய்ந்த கருப்பு திராட்சை, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
சத்து நிறைந்த பசலைக்கீரை நட்ஸ் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பனிக்காலத்தில் முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். இந்த பிரச்சனையை போக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பனிக்காலத்தில் ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வாயைச் சுற்றி இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். தலை ஸ்காப்பும் வறண்டு பொடுகு வர ஆரம்பித்துவிடும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ள முடியும்.
பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம் வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள். இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.
தினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத் தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள். சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.
குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெய்யை இரண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள். 'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம்.
நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும்.
பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம் வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள். இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.
தினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத் தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள். சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.
குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெய்யை இரண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள். 'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம்.
நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும்.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. அவர்களை மகப்பேறு நிபுணர்கள் முதலில் சோதிப்பது தைராய்டு இருக்கிறதா என்பது தான். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.
ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.
சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.
அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். சோர்வு, கவலை என மனநோயாளி போல் ஆகிவிடுவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது விலகி விடும்.
கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும். மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
தைராய்டு கட்டிகள் அறுவை சிகிச்சை மூலமாய் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சை இருக்கிறது. தைராய்டு கட்டிகளில் சில புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC(Fine Needle Aspiration Citation) மூலம் கண்டுபிடிக்கலாம்.
டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற்பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகளாகும்.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. அவர்களை மகப்பேறு நிபுணர்கள் முதலில் சோதிப்பது தைராய்டு இருக்கிறதா என்பது தான். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.
ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.
சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.
அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். சோர்வு, கவலை என மனநோயாளி போல் ஆகிவிடுவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது விலகி விடும்.
கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும். மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
தைராய்டு கட்டிகள் அறுவை சிகிச்சை மூலமாய் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சை இருக்கிறது. தைராய்டு கட்டிகளில் சில புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC(Fine Needle Aspiration Citation) மூலம் கண்டுபிடிக்கலாம்.
டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற்பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகளாகும்.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
இன்று பல வீடுகளில் குழந்தைகளை சமாதானப்படுத்தும் சாதனம் செல்போன்தான். அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க, நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.
ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.
அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 14 வயதுடைய ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.
ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.
அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
தக்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். இன்று சிக்கனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2
ஏலக்காய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.
பின் அதை வடிகட்டி விடவும்.
பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும்.
இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி.
இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.
சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2
ஏலக்காய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.
பின் அதை வடிகட்டி விடவும்.
பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும்.
இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி.
இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உபகரணமும் இல்லாமல், உடல் முழுவதற்குமான உடல் எடை மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வதின் முழு பலன்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சியின் மூலம் முடியும்.
உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout என்ற பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது.
Animal workout பலராலும் விரும்பப்படுவதற்கான காரணம், சிரமம் இல்லாமல் விளையாட்டு போன்றே செய்துவிடலாம் என்பதும், பல்வேறு பலன்கள் உண்டு என்பதும்தான். இதனால் தானாகவே உடற்பயிற்சியின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல, விலங்குகளைப்போல தவழ்ந்து பயிற்சி செய்யும்போது கை, கால்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து செய்வோம். இதனால் தோள்பட்டை, முன்கை, பின்கால், தொடை, மணிக்கட்டு, பின்புறம் மற்றும் வயிறு தசைகளுக்கு அதிகப்படியான வலு கிடைக்கும். மேலும், எந்த உபகரணமும் இல்லாமல், உடல் முழுவதற்குமான உடல் எடை மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வதின் முழு பலன்களையும் இவற்றால் பெற முடியும்.
Donkey Kick Excercise
கைகளைத் தோளுக்கு நேராக தரையில் ஊன்றி, கால்களை பின்புறமாக நீட்டி, முழங்காலை மட்டும் சிறிது மடக்கிய நிலையில் இருக்க வேண்டும். கைகளை தரையில் நன்றாக ஊன்றிக் கொண்டு ஒரே ஜம்பில் தரையிலிருந்து மேலே எழ வேண்டும்.

பலன்கள்
இரண்டு கால்களையும் மேலே தூக்கி செய்வதால், இடுப்பு மற்றும் பின்பக்க எலும்புகள், தசைகள் வலுவடைகின்றன. முக்கியமாக தோள்பட்டை எலும்புகளுக்கு உறுதி கிடைக்கிறது.
Bear walking
கைகள், கால்களை மடக்கி தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது வலது முழங்காலை தரையில் ஊன்றியவாறு பின்னங்காலை சற்று பின்னோக்கி நீட்டியவாறு வைக்க வேண்டும். இடது முழங்காலை மடக்கி, பாதத்தை தரையில் ஊன்றியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கடுத்து, குழந்தை தவழ்வதைப்போல் இப்போது வலது காலையும், இடதுகையையும் தரையில் ஊன்றி முன்புறமாக நகர்த்த வேண்டும். இதேபோல் முன்புறமாக 4 அடிகளும், பின்புறமாக 4 அடிகளும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இதற்கு கரடி நடை என்று பெயர்.
பலன்கள்
தசைக்கு வலு சேர்க்கிறது. இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு வளர்சிதை மாற்றத்தையும் தூண்டி, உடலின் தாங்கும் திறனை அதிகரிக்கிறது. மொத்தத்தில், முழு உடலையும் பலப்படுத்தும் பயிற்சியாக பலனளிக்கிறது.
Animal workout பலராலும் விரும்பப்படுவதற்கான காரணம், சிரமம் இல்லாமல் விளையாட்டு போன்றே செய்துவிடலாம் என்பதும், பல்வேறு பலன்கள் உண்டு என்பதும்தான். இதனால் தானாகவே உடற்பயிற்சியின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல, விலங்குகளைப்போல தவழ்ந்து பயிற்சி செய்யும்போது கை, கால்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து செய்வோம். இதனால் தோள்பட்டை, முன்கை, பின்கால், தொடை, மணிக்கட்டு, பின்புறம் மற்றும் வயிறு தசைகளுக்கு அதிகப்படியான வலு கிடைக்கும். மேலும், எந்த உபகரணமும் இல்லாமல், உடல் முழுவதற்குமான உடல் எடை மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வதின் முழு பலன்களையும் இவற்றால் பெற முடியும்.
Donkey Kick Excercise
கைகளைத் தோளுக்கு நேராக தரையில் ஊன்றி, கால்களை பின்புறமாக நீட்டி, முழங்காலை மட்டும் சிறிது மடக்கிய நிலையில் இருக்க வேண்டும். கைகளை தரையில் நன்றாக ஊன்றிக் கொண்டு ஒரே ஜம்பில் தரையிலிருந்து மேலே எழ வேண்டும்.
முழங்கால் மார்புக்கு நேராகவும் பின்னங்காலை சற்றே உயர்த்திய நிலையில் 5 நொடிகள் அதே நிலையில் நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும். தரையிலிருந்து அதிக உயரம் தூக்க முடியாவிட்டாலும், வெறுமனே முழங்காலை மார்புக்கு நேராக மடக்க முயற்சிக்கலாம். கழுதை உதைப்பது போல வேடிக்கையான பயிற்சியாக இது இருக்கும்.

பலன்கள்
இரண்டு கால்களையும் மேலே தூக்கி செய்வதால், இடுப்பு மற்றும் பின்பக்க எலும்புகள், தசைகள் வலுவடைகின்றன. முக்கியமாக தோள்பட்டை எலும்புகளுக்கு உறுதி கிடைக்கிறது.
Bear walking
கைகள், கால்களை மடக்கி தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது வலது முழங்காலை தரையில் ஊன்றியவாறு பின்னங்காலை சற்று பின்னோக்கி நீட்டியவாறு வைக்க வேண்டும். இடது முழங்காலை மடக்கி, பாதத்தை தரையில் ஊன்றியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கடுத்து, குழந்தை தவழ்வதைப்போல் இப்போது வலது காலையும், இடதுகையையும் தரையில் ஊன்றி முன்புறமாக நகர்த்த வேண்டும். இதேபோல் முன்புறமாக 4 அடிகளும், பின்புறமாக 4 அடிகளும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இதற்கு கரடி நடை என்று பெயர்.
பலன்கள்
தசைக்கு வலு சேர்க்கிறது. இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு வளர்சிதை மாற்றத்தையும் தூண்டி, உடலின் தாங்கும் திறனை அதிகரிக்கிறது. மொத்தத்தில், முழு உடலையும் பலப்படுத்தும் பயிற்சியாக பலனளிக்கிறது.
குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு மற்றும் நிறம் மாற ஆரம்பிக்கும். இதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண முடியும்.
குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது. எனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.

கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.
பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.
கடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெய்யை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் பொழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.
சிலருக்குக் குளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாற ஆரம்பிக்கும். அவர்களுக்கான டிப்ஸ்...

கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.
பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.
கடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெய்யை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் பொழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.
உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன.
உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.
பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.
ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ்.
இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காமஉணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சனை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.
பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.
ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ்.
இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காமஉணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சனை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று துளசியில் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துளசி இலை - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
டீத்தூள் - 2 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :
துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்க்கரை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.
தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.
துளசி இலை - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
டீத்தூள் - 2 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
பால் - தேவையான அளவு

செய்முறை :
துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்க்கரை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.
தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.
சுவையான ஆரோக்கியமான துளசி டீ தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தையின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது தாயின் கடமை. குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்வோம்.
0 முதல் 4 மாதங்கள்: பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4 முதல் 6 மாதங்கள்: நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதனுடன் தாய்ப்பால் கொடுத்து வருவதும் அவசியம்.
6 மாதங்கள் 8 வரை: இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அலர்ஜி வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர்த்து மற்றவற்றை கொடுக்கலாம்.
8 முதல் 10 மாதங்கள்: இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10 முதல் 12 மாதங்கள்: இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்வோம்.
0 முதல் 4 மாதங்கள்: பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4 முதல் 6 மாதங்கள்: நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதனுடன் தாய்ப்பால் கொடுத்து வருவதும் அவசியம்.
6 மாதங்கள் 8 வரை: இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அலர்ஜி வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர்த்து மற்றவற்றை கொடுக்கலாம்.
8 முதல் 10 மாதங்கள்: இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10 முதல் 12 மாதங்கள்: இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.






