என் மலர்
பெண்கள் உலகம்
- போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது.
- ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, தூக்கம் மூன்றும் ஆரோக்கியத்தின் மூன்று தூண்கள்.
எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே ஓடுபவர்கள்தான் மனித இனம். உணவு, உடை, உறக்கம், இருப்பிடம் உள்ளிட்ட நல்ல வாழ்க்கை முறைக்காகத்தான் அனைவரும் கடினமாக உழைப்போம். ஆனால் அந்த உழைப்பால் உணவு, உறக்கத்தையே மறந்துவிடுகிறோம். வேலை, குழந்தை, குடும்பம் என எது வேண்டுமானாலும் தூக்கத்திற்கும், உணவிற்கும் தடையாக இருக்கலாம். ஆனால் போதுமான தூக்கம் என்பது எடை, உணர்ச்சி, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன மற்றும் உடல் செயல்திறன் மற்றும் பலவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தூக்கம் ஒன்று கெடும்போது இது அனைத்தும் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் மனிதனுக்கு உணவு, உறக்கம் என்பது மிகமுக்கியான ஒன்று. இந்த தூக்கம் கெட்டால் என்ன ஆகும்? பார்க்கலாம்.
தூக்கத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
- வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
- இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
- எடை மேலாண்மையை ஆதரிக்கிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
- கவனத்தின் அளவை அதிகரிக்கிறது
- நினைவாற்றல் மற்றும் கற்றலை அதிகரிக்கிறது
பெரியவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
பெரியவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்கவேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது. எந்த இடையூறுகளும் இன்றி நாம் எவ்வாறு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பதை பொறுத்தது.
குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்?
குழந்தைகளின் வயதின் அடிப்படையில் அவர்கள் தூக்கம் இருக்கவேண்டும்.
- பிறந்த குழந்தைகள் : 14-17 மணிநேரம்
- 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் : 12-16 மணிநேரம்
- 1 முதல் 3 வயதுவரை உள்ள குழந்தைகள் : 11-14 மணிநேரம்
- 3 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகள் : 10-13 மணிநேரம்
- பள்ளி செல்பவர்கள் : 9-12 மணிநேரம்
- பதின்பருவத்தினர் : 8-10 மணிநேரம்

இருண்ட அறையில் தூங்குவது அவசியம்
போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்
- இதய நோய்
- புற்றுநோய் கட்டிகள்
- பக்கவாதம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள்
- கவனக்குறைவால் விபத்துக்கு வழிவகுக்கும்
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம்
இரவில் சிறந்த தூக்கத்தை பெற என்ன செய்யலாம்?
- இரவில் காபி, சர்க்கரை, மது எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
- தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மின்னணு சாதனங்கள், ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- விளக்கை அணைத்துவிட்டு தூங்குங்கள். காரணம் ஒளி நம் மூளையைத் தூண்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, எனவே இருண்ட அறையில் தூங்குவது அவசியம்.
- அலாரம் வைப்பதற்கு ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், கடிகாரத்தை பயன்படுத்துங்கள்.
தூக்கமின்மையின் பாதிப்புகள்
தூக்கமின்மை, நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் குடிபோதையில் இருப்பதற்கு சமம். போதுமான தூக்கம் இல்லாதது நம்மை உணர்ச்சி ரீதியாக நிலையற்றதாக ஆக்குகிறது. மேலும் தூக்கமின்மை மிகுந்த சோகம் அல்லது கோபம் போன்ற மிகவும் வலுவான உணர்ச்சிகளை ஏற்படுத்தும்.
- ஆலப்புழாவில் கிடைக்கும் மீன் உணவுகளின் சுவை, அங்கிருக்கும் இயற்கையின் அழகை விட ஒரு படி மேலானது!
- புளிக்கு பதில் மாங்காயின் புளிப்புச் சுவை சேர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பு.
கேரள மாநிலத்தின் ஆலப்புழா அதாவது அலப்பி நகரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் எழில் கொஞ்சும் படகு வீடுகளும், கால்வாய்களும்தான். ஆனால், அங்கே கிடைக்கும் மீன் உணவுகளின் சுவையோ, அந்த இயற்கையின் அழகை விட ஒரு படி மேலானது. குறிப்பாக, தேங்காய் பாலில் தயாரிக்கப்படும் ஆலப்புழா மீன் குழம்பு அதன் தனித்துவமான சுவைக்காகவே மிகவும் புகழ் பெற்றது. ஆப்பம், சாதம், இடியாப்பம் என எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் தனித்துவமான ருசி கொண்ட இந்த குழம்பு ரெசிபியை செஃப் கதிர்வேல் நமக்காக செய்து காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த தொகுப்பில் 'ஆலப்புழா மீன் குழம்பு' ரெசிபியை எப்படி செய்வது என விரிவாக காணலாம்.

ஆலப்புழா மீன் குழம்பு செய்முறை
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை சிம்மில் வைத்து, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். (மிளகாய் தூள் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.)
* பிறகு நறுக்கிய மாங்காய் துண்டுகள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து, சிறிது வதக்கிய பின், சுத்தம் செய்த மீன் துண்டுகளை மெதுவாகச் சேர்க்கவும்.(எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த மீன்).
* மீன் மற்றும் மாங்காயை வேகவைக்க தேவையான தண்ணீரை ஊற்றி, குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மீன் 10 நிமிடங்கள் வேகும்வரை மூடி வைக்கவும்.
* மீன் வெந்த பிறகு, அடுப்பை முற்றிலுமாக அணைத்துவிடமால் மிக மிகக் குறைந்த தீயில் வைத்து, திக்கான தேங்காய் பாலை சேர்க்கவும்.
* தேங்காய் பால் சேர்த்த பின் அதிகம் கொதிக்க விடக்கூடாது (அதிக நேரம் கொதித்தால் குழம்பு திரிந்து போக வாய்ப்புள்ளது). சுவையை சரி பார்த்து, உடனடியாக மூடி வைக்கவும்.
* இப்போது அட்டகாசமான ஆலப்புழா மீன் குழம்பு தயார்!

சுவையான, சத்து நிறைந்த ஆலப்புழா மீன்குழம்பு
ஆலப்புழாவின் உணவுச் சிறப்பு
* கேரளாவின் பல மீன் குழம்புகளில் கொடம் புளி எனப்படும் கருப்பு புளி பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஆலப்புழா ஸ்டைலில், மாங்காயின் புளிப்புச் சுவை சேர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பாகும்.
* இந்த குழம்புக்கு வஞ்சரம் அல்லது வவ்வால் மீன் பயன்படுத்துவது வழக்கம். இந்த மீனின் உறுதியான சதை, குழம்பில் உடையாமல், குழம்பின் சுவையை உள்வாங்கி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
* இந்தக் குழம்பின் தனி சிறப்பே, தேங்காய் எண்ணெயின் நறுமணமும், தேங்காய் பாலின் தனித்துவமான சுவையும்தான். இது குழம்பிற்கு ஒரு அசல் கேரளச் சுவையை வழங்குகிறது.
உணவில் உள்ள நன்மைகள்
* மீன் ஒரு முழுமையான புரத மூலமாகும். இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அழற்சியை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
* மஞ்சள் தூள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* தேங்காய் பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்கவும், சில வைட்டமின்களை (A, D, E, K) உறிஞ்சவும் உதவுகிறது.
* இதில் பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் இஞ்சி செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உணவிற்கும் தனித்துவமான சுவையை கொடுக்கிறது.
இப்படி மீன், மாங்காய் மற்றும் தேங்காய் பாலின் ஆரோக்கியமான கலவையுடன் விரைவாகச் சமைக்கக்கூடிய இந்த அற்புதமான கேரள உணவை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்
- இனிப்பு சேர்க்கப்பட்ட சூயிங்கத்தை தவிர்க்க வேண்டும்.
- பைகார்பனேட் கலந்த சூயிங்கத்தை தேர்வு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
உணவு சாப்பிட்டதும் சிலருக்கு கடுமையான 'அசிடிட்டி' பிரச்சனை ஏற்படும். வயிறு மற்றும் மார்பு பகுதியில் கடுமையான எரிச்சலை உணர்வார்கள். புளிப்புடன் கூடிய ஏப்பமும் எட்டிப்பார்க்கும். அதனை தடுப்பதற்கு மாத்திரை வடிவிலோ, திரவ மருந்து வகையிலோ உட்கொள்வார்கள். அவை வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க உதவிடும்.
இப்படி உணவு உட்கொண்ட பிறகு உருவாகும் அசிடிட்டி பிரச்சனையை தடுப்பதற்கு சூயிங்கம் உதவும். அது வயிற்று அமில பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம்! சூயிங்கம் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை தூண்ட உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த உமிழ் நீர் உணவுக்குழாயில் நுழைந்து வயிற்று அமிலத்துக்கு எதிராக செயல்பட தொடங்கும். பின்பு வயிறு மெதுவாக இந்த அமிலத்தையும், அங்கு சேரும் உணவையும் வெளியேற்ற தொடங்கும். அதனால் அசிடிட்டியால் ஏற்படும் பாதிப்பு குறையத் தொடங்கும். குறிப்பாக நெஞ்செரிச்சல் அறிகுறிகளை குறைக்கும்.
வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் உணவுத் துகள்களை தடுத்து சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும் தன்மையும் சூயிங்கத்துக்கு உண்டு. மன அழுத்தம், பதற்றமான சூழலின்போது சூயிங்கம் மெல்வது அவற்றின் வீரியத்தை குறைக்க உதவிடும்.
அதேவேளையில் இனிப்பு சேர்க்கப்பட்ட சூயிங்கத்தை தவிர்க்க வேண்டும். அதிலும் பைகார்பனேட் கலந்த சூயிங்கத்தை தேர்வு செய்வது சிறந்த பலனை கொடுக்கும். சூயிங்கம் மெல்லும் பழக்கத்தை தொடர்வது அசிடிட்டியை தடுப்பதுடன் நினைவாற்றலை மேம்படுத்தவும் வழிகாட்டும்.
சூயிங்கம் அதிக உமிழ்நீர் உற்பத்தியை தூண்டுவதோடு பற்களில் படிந்திருக்கும் உணவுத்துகள்களை சுத்தம் செய்து பல் சிதைவையும் தடுக்க உதவுகிறது.
- குழந்தைகளின் அறிவை வளர்ப்பது கல்வி மட்டுமல்ல!
- உணர்ச்சிகளை அடையாளம்கண்டு பேசக் கற்றுக்கொள்வது மூளை வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம்.
குழந்தைகளின் அறிவை வளர்ப்பது, மேம்படுத்துவது என்பது வெறும் கல்வியை சார்ந்தது என்றே பெற்றோர் பலர் நினைக்கின்றனர். நிறைய பணம் கட்டி பெரியப் பள்ளியில் படிக்க வைக்கிறோம். அதுபோதும் அவர்களின் வாழ்க்கைக்கு என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தும் சிலர் படிப்பில் பின்தங்கிதான் இருப்பார்கள். அதற்கு காரணம் பிள்ளைகள் சரியாக படிக்காததுதான் என பெற்றோர்கள் நினைப்பர். ஆனால் இதில் பெற்றோருக்கும் பெரியபங்கு உண்டு. காரணம் படிப்பு, அறிவை கொடுப்பது வெறும் கல்வி மட்டுமல்ல. படைப்பாற்றல், பார்வை, புரிதல், கவனம் போன்றவையும்தான். இவை அனைத்தையும் பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு கட்டாயம் தரவேண்டும். பயிற்சியளிக்க வேண்டும். அவர்களின் இந்த திறன்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் ஞானத்திலும், படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். எப்படி? பார்ப்போம்.
கதை சொல்லல் மூலம் கற்பனையை தூண்டுதல்
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் குழந்தைகளை கதை சொல்லி தூங்கவைப்பார்கள். இந்த கதை சொல்வது குழந்தைகள் தூங்குவதற்காக மட்டுமல்ல. குழந்தையின் கற்பனை மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதற்காக. நாம் சொல்லும் பெரும்பாலான கதைகள் கற்பனையே. அது நமக்கு தெரியும். அவர்களுக்கு தெரியாது. அவர்கள் ஆர்வமாக கதை கேட்பார்கள். நாம் கதாபாத்திரத்தையும், கதைக்களத்தையும் கூறிவிட்டு, அடுத்து என்ன நடக்கும்? என அவர்களிடம் கேட்கும்போது அவர்கள் யோசிக்க தொடங்குகிறார்கள். அவர்களும் அந்த கற்பனைக்குள் வருகிறார்கள். யோசிக்க தொடங்கும்போது கற்பனை திறன் வளர்கிறது. நம்மிடம் கதை சொல்வார்கள். பேச்சுத்திறன் வளரும்.
இந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், என்ன செய்வீர்கள்? என கேட்கும்போது சூழ்நிலையை புரியத் தொடங்குகிறார்கள். அதனால்தான் அந்தக்காலத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள். ஆனால் இப்போது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது, தூங்க வைக்க வேண்டும் என்றால், பொம்மை பாடல்களை போட்டுவிடுவது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கவேண்டும்.
விளையாட்டு
மொபைல் ஃபோன்களில் கேம் வைத்து கொடுக்காமல், காற்றோட்டமாக விளையாட விடவேண்டும். இது உடல்நலனுக்கும், மனநலனுக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். அதுமட்டுமின்றி மொபைல்களில் இருக்கும் விளையாட்டுகள், அதன்விதிகள் சொல்வதுபடியே செய்யவேண்டியதாக இருக்கும். மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது, புதிய விளையாட்டுகளை கண்டுபிடித்தல், விளையாட்டில் எழும் பிரச்சனைகளை தீர்த்தல் என திறன்களை வளர்த்துக்கொள்வர்.

குழந்தைகளை காற்றோட்டமான, உடலுக்கு வேலை கொடுக்குமாறு விளையாட செய்யுங்கள்
நினைவாற்றல், கவனம்
நம் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதும், சோர்வடைய வைப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. மூளைக்கு சிறந்த பயிற்சி சிந்திப்பதுதான். ஆதலால் ஆக்கப்பூர்வமான சிந்தனையை மேற்கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அறிவார்ந்த பேச்சுகளில் ஈடுபடலாம். குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு, பாட்டுக்குப் பாட்டு, புதிதாக ஏதாவது ஒரு மொழியை அல்லது கலையை கற்றுக்கொள்வது போன்றவை மறதியை குறைத்து மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்கள். இது பெரிய பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு. சிறுவயதினருக்கு களிமண், ஆணிமணிச்சட்டம், மணிகளை வரிசைப்படுத்துதல், ஓவியம் வரைதல் போன்ற வேலைகளை கொடுக்கவேண்டும். இந்த செயல்கள் கவனத்தையும், நினைவாற்றலையும் மேம்படுத்த உதவும்.
உணர்வுகளை சொல்லல்
உணர்ச்சிகளை அடையாளம் கண்டு பேசக் கற்றுக்கொள்வது மூளை வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். பெற்றோர்கள் உணர்ச்சிகளை முக பாவனைகள் மூலம் குழந்தைகளிடம் வெளிப்படுத்துங்கள். உணர்வுகளை மெல்லமாக புரிந்துகொள்வார்கள். குழந்தைகளுக்கு ஒருவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள வைப்பது அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கும். மேலும் அவர்களின் மனநிலையை ஒழுங்குபடுத்தவும், பச்சாதாபத்தை வளர்க்கவும் உதவும். குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும்போது, சவால்களை எளிதில் கையாள்வார்கள்.
அமைதியும், சுய கட்டுப்பாடும்
கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் குறித்து அவர்களிடம் பேசும்போது அமைதி மற்றும் கட்டுப்பாடு குறித்தும் பேசவேண்டும். எந்தெந்த இடங்களில் அமைதியாக இருக்கவேண்டும், எப்படி கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களின் கவனத்தை மேம்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும், உணர்ச்சி ஒழுங்குமுறையை அதிகரிக்கவும் செய்யும்.
- அழகோ, அதிகாரமோ, பண பலமோ ஒருவரின் தனித்துவத்தைக் காட்டாது.
- நாம் நடந்துகொள்ளும் விதமும், நம்மை சுற்றி இருப்பவர்களின் நம் மீதான கருத்தும்தான் நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும்.
ஒரு அறையில், ஒரு அலுவலகத்தில், ஒரு கல்லூரியில் இப்படி எங்கு இருந்தாலும் நம்மைச்சுற்றி பலர் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றுதான். ஆனால், "நான் அவர்களிடமிருந்து வேறுபட்டு தனியாக தெரிய வேண்டும்" என பலரும் நினைப்பார்கள். அதுவும் இந்த எண்ணம் பெண்களுக்கு அதிகம் உண்டு. உங்களுக்கான பதிவுதான் இது. அழகோ, அதிகாரமோ, பண பலமோ ஒருவரை தனித்துவமாக காட்டாது. நாம் ஒருவரிடம் நடந்துகொள்ளும் விதமும், நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதும்தான் நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும். மற்றவர்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டு தெரியவேண்டுமென்றால் உங்களின் சில செயல்பாடுகளை மாற்றினாலே போதும்.
பார்வை...
நாம் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களைப் பார்த்து பேசவேண்டும். பொய் பேசாதவர்கள், நேர்மையானவர்கள் கண்களை பார்த்து பேசுவார்கள் என்ற பேச்சு நீண்டகாலமாக நம்மிடையே உள்ளது. அதனால் ஒருவரின் கண்களை பார்த்து நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகள்மீது நம்பிக்கை வரும். மேலும் நாம் பேசும்போது நம் கண், நம் உதடுகளை தாண்டி உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். அதற்காக அதிகம் கண்களால் தொடர்புகொண்டால் சிலர் தவறாக நினைக்கலாம். சிலருக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும். எந்த விஷயங்களுக்கெல்லாம் கண்களை பார்த்து பேசவேண்டும் அதற்கு மட்டும் கண்களை பயன்படுத்துங்கள்.
தெளிவான பேச்சு
நாம் சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லவேண்டும். தேவையற்ற பேச்சுகளை குறையுங்கள். தெளிவாக பேசவேண்டும். தேவையானவற்றை மட்டுமே பேசவேண்டும் என கடகடவென ஓடவும் கூடாது. மெதுவாக, உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். நமது பேச்சுத்திறனே ஒருவரை கவரும்.

நம் வார்த்தைகளைவிட செயல்கள்தான் சத்தமாக பேசும்
உறுதியாக மாறுங்கள்
மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும் எனக்கூறுவார்கள். ஆம், நாம் ஒருவரிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோமோ அதுபோலத்தான் அவர்கள் நம்மை பிரதிபலிப்பார்கள். நீங்கள் ஒருவரை நடத்தும்விதம், மதிக்கும்விதம்தான் உங்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உயிர்களிடத்தில் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள். அதுபோல தேவையான இடத்தில் வேண்டாம் என்பதை சொல்ல பழகுங்கள். ஒரு தெளிவான நிராகரிப்பு என்பது பல இடங்களில் தேவையான ஒன்று. எங்கு வேண்டாமோ அங்கு வேண்டாம் என சொல்வது உங்களுக்கு அமைதி, நன்மையை கொடுப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் மரியாதையையும் பெறச் செய்யும். அதைவிடுத்து என்ன நினைப்பார்களோ என எண்ணி, விருப்பமே இல்லாமல் ஒரு செயலை செய்ய ஒத்துக்கொள்வது உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும். சுற்றியுள்ளவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும்.
உடை
நமது உடை பாணியும் பலரை கவரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு பெற நம்பிக்கையுடன் பேசுவதுபோலவே, தனித்துவமாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடை அணிவதும் பலரின் கவனத்தையும் ஈர்க்கும். நேர்த்தியாக உடை உடுத்துவது, சிறந்த தோரணையை வெளிப்படுத்துவது உங்களை இன்னும் தனித்துவமாக காட்டும்.
"சொல்லைவிட செயலே முக்கியம்"
வார்த்தையை காப்பாற்ற வேண்டும். அதாவது கொடுத்த வாக்குறுதியை காக்கவேண்டும். நம் வார்த்தைகளைவிட செயல்கள்தான் சத்தமாக பேசும். நாம் சொன்ன செயலை செய்வது, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்பது மேற்கூறியவற்றை தாண்டி உங்கள்மீது அதிக நம்பிக்கையை பெறச்செய்யும். "ஓ... அவங்களா..., சொன்ன சொல்லை காப்பாத்துவாங்கப்பா" என ஒருவரை சொல்லச்செய்யும். சொன்னநேரத்தில் செய்வது, நேரத்திற்கு இருப்பது போன்ற எதுவாக இருந்தாலும் ஒரு நற்பெயரை பெற்றுக்கொடுக்கும்.
- வெளியே செல்வதற்கு முன் கை, கால்களில் தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு செல்லலாம்.
- நம் வீட்டில் இருக்கும் பொருட்களை எந்த அளவு, எதனோடு பயன்படுத்தினால் சருமத்தில் மாற்றம் நிகழும்?
அழகு நிலையங்களுக்கு செல்ல இயலாதோர் பலரும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை மெருகூட்ட நினைப்பார்கள். ஆனால் பலருக்கும் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்? எந்த பொருளோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும்? என்பது தெரியாது. அவர்களுக்கான பதிவுதான் இது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை எந்த அளவு, எதனோடு பயன்படுத்தினால் சருமத்தில் மாற்றம் நிகழும்? அதனுடைய விளைவுகள் என்ன? என்பதைப் பார்க்கலாம்.
தேன், எலுமிச்சை
ஒரு தேக்கரண்டி தேனில், இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் எலுமிச்சை சாறுவிட்டு, அதை நன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவலாம். இதை நன்றாக முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். முகத்தில் நல்ல பொலிவு உண்டாகும்.
பக்கவிளைவுகள்:
எலுமிச்சை சாறு சரும எரிச்சல், வறட்சி மற்றும் சூரிய ஒளிக்கு அதிக உணர்திறனை ஏற்படுத்தும். தேன் சிவத்தல் அல்லது அரிப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வாமை உள்ளவர்கள் ஆலோசனை செய்து பின்னர் பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்
தினமும் முகத்திற்கு கற்றாழை பயன்படுத்தவும். இது சருமத்தை ஆற்றவும், எரிச்சலை குணப்படுத்தவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவும். முகத்தில் அதிகப்படியாக இருக்கும் எண்ணெய்ப்பசையை குறைக்கும்.
பக்க விளைவுகள்:
கற்றாழை முகத்திற்கு நல்லது. ஆனால் சிலருக்கு அரிப்பு, சிவத்தல் அல்லது எரியும் உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மஞ்சள், தயிர்
1 தேக்கரண்டி தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் இட்டு, அதனை நன்றாக பேஸ்ட் போல அரைத்து சாப்பிடவும். இது வீக்கத்தை குணப்படுத்தவும், பளபளப்பான மற்றும் தெளிவான சருமத்திற்கு உதவும். முகத்திற்கும் பயன்படுத்தலாம். பேஸ்ட்டை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள்.
பக்க விளைவுகள்:
அதிக மஞ்சள் பயன்பாடு சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் எரிச்சல் மற்றும் சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களது சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்
வெள்ளரிக்காய், ரோஸ் வாட்டர்
1/2 வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றை வடிகட்டி, ரோஸ் வாட்டருடன் கலக்கவேண்டும். இதனை வெள்ளை பருத்தி துணியால் எடுத்து முகத்தில் தடவலாம். அல்லது கைகளாலும் மெதுவாக தடவலாம். 10-15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
தேங்காய் எண்ணெய்
உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, முகம் மற்றும் கை, கால்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும சேதத்தை சரிசெய்யவும், இயற்கையான பளபளப்பை அதிகரிக்கவும் உதவும். முக வறட்சியை போக்கும்.
பக்க விளைவுகள்:
முகப்பரு உள்ளவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ஏனெனில் சருமத்துளைகளை அடைத்து முகப்பரு வெடிப்புக்கு தூண்டுகிறது.
பப்பாளி, தேன்
பழுத்த பப்பாளியை மசித்து, 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக தடவுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியேவிட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். பப்பாளியில் உள்ள நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கும்.
பக்க விளைவுகள்:
பப்பாளியை அதிகமாகப் பயன்படுத்துவது உணர்திறன் வாய்ந்த சருமத்தை எரிச்சலடையச் செய்து, அரிப்பு அல்லது சொறியை ஏற்படுத்தும்.
கடலைமாவு, பால்
1 டீஸ்பூன் கடலைமாவுடன், 1 டீஸ்பூன் பால்சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலந்துவிட்டு, முகத்தில் ஃபேஸ்பேக்காக போடலாம். இதனை அப்படியே 10-15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். கடலைமாவும், பாலும் முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.
பக்க விளைவுகள்:
ஏற்கனவே வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு கடலை மாவு வறட்சியை கொடுக்கும். இதனால் தோல் உரிய தொடங்கும்.
வாழைப்பழம், தேன்
ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் தேனை சேர்த்து நன்கு கலந்துவிட்டு முகத்தில் தடவுங்கள். இதனை 10-15 நிமிடங்கள் அப்படியேவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்திற்கு நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை அளித்து, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
பக்க விளைவுகள்:
அதிகமாக வாழைப்பழம் பயன்படுத்தும்போது முகத்தில் வறட்சி ஏற்படும்.
வீட்டு வைத்தியம் பொதுவாக பாதுகாப்பானதுதான். ஆனால் சில பொருட்கள் சில ஒவ்வாமை மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் உங்கள் சருமத்திற்கு சரிவருமா என மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பிறகு பயன்படுத்துங்கள்.
- தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம்.
- அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன
நோய்களில் மிகவும் பிரபலமானது சர்க்கரை நோய். இப்பொழுது அதற்கு போட்டியாக, சமமாக தைராய்டு நோயும் பரவலாகிவிட்டது.
தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம். தைராய்டு சுரப்பி கழுத்தில் இருந்தாலும் மூளையின் கீழே இருக்கும் ஹைப்போதெலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் தான் அதை கண்ட்ரோலில் வைத்திருக்கும். உச்சி முதல் பாதம் வரை, அதாவது தலைமுடியில் இருந்து கால் நகம் வரை எல்லா உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் தைராய்டை நம்பியிருக்கிறது.
கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.
- அழகு என்பது சருமம் வெள்ளையாக இருப்பதல்ல.
- உடல் ஆரோக்கியமே சரும அழகுக்கு வழிவகுக்கும்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வர். சிலர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்திற்கு அழகை கூட்டுவர். ஆனால் இதுபோல மெனக்கெடல்கள் எதுவும் இல்லாமலேயே சருமத்தை அழகாக வைத்திருக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம்.
நீரேற்றம்...
ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் வேண்டுமென்றால் உடலுக்கு நீரேற்றம் என்பது மிக அவசியமான ஒன்று. உடல் நீரேற்றத்தோடு இருக்கும்போது, சருமத்தின் தோற்றத்தை மங்கச்செய்யும் மாசுகளை திறம்பட நீக்கும். மேலும் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பதால், வறட்சி தடுக்கப்பட்டு, முக சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் முகம் குண்டாக, மென்மையாக காட்சியளிக்கும். நீர் உங்கள் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்திற்கு இளமை மற்றும் பிரகாசமான பளபளப்பைக் கொடுக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
கிளென்சிங்
பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு மென்மையான சுத்திகரிப்பு என்பது முக்கியம். லேசான அதாவது அதிக பாதிப்பில்லாத க்ளென்சர்களை பயன்படுத்தும்போது, அது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்காமல், அழுக்கு, மாசுக்களை நீக்கும். கடுமையான ரசாயனங்கள் கொண்ட க்ளென்சர்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யும். இதனால் வீக்கம் மற்றும் முன்கூட்டியே வயதான தன்மை ஏற்படும். ஒரு மென்மையான க்ளென்சர் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த சமநிலை கூடுதல் எண்ணெய் உற்பத்தியைத் தடுக்கிறது. இது பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
எக்ஸ்ஃபோலியேஷன்
முகத்தில் உள்ள இறந்த செல்கள் சருமத்தின் நிறத்தை மங்கச் செய்து சருமத்தை சீரற்றதாகத் தோன்றச் செய்யும். சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேட்டிற்கு (exfoliate) முக்கிய பங்கு உண்டு. எக்ஸ்ஃபோலியேட் என்பது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர செய்யும் ஒரு முறையாகும். இறந்த சரும செல்கள் அகற்றப்படும்போது முகத்திற்கு பொலிவான தோற்றம் கிடைக்கும்.

சருமம் பளபளக்க தண்ணீர் அவசியம்
சரிவிகித உணவு
ஒரு சரிவிகித உணவுமுறை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நாம் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற அனைத்து வகை உணவுகளையும் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்யவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிப்புற அழுத்தங்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. மேலும் ஒரு நல்ல உணவுமுறை ஹார்மோன் ஒழுங்குமுறைக்கும் உதவும். ஆரோக்கியமான உடல்நலமே சருமத்தை பிரகாசிக்க செய்யும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரும செல்களுக்கு வழங்குகிறது. இந்த ரத்த ஓட்ட மேம்பாடு சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை ஊக்குவிக்கிறது. முக்கியமாக உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மன அழுத்தம் முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதானது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். உடற்பயிற்சி செய்வது வியர்வையை ஏற்படுத்தும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், மாசுகளை நீக்கவும், பளபளப்பான மற்றும் இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக, வழக்கமான உடற்பயிற்சியே உங்கள் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.
மேற்கூறியவை போல நாம் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர், உணவு போன்றவற்றை சரியாக எடுத்தாலே உடலும், சருமமும் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்.
- துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்!
- துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.
மழைக்காலம் வந்தாலே, பெண்களுக்கு சலவைப் பணிகள் ஒரு பெரும் சவாலாக மாறிவிடுகின்றன. வெயிலும், காற்றின் வேகமும் குறையும் போது, துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமாகிறது. ஈரப்பதம் வெளியேறாமல், துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிப்பது பலரது வீட்டிலும் நடக்கும் பொதுவான பிரச்சனை. துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகாமல், துணிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்துவது எப்படி? அதிகபட்ச நீரை வெளியேற்றுவது முதல், சரியான காற்றோட்டத்தை உருவாக்குவது மற்றும் பூஞ்சை வாடையை அகற்றும் சமையலறை ரகசியம் வரை, மழைக்காலத்தில் சலவை செய்யும் உத்திகள் குறித்து இப்போது விரிவாகக் காணலாம்.
துணிகளை விரைவாக உலர்த்த
மழைக்காலத்தில், வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் துணிகளை உலர்த்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிக்கிறது. இதற்குத் தீர்வாக, முதலில் துணிகளில் உள்ள அதிகபட்ச நீரை வெளியேற்ற வேண்டும்; வாஷிங் மெஷினில் துவைப்பவர்கள் துணிகளை அதிக வேகத்தில் இரண்டு முறை 'சுழற்றுதல் (Spin Cycle)' செய்ய வேண்டும், கைகளால் துவைப்பவர்கள் துணிகளை ஒரு சுத்தமான, உலர்ந்த டவலில் வைத்து இறுக்கமாகச் சுருட்டி அழுத்தி நீரை உறிஞ்சச் செய்யலாம். மேலும், துணிகளை உலர்த்தப் போடும் முன் ஒவ்வொன்றையும் நன்கு உதறி, அதன் இழைகளைப் பிரித்து, துணியின் மேற்பரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆவியாதல் சீக்கிரமாக நடைபெறும்; குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளை மடிப்பு இல்லாமல் பரப்பிப் போடுவது மிகவும் அவசியமாகும்.

பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க கடைசி அலசலின்போது சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்
உட்புறத்தில் காற்றோட்டமே முக்கியம்
வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதற்குச் சரியான காற்றோட்டமே மிக முக்கியமாகும். துணிகளை உலர்த்த ஒரு மடிப்பு ஸ்டாண்டைப் பயன்படுத்தி, அதை சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் இயங்கும் அறையில் வைக்க வேண்டும். ஃபேன் காற்று நேரடியாகத் துணிகள் மீது படுமாறு வைத்தால், ஈரப்பதம் வேகமாக ஆவியாகும். முக்கியமாக, துணிகளை நெருக்காமல், ஒவ்வொரு துணிக்கும் இடையில் குறைந்தபட்சம் 3 அங்குலமாவது இடைவெளி விட வேண்டும். துணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டால், ஈரப்பதம் தங்கிக் கொண்டே இருக்கும், இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை ஈர்த்து, உலர்த்தும் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவும்.
பூஞ்சை வாடைக்குத் 'தடா'
மழைக்காலத்தில் சலவை செய்யப்பட்ட துணிகளில் ஏற்படும் பூஞ்சை வாசனை மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு எளிய, செலவு குறைந்த சமையலறை ரகசியம் உள்ளது. துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையையும் கையாளலாம். வினிகர் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி வாய்ந்தது; மேலும், அதன் வாசனை துணி காய்ந்தவுடன் முற்றிலும் ஆவியாகிவிடும். துர்நாற்றம் நீங்கவில்லை எனில், மீண்டும் அலசும் தண்ணீரில் வினிகர் சேர்த்து ஒரு முறை அலசி, பின்னர் உலர வைக்கலாம். இந்த எளிய மற்றும் பயனுள்ள உட்புற நிர்வாக உத்தியின் மூலம், விலை உயர்ந்த இயந்திரங்களைப் பற்றிய கவலை இல்லாமல், எந்தவொரு குடும்பத் தலைவியும் மழைக்காலச் சலவைப் பணிகளை மிகச் சிறப்பாகவும், துர்நாற்றமின்றியும் நிர்வகிக்க முடியும்.
- சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு போட்டு ஆரோக்கியமான பாயாசம் செய்யலாம்!
- பால், நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கும்.
நம்ம ஊர் திருவிழாக்களிலும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஓர் இனிப்பு பலகாரம் என்றால் அது பாயாசம் தான். அதிலும், பால் பாயாசத்தின் தனித்துவமான சுவையும், கிரீமிப் பதமும் யாருக்குத்தான் பிடிக்காது? சமைப்பதற்கு எளிதான அதேவேளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் இந்த பால் பாயாசத்தை, பாரம்பரிய முறையிலும் ஆரோக்கியமான மாற்றுகளுடனும் தயாரிக்கும் செய்முறையை சமையல் கலைஞர் வனிதா நமக்காக செய்து காட்டியுள்ளார். பொதுவாக, பாயாசம் என்றால் அதில் சர்க்கரையின் பங்கு அதிகம் இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்கப் போகும் செய்முறையில், வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, ஆரோக்கியம் நிறைந்த பனங்கற்கண்டு சேர்த்து, கூடுதல் நன்மையுடன் சுவையான பால் பாயாசம் எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கிரீமி பால் பாயாசம் செய்முறை
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 கப் கொழுப்புடன் கூடிய பாலைச் சேர்க்கவும்.
* பால் ஊற்றியவுடன் லேசாக ஒருமுறை மட்டும் கிண்டி விடவும். இது அடி பிடிக்காமல் இருக்க உதவும். அதேவேளை பாலில் ஒரு துளிகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதுவே பாயாசத்துக்குக் கெட்டியான, கிரீமி சுவையைக் கொடுக்கும்.
* பால் கொதித்து நுரைத்து பொங்கும் தருவாயில், சுவையைச் சமநிலைப்படுத்த ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும்.
* பால் கொதித்துக் கொண்டு இருக்கும்போது, 4 ஸ்பூன் பால் பவுடருடன் கொஞ்சம் பாலைக் கலந்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
* பிறகு வறுத்து வைத்திருக்கும் 4 ஸ்பூன் சேமியாவைக் கொதிக்கும் பாலில் சேர்க்கவும். சேமியா சேர்த்த உடனேயே, 1 ஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். இது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், கட்டி முட்டியாகாமல் இருக்க உதவும்.
* இந்த நேரம் கரைத்து வைத்த பால் பவுடர் கலவையையும், 1 ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்கையும் (மில்க் மேட்) பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
* இப்போது பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்க்கவும். இந்த பாயாசத்திற்கு நட்ஸ்களை வறுக்கத் தேவையில்லை.
* கலவை கொதி வந்த பிறகு, அடுப்பைச் சிம்மில் வைத்து, குறைந்தது 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். அப்போதுதான் சேமியா முழுமையாக வெந்து பால் பவுடர், கண்டென்ஸ் மில்க் ஆகியவை நன்கு கிரீமியாக மாறும்.
* சேமியா நன்றாக வெந்து, பால் திக்கான பிறகு, பொடித்து சலித்து வைத்த 4 ஸ்பூன் பனங்கற்கண்டு தூளைச் சேர்க்கவும். (சேமியா வேகும் முன் சர்க்கரை சேர்த்தால், சேமியா வேகாமல் போக வாய்ப்புள்ளது)
* பனங்கற்கண்டு சேர்த்த பிறகு, ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும். பின் இனிப்பு நன்கு கரைந்து, பாயாசம் இன்னும் 10 நிமிடங்கள் கொதித்து கிரீமியாக, திக்கான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இப்போது கிரீமியான, சுவையான பால் பாயாசம் தயார்!

பரிமாற தயார் நிலையில் கிரீமி பால் பாயாசம்
பால் பாயாசத்தின் நன்மைகள்
* இந்தப் பால் பாயாசத்தில் ஆரோக்கியமான பனங்கற்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது வெள்ளை சர்க்கரையை விட சிறந்த ஆரோக்கிய மாற்று. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* பால் மற்றும் நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கின்றன.
* இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். விசேஷ நாட்களில் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
* இனிப்புச் சுவை இயற்கையாகவே மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரக்கூடியது.
இந்த கிரமி பால் பாயாசம், சுவைக்காக மட்டும் அல்லாமல், ஆரோக்கியமான நன்மைகளையும் கொண்டுள்ளதால், இந்த இனிய உணவைத் தயாரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அல்ல விருந்தினர்களையும் அசத்துங்கள்!
- எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும்.
- வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும்.
2010க்கு பின் பிறந்த பலருக்கு எண்ணெய் குளியல் என்ற சொல்லே புதிதாக இருக்கும். ஆனால் அதற்குமுன் பிறந்தவர்களுக்கு அதனுடைய பயன்கள் என்னவென்று தெரியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமை என்றால் அம்மா கண், காது, தலை என உடல் முழுவதும் எண்ணெயை ஊற்றி, தேய்த்துவிட்டு, 2 மணிநேரம் கழித்து குளிக்க சொன்னால், குளித்துவிட்டு வந்து நன்றாக தூங்குவோம். தூங்கி எழுந்தால் அப்படி ஒரு பொலிவு முகத்தில் இருக்கும். நல்ல தூக்கத்திற்கும், முகத்தில் இருக்கும் அந்த பொலிவிற்கும் இந்த எண்ணெய் குளியல்தான் காரணம் என்று அப்போது தெரியாது. இப்படி தமிழ்நாட்டில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயல்தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. ஆனால் இப்போதெல்லாம் தீபாவளி என்றால் மட்டும்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்ற சொல் வெளிப்படுகிறது. அப்படி எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்தான் என்னவென்று நீங்கள் கேட்கும் அளவிற்கு அழகியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நன்மைகளை கொண்டது எண்ணெய் குளியல். அதுகுறித்து பார்ப்போம்.
அழகியல் நன்மைகள்
எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சருமத்துளைகளை சுத்தப்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வறண்ட சருமத்தினர் எண்ணெய் குளியல் எடுக்கும்போது உடலுக்கு தேவையான எண்ணெயை வழங்குவதால், பளபளப்பான, மிருதுவான சருமம் கிடைக்கும். எண்ணெய்களில் உள்ள வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து காக்கிறது. எண்ணெய், சூரிய ஒளியின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியை தடுக்கிறது.
முடி வளர்ச்சி
எண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். பொடுகுத் தொல்லை நீங்கும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து குளித்தால், உடல்சூடு தணியும். உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மாதத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளுங்கள்
நல்ல தூக்கம்
வேலை காரணமாக, மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் இருந்தால் அல்லது உடல் சோர்வாக இருந்தால் ஒரு எண்ணெய் குளியல் போடுங்கள். குளித்துவிட்டு வந்த அரைமணிநேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள்.
நோய்களை தவிர்க்கும்...
எண்ணெய் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, பாலியல் கோளாறுகள், நீரிழிவு மற்றும் வயிற்றுக் கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களைத் தடுக்க உதவும். எண்ணெயில் உள்ள அழற்சி பண்புகள் வலி, வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை எண்ணெய் குளியல் கொண்டுள்ளது. உங்களால் வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் குளியலில் பல்வேறு வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து எண்ணெய்களும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியவையாக இருந்தாலும், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் குளியல் இன்னும் உகந்தது.
- குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
- அதிகம் கோபப்படும்போது நம்மீது வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும்.
குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானல்ல. பெற்றோர் என்ற பொறுப்பு எவ்வளவு கடமைகளை கொண்டது என்பதை அந்த நிலையில் இருப்பவர்கள் அறிவர். இந்தக் கடமையில், இந்த பணியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அதாவது தவறு என்றால் தாங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டுமென்றால் கத்தினால்தான் அது நடக்கும் என நம்புவது. அவர்களை பயப்பட வைப்பதற்கு, சொல்வதை கேட்க வைப்பதற்கு என அனைத்திற்கும் கத்துவதுதான் வழி என பல பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தினால் அப்போதைய வேலை வேண்டுமானால் முடியலாம். ஆனால், அந்தக் கத்தல் குழந்தைகளை அதிக பதட்டமாகவும், அடங்காதவர்களாவும் மாற்றுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கத்தாமல் குழந்தைகளை நாம் சொல்வதை கேட்கவைப்பது எப்படி என்பதை கூறும் 5 எளிய வழிகள்.
கண்களை பார்த்து, அமைதியாக பேசுங்கள்...
குழந்தைகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அல்லது அவர்களை ஒரு விஷயத்தை செய்ய வைக்க வேண்டுமானால், கத்தாமல், அதிகாரத் தோரணையில் சொல்லாமல், அவர்களிடம் சென்று மண்டியிட்டு அவர்களது கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள். அந்த அமைதியான பேச்சு அவர்களை கவனிக்க செய்யும். மேலும் சில விஷயங்களை அவர்களை சொல்லவும் வைக்கும்.
கட்டளை வேண்டாம்
"இப்போதே செய்" என கட்டளையிடுவதற்கு பதில், சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடம் செய்கிறீர்களா? இல்லை வீட்டுப்பாடம் செய்துவிட்டு சாப்பிடுகிறீர்களா? அல்லது கொஞ்சநேரம் விளையாடுகிறீர்களா? ஒரு 10 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்களா? என கேளுங்கள். அப்போது அதை செய்வார்கள்.
இடைவெளி விட்டுப் பேசுங்கள்
குழந்தைகளிடம் அவர்களின் தவறை குறிப்பிட்டு கோபமாக பேசும்போது, சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். கோபமாக இருக்கும்போது கொஞ்சம் அமைதியானால் அந்த கோபம் தணியும். உங்களின் இந்த சுயகட்டுப்பாட்டை மாதிரியாக கொண்டு குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளின் கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள்
முயற்சியைப் பாராட்டுங்கள், முடிவுகளை மட்டுமல்ல
போட்டியோ, ஏதேனும் புதிய செயலோ எதுவாக இருந்தாலும் அதன் வெற்றி, முடிவை பார்க்காமல் குழந்தைகளின் அந்த முயற்சியை, அதில் கலந்துகொண்டதை பாராட்டுங்கள். அது அவர்களை ஊக்குவிக்கும். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், அடுத்தமுறை நன்றாக எடுங்கள் என கூறுங்கள். அப்படி தொடர்ந்து மதிப்பெண்கள் குறைந்தால் அதற்கான காரணம் என்னவென கண்டறியுங்கள். அதைவிடுத்து கத்துவதால், கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.
தண்டனைகளைவிட விளைவுகள் பாடத்தை சொல்லிக்கொடுக்கும்
மிகவும் அடம்பிடித்து குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யாவிடில் கத்துவதற்கு பதிலாக அதை அப்படியே விடுங்கள். மறுநாள் ஆசிரியரின் முன்பு அதற்கு பதில்சொல்ல கடமைப்படிருப்பர். நம் குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, அவர்களின் செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும். இது வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் பொருந்தும்.
அமைதி
கத்துவதைவிட அமைதியாக பேசுவது அவர்களை காதுகொடுத்து கேட்கவைக்கும். அதிகம் கோபப்படும்போது நம்மீது ஒரு வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும். "அன்னைக்கு என்ன அடிச்சல்ல" என நாம் திட்டுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் அவர்களின் மனதில் ஆழமாக பதியும். அவர்களின் தவறை சுட்டிக்காட்ட பேசாமல் அமைதியாக இருங்கள். அப்போது அவர்களே வந்துப்பேசி தவறை உணர்வார்கள்.






