என் மலர்
ஆரோக்கியம்
வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.
பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.
உடல் உஷ்ணம் தவிர்க்க நீருடன் எவற்றை சேர்க்க வேண்டும்?
வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவும். மண்பாண்ட தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.
கோடை பாதிப்பை தவிர்க்க வேறு விளையாட்டுக்கள் என்ன?
உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கை, சுரைக்காய், புடலை, பூசணி காய்கள் சாப்பிடலாம். வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால்,சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.
கோடையை சமாளிக்க எப்படி குளிக்க வேண்டும்?
குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளை குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
உடல் உஷ்ணம் தவிர்க்க நீருடன் எவற்றை சேர்க்க வேண்டும்?
வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவும். மண்பாண்ட தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.
கோடை பாதிப்பை தவிர்க்க வேறு விளையாட்டுக்கள் என்ன?
உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கை, சுரைக்காய், புடலை, பூசணி காய்கள் சாப்பிடலாம். வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால்,சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.
கோடையை சமாளிக்க எப்படி குளிக்க வேண்டும்?
குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளை குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
மனைவியின் சினைமுட்டையும், கணவரின் உயிரணுவும் சந்தித்து இணைவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்!
கணவன்- மனைவி இடையேயான தாம்பத்ய வாழ்க்கையில் கருவுறுதல் என்பது மிக உன்னதமான நிகழ்வு. ஆணும் பெண்ணும் சந்தித்து காதல் வசப்படுவது கூட மிகச் சுலபமாக இருக்கலாம். ஆனால் மனைவியின் சினைமுட்டையும், கணவரின் உயிரணுவும் சந்தித்து இணைவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்!
பெண்ணின் சினைமுட்டைதான் உடலிலேயே மிகப்பெரிய செல். அது, சினைப்பையில் உள்ள ‘யோக் சாக்’ என்ற பையில் ‘பிரைமார்டியல் ஜெர்ம் செல்கள்’ என்ற தொடக்க கருவணுக் கூடுகளாக உருவாகி, வளர்ந்து, முதிர்ந்து இரண்டு வாரத்துக்குப் பிறகு கருப்பையை நோக்கி நகர்ந்து வரும். சினைப்பையில் இருந்து வரும் முட்டையை சுமார் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வைத்து, கருக்குழாய் தன்னுள் இழுத்துக்கொள்ளும்.
அடுத்த நிகழ்வாக, சினைமுட்டை உயிரணுவுக்காக காத்திருக்கும். சினைமுட்டையை கருமுட்டையாக்குவதற்காகக் கோடிக் கணக்கான உயிரணுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிவரும்போது, அவை பல தடைகளைத் தாண்டவேண்டி இருக்கும். முதல் தடை, பெண்ணின் உறுப்புப் பகுதியில் உள்ள அமிலங்கள். இந்த அமிலங்கள் சுமார் 50 சதவீத அணுக்களைக் கொன்று குவித்துவிடும். இதைக் கடந்துவரும் அணுக்களை, கருப்பை உறுப்புகளைப் பாதுகாப்பதற்காகக் காத்திருக்கும் வெள்ளை அணுக்கள் கொன்றுவிடுகின்றன. இதையும் தாண்டிப்போகும்போது, கருப்பை வாய்ப்பகுதியில் உள்ள சளிச் சுரப்பு அவற்றை மிதக்க வைத்துவிடும்.
கருப்பை சளிச் சுரப்பில் மிதக்க ஆரம்பித்ததும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அணுக்கள் இறந்துவிடும். நூறு, இருநூறு அணுக்கள் மட்டுமே மிஞ்சும். இவை ஒருவழியாக சினைமுட்டையை அடைந்ததும், அதைத் துளைக்க ஆரம்பிக்கும். முட்டையின் மேல் அடுக்கு ‘ஜோனா பெலுசிடா’ என்ற பசையால் ஆனது. இதைத் துளைத்தாலும் அதற்கு அடுத்த அடுக்கான ‘க்யூமுலஸ் ஊபோரஸ்’ என்ற அடுக்கையும் துளைக்க வேண்டி இருக்கும். இதற்குள்ளாகவே பல அணுக்கள் களைத்துவிடும்.
முட்டையின் எந்தப் பகுதியை எந்த அணு முதலில் துளைக்கிறதோ அது உள்ளே நுழைந்துவிடும். உடனடியாக சினைமுட்டையானது தனது வழியை அடைத்துக்கொள்ளும். மற்ற உயிரணுக்கள் ஏமாந்து இறந்துவிடுகின்றன. ஒருவழியாக இப்படி முட்டைக்குள் நுழைந்த உயிரணு தன்னுள் உள்ள 23 குரோமோசோம்களை, முட்டையில் உள்ள 23 குரோமோசோம்களுடன் இணைத்து தன்னை ஒரு புதிய உயிராக வளர்த்துக்கொள்ள முற்படும்.
இவ்வாறு சினைமுட்டையுடன் உயிரணு இணைந்து கருமுட்டையாக உருவாகும். இவை அனைத்தும் கருக்குழாயில் நடைபெறும். இது நடைபெற்ற ஐந்து நாள்களுக்குப் பிறகே கருப்பைக்கு கருமுட்டை வருகிறது. அங்கு அது பதியமாவதற்கு தேவையான சூழல்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கும்.
கருப்பைக்குள் பதியமான கருமுட்டை, முதல் 24 மணி நேரத்தில் இரண்டு செல்களாகும். அந்த இரண்டு செல்களும் பதினைந்து மணி நேரத்துக்கு ஒருமுறை பிரிந்து தனித்தனி இரண்டு செல்களாக மாறும். இவ்வாறு இரண்டு நாள்களில் எட்டு செல்கள் உருவாகும். இந்த செல்கள் அனைத்தையும் தனித்தனியே எடுத்து வளர்த்தால் எட்டு குழந்தைகளை உருவாக்கலாம். இந்த சிறப்புச் செல்களுக்கு ‘டோட்டி பொடன்சியல் செல்கள்’ என்று பெயர். இவ்வாறு தனித்தனியாகப் பிரிந்து 90 மணி நேரத்துக்குள் 64 செல்களாகும்.
இத்தனை செல்களும் ஏறக்குறைய கருப்பைக் குழாய்க்குள் இருக்கும்போதே பிரிந்துவிடுகின்றன. அதன் பிறகே 96 மணி நேரத்தில் கருப்பையை நோக்கி வருகின்றன. இந்த செல்களில் 85 சதவீத செல்கள் குழந்தை வளர்வதற்கு உரிய அடுக்குகளாகவும், மற்ற 15 சதவீத செல்கள் கருக்குழந்தையாகவும் மாறும். கருப்பையை வந்து அடைந்தவுடன் உடனே அதன் உள்வரிச் சவ்வில் ஒட்டிக்கொள்ளாமல் இரண்டு மூன்று நாள்கள் மிதந்து கொண்டிருக்கும். ஆறு அல்லது ஏழாவது நாள் வாக்கில் ஹியூமன் கோரியோனிக் கொனடோட்ரோபின் ஹார்மோன் உதவியால் கருப்பையுடன், முட்டை பதியமாகி ஒட்டி வளரும். இதையே பெண் தாய்மையடைந்துவிட்டாள் என்று சொல்கிறோம்.
பெண்ணின் சினைமுட்டைதான் உடலிலேயே மிகப்பெரிய செல். அது, சினைப்பையில் உள்ள ‘யோக் சாக்’ என்ற பையில் ‘பிரைமார்டியல் ஜெர்ம் செல்கள்’ என்ற தொடக்க கருவணுக் கூடுகளாக உருவாகி, வளர்ந்து, முதிர்ந்து இரண்டு வாரத்துக்குப் பிறகு கருப்பையை நோக்கி நகர்ந்து வரும். சினைப்பையில் இருந்து வரும் முட்டையை சுமார் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வைத்து, கருக்குழாய் தன்னுள் இழுத்துக்கொள்ளும்.
அடுத்த நிகழ்வாக, சினைமுட்டை உயிரணுவுக்காக காத்திருக்கும். சினைமுட்டையை கருமுட்டையாக்குவதற்காகக் கோடிக் கணக்கான உயிரணுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிவரும்போது, அவை பல தடைகளைத் தாண்டவேண்டி இருக்கும். முதல் தடை, பெண்ணின் உறுப்புப் பகுதியில் உள்ள அமிலங்கள். இந்த அமிலங்கள் சுமார் 50 சதவீத அணுக்களைக் கொன்று குவித்துவிடும். இதைக் கடந்துவரும் அணுக்களை, கருப்பை உறுப்புகளைப் பாதுகாப்பதற்காகக் காத்திருக்கும் வெள்ளை அணுக்கள் கொன்றுவிடுகின்றன. இதையும் தாண்டிப்போகும்போது, கருப்பை வாய்ப்பகுதியில் உள்ள சளிச் சுரப்பு அவற்றை மிதக்க வைத்துவிடும்.
கருப்பை சளிச் சுரப்பில் மிதக்க ஆரம்பித்ததும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அணுக்கள் இறந்துவிடும். நூறு, இருநூறு அணுக்கள் மட்டுமே மிஞ்சும். இவை ஒருவழியாக சினைமுட்டையை அடைந்ததும், அதைத் துளைக்க ஆரம்பிக்கும். முட்டையின் மேல் அடுக்கு ‘ஜோனா பெலுசிடா’ என்ற பசையால் ஆனது. இதைத் துளைத்தாலும் அதற்கு அடுத்த அடுக்கான ‘க்யூமுலஸ் ஊபோரஸ்’ என்ற அடுக்கையும் துளைக்க வேண்டி இருக்கும். இதற்குள்ளாகவே பல அணுக்கள் களைத்துவிடும்.
முட்டையின் எந்தப் பகுதியை எந்த அணு முதலில் துளைக்கிறதோ அது உள்ளே நுழைந்துவிடும். உடனடியாக சினைமுட்டையானது தனது வழியை அடைத்துக்கொள்ளும். மற்ற உயிரணுக்கள் ஏமாந்து இறந்துவிடுகின்றன. ஒருவழியாக இப்படி முட்டைக்குள் நுழைந்த உயிரணு தன்னுள் உள்ள 23 குரோமோசோம்களை, முட்டையில் உள்ள 23 குரோமோசோம்களுடன் இணைத்து தன்னை ஒரு புதிய உயிராக வளர்த்துக்கொள்ள முற்படும்.
இவ்வாறு சினைமுட்டையுடன் உயிரணு இணைந்து கருமுட்டையாக உருவாகும். இவை அனைத்தும் கருக்குழாயில் நடைபெறும். இது நடைபெற்ற ஐந்து நாள்களுக்குப் பிறகே கருப்பைக்கு கருமுட்டை வருகிறது. அங்கு அது பதியமாவதற்கு தேவையான சூழல்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கும்.
கருப்பைக்குள் பதியமான கருமுட்டை, முதல் 24 மணி நேரத்தில் இரண்டு செல்களாகும். அந்த இரண்டு செல்களும் பதினைந்து மணி நேரத்துக்கு ஒருமுறை பிரிந்து தனித்தனி இரண்டு செல்களாக மாறும். இவ்வாறு இரண்டு நாள்களில் எட்டு செல்கள் உருவாகும். இந்த செல்கள் அனைத்தையும் தனித்தனியே எடுத்து வளர்த்தால் எட்டு குழந்தைகளை உருவாக்கலாம். இந்த சிறப்புச் செல்களுக்கு ‘டோட்டி பொடன்சியல் செல்கள்’ என்று பெயர். இவ்வாறு தனித்தனியாகப் பிரிந்து 90 மணி நேரத்துக்குள் 64 செல்களாகும்.
இத்தனை செல்களும் ஏறக்குறைய கருப்பைக் குழாய்க்குள் இருக்கும்போதே பிரிந்துவிடுகின்றன. அதன் பிறகே 96 மணி நேரத்தில் கருப்பையை நோக்கி வருகின்றன. இந்த செல்களில் 85 சதவீத செல்கள் குழந்தை வளர்வதற்கு உரிய அடுக்குகளாகவும், மற்ற 15 சதவீத செல்கள் கருக்குழந்தையாகவும் மாறும். கருப்பையை வந்து அடைந்தவுடன் உடனே அதன் உள்வரிச் சவ்வில் ஒட்டிக்கொள்ளாமல் இரண்டு மூன்று நாள்கள் மிதந்து கொண்டிருக்கும். ஆறு அல்லது ஏழாவது நாள் வாக்கில் ஹியூமன் கோரியோனிக் கொனடோட்ரோபின் ஹார்மோன் உதவியால் கருப்பையுடன், முட்டை பதியமாகி ஒட்டி வளரும். இதையே பெண் தாய்மையடைந்துவிட்டாள் என்று சொல்கிறோம்.
கேழ்வரகை எந்த வடிவிலாவது உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு அவல் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு அவல் - அரை கப் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்)
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
மாதுளை முத்துக்கள் - கால் கப்
வெள்ளரிக்காய், கேரட் - தலா ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
வெள்ளரிக்காய், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை அலசி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பிறகு தண்ணீரை ஒட்டப் பிழிந்துவிட்டு ஃப்ரெஷ் க்ரீமில் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இதில் நறுக்கிய கேரட், வெள்ளரி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய தக்காளி, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து கூலாகப் பரிமாறவும்.
கேழ்வரகு அவல் - அரை கப் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்)
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
மாதுளை முத்துக்கள் - கால் கப்
வெள்ளரிக்காய், கேரட் - தலா ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
வெள்ளரிக்காய், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை அலசி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பிறகு தண்ணீரை ஒட்டப் பிழிந்துவிட்டு ஃப்ரெஷ் க்ரீமில் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இதில் நறுக்கிய கேரட், வெள்ளரி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய தக்காளி, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து கூலாகப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு அவல் வெஜிடபிள் சாலட் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மன்னிப்பு வழங்கவே ஒரு டயரி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை உளவியல் சிகிச்சையாளர்கள் வலியுறுத்துவார்கள். தினசரி மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதுவது நல்ல சிகிச்சை முறை.
மன்னிப்பு வழங்குதல் ஓர் ஆன்மிகச் சுத்திகரிப்பு என்றுதான் துறவிகள் நம்பினார்கள். தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப, இதை அவர்கள் கையாண்டார்கள். பிறகு உளவியல் சிகிச்சையில் இதைப் பெரிய அளவுக்குப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மருத்துவ சிகிச்சையில் மன்னிப்பு வழங்குதலின் பலன்கள் ஆராயப்படுகின்றன.
மன்னிப்பு வழங்கவே ஒரு டயரி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை உளவியல் சிகிச்சையாளர்கள் வலியுறுத்துவார்கள். தினசரி மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதுவது நல்ல சிகிச்சை முறை. ஒரு நாளில் யார் யார் மீது கோபமும் பகையும் வெறுப்பும் அதிருப்தியும் கொண்டீர்களோ, அவர்களிடம் மன்னிப்பு கோருங்கள். நடந்தவற்றை தர்க்கரீதியாகப் பார்த்தால், உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். மன்னிப்பு கேட்பதே தவறு என்றுகூடத் தோன்றலாம். ஆனால், மன்னிப்பு வழங்குதல் மட்டுமே உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்று உணரும்போது, அதை இயல்பாகச் செய்வீர்கள். யாரிடமெல்லாம் உங்களுக்கு தினசரி கோபம் வருகிறது என்று பட்டியல் இட்டுப் பார்த்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும். நீங்கள் அதிகம் அன்பு செலுத்துவோர் மீதுதான் நிராசைகளும் ஏமாற்றங்களும் கோபங்களும் அதிகம் இருக்கும்.
குறிப்பாகச் சொன்னால், நீங்கள் யாரிடம் அதிக நன்மை பெறுகிறீர்களோ, அவர்கள் மேல்தான் அதிக ஏமாற்றங்களும் இருக்கும். பெற்றோர், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், வாழ்க்கை துணை, பிள்ளைகள், நமக்கு உதவும் உறவுகள் என்று யாரெல்லாம் நமக்கு அதிகம் செய்கிறார்களோ, அவர்கள் மேல்தான் எல்லா வருத்தங்களும் இருக்கும்.
உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை; எதுவும் செய்யவில்லை என்றால் அது பெரும்துயராக இருந்தாலும், அதை விரைவில் மனம் ஏற்றுக்கொள்ளும். நாளடைவில் பெரிதாக எதையும் எதிர்பார்க்காது. ஆனால் தந்தைக்கும் சேர்த்து பங்களிக்கும் தாயின் மேல் அன்பும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அம்மா செய்யும் சிறு தவறுகளும் பெரிதாகத் தெரியும். உங்களை மதிக்காத, அன்பு செலுத்தாத பலரை மிக இயல்பாக நடத்துவீர்கள். அடிப்படை இதுதான், செய்யச்செய்ய எதிர்பார்ப்புகள் ஏறும். ஏமாற்றங்கள் எகிறும். செய்ததை பார்க்காத மனம், செய்யாததை பூதக்கண்ணாடி வைத்து பார்க்கும்.
ஏமாற்றமும் கோபமும் நெருங்கிய உறவுகளில் இருந்தால், அது ஒரு மனப்பழக்கமாகி வருவோர் போவோரிடம் எல்லாம் வருத்தம் கொள்ள வைக்கும். எனவே. தவறு யார் மீது இருந்தாலும் வந்த கோபத்தை வெளியேற்றி, எதிராளியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரி, அமைதி கொள்ளுவதே புத்திசாலித்தனம் என்கிறார்கள், மனநல ஆலோசனை நிபுணர்கள்.
மன்னிப்பு வழங்கவே ஒரு டயரி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை உளவியல் சிகிச்சையாளர்கள் வலியுறுத்துவார்கள். தினசரி மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதுவது நல்ல சிகிச்சை முறை. ஒரு நாளில் யார் யார் மீது கோபமும் பகையும் வெறுப்பும் அதிருப்தியும் கொண்டீர்களோ, அவர்களிடம் மன்னிப்பு கோருங்கள். நடந்தவற்றை தர்க்கரீதியாகப் பார்த்தால், உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். மன்னிப்பு கேட்பதே தவறு என்றுகூடத் தோன்றலாம். ஆனால், மன்னிப்பு வழங்குதல் மட்டுமே உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்று உணரும்போது, அதை இயல்பாகச் செய்வீர்கள். யாரிடமெல்லாம் உங்களுக்கு தினசரி கோபம் வருகிறது என்று பட்டியல் இட்டுப் பார்த்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும். நீங்கள் அதிகம் அன்பு செலுத்துவோர் மீதுதான் நிராசைகளும் ஏமாற்றங்களும் கோபங்களும் அதிகம் இருக்கும்.
குறிப்பாகச் சொன்னால், நீங்கள் யாரிடம் அதிக நன்மை பெறுகிறீர்களோ, அவர்கள் மேல்தான் அதிக ஏமாற்றங்களும் இருக்கும். பெற்றோர், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், வாழ்க்கை துணை, பிள்ளைகள், நமக்கு உதவும் உறவுகள் என்று யாரெல்லாம் நமக்கு அதிகம் செய்கிறார்களோ, அவர்கள் மேல்தான் எல்லா வருத்தங்களும் இருக்கும்.
உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை; எதுவும் செய்யவில்லை என்றால் அது பெரும்துயராக இருந்தாலும், அதை விரைவில் மனம் ஏற்றுக்கொள்ளும். நாளடைவில் பெரிதாக எதையும் எதிர்பார்க்காது. ஆனால் தந்தைக்கும் சேர்த்து பங்களிக்கும் தாயின் மேல் அன்பும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அம்மா செய்யும் சிறு தவறுகளும் பெரிதாகத் தெரியும். உங்களை மதிக்காத, அன்பு செலுத்தாத பலரை மிக இயல்பாக நடத்துவீர்கள். அடிப்படை இதுதான், செய்யச்செய்ய எதிர்பார்ப்புகள் ஏறும். ஏமாற்றங்கள் எகிறும். செய்ததை பார்க்காத மனம், செய்யாததை பூதக்கண்ணாடி வைத்து பார்க்கும்.
ஏமாற்றமும் கோபமும் நெருங்கிய உறவுகளில் இருந்தால், அது ஒரு மனப்பழக்கமாகி வருவோர் போவோரிடம் எல்லாம் வருத்தம் கொள்ள வைக்கும். எனவே. தவறு யார் மீது இருந்தாலும் வந்த கோபத்தை வெளியேற்றி, எதிராளியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரி, அமைதி கொள்ளுவதே புத்திசாலித்தனம் என்கிறார்கள், மனநல ஆலோசனை நிபுணர்கள்.
சீரான இடைவெளியில் நகங்களை வெட்டுவது நகங்களின் அடித்தோல் பகுதியை பலப்படுத்த உதவும். நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
நகங்களை நன்றாக பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. சீரான இடைவெளியில் நகங்களை வெட்டுவது நகங்களின் அடித்தோல் பகுதியை பலப்படுத்த உதவும். சரியான முறையில் நகங்களை வெட்டாவிட்டால் காயம் ஏற்படும் நிலை உருவாகும். நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
* நகங்களை மென்மையாக்கிவிட்டு, வெட்டுவதுதான் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்துவிட்டு நகங்களை வெட்டுவதுதான் சரியான நடைமுறை. அப்போது நகங்கள் மென்மையாகிவிடும். குளித்து முடித்ததும் நகம் வெட்டலாம்.
* மனக்குழப்பம், டென்ஷனாக இருக்கும் நேரங்களில் நகங்களை கடிப்பது தவறான பழக்கம். அப்போது நகங்களின் உள் அடுக்கு பகுதியையும் சேர்த்து கடித்துவிடுவார்கள். அதனால் கூடுதலாக வலி, வேதனையை அனுபவிக்க வேண்டி யிருக்கும். நகத்தில் ஏற்படும் காயங்களுக்கு மருந்திடும் நிலையும் ஏற்படலாம்.
* ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை சீராக நகங்களை வெட்டுவதே சரியானது. சிலர் ஸ்டைலுக்காக வெவ்வேறு வடிவங்களில் நகங்களை வெட்டுவார்கள். அப்படி ஒழுங்கற்ற முறையில் வெட்டுவது நகங்களை பலவீனப்படுத்தி விடும். எளிதாக உடைந்து போய்விடவும் வாய்ப்புண்டு. அதனால் தேவையற்ற காயங்களை எதிர்கொள்ளக்கூடும்.
* நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் நக வெட்டி கொண்டு வெட்டாதீர்கள். அவைதான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாக்கின்றன. நோய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கின்றன. அந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் எண்ணெய் தடவுங்கள்.
* ஒருவரது நக வெட்டியை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவரே பயன்படுத்தினாலும் நகம் வெட்டுவதற்கு முன்பும், பின்பும் நன்றாக கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதும் அவசியமானது. அது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும். சோப்பு, சானிடைசர் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
* நகங்களை மென்மையாக்கிவிட்டு, வெட்டுவதுதான் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்துவிட்டு நகங்களை வெட்டுவதுதான் சரியான நடைமுறை. அப்போது நகங்கள் மென்மையாகிவிடும். குளித்து முடித்ததும் நகம் வெட்டலாம்.
* மனக்குழப்பம், டென்ஷனாக இருக்கும் நேரங்களில் நகங்களை கடிப்பது தவறான பழக்கம். அப்போது நகங்களின் உள் அடுக்கு பகுதியையும் சேர்த்து கடித்துவிடுவார்கள். அதனால் கூடுதலாக வலி, வேதனையை அனுபவிக்க வேண்டி யிருக்கும். நகத்தில் ஏற்படும் காயங்களுக்கு மருந்திடும் நிலையும் ஏற்படலாம்.
* ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை சீராக நகங்களை வெட்டுவதே சரியானது. சிலர் ஸ்டைலுக்காக வெவ்வேறு வடிவங்களில் நகங்களை வெட்டுவார்கள். அப்படி ஒழுங்கற்ற முறையில் வெட்டுவது நகங்களை பலவீனப்படுத்தி விடும். எளிதாக உடைந்து போய்விடவும் வாய்ப்புண்டு. அதனால் தேவையற்ற காயங்களை எதிர்கொள்ளக்கூடும்.
* நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் நக வெட்டி கொண்டு வெட்டாதீர்கள். அவைதான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாக்கின்றன. நோய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கின்றன. அந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் எண்ணெய் தடவுங்கள்.
* ஒருவரது நக வெட்டியை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவரே பயன்படுத்தினாலும் நகம் வெட்டுவதற்கு முன்பும், பின்பும் நன்றாக கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதும் அவசியமானது. அது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும். சோப்பு, சானிடைசர் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
இலந்தை பழத்தின் இலை, வேர், பட்டை, பழம் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். இலந்தை பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவை உடையது.
உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது இலந்தை பழம். குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் இலந்தை பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இலந்தை பழத்தில் 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.
இலந்தைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். எனவே மாணவர்கள் இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நினைவாற்றலை அதிகரிக்கும். இரத்தக் காயம் பட்ட இடத்தில் இலந்தை பழத்தின் இலளைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் விரைவில் ஆறிவிடும். உடல் சூட்டினால் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கவும் இலந்தை பழம் பெரிதும் பயன்படுகிறது.
உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பித்தத்தினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நன்மை தரும்.
இலந்தை பழத்தின் மருத்துவ பயன்கள்
* மாணவர்களின் ஞாபக திறனை அதிகரிக்க இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
* மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்பு குறைபாடு உள்ள குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
* இலந்தை பழம் பித்தம், வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
* இலந்தை பழம் பசியின்மையை போக்கி பசியை தூண்ட பயன்படுகிறது.
* பெண்களுக்கு மாதவிலக்கின் பொது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த இலந்தை பழம் பயன்படுகிறது.
* இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இலந்தை பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இரவில் தூங்கும் போது இலந்தை பழத்தை சாப்பிட்டால் உடல் வலியை நீங்க செய்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
* இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.
இலந்தைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். எனவே மாணவர்கள் இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நினைவாற்றலை அதிகரிக்கும். இரத்தக் காயம் பட்ட இடத்தில் இலந்தை பழத்தின் இலளைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் விரைவில் ஆறிவிடும். உடல் சூட்டினால் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கவும் இலந்தை பழம் பெரிதும் பயன்படுகிறது.
உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பித்தத்தினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நன்மை தரும்.
இலந்தை பழத்தின் மருத்துவ பயன்கள்
* மாணவர்களின் ஞாபக திறனை அதிகரிக்க இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
* மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்பு குறைபாடு உள்ள குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
* இலந்தை பழம் பித்தம், வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
* இலந்தை பழம் பசியின்மையை போக்கி பசியை தூண்ட பயன்படுகிறது.
* பெண்களுக்கு மாதவிலக்கின் பொது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த இலந்தை பழம் பயன்படுகிறது.
* இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இலந்தை பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இரவில் தூங்கும் போது இலந்தை பழத்தை சாப்பிட்டால் உடல் வலியை நீங்க செய்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
* இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.
எத்தனை பெரிய சமையல் கில்லாடியாக இருந்தாலும் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் கோட்டை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே காய்கறிகளை தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள் இங்கே:-
சிலர் செக்கச் செவேலென சிவந்து, கனிந்திருக்கிற தக்காளி பழங்களைத்தான் தேடுவார்கள். முழுவதுமாக சிவந்திருக்கும் தக்காளி சாறில் அமிலம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதனால் பச்சையும் மஞ்சளும் கலந்து செங்காயாக இருக்கும் காய்களுக்கு முதலிடம் கொடுங்கள். உருண்டையாக கெட்டியாக இருக்கும் காய்களாகப் பார்த்து வாங்குங்கள். முண்டும் முடிச்சுமாக இருந்தால் அதில் சாறு அதிகமாக இருக்குமே தவிர சதைப்பற்று இருக்காது.
வெண்ண்டைக்காயை பொறுத்தவரை பச்சைப்பசேலென மினுக்கும் காய்கள்தான் சிறந்தவை. வெண்டைக்காய் காம்புப் பகுதியில் இருந்துதான் முற்றத் துவங்கும். எனவே காம்பை உடைத்துப் பார்த்து வாங்கலாம்.
முளைவிட்ட காய்களையும் ஆங்காங்கே பச்சை நிறம் பூசியிருக்கும் காய்களையும் ஒதுக்குவது நல்லது. செம்மண்ணில் விளைந்த உருளையில் இனிப்புச்சுவை மிகுந்து இருக்கும்.
கத்தரிக்காய், தடித்த காம்புள்ள கத்தரிதான் பிஞ்சு. காம்பு மெலிந்திருந்தால் அவற்றை மறுத்துவிடுங்கள். சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கும் உத்தி ஊரறிந்த ரகசியம். ஆனால் உருளைக்கிழங்குக்கு பதில் சோயா உருண்டைகளை வேகவைத்து சேர்ப்பதும் கைமேல் பலன் தரும். சோற்று உருண்டையைப் போட்டாலும் உப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. டீ போடும்போது கடைசியில் சர்க்கரை சேர்ப்பதுதான் வழக்கம். இதையே தலைகீழாக முயற்சிக்கலாம். முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு டீத்தூள் சேர்த்து வடிகட்டி, சூடான பால் சேர்த்து பாருங்கள். டீ திடமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் இன்னொரு நல்லதும் இருக்கிறது. இப்படி முதலிலேயே சர்க்கரை சேர்ப்பதால் டீத்தூளின் கரை பாத்திரத்தில் ஒட்டாது, பாத்திரத்தைக் கழுவுவது எளிது.
வெண்ணெய் காய்ச்சும்போது கறிவேப்பிலை அல்லது முருங்கை இலையைப் போட்டு காய்ச்சுவதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போடுங்கள். நெய் அருமையான மணத்துடன் இருப்பதுடன், கசக்கவும் செய்யாது.
வெண்ண்டைக்காயை பொறுத்தவரை பச்சைப்பசேலென மினுக்கும் காய்கள்தான் சிறந்தவை. வெண்டைக்காய் காம்புப் பகுதியில் இருந்துதான் முற்றத் துவங்கும். எனவே காம்பை உடைத்துப் பார்த்து வாங்கலாம்.
முளைவிட்ட காய்களையும் ஆங்காங்கே பச்சை நிறம் பூசியிருக்கும் காய்களையும் ஒதுக்குவது நல்லது. செம்மண்ணில் விளைந்த உருளையில் இனிப்புச்சுவை மிகுந்து இருக்கும்.
கத்தரிக்காய், தடித்த காம்புள்ள கத்தரிதான் பிஞ்சு. காம்பு மெலிந்திருந்தால் அவற்றை மறுத்துவிடுங்கள். சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கும் உத்தி ஊரறிந்த ரகசியம். ஆனால் உருளைக்கிழங்குக்கு பதில் சோயா உருண்டைகளை வேகவைத்து சேர்ப்பதும் கைமேல் பலன் தரும். சோற்று உருண்டையைப் போட்டாலும் உப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. டீ போடும்போது கடைசியில் சர்க்கரை சேர்ப்பதுதான் வழக்கம். இதையே தலைகீழாக முயற்சிக்கலாம். முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு டீத்தூள் சேர்த்து வடிகட்டி, சூடான பால் சேர்த்து பாருங்கள். டீ திடமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் இன்னொரு நல்லதும் இருக்கிறது. இப்படி முதலிலேயே சர்க்கரை சேர்ப்பதால் டீத்தூளின் கரை பாத்திரத்தில் ஒட்டாது, பாத்திரத்தைக் கழுவுவது எளிது.
வெண்ணெய் காய்ச்சும்போது கறிவேப்பிலை அல்லது முருங்கை இலையைப் போட்டு காய்ச்சுவதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போடுங்கள். நெய் அருமையான மணத்துடன் இருப்பதுடன், கசக்கவும் செய்யாது.
பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பெண்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டால் எலும்புகள் பலவீனடைந்து ‘ஆஸ்ட்ரோபோரோசிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து போதுமான நேரம் தூங்காமல் குறைந்த நேரமே தூங்கி எழுந்தால் எலும்பு அடர்த்தி பாதிப்பு அதிகமாகி எலும்புகள் பலவீனமாகும் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பப்பெல்லோ பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.
மாதவிடாய் நிறைவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் 11 ஆயிரத்து 84 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தூங்கும் நேரத்தை கணக்கிட்டு ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற இந்த பெண்கள் அனைவரும் தினமும் இரவில் ஐந்து மணிக்கும் குறைவான நேரமே தூங்கி இருக்கிறார்கள்.
அவர்களின் முதுகுத்தண்டுவடம், இடுப்பு, கழுத்து உள்பட எலும்புகள் சார்ந்த உடற்பகுதிகளை பரிசோதனை செய்ததில் 63 சதவீத எலும்புகள் தேய்மானம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் நிறைய பேருக்கு எலும்பு அடர்த்தி குறைபாடும் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் தினமும் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் பால்கோம் குறிப்பிடுகையில், “பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தூங்கும் நேரத்தில் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் ஆழ்ந்து தூங்க வேண்டும். தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்” என்கிறார்.
மாதவிடாய் நிறைவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் 11 ஆயிரத்து 84 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தூங்கும் நேரத்தை கணக்கிட்டு ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற இந்த பெண்கள் அனைவரும் தினமும் இரவில் ஐந்து மணிக்கும் குறைவான நேரமே தூங்கி இருக்கிறார்கள்.
அவர்களின் முதுகுத்தண்டுவடம், இடுப்பு, கழுத்து உள்பட எலும்புகள் சார்ந்த உடற்பகுதிகளை பரிசோதனை செய்ததில் 63 சதவீத எலும்புகள் தேய்மானம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் நிறைய பேருக்கு எலும்பு அடர்த்தி குறைபாடும் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் தினமும் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் பால்கோம் குறிப்பிடுகையில், “பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தூங்கும் நேரத்தில் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் ஆழ்ந்து தூங்க வேண்டும். தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்” என்கிறார்.
தாய் வயிற்றில் கருவாக உருவாகுவது முதல்- குழந்தையாக பிறந்து, இரண்டு வயதை எட்டும் வரை உள்ள நாட்கள், அந்த குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமானவை.
தாய் வயிற்றில் கருவாக உருவாகுவது முதல்- குழந்தையாக பிறந்து, இரண்டு வயதை எட்டும் வரை உள்ள நாட்கள், அந்த குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. அதனை `முதல் 1000 நாட்கள்' என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. முதலில் தாயின் உணவு மூலமும், பின்பு நேரடி உணவு வழியாகவும் குழந்தைகள் பெறும் சத்துக்களே அவர்களை புத்திசாலிகளாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் உருவாக்குகிறது. அதாவது இரண்டு வயது வரைதான் குழந்தையின் மூளை மிக வேகமாக வளருகிறது.
தாய் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே குழந்தையின் மூளை வளரத் தொடங்குகிறது. கருத்தரித்த நான்கு வாரத்தில் 10 ஆயிரம் திசுக்களாக அது உருவாக்கம் பெறும். 24 வாரங்களில் குழந்தையின் மூளை 10 பில்லியன் திசுக்களாகிவிடும். முதல் ஆயிரம் நாட்களில் மூளை வளர்ச்சி மட்டுமல்ல, இதர முக்கிய உறுப்புகளின் வளர்ச்சியும் வேகமாக நடக்கிறது.
குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்களில் சத்துணவு குறைபாடு ஏற்பட்டால், பிற்காலத்தில் அதனை ஈடுசெய்வது கடினம். குழந்தையின் வளர்ச்சி- சிந்தனை- படிப்பு போன்ற அனைத்துக்குமான அடிப்படை கட்டமைப்புகள் அந்த முதல் காலகட்டத்தில் உருவாகுவதால், ஆயிரம் நாட்களில் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தைக்கு மிக முக்கியமான நாட்கள்தான்.
கர்ப்பகாலத்தில் தாய் சுவாசிப்பதும், சாப்பிடுவதும் சிசுவிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால், கர்ப்பத்திற்கு தயாராகும்போதே பெண்கள் வாழ்வியல்முறைகளில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கிவிடவேண்டும். குறிப்பாக சமச்சீரான சத்துணவை உட்கொள்ளவேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், பிரச்சினைக்குரிய மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளை தவிர்க்கவேண்டும். வாழ்க்கை முறைகளை சிறப்பாக்கிக்கொள்ளவேண்டும்.
உணவில் இரும்பு, போலிக் ஆசிட், வைட்டமின் டி போன்றவை இடம்பெறுவது அவசியம். போலிக் ஆசிட் தாய்க்கும், சிசுவுக்கும் தேவையானதாகும். போலிக் ஆசிட் போதுமான அளவு கிடைக்காவிட்டால் சிசுவின் தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். போலிக் ஆசிட் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடவேண்டும். ரத்தத்தில் இரும்பின் அளவு குறைந்துவிட்டால் அது ரத்த சோகையை உருவாக்கிவிடும்.
வயதுக்கு தகுந்த உயரமின்மை, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையின்மை, மூளை வளர்ச்சிக்குறைபாடு, உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடக்கக்கால ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுபவை என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். உலகத்திலேயே உயரம் குறைந்த குழந்தைகள் மிக அதிகமாக இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது இதன் விளைவுகளை நம்மால் புரிந்துகொள்ள இயலும். நைஜீரியா, பாகிஸ்தான், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கின்றன.
குறிப்பாக இந்திய கிராம பகுதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று வளர்ச்சியின்மையால் உயரக் குறைபாட்டுடன் காட்சியளிக்கிறது. யுனிசெப்பின் சர்வே, இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள 62 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சிக்குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் கற்றல்குறைபாடு கொண்டவர்களாகி விடுகிறார்கள். அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
கர்ப்பிணிகள் இரண்டு பேருக்கான உணவினை உண்ணவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவில் உணவை சாப்பிட்டுவிட்டால் போதுமான அளவில் சத்துக்கள் கிடைத்துவிடும் என்று கூறுவதற்கில்லை. கர்ப்பிணி அதிக அளவில் சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டாலும் அதுவும் போதுமானதல்ல. தேவைக்கு அதிகமான கலோரி கர்ப்பிணியின் உடலில் சேர்ந்துவிட்டால் இதர சத்துக்கள் உடலில் சேர முடியாத நிலை உருவாகிவிடும். அதிக கலோரி கொழுப்பாக மாறி உடலில் தங்கும். இது உடல் பருமன் மற்றும் சத்துக்குறைபாட்டிற்கு காரணமாகிவிடும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின் சைவம் மற்றும் அசைவ உணவுகளில் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி இறைச்சி, பயறு- பருப்பு வகைகள் போன்றவைகளில் புரோட்டின் இருக்கிறது. அசைவ உணவுகளில் எல்லா வகை அமினோ அமிலங்களும் இருக்கின்றன. சைவ உணவுகளில் சிலவகை அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன.
அதனால் கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தங்கள் உணவில் அவசியம் பால் மற்றும் முட்டையை சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆறு கப் சாதத்தில் கிடைக்கக்கூடிய புரோட்டின் ஒன்றரை முட்டையில் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கிடைக்கும் மீன்களில் 15 சதவீதம் அளவுக்கு புரோட்டின் சத்து இருக்கிறது. ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் தேவையில்லை. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வளர்ச்சிக்கும் அது போதுமானது.
தாய் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே குழந்தையின் மூளை வளரத் தொடங்குகிறது. கருத்தரித்த நான்கு வாரத்தில் 10 ஆயிரம் திசுக்களாக அது உருவாக்கம் பெறும். 24 வாரங்களில் குழந்தையின் மூளை 10 பில்லியன் திசுக்களாகிவிடும். முதல் ஆயிரம் நாட்களில் மூளை வளர்ச்சி மட்டுமல்ல, இதர முக்கிய உறுப்புகளின் வளர்ச்சியும் வேகமாக நடக்கிறது.
குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்களில் சத்துணவு குறைபாடு ஏற்பட்டால், பிற்காலத்தில் அதனை ஈடுசெய்வது கடினம். குழந்தையின் வளர்ச்சி- சிந்தனை- படிப்பு போன்ற அனைத்துக்குமான அடிப்படை கட்டமைப்புகள் அந்த முதல் காலகட்டத்தில் உருவாகுவதால், ஆயிரம் நாட்களில் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தைக்கு மிக முக்கியமான நாட்கள்தான்.
கர்ப்பகாலத்தில் தாய் சுவாசிப்பதும், சாப்பிடுவதும் சிசுவிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால், கர்ப்பத்திற்கு தயாராகும்போதே பெண்கள் வாழ்வியல்முறைகளில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கிவிடவேண்டும். குறிப்பாக சமச்சீரான சத்துணவை உட்கொள்ளவேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், பிரச்சினைக்குரிய மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளை தவிர்க்கவேண்டும். வாழ்க்கை முறைகளை சிறப்பாக்கிக்கொள்ளவேண்டும்.
உணவில் இரும்பு, போலிக் ஆசிட், வைட்டமின் டி போன்றவை இடம்பெறுவது அவசியம். போலிக் ஆசிட் தாய்க்கும், சிசுவுக்கும் தேவையானதாகும். போலிக் ஆசிட் போதுமான அளவு கிடைக்காவிட்டால் சிசுவின் தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். போலிக் ஆசிட் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடவேண்டும். ரத்தத்தில் இரும்பின் அளவு குறைந்துவிட்டால் அது ரத்த சோகையை உருவாக்கிவிடும்.
வயதுக்கு தகுந்த உயரமின்மை, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையின்மை, மூளை வளர்ச்சிக்குறைபாடு, உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடக்கக்கால ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுபவை என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். உலகத்திலேயே உயரம் குறைந்த குழந்தைகள் மிக அதிகமாக இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது இதன் விளைவுகளை நம்மால் புரிந்துகொள்ள இயலும். நைஜீரியா, பாகிஸ்தான், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கின்றன.
குறிப்பாக இந்திய கிராம பகுதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று வளர்ச்சியின்மையால் உயரக் குறைபாட்டுடன் காட்சியளிக்கிறது. யுனிசெப்பின் சர்வே, இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள 62 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சிக்குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் கற்றல்குறைபாடு கொண்டவர்களாகி விடுகிறார்கள். அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
கர்ப்பிணிகள் இரண்டு பேருக்கான உணவினை உண்ணவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவில் உணவை சாப்பிட்டுவிட்டால் போதுமான அளவில் சத்துக்கள் கிடைத்துவிடும் என்று கூறுவதற்கில்லை. கர்ப்பிணி அதிக அளவில் சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டாலும் அதுவும் போதுமானதல்ல. தேவைக்கு அதிகமான கலோரி கர்ப்பிணியின் உடலில் சேர்ந்துவிட்டால் இதர சத்துக்கள் உடலில் சேர முடியாத நிலை உருவாகிவிடும். அதிக கலோரி கொழுப்பாக மாறி உடலில் தங்கும். இது உடல் பருமன் மற்றும் சத்துக்குறைபாட்டிற்கு காரணமாகிவிடும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின் சைவம் மற்றும் அசைவ உணவுகளில் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி இறைச்சி, பயறு- பருப்பு வகைகள் போன்றவைகளில் புரோட்டின் இருக்கிறது. அசைவ உணவுகளில் எல்லா வகை அமினோ அமிலங்களும் இருக்கின்றன. சைவ உணவுகளில் சிலவகை அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன.
அதனால் கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தங்கள் உணவில் அவசியம் பால் மற்றும் முட்டையை சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆறு கப் சாதத்தில் கிடைக்கக்கூடிய புரோட்டின் ஒன்றரை முட்டையில் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கிடைக்கும் மீன்களில் 15 சதவீதம் அளவுக்கு புரோட்டின் சத்து இருக்கிறது. ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் தேவையில்லை. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வளர்ச்சிக்கும் அது போதுமானது.
மங்குஸ்தான் பழத்தில் சத்து மிக அதிகம். இந்த ஜூஸ் நமது தோலை பாதுகாக்கும். நம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்றாழை உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
மங்குஸ்தான் - 1/4 கப் (சதை மட்டும்),
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்,
தேன் - தேவைக்கேற்ப,
குளிர்ந்த நீர் - 100 மில்லி.
செய்முறை
மங்குஸ்தானை உரித்து உள்ளே உள்ள பழத்தை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
கற்றாழையை வெட்டி உள் இருக்கும் சதையை எடுத்து நன்கு கழுவி வைக்கவும்.
மங்குஸ்தான் - 1/4 கப் (சதை மட்டும்),
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்,
தேன் - தேவைக்கேற்ப,
குளிர்ந்த நீர் - 100 மில்லி.
செய்முறை
மங்குஸ்தானை உரித்து உள்ளே உள்ள பழத்தை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
கற்றாழையை வெட்டி உள் இருக்கும் சதையை எடுத்து நன்கு கழுவி வைக்கவும்.
மிக்சியில் மங்குஸ்தானையும், கற்றாழையையும், தேனையும் சேர்த்து நன்கு அரைத்து பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐஸ்கட்டி போட்டு பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம்.
உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும். இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கருமை நீங்க தொடங்கிவிடும்.
ஆப்பிள் சிடேர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும். பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும். இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கருமை நீங்க தொடங்கிவிடும்.
ஆப்பிள் சிடேர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும். பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
அலுவலகப் பணிகளுக்கு எட்டுமணி நேரத்தை செலவிடுவதைப்போல், தம்பதியரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தினமும் குறைந்தது இரண்டு மணி நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும்.
பெண்கள் மணமகனை தேர்ந்தெடுப்பதில் அழகும் அந்தஸ்தும்தான் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. ஆனால், அவை மட்டுமே போதுமானதில்லை. ஒருசில பெண்கள் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டால் உடனே திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிடுவார்கள். திருமணத்திற்கு அப்படி அவசரம்காட்ட வேண்டியதில்லை.
மணமகன் ஆரோக்கியமானவராக இருப்பது அவசியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்யம் சிறக்கும். நிரந்தரமான நோயாளியை மணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் சேவை வேண்டுமானால் செய்யலாம். தாம்பத்யம் நடத்த முடியாது.
பெண்கள் எந்த பொருளையும், அது அவர்களது கண்களையோ, மனதையோ கவர்ந்தால்தான் தேர்வு செய்வார்கள். உங்கள் கண்களுக்கும், மனதுக்கும் பிடித்தமான நபரைத் தேர்வு செய்யும்போது, அவர் மீது உங்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அத்தகைய ஈர்ப்பு ஏற்படும் அளவுக்கு அவர் தோற்றப்பொலிவு கொண்டவராகவும் இருக்கட்டும்.
அறுபதை, இருபது திருமணம் செய்துகொள்வது புரட்சிகரமானது என்று சிலர் கருதலாம். ஆனால், தாம்பத்யம் இனிப்பதற்கு உங்களது வாழ்க்கைத் துணை, ஏறக்குறைய சம வயது உடையவராக இருக்கவேண்டும். பெண், ஆணைவிட மூன்று முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது ஏற்புடையது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அது வாழ்க்கையில் சலிப்பை உண்டாக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை ஒழுக்கமானவராக, நல்ல குணங்களை கொண்டவராகவும் இருக்கவேண்டும்.
புதிய வாழ்க்கையில் அடியெடுத்துவைப்பவர்களுக்கு சமூக அந்தஸ்தும் மிக முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால், அந்த இடத்துக்கு ஏற்பவே உங்கள் சமூக அந்தஸ்து மதிப்பிடப்படும். பெண்கள் தங்கள் அந்தஸ்தை எல்லா விதத்திலும் உயர்த்திக்கொள்ள முன்வரவேண்டும்.
உங்கள் வாழ்க்கைத் துணை பொருளாதார விஷயத்தில் கவனம் கொண்டவராக இருக்கவேண்டும். உங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும்.
தம்பதியர் ஒருமித்த கருத்து கொண்டவர்களாக இருந்தால்தான் வாழ்க்கையானது எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கும். முரண்பாடுகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் சகித்து, சரிசெய்யக்கூடிய பக்குவம் இருவரிடத்திலும் இருக்கவேண்டும். ஆகவே உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் உங்களோடு பொருந்தி வரக்கூடியவரை திருமணம் செய்துகொள்வதே சிறந் தது. உங்களுக்கு அமையப்போகும் வாழ்க்கைத்துணை தோழமை உணர்வுகொண்டவராகவும் இருக்க வேண்டும். இருவரும் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது. பரிசுகள், புகழுரைகள், அன்பை வெளிப்படுத்துதல் போன்றவை, காதலையும் தோழமையையும் வளர்க்கும்.
அலுவலகப் பணிகளுக்கு எட்டுமணி நேரத்தை செலவிடுவதைப்போல், தம்பதியரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தினமும் குறைந்தது இரண்டு மணி நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும். அப்போதுதான் மனம் விட்டுப்பேசவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும். எல்லா சூழலிலும் உங்களோடு மனம்விட்டுப்பேசக்கூடிய துணை அமைய வேண்டும். அப்போதுதான் உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
மணமகன் ஆரோக்கியமானவராக இருப்பது அவசியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்யம் சிறக்கும். நிரந்தரமான நோயாளியை மணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் சேவை வேண்டுமானால் செய்யலாம். தாம்பத்யம் நடத்த முடியாது.
பெண்கள் எந்த பொருளையும், அது அவர்களது கண்களையோ, மனதையோ கவர்ந்தால்தான் தேர்வு செய்வார்கள். உங்கள் கண்களுக்கும், மனதுக்கும் பிடித்தமான நபரைத் தேர்வு செய்யும்போது, அவர் மீது உங்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அத்தகைய ஈர்ப்பு ஏற்படும் அளவுக்கு அவர் தோற்றப்பொலிவு கொண்டவராகவும் இருக்கட்டும்.
அறுபதை, இருபது திருமணம் செய்துகொள்வது புரட்சிகரமானது என்று சிலர் கருதலாம். ஆனால், தாம்பத்யம் இனிப்பதற்கு உங்களது வாழ்க்கைத் துணை, ஏறக்குறைய சம வயது உடையவராக இருக்கவேண்டும். பெண், ஆணைவிட மூன்று முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது ஏற்புடையது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அது வாழ்க்கையில் சலிப்பை உண்டாக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை ஒழுக்கமானவராக, நல்ல குணங்களை கொண்டவராகவும் இருக்கவேண்டும்.
புதிய வாழ்க்கையில் அடியெடுத்துவைப்பவர்களுக்கு சமூக அந்தஸ்தும் மிக முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால், அந்த இடத்துக்கு ஏற்பவே உங்கள் சமூக அந்தஸ்து மதிப்பிடப்படும். பெண்கள் தங்கள் அந்தஸ்தை எல்லா விதத்திலும் உயர்த்திக்கொள்ள முன்வரவேண்டும்.
உங்கள் வாழ்க்கைத் துணை பொருளாதார விஷயத்தில் கவனம் கொண்டவராக இருக்கவேண்டும். உங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும்.
தம்பதியர் ஒருமித்த கருத்து கொண்டவர்களாக இருந்தால்தான் வாழ்க்கையானது எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கும். முரண்பாடுகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் சகித்து, சரிசெய்யக்கூடிய பக்குவம் இருவரிடத்திலும் இருக்கவேண்டும். ஆகவே உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் உங்களோடு பொருந்தி வரக்கூடியவரை திருமணம் செய்துகொள்வதே சிறந் தது. உங்களுக்கு அமையப்போகும் வாழ்க்கைத்துணை தோழமை உணர்வுகொண்டவராகவும் இருக்க வேண்டும். இருவரும் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது. பரிசுகள், புகழுரைகள், அன்பை வெளிப்படுத்துதல் போன்றவை, காதலையும் தோழமையையும் வளர்க்கும்.
அலுவலகப் பணிகளுக்கு எட்டுமணி நேரத்தை செலவிடுவதைப்போல், தம்பதியரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தினமும் குறைந்தது இரண்டு மணி நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும். அப்போதுதான் மனம் விட்டுப்பேசவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும். எல்லா சூழலிலும் உங்களோடு மனம்விட்டுப்பேசக்கூடிய துணை அமைய வேண்டும். அப்போதுதான் உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.






