என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பொதுவான சில அறிகுறிகளை வைத்து அந்த குடும்பத்தில் (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) மூன்றாவது நபரின் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
    கண்கள் உண்மையை உணர்த்திவிடும் தன்மை பெற்றவை. திருட்டு நட்புகளை புதைத்துவைத்தால் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். அதனால்தான் ஆத்மாவின் வாசலாக கண்களை வர்ணிக்கிறோம். கண்களை மனசாட்சியின் கண்ணாடி என்றும் சொல்கிறோம். வாழ்க்கைத் துணை, உங்கள் கண்களை நோக்கி பேச வேண்டும். முகத்துக்கு நேராக பார்த்து பதிலளிக்கவேண்டும். சிலர் குற்ற உணர்ச்சிகள் கண்களில் வெளிப்படாமல் இருக்க கூடுதலாக நடிக்கவும் செய்வார்கள். தவறான நட்புவைத்திருக்கும் ஆணோ, பெண்ணோ தன் இணையோடு வெளி இடங்களுக்கு வரும்போது, மற்றவர்களை அதிகம் கவர முயற்சிப்பார்கள். அதாவது தாங்கள்தான் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழும் பொருத்தமான ஜோடி என்று காட்டிக்கொள்வார்கள். பொது இடத்தில் இணையோடு சிரித்து சிரித்து பேசுவார்கள். சந்தோஷ சிலுமிஷ சேட்டைகள் வழியாகவும் அடுத்தவர்களை கவர்வார்கள்.

    குடும்ப நலனுக்கு ஆதாரமான மிகப்பெரிய செல்வம் அன்புதான். சேர்த்து வைத்திருக்கும் அன்பை எல்லாம் வீட்டில் தம்பதிகள் தங்களுக்குள் செலவிடும்போது அங்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் வீட்டிற்கு வெளியே இன்னொரு உறவை ஏற்படுத்திக்கொள்ளும்போது அந்த புதிய நபரிடம் அன்பை செலவிட்டுவிட்டு, காலியான நிலையில் அவர் வீட்டிற்கு வந்து சேர்வார். வீட்டில் இருக்கும் தனது இணையிடம் செலவிட அவரிடம் அன்பு இருக்காது. அதனால் வீட்டில் கோபதாபங்களும், எரிச்சலும், விரக்தியும் ஏற்படும்.

    திருமணத்திற்கு பின்பு ஆணோ, பெண்ணோ மூன்றாம் நபருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்போது `தப்பு செய்துவிட்டோமே' என்ற குற்ற உணர்ச்சியும், `நாம் செய்யும் தப்பு வெளியே தெரிந்துவிடுமோ' என்ற பயமும் ஏற்படும். இரண்டும் சேர்ந்து அவரிடமிருந்து நிம்மதியை பறித்துவிடும்.

    அதே நேரம் தனது திருட்டுத்தனம் வெளியே தெரியாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம்போட்டு, தனது இணையிடம் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றிக்கொண்டிருப்பார்கள். அதாவது, அளவுக்கு அதிகமாக தனது இணையிடம் அன்பு பாராட்டுவார்கள். மற்றவர்கள் பார்வையில் படும்படி அவர் மீது அளவு கடந்த அக்கறையை வெளிப்படுத்துவார்கள். `இப்படிப்பட்ட பெண்ணை நாம் சந்தேகப்படலாமா?' என்ற கேள்வி, அவருக்குள் எழும்நிலையை உருவாக்கிவிடுவார்கள்.

    இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் தவறான தொடர்பின் வெளிப்பாடு என்ற இறுதியான கருத்து ஓட்டத்திற்கு சென்றுவிடாதீர்கள். இப்படியும் இருக்கலாம் என்பதுதான் இதன் சாராம்சம். இருந்தால் என்ன செய்வது? அன்பால் திருத்திக்கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். பொறுமை, பக்குவத்தோடு செயல்பட்டால் அது முடியும். மாறாக, தங்கள் குடும்பத்திற்குள் மூன்றாம் நபரின் தலையீடு எந்த விதத்திலும் உருவாகிவிடாத அளவுக்கு தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
    கொரோனா வைரஸ் மட்டுமல்ல நோய்தொற்றுகளை பரப்பும் கிருமிகளிடம் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டியது முக்கியமானது.
    கொரோனா வைரஸ் மட்டுமல்ல நோய்தொற்றுகளை பரப்பும் கிருமிகளிடம் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டியது முக்கியமானது. வீட்டின் தரைப்பகுதி, வீட்டில் உள்ள பொருட்கள் சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் அதன் மூலம் வைரஸ் பரவக்கூடும். ஏனெனில் சுத்தமில்லாத பொருட்களின் மேற்பரப்புகள் தொற்றுநோய் கிருமிகளை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டை சாதாரணமாக சுத்தம் செய்வதற்கும், நோய் கிருமிகள் நெருங்கவிடாமல் சுத்தம் செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது.

    தினசரி சுத்தம் செய்வது என்பது அழுக்குகளை அகற்ற உதவும். கிருமிகளையும் வெளியேற்றும். ஆனால் நோய் பரப்பும் வைரஸ் போன்ற தொற்று கிருமிகளை கொல்வதற்கு பிரத்யேக ரசாயன கலவைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதை கவனத்தில் கொள்ளாமல் சாதாரணமாக சுத்தம் செய்தால் தரைப்பரப்பிலோ, மற்ற பகுதியிலோ பரவியிருக்கும் வைரஸ்கள் கைகளில் எளிதில் படிந்துவிடும். வீடுகளில் தரை உள்ளிட்ட பரப்புகளில் வைரஸ்கள் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதற்கு உறுதியான பதில் இல்லை. சில வகை வைரஸ்கள் ஓரிரு நாட்கள் உயிர்வாழும் தன்மை கொண்டவை.

    வீட்டு அறையின் வெப்பநிலை, ஈரப்பதம், மேற் பரப்பு ஆகியவற்றை பொறுத்து அதன் ஆயுட்காலம் அமையும். வீட்டை தொடர்ந்து சுத்தம் செய்யாவிட்டாலோ அல்லது எங்காவது ஈரப்பதமாக இருந்தாலோ அங்கு வைரஸ்கள் பரவி இருக்கலாம். யாராவது இருமும்போதோ, தும்மும்போதோ வாயை மறைக்காவிட்டால் அவர்களை சுற்றியுள்ள பொருட்கள் வைரசுக்கு இறையாகி பாதிப்பை ஏற்படுத்திவிடும். டி.வி. ரிமோட்டுகள், சமையலறை கபோர்டுகள், டேப்லெட்டுகள், அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்கள் போன்றவற்றில் வைரஸ்கள் உயிர்வாழலாம்.

    ஆதலால் எல்லா பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமானது. வீட்டின் தரைப்பகுதி மட்டுமின்றி சீலிங் பகுதிகள், மொட்டை மாடிகள், சமையல் அறையின் அடிப்பகுதிகள் போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். வழக்கமாக பயன்படுத்தும் கிருமி நாசினி களை உபயோகித்தாலே போதுமானது. அவை ஓரளவுக்கு வைரஸ்கள் வளர்வதை தடுத்துவிடும். இந்த சமயத்தில் ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட கிருமிநாசினிகளை பயன்படுத்துவதும் நல்லது. வீட்டை சுத்தம் செய்தபிறகு கைகளை நன்றாக கழுவிவிட வேண்டும். வாய், கண்கள், மூக்கு போன்ற பகுதியை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    தரையை சுத்தம் செய்யும்போது ஒரே திசையில் ‘மாப்’ கொண்டு துடைக்கக்கூடாது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அங்கும் இங்கும் வளைத்து ‘எஸ்’ வடிவத்தில் தரைப்பகுதியை துடைக்கலாம். இரண்டு முறை அவ்வாறு சுத்தம் செய்தால் எளிதில் அழுக்குகள் நீங்கிவிடும். துணியை கொண்டு சுத்தம் செய்தால் அதனை நன்றாக கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். அத்துடன் அந்த துணியை சுடுநீரில் அலசுவதும் நல்லது. வீட்டில் யாரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர் களது துணிகளை தனியாக துவையுங்கள். வீட்டில் எந்த வேலை செய்தாலும் உடனடியாக கைகளை கழுவுவதற்கு மறந்துவிடாதீர்கள்.
    கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வை சுரப்பிகள் துரிதமாக செயல்பட்டு தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும்.
    வெயிலில் சில நிமிடங்கள் பயணம் செய்தாலே சிலரது ஆடை வியர்வை மழையில் நனைந்துவிடும். வெயிலின் உக்கிரம் அதிகமாகும்போது வியர்வை வெளியேறுவதும் அதிகமாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வியர்வை பாதிப்புக்கு ஆளாகுவார்கள். உடலின் வெப்பநிலையை சீராக பராமரிப்பதில் வியர்வை சுரப்பிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

    கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வை சுரப்பிகள் துரிதமாக செயல்பட்டு தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். அப்போது வியர்வை சுரப்பிகளின் சரும துளைகள் மீது தூசு, அழுக்குகள் படிந்திருந்தால் வியர்க்குரு உண்டாகும். சிறுசிறு கொப்பங்களாகவும், சிவப்பு நிறத்தில் திட்டுக்களாகவும் வெளிப்படும். அதனை கவனிக்காமல் விட்டு விட்டால் சருமம் எரிச்சலுக்குள்ளாகும். படை, தேமல் போன்ற தோல் வியாதிகளும் தோன்றக்கூடும்.

    வியர்க்குரு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஆடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். காற்று சருமத்திற்குள் ஈடுருவும் விதமான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். பருத்தி, கைத்தறி போன்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியலாம். வெயிலில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினால் உடனே குளித்து விடுவது நல்லது. அதன் மூலம் உடலில் படிந்திருக்கும் வியர்வையை நீக்கிவிடலாம்.

    சருமத்தை ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்வதும் நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கோடை கால பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு வரலாம். அவ்வப்போது பழச்சாறும் பருகிவரலாம். தூங்கும் அறை காற்றோட்டம் கொண்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் அவசியமானது. அது உடலில் வியர்வை படியாமல் தூங்குவதற்கு வழிவகுக்கும்.

    வியர்வை பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தால் கற்றாழையின் சதைப்பகுதியை உடலில் தேய்த்து குளித்து வரலாம். சந்தனத்தை உடல் முழுவதும் தேய்த்தும் குளிக்கலாம். அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொள்ளலாம். அது கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பை போக்க உதவும். குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் திரிவதை தவிர்ப்பது நல்லது.
    வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. கொத்தமல்லி இலை நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
    தேவையான பொருட்கள்:

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    பூண்டு - 6 பற்கள்
    கொத்தமல்லி - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு…

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.

    பின் மிக்ஸியில் அந்த வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சின்ன வெங்காய கொத்தமல்லி சட்னி ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை.
    சங்கிராணி, மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்களை நாப்கின் டெலிவரி செய்யும் கவர்களில் அச்சிட்டும் வழங்கி வருகிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள்:

    *மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும்.

    *உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

    *டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். அது பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    *மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.

    *மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.

    *மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.

    *வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்திலும் தவறாமல் பின் தொடர வேண்டும். உடல் இயக்கம் செயல்பாட்டில் இல்லாமல் போனால் வலி அதிகரிக்கும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.

    * இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும்.

    * காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.

    *நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    *உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
    தேர்வை கண்டு பயப்படக்கூடாது. நாம், கடந்த ஓராண்டாக படித்த பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. சரி, தேர்வுக்கு முன் செய்ய வேண்டிய-வேண்டாத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
    தற்போது பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் தொடங்க உள்ளது.  தேர்வை கண்டு பயப்படக்கூடாது. நாம், கடந்த ஓராண்டாக படித்த பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. ஆகவே, பயப்படாமல் தேர்வு எழுதுங்கள். சரி, தேர்வுக்கு முன் செய்ய வேண்டிய-வேண்டாத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

    * ‘தேர்வு‘ என்கிற அச்சமின்றி நிதானமாக தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள். அடுத்த நாள் தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

    * படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால் தேர்வு முடியும் வரை பெற்றோரை அல்லது சகோதரர்களை உதவிக்கு அழைத்து கொள்ளலாம்.

    * இரவு 11 மணிக்கு மேல் விழித்திருந்து படித்தால், காலை தேர்வு மையத்தில் சோர்வை ஏற்படுத்தும். ஆகவே, வழக்கமாக தூங்க செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க சென்று விட வேண்டும். அதிகாலை சீக்கிரமாக எழுந்து படிக்கலாம்.

    * நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவே தயார் படுத்த வேண்டும். கூடுதலாக இன்னொரு பேனா வைத்திருப்பது நல்லது. பள்ளி அடையாள அட்டை, தேர்வு அடையாள அட்டை, பஸ் பயண அட்டை ஆகியவற்றையும் மறக்காமல் எடுத்து செல்லுதல் வேண்டும்.

    * எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிட வேண்டும். படிக்கும்போது சோம்பல் ஏற்பட்டால் சூடான பானம் அல்லது பழச்சாறு அருந்தலாம். கிரிக்கெட் விளையாடுவது, மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. படிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடத்தல் வேண்டும்.

    * படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பி கொண்டிருக்க கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி படித்தாலே போதுமானது. அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரத்தை செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, டி.வி.பார்ப்பது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.

    * குறிப்பாக, தேர்வு நன்றாக எழுதவில்லை என்று நண்பர்களிடம் புலம்பக்கூடாது. அடுத்த தேர்வை சிறப்பாக எழுவது பற்றி சிந்திக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் பெற்றோருடன் பயனுள்ள வகையில் ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா செல்லலாம்.
    காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் சரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று இங்கே காண்போம்.
    கண் குறைபாட்டிற்காக கண்ணாடி அணிவதற்கு பதிலாக பெரும்பாலானவர்கள் தற்போது காண்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். ஒரு சிலர் அழகுக்காகவும் அணிகின்றனர். கண்ணாடி அணிவதை விட இதில் சில பயன்கள் இருக்கின்றன. அதேநேரம் காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் சரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று இங்கே காண்போம்.

    தரமான காண்டாக்ட் லென்ஸ்களை உபயோகப்படுத்துவது மிகவும் முக்கியமானது. நம்பகமாக பிராண்டுகளில் இருந்து காண்டாக்ட் லென்சை வாங்க வேண்டும். விலை மலிவாக இருக்கிறது என்று தரம் குறைந்த லென்சுகள் வாங்கி உபயோகிக்ககூடாது. இது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பயணத்தின் போது சிரமத்தை ஏற்படுத்தும்.

    பயணம் செல்வதற்கு முன் கண் மருத்துவரை அணுகி காண்டாக்ட் லென்ஸ் அணியலாமா என்பது குறித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    பயணம் மேற்கொள்கையில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்த தேவையான திரவங்களையும், மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும்.

    வறண்ட காற்று நிலவும் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களென்றால் கண்கள் வறண்டு போகாமல் காக்கும் மருந்துகளையும் கையோடு வைத்துக்கொள்வது அவசியம்.

    பயணம் மேற்கொள்ளும் போது எப்போதும் கூடுதலாக ஒரு ஜோடி காண்டாக்ட் லென்ஸ் எடுத்து செல்வது சிறந்தது. மேலும் மூக்கு கண்ணாடியையும் தவறாமல் எடுத்துசெல்ல வேண்டும். விடுமுறையை கழிப்பதற்காக செல்லும் போது நீந்துவதற்கு திட்டமிட்டிருந்தீர்கள் என்றால் தரமான கண்ணாடிகளை உபயோகிப்பது நல்லது. இதனால் நீந்தும் போது கண்கள் வறண்டு போவது தடுக்கப்படும்.

    காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கண்கள் சிலநேரம் சூரிய ஒளியால் பாதிப்பை உணரக்கூடும். ஆகையால் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கும் வகையிலான கண்ணாடிகள் அணிவது அவசியம்.
    பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.
    பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.

    இன்றைய காலத்தில் தாமதமாக குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். நிறைய பெண்களுக்கு இதை பயன்படுத்திய பிறகு கர்ப்பம் தரிக்க முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணம் எழுகிறது என்று கூறியுள்ளனர்.

    உண்மையில் பல வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய கருத்தடை சாதனங்கள் (IUD கள்) சில நேரங்களில் இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்தி கருவுறாமைக்கு காரணமாகிறது. ஆனால் தற்போதுள்ள கருத்தடை மருந்துகள் அப்படி இருப்பதில்லை.

    நீங்கள் தற்போது மாத்திரை, கருத்தடை சாதனங்கள் என்று எதை பயன்படுத்தினாலும் தற்காலிகமாக கருவுறுதலை தடுப்பதோடு மீண்டும் கருவுறுதலை நிலைநிறுத்த உதவுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பொதுவாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், முதன் 3-4 மாதங்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சியானது ஏற்படும். ஆனால் 4 மாதங்களுக்கு பின்னரும் இந்த நிலை நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    இருப்பினும் உங்க உடல் இதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். எந்தவொரு ஹார்மோன் சிகிச்சையையும் எடுப்பதற்கு முன் உங்க மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
    வேலைக்கு செல்லும் தம்பதிகள் காதலை காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் கனிவாகப் பேச நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அதற்கென்று தினமும் நேரத்தை ஒதுக்கிக் கொண்டால் காதலை காப்பாற்றி, அன்பை பெருக்கலாம்.
    காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்களில் பலர் கணவரிடம் ‘நீங்கள் முன்பு போன்று என்னிடம் அன்பு காட்டுவதில்லை’ என்று குறைபடுகிறார்கள். ‘திருமணத்திற்கு முன்பு, தனிமையில் இருந்த போது ஆசை மொழி பேசி, கனிவு காட்டி காதலை வளர்த்துவிட்டு, திருமண பந்தத்தில் இணைந்து வாழ்க்கையை தொடங்கிய பின்பு, அன்பாய் இரண்டொரு வார்த்தைகள்கூட பேசிக் கொள்ளாமல், கடமைக்குப் பேசி காலத்தை ஓட்டுகிறீர்கள்’ என்றும் கவலையுடன் சொல்கிறார்கள்.

    ‘ மனைவியிடம் கனிவாய்ப் பேச ஒதுக்கும் சிலதுளி நேரமே காதலை வாழ்க்கை முழுவதும் ஆனந்த அலையாக அடித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது’ என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

    இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘வேலைக்கு செல்லும் தம்பதிகள் காதலை காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் கனிவாகப் பேச நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அதற்கென்று தினமும் நேரத்தை ஒதுக்கிக் கொண்டால் காதலை காப்பாற்றி, அன்பை பெருக்கலாம்’ என்று குறிப்பிடுகிறது.

    தினமும் ஆளுக்கொரு பக்கமாய் வேலைக்கு செல்லும் தம்பதிகள் தனிமையில் சந்திக்கும் நேரத்தின் அளவு குறைந்துவிட்டது. காதலிக்கும்போது தனிமையில் சந்திக்க ஏங்கிக்கிடந்த அவர்கள், கல்யாணத்திற்கு பிறகு அந்த தனிமை தருகின்ற சிலிர்ப்பை தவறவிட்டு விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கான தனிமையும், நெருக்கமும் குறைந்துபோய்விட்டது. அப்படி குறைந்துபோய்விட்ட நெருக்கத்தை இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தம்பதிகள் பெருக்கிக்கொள்ளவேண்டும்.

    இப்போது கிடைத்திருக்கும் தனிமையை பயன்படுத்தி கனிவாக, இதமாக பேசவேண்டும். பேச்சும் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். வருகிற வார்த்தைகள் இருவருக்கும் இதயத்தில் இருந்து வரவேண்டும். அத்தகைய பேச்சுக்கள் எத்தகைய விரிசலையும் சரிசெய்திடும்.

    இணையை ஒருவருக்கொருவர் ஊக்குவித் தால், காதல் மென்மேலும் வளரும். அன்றாட நிகழ்வுகளில் கூட துணையின் திறமையை பாராட்டத் தவறக்கூடாது. ‘இன்று நீ வைத்த குழம்பு அபார சுவை’ என்று கணவரும், ‘நீங்கள் கொடுத்த முத்தத்திற்கு ஈடாக எதுவுமில்லை’ என்று மனைவியும் பாராட்டிக் கொண்டால் பரஸ்பரம் அன்பு பெருகும்.

    இன்றைய வாழ்க்கையில் கவலைகள் உருவாகுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம். கவலை மற்றும் சோர்வை போக்கும் சக்தி, பாராட்டுக்கு இருக்கிறது. ஜோடிகள் ஒருவருக்கொருவர் அர்த்தமுள்ள வகையில் பாராட்டிக் கொள்ளும்போது அவர்கள் மனதில் இருக்கும் கவலை மறந்துவிடும். புத்துணர்ச்சி கிடைக்கும்.

    அதுபோல் நன்றி கூறுதலும் மிக முக்கியமானது. நன்றியை வீட்டுக்கு வெளியே உள்ளவர் களுக்குத்தான் கூறவேண்டும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அல்ல! நல்ல பழக்கங்கள் எதையும் வீட்டிற்குள் இருந்துதான் தொடங்கவேண்டும். தம்பதிகளும் தங்களுக்குள் நன்றி தெரிவிக்க முன்வரவேண்டும். நன்றி அன்பை அதிகரிக்கும்.

    குடும்ப உறவை பேணுவதற்காக நீங்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. குரங்கு அவதாரம் எடுத்து குட்டிக்கரணம் போட்டு, வேடிக்கை காட்டி குடும்பத்தினரை சந்தோஷப்படுத்த வேண்டியதுமில்லை. ‘வாரம் ஒரு முறை இல்லற உறவு பேணி வந்தாலே போதும்’ என்கிறது ஆய்வு.

    30 ஆயிரம் தம்பதிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘தாம்பத்ய உறவு என்பது மிகவும் இன்பம் அளிக்கக்கூடியது. உறவு இணக்கமாக உள்ளது என்பதை காட்டுவதே தம்பதியரின் சேர்க்கை தான்’ என்று குறிப்பிடுகிறது. அதற்காக தம்பதிகள் தினமும் உறவு கொள்ள வேண்டும் என்பதில்லை, குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை உறவு பேணும் தம்பதிகள் மிக்க மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் என்று விளக்குகிறது, அந்த ஆய்வு. மற்ற நேரங் களில் அன்பான தழுவுதல், ஸ்பரிசங்கள், முத்தங்களே போதும் என்கிறது.

    ‘மனைவி தனது ஆசையை வெளிப் டுத்துவது தவறு என்ற மனப்பான்மை நம் சமூகத்தில் உள்ளது. ‘டிஜிட்டல்’ யுகமான இதில் உணர்வுகளை வெளிப்படுத்த, போராடிக் கொண்டிருக்கவோ, அழுத்திச் சொல்ல வேண்டிய அவசியமோ இல்லை. ஒற்றை வார்த்தை எஸ்.எம்.எஸ்., ஒரே ஒரு கவர்ச்சிகரமான சங்கேத வார்த்தை கூறினாலே தம்பதியர் உணர்வை பரிமாறிக் கொண்டு, அன்பை வளர்த்து ஆனந்தம் அடையலாம்.

    இதை இன்றைய பெண்களும் நன்றாகவே புரிந்திருக்கிறார்கள்.

    “தாம்பத்யம்தான் எங்களை கட்டிப்போட்டிருக்கும் காதல் கயிறு. வாழ்க்கையில் எவ்வளவு மனஅழுத்தங்கள், கஷ்டங்கள் தொடர்ந்தாலும் இணையும் நேரத்தில் அவை காணாமல் போகும். எனவே நாங்கள் உறவைப் பேணுவதன் மூலமாகவே எங்கள் வாழ்க்கையையும் பேணிக் கொள்கிறோம். தம்பதிக்கு தாம்பத்யம்தான் அடிப்படை” என்று மகிழ்ச்சியாக சொல்கிறார், 40 வயது சுவேதா!
    இந்த டீயை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும்.
    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி விதை - 100 கிராம்,
    ஏலக்காய் - 2,
    பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்,
    பால் - அரை டம்ளர்.

    செய்முறை :

    தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடித்து கொள்ளவும்.

    பாலை கொதிக்க வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதித்து வரும் போது ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி பால், பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துப் பருகவும்.

    இந்த டீயை பால் ஊற்றாமல் குடித்தால் மிகவும் நல்லது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன.
    முழங்கை, கால்களின் மூட்டு பகுதிகளில் தோல் பல மடிப்புகளுடன் தடிமனாக இருக்கும். மற்ற பகுதிகளைவிட சருமம் வறண்டும், கடினமானதாகவும் காணப்படும். அந்த பகுதியில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைந்திருப்பதே அதற்கு காரணம். எண்ணெய் பசைத்தன்மையை தக்க வைத்துக்கொள்வது அவசியம். போதிய கவனம் செலுத்தாவிட்டால் மூட்டு பகுதி கருமையாக மாறிவிடும். இறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன. மூட்டு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் வழிமுறைகள்:

    எலுமிச்சை அதிக ஆன்டிஆக்சிடென்டுகளை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சார்ந்தது. சருமத்தை பிரகாசிக்க செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும். சருமத்தில் உள்ள இருண்ட செல் அடுக்குகளை போக்கவும் உதவும். எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதனை மூட்டு பகுதியில் வைத்து அழுத்தி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு சாதாரண நீரில் மூட்டு பகுதியை கழுவிவிடலாம். உலர்ந்ததும் ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷனை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து மூட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்துவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

    சரும நோய்களை குணப்படுத்து வதற்கு தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் வைட்டமின் ஈ, சேதமடைந்த சருமத்துக்குள் ஊடுருவி விரைவாக குணமாகுவதற்கு துணைபுரியும். தேங்காய் எண்ணெய்யை மூட்டு பகுதியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து கருப்பு படிந்திருக்கும் பகுதியில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். உலர்ந்ததும் சாதாரண நீரில் கழுவிவிடலாம்.

    தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலமும் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுவதால் சரும பராமரிப்பு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனை கருமை படிந்த மூட்டுவுக்கும் உபயோகிக்கலாம். தயிருடன் வினிகரை கலந்து நன்றாக குழைத்து மூட்டு பகுதியில் தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவிவிடலாம். அதன் பிறகு ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷனை தடவிவிடலாம். தயிருடன் கடலை மாவை குழைத்தும் தடவி வரலாம்.

    இறந்த செல் அடுக்குகளை நீக்கி புதிய செல் அடுக்குகளை உருவாக்குவதில் சர்க்கரைக்கும் பங்கு இருக்கிறது. சருமத்திற்கு வறட்சி ஏற்படாமல் ஈரப்பதத்தன்மையை தக்கவைப்பதற்கும் உதவுகிறது. சர்க்கரையுடன் சம அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து மூட்டு பகுதியில் தடவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். இறந்த செல் அடுக்குகளை மெதுவாக துடைத்து அகற்றவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மூட்டு பகுதியில் இருக்கும் கருமை மறைந்துவிடும்.
    குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க சில வழிமுறைகளை பெற்றோர் அவர்களது சொல்லித்தரலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கொரோனா வைரஸால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டதால் குழந்தைகள் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறார்கள். எவ்வளவு நேரம் தான். டிவி, போனை நோட்டி கொண்டிருப்பார்கள். குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க சில வழிமுறைகளை பெற்றோர் அவர்களது சொல்லித்தரலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * குழந்தைகளை காலையில் அல்லது மாலையில் அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லலாம். அப்போது அவற்றின் பலன்களைக் கூறலாம்.

    * ஆன்லைன் விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் இணைந்து விளையாடலாம்.

    * காய்கறிகளை கழுவுதல், வேக வைத்த உருளைக்கிழங்கை உரித்தல், வெங்காயம் உரித்தல் என சின்னச் சின்ன வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தலாம்.
     
    * தேங்காய் ஓடு, இளநீர் காலி தேங்காயில் சிவப்பு மண்ணை நிரப்பி, கொத்தமல்லி உட்பட எளிதில் வளரும் தானியங்களை தெளித்து தினமும் தண்ணீர் தெளித்து வரச்செய்யலாம். அவை துளிர் வருவதை பார்க்கும் போது அவர்களுக்கு மேலும் ஆர்வம் ஏற்படும். அதன் பிறகு பெரிய தொட்டியில் மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை வளர்க்க சொல்லித் தரலாம்.

    * வீட்டை சுத்தப்படுத்த கற்றுத்தரலாம்.

    * ‘போர்’ என வரும் குழந்தைகளை விரட்டாமல் புதிதாக ஏதாவது ஐடியா கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அப்படி கொடுக்கும்போது குழந்தை அதனைப் பிடித்துக்கொண்டு ஆர்வமாய் விளையாடுவர்.

    * புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட இதை விட சிறந்த நேரம் கிடையாது. அதனால் குழந்தைகளை கதை புத்தகங்களை தமிழில் வாங்கிக் கொடுத்து படிக்க பழகப்படுத்தலாம்.

    * பணம், காசு கொடுத்து அதில் அவர்களுக்கு எளிதாக கணக்கு சொல்லித் தரலாம்.
    ×