என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
    மாதா வைஷ்ணொ தேவி , மாதா ராணி , வைஷ்ணவி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் மிகவும் புனிதமான இந்து சமய பெண் தெய்வமாவார். வைஷ்ணொ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும், இந்த கோவில் இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணொ தேவி மலையில் அமைந்துள்ளது.

    கோவில்

    வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.45 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

    இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணொ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஜம்மு விமானநிலையமாகும். இங்கு அதிகமான விமான போக்குவரத்து உள்ளது. அனைத்து உள்ளூர் விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் ஜம்மு விமான நிலையத்திற்கு சேவைகள் வழங்கி வருகின்றன.

    புராண வரலாறு

    திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமி சுமையாக இருந்தபோது,முப்பெரும் தேவியரும் ரேமா (லட்சுமி), உமா (காளி) மற்றும் வாணி (சரஸ்வதி) ஆகிய வடிவம் கொண்டு வைஷ்ணொ தேவியை உருவாக்கினர்.ஒளிப்பிழம்பு வடிவிலான தேவி திரிகூட மலை உச்சியில் உள்ள குகையில் தோன்றினார். பூமிக்கு சுமையாக இருந்த தீமை மற்றும் பேய்களை அழித்தபின், வைஷ்ணொ தேவி பூமியில் வசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார், இதனால் அவள் மனித அவதாரம் எடுக்க முடிவு செய்தாள்.

    அதன்படி இந்தியாவின் தெற்கு பாகத்தில் நீண்ட நாட்களாக குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்த ரத்னாகர்சாகர்-சம்ரிதி தேவி தம்பதியர் வீட்டில் அன்னை வைஷ்ணொ தேவி பிறந்தார்.குழந்தைப்பருவத்தில் அன்னை வைஷ்ணொ தேவி, திரிகுடா என அழைக்கப்பெற்றார்.விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர் அவரது குழந்தை பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என நாமம் சூட்டினார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார்.

    திரிகுடா ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது. திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். ராமர் அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார்.

    இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார்.அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் 'நவராத்திரி'யின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.

    ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட ராமர் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார். பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.மேலும் திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணொ தேவியாக மாறுவார் மற்றும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணொ தேவியின் புகழைப்பாடுவார்கள் எனவும் வரமளித்தார்.

    அமைவிடம்

    வைஷ்ணொ தேவி மலைக்கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ள, கட்ரா எனும் நகரத்திற்கு அருகில் 13 கி. மீ., தொலைவில், இமயமலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமயமலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகைக்கோயில், முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் உறைவிடமாகும்.

    ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது.இந்த குகையின் முடிவில் சூலத்தின் மூன்று முனைகள் போல மூன்று பாறைகள் சுயம்புவாக உள்ளது அது முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் அருவ வடிவமாகும். பிந்தி என அழைக்கப்படும் அந்த வடிவங்களே மாதா ராணியாக வணங்கப்படுகிறது.

    பக்தர்களுக்கான சேவைகள்

    பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவை மலையில் நடந்து பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஒன்றை கிலோ மீட்டர் தொலைவிற்கு இலவச கழிப்பிடங்களும், ஓய்வு எடுக்க மண்டபங்களும், தாகம், பசி நீக்கிக் கொள்ள தேனீர் கடைகளும், சிற்றுண்டிச்சாலைகளும் உள்ளது. மலைக்கோயில் பாதையில் இரவுநேரப் பயணித்தின் போது உறங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் மூன்று இடங்களில் வசதி செய்துள்ளனர் கோயில் நிர்வாகம்.

    மேலும் உயரமான மலை என்பதால் பிராணவாயு குறைவாக இருக்கும். எனவே நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கோயில் நிர்வாகம் ஆங்காங்கே மருத்துவர்களும், மருத்துவ வசதிகளுடன் கூடிய முதலுதவி மையங்கள் அமைத்துள்ளனர். மலையில் நடக்கவும், குதிரைகள் மீது ஏறி பயணிக்க முடியாத பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் வைஷ்ணவ தேவி மலைகோயிலுக்கு செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்துள்ளது.
    படுக்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது. அந்த வகையில் எந்த திசை பக்கம் தலை வைத்து படுத்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
    * கிழக்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் கீர்த்தியும், புகழும் கூடும், ஆரோக்கியம் சீராகும்.

    * மேற்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் கனவுகள் நனவாகும்.

    * தெற்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் தெய்வீக சிந்தனை உருவாகும், நோய் அகலும்.

    * வடக்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் நோய் அதிகரிக்கும். சந்தோஷம் குறையும். அதற்குக் காரணம், காந்த சக்தி நம் உடலில் மோதும் பொழுது பிராண சக்தி விலகி விடும். இதனால் மூளை இயக்கத்தில் தொல்லை ஏற்படும். எனவே வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது.
    இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
    நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்று திருமங்கலக்குடி பிராணநாத சுவாமி திருக்கோவில். இது கும்பகோணம் அருகில் உள்ளது.

    தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

    இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
    தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அமைந்துள்ள வேதநாராயண பெருமாள் என்று அழைக்கப்படும் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ராபத்து உற்வசத்தின் முக்கிய நிகழ்ச்சியான கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து கோவிலுக்குள்ளேயே சாமி புறப்பாடு நடந்தது.

    பின்னர் கொடி மரத்தடியில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.
    தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.

    ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை.

    குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

    மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.

    சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

    பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.

    கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும். ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

    பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு அடைந்ததை தொடர்ந்து நேற்று சாற்றுமுறை வைபவம் நடைபெற்றது.
    மதுரை நகரில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி சிறப்புடன் நடந்து வந்தது. அனைத்து வைணவ திருத்தலங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு காலையில் நடைபெறும்.

    ஆனால் இக்கோவிலில் மட்டும் மாலையில் நடத்தப்படுவது சிறப்புமிக்கதாகும். அதன்படி வைகுண்ட ஏகாதசியான 13-ம் தேதி பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளுகிறார்.

    கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு அடைந்ததை தொடர்ந்து நேற்று சாற்றுமுறை வைபவம் நடைபெற்றது. இதையொட்டி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி சாற்றுமுறை வைபவம் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    கோவை, திருப்பூர் பகுதியில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பழனி கிரிவீதிகளில் வலம் வந்தனர். பின்னர் அவர்கள் பாதவிநாயகர் கோவில் முன்பு தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி சென்றனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி, உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் யாவும் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. அதேவேளையில் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், கோவில் நுழைவு வாயிலில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருந்தாலும் பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வந்து பாதவிநாயகர் கோவில் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். நேற்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை இருந்தது.

    குறிப்பாக கோவை, திருப்பூர் பகுதியில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பழனி கிரிவீதிகளில் வலம் வந்தனர். பின்னர் அவர்கள் பாதவிநாயகர் கோவில் முன்பு தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி சென்றனர்.

    தொடர்ந்து 3 நாள் விதிக்கப்பட்ட தரிசன தடை நேற்றுடன் முடிந்ததால், இன்று (திங்கட்கிழமை) பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் அடிவார பகுதியில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று முழுஊரடங்கு என்பதால் பழனி பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. பரபரப்பாக காணப்படும் பழனி பஸ் நிலையம், அடிவாரம் ரோடு, திண்டுக்கல் ரோடு, ஆர்.எப்.ரோடு, தாராபுரம் ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்.. சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும், நலமோடும் வாழ்வோம்!!!
    ஓம் கால பைரவனே போற்றி
    ஓம் லோகவல்லபனே போற்றி
    ஓம் காளிநாயகனே போற்றி
    ஓம் காளிப்பிரியனே போற்றி
    ஓம் வெள்ளி உடையோனே போற்றி
    ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
    ஓம் தீர்த்தராசனே போற்றி
    ஓம் புனிதமானவனே போற்றி
    ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
    ஓம் தனம் தருபவனே போற்றி 10

    ஓம் நதிகளின் புண்ணியனே போற்றி
    ஓம் புகழ் உடையோரே போற்றி
    ஓம் செல்வமே போற்றி
    ஓம் பவ்யப்ரியனே போற்றி
    ஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி
    ஓம் பரமாத்மா ஆனவனே போற்றி
    ஓம் மல்லப்ரியனே போற்றி
    ஓம் மனுவே போற்றி
    ஓம் ரம்ய மூர்த்தியே போற்றி
    ஓம் வனங்களின் தலைவனே போற்றி 20

    ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி
    ஓம் சதியின் கேசவனே போற்றி
    ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
    ஓம் எங்கள் நாயகனே போற்றி
    ஓம் வீரனே போற்றி
    ஓம் காளிநாதனே போற்றி
    ஓம் சிறந்த புருசனானவனே போற்றி
    ஓம் யோகத்தின் தலைவனே போற்றி
    ஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி
    ஓம் நாகராசனே போற்றி 30

    ஓம் தினகரனே போற்றி
    ஓம் தயையே போற்றி
    ஓம் தீரனே போற்றி
    ஓம் சர்வமும் ஆனவனே போற்றி
    ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி
    ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி
    ஓம் பூதவிநாசகனே போற்றி
    ஓம் வடிவே போற்றி
    ஓம் மந்தரனே போற்றி
    ஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி 40

    ஓம் அமரப்பிரபுவே போற்றி
    ஓம் விருப்பங்களின் தலைவா போற்றி
    ஓம் பிரஜாபதியே போற்றி
    ஓம் சிந்துநதித் தலைவனே போற்றி
    ஓம் சூர்யபதியே போற்றி
    ஓம் ஆராதிப்பவனே போற்றி
    ஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி
    ஓம் தைத்யேஸ்வரனே போற்றி
    ஓம் காளிகாதனே போற்றி
    ஓம் கோரநாதனே போற்றி 50

    ஓம் தலைச்சடை உடையோய் போற்றி
    ஓம் இயக்கத்தின் காரணனே போற்றி
    ஓம் மகா தபசியே போற்றி
    ஓம் ஒளிச்சுடரே போற்றி
    ஓம் தயை உடையாய் போற்றி
    ஓம் தனேஸ்வரனே போற்றி
    ஓம் நதிகளின் தலைவனே போற்றி
    ஓம் அன்பின் இருப்பிடமே போற்றி
    ஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி
    ஓம் பூதபதியே போற்றி 60

    ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
    ஓம் அறிவின் வடிவே போற்றி
    ஓம் மல்லகாய போற்றி
    ஓம் மனத்துக்கரசே போற்றி
    ஓம் மகா வீர்யனே போற்றி
    ஓம் வனப்பிரபுவே போற்றி
    ஓம் சிந்தையே போற்றி
    ஓம் ரவிக்கதிரே போற்றி
    ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
    ஓம் பிரபாகரனே போற்றி 70

    ஓம் திவாகரனே போற்றி
    ஓம் காளி நந்தவர்ணனே போற்றி
    ஓம் கனாந்தகனே போற்றி
    ஓம் தரணிக்கு அதிபதியே போற்றி
    ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி
    ஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி
    ஓம் சூரியனே போற்றி
    ஓம் செல்வக் கோடானே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் மந்திரவடிவானவனே போற்றி 80

    ஓம் பரம் பொருளே போற்றி
    ஓம் பலம் உடையவனே போற்றி
    ஓம் பூத நாயகனே போற்றி
    ஓம் மேதாப் பிரியனே போற்றி
    ஓம் மந்திரத் தலைவனே போற்றி
    ஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி
    ஓம் யாமம் ஆனவனே போற்றி
    ஓம் இலக்குமீதரனே போற்றி
    ஓம் உக்கிரமானவனே போற்றி
    ஓம் சுராதீசனே போற்றி 90

    ஓம் சேவாப் பிரியனே போற்றி
    ஓம் சாகரனே போற்றி
    ஓம் நாதப்பிரியனே போற்றி
    ஓம் வீரவந்தியனே போற்றி
    ஓம் காளியின் தலைவனே போற்றி
    ஓம் கனமூர்த்தியே போற்றி
    ஓம் சனகனே போற்றி
    ஓம் யாக புருசனே போற்றி
    ஓம் திடமானவனே போற்றி
    ஓம் தீட்சாகரனே போற்றி 100

    ஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி
    ஓம் தீரத்தலைவனே போற்றி
    ஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி
    ஓம் பார்வதி நாதனே போற்றி
    ஓம் பலபத்ரனே போற்றி
    ஓம் பூதேசனே போற்றி
    ஓம் மோகனனே போற்றி
    ஓம் மந்திரமே போற்றி
    ஓம் கைமாலை அணிந்தவனே போற்றி
    ஓம் சகலமும் அருள்பவனே போற்றி 110

    ஓம் சப்த வடிவமே போற்றி
    ஓம் கற்பகத் தருவே போற்றி
    ஓம் குதிரை தலைவனே போற்றி
    ஓம் சேவிக்கப்படுபவனே போற்றி
    ஓம் இனிய பேச்சுடையவனே போற்றி
    ஓம் பீதி அகற்றுபவனே போற்றி
    ஓம் தேவ முதல்வனே போற்றி
    ஓம் காளியின் தனமே போற்றி
    ஓம் என்றும் இருப்பவனே போற்றி
    ஓம் கருணைக்கடலே போற்றி 120

    ஓம் காப்பவனே போற்றி
    ஓம் காரியத்தின் தலைவனே போற்றி
    ஓம் திவாகரனே போற்றி
    ஓம் அறக்கடவுளே போற்றி
    ஓம் பூமிக்கரசே போற்றி
    ஓம் காசிக்குத் தலைவனே போற்றி
    ஓம் பார்வதீ ரமணனே போற்றி
    ஓம் காலதேசம் கடந்தவனே போற்றி
    ஓம் முக்குண உருவே போற்றி
    ஓம் மூவுலகிற்கரசே போற்றி 130

    ஓம் மேதாவியே போற்றி
    ஓம் மாலதீ நாயகா போற்றி
    ஓம் உமை ஒரு பாகமே போற்றி
    ஓம் செல்வ நாயகனே போற்றி
    ஓம் சாதனனே போற்றி
    ஓம் இனிமையின் உருவே போற்றி
    ஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி
    ஓம் அகர முதலானவனே போற்றி
    ஓம் பைரவனே போற்றி
    ஓம் பலிப்ரியனே போற்றி 140

    ஓம் காளி இதய ஞானமே போற்றி
    ஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி
    ஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி
    ஓம் காப்புடையாய் போற்றி
    ஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி
    ஓம் பகலோனே போற்றி
    ஓம் செல்வம் அருள்பவனே போற்றி
    ஓம் தீரருக்கு இறைவனே போற்றி
    ஓம் நதீஸ்வரனே போற்றி
    ஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி 150

    ஓம் பலம் தருபவனே போற்றி
    ஓம் ஆதியானவனே போற்றி
    ஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி
    ஓம் மந்தர நாயகனே போற்றி
    ஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி
    ஓம் மாயை ஆனவனே போற்றி
    ஓம் நாவின் சுவையே போற்றி
    ஓம் கோரியது கொடுப்பவனே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
    ஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி 160

    ஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி
    ஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி
    ஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி
    ஓம் நான்முகன் தலைவனே போற்றி
    ஓம் சராசரம் உடையவனே போற்றி
    ஓம் மக்களின் தலைவனே போற்றி
    ஓம் இதயநாதனே போற்றி
    ஓம் தாவரம் ஆனவனே போற்றி
    ஓம் தவத் தெய்வமே போற்றி
    ஓம் செல்வ ஒளியோனே போற்றி 170

    ஓம் பூமிநாதனே போற்றி
    ஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி
    ஓம் தூயவனே போற்றி
    ஓம் வணக்கத்திற்குரியவனே போற்றி
    ஓம் ஒலியின் ஓசையே போற்றி
    ஓம் உயர்வுகள் தருபவனே போற்றி
    ஓம் மானம் உடையாய் போற்றி
    ஓம் கோள்களின் தலைவா போற்றி
    ஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி
    ஓம் மேன்மைக்குரியவனே போற்றி 180

    ஓம் திறமைசாலியே போற்றி
    ஓம் காங்கேயன் தந்தையே போற்றி
    ஓம் நிறைவினைத் தருபவனே போற்றி
    ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
    ஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி
    ஓம் அற்புத உருவே போற்றி
    ஓம் வழி நடத்துபவனே போற்றி
    ஓம் அழகிய வடிவானவனே போற்றி
    ஓம் ஆனந்தச் சிலையே போற்றி
    ஓம் அடியாந்த காவலனே போற்றி 190

    ஓம் மகா நாதனே போற்றி
    ஓம் யமி தேவனே போற்றி
    ஓம் ஓங்கியவனே போற்றி
    ஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி
    ஓம் கங்காதரனே போற்றி
    ஓம் சதி நாதனே போற்றி
    ஓம் நிம்மதி அருள்பவனே போற்றி
    ஓம் உன்னத தெய்வமே போற்றி
    ஓம் காளிகா ரமணனே போற்றி
    ஓம் கண முதல்வனே போற்றி 200

    ஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி
    ஓம் தல சோதியே போற்றி
    ஓம் செல்வ ராசனே போற்றி
    ஓம் உலக நாதனே போற்றி
    ஓம் பாண்டவனே போற்றி
    ஓம் பூதங்கள் உடையவனே போற்றி
    ஓம் தக்கன தருபவனே போற்றி
    ஓம் தருமத்தின் தலைவனே போற்றி
    ஓம் மகேசனே போற்றி
    ஓம் மனம் அருள்பவனே போற்றி 210

    ஓம் மானிடர்த்தலைவனே போற்றி
    ஓம் வெற்றியின் ஈசனே போற்றி
    ஓம் பாராட்டுக்குரியவனே போற்றி
    ஓம் திவ்யம் ஆனவனே போற்றி
    ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
    ஓம் கொற்றக் குடையோனே போற்றி
    ஓம் நீதி பூசிப்பவனே போற்றி
    ஓம் வீரத்தலைவனே போற்றி
    ஓம் நாகர் இறைவனே போற்றி
    ஓம் உலகினைக் காப்பவனே போற்றி 220

    ஓம் மோகமானவனே போற்றி
    ஓம் மந்தரனே போற்றி
    ஓம் மல்லனே போற்றி
    ஓம் உலகைக் காப்பவனே போற்றி
    ஓம் உயிரினும் உயிரே போற்றி
    ஓம் வன வடிவானவனே போற்றி
    ஓம் கருணையின் கடலே போற்றி
    ஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி
    ஓம் உடமைகள் தருபவனே போற்றி
    ஓம் தேவர்களின் தலைவனே போற்றி 230

    ஓம் குரூரனே போற்றி
    ஓம் ஆனந்தம் தருபவனே போற்றி
    ஓம் ஆசைகள் அற்றவனே போற்றி
    ஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி
    ஓம் வில்லிபுத்தூரானே போற்றி
    ஓம் தாமிரமே போற்றி
    ஓம் குணமெனும் குன்றே போற்றி
    ஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி
    ஓம் செல்வம் உடையாய் போற்றி
    ஓம் விண்ணவர் தலைவனே போற்றி 240

    ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
    ஓம் நாகராசனே போற்றி
    ஓம் பீம சேனனே போற்றி
    ஓம் சற்குணனே போற்றி
    ஓம் அனைத்துமானவனே போற்றி
    ஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி
    ஓம் கண்களின் ஒளியே போற்றி
    ஓம் கனக மாமணியே போற்றி
    ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
    ஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி 250

    ஓம் செல்வத்தின் நிதியே போற்றி
    ஓம் தத்துவத் தலைவனே போற்றி
    ஓம் குருநாதனே போற்றி
    ஓம் ஈசானனே போற்றி
    ஓம் காமத்தை வென்றவனே போற்றி
    ஓம் பழங்களை ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றி அடைந்தவனே போற்றி
    ஓம் வெற்றியின் காரணனே போற்றி
    ஓம் ஓங்கார உருவே போற்றி
    ஓம் மனத்தை வென்றவனே போற்றி 260

    ஓம் பூவடிவானவனே போற்றி
    ஓம் ஸ்ரீமானே போற்றி
    ஓம் தலைவனே போற்றி
    ஓம் முதலோனே போற்றி
    ஓம் நாகத் தலைவனே போற்றி
    ஓம் பயங்கர வடிவானவனே போற்றி
    ஓம் மஞ்சலாயனே போற்றி
    ஓம் மேதாவியே போற்றி
    ஓம் மோட்சம் காப்பவனே போற்றி
    ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270

    ஓம் ராமனே போற்றி
    ஓம் வேணுப்பிரியனே போற்றி
    ஓம் சித்தரில் உள்ளவனே போற்றி
    ஓம் திருமாளிகைத் தேவனே போற்றி
    ஓம் சச்சித்தனே போற்றி
    ஓம் சூரர்களின் தலைவனே போற்றி
    ஓம் பூதங்களின் தலைவனே போற்றி
    ஓம் வெற்றிச் செல்வனே போற்றி
    ஓம் விசிஷ்டனனே போற்றி
    ஓம் ஞானமே போற்றி 280

    ஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி
    ஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி
    ஓம் டங்க நாயகனே போற்றி
    ஓம் சமநிலை ஆனவனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
    ஓம் செல்வத்தரசே போற்றி
    ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
    ஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி
    ஓம் கோவிலைக் காப்பவனே போற்றி
    ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி 290

    ஓம் தியானத்தின் தலைவா போற்றி
    ஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி
    ஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி
    ஓம் முழு முதற் பொருளே போற்றி
    ஓம் வேள்விப் பொருளே போற்றி
    ஓம் வாம வல்லபனே போற்றி
    ஓம் சகல கலா வல்லபனே போற்றி
    ஓம் அன்பின் ஊற்றே போற்றி
    ஓம் ஏழைகளின் துணையே போற்றி
    ஓம் இரக்கமிக்கோனே போற்றி 300

    ஓம் கம்பீரமானவனே போற்றி
    ஓம் ஓளிப்பிழம்பே போற்றி
    ஓம் குமாரனே போற்றி
    ஓம் விருத்தனே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் உயிர்களின் நாதனே போற்றி
    ஓம் வேள்வித் தலைவனே போற்றி
    ஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி
    ஓம் தலத்தின் தலைவனே போற்றி
    ஓம் தனஞ்சயனே போற்றி 310

    ஓம் உலகப் பிரியனே போற்றி
    ஓம் பழம் பொருளே போற்றி
    ஓம் ஆண்களின் தலைவனே போற்றி
    ஓம் பலிப்பிரபுவே போற்றி
    ஓம் மகத்தானவனே போற்றி
    ஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி
    ஓம் மதுரனே போற்றி
    ஓம் மூல முதல் ஆனவனே போற்றி
    ஓம் வேள்வியின் இறைவா போற்றி
    ஓம் வளங்களின் தலைவா போற்றி 320

    ஓம் குளிர்ச்சியே போற்றி
    ஓம் வீரத் தலைவா போற்றி
    ஓம் காக்கப் பிறந்தவனே போற்றி
    ஓம் ஞான மயமே போற்றி
    ஓம் சித்த ராசனே போற்றி
    ஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி
    ஓம் சிவனே போற்றி
    ஓம் கடலரசனே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் பனிமலை அரசே போற்றி 330

    ஓம் இமயத்தரசே போற்றி
    ஓம் எங்களின் சிந்தையே போற்றி
    ஓம் மோக மூர்த்தியே போற்றி
    ஓம் மானம் காப்பவனே போற்றி
    ஓம் மனோகரனே போற்றி
    ஓம் சய சய ஒளியே போற்றி
    ஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி
    ஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி
    ஓம் திருவடி முதலே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி 340

    ஓம் செல்வப்ரியனே போற்றி
    ஓம் பூ அழகனே போற்றி
    ஓம் எங்கும் நிற்பவனே போற்றி
    ஓம் உயிர்களின் உயிரே போற்றி
    ஓம் முக்கட் சுடரே போற்றி
    ஓம் தூய சித்தமே போற்றி
    ஓம் பரமானந்தமே போற்றி
    ஓம் மகாபலம் உடையவனே போற்றி
    ஓம் தெய்வக் கடலே போற்றி
    ஓம் பேரொளியின் பேரொளியே போற்றி 350

    ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
    ஓம் பாலனே போற்றி
    ஓம் ருத்ரனே போற்றி
    ஓம் கபாலனே போற்றி
    ஓம் கொற்றக் கொடையோனே போற்றி
    ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
    ஓம் டங்கேசனே போற்றி
    ஓம் நிலையான ஞானமே போற்றி
    ஓம் மலர்களின் மனமே போற்றி
    ஓம் செல்வம் தருபவனே போற்றி 360

    ஓம் பூமியின் கேள்வனே போற்றி
    ஓம் ஆத்ம நாதனே போற்றி
    ஓம் பக்திக்குரியவனே போற்றி
    ஓம் பலிராசனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    ஓம் மகேஸ்வரனே போற்றி
    ஓம் மங்கள நாதனே போற்றி
    ஓம் பிச்சை ஏற்றவனே போற்றி
    ஓம் பிரபஞ்ச ஆத்மாவே போற்றி
    ஓம் இந்திரனுக்கு அரனே போற்றி 370

    ஓம் மீன் பிடித்தவனே போற்றி
    ஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி
    ஓம் தீரம் உடையவனே போற்றி
    ஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி
    ஓம் ஒளிவீசுபவனே போற்றி
    ஓம் கேடகப் பிரியனே போற்றி
    ஓம் வீரியனே போற்றி
    ஓம் மலையைக் காத்தவனே போற்றி
    ஓம் சீறும் சிவனே போற்றி
    ஓம் கணங்களின் தலைவனே போற்றி 380

    ஓம் குணங்களின் தலைவா போற்றி
    ஓம் கணங்கள் உடையவனே போற்றி
    ஓம் தூயவனே போற்றி
    ஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி
    ஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி
    ஓம் பூத நாயகனே போற்றி
    ஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி
    ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி
    ஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி
    ஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி 390

    ஓம் ஞான வடிவமே போற்றி
    ஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி
    ஓம் வெற்றியின் செல்வமே போற்றி
    ஓம் குடைநிழல் போன்றோனே போற்றி
    ஓம் கள்ளமில்லாதவனே போற்றி
    ஓம் புலன்களை வென்றவனே போற்றி
    ஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி
    ஓம் வேத மயிலே போற்றி
    ஒம் வீரத்தின் தலைவனே போற்றி
    ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி 400

    ஓம் வெற்றியின் வீரனே போற்றி
    ஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி
    ஓம் டகார வடிவமே போற்றி
    ஓம் வினாயக ராசனே போற்றி
    ஓம் விரதம் ஏற்பவனே போற்றி
    ஓம் வில்லாளனே போற்றி
    ஓம் ஊற்றமுடையவனே போற்றி
    ஓம் நிலையான ராசியே போற்றி
    ஓம் காமோதரனே போற்றி
    ஓம் அருளும் அப்பனே போற்றி 410

    ஓம் நிலையான ஆதாரமே போற்றி
    ஓம் நிரந்தரனே போற்றி
    ஓம் உடுக்கை உடையவனே போற்றி
    ஓம் வசுபதியே போற்றி
    ஓம் அமைதிவடிவே போற்றி
    ஓம் நிலையானவனே போற்றி
    ஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி
    ஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி
    ஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி
    ஓம் எங்கும் இயங்குபவனே போற்றி 420

    ஓம் செல்வனே போற்றி
    ஓம் அக்னி தேவனே போற்றி
    ஓம் தூயோனே போற்றி
    ஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி
    ஓம் தலப்பிரபுவே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் அக்னியே போற்றி
    ஓம் தலப்புதல்வனே போற்றி
    ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி
    ஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 430

    ஓம் தலத்தின் நாயகனே போற்றி
    ஓம் நீண்ட தோளனே போற்றி
    ஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி
    ஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி
    ஓம் முனீஸ்வரனே போற்றி
    ஓம் எங்கும் பரந்தவனே போற்றி
    ஓம் பாரதனே போற்றி
    ஓம் மானிடரைக் காப்பவனே போற்றி
    ஓம் எல்லாம் உடையவனே போற்றி
    ஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி 440

    ஓம் மண்ணின் நாயகனே போற்றி
    ஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி
    ஓம் நாரதனே போற்றி
    ஓம் நிலம் தருபவனே போற்றி
    ஓம் பால் குணனே போற்றி
    ஓம் மலை அரசன் மனமே போற்றி
    ஓம் பாஞ்சாலமே போற்றி
    ஓம் பலத்துக்கரசே போற்றி
    ஓம் பல் குணனே போற்றி
    ஓம் தவ வலி கொண்டவனே போற்றி 450

    ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
    ஓம் பாம்பை உடையவனே போற்றி
    ஓம் புருவங்களின் ஈசனே போற்றி
    ஓம் புகழ ஓங்கியவனே போற்றி
    ஓம் பாலகனே போற்றி
    ஓம் மலையின் அரசே போற்றி
    ஓம் பலியே போற்றி
    ஓம் பாம்பரசனே போற்றி
    ஓம் பலிநாதனே போற்றி
    ஓம் எங்களின் அன்பனே போற்றி 460

    ஓம் எங்களைக் காப்பவனே போற்றி
    ஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி
    ஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி
    ஓம் எங்களின் அரனே போற்றி
    ஓம் மகரிசியே போற்றி
    ஓம் எங்களின் பெருமானே போற்றி
    ஓம் வேத முடிவே போற்றி
    ஓம் பீமனே போற்றி
    ஓம் மனத்துக்கரசே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி 470

    ஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி
    ஓம் பலம் தருபவனே போற்றி
    ஓம் ஞான மூர்த்தியே போற்றி
    ஓம் மகரனே போற்றி
    ஓம் மகாதேவனே போற்றி
    ஓம் மாணிக்கமே போற்றி
    ஓம் மெளனியே போற்றி
    ஓம் மணிரஞ்சிதமே போற்றி
    ஓம் மகீதரனே போற்றி
    ஓம் மணி ரம்மியனே போற்றி 480

    ஓம் மனுப் பிரியனே போற்றி
    ஓம் மகீப் பிரியனே போற்றி
    ஓம் மணி மண்டலமே போற்றி
    ஓம் மனு ராசனே போற்றி
    ஓம் மந்திரத் தலைவனே போற்றி
    ஓம் மந்திரம் அருள்பவனே போற்றி
    ஓம் மகீ பாலனே போற்றி
    ஓம் மகீசாநனே போற்றி
    ஓம் மூலப் பொருளே போற்றி
    ஓம் மாணிக்க ஒளியே போற்றி 490

    ஓம் முக்தனே போற்றி
    ஓம் ரமாநாதனே போற்றி
    ஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி
    ஓம் ஆதாரமே போற்றி
    ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
    ஓம் மூலப் பொருளே போற்றி
    ஓம் முகுந்தனே போற்றி
    ஓம் மணி கூடனனே போற்றி
    ஓம் மணிப் பிரியனே போற்றி
    ஓம் ரமாபதியே போற்றி 500

    ஓம் பரஞான வடிவே போற்றி
    ஓம் ரமா காந்தனே போற்றி
    ஓம் தவ வலிவுடையோனே போற்றி
    ஓம் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் ரமா தீசனே போற்றி
    ஓம் நான்மறை முதல்வா போற்றி
    ஓம் வனத்தில் உள்ளவனே போற்றி
    ஓம் எங்களின் நினைவே போற்றி
    ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
    ஓம் எங்களின் துணைவா போற்றி 510

    ஓம் வனங்களில் உலவுபவனே போற்றி
    ஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி
    ஓம் ராம வல்லபனே போற்றி
    ஓம் குளிரின் சுகமே போற்றி
    ஓம் வன நாயகனே போற்றி
    ஓம் சித்தி கரனே போற்றி
    ஓம் சித்தனே போற்றி
    ஓம் சீலம் உடையவனே போற்றி
    ஓம் அமுதமே போற்றி
    ஓம் சனி பகவானே போற்றி 520

    ஓம் நண்பனே போற்றி
    ஓம் அருள்பவனே போற்றி
    ஓம் நிலையானவனே போற்றி
    ஓம் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் சத்பதியே போற்றி
    ஓம் சதாசிவனே போற்றி
    ஓம் சீலனே போற்றி
    ஓம் குணாதரனே போற்றி
    ஓம் சதியின் ஆத்மாவே போற்றி
    ஓம் நெறியே போற்றி 530

    ஓம் எண்ணமே போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் உணர்வே போற்றி
    ஓம் வேதியே போற்றி
    ஓம் தேவர்களின் இறைவா போற்றி
    ஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி
    ஓம் கருமுகில் கண்ணனே போற்றி
    ஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி
    ஓம் தாமரைத் தடாகமே போற்றி
    ஓம் சதீஸ்வரனே போற்றி 540

    ஓம் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி
    ஓம் சூரசேனனே போற்றி
    ஓம் அமுதக் கடலே போற்றி
    ஓம் கூத்தா போற்றி
    ஓம் கோவே போற்றி
    ஓம் எந்தாய் போற்றி
    ஓம் சூரியனைக் காப்பவனே போற்றி
    ஓம் அப்பனே போற்றி
    ஓம் அரசனே போற்றி 550

    ஓம் காபாலியே போற்றி
    ஓம் மலையில் வாழ்பவனே போற்றி
    ஓம் கமல நாதனே போற்றி
    ஓம் பரமானந்தமே போற்றி
    ஓம் தர்க்கமே போற்றி
    ஓம் பெரும்பிணி மருந்தே போற்றி
    ஓம் மன்னனே போற்றி
    ஓம் மகத அரசனே போற்றி
    ஓம் நதி நாயகனே போற்றி
    ஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி 560

    ஓம் மலர் போன்றவனே போற்றி
    ஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி
    ஓம் செஞ்சடையோனே போற்றி
    ஓம் சிவசூரியனே போற்றி
    ஓம் சோதிப் பரனே போற்றி
    ஓம் சய சய போற்றி
    ஓம் புதுமையோனே போற்றி 570

    ஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி
    ஓம் எவர்க்கும் அரசனே போற்றி
    ஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி
    ஓம் தர்கவல்லபனே போற்றி
    ஓம் புதனுக்கு அரசே போற்றி
    ஓம் இலக்குமயோனே போற்றி
    ஓம் வாசல் காப்போனே போற்றி
    ஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி
    ஓம் நற்குணம் உடையவனே போற்றி
    ஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி 580

    ஓம் குரு பைரவனே போற்றி
    ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி
    ஓம் எங்களின் சிந்தையே போற்றி
    ஓம் சிவனே போற்றி
    ஓம் பொன்மேனியனே போற்றி
    ஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி
    ஓம் நிழலே போற்றி
    ஓம் கால தேவனே போற்றி
    ஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி
    ஓம் முகிலே போற்றி 590

    ஓம் தேவே போற்றி
    ஓம் சிந்தை புகுந்தாய் போற்றி
    ஓம் பாவம் அறுப்பவனே போற்றி
    ஓம் புதன் ஆவியே போற்றி
    ஓம் மனத்துக்கு அன்பனே போற்றி
    ஓம் தேவியின் புதல்வனே போற்றி
    ஓம் எரி ஊட்டுபவனே போற்றி
    ஓம் யாவும் ஆனவனே போற்றி
    ஓம் மாம்பூ உடையோனே போற்றி
    ஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி 600

    ஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி
    ஓம் நீங்கா இறைவனே போற்றி
    ஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி
    ஓம் மான் ஏந்தியவனே போற்றி
    ஓம் கண்மணியே போற்றி
    ஓம் சிந்தை புகுந்தவனே போற்றி
    ஓம் புனிதனே போற்றி
    ஓம் கபால மாலை சூடியவனே போற்றி
    ஓம் மலை அரசனே போற்றி
    ஓம் கமலா காந்த வல்லபனே போற்றி 610

    ஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி
    ஓம் விதர்க்கமே போற்றி
    ஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் இலக்குவனனே போற்றி
    ஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி
    ஓம் நந்திப்பிரியனே போற்றி
    ஓம் குணங்களின் சிறப்பே போற்றி
    ஓம் மாலதீ மலரே போற்றி
    ஓம் பைரவ ஈசனே போற்றி
    ஓம் தேவர்களின் சுடரே போற்றி 620

    ஓம் கனலே போற்றி
    ஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி
    ஓம் கடயோக வல்லவனே போற்றி
    ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
    ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
    ஓம் வினைகள் அறுப்பாய் போற்றி
    ஓம் திசைகளில் உள்ளவனே போற்றி
    ஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி
    ஓம் அரசருக்கு அரசனே போற்றி
    ஓம் குண்டலீசனே போற்றி 630

    ஓம் தர்க்கசித்தனே போற்றி
    ஓம் புத சித்தனே போற்றி
    ஓம் இலக்கின் கட்டமே போற்றி
    ஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி
    ஓம் ஆற்றங்கரையோனே போற்றி
    ஓம் கேவலனே போற்றி
    ஓம் மாம் பூ மணத்தோனே போற்றி
    ஓம் சிவனே போற்றி
    ஓம் அமுதம் அருளியவனே போற்றி
    ஓம் கரும்பின் இனிப்பே போற்றி 640

    ஓம் கலப்பை உடையோனே போற்றி
    ஓம் பொன்னாபரணத்தானே போற்றி
    ஓம் கூத்தனே போற்றி
    ஓம் சிந்தையே போற்றி
    ஓம் கடலின் முத்தே போற்றி
    ஓம் திகம்பரனே போற்றி
    ஓம் நகப்பிரியனே போற்றி
    ஓம் இடாகினி நாயகனே போற்றி
    ஓம் மகாகாரனனே போற்றி
    ஓம் சுடர் மிகு விளக்கே போற்றி 650

    ஓம் புத்தியே போற்றி
    ஓம் புத்தொளியோனே போற்றி
    ஓம் மறைபொருளே போற்றி
    ஓம் தாபங்களை போக்குபவனே போற்றி
    ஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி
    ஓம் மாமர வாசனனே போற்றி
    ஓம் ஸ்ரீபைரவனே போற்றி
    ஓம் அமுத அன்பனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி
    ஓம் நஞ்சுண்டவனே போற்றி 660

    ஓம் மேருமலையோனே போற்றி
    ஓம் நன்மை செய்வோனே போற்றி
    ஓம் குறைவில்லாதவனே போற்றி
    ஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி
    ஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி
    ஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி
    ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி
    ஓம் மகாராசனே போற்றி
    ஓம் காலனை வென்றவனே போற்றி
    ஓம் புதன் அன்பனே போற்றி 670

    ஓம் அவதாரம் செய்பவனே போற்றி
    ஓம் தேவியின் தொண்டனே போற்றி
    ஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி
    ஓம் அடியவர்களின் அமுதமே போற்றி
    ஓம் மாமர வல்லபனே போற்றி
    ஓம் எட்டுத்திசை காவலனே போற்றி
    ஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி
    ஓம் தத்துவனே போற்றி
    ஓம் நடராசனே போற்றி
    ஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி 680

    ஓம் பார்வதியின் பாகனே போற்றி
    ஓம் எங்களின் கதியே போற்றி
    ஓம் உலக நாதனே போற்றி
    ஓம் திசைகளைக் காப்பவனே போற்றி
    ஓம் பூதப்படையோனே போற்றி
    ஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி
    ஓம் மகமாலை அணிந்தவனே போற்றி
    ஓம் சடையாய் போற்றி
    ஓம் புனிதா போற்றி
    ஓம் பொருளே போற்றி 690

    ஓம் தேவனே போற்றி
    ஓம் சூரியனே போற்றி
    ஓம் தாரகனே போற்றி
    ஓம் கருப்பஞ்சாறே போற்றி
    ஓம் தேவி புத்ரனே போற்றி
    ஓம் அமுத இனியவா போற்றி
    ஒம் மணியே போற்றி
    ஓம் நஞ்சுண்டோனே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
    ஓம் சதுரா போற்றி 700

    ஓம் அருமருந்தே போற்றி
    ஓம் காலக் கடவுளே போற்றி
    ஓம் ஆனந்தமே போற்றி
    ஓம் சூளாமணியே போற்றி
    ஓம் ஞானவிளக்கே போற்றி
    ஓம் வித்தின் வித்தே போற்றி
    ஓம் சூரனே போற்றி
    ஓம் சோமனே போற்றி
    ஓம் மூவுலகாமணியே போற்றி
    ஓம் கூர்வாள்படையோய் போற்றி 710

    ஓம் தாப அக்னியே போற்றி
    ஓம் கம்பீரமானவனே போற்றி
    ஓம் மாம்பழ அழகனே போற்றி
    ஓம் பைரவியின் துணையே போற்றி
    ஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி
    ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி
    ஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி
    ஓம் அன்னவடிவே போற்றி
    ஓம் தேசவிளக்கே போற்றி
    ஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி 720

    ஓம் நலம் செய்பவனே போற்றி
    ஓம் செஞ்சடையோனே போற்றி
    ஓம் கபாலபாணியே போற்றி
    ஓம் ஞானியே போற்றி
    ஓம் காமனை வென்றவனே போற்றி
    ஓம் செம்பொன் மேனியனே போற்றி
    ஓம் சோமநாயகனே போற்றி
    ஓம் வாட்படை கொண்டாய் போற்றி
    ஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி
    ஓம் கெளரவனே போற்றி 730

    ஓம் மேன்மை ஆனவனே போற்றி
    ஓம் நன்மையறிவாய் போற்றி
    ஓம் மாமிசப்ரியனே போற்றி
    ஓம் ஹரிநாதனே போற்றி
    ஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி
    ஓம் அரன் வடிவே போற்றி
    ஓம் மாணிக்க ஒளியோனே போற்றி
    ஓம் ஈசான திசையோனே போற்றி
    ஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி
    ஓம் காபாலியே போற்றி 740

    ஓம் தேவரறியாத தேவனே போற்றி
    ஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி
    ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
    ஓம் தர்க்கப் பிரியனே போற்றி
    ஓம் புத நாதனே போற்றி
    ஓம் எதிலும் உள்ளவனே போற்றி
    ஓம் மரிகிதனே போற்றி
    ஓம் நந்திகேச்வரனே போற்றி
    ஓம் குணோபேதனே போற்றி
    ஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி 750

    ஓம் அஷ்ட பைரவனே போற்றி
    ஓம் மலையில் உள்ளவனே போற்றி
    ஓம் சம்காரம் செய்பவனே போற்றி
    ஓம் புன்சிரிப்பே போற்றி
    ஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி
    ஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி
    ஓம் உலகைக் காப்பவனே போற்றி
    ஓம் பொறுமைக்கரசே போற்றி
    ஓம் மாயோனே போற்றி
    ஓம் உர்வாங்கனே போற்றி 760

    ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
    ஓம் நாமங்கள் உடையவனே போற்றி
    ஓம் வறுமையை நீக்குபவனே போற்றி
    ஓம் புதனே போற்றி
    ஓம் அதிரூபனே போற்றி
    ஓம் மரீசியே போற்றி
    ஓம் ஆனந்தமே போற்றி
    ஓம் குருப்ரியனே போற்றி
    ஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி
    ஓம் கணங்களை உடையவனே போற்றி 770

    ஓம் வார்சடை விரும்பியே போற்றி
    ஓம் மணியே போற்றி
    ஓம் உலகேழும் ஆனவனே போற்றி
    ஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி
    ஓம் அன்ன நடையோனே போற்றி
    ஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி
    ஓம் பொறுத்தருள்பவனே போற்றி
    ஓம் காலபுருசனே போற்றி
    ஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி
    ஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி 780

    ஓம் இடாகினி இதயமே போற்றி
    ஓம் அம்பிகா வல்லவனே போற்றி
    ஓம் கந்தனே போற்றி
    ஓம் புதனே போற்றி
    ஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி
    ஓம் சுக்ரனே போற்றி
    ஓம் கோமுகனே போற்றி
    ஓம் கோமுகனே போற்றி
    ஓம் வேள்விப்பொருளே போற்றி
    ஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி
    ஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி 790

    ஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி
    ஓம் மலர்தூவ நின்றவனே போற்றி
    ஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி
    ஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி
    ஓம் பொறுமையின் வடிவே போற்றி
    ஓம் கருணைப் பார்வையனே போற்றி
    ஓம் அம்பேசனனே போற்றி
    ஓம் இடாகினி பாகனே போற்றி 800

    ஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி
    ஓம் மங்கலமே போற்றி
    ஓம் கோலாடைக் குழகரே போற்றி
    ஓம் நரர்களின் தேவனே போற்றி
    ஓம் தேவியின் பிராணனே போற்றி
    ஓம் கோபவர்த்தனே போற்றி
    ஓம் சகதீசனே போற்றி
    ஓம் ஒலியின் கம்பீரமே போற்றி
    ஓம் மதுபாயனே போற்றி
    ஓம் பொன்னே போற்றி 810

    ஓம் அரக்கனை அழித்தவனே போற்றி
    ஓம் பூதத் தலைவனே போற்றி
    ஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி
    ஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி
    ஓம் நொடியை அருள்பவனே போற்றி
    ஓம் பொறுமையின் கலையே போற்றி
    ஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி
    ஓம் கபால கவசவிரும்பியே போற்றி
    ஓம் சித்தனே போற்றி
    ஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி 820

    ஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி
    ஓம் சோமப் பிரபையே போற்றி
    ஓம் நாற்களை படைப்பவனே போற்றி
    ஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி
    ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி
    ஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி
    ஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி
    ஓம் மதுப்பிரியனே போற்றி
    ஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி
    ஓம் அழித்தல் தொழிலோனே போற்றி 830

    ஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி
    ஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி
    ஓம் செந்நிறத்தோனே போற்றி
    ஓம் உலகச் சுடரே போற்றி
    ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி
    ஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி
    ஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி
    ஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி
    ஓம் நாமங்கள் ஆனவனே போற்றி
    ஓம் பொறுமையே போற்றி 840

    ஓம் புதாகரனே போற்றி
    ஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி
    ஓம் தேவேந்திரனே போற்றி
    ஓம் நந்தனே போற்றி
    ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    ஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி
    ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    ஓம் காரணனே போற்றி
    ஓம் கருட வாகனனே போற்றி
    ஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி 850

    ஓம் லயம் செய்பவனே போற்றி
    ஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி
    ஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி
    ஓம் நீலமே போற்றி
    ஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி
    ஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி
    ஓம் மர்மங்களை உடையவனே போற்றி
    ஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி
    ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
    ஓம் பெளத்த காமனனே போற்றி 860

    ஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி
    ஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி
    ஓம் குணசிந்தனே போற்றி
    ஓம் ஞானமூர்த்தியே போற்றி
    ஓம் தவவலிமை உடையோய் போற்றி
    ஓம் பல்லுயிர் என்றவனே போற்றி
    ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
    ஓம் தென்னவன் செல்வமே போற்றி
    ஓம் அன்ன ஒளியோனே போற்றி
    ஓம் உலகத் தலைவனே போற்றி 870

    ஓம் பொறுமை உடையவனே போற்றி
    ஓம் நீலமணி ஒளியோனே போற்றி
    ஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி
    ஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி
    ஓம் தீண்டுதற்கரியாய் போற்றி
    ஓம் திசை மலைகளே போற்றி
    ஓம் ஏக நாயகனே போற்றி
    ஓம் காமனே போற்றி
    ஓம் மாருதியே போற்றி
    ஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880

    ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி
    ஓம் கோளரக்கர் தலைவனே போற்றி
    ஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
    ஓம் நலம் செய்பவனே போற்றி
    ஓம் காலங் கடந்தவனே போற்றி
    ஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி
    ஓம் மூலத்து முதலே போற்றி
    ஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி
    ஓம் பொறுமை மனமே போற்றி 890

    ஓம் சூலக்கரத்தோனே போற்றி
    ஓம் முக்கண்ணனே போற்றி
    ஓம் கனகச் சுடரே போற்றி
    ஓம் திசைகளின் அரசனே போற்றி
    ஓம் புதனுக்கு அதிபதியே போற்றி
    ஓம் காமத்தை வெல்பவனே போற்றி
    ஓம் வடமாலைப் பிரியனே போற்றி
    ஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி
    ஓம் குணரம்மியனே போற்றி
    ஓம் உலகத்து போகப் பொருளே போற்றி 900

    ஓம் கணங்களின் அரசே போற்றி
    ஓம் நஞ்சுண்டவனே போற்றி

    ஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி
    ஓம் ஆனந்த வடிவானவனே போற்றி
    ஓம் முழு முதல் வித்தே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
    ஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி
    ஓம் நீலமணி அணிந்தவனே போற்றி
    ஓம் யானை வாகன அழகனே போற்றி
    ஓம் பெரிய நாயகனே போற்றி 910

    ஓம் பொன்னை அளிப்பவனே போற்றி
    ஓம் திக்குகளின் தலைவனே போற்றி
    ஓம் விமானம் ஆள்பவனே போற்றி
    ஓம் ஆத்ம நாதனே போற்றி
    ஓம் தமிழின் அழகே போற்றி
    ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி
    ஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி
    ஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி
    ஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி
    ஓம் சக்கரத்து அரசே போற்றி 920

    ஓம் பழச்சுவை அமுதே போற்றி
    ஓம் பொருள்தரும் பொன்னே போற்றி
    ஓம் அன்னத்தின் அன்பனே போற்றி
    ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
    ஓம் மேன்மைக்கு அரசே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வாழ்க்கையை இயக்குபவனே போற்றி
    ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி
    ஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி
    ஓம் பேச வைப்பவனே போற்றி 930

    ஓம் மங்கலாகரனே போற்றி
    ஓம் மனவடிவே போற்றி
    ஓம் குருவாகி நின்றவனே போற்றி
    ஓம் உளம் நின்ற கொழுந்தே போற்றி
    ஓம் மணாளா போற்றி
    ஓம் அன்பரசு வாழ்வே போற்றி
    ஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி
    ஓம் அறக்கடவுளே போற்றி
    ஓம் அரனே போற்றி
    ஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி 940

    ஓம் அதிபதியே போற்றி
    ஓம் நிழல்தரு மரமே போற்றி
    ஓம் பாடுவோரின் பாடலே போற்றி
    ஓம் விரிசடையோனே போற்றி
    ஓம் பரமசிவனே போற்றி
    ஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி
    ஓம் பல்லூளித் தலைவா போற்றி
    ஓம் பித்தனே போற்றி
    ஓம் பொறுமை வடிவே போற்றி
    ஓம் உலக நலமே போற்றி 950

    ஓம் உலக நாதனே போற்றி
    ஓம் நொடிக் காலமே போற்றி
    ஓம் உலகநாயகனே போற்றி
    ஓம் நீலவாணனே போற்றி
    ஓம் வாள் ஏந்தியவனே போற்றி
    ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
    ஓம் நீலமணி ஒலியோனே போற்றி
    ஓம் மேன்மை அருள்பவனே போற்றி
    ஓம் முத்துப்பல் உடையோனே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி 960

    ஓம் தாளாண்மை உடையவனே போற்றி
    ஓம் நாக வல்லபனே போற்றி
    ஓம் பற்பல உயிரோனே போற்றி
    ஓம் வேல் ஏந்தியவனே போற்றி
    ஓம் வசனப் பிரியனே போற்றி
    ஓம் எங்களின் கோவே போற்றி
    ஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி
    ஓம் பொன்மலையோனே போற்றி
    ஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி
    ஓம் ஆவிவடிவே போற்றி 970

    ஓம் எங்கும் உள்ளவனே போற்றி
    ஓம் சோம சித்தனே போற்றி
    ஓம் சோமேஸ்வரனே போற்றி
    ஓம் நிமலா போற்றி
    ஓம் காசியைக் காத்தவனே போற்றி
    ஓம் நாகர்களின் இறைவனே போற்றி
    ஓம் ஐயா போற்றி
    ஓம் தலைவா போற்றி
    ஓம் மகிழ்ச்சியே போற்றி
    ஓம் வீரமுனீஸ்வரனே போற்றி 980

    ஓம் குணமே போற்றி
    ஓம் அன்பனே போற்றி
    ஓம் அத்தா போற்றி
    ஓம் அரனே போற்றி
    ஓம் ஒலிக்கு இறைவா போற்றி
    ஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் ஒலியின் இறைவனே போற்றி
    ஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
    ஓம் பொய்யா புகழே போற்றி 990
    ஓம் மரகத அதிபதியே போற்றி
    ஓம் சிவலோக அதிபதியே போற்றி
    ஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி
    ஓம் ஆவி நாயகனே போற்றி
    ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
    ஓம் அறந்த முடி நெறியே போற்றி
    ஓம் வீர மார்த்தாண்டனே போற்றி
    ஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் மும்மூர்த்திகளின் இறைவா போற்றி
    ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி 1000

    ஓம் இகபோகம் ஈவாய் போற்றி
    ஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி
    ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
    ஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி
    ஓம் அழியாச் செல்வம் போற்றி
    ஓம் அமிர்த கரும்பே போற்றி
    ஓம் காலமும் தேசமும் போற்றி
    ஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி!!! 1008
    முப்பந்தல் அருகே உள்ள ஆலமூடு அம்மன் கோவிலில் புஷ்பாபிஷேக விழா வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.
    முப்பந்தல் அருகே ஆலமூடு அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புஷ்பாபிஷேக விழா வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சுதர்சன ஹோமம், 7.30 மணிக்கு கலச பூஜை ஆகியவை நடக்கிறது.

    8 மணிக்கு தீபாராதனை, அம்மனுக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், 2 மணிக்கு ஊட்டுபடைப்பு, மாலை 5 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் அறக்கட்டளை நிர்வாகி இ.அருணாசலம் தலைமையில் பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8-ம் நாளை முன்னிட்டு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் 8-ம் நாளான நேற்று காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 4 மணிக்கு அய்யா கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் தலைமைப்பதியின் முன்பு இருந்து கலி வேட்டைக்குப் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்கினார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முத்து குடைகள் மேளதாளங்கள் முன் செல்ல வாகனம் கலி வேட்டைக்கு புறப்பட்டது.

    தலைமை பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் தலைமைபதியை சுற்றி வந்து வடக்கு வாசல் பகுதிக்கு சென்று, அங்கிருந்து முத்திரிகிணற்றங்கரைக்கு வந்தது. அங்கு அய்யா வழி பக்தர்கள் முன்னிலையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வாகனம் செல்லும் வழிகளில் அப்பகுதி மக்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகனம் இரவு 9 மணிக்கு தலைமைப் பதியின் வடக்கு வாசல் பகுதியை வந்தடைந்தது. அங்கு அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு தவக்கோல காட்சி அளித்தார். வாகன பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த், பையன் நேம்ரிஷ் ஆகியோர் செய்தனர். பின்னர் வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது.

    விழாவின் 9-ம் நாளான இன்று காலை, மாலை பணிவிடையும் இரவு அய்யா வைகுண்டசாமி அனுமன் வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும், நாளை நடைபெறும் 10-ம் திருவிழாவில் இரவு இந்திர வாகனத்தில் அய்யா பவனி வருதலும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் நடக்கிறது.
    காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நடைபெறும் இராப்பத்து நிகழ்ச்சியில் 8-ம் நாளான நேற்று திருவாபரணங்கள் சாற்றப்பட்டு சாமி புறப்பாடு நடைபெற்றது.
    விஷ்ணு பக்தரான திருமங்கை மன்னன், வைணவப்பெண் குமுதவல்லியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அப்போது தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் திருமணத்துக்கு ஒப்புக் கொள்வதாக குமுதவல்லி நிபந்தனை விதித்தார்.

    அதை ஏற்று திருமங்கை மன்னனும் அன்னதானம் செய்தார். தொடர்ந்து தினமும் செய்ய இயலாத நிலையில், அதிகமான பொருள் உள்ளவர்களிடம் கொள்ளையடித்து அன்னதானம் செய்து வந்தார்.

    அவரை திருத்த நினைத்த பெருமாள், தம்பதியராக அதிக ஆபரணங்களை அணிந்து திருமணக்கோலத்தில் சென்றுள்ளார். பெருமாள் என்பது தெரியாமல், திருமங்கை மன்னரின் கூட்டத்தினர், தம்பதியை இடைமறித்து நகைகளை பறித்தனர்.

    கடைசியில் பெருமாளின் காலில் இருந்த மெட்டியை அகற்ற முடியாத போது, தனது வாயால் கடித்து இழுக்க திருமங்கை மன்னன் முயன்ற போது, அவரின் சிரம் (தலை) பெருமாளின் திருவடியில் பட்டது. அப்போது அவருக்குத் ஞானத்தெளிவு கிடைத்ததாக புராணம் கூறுகிறது.

    இதை விளக்கும் வகையில், ஆண்டுதோறும் வைணவ தலங்களில் இராப்பத்து நிகழ்ச்சியின்போது நடத்தப்படுவதே வேடுபறி உற்சவம். அந்த வகையில் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நடைபெறும் இராப்பத்து நிகழ்ச்சியில் 8-ம் நாளான நேற்று திருவாபரணங்கள் சாற்றப்பட்டு சாமி புறப்பாடு நடைபெற்றது. திருமங்கை மன்னன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து பாரதியார் சாலையில் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. திருமங்கை மன்னனுக்கு ஞானத்தெளிவு கிடைக்கும் வகையில் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.

    கோவில் முதல் தீர்த்தக்காரர் அரங்கநாதாச்சாரியார் சாமிகள் தலைமையில் பாசுரம் படிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு புதிய சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் சண்டிகேஸ்வரர் சாமி. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலிலும் தாணுமாலய சாமி சன்னதியின் பின்னே சண்டிகேஸ்வரர் காவல் தெய்வமாக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்து பாகம் சிதலமடைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்குப் பதிலாக புதிய கல் சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது நேற்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒரு நாள் சயனவாசத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு பின்னர் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.

    இதையடுத்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு புதிய சிலையானது கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ×