search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disease Pariharam"

    • பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன.
    • தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது.

    கோடை காலத்தில் பரவும் அம்மை நோயில் இருந்து பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில், பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கரம்பயம் மட்டுமின்றி கரம்பயத்தை சுற்றியுள்ள சுமார் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அருகில் உள்ள நகர மக்களில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களை அழைத்து வந்து கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலில் தங்க வைத்து தீர்த்தம் என்று சொல்லக்கூடிய அபிஷேக பால் வாங்கி கொடுப்பார்கள்.

    நான்கு அல்லது ஐந்து நாட்களில் அவர்கள் நோய் பூரண குணமடைந்து விடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு நேர்த்திக்கடனாக முடி இறக்கி காணிக்கை செலுத்துவது, அலகு குத்துவது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, வடம் பிடித்து தேர் இழுப்பது உள்ளிட்ட வேண்டுதல்களை பொதுமக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா வந்து பொதுமக்களை பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்படும் பக்தா்கள் நோய் தீர்ந்த உடன் இ்ந்த கோவில் தீா்த்தக்குளத்தில் நீராடி பின்னர் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தா்களும் தீர்த்தக்குளத்தில் உள்ள புனித நீரை தங்கள் தலையில் தெளித்த பின் கோவிலுக்கு செல்கிறாா்கள்.

    தீர்த்தக்குளத்தில் அம்மை நோய் தீர்க்கும் அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்து மாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் 7 கி.மீட்டர் தொலைவிற்கு முன்பு உள்ள கோவிலை அடையலாம்.

    • ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பயன் பெறலாம்.
    • கல்வியில் மேம்பட இக்கோவிலில் வித்யாரம்ப வழிபாடு நடத்தப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே போலார் பகுதியில் அடைந்துள்ளது போலார் மங்களாம்பிகை கோவில். கோவிலின் வெளிப்புறத்தில் அரசமரத்தடியில் நாகராஜா சன்னதி உள்ளது. அங்கு சிறிய பாம்பு சிலை அமைந்திருக்கிறது.

    கண்நோய், தோல் வியாதி விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இக்கோவிலை நாடி பக்தர்கள் வருகின்றார்கள். அவர்கள் அம்பாளை வழிபட்டு பூஜை செய்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபடுகிறார்கள். கல்வியில் மேம்பட இக்கோவிலில் வித்யாரம்ப வழிபாடு நடத்தப்படுகிறது. துலாபாரமும் எடுக்கிறார்கள்.

    மங்களாதேவி அம்மனின் சிரசு வைக்கப்பட்டு உள்ள சன்னதியில் செவ்வந்தி மாலை சாத்தி வழிபடுவதால் ஆரோக்கிய வாழ்வு கிடைக்கிறது.

    சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் சகல ஐஸ்வர்யம், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்று சொல்லப்படுகிறது.

    கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் நாகராஜ சன்னதியில் வீற்றிருக்கும் பாம்பு சிலைக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்தால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    ஜாதக ரீதியாக ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பயன் பெறலாம். இங்கு தரப்படும் விபூதியை தரிசித்தால் பாலபீடை என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.
    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், ஸ்கந்த புராணம் புகழும் கோவில், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.

    யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர், கோபுரங்கள், கருவறை என அனைத்தும் மன்னர்கால சிறிய வேலைப்பாட்டோடு கருங்கல் திருப்பணியாக மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் பழங்கோவிலுக்குரிய அம்சத்தோடு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு 40 அல்லது 48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் இவரை ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர். தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார்.

    அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது. நித்திய கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு.

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் - வாரங்கல் வழித் தடத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது. போன்கிர் என்ற ரெயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தை சென்றடையலாம்.
    திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நடனேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது.
    வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றவர் நடனேஸ்வரர். திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மருத நிலத்திற்கு உரிய இயல்புகளோடு உள்ளது தலையாலங்காடு என்னும் திருத்தலம். இங்கு நடனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    கோவிலுக்கு வெளியே கீழ்புறத்தில் ‘சங்குதீர்த்தம்’ என்ற பெயரில் திருக்குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் வெளியில் இருந்து நீர்வரத்து இல்லை. ஊற்று நீர்தான் பெருக்கெடுத்து குளத்தை நிரப்புகிறது. இந்த தீர்த்தம், அந்த மண்ணுக்கே உரிய வேதி, மருந்துப்பொருட்களோடு கலந்து இருப்பதால், வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது.

    இந்தத் திருக்குளத்தில் நீராடி விட்டு, ஆலயத்திற்குள் உள்ள சுவாமி, அம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு, அபிஷேக விபூதி மற்றும் மூலிகை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்று 48 நாட்களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, மூலிகை மருந்தினை சாப்பிட வேண்டும். நோய் தீர்ந்ததும் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, புதுத் துணிகள் சாத்தி வழிபட வேண்டும். இந்த திருக்குளத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடினால் கண்கண்ட பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
    ஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்பட்டு வெளியேறும் நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
    ஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்படும் நீர் வெளியேறும் பகுதியை ‘கோமுகம்’ என்று அழைப்பார்கள். கோமுகம் வழியாக வெளியேறும் அபிஷேக நீரை பலரும், பாட்டில்களில் பிடித்துச் செல்வதையும், சிலர் கைகளில் ஏந்தி அருந்தி தலையில் தடவிக் கொள்வதையும் நாம் பார்த்திருப்போம்.

    ஒரு சிலர் அது ஏதோ அசுத்தமான நீர் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் செல்வதையும் பார்த்திருக்கலாம். இறைவனின் மீது பட்டு கோமுகம் வழியாக வெளியேறும் நீர், கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படுகிறது.

    பரணி அல்லது மகம் நட்சத்திரத்தன்று இறைவனை அபிஷேகித்து வெளியேறும் நீரை, பாட்டிலில் பிடித்து வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். அந்த அபிஷேக நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
    ×