search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய் தீர்க்கும் கோமுக நீர்
    X

    நோய் தீர்க்கும் கோமுக நீர்

    ஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்பட்டு வெளியேறும் நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
    ஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்படும் நீர் வெளியேறும் பகுதியை ‘கோமுகம்’ என்று அழைப்பார்கள். கோமுகம் வழியாக வெளியேறும் அபிஷேக நீரை பலரும், பாட்டில்களில் பிடித்துச் செல்வதையும், சிலர் கைகளில் ஏந்தி அருந்தி தலையில் தடவிக் கொள்வதையும் நாம் பார்த்திருப்போம்.

    ஒரு சிலர் அது ஏதோ அசுத்தமான நீர் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் செல்வதையும் பார்த்திருக்கலாம். இறைவனின் மீது பட்டு கோமுகம் வழியாக வெளியேறும் நீர், கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படுகிறது.

    பரணி அல்லது மகம் நட்சத்திரத்தன்று இறைவனை அபிஷேகித்து வெளியேறும் நீரை, பாட்டிலில் பிடித்து வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். அந்த அபிஷேக நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
    Next Story
    ×