என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சுசீந்திரம் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை
Byமாலை மலர்22 Jan 2022 8:57 AM GMT (Updated: 22 Jan 2022 8:57 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு புதிய சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் சண்டிகேஸ்வரர் சாமி. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலிலும் தாணுமாலய சாமி சன்னதியின் பின்னே சண்டிகேஸ்வரர் காவல் தெய்வமாக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்து பாகம் சிதலமடைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்குப் பதிலாக புதிய கல் சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது நேற்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒரு நாள் சயனவாசத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு பின்னர் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு புதிய சிலையானது கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்குப் பதிலாக புதிய கல் சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது நேற்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒரு நாள் சயனவாசத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு பின்னர் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு புதிய சிலையானது கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X