என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
அன்பின் வடிவமாக சிவபெருமான் இருக்கிறார் என்பதை தத்துவார்த்தமாக எடுத்துரைத்த திருமூலர், அந்த ஈசனை கைப்பற்றிச் சென்றால், முக்தியை அடையலாம். மீண்டும் பிறக்கும் நிலை வராது என்பதையும் சொல்கிறார்.
பாடல்:-
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தைப்
பேணிப் தொழுதென்ன பேறு பெற்றாரே.
விளக்கம்:- சிவபெருமான் மாணிக்கமாகவும், சக்திதேவி அந்த மாணிக்கத்தின் உள்ளே விளங்கும் மரகத ஒளியாகவும் உள்ளனர். அம்மையே இறைவனுக்கு திருமேனி என்பதால், மரகதமாய் விளங்குகிறார். பொன்னம்பலமாகிய மன்றத்தில் ஈசனான பெருமானின் திருநடனத்தைக் கண்டு தொழுது போற்றுபவர்கள், பெறும் பேற்றை என்னவென்று சொல்வது...
பாடல்:-
இருவினை நேரொப்பில் இன்னருள் சக்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தரும் எனும் ஞானத்தால் தன்செயல் அற்றால்
திரிமலம் திரிந்து சிவன் அவன் ஆமே.
பொருள்:-
நன்னெறிகளில் உள்ளம் ஒன்றியிருக்கும்போது, நல்வினைப் பயனும், தீவினைப் பயனும் ஒருவரை அணுகினால், உடல்தான் அந்த வினைகளை எதிர்கொள்ளும். அவற்றை உள்ளம் அனுபவிக்காது. அப்போது சக்தியின் அருள், குருவாக வந்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கும். அந்த நிலையில் நம் ஜீவனானது, சிவன் என்று மாறிப்போகும்.
திருமூலர் என்னும் மகா முனிவரால் இயற்றப்பட்ட திருமந்திர நூல், சிவபெருமானைத் தொழும் சைவ நெறிகளை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. உலக உயிர்களிடத்தில் அன்பை செலுத்தும் உயர்வானவராக சிவபெருமான் இருக்கிறார். அவரே உயிர்களாகவும் இருக்கிறார் என்பதைச் சொல்லும் திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்னமயன் என்று அறிந்து கொண்டேனே.
விளக்கம்:-
சிவபெருமானை என்னுடைய உள்ளத்தில் நினைத்தவுடன், அவர் உயிர்கள் அனைத்தின் நிலையை உணர்ந்து செயல்படுபவர் என்பதை அறிந்துகொண்டேன். அதே போல் மறைகள் அனைத்தும் அந்த ஈசனையே தொழுது போற்றுகின்றன. என்னுள்ளே இருக்கும் சோர்வுபடாத உள்ளொளி மிக்க விளக்காகவும் அந்த சிவனே இருக்கிறார். அவர் இயற்கையிலேயே பேரறிவானவர் என்பதையும் அறிந்து கொண்டேன்.
பாடல்:-
வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.
விளக்கம்:-
வாய் ஒன்றைச் சொல்லும் வகையிலும், மனம் வேறு சிந்திக்கும் வகையிலும், அதற்கு நேர்மாறாக செயல்படும் விதத்திலும் வாழ்வது என்பது தகுந்ததல்ல. சொல், சிந்தனை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றியிருக்கும் நிலைதான் உறுதியான வெற்றியைப் பெற்றுத் தரும். பெருமானே.. நீ தீயின் வடிவம் என்பதை நான் தெரிந்து தெளிவு பெற்றுவிட்டேன். அதில் உறுதியில்லாதவர்கள் அனைவரும், என்னை பேய் பிடித்து அலைபவன் என்கிறார்கள்.
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தைப்
பேணிப் தொழுதென்ன பேறு பெற்றாரே.
விளக்கம்:- சிவபெருமான் மாணிக்கமாகவும், சக்திதேவி அந்த மாணிக்கத்தின் உள்ளே விளங்கும் மரகத ஒளியாகவும் உள்ளனர். அம்மையே இறைவனுக்கு திருமேனி என்பதால், மரகதமாய் விளங்குகிறார். பொன்னம்பலமாகிய மன்றத்தில் ஈசனான பெருமானின் திருநடனத்தைக் கண்டு தொழுது போற்றுபவர்கள், பெறும் பேற்றை என்னவென்று சொல்வது...
பாடல்:-
இருவினை நேரொப்பில் இன்னருள் சக்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தரும் எனும் ஞானத்தால் தன்செயல் அற்றால்
திரிமலம் திரிந்து சிவன் அவன் ஆமே.
பொருள்:-
நன்னெறிகளில் உள்ளம் ஒன்றியிருக்கும்போது, நல்வினைப் பயனும், தீவினைப் பயனும் ஒருவரை அணுகினால், உடல்தான் அந்த வினைகளை எதிர்கொள்ளும். அவற்றை உள்ளம் அனுபவிக்காது. அப்போது சக்தியின் அருள், குருவாக வந்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கும். அந்த நிலையில் நம் ஜீவனானது, சிவன் என்று மாறிப்போகும்.
திருமூலர் என்னும் மகா முனிவரால் இயற்றப்பட்ட திருமந்திர நூல், சிவபெருமானைத் தொழும் சைவ நெறிகளை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. உலக உயிர்களிடத்தில் அன்பை செலுத்தும் உயர்வானவராக சிவபெருமான் இருக்கிறார். அவரே உயிர்களாகவும் இருக்கிறார் என்பதைச் சொல்லும் திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்னமயன் என்று அறிந்து கொண்டேனே.
விளக்கம்:-
சிவபெருமானை என்னுடைய உள்ளத்தில் நினைத்தவுடன், அவர் உயிர்கள் அனைத்தின் நிலையை உணர்ந்து செயல்படுபவர் என்பதை அறிந்துகொண்டேன். அதே போல் மறைகள் அனைத்தும் அந்த ஈசனையே தொழுது போற்றுகின்றன. என்னுள்ளே இருக்கும் சோர்வுபடாத உள்ளொளி மிக்க விளக்காகவும் அந்த சிவனே இருக்கிறார். அவர் இயற்கையிலேயே பேரறிவானவர் என்பதையும் அறிந்து கொண்டேன்.
பாடல்:-
வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.
விளக்கம்:-
வாய் ஒன்றைச் சொல்லும் வகையிலும், மனம் வேறு சிந்திக்கும் வகையிலும், அதற்கு நேர்மாறாக செயல்படும் விதத்திலும் வாழ்வது என்பது தகுந்ததல்ல. சொல், சிந்தனை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றியிருக்கும் நிலைதான் உறுதியான வெற்றியைப் பெற்றுத் தரும். பெருமானே.. நீ தீயின் வடிவம் என்பதை நான் தெரிந்து தெளிவு பெற்றுவிட்டேன். அதில் உறுதியில்லாதவர்கள் அனைவரும், என்னை பேய் பிடித்து அலைபவன் என்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ளது, பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ளது, காருகுறிச்சி என்ற ஊர். கன்னடியன் கால்வாயின் வடகரையில் அமைந்திருக்கும் வளம்மிக்க ஊர் இது.
இங்கு பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
தல வரலாறு
கி.பி. 655-ம் ஆண்டில் இந்தப் பகுதியை பூதல வீர உதய மார்த்தாண்டன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அதோடு அவனது மனைவியும் சில கருத்து வேறுபாடு காரணமாக அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாள். இதனால் மனமுடைந்து போன மன்னன், இத்தலம் வந்து, குலசகேரநாதரை மனமுருக வேண்டினான்.
இதையடுத்து சில நாட்களிலேயே மன்னனின் மனைவி, அவனைத் தேடி வந்தாள். அவளுடன் இணைந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திய மன்னனுக்கு, சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது. மன்னனின் வம்சம் விருத்தியாக அருள்புரிந்ததால், இத்தல இறைவனுக்கு ‘வம்ச விருத்தீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.
இத்தல அம்பாளான சிவகாமி அம்மன், மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணை கொண்ட நாயகியாகவும் திகழ்கிறார். அம்பாள் நின்ற கோலத்தில், தனது வலது கரத்தில் நீலோற்பவ மலரை ஏந்தியபடியும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறை விமானம் ‘கஜபிருஷ்ட’ கலை அம்சத்தில் வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் மூலவராக குலசேகரநாதர் எழுந்தருளியுள்ளார். மகா மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர்- சிவகாமி அம்மன் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டப வாசலில் விநாயகர், சுப்பிரமணியர் இருவரும் காட்சி தருகின்றனர்.
களத்திர தோஷம் இருப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இன்றி தவிப்பவர்கள், தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், இறைவன், இறைவியின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியரும், விரைவிலேயே ஒன்றாக இணைந்துவிடுவர்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, திரயோதசி திதிகளில் ‘துளசி விவாக உற்சவம்’ நடத்தப்படுகிறது. திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர், மனம் ஒத்து இணைந்து வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்றாக கூடி வாழவும் பரிகார விழாவாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுறிச்சி திருத்தலம் உள்ளது.
இங்கு பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
தல வரலாறு
கி.பி. 655-ம் ஆண்டில் இந்தப் பகுதியை பூதல வீர உதய மார்த்தாண்டன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அதோடு அவனது மனைவியும் சில கருத்து வேறுபாடு காரணமாக அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாள். இதனால் மனமுடைந்து போன மன்னன், இத்தலம் வந்து, குலசகேரநாதரை மனமுருக வேண்டினான்.
இதையடுத்து சில நாட்களிலேயே மன்னனின் மனைவி, அவனைத் தேடி வந்தாள். அவளுடன் இணைந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திய மன்னனுக்கு, சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது. மன்னனின் வம்சம் விருத்தியாக அருள்புரிந்ததால், இத்தல இறைவனுக்கு ‘வம்ச விருத்தீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.
இத்தல அம்பாளான சிவகாமி அம்மன், மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணை கொண்ட நாயகியாகவும் திகழ்கிறார். அம்பாள் நின்ற கோலத்தில், தனது வலது கரத்தில் நீலோற்பவ மலரை ஏந்தியபடியும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறை விமானம் ‘கஜபிருஷ்ட’ கலை அம்சத்தில் வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் மூலவராக குலசேகரநாதர் எழுந்தருளியுள்ளார். மகா மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர்- சிவகாமி அம்மன் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டப வாசலில் விநாயகர், சுப்பிரமணியர் இருவரும் காட்சி தருகின்றனர்.
களத்திர தோஷம் இருப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இன்றி தவிப்பவர்கள், தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், இறைவன், இறைவியின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியரும், விரைவிலேயே ஒன்றாக இணைந்துவிடுவர்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, திரயோதசி திதிகளில் ‘துளசி விவாக உற்சவம்’ நடத்தப்படுகிறது. திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர், மனம் ஒத்து இணைந்து வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்றாக கூடி வாழவும் பரிகார விழாவாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுறிச்சி திருத்தலம் உள்ளது.
முதல் முறையாக மாலை அணிந்து வரும் கன்னி ஐயப்பன் சாமிகள் எருமேலியில் பேட்டை துள்ளிய பின்புதான் சபரிமலை பயணத்தை தொடருவார்கள்.
சுவாமி ஐயப்பன் புலிப்பால் தேடிச்சென்றபோது எருமேலியில் மகிஷியை அழித்தார். எருமை தலையுள்ள மகிஷியை அழித்த இடம் எருமைக்கொல்லி என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது "எருமேலியாக”மாறிவிட்டது. இங்கு ஐயப்பன் கையில் வில் ஏந்தியபடி நிற்கிறார். மற்றும் பகவதி, நாகராஜர் சிலைகளும் உள்ளன. முதல் முறையாக மாலை அணிந்து வரும் கன்னி ஐயப்பன் சாமிகள் எருமேலியில் பேட்டை துள்ளிய பின்புதான் சபரிமலை பயணத்தை தொடருவார்கள்.
ஐயப்பனின் உற்ற நண்பரான வாவர் பள்ளியும் இங்குதான் உள்ளது. எருமேலி பேட்டை துள்ளி வரும் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதிக்கு சென்று தொழுகை நடத்துவார்கள். அங்கும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. பேட்டை துள்ளல் கொச்சம்பலத்தில் தொடங்கி வலிய அம்பலத்தில் முடிவடைகிறது.
ஐயப்பனின் உற்ற நண்பரான வாவர் பள்ளியும் இங்குதான் உள்ளது. எருமேலி பேட்டை துள்ளி வரும் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதிக்கு சென்று தொழுகை நடத்துவார்கள். அங்கும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. பேட்டை துள்ளல் கொச்சம்பலத்தில் தொடங்கி வலிய அம்பலத்தில் முடிவடைகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு 130 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
நிலமகள் பச்சை பட்டு உடுத்தியது போன்ற அடர்ந்து படர்ந்த இயற்கை வனப்பை கொண்டது கேரள தேசம். பார்ப்போரின் கண்களை கொள்ளையடிக்கும் அனைத்து அம்சங்களும் கொட்டிக்கிடக்கும் சொர்க்கபூமி என்றும் சொல்லலாம். அதனால் தான் இன்றைக்கும் அது கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படுகிறது.
உல்லாசமாக படகு சவாரி செய்ய வேண்டுமா?, கடற்கரையில் படுத்து சூரிய குளியலை கொண்டாட வேண்டுமா?, உயர்ந்து நிற்கும் அணைகளை பார்க்க வேண்டுமா?, கண்ணையும், உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண தோட்டங்களை பார்க்க வேண்டுமா? அனைத்தையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது கேரளா.
அருளைத்தரும் தேசம்
அப்படிப்பட்ட கேரளாவில்தான் அனைத்து பக்தர்களையும் அன்போடு அழைக்கும் சுவாமி ஐயப்பனும் குடிகொண்டுள்ளார். அதனால் சுவாமி ஐயப்பனின் அள்ள அள்ள குறையாத அருளைத்தரும் தேசமாகவும் கேரளா இருந்து கொண்டிருக்கிறது.
கொச்சின் தேவஸ்தானம், குருவாயூர் தேவஸ்தானம், கூடல்மாணிக்கம் தேவஸ்தானம், மலபார் தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்தானம் என 5 தேவஸ்தானங்கள் உள்ளன. கொச்சின் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 450 கோவில்கள் செயல்பட்டு வருகிறது. குருவாயூர் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 13 கோவில்களும், கூடல் மாணிக்கம் தேவஸ்தானத்தின் கீழ் 11 கோவில்களும், மலபார் தேவஸ்தானத்தின் கீழ் 1400 கோவில்களும் உள்ளன.
தேவதை கோவில்கள்
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 1250 கோவில்கள் உள்ளன. இவற்றில் சிவன் கோவில்கள் -312, மகாவிஷ்ணு மற்றும் கிருஷ்ணன் கோவில்கள்- 212, தேவி கோவில்கள்- 388, சபரிமலை உட்பட ஐயப்பன் கோவில்கள்-195, கணபதி கோவில்கள் -32, சுப்பிரமணியசாமி கோவில்கள் -35, ராமர்-லெட்சுமணர் கோவில்கள்-7, நரசிங்கமூர்த்தி கோவில்கள்-8, சரஸ்வதி தேவி கோவில்கள் -2 மற்றும் பிற தேவதை கோவில்கள் 59 உள்பட 1250 கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களின் வருமானம் அடிப்படையில் 237 கோவில்கள் முதன்மை பட்டியலிலும், 479 கோவில்கள் இரண்டாவது பட்டியலிலும், 482 கோவில்கள் 3-வது பட்டியலிலும் இணைக்கப்பட்டு உள்ளது.
முதல் பட்டியலில் உள்ள கோவில்களில் தினசரி 3 வேளைகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இரண்டாவது பட்டியலில் உள்ள கோவில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 2 வேளைகளில் மட்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 3-வது பட்டியலில் உள்ள கோவில்களில் ஒரு முறை மட்டுமே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
130 நாட்கள் திறந்திருக்கும்
இவற்றில் மிக முக்கிய முதன்மையான கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. சர்வதேச புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு நிகரான தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது உண்டு. அது மட்டுமின்றி ஆண்டு திருவிழா 10 நாட்கள், ஓணம், விஷு பண்டிகை என சிறப்பு தினங்களுக்கும் திறக்கப்படும். அதன்படி ஆண்டுக்கு 130 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நாட்களில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருமுடி கட்டி வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. நெய்யபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக வழிபாடுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடத்தப்படுகிறது. கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து ஐயப்ப பக்தர்கள் இந்த பூஜை வழிபாடுகளை நடத்துகிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு
ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம், அரவணை வழங்கப்படுகிறது. அங்குகிடைக்கும் அரவணையும், அப்பமும் சுவையின் உச்சம் என்றே சொல்லலாம். அது ஐயப்பனின் அருள் பிரசாதம் என்பதால் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும் போது அவற்றை வாங்கி செல்வதை ஒரு சம்பிரதாயமாகவே கொண்டுள்ளனர். அந்த பிரசாதத்தை கொண்டு வந்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது.சபரிமலையில் கடந்த 10 ஆண்டுகளாக சாமி தரினத்திற்காக ஆன்லைன் முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவு முறைப்படி வரும் ஐயப்ப பக்தர்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு, விரைவு தரிசனத்திற்கான வசதிகள் இதன் மூலம் பக்தர்களுக்கு கிடைக்கிறது. முன்பதிவு செய்யும் பக்தர்கள், வழக்கமான பாதையல்லாமல் தனிவரிசையில் தாமதம் இல்லாமல் தரிசனம் செய்யலாம். இது பக்தர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. இந்த வசதியினை கேரள போலீசார் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்தி வருகிறார்கள்.
ரூ.200 கோடிக்கு மேல் சேதம்
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் இந்த ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை பக்தர்களின் வருகையை பல்வேறு வகைகளில் கண்காணிக்க போலீசாருக்கு உதவிகரமாக இருந்தது. சபரிமலை கோவிலின் நடை வருமானத்தை வைத்துதான் திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பெரும்பாலான கோவில்களில் அன்றாட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தது.
2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சுமார் ரூ.200 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக அப்போது கணக்கிடப்பட்டது. அதை தொடர்ந்து, பம்பையில் கட்டிடங்கள் கட்ட நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடைகள் மூலமாக கிடைக்கும் வருமானம் பெருமளவு குறைந்தது.
அதற்கு அடுத்ததாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொேரானா என்ற கண்ணுக்கு தெரியாத அரக்கனின் விஸ்வரூப ஆட்டம் ஆரம்பமானது. அது மனித இனத்தை குறிவைத்து உயிர்களை பறித்துக்கொண்டிருந்தது. அதில் இருந்து தப்பிக்க ழுழு ஊரடங்குகள் போடப்பட்டன. அப்போது மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் கோவில்களும் மூடப்பட்டன. அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினார்கள். கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. பக்தர்களால் நிரம்பி வழிந்த கோவில்கள் பக்தர்கள் இல்லாமல் காட்சி அளித்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சரண கோஷம்
அது சபரிமலையிலும் எதிரொலித்தது. அங்கு தரிசனத்திற்காக பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற தலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அந்த நிலை படிப்படியாக மாறி தற்போது பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் இருந்தும் கடும் விரதமிருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு பெருவழிபாதை வழியாகவும், பம்பையில் இருந்தும் நடந்து சென்று அய்யன் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பி இருக்கிறார்கள். அதனால் இந்த முறை சபரிமலையில் சுவாமியே சரணம் ஐயப்பா... என்ற சரணகோஷம் விண்ணை பிளந்தது என்றால் மிகையில்லை.
கடன் எடுக்க வேண்டிய நிலை
இது குறித்து தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தெரிவித்ததாவது:-
2019-2020-ம் ஆண்டு சீசனில் சபரிமலை நடை வருமானம் ரூ.269 கோடியாக இருந்தது. இந்த நிலையில், கொரோனா பேரிடர் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2020-2021-ம் ஆண்டு சீசனில் தினசரி 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல, மகர விளக்கு நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்காரணமாக பக்தர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் நடை வருமானம் ரூ.21 கோடியாக குறைந்தது. அதாவது முந்தைய ஆண்டை விட 92 சதவீத வருமானம் குறைந்து போனது. சீசன் நாட்களில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அன்றாட செலவு ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சமாக இருந்து வந்தது. இந்த நிலையில், வருமானம் குறைந்ததால், அன்றாட செலவுக்கு கூட கடன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் 2 கட்டமாக கேரள அரசு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.50 கோடி வழங்கியது. மேலும் கோவிலுக்கு சொந்தமான ரூ.1,500 கோடி மதிப்பிலான நகைகள் பாரத ரிசர்வ் வங்கியில் பத்திரமாக மாற்றப்பட்டது.
19.39 லட்சம் பக்தர்கள் தரிசனம்
தற்போது 2021-2022 -ம் ஆண்டு சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலை வருமானம் ரூ.151 கோடியாக உயர்ந்து உள்ளது. இதில் காணிக்கையாக ரூ.61.5 கோடியும், அரவணை விற்பனை மூலம் ரூ.54.5 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.7 கோடியும் கிடைத்து உள்ளது. அதுமட்டுமின்றி சீசன் வருவாயில் நெய்யபிஷேகம் உள்ளிட்ட இதர வருவாயும் அடங்கும்.
சீசனையொட்டி, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 23 லட்சத்து 98 ஆயிரத்து 512 பக்தர்கள் முன்பதிவு செய்தனர். அதில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 448 பேர் மட்டுமே சபரிமலையில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். இது 71.60 சதவீதம் ஆகும். அது மட்டுமின்றி உடனடி முன் பதிவு அடிப்படையில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 437 பேர் தரிசனம் செய்தனர். நடப்பு சீசனில் மொத்தம் 19 லட்சத்து 39 ஆயிரத்து 575 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உல்லாசமாக படகு சவாரி செய்ய வேண்டுமா?, கடற்கரையில் படுத்து சூரிய குளியலை கொண்டாட வேண்டுமா?, உயர்ந்து நிற்கும் அணைகளை பார்க்க வேண்டுமா?, கண்ணையும், உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண தோட்டங்களை பார்க்க வேண்டுமா? அனைத்தையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது கேரளா.
அருளைத்தரும் தேசம்
அப்படிப்பட்ட கேரளாவில்தான் அனைத்து பக்தர்களையும் அன்போடு அழைக்கும் சுவாமி ஐயப்பனும் குடிகொண்டுள்ளார். அதனால் சுவாமி ஐயப்பனின் அள்ள அள்ள குறையாத அருளைத்தரும் தேசமாகவும் கேரளா இருந்து கொண்டிருக்கிறது.
கொச்சின் தேவஸ்தானம், குருவாயூர் தேவஸ்தானம், கூடல்மாணிக்கம் தேவஸ்தானம், மலபார் தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்தானம் என 5 தேவஸ்தானங்கள் உள்ளன. கொச்சின் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 450 கோவில்கள் செயல்பட்டு வருகிறது. குருவாயூர் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 13 கோவில்களும், கூடல் மாணிக்கம் தேவஸ்தானத்தின் கீழ் 11 கோவில்களும், மலபார் தேவஸ்தானத்தின் கீழ் 1400 கோவில்களும் உள்ளன.
தேவதை கோவில்கள்
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 1250 கோவில்கள் உள்ளன. இவற்றில் சிவன் கோவில்கள் -312, மகாவிஷ்ணு மற்றும் கிருஷ்ணன் கோவில்கள்- 212, தேவி கோவில்கள்- 388, சபரிமலை உட்பட ஐயப்பன் கோவில்கள்-195, கணபதி கோவில்கள் -32, சுப்பிரமணியசாமி கோவில்கள் -35, ராமர்-லெட்சுமணர் கோவில்கள்-7, நரசிங்கமூர்த்தி கோவில்கள்-8, சரஸ்வதி தேவி கோவில்கள் -2 மற்றும் பிற தேவதை கோவில்கள் 59 உள்பட 1250 கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களின் வருமானம் அடிப்படையில் 237 கோவில்கள் முதன்மை பட்டியலிலும், 479 கோவில்கள் இரண்டாவது பட்டியலிலும், 482 கோவில்கள் 3-வது பட்டியலிலும் இணைக்கப்பட்டு உள்ளது.
முதல் பட்டியலில் உள்ள கோவில்களில் தினசரி 3 வேளைகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இரண்டாவது பட்டியலில் உள்ள கோவில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 2 வேளைகளில் மட்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 3-வது பட்டியலில் உள்ள கோவில்களில் ஒரு முறை மட்டுமே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
130 நாட்கள் திறந்திருக்கும்
இவற்றில் மிக முக்கிய முதன்மையான கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. சர்வதேச புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு நிகரான தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது உண்டு. அது மட்டுமின்றி ஆண்டு திருவிழா 10 நாட்கள், ஓணம், விஷு பண்டிகை என சிறப்பு தினங்களுக்கும் திறக்கப்படும். அதன்படி ஆண்டுக்கு 130 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நாட்களில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருமுடி கட்டி வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. நெய்யபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக வழிபாடுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடத்தப்படுகிறது. கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து ஐயப்ப பக்தர்கள் இந்த பூஜை வழிபாடுகளை நடத்துகிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு
ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம், அரவணை வழங்கப்படுகிறது. அங்குகிடைக்கும் அரவணையும், அப்பமும் சுவையின் உச்சம் என்றே சொல்லலாம். அது ஐயப்பனின் அருள் பிரசாதம் என்பதால் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும் போது அவற்றை வாங்கி செல்வதை ஒரு சம்பிரதாயமாகவே கொண்டுள்ளனர். அந்த பிரசாதத்தை கொண்டு வந்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது.சபரிமலையில் கடந்த 10 ஆண்டுகளாக சாமி தரினத்திற்காக ஆன்லைன் முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவு முறைப்படி வரும் ஐயப்ப பக்தர்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு, விரைவு தரிசனத்திற்கான வசதிகள் இதன் மூலம் பக்தர்களுக்கு கிடைக்கிறது. முன்பதிவு செய்யும் பக்தர்கள், வழக்கமான பாதையல்லாமல் தனிவரிசையில் தாமதம் இல்லாமல் தரிசனம் செய்யலாம். இது பக்தர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. இந்த வசதியினை கேரள போலீசார் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்தி வருகிறார்கள்.
ரூ.200 கோடிக்கு மேல் சேதம்
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் இந்த ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை பக்தர்களின் வருகையை பல்வேறு வகைகளில் கண்காணிக்க போலீசாருக்கு உதவிகரமாக இருந்தது. சபரிமலை கோவிலின் நடை வருமானத்தை வைத்துதான் திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பெரும்பாலான கோவில்களில் அன்றாட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தது.
2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சுமார் ரூ.200 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக அப்போது கணக்கிடப்பட்டது. அதை தொடர்ந்து, பம்பையில் கட்டிடங்கள் கட்ட நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடைகள் மூலமாக கிடைக்கும் வருமானம் பெருமளவு குறைந்தது.
அதற்கு அடுத்ததாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொேரானா என்ற கண்ணுக்கு தெரியாத அரக்கனின் விஸ்வரூப ஆட்டம் ஆரம்பமானது. அது மனித இனத்தை குறிவைத்து உயிர்களை பறித்துக்கொண்டிருந்தது. அதில் இருந்து தப்பிக்க ழுழு ஊரடங்குகள் போடப்பட்டன. அப்போது மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் கோவில்களும் மூடப்பட்டன. அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினார்கள். கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. பக்தர்களால் நிரம்பி வழிந்த கோவில்கள் பக்தர்கள் இல்லாமல் காட்சி அளித்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சரண கோஷம்
அது சபரிமலையிலும் எதிரொலித்தது. அங்கு தரிசனத்திற்காக பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற தலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அந்த நிலை படிப்படியாக மாறி தற்போது பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் இருந்தும் கடும் விரதமிருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு பெருவழிபாதை வழியாகவும், பம்பையில் இருந்தும் நடந்து சென்று அய்யன் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பி இருக்கிறார்கள். அதனால் இந்த முறை சபரிமலையில் சுவாமியே சரணம் ஐயப்பா... என்ற சரணகோஷம் விண்ணை பிளந்தது என்றால் மிகையில்லை.
கடன் எடுக்க வேண்டிய நிலை
இது குறித்து தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தெரிவித்ததாவது:-
2019-2020-ம் ஆண்டு சீசனில் சபரிமலை நடை வருமானம் ரூ.269 கோடியாக இருந்தது. இந்த நிலையில், கொரோனா பேரிடர் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2020-2021-ம் ஆண்டு சீசனில் தினசரி 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல, மகர விளக்கு நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்காரணமாக பக்தர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் நடை வருமானம் ரூ.21 கோடியாக குறைந்தது. அதாவது முந்தைய ஆண்டை விட 92 சதவீத வருமானம் குறைந்து போனது. சீசன் நாட்களில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அன்றாட செலவு ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சமாக இருந்து வந்தது. இந்த நிலையில், வருமானம் குறைந்ததால், அன்றாட செலவுக்கு கூட கடன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் 2 கட்டமாக கேரள அரசு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.50 கோடி வழங்கியது. மேலும் கோவிலுக்கு சொந்தமான ரூ.1,500 கோடி மதிப்பிலான நகைகள் பாரத ரிசர்வ் வங்கியில் பத்திரமாக மாற்றப்பட்டது.
19.39 லட்சம் பக்தர்கள் தரிசனம்
தற்போது 2021-2022 -ம் ஆண்டு சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலை வருமானம் ரூ.151 கோடியாக உயர்ந்து உள்ளது. இதில் காணிக்கையாக ரூ.61.5 கோடியும், அரவணை விற்பனை மூலம் ரூ.54.5 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.7 கோடியும் கிடைத்து உள்ளது. அதுமட்டுமின்றி சீசன் வருவாயில் நெய்யபிஷேகம் உள்ளிட்ட இதர வருவாயும் அடங்கும்.
சீசனையொட்டி, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 23 லட்சத்து 98 ஆயிரத்து 512 பக்தர்கள் முன்பதிவு செய்தனர். அதில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 448 பேர் மட்டுமே சபரிமலையில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். இது 71.60 சதவீதம் ஆகும். அது மட்டுமின்றி உடனடி முன் பதிவு அடிப்படையில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 437 பேர் தரிசனம் செய்தனர். நடப்பு சீசனில் மொத்தம் 19 லட்சத்து 39 ஆயிரத்து 575 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
108 வைணவ திருத்தலங்களில் இரண்டாவது திவ்ய தேசமாக கருதப்படுவது திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலாகும்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளது. இங்கு கமலவல்லி நாச்சியார், அழகியமணவாள பெருமாள் ஆகியோர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். மேலும் இக்கோவில் மங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாகும்.
மேலும் திருப்பானாழ்வார் அவதரித்த திருத்தலமாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பரமபதவாசல் திறப்பது போன்ற அனைத்து உற்சவங்களும் இக்கோவிலில் உள்ள தாயாருக்கும் நடைபெறுகிறது.
திருஅத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பகல் பத்து உற்சவம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி, பகலில் ஆகம விதிப்படி பூஜைகள், ஆராதனை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணிவரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபம் சாதித்தல் நடக்கிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளையை தினம் மாலை கமலவல்லி நாச்சியார் கோவிலில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியிலும் பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று திருவிழாவின் நிறைவு நாளன்று தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் நடைபெறும்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளது. இங்கு கமலவல்லி நாச்சியார், அழகியமணவாள பெருமாள் ஆகியோர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். மேலும் இக்கோவில் மங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாகும்.
மேலும் திருப்பானாழ்வார் அவதரித்த திருத்தலமாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பரமபதவாசல் திறப்பது போன்ற அனைத்து உற்சவங்களும் இக்கோவிலில் உள்ள தாயாருக்கும் நடைபெறுகிறது.
திருஅத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பகல் பத்து உற்சவம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி, பகலில் ஆகம விதிப்படி பூஜைகள், ஆராதனை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணிவரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபம் சாதித்தல் நடக்கிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளையை தினம் மாலை கமலவல்லி நாச்சியார் கோவிலில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியிலும் பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று திருவிழாவின் நிறைவு நாளன்று தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் நடைபெறும்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 11, 12-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியார் இருநாட்டு மீனவர்களுக்கும் கருணை தெய்வமாக விளங்குகிறார். ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்ல தேவையில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 11, 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவில் இலங்கையில் உள்ள பக்தர்கள் 500 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும், கொரோனா பரவல் உள்ளதால் தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டில் இருந்து வெளியாகி உள்ள தகவல், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டும் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக பக்தர்கள் யாரும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் அதே காரணத்தை காட்டி தமிழக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையிலுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்பது போல் தமிழகத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 மீனவர்களை மட்டுமாவது இந்த ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கூடிய திருவிழாவாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி அனுமதி வழங்க வேண்டும்” என்றனர்.
திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்ல தேவையில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 11, 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவில் இலங்கையில் உள்ள பக்தர்கள் 500 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும், கொரோனா பரவல் உள்ளதால் தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டில் இருந்து வெளியாகி உள்ள தகவல், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டும் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக பக்தர்கள் யாரும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் அதே காரணத்தை காட்டி தமிழக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையிலுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்பது போல் தமிழகத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 மீனவர்களை மட்டுமாவது இந்த ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கூடிய திருவிழாவாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி அனுமதி வழங்க வேண்டும்” என்றனர்.
பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று திருப்பதி- திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
சர்வ தரிசனம் டோக்கன்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என 28-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
எனவே பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று திருப்பதி- திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சர்வ தரிசனம் டோக்கன்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என 28-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
எனவே பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று திருப்பதி- திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்தடைந்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுக்கள் சார்பில், தைப்பூச திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகப்பெருமானுக்கு படைத்து தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு எடப்பாடி பக்தர்களின் பஞ்சாமிர்த குழுவினர் பழனிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள், பழனி அடிவார பகுதியில் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். இதற்கிடையே எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஏராளமான பக்தர்கள் நேற்று பழனிக்கு வந்தடைந்தனர்.
பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் காவடிகளுடன் வலம் வந்து பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதிவீதி வழியாக பழனி மலைக்கோவிலை அடைந்தனர். அவர்கள் சாயரட்சை கட்டளை பூஜை, ராக்கால பூஜையிலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்கள் தயாரித்த பஞ்சாமிர்தம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பிரசாதமாக அவர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து மலைக்கோவிலில் எடப்பாடி பக்தர்கள் 500 பேர் நேற்று இரவு முழுவதும் தங்கி இருந்தனர்.
பழனி மலைக்கோவிலில் இரவு தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் எடப்பாடி பக்தர்கள், பூக்களால் ‘ஓம்’ வடிவில் வரைந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது.
அதன்படி இந்த ஆண்டு எடப்பாடி பக்தர்களின் பஞ்சாமிர்த குழுவினர் பழனிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள், பழனி அடிவார பகுதியில் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். இதற்கிடையே எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஏராளமான பக்தர்கள் நேற்று பழனிக்கு வந்தடைந்தனர்.
பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் காவடிகளுடன் வலம் வந்து பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதிவீதி வழியாக பழனி மலைக்கோவிலை அடைந்தனர். அவர்கள் சாயரட்சை கட்டளை பூஜை, ராக்கால பூஜையிலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்கள் தயாரித்த பஞ்சாமிர்தம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பிரசாதமாக அவர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து மலைக்கோவிலில் எடப்பாடி பக்தர்கள் 500 பேர் நேற்று இரவு முழுவதும் தங்கி இருந்தனர்.
பழனி மலைக்கோவிலில் இரவு தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் எடப்பாடி பக்தர்கள், பூக்களால் ‘ஓம்’ வடிவில் வரைந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் சக்தி வாய்ந்த அம்மன் கோவிலாகும். ஊருக்கு தென்புறத்தில் கோவில் கொண்டுள்ள பட்டுக்கோட்டை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. ஒரு காலத்தில் நகரின் மேல் திசையில் கோட்டை கொத்தளத்துடன் விளங்கிய பட்டுக்கோட்டை அந்நியரின் படையெடுப்பால் கோட்டை தகர்க்கப்பட்டு சிற்றூராக இருந்து வந்தது. நாளடைவில் நாடியம்மன் தென் திசையில் அமர்ந்து வடபுறத்தில் கோட்டை கொத்தளம் இழந்து சிற்றூராய் சிதறிக்கிடந்த ஊரை செழிப்பாக்கி வளமிக்க நகராக்கிய நாடியம்மனுக்கு ஊர் கூடி இன்று(வியாழக்கிழமை) குடமுழுக்கு விழா நடத்துகிறது. கடந்த 2001-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை நாடியம்மனுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 23-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை ஆகியவையும், 24-ந்தேதி புனித மண் எடுத்து பூமாதேவி பூஜையும், அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று இரவு ஐந்தாம் கால பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் ஆறாம் கால பூஜை தொடங்கி யாத்ரா தானம் செய்து கடம் புறப்பட்டு கோவில் விமான குடமுழுக்கும், தொடர்ந்து நாடியம்மனுக்கு குடமுழுக்கும் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குடமுழுக்கு விழாக்குழு தலைவர் பாரத் தலைமையில் விழாக்குழுவினர், திருப்பணி உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள், காப்புக்கட்டுதாரர்கள் செய்துவருகின்றனர். விழாவில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை நாடியம்மனுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 23-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை ஆகியவையும், 24-ந்தேதி புனித மண் எடுத்து பூமாதேவி பூஜையும், அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று இரவு ஐந்தாம் கால பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் ஆறாம் கால பூஜை தொடங்கி யாத்ரா தானம் செய்து கடம் புறப்பட்டு கோவில் விமான குடமுழுக்கும், தொடர்ந்து நாடியம்மனுக்கு குடமுழுக்கும் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குடமுழுக்கு விழாக்குழு தலைவர் பாரத் தலைமையில் விழாக்குழுவினர், திருப்பணி உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள், காப்புக்கட்டுதாரர்கள் செய்துவருகின்றனர். விழாவில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பக்தர்கள், மாத ஏகாதசியில், மாதம் தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை சேவிப்பவர்கள் இருக்கிறார்கள்.
ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்!
அந்த வகையில், தை மாத ஏகாதசி ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. நாளைய தினம், 28.1.22 வெள்ளிக் கிழமை சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்குங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் உங்களுக்குப் பிடித்தமான உறவுக்காரர்கள் நண்பர்கள் என யார் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் என உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
புளியோதரை அல்லது தயிர்சாதம் வழங்குங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் சீரும் சிறப்புமாக, செம்மையுடன் வாழ்வீர்கள்.
ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்!
அந்த வகையில், தை மாத ஏகாதசி ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. நாளைய தினம், 28.1.22 வெள்ளிக் கிழமை சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்குங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் உங்களுக்குப் பிடித்தமான உறவுக்காரர்கள் நண்பர்கள் என யார் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் என உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
புளியோதரை அல்லது தயிர்சாதம் வழங்குங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் சீரும் சிறப்புமாக, செம்மையுடன் வாழ்வீர்கள்.
இந்த மாதம் 31-ந் தேதி முதல் ஜூலை மாதம் 28-ந் தேதி வரை மூலவர் சுந்தரராஜ பெருமாள், தேவியர்களுக்கும், பூமாலை பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறாது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை தைமாத நிறை அமாவாசையன்று நடைபெறும் திருத்தைலக்காப்பு உற்சவம் சிறப்பு பெற்றதாகும். இதையொட்டி தை மாத அமாவாசை முதல் ஆடி மாத அமாவாசை வரை 6 மாதங்கள் திருத்தைலம் சாத்து படி நடைபெறும்.
இதையொட்டி (இந்த மாதம் 31-ந் தேதி முதல் ஜூலை மாதம் 28-ந் தேதி வரை) மூலவர் சுந்தரராச பெருமாள், தேவியர்களுக்கும், பூமாலை பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறாது. எனவே, பக்தர்கள் நித்தியப்படி பூமாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்து படி நிகழ்வுகள் அனைத்தும் உற்சவர் கள்ளழகர் பெருமாளுக்கும், தேவியர்களுக்கு மட்டுமே காணிக்கையாக செலுத்தலாம்.
எனவே பக்தர்கள் மூலவரை தரிசிக்க இயலாது. ஆனால் உற்சவரை வணங்கி அருள் பெற்று செல்லலாம். எனவே வருகின்ற 31-ந் தேதி (திங்கட்கிழமை) தை அமாவாசை அன்று பகல் 12.45 மணிக்கு மேல் 1-30 மணிக்குள் கோவிலில் மூலவருக்கு தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறுகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் வௌியிட்டு உள்ளது.
இதையொட்டி (இந்த மாதம் 31-ந் தேதி முதல் ஜூலை மாதம் 28-ந் தேதி வரை) மூலவர் சுந்தரராச பெருமாள், தேவியர்களுக்கும், பூமாலை பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறாது. எனவே, பக்தர்கள் நித்தியப்படி பூமாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்து படி நிகழ்வுகள் அனைத்தும் உற்சவர் கள்ளழகர் பெருமாளுக்கும், தேவியர்களுக்கு மட்டுமே காணிக்கையாக செலுத்தலாம்.
எனவே பக்தர்கள் மூலவரை தரிசிக்க இயலாது. ஆனால் உற்சவரை வணங்கி அருள் பெற்று செல்லலாம். எனவே வருகின்ற 31-ந் தேதி (திங்கட்கிழமை) தை அமாவாசை அன்று பகல் 12.45 மணிக்கு மேல் 1-30 மணிக்குள் கோவிலில் மூலவருக்கு தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறுகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் வௌியிட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கையும் முறையாக மேற்கொள்ளப்பட வில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கோவிலுக்குள் வரும் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர வாசல் வழியாக உள்ளே வருகின்றனர்.
கடந்த முறை கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானியங்கி கருவி மூலம் கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பம் கண்டறியப்பட்டது. ஆனால் அதுபோன்ற எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கையும் கோவிலில் முறையாக மேற்கொள்ளப்பட வில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் 2 தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆதாரத்தை காண்பித்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது அதனை முறையாக கடைப்பிடிக்க வில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த முறை கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானியங்கி கருவி மூலம் கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பம் கண்டறியப்பட்டது. ஆனால் அதுபோன்ற எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கையும் கோவிலில் முறையாக மேற்கொள்ளப்பட வில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் 2 தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆதாரத்தை காண்பித்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது அதனை முறையாக கடைப்பிடிக்க வில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






