என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
- பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.
நடிகர் மம்மூட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
- முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
- சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் இப்படம் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.
வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
- கூட்டநெரிசலில் உயிரிழந்த தனது ஒன்றை வயது குழந்தையின் சடலத்தை பார்த்து அழக்கூட முடியாமல் வாய் பேசமுடியாத காது கேளாத தாய் இடிந்துபோய் அமர்ந்திருந்தார்.
- இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் இரங்ல் மற்றும் தத்தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், கூட்டநெரிசலில் உயிரிழந்த தனது ஒன்றை வயது குழந்தையின் சடலத்தை பார்த்து அழக்கூட முடியாமல் அதிர்ச்சியில் இடிந்து அமர்ந்திருந்த வாய் பேசமுடியாத காது கேளாத தாயின் புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில், 'கூட்டம்' என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்…. 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி,(இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி 'கொடுத்து வைத்தவர்கள்'
ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க! அதிலும்
இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்! என்று தெரிவித்துள்ளார்.
- தலைவன் தலைவி வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் உடன் கைகோர்த்தார்.
- கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலியாகினர்.
தலைவன் தலைவி வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடித்து வருகிறார்.
பான் இந்தியா அளவில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த படத்தின் தலைப்பு மற்றும் டீசர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற இருந்தது.

ஆனால் நேற்று இரவு கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சோகத்தில் பங்கெடுக்கும் விதமாக இன்றைய நிகழ்வை படக்குழு ரத்து செய்துள்ளது. மேலும் டீசர் வெளியீட்டு நிகழ்வில் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படு me
- 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்
- நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது.
- உலகம் முழுவதும் தேவரா படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த தேவரா படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமானார்.
தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில், தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தேவரா 2 படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- பிக்பாஸ் பட்டத்தை வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை கிடைக்கும்.
- பிக்பாஸ் 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது.
100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வெல்லுகிறார்.
இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்–லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் வெளியேற்றம், தாடி பாலாஜி சம்பவம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ளன.
முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
பிக்பாஸ் 9 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் சித்து, பாரதி கண்ணம்மா ஃபரினா ஆசாத், சீரியல் நடிகை ஜனனி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உட்பட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
குறிப்பாக ஹார்ட் பீட் வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து வந்த பாடினி (அனிதா) மற்றும் கார்த்திக்குமாரின் (விஜய்) சிறு வயது காதாபாத்திரத்தில் நடித்த ரோஷனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
- பாகுபலி: தி எபிக் அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.
- இப்படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர்.
பிரபாஸ் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகத்தையும் ஒன்றாக்கி சில காட்சிகளை நீக்கி ஒரே பாகமாக பாகுபலி: தி எபிக் என்று புதிய பதிப்பாக 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம் மற்றும் திரை அனுபவத்தை தருவதற்காக படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர்.
மேலும், பாகுபலி: தி எபிக் திரைப்படம் டால்பி சினிமாவில் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.
- மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.
- பல மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நானி நடிப்பில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், 'தி பாரடைஸ்' படத்தில் SHIKANJA MAALIK என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் மோகன் பாபுவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியான போஸ்டரில் நடிகர் மோகன் பாபு, சட்டை அணியாமல் ரத்தத்தில் நனைந்த கையுடன், ஒரு சுருட்டு மற்றும் கருப்பு கண்ணாடியை அணிந்த படி தனது பயங்கரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார். போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், ஆக்சன் பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
- லோகா சாஃப்டர் 1 படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
- லோகா சாஃப்டர் 2 படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மோகன்லாலின் எம்புரான் பட வசூலை கடந்து மலையாளத்தில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.
இந்நிலையில், லோகா சாப்டர் 2 படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
- அமிதாப் பச்சன் தனது ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுப்பதையே மறுத்துவிடுவார்.
- ஒவ்வொரு வேனிலும் குறைந்தது 6 உதவியாளர்கள் வேலை செய்வார்கள்.
சினிமா என்பது சாமானியர்களுக்கு புலப்படாத ஒரு நிழல் உலகம் ஆகும். அதிலும் பாலிவுட் சினிமா எலைட் தன்மை தொக்கி நிற்கும் ஒரு மாயக் களம்.
திரைபிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளின் லக்ஸுரி வாழக்கை குறித்து அரசல் புரசல்கள் அவ்வப்போது துண்டு செய்திகள் மூலம் தெரியவருவது வழக்கம்.
அதுவும் ஆங்காங்கு பொதுவெளியில் மனம் திறக்கும் Insider-களின் மூலம் வெகுமக்களை மலைக்கவைக்கும் சில தகவல்கள் கசியும்.
அந்த வகையில் சில பாலிவுட் ஜெயண்ட் நடிகர்களின் அலம்பல்கள் குறித்து ஷூட்அவுட், மும்பை சாகா, ஜிந்தா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சஞ்சய் குப்தா சில விஷயங்களை போட்டுடைத்துள்ளார்.
அண்மையில் பங்கேற்ற பாட்கேஸ்ட் ஒன்றில் நடிகர்கள் செலவு குறித்து தயாரிப்பார்கள் புலம்பல் பற்றி பேசிய குப்தா, அமிதாப் பச்சன், ஹிரித்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் ஒரே ஒரு மேக்அப் பாய் உடன் எளிமையாக இருப்பார்கள். அமிதாப் பச்சன் எல்லாம் தனது ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுப்பதையே மறுத்துவிடுவார். அவரே பார்த்துக்கொள்வார்.
ஆனால் எனக்கு தெரிந்த சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கென கட்டாயம் 6 வேனிட்டி கேரவன்கள் வேண்டும் என கொருவர். ஆமாங்க சீரியஸா உண்மைதான். 6 வேன்கள்!
ஒரு வேன் அவர்கள் தனியாக இருப்பதற்கு, அதாவது அவர்கள் அதில் நிர்வாணமாக கூட அமர்ந்துகொண்டு Chill செய்வார்கள். மற்றொரு வேன் மேக்அப் போடுவதற்கு, அடுத்தது உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் அடங்கிய ஜிம் வேன், மற்றொன்று வருபவர்களை சந்திக்கும் மீட்டிங் பர்பஸ்க்கு, அடுத்தது அமர்ந்து சாப்பிட தனியாக ஒரு வேன், கடைசியாக ஒரு வேன், அது இந்த மற்ற 5 வேன்களில் பணி செய்யும் தங்கள் உதவியார்கள் இருப்பதற்கு, ஒவ்வொரு வேனிலும் குறைந்தது 6 உதவியாளர்கள் வேலை செய்வார்கள்.
ஜிம் வேன் என்றால் அதில் டிரெய்னர்கள் இருப்பார்கள், மேக்கப் வேன் என்றால் மேக்அப் ஆர்டிஸ்ட்கள், அந்த ஆர்டிஸ்ட்களின் அசிஸ்டண்டுகள் என இருப்பார்கள். இந்த செலவு மொத்தமும் தயாரிப்பாளர் தலையில் தான் என்று தெரிவித்தார்.
- 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.
- நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், இந்த கார் பந்தயத்திற்கு அஜித்குமார் தயாரான புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
.






