என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
    • கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார்.

    நடிகர் தனுஷ் நடித்து இயக்கி உள்ள 'இட்லி கடை' திரைப்படம் வருகிற 1-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் தனுசுடன், நித்யாமேனன், ராஜ்கிரண், அருண் விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தனது வாழ்நாளில் சந்தித்த பிரச்சனைகளை வைத்து எடுத்ததாக ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் தெரிவித்திருந்தார். மேலும் அப்போது ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசி இருந்தார்.

    விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று காலை பிரத்தியேகமான கேரவன் மூலம் நடிகர் தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா, மகன்கள் லிங்கா, யாத்ரா மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரத்தில் தனது குலதெய்வ கோவிலான கருப்பசாமியை வழிபட வந்தார்.



    கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு தனது பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதிகாலை நேரத்தில் பாதுகாவலர்களுடன் கேரவனில் வந்து வழிபாடு செய்த தனுஷ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அவரது வருகை குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் குவியத்தொடங்கினர். அவர்களுக்கு கையசைத்தபடியே தனுஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

    • தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    • இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்.

    இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படம் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக பணியாற்ற வரலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது.
    • தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தமிழ்நாட்டை போல் தெலுங்கானாவிலும் கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும் என ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது. அன்ன கொடி எப்போதோ பறந்தது. மறுபடியும் பறக்க விட்டது எனக்கு பெருமை. அதை மற்றவர்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார்.

    மேலும் நடிகர் ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பது குறித்த கேள்விக்கு, ரஜினியும் நானும் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம். ரஜினியும் நானும் கண்டிப்பாக இணைந்து நடிப்போம். ஏற்கனவே இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும், மீண்டும் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என கூறினார்.

    • ஆஸ்திரேலியா பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார் தேவா.
    • ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.

    சிட்னி:

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்.

    தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.

    இதனால் தேவா நெகிழ்ந்து போனார். இதுதொடர்பாக தேவா கூறியதாவது:

    ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது.

    எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.

    எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம்.

    இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

    சூர்யா ஜோதிகா தயாரிப்பில், தியா சூர்யா டாக்கு டிராமா இயக்கியிருக்கிறார்.

    2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் "லீடிங் லைட்" .

    சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

    திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

    உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது.

    செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.

    அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

    • மட்டி படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.
    • பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது.

    மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான Mud ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக மட்டி என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தவர் இயக்குனர் டாக்டர் பிரகபல்.

    இவர் அடுத்ததாக, அதைவிட சுவாரஸ்யமான ஒரு கதையாக கிடா சண்டை பந்தையத்தை படமாக உருவாக்கவுள்ளார்.

    இந்த படத்தில், மட்டி படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.

    இந்த படத்தின் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    ஒளிப்பதிவாளர் உதயகுமார், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார்.
    • இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    நடிகர் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் தனது 49-வது படத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    இந்நிலையில் இந்த படம் குறித்த ப்ரோமோவை அக்டோபர் 4-ந் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிம்பு- வெற்றிமாறன் இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

    இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என வெற்றி மாறன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாகனத்திற்கான அனைத்து ஆவணங்களையும் மனுவுடன் இணைதுள்ளார் துல்கர் சல்மான்.

    சொகுசு கார்களை பூடான் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டு வரப்பட்டதாக எழுந்த புகாரின் அப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தினர்.

    ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பூடான் வழியாக இந்தியாவுக்கு வரி செலுத்தாமல் காரை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் சுங்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல் செய்துள்ளா். அந்த மனுவில் "சட்டத்திற்கு உட்பட்டு சுங்க வரி செலுத்தி கார் வாங்கிய நிலையில், பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    2004 மாடல் லேண்ட் லோவர் சொகுசு வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை மனுவுடன் இணைத்துள்ளார்.

    துல்கர் சல்மான் மனு தொடர்பாக, விளக்கம் அளிக்க சுங்சுத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வருகிற 30ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

    • முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
    • வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் நேற்று (செப்டம்பர் 25) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.

    இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ.167 கோடியை கடந்தது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.

    ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருவதாக படத்தின் கதை நகர்கிறது. வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

    படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர். 

    • இட்லி கடை மாதம்பட்டி ரங்கராஜ் கதை என செய்திகள் பரவி வந்தன.

    தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வருகிற 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ஆடியோ ரலீஸ் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் கோவையில் வெளியிடப்பட்டது.

    ரிலீஸ்க்கு முந்தைய புரமோசனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதுரையில் இட்லி கடையின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வடசென்னை 2 ஆம் பாகம் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும். 2027-ல் படம் ரிலீஸ் ஆகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இன்று திருச்சியில் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யூடியூப் பிரபலம் சுதாகர் மற்றும் கோபி ஆகியோர் தனுஷிடம் கேள்வி கேட்டனர்.

    தனுஷிடம் கோபி "கோவை பக்கம் செஃப் ஒருவர் இருக்கிறார். அவருடைய கதையைத்தான் படமாக எடுத்துள்ளீர்கள் என்கிறார்கள். உண்மையா?" எனக் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு தனுஷ் "அந்த மாதிரில்லாம் இல்லங்க. சொந்த கற்பனைதான். என் கிராமத்தில் பார்த்த ஒருசில காதாபத்திரங்கள் என மனச பாதித்தது. அதை பயன்படுத்தி சொந்தமான கதை. கற்பனைக் கதை. ஒரிஜினல் கதாபாத்திரங்கள்" எனப் பதில் அளித்தார்.

    இட்லி கடை படத்தின் டிரைலர் கோவையில் வெளியான போது, தனுஷ் படத்தையும், மாதம்பட்டி ரங்கராஜ் படத்தையும் இணைத்து நெட்டிசன்கள், மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறுதான் இட்லி கடை படம் எனத் தெரிவித்து வந்தனர்.

    • தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
    • அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது.

    'மெரினா' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படங்களில் நடித்தாலும் மக்களிடையே கலவையான விமர்சனத்தை இப்படங்கள் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வசூல் செய்யவில்லை.

    தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள்.

    2013 ஆம் ஆண்டு வெளியான 'எதிர் நீச்சல்' திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொள்வதுமாக இருந்தனர்.

    இப்படியாக சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில மன கசப்புகளால் பிரிந்தனர். அதன் பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை. இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியது சர்ச்சையை எழுப்பியது. அவர் பேசுகையில், " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என பேசியது சர்ச்சையானது.

    இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக 'மதராஸி' அமேசான் ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 3-ந்தேதி வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1-ந்தேதியே வெளியாக உள்ளது.

    அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தை ஓ.டி.டி.யில் அன்றைய தினமே வெளியிட்டு நடிகர் தனுஷை குறி வைக்கிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
    • ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.

    வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், 'மதராஸி' திரைப்படம் வருகிற 1-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக வருகிற 3-ந்தேதி 'மதராஸி' அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாவது குறிப்பிடத்தக்கது.



    ×