கரூர் துயரம்: விஜய் சேதுபதி படத்தின் டீசர் வெளியீட்டு விழா ரத்து

தலைவன் தலைவி வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் உடன் கைகோர்த்தார்.கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலியாகினர்.
கரூர் துயரம்: விஜய் சேதுபதி படத்தின் டீசர் வெளியீட்டு விழா ரத்து
Published on

தலைவன் தலைவி வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பான் இந்தியா அளவில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த படத்தின் தலைப்பு மற்றும் டீசர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற இருந்தது.

ஆனால் நேற்று இரவு கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சோகத்தில் பங்கெடுக்கும் விதமாக இன்றைய நிகழ்வை படக்குழு ரத்து செய்துள்ளது. மேலும் டீசர் வெளியீட்டு நிகழ்வில் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படு me

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com