என் மலர்
சினிமா செய்திகள்
- சீதா ராமம் படத்தின் மூலம் மிருணாள் தாகூர் புகழ்பெற்றார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் காயமடைந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.
இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், "நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுரை எழுதினார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசித்துள்ளது.
ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் தற்போது குணமடைந்து ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தம்பதியராக கலந்து கொண்ட பிரஜினும் சாண்ட்ராவும் நாங்கள் தனித்தனி கண்டஸ்டண்ட் என்று சொல்லிக் கொண்டு ஒரே போட்டியை தான் விளையாடி வருகின்றனர். அதேபோன்று சாண்ட்ரா ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தன் வில்லத்தனத்தை எல்லாம் காண்பித்து வருகிறார். வீட்டினுள் சண்டையை மூட்டி விடுவது. பார்வதியுடன் சேர்ந்து எல்லோரையும் தரக்குறைவாக பேசுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கனி வெளியேறுவார் என்று கூறப்பட்டது. அனால் கடைசி நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட ஆதிரை பிக்பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. FJ - வியானா காதல் ட்ராக்கில் ஆதிரையின் என்ட்ரி குழப்பத்தை ஏற்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக்கும் என்று கூறப்படுகிறது.
- சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது
- இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இந்த விழாவின் இறுதி நாளில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினியை கவிஞர் வைரமுத்து வாழ்த்தி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினி அவர்களை வாழ்த்துகிறோம். அவரது தாழாத கீர்த்திக்கும் வீழாத வெற்றிக்கும் சில காரணங்கள் உண்டு. அவரது வாழ்வின் முன்னுரிமை உழைப்புக்கு; பிறகுதான் மற்றவற்றுக்கு கலை உலகம் தந்த புகழை வேறு சந்தைகளுக்கு அவர் மடைமாற்றம் செய்வதில்லை
ரசிகனுக்கும் தனக்குமுள்ள நெருக்கம் தூரம் இரண்டுக்கும் எல்லை கட்டத் தெரியும். உணவு உடற்பயிற்சி இரண்டினாலும் தொப்பையற்ற தோற்றத்தைத் தொடர்ந்து காப்பாற்றுகிறார். தான் பின்தங்கிவிடாமல் மாறும் தலைமுறையோடு மாறாமல் பயணிக்கிறார்.
சமூகம் அவரைச் சர்ச்சைக்கு இழுத்தாலும் சர்ச்சைகளை அவர் திட்டமிட்டு உண்டாக்குவதில்லை. கர்வம் என்பது தனியறையில் இருந்தாலும் பணிவு என்பதைப் பொதுவெளியில் காட்டுகிறார். 'இமயமலை ஆகாமல் எனதுஉயிர் போகாது எல்லையைத் தொடும்வரை எனது கட்டை வேகாது' என்ற வரிகளை வாழ்ந்துகாட்டத் துடிக்கிறார். தான் நன்றாக இருக்கவேண்டும்; அதுபோல் எல்லாரும் என்று நினைக்கிறார். வாழ்க பல்லாண்டு!" என்று பதிவிட்டுள்ளார்.
- ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா.
- எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு சிவகுமாரின் 2-வது மகன் கார்த்தி, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள நிலையில் அவரின் மூத்த மகனும் நடிகருமான சூர்யாவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு புள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ...அதைப் போலவே தன் வாழ்வையும் நெறியும் நேர்த்தியுமாய் வகுத்துக் கொண்டவர். ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.
சிறுவனாக இருந்த காலம்தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களைக் கண்டு வியக்கும் நான், அவரது உறுதி, உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையே எனக்கான பாடமாகக் கொள்கிறேன். அவரது சாதனைகளைவிட அவரது வாழ்வியல் விழுமியங்களே (Life Values) என் வாழ்க்கையையும் எண்ணங்களையும் செதுக்கி இருக்கின்றன. 'சிவகுமார் அவர்களின் மகன்' என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம்; என் வாழ்நாளுக்கான அங்கீகாரம்.
எங்கள் தந்தையின் 60 ஆண்டுகாலப் பயணம் தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாகவே இந்த முனைவர் பட்டத்தைக் கருதுகிறோம். இந்தத் தருணத்தில் மதிப்பிற்குரிய ஓவியர் திரு சந்துரு (எ) குருசாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்களுக்குக் கூடுதல் மகிழ்வைத் தருகிறது.
இருவருக்கும் மகத்தான கௌரவத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்திற்கும், இச்சிறப்பை முன்னின்று வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும், எல்லோர் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சூர்யா கூறினார்.
- விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
- அங்கம்மாள் திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள். எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள். இப்படத்தை ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக அஞ்சோய் சாமுவேல், இசையமைப்பாளராக முகமது மக்பூல் மன்சூர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இது ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படை வீரராக இருக்கும் தனுஷ் கோபக்காரராக இருக்கிறார். தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சையும் கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்கிறார்.
ஆனால், இந்திய விமானப்படை சார்பில் தனுஷின் கோபத்தை கட்டுப்படுத்தி, ஒழுக்கமாக பணியாற்ற வேண்டும் என சைக்காலஜி மருத்துவரிடம் கவுசிலிங் எடுக்க உத்தரவிடப்படுகிறது.
தனுஷூக்கு கவுன்சிலிங் கொடுக்க வருகிறார் கதாநாயகி க்ரித்தி சனோன். இருவரும் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் க்ரித்தி தனது ஆய்வறிக்கை மூலம் வன்முறையான மனிதனை சராசரி மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார். இதற்காக, தனுஷிடம் பழகுகிறார்.
தனுஷை மாற்றிவிட்டால் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என நினைக்கிறார். ஆனால், தனுஷ்க்கு க்ரித்தி மீது காதல் மலர, க்ரித்தியோ நீ வேண்டுமானால் காதலித்துக் கொள், நான் அப்படி பார்க்கவில்லை என்கிறார். ஆனால், காலங்கள் கடக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
இருந்தாலும், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார்.
அப்போது, தனுஷை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு வரும்படி சவால் விடுகிறார். அதன்பிறகு, தனுஷ் சவாலில் ஜெயிக்கிறாரா? க்ரித்தியை கரம் பிடிக்கிறாரா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
சர்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் மிரட்டியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ராஞ்சனாவை நினைவுப்படுத்துகிறார். க்ரித்தி சனோன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். க்ரித்தியின் தந்தையாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ் கண் கலங்கவைத்துவிட்டார்.
இயக்கம்
ராஞ்சனா படத்தை போல் இப்படத்திலும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது வழக்கமான காதல் கதையில் பட்டையை கிளப்பியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க வைத்திருக்கிறார். அதுவே படத்தின் வெற்றி.
இசை
படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு உயிர்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவு படத்தின் பலம்.
ரேட்டிங்: 3.5/5
- பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தம்பதியராக கலந்து கொண்ட பிரஜினும் சாண்ட்ராவும் நாங்கள் தனித்தனி கண்டஸ்டண்ட் என்று சொல்லிக் கொண்டு ஒரே போட்டியை தான் விளையாடி வருகின்றனர். அதேபோன்று சாண்ட்ரா ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தன் வில்லத்தனத்தை எல்லாம் காண்பித்து வருகிறார். வீட்டினுள் சண்டையை மூட்டி விடுவது. பார்வதியுடன் சேர்ந்து எல்லோரையும் தரக்குறைவாக பேசுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாக்குகளின் அடிப்படையில் கனி மற்றும் ரம்யா ஜோ குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும் இந்த இருவர்களில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் அண்மையில் வெளியானது.
'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கிஷோர் தனது மனைவி அபிராமி, தங்கை மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிஷோர், சிறு பிரச்சனையில் வேலையை விட்டு சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசன், கிஷோரின் தங்கை மகளை காதலித்து வருகிறார்.
ஒரு நாள் கிஷோருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபடுகிறது. இதிலிருந்து கார் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் போஸ் வெங்கட், லாக்கப்பில் ஒருவரை அடித்து கொன்று விடுகிறார். இந்த பழியை கிஷோர் மீது சுமத்தி அவரை சிக்க வைக்கிறார்.
இறுதியில் லாக்கப் டெத் கொலை வழக்கில் இருந்து கிஷோர் மீண்டாரா? கிஷோரை சிக்க வைக்க காரணம் என்ன? டிடிஎஃப் வாசன் கிஷோருக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பத்தினருடன் சந்தோஷமாகவும், குடும்ப கஷ்டத்திற்காக வருந்துவது, அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். பொறுப்பான குடும்பத் தலைவியாகவும், கணவருக்காக வருந்தும் இடத்திலும் அபிராமி நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய டிடிஎஃப் வாசனுக்கு நடிப்புத்திறனை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியான போஸ் வெங்கட், கிஷோரின் நண்பர் சிங்கம்புலி, முதலமைச்சர் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
லாக்கப் டெத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. முதல் பாதி திரைக்கதை புரியாமலும் இரண்டாம் பாதி திரைக்கதை மெதுவாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம். அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசை
அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணிசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
பிச்சுமணியின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
ரேட்டிங்- 2.5/5
- ஒரு மகனாக நீங்கள் காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.
- இந்த தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு குருஸ்வாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து நடிகரும், சிவகுமாரின் மகனுமான கார்த்தி நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள கடிதத்தில்,
அன்புடையீர்,
ஒரு நடிகராக பல தலைமுறைகளைக் கவர்ந்ததோடு, ஓவியக் கலை மீது கொண்ட பேராதரவும் அப்பாவின் வாழ்க்கையை தனித்துவமாக்கியது.
கம்பன் என் காதலன். திருக்குறன் 100. மகாபாரத உரை போன்ற பெரும் இலக்கியங்களை மக்கள் மனங்களில் நவீனமாகப் பதிய வைத்த அவரின் பணி, தமிழ் மரபை பாதுகாக்கும் வாழ்நாள் அரப்பணிப்பு.
அப்பாவின் கலைச்சேவையை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் கைகளால் அப்பாவுக்கு வழங்கப்பட்ட கௌரவ முனைவர் பட்டம், எங்களுக்கும், கலை உலகிற்கும் மிகுந்த மகிழ்வை தருகிறது. தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.
இந்த அங்கீகாரம், அவரது ஆழ்ந்த உழைப்புக்கும், கலை-இலக்கிய ஈடுபாடுக்கும் கிடைத்த உரிய மரியாதை.
ஒரு மகனாக நீங்கள் காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.
இந்த தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு குருஸ்வாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
- கடந்த மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் படம் வெளியீடு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இதுவாகும்.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
வீடியோவில், சிவகார்த்திகேயன் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளதையும், படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 'பராசக்தி' படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






