என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
- இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனிடையே, 'பூக்கி' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், 'பூக்கி' படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. 2.21 நிமிடங்கள் டிரெய்லர் வீடியோ நடிகர் சிம்புவின் குரலுடன் தொடங்குகிறது. வீடியோவில் ஒரு ஜோடி காதலில் விழுந்து, பின்பு அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து அதன்பின் நடக்கும் சம்பவங்களை பொழுது போக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.
புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும்.
இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது. விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவுக்கான லோகோ வெளியிடப்பட்டது
இதனை சட்டசபையில் உள்ள தனது அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அப்போது, விருது பெறும் இயக்குநர்களின் பெயர் பட்டியலை அவர் வெளியிட்டார்.
2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிதர்தண்டா டபுள் எக்ஸ், 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது தினேஷ் செல்வராஜ் இயக்கிய கடல்கன்னி ஆகிய தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர் முகமது அஹசன் அபித், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
நாளை வியாழக்கிழமை மாலை கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு புதுவை அரசின் சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் திரைப்பட இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.
விழாவில் திரைப்பட நடிகைகள் ரேவதி, சுனைனா, திரைப்பட இயக்குநர்கள், பா.ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழாவையொட்டி புதுவை அலையான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாள்களும் சர்வதேச திரைப்படங்கள் நாளுக்கு 2 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.
குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நாளுக்கு 3 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.
மொத்த 12 தமிழ் திரைப்படங்கள் உள்பட 45 திரைபடங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களைக் காண விரும்புபவர்கள் புதுவை பிலிம் பெஸ்டிவெல் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
- மத்தவங்க இதை எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம்.
- நம்மளை பற்றி தெரிஞ்சவங்களுக்கு நாம் எவ்வளவு உண்மையாக, நிம்மதியாக இருக்கோம் என புரியும்.
பிரபல பாடகியும் நடிகர் ரவிமோகனின் தோழியுமான கெனிஷா கடந்த 7-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கெனிஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
சின்ன வயதில் இருந்தே பல நேரங்களில் நான் ஒரு ஆளாக மதிக்கப்படவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வைத்த மாதிரியே ஒரு உணர்வு. நான் பெருசா எதிர்பார்க்கிறேன் என நினைத்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது ஒரு சின்ன அன்பும், மதிப்பும் மட்டும்தான். அப்புறம் ரவிமோகன்... நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு. என்னோட எண்ணங்கள், செயல்கள், காதல் பற்றிய என்னோட பார்வை எல்லாம் புதுசா இருந்துச்சு.
மத்தவங்க இதை எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் நம்மளை பற்றி தெரிஞ்சவங்களுக்கு நாம் எவ்வளவு உண்மையாக, நிம்மதியாக இருக்கோம் என புரியும். என்னோட கஷ்டமான நேரங்களில் எனக்கு துணையாக நின்று, என்னோட ஒவ்வொரு சின்ன வெற்றியை கூட உன்னோட வெற்றியா நீ கொண்டாடினாய். அதுக்காக உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது' என பதிவிட்டுள்ளார்.
- சீதா பயணம் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
- அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். அதிரடி சண்டைக் காட்சி கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற அர்ஜூன் இடையில் சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதனிடையே அர்ஜூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சீதா பயணம் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில், அர்ஜூன் அளித்த சமீபத்திய பேட்டியில் ஏழுமலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அர்ஜூன், "நான் முன்னதாக 3-4 படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் இப்போது அந்த வேடங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். ஏனென்றால் ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை. பலர் என்னை எப்போதும் பார்த்தது போல, வலுவான, நேர்மறையான வேடங்களில் பார்க்க விரும்புவதாக என்னிடம் சொன்னார்கள்.
அதனால் இனிமேல், நான் ஹீரோ வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஏழுமலை பார்ட் 2 கதை தயாராக உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இந்தப் படத்தின் கதை ரொம்ப சூப்பராக வந்துருக்கிறது. முழுமையாக சாப்பிட்டுவிட்டு என் வயிற்றைக் காட்டி சாதாரணமாக திரையில் தோன்றுவது எனக்குப் பிடிக்காது. மக்கள் என்னைப் பார்க்க தியேட்டருக்கு வருவதால் நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன்," என்றார்.
- பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.
- மூன்று கதைகள் எழுதி முடிக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது.
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.
இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் நாளை மறுநாள் (பிப். 13) வெளியாகிறது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மை லார்ட் வெளியீட்டை ஒட்டி நடிகர் சசிகுமார் அளித்த சமீபத்திய பேட்டியில் அடுத்து தாான் இயக்கப் போகும் படங்கள் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய சசிகுமார், "என்னிட்ம் மூன்று கதைகள் எழுதி முடிக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் படங்களில் மற்ற ஹீரோக்கள் நடிப்பார்கள். இந்தப் படங்களில் நான் நடிக்க எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை.
முதல் பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன, இதனால் தற்போது நான் வைத்திருக்கும் விருப்பப் பட்டியலில் கவனம் செலுத்த தயாராக இருக்கேன். இனி நான் படம் இயக்கவும் தயார். கவுதம் வாசுதேவ் மேனன் பலமுறை என்னிடம் கேட்டதால் தான் ENPT திரைப்படத்தில் நடித்தேன். தலைவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் "பேட்ட" படத்தில் நடித்தேன்.
கிடாரி 2 படத்தின் ஐடியாவையும், அடிப்படை கதையையும் இயக்குநரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் ஒரு முழுமையான கதையுடன் வருவதற்காக காத்திருக்கிறேன்," என்றார்.
- குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
காரைக்குடி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வருகிறார் நாயகன் கார்த்திக். அதே காவல் நிலையத்திற்கு புதிதாக கான்ஸ்டபிளாக வரும் நாயகி திவ்யா தாமசுக்கும், இவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மேலும் இருவரும் புரோமோசனுக்கு போட்டி போட்டு வருகிறார்கள்.
எலியும் பூனையுமாக சண்டை போட்டு வந்தாலும் இருவரும் உள்ளுக்குள் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் திவ்யா தாமசுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அந்த மாப்பிள்ளை மூலம் இருவரும் நிரந்தரமாக பிரிய நேரிடுகிறது. மேலும் திவ்யாவுக்கு எஸ்.ஐ.ஆக புரோமோஷனும் கிடைக்கிறது.
இறுதியில் கார்த்திக்கும், திவ்யா தாமசும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கார்த்திக், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடிப்பு தான் பொருந்தவில்லை. சண்டைக் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் திவ்யா தாமஸ், ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், விஜி சேகர், பெஞ்சமின், ராஜ்குமார், முத்துக்காளை, கிரேன் மனோகர், அம்பானி சங்கர், சஹானா, ஹேமா, சித்தா, தர்ஷன், காந்தராஜ், பிரேம பிரியா, கிளி ராமச்சந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பத்மராஜா. பல நடிகர்களை நடிக்க வைத்து இருக்கிறார். ஆனால், அழுத்தமான காட்சிகள், காமெடி காட்சிகள் பெரியதாக எடுபட வில்லை. படத்தின் நீளம் குறைத்து, தேவையான காட்சிகளை நீக்கி இருந்தால் ரசித்து இருக்கலாம்.
இசை
குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.
ரேட்டிங்-1/5
- கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
- சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அதனை தொடர்ந்து இரண்டாவது லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.
இந்த நிலையில், 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தயாரிப்பாளர் ஷேக் முஜீப் கூறியதாவது, "படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எடிட்டிங் மற்றும் பின்னணி இசை முதல் VFX மற்றும் ஒலி வடிவமைப்பு வரை ஒவ்வொரு துறையும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்படத்தின் மூலம் திரையரங்கில் புதிய அனுபவத்தை ரசிகர்கள் அனுபவிப்பார்கள் என்பதை நம்புகிறோம் என கூறியுள்ளார்.
தமிழ் தாண்டி பான் இந்தியா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார், விஜய் சேதுபதி.
தற்போது 'டிரெய்ன்', 'ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் 'அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் -சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக பேசப்பட்டது.
அதாவது ராவணன் (யாஷ்) தம்பி விபீஷனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது.
இதனை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். "நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதுபோன்ற தகவல் எப்படி பரவியது? என்று எனக்கு தெரியவில்லை", என்று அவர் கூறி உள்ளார்.
- பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார்.
- இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.
மும்பை:
பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங், சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. அத்துடன் வசூலையும் வாரிக் குவித்தது.
இந்நிலையில், ரன்வீர் சிங்கின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதில் கோடிக்கணக்கில் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். இதுதொடர்பாக, மும்பை போலீசிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.
இதையடுத்து, ரன்வீர்சிங் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மிரட்டல் விடுத்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் போலீசாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அல்லு அர்ஜூனுக்கு எதிரான குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு புறம்பானது.
- அல்லு அர்ஜூன் எப்போதும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார்.
தெலுங்கு நட்சத்திர நடிகரான அல்லு அல்ஜூனை சந்திப்பதற்கு 42 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி வெளியிட்டிருந்தார். இது தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன் அலுவலகம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் "அல்லு அர்ஜூனுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு புறம்பானது. அல்லு அர்ஜூன் எப்போதும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார். அவரது அணி இந்த பொய் குற்றச்சாட்டை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வெளியிட்டவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வதற்கான வேலையை தொடங்கியுள்ளது. மேலும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜூன் கண்ணை நேருக்குநேர் பார்க்கக் கூடாது, கைக்குலுக்கக் கூடாது, மீடியாவை சந்திக்கும்போது அவரிடம் கேட்கும் கேள்விகள் தொடர்பாக முன்னதாக ஒப்புதல் பெற வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
- ஜெயிலர் 2 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
- அவர் யதார்த்தமாகவே இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் "ஜெயிலர் 2" திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.
ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் இருந்ததை விட அதிக நேரம் திரையில் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நடிகர் சிவராஜ்குமார் கூறியிருந்தார். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த பலர், இந்தப் படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பலக்கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாகப் பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாகக் பேசுவார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இருவரும் உறவினர்கள் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்."
"அவர் சூப்பர் ஸ்டாராக உயர்வதை நான் மெட்ராசில் பார்த்து வளர்ந்தேன். வெற்றி பெற்றாலும், அவர் யதார்த்தமாகவே இருக்கிறார். அவர் என் தந்தையுடன் நெருங்கிய பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார். பெங்களூரு வருகைதரும் ஒவ்வொரு முறையும், எங்கள் வீட்டிற்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்," என்றார்.
- வித் லவ் திரைப்படம் 3 நாட்களில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளது
- படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், வித் லவ் திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் உரையாடியது, அவர்களை வெகுவாக பாராட்டியது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.






