என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வித் லவ் திரைப்படம் 3 நாட்களில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளது
    • படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.

    காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

    வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், வித் லவ் திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.

    படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் உரையாடியது, அவர்களை வெகுவாக பாராட்டியது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.



    • கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் குவித்தது.
    • வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    மன சங்கர வர பிரசாத் காரு (Mana Shankara Vara Prasad Garu)

    அனில் ரவிபுடி எழுதி இயக்கிய தெலுங்கு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் 'மன சங்கர வர பிரசாத் காரு'. இப்படத்தில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். ஈகோவால் பிரிந்துள்ள கணவன்- மனைவி தொடர்பாக குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை (பிப்.11) முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் பார்க்கலாம்.

    கோஹ்ரா சீசன் 2 (Kohrra Season 2)

    கோஹ்ரா சீசன் 2 என்பது சுதிப் சர்மா, குஞ்சித் சோப்ரா, டிகி சிசோடியா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ரன்தீப் ஜா இயக்கிய நெட்ஃபிளிக்ஸில் ஒரு கிரைம் திரில்லர் போலீஸ் தொடர் ஆகும். இத்தொடர் நாளை (பிப்.11) முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

    Baby Girl

    வருண் வர்மா இயக்கத்தில் நிவின் பாலி, அபிமன்யு ஷம்மி திலகன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் Baby Girl. நிவின் பாலி வேலை பார்க்கும் மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை காணாமல் போன விவகாரத்தில் நிவின் பாலி சிக்கிக்கொள்கிறார். அவர் து அதிலிருந்து எப்படி தப்பித்தார்? குழந்தை மீட்கப்பட்டதா? என்பதா படத்தின் கதைக்கரு. இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், நாளை மறுநாள் (பிப்.12) முதல் சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

    தலைவர் தம்பி தலைமையில்...

    நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர் ஜீவாவின் 45 ஆவது படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் குவித்தது. இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் நாளை மறுநாள் (பிப்.11) முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

    பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ் (Predator Badlands)

    பிரிடேட்டர் தொடரின் ஏழாவது பாகமான பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ், எல்லே ஃபான்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோஅமடாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் டிராக்டன்பெர்க் இயக்கிய இந்தப் படம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு, பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ் ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நாளை மறுநாள் (பிப்.12) முதல் வெளியாகிறது.

    தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ் (The Conjuring Last Rites)

    தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ் என்பது மைக்கேல் சாவ்ஸ் இயக்கிய ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் படமாகும். மேலும் இயன் கோல்ட்பர்க், ரிச்சர்ட் நெய்ங் மற்றும் டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெக்கோல்ட்ரிக் ஆகியோரால் எழுதப்பட்டது. இந்தப் படம் தி கன்ஜூரிங் திரைப்படத் தொடரின் ஒன்பதாவது பாகமாகும். மேலும் இது ஸ்மர்ல் பேய் வழக்கின் நிஜ வாழ்க்கை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டது. இதனை தொடர்ந்து ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.13) முதல் வெளியாகிறது.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

    • இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார்.
    • டீசர் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கணவன், மனைவிக்குள்ளான காதல், மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்ள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

    டீசரில், திரில்லர் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தை கொண்டுள்ள இப்படத்தின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. டீசர் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    டீசரை வெளியிட்டு இயக்குநர் விஜய் ரங்கராதன் கூறியிருப்பதாவது:- பல வருடங்களாக ஸ்கிரிப்ட் குறித்து வேதனைப்பட்டு, நடிகர்களை கண்டுபிடிக்க போராடி, இறுதியாக அவர்களைக் கண்டுபிடித்து, அதை உருவாக்க அனைத்து அளவிலான போராட்டங்களையும் நடத்தி, எனக்கும் எனது குழுவிற்கும் உத்வேகம் அளித்து வரும் சிறிய-பெரிய யோசனையின் ஒரு கண்ணோட்டம் இது" என்று கூறியுள்ளார்.



    • தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை படம் வெளியாகவில்லை.
    • தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சனையை முடிக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜன.9-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.

    தணிக்கை சான்றிதழ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதனிடையே கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,

    ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை பட தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

    மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் நேற்று வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சனையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில், ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய மனுவை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

    • கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார்.
    • அஜித் பங்கேற்கும் கார் ரேசிங் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

    நடிகரும், ரேசருமான அஜித் குமார் கடந்த சில மாதங்களாகவே அபுதாபியில் தங்கி கார் ரேசில் பங்கேற்று வருகிறார். இவர் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கி துபாய், பெல்ஜியம், போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார்.

    வெளிநாட்டில் தங்கியுள்ள அஜித்தை நடிகர்கள் மாதவன், சிம்பு, பிரசன்னா, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இதனிடையே நடிகர் அஜித் முதன் முதலாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றும் அளித்திருந்தார். மேலும், அஜித் பங்கேற்கும் கார் ரேசிங் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில், அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடைபெற்ற கார் ரேசில் அஜித் பங்கேற்ற போது, ரசிகர்களிடம் கடிந்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'ப்ளீஸ்... ஒழுங்கா நடந்துக்கங்க... இது தியேட்டர் கிடையாதுங்க..' என்று கடிந்து கொள்கிறார். 

    • சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’, மாதவனின் ‘மின்னலே’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.
    • ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் மீண்டும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி சூர்யாவின் 'மௌனம் பேசியதே', மாதவனின் 'மின்னலே' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த வரிசையில் தற்போது புதிதாக 'காதலர் தினம்' படம் இணைந்துள்ளது. இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கான டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

     

    1999-ம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கத்தில் நடிகர் குணால், நடிகை சோனாலி, நடிப்பில் வெளியான படம் 'காதலர் தினம்'. தமிழ் சினிமாவில் எத்தனை படங்களை காதலை மையமாக்கொண்டு வெளியானாலும் 'காதலர் தினம்' படத்திற்கான ரசிகர்கள் பட்டாளம் எராளம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இப்படம் வெளியான நேரத்தில் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், காதலர் தினத்தன்று புதுப்பொலிவுடன் வெளியாக 'காதலர் தினம்' படத்தை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    அர்ஜுன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

    'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' உள்ளிட்ட பல படங்களை அர்ஜூன் இயக்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் ஐஸ்வர்யாவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து 'சொல்லிவிடவா' என்ற படத்தை இயக்கி இருந்தார்.

    இதனை தொடர்ந்து, தற்போது 'சீதா பயணம்' என்ற புதிய படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    மேலும் கதை மற்றும் திரைக்கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல், அர்ஜுன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான சீதா பயணம் படத்தின் டிரெய்லரும் கவனம் பெற்றது.

    காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள சீதா பயணம் படத்திற்கு தணிக்கை வாரியம் "U" சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    நாயகியாக தனுஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அஜய் திஷான், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூக்கி. கணேஷ் சந்திரா, சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆவார்.

    இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் நாயகியாக தனுஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    2k கிட்ஸ் காதலை கூறும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் "பூக்கி" திரைப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், படத்தில் விஜய் ஆண்டனி எழுதி பாடிய 'ஜில்லே ஜூஸ்' வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.  

    • மாரி செல்வராஜின் படங்கள் என்னையே வெட்கப்பட வைத்தது.
    • நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம்.

    ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' திரைப்படம் வரும் 13-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    பட வெளியீட்டை ஒட்டி இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதைதொடர்ந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது:-

    உண்மையிலேயே இது எனக்கு கொஞ்சம் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. என்னைப் பற்றி இவ்வளவு அர்த்தமுள்ள, ஆழமான வார்த்தைகளை இங்கே பலர் பேசினார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

    நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த களத்தில் தினமும் பாலா சாரின் பிதாமகன் படத்தின் சிடியை 52 முறை வாங்கியிருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும், நேர்மையையும் சினிமாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அந்தப்படம் தந்தது அவர் வந்து வாழ்த்தியது பெருமை.

    மாரி செல்வராஜின் படங்கள் என்னையே வெட்கப்பட வைத்தது. அவர் மூலம் நான் கற்றுக்கொண்டேன் அவர் வாழ்த்தியதும் மகிழ்ச்சி. என் குருநாதர் லிங்குசாமி சார் என்னை கரம்பிடித்து சினிமாவில் அழைத்து சென்ற அவருக்கு என் நன்றிகள்.

    குரு சோமந்தரம், ஏ வெங்கடேஷ், ரவிக்குமார், ஞானவேல், யுகபாரதி என இங்கு வந்து வாழ்த்திய ஆளுமைகள் அனைவருக்கும் என் நன்றி.

    நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம். இந்த படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல. 'ராஜுமுருகன்' என்ற மனிதன் மீது 'அம்பேத்குமார்' என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட் உருவானது," என்று அவர் கூறினார்.

    அம்பேத்குமார் என்ற மனிதர் இல்லையென்றால் இந்த படம் உருவாகியிருக்காது. நான் என் வாழ்க்கையில் மிகவும் டவுன் ஃபாலில் இருந்த ஒரு காலகட்டத்தில், என்னை அழைத்து 'வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் சார், ஒரு நாள்கூட உட்காரக் கூடாது' என்று சொல்லி, அடுத்த நாளே படம் பண்ணத் தொடங்குவதற்கான மனநிலையை எனக்கு கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயல்பாகவே வேண்டிக் கொள்வது, அந்த நம்பிக்கையை என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம்.

    "இந்த படத்தை முதல் நாளிலிருந்து தன் தோளில் சுமந்து, எப்படியாவது இந்த சந்தையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து என் கூடவே இருந்தவர் Think Music சந்தோஷ். படம் பார்த்த நாளிலிருந்து இன்று வரை இந்த படத்தைப் பற்றி பேசிக்கொண்டே, ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்தார். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், சந்தோஷ் அந்த இடத்தில் இருந்தால் அது நிச்சயம் கிளியராகிவிடும். அவர் எப்போதும் எனக்கு 'ஆல்-டைம் டார்லிங்.

    இந்த படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆரம்பத்தில் கால்ஷீட் தொடர்பான சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் கதையை கேட்டவுடன், அனைத்தையும் தாண்டி உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    ஷான் ரோல்டனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு வெறும் இசை மட்டுமல்ல. அது இலக்கியம், அரசியல், சமூகம் என்று பல அடுக்குகளைக் கொண்ட ஆத்மார்த்தமான உறவு. அந்த எல்லாமே சேர்ந்து தான் அவரது இசையாக வெளிப்படுகிறது. இந்த படத்தில் அவர் இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறார்.

    சசிக்குமார் அண்ணன் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை, அவர் முழுப்படத்திற்கும் உறுதுணையாக இருந்தார். அன்பையும் நம்பிக்கையையும் பேச பணம் தேவைப்படுகிறது எப்படியாவது இப்படத்தில் பணத்தை சம்பாதித்து என் தயாரிப்பாளருக்கு தந்து விட வேண்டும். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    'ஆழி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சரத்குமார் `ஆழி' படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தை இயக்குநர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. `ஆழி' படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இதனிடையே, 'ஆழி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    'ஆழி' திரைப்படத்தின் டீசர் கடந்த 4ம் தேதி மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆழி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஆழி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

    • பூக்கி படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
    • இந்தப் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது.

    விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அஜய் திஷான், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூக்கி. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் காதலர் தினத்தை ஒட்டி வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

    பட வெளியீட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, "நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது." 

    "மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்தப் படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது."

    "இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற 'ஆக்ஷனை' மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, 'பூக்கி' படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து 'ஆக்ஷன்-கட்' சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்," என்றார்.

    • நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும்
    • வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம்

    ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.

    மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சினையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    வழக்கின் பின்னணி

    ஜனவரி 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி (நீதிபதி ஆஷா), படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. ஜனவரி 27, 2026 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தணிக்கை வாரியத்தின் தரப்புக் கருத்தைக் கேட்காமல் தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு" எனக் கூறி அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டது. 

    இதனிடையே தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் எனக் கூறி வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். தற்போது, இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்றுள்ளது.

    ஜன நாயகன்

    ஹெச்.வினோத் நடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி, பொங்கலை முன்னிட்டு ஜன.9 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.

    ×