என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.

    இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம்" என்று ராஷ்மிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், பணியாற்றியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் தேவரெகொண்டாவும் பங்கேற்று இருந்தார்.

    அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, நீங்கள் (விஜு) ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறீர்கள், படத்தின் வெற்றியிலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம் என்று பேசினார்.


    இவ்வாறு ராஷ்மிகா பேசியதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.



    முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் கைகுலுக்கும் போது அவரது கையை பிடித்து முத்தமிட்டது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இருவரும் முதல் முறையாக பொது நிகழ்வில் தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 




    • இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

    தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் சமீபகாலமாக அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    இதனிடையே, அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்துள்ள படம் 'தீயவர் குலை நடுங்க'. அதிரடி ஆக்ஷன் கிங் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 21-ந்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

    இந்த நிலையில், 'தீயவர் குலை நடுங்க' படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

    • பிரித்விராஜ் கும்பா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    எஸ்.எஸ். ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் (கும்பா கதாபாத்திரம்) வில்லனாக நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார்.

    இப்படத்தின் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு Globetrotter எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பெயர் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மந்தாகினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

    எஸ்.எஸ். ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் (கும்பா கதாபாத்திரம்) வில்லனாக நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார்.

    இப்படத்தின் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு Globetrotter எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பெயர் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் எக்ஸ் வலைத்தளம் பிரியங்கா சோப்ராவிடம், ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு பிரியங்கா சோப்ரா பதில் அளித்தார்.

    ரசிகர் ஒருவர் "இந்த படம் மீண்டும் இந்திய படங்களுக்கு திரும்புவதற்கானதாக இருக்குமா? அல்லது பிரியங்கா சோப்ராவின் ஒட்டுமொத்த புதிய அத்தியாயமாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பிரியங்கா சோப்ரா, இந்திய சினிமாவிற்கு நான் திரும்புவது மற்றும் புதிய அத்தியாயமாக இருக்கும் என நம்புகிறோம். உறுதியாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது நம்ப முடியாததாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.

    மற்றொரு ரசிகர் "இந்திய சினிமாவில் உங்களை பார்ப்பதை தவறி விடுகிறோம். இந்த படம் உங்களுடைய புதிய தொடக்கத்திற்கான இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

    அதற்கு "கடவுள் அருளால். உலகம் முழுவதும் என்னால் முடிந்த சிறந்த வேலையைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் எதுவும் சாத்தியம் என்று தோன்றுகிறது" எனப் பதில் அளித்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் உங்களுடைய அனுபவம் பற்றி சொல்லுங்கள் என இன்னொரு ரசிகர் கேட்டதற்கு, "இந்த படத்தில் ஆரம்ப கட்டத்தில்தான இருக்கிறேன். இருந்தாலும், சூப்பர். மேலும், ஐதராபாத் பிரியாணி உலகத்திலேயே சிறந்தது" என்றார்.

    • அஜித் குமார் ரேஸிங் அணி இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி
    • எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.

    இந்த ஒப்பந்த அறிவிப்பில்"இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேஸிங் அணி", என ரிலையன்ஸ் குழுமம் குறிப்பிட்டுள்ளது.

    • தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்
    • ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும்.

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

    மேலும், "ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.

    இந்நிலையில், தைரியம் இருந்தால் DNA test-க்கு வாங்க என்று மாதம்பட்டி ரங்கராஜை கிண்டலடித்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

    அந்த பதிவில், "Hello Husband madhampatty rangaraj DNA பரிசோதனைக்கு நீங்கள் statement கொடுத்துள்ளீர்கள், ஆனால் அவர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடி பணம் கொடுத்து ஊடகங்களில் எனக்கெதிராக யூடியூப், செய்திகளில் தகவல்கள் வெளியிடச் செய்கிறீர்கள். நான் அமைதியாக இருந்தாலும், உங்க உள்குத்து என்னன்னு எனக்கு தெரியாம போய்டுமா என்ன ? ?தைரியம் இருந்தால் DNA test கு வாங்க Husband madhampatty rangaraj சும்மா statement குடுத்தா மட்டும் போதாது ???" என்று தெரிவித்துள்ளார்.

    • தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
    • தர்மேந்திராவின் மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி விளக்கம் அளித்தார்.

    சில நாட்களுக்கு முன்னதாக 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, டிவிசன் அமர்வு மறுப்பு.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி BRO CODE படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என ப்ரோ கோட் பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.

    பிரபலமாக உள்ள ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திரைப்பட விளப்பரம், வெளியீட்டிற்கு ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்தத்தடை விதித்தது.

    இது குறித்து ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

    இந்நிலையில், BRO CODE என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, டிவிசன் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க இண்டோ-ஸ்பிரிட் பிவ்ரேஜஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்ததுடன், விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.
    • கும்கி 2 படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    பட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

    இதுதவிர 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் பாலாஜி தரணிதரணுடன் மீண்டும் இணைகிறார்.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரண் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜெய் பீம் புகழ் நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடிக்கிறார்.

    • புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது
    • புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

    சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.



    கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூ.35 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் அறிமுக நடிகர்களில் ஒருவராகிறார்.

    பல நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் ஒரு ஹீரோவாக வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இதனிடையே, லோகேஷ் கனகராஜ் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.




    அதாவது, பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்றைய சூழலில் பல யூடியூப்பர்கள் கண்டென்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
    • அவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்பதை இயக்குனர் படமாக்கி இருக்கிறார்.

    நாயகன் பைசல் ராஜ் தன் நண்பன் கராத்தே ராஜன், காதலி ஆதிரா சந்தோஷ் உதவியுடன் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பைசல் ராஜ் தனது கண்டெண்ட் வைரலாக மந்திரவாதி உதவியுடன் காதலி ஆதிராவிற்கு பேய் பிடித்ததை ஓட்டியதாக ஒரு பதிவு போடுகிறார். அதை பார்த்த போட்டி யூடியூப்பர் ஒருவர் அந்த பதிவு பொய் என்று மறுப்பு தெரிவித்து பதிவு போடுகிறார்.

    இதனால் பாதிப்படைந்த பைசல் ராஜ், பேய் வீடு பற்றி கண்டெண்ட் போட முடிவு செய்கிறார். அதற்கு தனியாக இருக்கும் வீட்டை தேடி கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் காவலாளியை சரி செய்து ஆதிரா சந்தோஷை பேயாக நடிக்க வைத்து வீடியோ போடுகிறார். அதை பார்த்த வீட்டு உரிமையாளர், அது பொய் என்று பேட்டி கொடுக்கிறார். இது ஆதிரா சந்தோஷின் குடும்பத்திற்கு தெரிய வர, அவளை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்கின்றனர்.

    பைசல் ராஜ், உண்மையாகவே பேய் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று கூல் சுரேஷிடம் சொல்கிறார். அதற்கு கூல் சுரேஷ் பேய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக சொல்கிறார்.

    இறுதியில் இருவரும் பேய் இருக்கும் இடத்திற்கு சென்றார்களா…? பேய் பார்த்தார்களா? என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பைசல்ராஜ் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதிரா சந்தோஷ், கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    நாயகனாக நடித்து இருக்கும் பைசல்ராஜ், இப்படத்தை இயக்கி இருக்கிறார். யூடியூப்பர்களின் பித்தலாட்டங்களை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். இன்றைய சூழலில் பல யூடியூப்பர்கள் கண்டென்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்பதை படமாக்கி இருக்கிறார். யூக்கிக்கும் படியான காட்சிகள், சுவாரசியம் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    ஜாய் ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்திற்கு அதிக தெளிவு இல்லாமல் இருக்கிறது.

    இசை

    சுரேஷ் நந்தனின் இசை மற்றும் பிண்ணனி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

    ×