என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கரிகாடா- திரைவிமர்சனம்
    X

    கரிகாடா- திரைவிமர்சனம்

    ஒளிப்பதிவாளர் ஜீவன் கவுடா, காடுகள், மழைக் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்.

    கிராமத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடும் வீரனாக நாயகன் காடா நடராஜ் வாழ்ந்து வருகிறார். முதலாளிக்கு விசுவாசமாக இருந்து வரும் இவரை, முதலாளி மற்றும் அவருடைய மகன்கள் எதிர்த்து கொல்ல முயற்சி செய்கிறார்கள். இறுதியில் முதலாளி மற்றும் மகன்களை காடா நட்ராஜ் எப்படி எதிர்கொண்டார்? காடா நட்ராஜை முதலாளி மற்றும் மகன்கள் எதிர்க்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் காடா நட்ராஜ், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகி நிரிக்ஷா ஷெட்டி இடையேயான காதல், கதைக்கு முக்கிய அம்சம். ஆனால் நிரிக்ஷா ஷெட்டியின் ஒருதலைக் காதலும், அதை காடா நட்ராஜ் ஏற்றுக்கொள்ளும் தருணமும் திரைக்கதையில் தாமதமாக வருவதால், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    மேல் தர வர்க்கத்தைச் சேர்ந்த எதிரிகளாக வரும் யஷ் ஷெட்டி, பாலா ராஜ்வாடி ஆகியோர் மோதல்கள் கதைக்கு வேகம் கொடுத்தாலும், ஒரே மாதிரியான மோதல்கள் திரும்பத் திரும்ப வருவதால் சலிப்பு ஏற்படுகிறது.

    இயக்கம்

    இயக்குநர் வெங்கடேஷா, இரு காலகட்டங்களை இணைக்கும் சவாலான கதைக்களத்தை தேர்வு செய்திருக்கிறார். கிராமத்து சூழலும், நவீன வாழ்க்கையும் இணைக்க முயற்சித்த அவரது முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், எதிர்பார்த்த அளவில் படம் உருவாகாதது வருத்தம். கிராமத்து பின்னணி, ஆக்ஷன் கலந்த படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு 'கரிகாடா' ஓரளவு ஈர்ப்பை தரும். ஆனால் தெளிவான திரைக்கதை, வலுவான கதாபாத்திர வளர்ச்சி எதிர்பார்ப்பவர்களுக்கு படம் சற்று குழப்பமாகவும், துண்டுத்துண்டாகவும் தோன்ற வாய்ப்புள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜீவன் கவுடா, காடுகள், மழைக் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். சில காட்சிகள் கண்ணுக்கு நிறைவாக இருக்கின்றன.

    இசை

    அதிஷய் ஜெயின், ஷஷாங்க் சேஷகிரியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவனம் ஈர்த்து இருக்கிறது.

    ரேட்டிங்- 2.5/5

    Next Story
    ×