என் மலர்
நீங்கள் தேடியது "Shiva Rajkumar"
- ஜெயிலர் 2 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
- அவர் யதார்த்தமாகவே இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் "ஜெயிலர் 2" திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.
ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் இருந்ததை விட அதிக நேரம் திரையில் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நடிகர் சிவராஜ்குமார் கூறியிருந்தார். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த பலர், இந்தப் படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பலக்கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாகப் பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாகக் பேசுவார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இருவரும் உறவினர்கள் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்."
"அவர் சூப்பர் ஸ்டாராக உயர்வதை நான் மெட்ராசில் பார்த்து வளர்ந்தேன். வெற்றி பெற்றாலும், அவர் யதார்த்தமாகவே இருக்கிறார். அவர் என் தந்தையுடன் நெருங்கிய பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார். பெங்களூரு வருகைதரும் ஒவ்வொரு முறையும், எங்கள் வீட்டிற்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்," என்றார்.
- திரையுலகில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், "கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?" என்று நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பி கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், திரையுலகில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்த வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் பேசியுள்ள கமல்ஹாசன், சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடிச்சுன்னு எனக்கு தெரியல. இன்னிக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிற விஷயம்... இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
- கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார்.
- தற்பொழுது அவரது 131- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.
தற்பொழுது அவரது 131- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பெங்களூருவில் தொடங்கியது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளது.
இப்படம் கார்த்திக் அத்வைத் இயக்கும் முதல் கன்னட திரைப்படமாகும். இவர் இதற்கு முன் பாயும் ஒளி நீ எனக்கு என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் நடிகர் யாஷ் சிவ ராஜ்குமாரை சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் அங்கு பேசினர். இவர்கள் சந்தித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தளபதி 69 என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
- தளபதி 69 படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இதனிடையே நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளியானது. மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. தற்காலிகமாக 'தளபதி 69' என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், 'தளபதி 69' படத்தில் அழகிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு தன்னை தொடர்பு கொண்டதாக கன்னட சூப்பர்ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சிவராஜ்குமார் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.
இதுபற்றி பேசிய நடிகர் சிவராஜ்குமார், "விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நல்ல கதாபாத்தித்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். எனது தேதிகள் சார்ந்த விஷயங்களால் இது எப்படி முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், நடிகர் விஜய் நல்ல மனிதர், சிறப்பான நடிகர். சினிமா மற்றும் அரசியல் சார்ந்த அவரின் முடிவு அற்புதமானது. இவை இரண்டையும் நான் மதிக்கிறேன்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






