என் மலர்
சினிமா செய்திகள்
கண்ணே கலைமானே படம் ரிலீசாகி இருக்கும் நிலையில், தமன்னா அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி பற்றி அவர் கூறும் போது, அவர் பயங்கரமான ஆளு, இயற்கையான நடிகர் என்றார். #KanneKalaimaane #Tamannaah
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கெண்டிருக்கிறது. இந்த நிலையில், மாலைமலர் இணையதளத்திற்கு தமன்னா அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியதாவது,
சீனு ராமசாமி பற்றி?
சீனு ராமசாமி சார் ஒரு தேசியவாதி. வேறு நாட்டு பொருட்களுக்கு பதிலாக, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பெண்ணியத்தை மதிப்பவர். அவருடைய படத்தில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

தமிழ் பையன தான் கல்யாணம் பண்ணவேன்ணு சொன்னீர்களே?
நான் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டது. மொழி பிரச்சனையால் அப்படி புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன். நான் அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல பையன் கிடைக்க வேண்டும். தமிழோ அல்லது வேறு எந்த மொழி, சாதி, மதமாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவராக இருக்க வேண்டும்.
உடன் நடித்த நடிகர்கள் பற்றி கேட்ட போது அவர் கூறிய பதில்களாவன,
விஜய் சேதுபதி - இயற்கையான நடிகர். அவர் மட்டும் எப்படி இயற்கையாக இருக்கலாம். அவருடன் நடிக்க பயமாக இருக்கும். எனக்கு பிடித்த நடிகர்களுள் அவரும் ஒருவர். அவர் நடிப்பதே தெரியாது, அந்த அளவுக்கு சிறந்த நடிகர். மணிரத்னம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். பயங்கரமான நடிகர்.
கார்த்தி - கார்த்தியுடன் 3 படம் நடித்திருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புபவர்.
விஜய் - ரொம்ப அமைதியாக இருப்பார்.
அஜித் - குடும்ப மனிதர். படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு சமைத்து கொடுப்பார்.
பிரபாஸ் - பாகுபலி, உண்மையான பாகுபலி. இரக்க குணமுடையவர். பலமானவர்.
இவ்வாறு கூறினார். #KanneKalaimaane #Tamannaah #UdhayanidhiStalin #VijaySethupathi
எச்.வினோத் இயக்கத்தில் பிங்க படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அஜித்குமார், சமீபத்தில் மோகன்லால், பிரபாசை சந்தித்து பேசிய நிலையில், அவர்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். #AjithKumar
விஸ்வாசம் படத்தை அடுத்து தனது 59-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மோகன்லால் நடிக்க பிரியதர்ஷன் இயக்கும் மராக்கர் அரபிக்கடலிண்ட சிம்ஹம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் அவர்களின் படப்பிடிப்பு அரங்கிற்கு திடீரென்று சென்ற அஜித் அங்கிருந்த மோகன்லால், பிரியதர்ஷன் இருவரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அவரது அரங்கிற்கும் சென்றுள்ளார். அஜித்தை கண்டதும் அன்புடன் வரவேற்றார் பிரபாஸ். ஆரம்பம் படத்தில் அஜித்துடன் ராணா நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தன்னிடம் பாகுபலி படப்பிடிப்பின் போது ராணா பகிர்ந்துகொண்டதை பிரபாஸ் கூறி உள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் பிரபாசுடன் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்த அஜித் பின்னர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மோகன்லால், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக அவர்களிடம் அஜித் தெரிவித்தாராம். #AjithKumar #Mohanlal #Prabhas
சமீபத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஏமி ஜாக்சன், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, கல்யாணத்துக்கும் கவர்ச்சிக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார். #AmyJackson
2.0 படம் வெளியான பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நடிகை ஏமி ஜாக்சன், தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். புதிய பட வாய்ப்புகள் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்தார்.
எனவே திடீரென்று இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனய்யோடோ உடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தடாலடியாக அறிவித்தார். பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்த படங்கள், படு கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்த ஏமி ஜாக்சன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகும் அதை தொடர்ந்து வருகிறார்.

சமீபத்தில் ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது படு கவர்ச்சியாக புதுவகை ஆடை அணிந்து வந்தார். இதுகுறித்து ஏமியிடம் கேட்டபோது, ‘அழகிபோட்டி நிகழ்ச்சியில் அழகை வெளிப்படுத்த வேண்டும். கல்யாணம் ஆகப்போகும் நிலையில் இப்படி கவர்ச்சியாக வரலாமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை’ என தெரிவித்திருக்கிறார். #AmyJackson
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருக்கும் நிலையில், படம் பெரும்பாலும் அமெரிக்காவில் உருவாகுவதாக கூறப்படுகிறது. #Dhanush #KarthikSubbaraj
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, தனுசை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப்போவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இருவருமே வேறு படங்களில் பிசியாகிவிட்டனர். இதனால் அவர்கள் இருவரும் இணைய வேண்டிய படம் கைவிடப்பட்டதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை. தனுஷ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தற்போது முழுவீச்சில் கதை எழுதி வருகிறார்.
விரைவில் எழுத்துப் பணிகள் நிறைவுபெற்று ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறது. #Dhanush #KarthikSubbaraj
அஜித், விக்ரம் ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா திரிவேதி மகத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். #PriyankaTriveti #MahatRagavendra
அஜித் நடித்த ராஜா, விக்ரம் நடித்த காதல் சடுகுடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி. 2003-ம் ஆண்டு கன்னட நடிகர் உபேந்திராவை மணம் முடித்த பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இவர் கடைசியாக அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஜனனம் திரைப்படம் 2004-ம் ஆண்டு வெளியானது. தற்போது பதினைந்து ஆண்டுகளுக்கு பின் மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத ஹாரர் திரில்லர் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர்கள் மகேஷ் வெங்கடேஷ் இருவர் இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

வரும் வாரம் முதல் பிரியங்கா படக்குழுவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
குழந்தைகள் வளரும் வரை நடிப்பில் இருந்து விலகி இருந்த பிரியங்கா கன்னடம், வங்க திரையுலகில் சில படங்களில் நடித்துவந்தார். இவர் தற்போது நடித்துள்ள ஹவாரா பிரிட்ஜ் திரைப்படம் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. இந்த படமும் தமிழில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #PriyankaTriveti #MahatRaghavendra #YashikaAannand
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்களுக்காக , மார்ச் 15th முதல் ! #IspadeRajavumIdhayaRaniyum@jeranjit@ShilpaManjunat@SamCSmusic@thinkmusicindia@SureshChandraa@CtcMediaboy@madhavmediapic.twitter.com/sujVKfF4Rb
— Harish kalyan (@iamharishkalyan) February 23, 2019
மாதவ் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். கவின்ராஜ் ஒளிப்பதிவும், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunat
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:
தமிழ், கன்னட படங்களில் நடித்து பிரபலமான நடிகை விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா துறையிடம் உதவி கோரியுள்ளார். #Vijayalakshmi #Hospitalized
தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வந்தது.
அவர் தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விஜயலட்சுமி சகோதரி இதுபற்றி கூறியதாவது:-
‘விஜயலட்சுமிக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளோம். விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும்‘
இவ்வாறு அவர் கூறினார்.
2006-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஒரு உதவி இயக்குனர் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதுதான் அவர் தற்கொலைக்கு முயல காரணமாக பேசப்பட்டது. அதே ஆண்டு விஜயலட்சுமி தனது தந்தையையும் இழந்தார்.
இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்த விஜயலட்சமி ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். அந்த திருமணம் 2007-ம் ஆண்டு நடந்து இருக்க வேண்டியது. ஆனால் திடீர் என்று ரத்தாகிவிட்டது. அதன் பின்னர் விஜயலட்சுமி வெளியில் வருவதையே குறைத்துக்கொண்டார். #Vijayalakshmi #Hospitalized
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Karthi #RashmikaMandanna
கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அவர் விஜய் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாவதாக சில சில வதந்திகள் பரவிய நிலையில், ராஷ்மிகா கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Karthi #RashmikaMandanna #BaghyarajKannan
வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.
அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:
"நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.
அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.
என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.
"ஹு ஆர் ? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.
"ராஜையா'' என்றேன்.
"கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
"எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.
"எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.
அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.
"சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.
அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா. போ! போ!'' என்றார்.
அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.
ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்
இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.
ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.
என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''
இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:
"அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.
அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.
அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.
அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''
- இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.
"இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.
ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.
இதுபற்றி அவரே கூறுகிறார்:
"1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்யுனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.
இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்யுனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நிலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்யுனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.
ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.
கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்யுனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.
இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.
இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.
தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.
உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது. #tamilnews
ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் கே.ஆர்.பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எல்கேஜி’ படத்தின் விமர்சனம். #LKG #LKGMovie #LKGMovieReview
ஆளுங்கட்சியில் கவுன்சிலராக இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அதே கட்சியில் பேச்சாளராக இருக்கிறார் இவரின் தந்தை நாஞ்சில் சம்பத். பேச்சாளராகவே இருந்து வரும் தந்தையை போல் இல்லாமல், கவுன்சிலரில் இருந்து எம்.எல்.ஏ, எம்.பி என அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார் ஆர்ஜே பாலாஜி.
இவருடைய மாமா மயில்சாமி துணையுடன் ஏரியா மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில், இவரின் கட்சித் தலைவரான முதலமைச்சர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருப்பவர் ராம்குமார். இவருக்கும் அதே கட்சியில் இருக்கும் ஜே.கே.ரித்திஷுக்கும் மோதல் இருந்து வருகிறது.
முதலமைச்சர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்த ஆர்.ஜே.பாலாஜி, முதலமைச்சர் தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக நினைத்து சென்னைக்கு வருகிறார். அங்கு சமூக வலைத்தளத்தில் சிறந்து விளங்கும் நாயகி பிரியா ஆனந்தை சந்திக்கிறார்.

இவர் மூலம், சமூக வலைத்தளத்தில் பிரபலமாக என்னவெல்லாம் வழி இருக்கிறதோ, அதையெல்லாம் செய்து பிரபலமாகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில், முதலமைச்சர் இறக்க, ராம்குமார் ஆர்ஜே பாலாஜியை அழைத்து பேசி இடைத்தேர்தலில் நிற்க வைக்கிறார்.
இதற்கு ஜே.கே.ரித்திஷ் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி, அதே தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறார். இறுதியில், ஆர்ஜே பாலாஜி, ஜே.கே.ரித்திஷை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஆர்ஜே பாலாஜி, இப்படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக காமெடியில் அதகளப்படுத்தி இருக்கிறார். கதாநாயகனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். நடிப்பில் மட்டுமில்லாமல், கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.
நாயகி பிரியா ஆனந்த், ஆர்ஜே பாலாஜிக்கு ஆலோசனையாளராகவும், அறிவுரையாளராகவும் நடித்திருக்கிறார். திரையில் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி வில்லனாக வரும் ஜே.கே.ரித்திஷ், பாலாஜிக்கு அப்பாவாக வரும் நாஞ்சில் சம்பத், மாமாவாக வரும் மயில்சாமி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராம்குமார் நடிப்பில், சிவாஜியும், பிரபுவும் வந்து செல்கிறார்கள்.

ஆர்ஜே பாலாஜி மனதில் நினைத்ததை திறம்பட இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.பிரபு. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த அரசியல் விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்...’ என்ற ரீமிக்ஸ் பாடல் தாளம் போட வைக்கிறது. விது ஐய்யனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘எல்கேஜி’ ஜெயிச்சாச்சி.
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, வீரா, சாந்தினி, வர்ஷா, சுந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெட்டிக்கடை' படத்தின் விமர்சனம். #Pettikadai #PettikadaiReview
சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார்.
அருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.

அருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `பெட்டிக்கடை' தேவை.
பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இன்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார். #KodiRamakrishna #RipKodiRamakrishna
பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.
இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களை இயக்கியுள்ளார். கோடி ராமகிருஷ்ணன் இழப்பால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #KodiRamakrishna #RipKodiRamakrishna






