என் மலர்
- காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார்.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார்.
மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.
திரையரங்கில் வெளியான 'சிக்கந்தர்' படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தது. திரைப்படம் மக்களிடமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் சிக்கந்தர் படம் குறித்து அதன் நாயகி ராஷ்மிகா அண்மையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
அவர் பேசியதாவது, "சிக்கந்தர் கதை முதலில் முருகதாஸ் சொன்ன போது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் அதற்கு மாறாக இருந்தது.
பொதுவாக சில படங்களில் அப்படித்தான் நடக்கும். ஒரு கதையைக் கேட்கும்போது, அது ஒன்றாக இருக்கும்.
திரைப்படமாக உருவாகும் போது மாறும். அது சினிமாவில் சகஜம்தான். சிக்கந்தர் படத்திலும் அது நடந்தது" என்று தெரிவித்தார்.
- பராசக்தி படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமரன், மதராசி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த 9-ந்தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிவகார்த்திகேயனின் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலான படப்பட்டியலில் பராசக்தி இணைந்துள்ளது.
இதற்கு முன்னதாக அமரன் (300 கோடி ரூபாய்க்கு மேல்), மதராசி (100 கோடி ரூபாய்க்கு மேல்), டாக்டர் 100 கோடி ரூபாய்க்கு மேல், டான் (125 கோடி ரூபாய்க்கு மேல்) 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது.
மதராசி, அமரன், பராசக்தி என தொடர்ந்து 3 படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
- நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
- சென்னை உயர்நீதிமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலை 11.30 முதல் நான்கு மணிவரை தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.
- 500 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது
- படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும்
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமாட்டோகிராஃப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மறு தணிக்கை தொடர்பாக ஜனவரி 5ஆம் தேதியே ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துவிட்டோம். ஜனவரி 6ம் தேதி தான் சான்றிதழ் கோரி பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மறுஆய்வு முடிவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரவில்லை. பதில் மனு தாக்கலுக்கு அவகாசம் தராமல், மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய உத்தரவு தனி நீதிபதியால் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இதனையடுத்து மண்டல வாரியத்தில் யார் படத்தை பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்தது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மண்டல தணிக்கை வாரிய அதிகாரி ஜனநாயகன் படத்தைப் பார்த்தாரா? என நீதிபதி கேள்வி. அதற்கு அவர் படத்தைப் பார்க்கவில்லை, தணிக்கை குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் என தணிக்கை வாரியம் தெரிவித்தது. தொடர்ந்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதை நிறுத்த சொன்னது யார் என நீதிபதி வினவினார். அதற்கு, புகாரை அடுத்து சான்றிதழ் வழங்கும் முடிவை நிறுத்திவைத்தோம். தற்போதுவரை இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜாவான் படம் எடுத்தார்.
- கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரியாவை திருமணம் செய்துகொண்டார் அட்லீ.
ராஜா ராணி, தெறி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அட்லீ. அதனைத்தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து அடுத்தடுத்து படங்கள் எடுத்து பட்டித் தொட்டி எங்கும் புகழ்பெற்றார். தொடர்ந்து பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜாவான் படம் எடுத்தார். பான் இந்தியா படமான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக இயக்குநர் அட்லீ அறிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரியாவை திருமணம் செய்துகொண்டார் அட்லீ. இந்த தம்பதிக்கு முன்னரே வீர் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் தங்களது இரண்டாவது கர்ப்பம் குறித்து அறிவித்துள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும் ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது.
- அறிமுக தமிழ் இயக்குநரின் திரைப்படம் பெர்லினேல் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் ஃபோரம் பிரிவில் 'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' என்ற தமிழ் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கௌதம் இயக்கியுள்ளார், தமிழரசன் காளிதாஸ் தயாரித்துள்ளார். கூழாங்கல் படத்தில் நடித்த கருத்தடையான், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிமுக தமிழ் இயக்குநரின் திரைப்படம் பெர்லினேல் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. மணிரத்னத்தின் அலைபாயுதே (2001), அமீரின் பருத்திவீரன் (2008) மற்றும் பி.எஸ். வினோத்ராஜின் கொட்டுக்காளி (2024) ஆகியவற்றைத் தொடர்ந்து, மதிப்புமிக்க பிரிவில் திரையிடப்படும் நான்காவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.
பெர்லினேல் தேர்வுக்குழு படம் குறித்து கூறியதாவது;
"ஒரு இளைஞன் மரணமடைகிறான். ஈமச்சடங்குகள் நடக்கின்றன; ஆனால் துக்கம் அந்தளவுக்கு இல்லை. அந்த மரணம் பல விஷயங்களை உலுக்கி மாற்றுகிறது. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும் ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது. என்ன ஒரு அற்புதமான அறிமுகத் திரைப்படம்!" எனக் குறிப்பிட்டுள்ளது.

பெர்லின் திரைப்பட விழாவில் படம் தேர்வானது குறித்து பேசியுள்ள இயக்குநர் ஆர்.கௌதம்,
"2025-இல் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்குப் பெருமிதம் அளிக்கிறது. என்னைப்போன்ற ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது, தற்போது தமிழ்நாட்டில் செழித்து வரும் துடிப்பான கலைச் சூழலைப் பிரதிபலிக்கிறது. அலைபாயுதே, பருத்திவீரன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களின் வரிசையில் எனது படமும் இடம்பெற்றிருப்பது, தெற்காசியாவிலிருந்து உலக மேடைக்கான தமிழ் சினிமாவின் பயணம் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறி வருவதைக் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெறுகிறது.
- தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜன நாயகன் படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
- இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது
ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் உங்கள் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வு காலை 11.30 மணிக்கு விசாரிக்கவுள்ளது.
- ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகிறது
- மங்காத்தா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில், ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துது. இதனையடுத்து மங்காத்தா' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது.
மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி அப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் வெங்கட்பிரகு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.
தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் அடுத்து உருவான "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். பாலிவுட்டில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து இப்படம் சாதனை படைத்தது.
இந்த நிலையில், தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 23ந் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹை பட்ஜெட் ஆக்சன் - ரொமான்ஸ் படமாக இப்படம் உருவாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார்.
6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‛பராசக்தி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
11-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் ஆண்டுதோறும் பத்மபாணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்மபாணி விருது தமிழின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள எம்ஜிஎம் வளாகத்தில் உள்ள ருக்மிணி அரங்கில் வரும் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.
விருதுடன் பாராட்டு பத்திரம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவையும் வழங்கப்படும்.
காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் தேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் துடிப்பான இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஆம்பள. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.
இதே பாணியில் சுந்தர் சி விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்ட மதகஜராஜா படமும் வரவேற்பை பெற்றது. ஆனால் 'ஆக்சன்' படம் சற்று சொதப்பியது.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் விஷால் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்திற்கு ஆம்பள இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.
சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் ஆதி மீண்டும் இணையும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ மூலம் அறிவித்துள்ளது.
'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் சுந்தர் சி அதனை முடித்துவிட்டு விஷால் படத்தின் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.








