என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.
    இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதிய படங்கள் அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இதனால் அவரே ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். படத்துக்கு "அச்சாணி'' என்று பெயர் வைத்தார். படத்துக்கு இசையமைக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.

    கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது.

    பூஜையன்றே பாடல் பதிவு.

    பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். கம்போசிங்கும் நடந்து முடிந்தது.

    இதில் "மாதா உன் கோவிலில் மணித்தீபம் ஏற்றினேன்'' என்ற பாடல், படத்தின் அச்சாணி போல.

    ஆனால் பூஜைக்கு முதல் பாடலாக வேறு பாடலை தேர்வு செய்திருந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை என்று முடிவானது.

    பூஜை தினத்தில் சவுண்டு என்ஜினீயர் எஸ்.பி.ராமநாதன் ஒரு சிறிய தவறு செய்ய, அது குழப்பமாகி பூஜையன்று எல்லாருக்குமே டென்ஷன்.

    எங்களுக்கு கொடுத்த பூஜை தினத்திலேயே உபேந்திரகுமார் என்ற கன்னட இசையமைப்பாளருக்கும் பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

    அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில்.

    பூஜைக்காக காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ போனால் அங்கே வேறு ஆர்க்கெஸ்ட்ரா (இசைக்குழு) இருந்தது.

    "இதென்ன! இவர்கள் எங்கள் ரெக்கார்டிங்கில் வாசிப்பவர்கள் இல்லையே?'' என்று கேட்டால், அப்புறம்தான் உண்மை தெரிந்தது. எஸ்.பி.ராமநாதன் இரண்டு பூஜைகளுக்கும் ஸ்டூடியோவை கொடுத்து இருப்பது!

    ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் ஒரு பாடலை யாராவது முடித்து விட்டால், அடுத்த பாடலை மதியம் ஒரு மணிக்குள் எடுத்து விடலாமே என்று அவரே ஒரு தப்புக்கணக்குப் போட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.

    இப்போது யார் ரெக்கார்டிங் வைத்துக் கொள்வது என்று நான் எஸ்.பி.ராமநாதனைக் கேட்க, அவர் சமாளித்துப் பார்த்தார். பதில் சொல்ல முடியவில்லை.

    உபேந்திரகுமாரோ எதுபற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கி விட்டார்.

    இனி இங்கே வேலைக்காகாது என்று தெரிந்து போக, ரெக்கார்டிங் நடத்த ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவை கேட்கச் சொன்னேன். அங்கே நடத்தலாம் என்பது தெரியவந்ததும் ஆர்க்கெஸ்ட்ராவுடன் அங்கே போனேன். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து, ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது.

    இதற்குள் நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    இதே நேரம் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த `ரெக்கார்டிங்' முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் இல்லாததால் 2 மணிக்கு மறுபடியுமாக அங்கேயே போனோம்.

    ஆர்க்கெஸ்ட்ரா தயாரானது. ஜானகி வந்தார். `மாதா உன் கோவிலில்' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து `டேக்' போகலாம் என்று தொடங்கினோம்.

    இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில்

    இருந்தேன்.இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன்.

    ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது.

    அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், `கண்டக்ட்' செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார்.

    எனக்கு கோபம். "என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மிïசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?'' என்று

    கேட்டேன்.அவரோ, "பாட்டில் மெய் மறந்துட்டேன்யா'' என்றார், கூலாக.

    எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது.

    மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது,

    "பிள்ளை பெறாத பெண்மை தாயானது

    அன்னை இல்லாத மகனை தாலாட்டுது''

    - என்ற வார்த்தைகளை அழகாகப் பாடியவர் அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார்.

    "ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?'' என்று ஜானகியை கேட்டேன்.

    ஆர்க்கெஸ்ட்ராவிலோ யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

    பொதுவாக `டேக்' கட் ஆனாலே "பேன் போடு'' என்று சத்தம் போடுபவர்கள், சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால், கோவர்த்தன் சார் `வாய்ஸ் ரூமை' கைகாட்டி ஏதோ சொன்னார்.

    என்னவென்று புரியாமல் `வாய்ஸ் ரூமை' பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது

    தெரிந்தது.விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: "டிïனும் வார்த்தையும் கலந்து `பாவத்தில்' ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.''

    ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.

    ருத்ரையா இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் `அவள் அப்படித்தான்.' இதில் என் இசையில் கமல் ஒரு பாட்டு பாடியிருப்பார். கமல் அப்போது மலையாளப்படம் ஒன்றில் நடித்து வந்தார்.

    ரெக்கார்டிங்கின்போது ஸ்டூடியோவுக்கு வந்தார். பாடலை பாடிக்காட்டினேன். கேட்டு அவரும் பாடிப்பார்த்தார். நன்றாக வந்தது. அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்து விட்டோம். அது `பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல். அமர் (கங்கை அமரன்) எழுதியது.

    கோவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கான மெட்டு உதயமானது.

    அந்த விழா மேடையில் பஞ்சு சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் மேடையிலேயே வந்து பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, மேடையிலேயே கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடியது.

    அந்தப் பாடலுக்கு வேறு வார்த்தைகளை போட்டு அமர் எழுதியதுதான் `பன்னீர் புஷ்பங்களே' பாட்டு.

    இந்தப் பாடலை கமல் பாடி முடித்து ரொம்ப நாள் கழித்துத்தான் அதில் இருந்த தவறு ஒன்று எனக்குத் தெரிந்தது.

    கமல் `பன்னீர் புஷ்பங்களே' என்ற வார்த்தையை `பன்னீர் புஷ்பங்ஙளே' என்று பாடிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "அப்போது மலையாளப் படத்தில் நடித்து வந்ததால் தமிழை மலையாளம் போல பாடிவிட்டேன்'' என்றார்.

    ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார்.

    யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை `தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.

    ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு, ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே, இதுதான் சினிமா உலகமா? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது.

    ஸ்ரீதர் தனது படத்துக்கு "இளமை ஊஞ்சலாடுகிறது'' என்று பெயர் வைத்திருந்தார்.

    அப்போது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு படத்தின் பின்னணி இசை வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் கம்போசிங் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரைக்கும், இரவு 10 மணியில் இருந்து விடியும் வரைக்கும் நடந்தது.

    "ஒரே நாள் உனை நான்நிலாவில் பார்த்தது''

    - என்ற பாடல் படத்தின் "தீம் ஸாங்.''

    "நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?'' என்ற இரண்டு பாடல்களையும் முதலில் பதிவு செய்தோம்.

    மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார்.

    இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

    அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங்.

    ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டிïன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

    இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு.

    "சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் `ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது!

    இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன் னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

    மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

    ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். `டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன்.

    அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந் தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டிïன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.

    உயரமான நடிகை ஒருவர் பெரிய ஹீரோ, ரூ.5 கோடி சம்பளம் இருந்தால்தான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆவேன் என்று கண்டிஷன் போட்டு வருகிறாராம்.
    உயரமான நடிகை நடித்த பிரம்மாண்ட படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்னர் அந்த நடிகை நடித்த எந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்களும் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    அப்படியிருக்கையில், இந்த பிரம்மாண்ட படம் நடிகைக்கு மார்க்கெட்டை எகிற வைத்துள்ளதாம்.  இனிமேல் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன், சம்பளமும் ரூ.4 கோடி கொடுக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். தன்னை ஒப்பந்தம் செய்யும் வரும் இயக்குனர்களிடம் இந்த கண்டிஷனை சொல்லி, அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால்தான் கதையே கேட்கிறாராம்.



    இதனால், ஒரு சரித்திர பட வாய்ப்பையே அவர் உதறி தள்ளிவிட்டாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக அது இருந்தாலும் அதில் பெரிய ஹீரோ இல்லை என்பதால் அந்த படத்தை உதறிவிட்டாராம். 
    2017-ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்களின் முழு விவரங்கள் உள்ளே உள்ளது.
    இந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இதில் தென்னிந்தியாவுக்கென்று தனியாக விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் இதற்கான விழா தென்னிந்திய மாநகரங்களில் நடைபெறுவது வழக்கம்.



    அந்த வகையில் இந்த ஆண்டு 64-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா, ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமா உலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதில் விருதுபெற்ற சினிமா நட்சத்திரங்களின் முழு பட்டியலை கீழே பார்ப்போம்.

    சிறந்த படம் - ஜோக்கர்
    சிறந்த நடிகர் - மாதவன் (இறுதிச்சுற்று)
    சிறந்த நடிகை - ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
    சிறந்த இயக்குனர் - சுதா கே.பிரசாத் (இறுதிச்சுற்று)
    சிறந்த துணை நடிகர் - சமுத்திரகனி (விசாரணை)
    சிறந்த துணை நடிகை - தன்சிகா (கபாலி)
    சிறந்த அறிமுக நடிகை - மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)
    சிறந்த அறிமுக நடிகர் - சிரிஷ் (மெட்ரோ)
    சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
    சிறந்த பாடலாசிரியர் - தாமரை (தள்ளிப்போகதே - அச்சம் என்பது மடமையடா)
    சிறந்த பின்னணி பாடகர் - சுந்தரைய்யர் (ஜாஸ்மினு - ஜோக்கர்)
    சிறந்த பின்னணி பாடகி - ஸ்வேதா மோகன் (மாயநதி - கபாலி)
    சிறந்த ஒளிப்பதிவாளர் - திரு (24)
    சிறந்த நடிகர் (Critics) - சூர்யா (24)
    சிறந்த நடிகை (Critics) - த்ரிஷா (கொடி)
    சீக்கியர் கோவிலுக்கு கவர்ச்சி உடையில் சென்ற சார்மி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.
    தமிழில் ‘காதல் அழிவதில்லை’, ‘காதல் கிசுகிசு’, ‘லாடம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையான இவர் தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது படங்கள் எதுவும் தன் கைவசம் இல்லாததால் நண்பர்களுடன் ஜாலியாக உலகை சுற்றி வருகிறார்.

    இந்நிலையில், சமீபத்தில் போர்ச்சுக்கல் சென்ற சார்மி, லிஸ்பனில் உள்ள சீக்கியர் கோவிலுக்கு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சார்மி. அதில், தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து அவர் வழிபாட்டு செய்துள்ளார்.



    இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் தொடை தெரியும் அளவுக்கு சீக்கியர் கோவிலுக்கு சென்று வழிபட்டது ரசிகர்களிடம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
    நதிகள் இணைப்புக்கு தான் அறிவித்த ரூ.1 கோடியை உடனடியாக வழங்க ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.

    சென்னை போயஸ் கார்டனில் இன்று நடிகர் ரஜினிகாந்த்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார். அப்போது நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக ரஜினி உறுதி அளித்தார்.

    தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. தமிழகத்தில் தொடர் வறட்சியினால் விவசாய பயிர்கள் கருகின.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தினார்.

    டெல்லி ஐந்தர்மந்தர் பகுதியிலும் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இன்று 11 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அங்கு ரஜினிகாந்த்தை சந்தித்து சால்வை அணிவித்தனர்.


    தமிழக விவசாயிகளின் கஷ்டங்கள் பாதிப்புகள் குறித்தும் நதிகள் இணைப்பு தொடர்பாக கோரிக்கை மனுவையும் ரஜினிகாந்த்திடம் வழங்கினார்.

    மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக ரஜினி காந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த நிதி உதவியை பிரதமரிடம் உடனே வழங்குமாறு ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார். அதனை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விரைவில் ரூ.1 கோடி நிதியை வழங்குவேன் என உறுதி அளித்தார்.

    ரஜினியை சந்தித்த பின் வெளியே வந்த அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நதிகள் இணைப்புக்காகவும், பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் நலன்களுக்காகவும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தோம். நதிகள் இணைப்பு திட்டத்துக்காக ரூ.1 கோடி வழங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். அந்த நிதியை பிரதமரிடம் வழங்க கோரினோம். தான் அறிவித்தபடியே ரூ.1 கோடியை தருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்தார்.

    மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென் பெண்ணை, பாலாறு, காவிரி ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். விவசாயிகள் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவளிப்பதாக உறுதி அளித்தார்.

    இவ்வாறு அய்யாக் கண்ணு கூறினார்.

    நடிகர் பிரசாந்த் தனது அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தின் தலைப்பை வைத்துள்ளாராம்.
    ‘சாகசம்’ படத்தை தொடர்ந்த பிரசாந்த் தற்போது ஜீவா சங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இப்படத்திற்கு ‘ஜானி’ என்ற தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    ‘ஜானி’ என்ற தலைப்பில் ரஜினி-ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் கடந்த 1980-ஆண்டு ஒரு படம் வெளியாகியுள்ளது. மறுபடியும் பிரசாந்த் நடிப்பில் ‘ஜானி’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அனன்யா சோனி என்ற பாலிவுட் நடிகை நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.



    விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை வாரிக்குவிக்கவில்லை. இதையடுத்து, இப்படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டிய அவசியத்தில் பிரசாந்த் கடுமையாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 
    பட்டமளிப்பு விழாவில் விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரைகள் பல வழங்கியுள்ளார்.
    இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவில் பன்முகம் கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார். நேற்று சென்னையில் நடந்த இந்த விழாவில் பட்டத்தை பெற்றுக்கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,

    40 வருடங்களுக்கு முன் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் உழைப்புதான். உழைப்பு ஒரு மனிதனை எப்போதுமே கைவிடாது என்பதற்கு என்னை நானே உதாரணமாக சொல்லிக் கொள்வேன். எனது மகனாக இருந்தாலும் விஜய் கடுமையாக உழைத்ததால்தான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை அவர் அடைந்துவிட்டாலும் இன்னும் அவர் கடினமாக உழைத்து கொண்டுதான் இருக்கிறார்.



    விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் என்னுடைய பிள்ளைகள்தான். அவர்களுக்கும் நான் உழைப்பைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஓய்வு என்பதே எனக்கு பிடிக்காது. பெரிய பெரிய ஜாம்பவான்களை உருவாக்கியிருக்கிறோம், சாதனைகள் பல செய்துவிட்டோம் என்று நான் ஒருநாளும் எண்ணியது கிடையாது. புகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டால் வளர்ச்சி அடங்கிப் போய்விடும்.

    நான் என் அம்மாவை 25 வருடம் என்னுடைய வீட்டில் மகாராணியாக வாழ வைத்தேன். எனது அம்மாவின் மகிழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க என்னுடைய வளர்ச்சியும் பல மடங்கு உயர்ந்தது. அதேபோல்தான் விஜய்யும். எந்த படப்பிடிப்பு இருந்தாலும் ஒருமுறையாவது அவரது அம்மா ஷோபாவை பார்க்காமலோ பேசாமலோ இருக்கமாட்டார். அதனால்தான் கடவுள் விஜய்யை இந்த உயரத்தில் வைத்திருககிறார்.

    விஜய் ரசிகர்களுக்கும், அனைத்து தரப்பினருககும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அனைவரும் அவரவர் தாயை நேசியுங்கள். அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். அப்படி செய்தால் நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் காலடியில் கிடக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு தொண்டு செய்யுங்கள். தொண்டனாக இருக்கும் ஒருவனால் மட்டும்தான் தலைவனாக முடியும், முதல்வனாக முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    விஜய் சேதுபதி ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்திற்காக 8 வேடங்களில் நடித்துள்ளாராம்.
    விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆறுமுக குமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பழங்குடியின தலைவரான விஜய் சேதுபதி நகரத்துக்கு வருவதுபோல படத்தின் கதையை மையப்படுத்தியிருக்கிறார்களாம்.



    படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள்ளேயே படமாக்கியுள்ளார்களாம். பழங்குடியின மக்கள் பின்பற்றும் தனித்துவ சடங்குகளை பற்றியே கதை நகர்வதால் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிக்க வேண்டியிருந்ததாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி 20 வயது இளைஞனாக நடித்துள்ளாராம். இதற்காக தனது முகத்தில் தாடி, மீசை எல்லாவ்ற்றையும் சவரம் செய்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

    விஜய் சேதுபதியின் கெட்டப்புக்காக 3 மேக்கப் மற்றும் சிகையலங்கார குழுவை நியமித்துள்ளார்களாம். படத்தின் பெரும்பகுதியான காட்சிகள் படமாக்கிவிட்டார்களாம். இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. 
    சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.
    சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படம் வருகிற ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமன்னா, ஸ்ரேயா, சானாகான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மஹத், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக இப்படம் வெளிவரவிருக்கிறது. முதல் பாகத்தில் ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ இரண்டு கெட்டப்புகளில் சிம்பு நடித்துள்ள காட்சிகள் மட்டுமே வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படத்தை குளோபல் இன்டோடெயிண்மெய்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    பிரெயின் ஃபீ இயக்கத்தில் `கார்ஸ்' பட பாகங்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள `கார்ஸ் 3' படத்தின் விமர்சனம்.
    கார்களில் முன்னணியில் இருக்கும் சிவப்பு கலர் காரான லைட்னிங் மெக்குயின், கார் பந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தையே பிடிக்கிறது. லைட்னிங்கின் நெருங்கிய நண்பர்களான பாபி ஸ்விப்ட் மற்றும் கேல் வெதர்ஸ் ஆகிய இரு கார்களும் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்து வருகிறது.

    இவ்வாறாக வெற்றிப் பாதையில் சென்ற இந்த கார்களின் வெற்றிக்கு தடை போடும்படியாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது அடுத்ததாக நடக்கும் கார் பந்தயப் போட்டியில் லைட்னிங், வெற்றி கோட்டை தொடும் சமயத்தில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஜாக்சன் ஸ்டார்ம் என்ற கருப்பு நிறக் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் லைட்னிங்கை முந்தி வெற்றிக் கோட்டை தொட்டுவிடுகிறது.



    இதையடுத்து, ஸ்டார்ம் மீது அனைவரின் கவனமும் திரும்ப, பழைய கார்கள் ஓரம் கட்டப்படுகிறது. நவீன தொழில்நுட்பம், புதுமையான ஸ்டைல் என அனைத்திலும் புதுமையை பார்த்த உடன், அனைவரும் லைட்னிங் மற்றும் அதன் நண்பர்களை ஓய்வுபெற சொல்லி வற்புறுத்த பாபி மற்றும் கேல் உள்ளிட்ட பல கார்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறது.

    பந்தயத்தில் தான் வென்றே தீருவேன் என்ற முடிவுடன் இருக்கும் லைட்னிங், ஓய்வு பெறாமல் அடுத்த பந்தயத்தில் பங்கேற்கிறது. லைட்னிங்கை தவிர்த்து மற்ற பழைய கார்கள் அனைத்தும் ஓய்வு பெற்றதால், லைட்னிங் புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. பந்தயத்தில் அந்த கார்களுக்கு ஈடுகொடுக்க போராடிய லைட்னிங், ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிவிடுகிறது.



    இதையடுத்து, லைட்னிங்கின் கதை அவ்வளவு தான் என்று பலரும் வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில் லைட்னிங் மீண்டும் புத்துயிர் பெற ஸ்பான்சர் ஒருவர் முன்வருகிறார். அவரது உதவியுடன் பழைய நிலைக்கு திரும்புகிறது லைட்னிங். ஆனால், அவர் லைட்னிங்கை போட்டியில் பங்கேற்க வைக்க விரும்பாமல், அதை வைத்து விளம்பரம் செய்து தன்னுடைய பொருட்களை விற்பனை செய்யவே முடிவு செய்கிறார். ஆனால் அவரது முடிவை ஏற்க மறுக்கும் லைட்னிங், கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. தோல்வியடைந்தால், அவரது பேச்சை கேட்பதாக கூறி வாழ்வா சாவா போட்டிக்கு தயாராகிறது.

    லைட்னிங்கின் கோச்சான க்ரூஸ் ரேமியர்ஸ் சில நுணுக்கங்களை தெரிவித்து போட்டிக்கு தயார்படுத்துகிறது. கடைசியில் நாம் எதிர்பார்த்த அந்த போட்டி வர, அதில் பங்கேற்கும் லைட்னிங் எப்படி வெற்றி பெற்றது? வெற்றி பெற என்ன செய்தது? அதன் என்ன முயற்சிகளை மேற்கொண்டது? அனைவரையும் மீண்டும் எப்படி கவர்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ஆங்கிலத்தில் ஓவன் வில்சன், கிறிஸ்டெலா அலோன்சா, கிறிஸ் கூப்பர், ஆர்மி ஹேமர் என கார்களுக்கு குரல் கொடுத்த அனைவரும் நக்கலுடன் பேசியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் வசனங்கள் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருக்கிறது.

    கார்ஸ் படங்களின் சீரியஸை இயக்கியுள்ள பிரெயின் ஃபீ, கார்ஸ் 3 படத்தை முந்தைய பாகங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இயக்கி இருக்கிறார். கார்ஸ் 1, கார்ஸ் 2 வரிசையில் கார்ஸ் 3 படமும் ரசித்து பார்க்கும்படி ட்விஸ்ட்டுகளுடன் இருக்கிறது.



    கேமரா காட்சிகளில் ஜெரமி லஸ்க்கி, கிம் வொயிட் திறம்பட செயல்பட்டிருக்கின்றனர். பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோஸின் பங்களிப்பு அளப்பறியாதது. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டிருக்கின்றனர். படத்தை 3டி-யில் பார்க்க பிரம்மாண்டாக இருக்கிறது. ராண்டி நியூமேனின் பின்னணி இசை காட்சிக்கு துணையாக ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `கார்ஸ் 3' ரேஸ் வின்னர்.
    விக்கி ஆனந்த் இயக்கத்தில் கலையரசன் - தன்ஷினா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உரு' படத்தின் விமர்சனம்.
    பிரபல எழுத்தாளர் கலையரசன், தனது மனைவி தன்ஷிகா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடக்கத்தில் அவர் எழுதிய கதைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வர்த்தக ரீதியாகவும் நல்லவிதமாக அமைந்தது. ஆனால் சமீபத்தில் கலையரசன் எழுதிய கதைகள் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாமல், பழைய பாணியிலேயே இருப்பதால் போதிய வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில், கலையரசனின் கதைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக இல்லை. காதல், செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தன்ஷிகாவும் கதை எழுதுவதை விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்கும்படி கலையிடம் கூறிவருகிறாள்.



    ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் "பயம்" என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார்.

    அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன. அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான்.



    அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கலையரசன், இப்படத்திலும் அதனை பின்பற்றி இருக்கிறார். இப்படத்தில் ஒரு எழுத்தாளருக்கு தேவையான குணநலன்களுடன் வலம் வரும் கலையரசனின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக மேகமலையில் நடக்கும் சம்பவங்களில் அவர் அனுபவிக்கும் அமானுஷ்ய விஷயங்களால் பயம், ஆச்சரியம், வியப்பு என மாறி மாறி நடித்து ரசிக்க வைக்கிறார்.



    தனது முதல் படத்திலேயே பேசப்படும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த தன்ஷிகா, தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தன்ஷிகாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

    மைம் கோபிக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயபாலன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.

    முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். உரு வழக்கமாக வரும் ஹாரர் படங்களை போல் இல்லாமல், ஒரு புதுமையான திரைக்கதையில் விறுவிறுப்புடன் இயக்கி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் க்ளைமேக்சில் மட்டும் இயக்குநர் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். சொல்ல வருவதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாக தெரிவிக்காமல் சுற்றி வளைத்து சொல்லி இருப்பது, அனைவராலும் உள்வாங்கிக் கொள்ளும்படியாக இல்லை. மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.  



    பின்னணி இசையை பொறுத்த வரை ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. காடுகளில் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மெனக்கிட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

    மொத்தத்தில் `உரு' நல்ல `உரு'வாக்கம்.
    தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.
    தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.

    தனது இசைப்பயண அனுபவம் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பைரவி படத்தை தயாரித்த கலைஞானம், "மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை (பின்னணி இசை சேர்ப்பு) முடிக்க வேண்டும். அந்த அளவுக்குத்தான் என்னிடம் பணம் இருக்கிறது. எனவே மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை முடித்துவிடுங்கள்'' என்று என்னிடம்

    சொல்லிவிட்டார்.இதுமாதிரியானதொரு நெருக்கடியை இதுவரை சந்தித்திராதவன் என்ற முறையில், அவர் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    நான் அவரிடம், "படம் மிகவும் சீரியசாக மனதைத் தொடும் விதத்தில் அமைந்திருக்கிறது. எனவே, மூன்று நாளைக்குள் முடியுமா என்பது சந்தேகம். அதோடு மூன்று நாளைத் தாண்டிவிட்டால் யார் பணம் கொடுப்பது?'' என்று கேட்டேன்.

    அவரோ, "எப்படியும் மூன்று நாளைக்குள் முடித்தாகணும்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னதும் நான் இன்னும் கோபமாகி, "மூன்று நாட்களுக்கும் மேலாக ரீரிக்கார்டிங் போனால் என் சம்பளப்பணத்தை நீங்கள் தரவேண்டாம். அதை ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கொடுத்து விடுங்கள்'' என்றேன்.

    கலைஞானம் பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

    ரீரெக்கார்டிங் தொடங்கியாயிற்று. படத்தின் ஆரம்பத்திலேயே கிளைமாக்ஸ் காட்சிகள் போல, ஹீரோவின் தங்கையை கெடுப்பது, அவளின் மரணம், அதன் இறுதிக்காட்சிகள், ஹீரோவின் சபதம், வில்லனின் ஆட்களோடு சண்டை என்று போய்க்கொண்டிருந்தது.

    எல்லா ரீல்களிலும் மிïசிக். மூன்று நாட்களுக்குள் முடியவில்லை. "சரி; அப்படியே இரவும் தொடர்ந்து வேலை செய்து முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதனால் இரவு 9 மணிக்கு முடிக்க வேண்டிய கால்ஷீட்டை முடிக்காது, இரவும் தொடர்ந்து வேலை செய்து அதிகாலை 4-30 மணிக்கு

    முடித்தோம்.கலைஞானத்திடம் `வருகிறேன்' என்றுகூட சொல்லாமல் கிளம்பினேன்.

    அப்போது அவர் நான் எதிர்பாராத ஒரு காரியம் செய்தார். என்னுடைய பாக்கி சம்பளத்தை கையில் வைத்தார்.

    "நீங்கள்தான் பணம் இல்லை என்றீர்களே?'' என்று கேட்டேன்.

    "பரவாயில்லை. கலைஞர்கள் வயிறெரியக்கூடாது'' என்றார், கலைஞானம்.

    நான் அவரிடம், "வேண்டாம். எனக்கு வருத்தமில்லை'' என்றேன்.

    அவரோ, "இல்லையில்லை, கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பேசிய தொகை கொடுத்தால்தான் மரியாதை'' என்று சொன்னவர், மேற்கொண்டு என்னை எதுவும் பேசவிடாமல் கையில் பணத்தை வைத்தார்.

    ஜெய்சங்கர், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் காயத்ரி. இதில் "வாழ்வே மாயமா?'' என்ற பாடல், நல்ல பாடலுக்கு இசையமைத்தோம் என்ற திருப்தியை தந்தது.

    இந்தப் படத்தில்தான் இந்தியத் திரை இசையில் முதன் முதலாக `எலெக்ட்ரிக் பியானோ' உபயோகிக்கப்பட்டது.

    தொடர்ந்து டி.என்.பாலு இயக்கிய "ஓடி விளையாடு தாத்தா'' என்ற காமெடிப் படத்துக்கு இசையமைத்தேன். இது சோபியா லாரன்ஸ் நடித்த "ரோமன் ஹாலிடே'' என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்.

    பத்ரகாளியை அடுத்து ஏ.சி.திருலோகசந்தரின் "பெண் ஜென்மம்'' படத்திற்கும் என்னையே இசையமைக்க அழைத்தார். இந்தப் படத்தில் `செல்லப்பிள்ளை சரவணன்' என்ற பாடல் எனக்கு பிடிக்கும். இப்போது கேட்டாலும், அதில் மூன்றாவது சரணத்திற்கு முன்வரும் இசையை கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

    ஸ்ரீதேவி நடித்த `சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்ற படம் வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது. ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் தாய்மார்கள், இருட்டும்வரை தங்களிடம் வேலை வாங்கும் முதலாளிகளைப் பார்த்து கெஞ்சுகிற முறையில் பாடும் பாடலான

    "தண்ணி கறுத்திருச்சு - மணித்தங்கமே

    தவளை சத்தம் கேட்டுருச்சு - ஒயில் அன்னமே

    புள்ளையுமே அழுதிருச்சு - மணித்தங்கமே

    புண்ணியரே வேலை விடு''

    - என்று ஒரு பாட்டு இருக்கிறது.

    சூரியன் மறைந்ததால், தண்ணீரில் இருட்டுப்பட்டு கறுப்பாகிவிட்டது. தவளைகள் கூட கத்துகின்றன. தொட்டிலில் தூங்க வைத்த பிள்ளையும் பசியால் அழுகிறது. புண்ணியவானே காலையில் இருந்து இருட்டும் வரை வேலை செய்து விட்டோம். இப்போது அந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்காகவாவது செய்த வேலை போதும் என்று சொல்லி, எங்களை விட்டுவிடு'' என்று கெஞ்சும் பாடல் இது.

    இந்த மெட்டை இந்தப் படத்தில் அதன் வார்த்தைகளை விட்டு விட்டு, வேறு வார்த்தைகளை வைத்து கவிஞர் வாலி பாட்டு எழுதினார். இது ஒரு தாலாட்டுப்பாடல் போல் படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.

    "துணையிருப்பாள் மீனாட்சி'' என்ற படத்தில் `சுகமோ ஆயிரம்' என்று ஒரு பாடல் பிரபலம். இந்தப்படம் தொடர்பான ஒரு விஷயம் சொல்லவேண்டும்.

    சரசா பி.ஏ'' என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் நடராஜன், திருச்சி ரங்கராஜன் என்பவருடன் சேர்ந்து பி.ஆர்.சோமு டைரக்ஷனில் "உயிர்'' என்ற படத்தை ஜெமினி ஸ்டூடியோ உதவியோடு தயாரிக்க இருந்தார்.

    ஏற்கனவே திருவையாறு ரமணஸ்ரீதர் - சரளா கச்சேரிகளுக்கு நான் வாசித்திருக்கிறேன்.

    ரமணி (ரமணிஸ்ரீதர்) இன்றைய நடிகர் ராகவேந்தர். இவர் தயாரிப்பாளர்களுக்கு நண்பர்.

    என்னைப்பற்றிசொல்லி இந்தப் படத்துக்கு இசையமைக்க வைக்கலாம் என்று சிபாரிசு செய்திருந்தார்.

    அதற்கு அவர்களோ, "முதன் முதலில் அவருக்கு படம் கொடுத்ததே நாம்தானே. அதற்கும் நீதானே சிபாரிசு செய்தாய். ஜெமினிகணேசன் - பத்மினி நடிக்க தாதாமிராசி டைரக்ஷனில், வாசு ஸ்டூடியோவில் டி.எம்.சவுந்தர்ராஜன் பாட, `சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு' என்று அமரன் பாட்டெழுதி ரெக்கார்டு செய்து படம் நின்று போயிற்றே! அந்த ராஜாவைத்தானே சொல்கிறாய்?'' என்று ரமணியை கேட்டிருக்கிறார்கள்.

    "இல்லையில்லை. அது ஏதோ அசந்தர்ப்பம். அதற்காக திறமை உள்ளவர்களை தள்ளி வைத்தால் எப்படி?'' என்று பதிலுக்கு இவர் கேட்டிருக்கிறார்.

    இப்படிச் சொன்னதும் அவர்கள், "சரி சரி! ஒரு 5 பாடல்கள் ரெக்கார்டு செய்து கொடுக்கட்டும். ஏனென்றால் ஜெமினி ஸ்டூடியோவின் ஆதரவில் இந்தப்படம் வரவேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களிடமும் ஒப்புதல் வாங்க இந்தப் பாடல்கள் உதவியாக இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ரமணி எங்களிடம் வந்து இதைச் சொல்ல, ஸ்டூடியோவுக்கும் ஆர்க்கெஸ்ட்ராவுக்கும் என் கையில் இருந்த பணத்தைப்போட்டு ரெக்கார்டிங்குக்கு ஏற்பாடு செய்தேன்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வசந்தா, சரளா, ரமணி பாடினார்கள். ஒரே நாளில் 5 பாடல்கள் பதிவாயின. ஜெமினி ஸ்டூடியோவில் கோடீஸ்வரராவ் என்ற என்ஜினீயர் பாடல்களை பதிவு செய்தார்.

    பாடல்கள் "ஓ.கே'' ஆயின. பூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது.

    இப்போது போல, அப்போதெல்லாம் பூஜைக்கு அழைப்பிதழோ, போஸ்டர்களோ அடிக்கும் பழக்கம் இல்லை.

    பூஜை, பாடல் பதிவு அவ்வளவுதான். எல்லாரையும் நேரிலோ, போனிலோ அழைத்து விடுவார்கள்.

    பூஜைக்கு முதல் நாள். ரமணி காமராஜர் சாலையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்.

    அப்போது நான் வீட்டில் இல்லை. இந்த ரமணி எப்போதுமே துறுதுறுவென்றிருப்பார். டிபன் சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து வெளியே பீடா ஸ்டாலில் பீடா போட்டால், கடைக்காரரை குஷிப்படுத்த சத்தம் போட்டு ஏதாவது ஒரு பாடலைப் பாடுவார். இப்படிப்பாடும்போது ரோட்டில் டிராபிக்கோ, மாணவ, மாணவியரோ, ஜனங்களோ யார் வேடிக்கை பார்த்தாலும் கவலையே படமாட்டார். பாடி முடித்ததும் காசு கொடுத்துவிட்டு `கண்ணா நான் வரட்டுமா?' என்று கிளம்பிவிடுவார்.

    நாங்களெல்லாம் அவர் பாடுவதையும், சிவாஜி போல் நடித்துக் காட்டுவதையும் சிரித்த முகமாய் ரசிப்போம்.

    வீட்டுக்கு என்னைப் பார்க்க வந்தவர், காத்துக்கொண்டிருக்க முடியாமல் ஒருவித தவிப்பு நிலையில் இருந்திருக்கிறார். அம்மா அவரை "உட்காரு தம்பி'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    உட்கார்ந்தவர் என் ஆர்மோனியப் பெட்டியை எடுத்து ஏதோ வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    எனக்கோ என் ஆர்மோனியம் உயிருக்கு மேல். அதை யாரையும் தொடவிடமாட்டேன்.

    என் ஆர்மோனியத்தை இவர் வாசிப்பதை பார்த்ததும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    "ஏய்! யாரைக் கேட்டு இதைத் தொட்டாய்?'' எப்படி நீ இதைத் தொடலாம்?'' என்று கன்னாபின்னா என்று சத்தம் போட்டேன்.

    அவர் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் கத்தியதில் ஏற்பட்ட அதிர்ச்சியையும், அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். என்றாலும் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு, "ஏய் ராஜா! என்னய்யா இது? இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு கோபம்?'' என்று என்னை சமாதானப்படுத்த முனைந்தார்.

    ஆனால் நான் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அப்போது இருந்தேன். இதனால் மேலும் கத்திவிட்டேன்.

    ஒரு கட்டத்தில் ரமணியால் தாங்கமுடியவில்லை. உடனே அவருக்கும் கோபம் வந்து, "ஏய்! என்னை இந்த (ஆர்மோனியம்) பெட்டியைத் தொடக்கூடாதுன்னு சொல்லி திட்டிட்டே இல்லே? உன் முன்னால் நான் மிïசிக் டைரக்டரா ஆகிக்காட்டலைன்னா நான் ரமணி இல்லை'' என்று சபதம் செய்தார்.

    நானும் விட்டேனில்லை. "நீ மிïசிக் டைரக்டராகு. பேர் எடு. அதனால எனக்கொண்ணும் இல்லை. என் இடம் எனக்குத்தான். உன் இடம்  உனக்குத்தான். ஆனால் நீ ஒரு பாடகனா இந்த சினிமாவில் பேர் எடுக்கவே முடியாது'' என்று கண்மூடித்தனமாக வார்த்தைகளை

    விட்டுவிட்டேன்.அடுத்த நாள் பூஜையில் "உயிர்'' படத்துக்கு ரமணி இசையமைப்பாளர். அவரது இசையில் பாடல் பதிவானது. ரமணி, ரமணஸ்ரீதர் ஆகிவிட்டார்.

    இந்தப் படத்துக்கு நான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த பாடல்களில் ஒன்றான `புது நாள் இன்று தான்' என்று அமரன் எழுதி வசந்தா பாடிய பாடல், இப்போது "சுகமோ ஆயிரம்'' என்று எஸ்.பி.பி.யும், பி.சுசீலாவும் பாட, `துணையிருப்பாள் மீனாட்சி' படத்தில் இடம் பெற்றது.
    ×