என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா 950 S GP மோட்டார்சைக்கிள் 973சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான டுகாட்டி இந்தியாவில், மல்டிஸ்டிராடா 950 S GP வைட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போதே, இந்த மாடலின் வைட் நிறம் வெளியாகும் என டுகாட்டி அறிவித்து இருந்தது.

    இந்தியாவில் டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 S GP வைட் மாடல் விலை ரூ. 15.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு நாட்டில் உள்ள அனைத்து டுகாட்டி விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது. புது நிற வேரியண்ட் விலை ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.

     டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 S GP  வைட்

    புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அம்சங்கள் அடிப்படையில் மல்டிஸ்டிராடா 950S மற்றும் 950 S GP வைட் மாடல்களில் எந்த வித்தியாசமும் இல்லை. டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 S GP மாடலில் 937சிசி, ட்வின் சிலிண்டர் டெஸ்டாஸ்டிரெட்டா என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 111 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் டுகாட்டி குவிக் ஷிப்ட் பை-டைரெக்ஷனல் குவிக் ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.
    நாடு முழுக்க அனைத்து சுங்க சாவடிகளிலும் வாகனங்கள் மஞ்சள் கோடில் இருந்தால் பணம் செலுத்த வேண்டாம்.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுக்க செயல்பட்டு வரும் சுங்க சாவடிகளுக்கு புது விதிமுறைகளை பிறப்பித்து இருக்கிறது. புது விதிமுறைகள் சுங்க சாவடிகளில் மக்கள் காதிருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புது விதிமுறைகளின் படி, சுங்க சாவடிகளில் வாகன வரிசை 100 மீட்டர்களுக்கும் அதிகமாக நிற்காது. மேலும் சுங்க சாவடிகளில் ஒரு வாகனத்திற்கு அதிகபட்சம் பத்து நொடிகளுக்குள் பணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.

     தேசிய நெடுஞ்சாலை துறை

    ஒருவேளை சுங்க சாவடியில் வாகன வரிசை 100 மீட்டர்களை கடந்து இருந்தால், வாகனங்கள் கட்டணமின்றி சுங்க சாவடியை கடக்க முடியும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சரியாக 100 மீட்டர் பகுதியில் மஞ்சள் நிற கோடி வரையப்பட இருக்கிறது.

    சுங்க சாவடிகளில் பாஸ் டேக் முறை பின்பற்றப்படுவதால், இங்கு வாகனங்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்து இருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன உரிமையாளர்கள் எரிபொருள் சேமிக்க முடியும். தற்போது  சதவீத சுங்க சாவடிகளில் பாஸ்டேக் முறை பின்பற்றப்படுகிறது.
    ஜெர்மனி நாட்டில் தானியங்கி வாகனங்களை பொது சாலையில் அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.

    பொது சாலைகளில் தானியங்கி வாகனங்களை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஜெர்மனி நாட்டின் பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இருக்கிறது. அதன்படி 2022 முதல் ஜெர்மனி சாலைகளில் தானியங்கி வாகனங்கள் இயக்கப்பட இருக்கின்றன.

     தானியங்கி வாகனம்

    தானியங்கி வாகனங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த அனுமதிக்கும் புது திட்டம், தானியங்கி வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், தானியங்கி வாகனங்களில் பாதுகாப்பிற்கு ஓட்டுனர் அமர வேண்டிய அவசியம் இருக்காது. 

    தானியங்கி வாகனத்தினுள் பாதுகாப்பிற்காக ஓட்டுனர் அமர்ந்து இருக்கும் நிலையில் ஜெர்மனியில் நீண்ட காலமாக வாகன சோதனை நடைபெற்று வந்தது. தற்போது பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தாலும், மேல் சபையில் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே சட்டமாக்கப்படும்.
    ஹோண்டா நிறுவனத்தின் முதல் ஆடம்பர விமானம் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் குறைந்த எடை கொண்ட சிறு விமானத்தை உருவாக்கி இருக்கிறது. பல ஆண்டு கால தொடர் முயற்சி காரணமாக இந்த விமானத்திற்கு தேவையான சான்றிதழ்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டாவின் முதல் விமானம் ஹோண்டாஜெட் எலைட் எஸ் என அழைக்கப்படுகிறது.

     ஹோண்டா எலைட் எஸ்

    ஓவர்-தி-விங்-என்ஜின் மவுண்ட் கொண்டிருக்கும் ஹோண்டாஜெட் எலைட் எஸ் சிறப்பான டேக்-ஆப் வெயிட் கொண்டிருக்கிறது. இதன் டேக்-ஆப் வெயிட் 90 கிலோ வரை அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் கூடுதல் பயணிகள் இதில் பயணம் செய்யலாம். இத்துடன் அதிகபட்சம் 225 கிலோமீட்டர் வரை கடக்க முடியும்.

    தற்போது பல்வேறு கார் மாடல்களில் பரவலாக வழங்கப்படும் ஆட்டோபைலட் அம்சம் இந்த விமானத்தில் உள்ளது. இது அட்வான்ஸ்டு ஸ்டீரிங் ஆக்மென்டேஷன் சிஸ்டம் என அழைக்கிறது. இதனால் விமான சற்று நேரம் ஓய்வு எடுக்க முடியும். இந்த விமானம் கன்மெட்டல், லூக்ஸ் கோல்டு மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது. தனி விமானத்தை வாங்கி பயன்படுத்த நினைப்போருக்கு புதிய ஹோண்டாஜெட் எலைட் எஸ் சிறந்த தேர்வாக இருக்கும். 
    கியா இந்தியா நிறுவனத்தின் எம்பிவி கார் மாடல் அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் தனது புது வாடிக்கையாளர்களுக்கு ‘Satisfaction Guarantee Scheme’ எனும் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை கியா கார்னிவல் மாடலை வாங்குவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

     கியா கார்னிவல்

    புது திட்டத்தின் கீழ் கியா கார்னிவல் மாடலை வாங்குவோர், காரை பிடிக்காத பட்சத்தில் அதனை திரும்ப கொடுத்துவிடலாம். இவ்வாறு காரை திரும்ப கொடுக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் கார் 1500 கிலோமீட்டர்களுக்குள் ஓடியிருக்க வேண்டும். இத்துடன் காருக்கு எந்த சேதமும், வேறு எந்த கோளாறும் ஏற்பட்டிருக்க கூடாது. 

    இந்த திட்டம் கார்னிவல் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். காரை திரும்ப வழங்கும் போது 95 சதவீத தொகை திரும்ப வழங்கப்படுகிறது. இத்துடன் காரை வழங்கும் போது NOC சான்றும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
    கேடிஎம் நிறுவனத்தின் 2021 ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை 2021 ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட கேடிஎம் விற்பனையாளர்கள் புதிய ஆர்சி 390 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒவ்வொரு விற்பனையாளருக்கும் ஏற்ப, முன்பதிவு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி 2021 கேடிஎம் ஆர்சி 390 மாடல் அடுத்த ஒரு மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     கேடிஎம் ஆர்சி 390

    புதிய கேடிஎம் ஆர்சி 390 விலை முந்தைய மாடலை விட ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கேடிஎம் ஆர்சி 390 விலை ரூ. 2.66 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய ஆர்சி 390 பல்வேறு மாற்றங்களுடன் வெளியாகும் என தெரிகிறது.

    இந்த மாடலில் 373சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புது மாடல் டிஎப்டி டிஸ்ப்ளே, குவிக் ஷிப்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா சுப்ரா மாடல் விற்பனைக்கு வருகிறது.


    பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பிரைட் ஆரஞ்சு நிற 1994 டொயோட்டா சுப்ரா விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் பாரெட் ஜேக்சன் சந்தையில் ஏலம் விடப்பட இருக்கிறது. இந்த சுப்ரா மாடல் 2001 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் வெளியான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

     வலைதள ஸ்கிரீன்ஷாட்

    இந்த காரின் வெளிப்புறம் கேண்டி ஆரஞ்சு நிற பெயின்டிங், நியூக்ளியர் கிளாடியேட்டர் கிராபிக்ஸ் கொண்டு பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பூமெக்ஸ் பாடி கிட், TRD ஸ்டைல் ஹூட், APR அலுமினியம் ரியர் விங், 19 இன்ச் டேச் மோட்டார்ஸ்போர்ட் ரேசிங் ஹார்ட் எம்5 வீல்கள் உள்ளன.

    டொயோட்டா சுப்ரா மாடலில் 2JZ-GTE டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கான ஏலம் ஜூன் 17 துவங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    டிரையம்ப் நிறுவனத்தின் புதிய போன்வில் பாபர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    2021 டிரையம்ப் போன்வில் பாபர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது போன்வில் மாடல் விலை ரூ. 11.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய பாபர் மோட்டார்சைக்கிள் பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

     2021 டிரையம்ப் போன்வில் பாபர்

    2021 பாபர் மோட்டார்சைக்கிள் உயர் ரக தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இதில் 77 ஜென்யூன் டிரையம்ப் அக்சஸரீக்கள் உள்ளன. அக்சஸரீ பட்டியலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்டிங் மற்றும் பூட்பெக் பொசிஷன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன.

    புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிளில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1200சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 78 பிஎஸ் பவர், 106 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதில் உள்ள 12 லிட்டர் பியூவல் டேன்க் 33 சதவீதம் கூடுதல் ரேன்ஜ் வழங்குகிறது.
    மெர்ச்டிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 GLA மாடல் இந்தியாவில் நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் GLA மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 42.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த பிரீமியம் எஸ்யுவி மாடல் இந்தியாவில் - GLA 200, GLA 220d, GLA 220d 4மேடிக் மற்றும் AMG லைன் GLA 35 என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    2021 GLA மாடல் முற்றிலும் புதிய வெளிப்புற டிசைன் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலை விட நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது. இதன் உயரமும் சற்றே அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய GLA மாடல் ஹை-பெர்பார்மன்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புது அடாப்டிவ் எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளன.

     2021 மெர்சிடிஸ பென்ஸ் GLA

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLA 200 மாடலில் 1332சிசி டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 161 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    GLA 220d மற்றும் 220d 4மேடிக் மாடல்களில் 1920சிசி டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் புதிய பென்ஸ் GLA டாப் எண்ட் மாடல் விலை ரூ. 57.3 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
    ஹோண்டா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்க இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யும் பிரீமியம் இருசக்கர வாகனங்களான போர்சா 750, எக்ஸ்-ஏடிவி போன்ற மாடல்களில் ரோட்சின்க் எனும் பெயரில் கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்படுகிறது. தற்போது ஹோண்டா விண்ணப்பித்து இருக்கும் டிரேட்மார்க் விவரங்களின் படி இதே அம்சம் இந்திய மாடல்களிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    ஹோண்டா ஆக்டிவா 125, கிரேசியா மற்றும் ஹார்னெட் 2.0 போன்ற மாடல்களில் இந்த வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்திலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் ரோட்சின்க் பெயரில் டிரேட்மார்க் பெற விண்ணப்பித்து இருக்கிறது.

     ஹோண்டா மோட்டார்சைக்கிள்

    இந்த டிரேட்மார்க் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில், இந்த தொழில்நுட்பத்தை தனது வாகனங்களில் பொருத்தும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிது. சமீப ஆண்டுகளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி சாதாரண ஒன்றாகிவிட்ட நிலையில், ஹோண்டா இதனை வழங்க முடிவு செய்திருக்கலாம்.

    இந்தியாவில் டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் சுசுகி அக்சஸ் 125 போன்ற மாடல்களில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா இதனை வழங்கும் பட்சத்தில் சந்தையில் போட்டியை கடுமையாக்கலாம்.
    தமிழகத்தில் இயங்கி வந்த ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்த உற்பத்தி ஆலையை மூடுவதாக அறிவித்து இருக்கின்றன. 

    முன்னதாக கொரோனா தொற்று மற்றும் கடும் ஊரடங்கு காரணமாக பணி செய்ய இயலாது என ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட்-நிசான் உற்பத்தி ஆலை சென்னை அருகில் அமைந்துள்ளது.

     நிசான்  கார்

    இந்த ஆலை பணிகள் மே 30 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய துவங்கி இருப்பதால், அடுத்த வாரத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது மூடப்பட்டு இருக்கும் ஆலையில் இந்நிறுவனங்களின் பிளாக்ஷிப் மாடல்களான நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் எஸ்யுவி உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
    டெஸ்லா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மாடல் அந்த பெருமையை நிச்சயம் பெரும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்தார்.

    டெஸ்லா நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை ரோட்ஸ்டர் மாடலை மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2022 துவக்கத்திலோ இந்த மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், புதிய ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 1.1 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. ரோட்ஸ்டர் மாடலில் ஸ்பேக்ஸ் எக்ஸ் பேக்கேஜ் பொருத்தப்பட்டால் இது சாத்தியமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ரோட்ஸ்டர் மாடலில் குளிர்ந்த ஏர் திரஸ்டர்கள், காரின் லைசன்ஸ் பிளேட் பின்புறம் கம்ப்ரெஸ் செய்யப்பட்ட ஏர் டேன்க் மற்றும் திரஸ்டர்கள் இருக்கும். இவை காரை மிக அதிக வேகத்தில் இயக்கும் திறனை வழங்கும். ஸ்பேஸ் எக்ஸ் பேக்கேஜ் இன்றி ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 1.9 நொடிகளில் எட்டிவிடும் என டெஸ்லா குறிப்பிட்டுள்ளது.

    ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க், `ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் திரஸ்டர் பேக்கஜ் பாதுகாப்பானது, ஆனால் மிகவும் உறுதியானது,' என தெரிவித்தார்.
    ×