search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்க சாவடி"

    • மாதாந்திர கட்டணம் ரூ.425 உயர்த்தப்பட்டது
    • தமிழகத்தில் 29 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் சுங்கச்சா வடிகளில் கட்ட உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 29 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தேரேக்கால்புதூர் பகுதியில் சுங்க சாவடி உள்ளது. நெல்லை, மதுரை போன்ற பெருநகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக நாகர்கோவில் நகருக்கு வருகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.கட்டண உயர்வு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்துள் ளது. இதையடுத்து கார், வேன், பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டணம் வசூல் செய் யப்பட்டது.

    கார், வேன், ஜீப், இலகு ரக வாகனங்களுக்கு ஏற்க னவே ஒருமுறை பயணிக்கு ரூ.40 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.திரும்ப பயணிக்க ரூ.60 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.தற்பொழுது இந்த கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இந்த வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் ஏற்க னவே ரூ.1310 வசூல் செய்யப் பட்டுள்ள நிலை யில் தற்போது ரூ.1375 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகன வகைகள், இலகு பொருள் வாகனங்கள் மினிபஸ் ஆகியவற்றிற்கு ஒருமுறை பயணிக்குரூ. 65 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந் தது. தற்போது அந்த கட்டணம் மாற்றம் செய் யப்படவில்லை. திரும்ப பயணிக்க ரூ.95 வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டணம் தற்பொழுது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர கட்டணம் ரூ.2115-ல் இருந்து ரூ.2225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ், லாரிகளுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.135-லிருந்து ரூ.140 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. திரும்ப பயணிக்க ரூ. 200-ல் இருந்து ரூ.210 ஆகவும் மாதாந்திர பயண சீட்டு ரூ.4435-லிருந்து ரூ.4665 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வாகனங்களுக்கான கட்டணம் ஒருமுறை பயணிக்க ரூ.145-ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. திரும்ப பயணிக்க ரூ.220 லிருந்துரூ. 230 ஆகவும் மாதாந்திர பயண கட்டணம் ரூ.4835-ல் இருந்து ரூ.5080 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பல அச்சுகள் கொண்ட கனரக கட்டுமான எந்தி ரங்கள் மண் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணம் ரூ.210-லிருந்து ரூ.220 ஆகவும் திரும்ப பயணிக்க ரூ.315-லிருந்து ரூ.330 ஆகவும் மாதாந்திர கட்டணம் ரூ.6950-ல் இருந்து ரூ.7305 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.அதிக அளவு கொண்ட வாகனங்கள் ஒருமுறை பயணிக்கரூ. 255-லிருந்து ரூ.265 ஆகவும் திரும்ப பயணிக்க ரூ.380-லிருந்து ரூ.400 ஆகவும் மாதாந்திர பயண கட்டணம் ரூ.8465- லிருந்து ரூ. 8,890 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.இதையடுத்து வாகனங்களில் புதிய கட்டணத்தில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது. கார், வேன், ஜீப், இலகு ரக வாகனங்களுக்கு கட்டண உயர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இலகு ரக வணிக வாகன வகைகள், இலகு பொருள் வாகனங்கள் மினி பஸ்களுக்கான ஒரு முறை கட்டணம் மாற்றம் செய்யப்படவில்லை. மற்ற அனைத்து கட்டணங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.425 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    • கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாகன ஒட்டிகள் வாக்குவாதம்-பரபரப்பு ஏற்பட்டது.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி திருமங்கலம் நகராட்சி எல்லை பகுதியில் செயல்பட்டு வருகிறது. எனவே உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இருந்த போதிலும், சில நேரம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டதால் பொதுமக்களுக்கும், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் திருமங்கலத்தில் இருந்து வந்த தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தி கட்டணம் செலுத்த வலியுறுத்தி உள்ளனர். இதனால் உள்ளுர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் திருமங்கலத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    ×