என் மலர்
ஆட்டோமொபைல்
- டேஷ்போர்டு, இரட்டைத் திரை அமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை அப்படியே இருக்கும்.
- பவர்டிரெய்னை பற்றி சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், டாடா நெக்சான், மஹிந்திரா XUV400, எம்ஜி ZS வரவிருக்கும் மாருதி eVX மற்றும் டாடா கர்வ் போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தற்போது உள்நாட்டு சந்தையில் அதன் வெகுசன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் வாகனத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ...
1. வெளிப்புற தோற்றம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்ற ICE க்ரெட்டாவை போன்றே புகிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலும் காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் எலெக்ட்ரிக் மாடல் என்ற வகையில் குறிப்பிட்ட மாற்றங்கள் இருக்கும். அதாவது, பிளான்க்டு-ஆஃப் முன்பக்க கிரில், ஏரோ திறனுள்ள சக்கரங்கள் மற்றும் பாடி பேனல்களில் எலெக்ட்ரிக் பேட்ஜிங் போன்றவை இருக்கும்.
2. உட்புற தோற்றம்,
வெளிப்புற தோற்றம் போல ICE க்ரெட்டாவை போன்றே உட்புற தோற்றும் இருக்கும். டேஷ்போர்டு, இரட்டைத் திரை அமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை அப்படியே இருக்கும். இருப்பினும், புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் செலக்டர் ஆகியவை பிராண்டின் ஃபிளாக்ஷிப் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்று ஸ்டீயரிங் வீல்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
3. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெய்ன்
பவர்டிரெய்னை பற்றி சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த மாடலில் முன் சக்கரங்களில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 45kWh பேட்டரி பேக்கை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நிறுத்தப்பட்ட கோனா EV-யிலிருந்து சரியான மோட்டார் விவரக்குறிப்பை ஹூண்டாய் பயன்படுத்தும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியானால், 138 பிஎச்பி மற்றும் 255 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
4. ரேஞ்ச் மற்றும் சார்ஜர்
இந்த எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும். அதிகரித்த செயல்திறனுடன், இந்த எலெக்ட்ரிக் கார் 500 கிலோமீட்டர் வரை செல்லும். க்ரெட்டா EV ஆனது 50 kWh வரை DC ஃபாஸ்ட் சார்ஜ் வசதியுடன் கிடைக்கும். இது குறைவான சார்ஜிங் நேரத்தை உறுதி செய்யும். 100 kWh அல்லது அதற்கும் அதிகமான DC ஃபாஸ்ட் சார்ஜிங் திறனை நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
5. வெளியீடு மற்றும் விலை விபரம்
தற்போதைய தகவல்களின் படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் க்ரெட்டா EV இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எம்ஜி ZS EV, மஹிந்திரா XUV 400 EV, டாடா நெக்சான் EV மற்றும் வரவிருக்கும் மாருதி சுசுகி eVX மற்றும் Tata கர்வ் EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
எலெக்ட்ரிக் கார்களின் விலை பொதுவாக அவற்றின் ICE மாடல்களை விட அதிகம் என்பதால், க்ரெட்டா EV ஆரம்ப விலை ரூ. 15 முதல் 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம்.
- ஆடி க்யூ 6 இ ட்ரான் இடது பக்கம் அமர்ந்து டிரைவ் டிரைவ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இண்டீரியரில் Q6 e-tron 11.9-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் புதிய க்யூ 6 இ ட்ரானை அறிமுகப்படுத்துவதற்கு ஆடி திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் அந்த காருக்கான சோதனையை இந்தியாவில் செய்ய துவங்கியது.
முன்னதாக வெளியான க்யூ 6 இ ட்ரான் தொடர்பான புகைப்படங்களை சோதனைக் காரின் ஒரு யூனிட்டை முற்றிலும் மறைக்காமல் வெளிப்படுத்தின.

ஆடி க்யூ 6 இ ட்ரான் இடது பக்கம் அமர்ந்து டிரைவ் டிரைவ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் விற்கப்படும் மாடலுடன் ஒப்பிடுகையில், முன் மற்றும் பின்பக்க பம்பர்களில் சில்வர் இன்சர்ட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் உட்பட சிறிய வேறுபாடுகளைப் பெறுகிறது.
புதிய Q6 e-tron இன் சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு அம்சங்களில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லேம்ப்கள், பிளாங்க்-ஆஃப் கிரில், OLED டெயில் லைட்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் மற்றும் ஒரு LED லைட் பார் ஆகியவை அடங்கும்.
இண்டீரியரில் Q6 e-tron 11.9-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனை ஆடி நிறுவனம் விர்ச்சுவல் அதாவது மெய்நிகர் காக்பிட் என்று அழைக்கிறது, 14.5-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முன் பயணிகளுக்கான 10.9-இன்ச் டிஸ்ப்ளே, டச்-அடிப்படையிலான புதிய ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள், ஆக்மென்டட் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் மூன்று-டோன் இன்டீரியர் தீம் கொண்டுள்ளது.
ஹூட்டின் கீழ், ஆடி க்யூ6 இ-ட்ரான் இரட்டை மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்ட 100கிலோவாட் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 270கிலோவாட் சார்ஜர் உதவியுடன் 21 நிமிடங்களில் 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய இந்த பேட்டரி, ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 625கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
- புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.
- பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது.
இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் 17-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கொரில்லா மாடல் முதற்கட்டமாக ஸ்பெயினில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் லால் மற்றும் சிஇஓ கோவிந்தராஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.
பல பாகங்கள் ஹிமாலயனுடன் பகிரப்பட்டாலும், ராயல் என்ஃபீல்டு முதன்மையாக கெரில்லா 450 மாடலை ஆன்-ரோடு பயன்பாட்டிற்காக மாற்றியமைத்ததாகத் தெரிகிறது.
மேலும் இது ADV வெர்ஷனில் இருப்பதை போன்றில்லாமல் என்டரி லெவல் ஹார்ட்வேர் பெற வாய்ப்புள்ளது. புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.
புதிய பைக்கில் சிங்கிள்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வட்ட வடிவத்தில் எல்இடி ஹெட்லைட், கணிசமான எரிபொருள் டேங்க் மற்றும் ஒற்றை இருக்கை போன்ற அம்சங்களை கொரில்லா கொண்டுள்ளது.
சிங்கிள்-பாட் கன்சோல், ஹிமாலயனில் கிடைக்கும் TFT டிஸ்ப்ளே போன்றே இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது. ஹிமாலயன் மாடலில் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் டயர்கள் உள்ளது. ஆனால் புதிய பைக்கில் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இதில் USD ஃபோர்க்கிற்குப் பதிலாக டெலஸ்கோபிக் ஃபோர்க்கைக் கொண்டுள்ளது. கெரில்லா 450 இன் எஞ்சின் டியூனிங் உறுதி செய்யப்பட உள்ளது. ஹிமாலயன் மாடலில் உள்ள 452சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 40எச்பி மற்றும் 40என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 30-ந்தேதி வரைதான் தள்ளுபடி சலுகை.
- ஸ்மார்ட், கிரியேட்டிவ், பியர்லெஸ் கார்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெக்சான் வகை காரை அறிமுகம் செய்தது. சொகுசு கார், மின்சார வெர்சன் என அப்டேட் ஆன நிலையில் ஏழு லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஜூன் 30-ந்தேதி வரை பல மாடல்களுக்கு தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், ஸ்மார்ட் பிளஸ் எஸ் வேரியன்ட்ஸ்களுக்கு 16 ஆயிரம், 20 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் என தள்ளுபடி சலுகை வழங்கியுள்ளது.
Pure and Pure S பெட்ரோல் வேரியன்ட்ஸ்களுக்கு 30 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என அறிவித்துள்ளது. டீசல் வேரியன்ட்ஸ்களுக்கு 20 ஆயிரும் ரூபாய் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் என தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.
கிரியேட்டிவ் (Creative), கிரியேட்டிவ் பிளஸ், கிரியேட்டிவ் பிளஸ் எஸ் வேரியன்ட்ஸ்களுக்கு அதிகபட்சமாக 60 ஆயிரம், 80 ஆயிரம், ஒரு லட்சம் என பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு சலுகை அறிவித்துள்ளது.
பியர்லெஸ் (Fearless) பியர்லெஸ் எஸ், பியர்லெஸ் பிளஸ், பியர்லெஸ் பிளஸ் எஸ் வேரியன்ட்ஸ்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி சலுகை அளித்துள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கும் உண்டு.
- முதன் முதலில் 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் 2013-ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் விற்பனையானது.
- தற்போது 4-வது தலைமுறையில் காலடி எடுத்து வைத்துள்ள ஸ்விஃப்ட் அதன் தொடக்கத்தில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்று ஸ்விஃப்ட். இந்த மாடல் மிகவும் பிரபலமானது மற்றும் பெயர் பெற்றதும் கூட.
ஸ்விஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டத்தில் இருந்து 30 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதன் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
முதன் முதலில் 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் 2013-ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் விற்பனையானது. பின்னர் இந்த எண்ணிக்கை 2018-ல் இரட்டிப்பாக்கியது. தற்போது 4-வது தலைமுறையில் காலடி எடுத்து வைத்துள்ள ஸ்விஃப்ட் அதன் தொடக்கத்தில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் மாடலின் ஆரம்ப விலையாக ரூ.6.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஸ்விஃப்ட் சிறந்த எரிபொருள் திறன் மற்றும் அதிக உயரிய வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் முற்றிலும் புதிய எஞ்சினைப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு புதிய தலைமுறை வெர்ஷனிலும், ஸ்விஃப்ட் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கி அதன் விற்பனையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. 'Swift DNA' தற்கால பாணி மற்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
"இந்த மகத்தான சாதனைக்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்விஃப்ட் உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று மாருதி சுசுகி இந்தியாவின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார்.
- கல்கி 2898 கி.பி படத்தின் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் வரும் இந்த புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.
இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனம் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் 11 அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. இந்த வாகனத்தின் எடை 6 டன் அதாவது 6000 கிலோ ஆகும்.
2 மஹேந்திரா எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 125 bhp மற்றும் 9,800 Nm டார்க் சக்தியுடன் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்புறம் 47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் பயணிக்கமுடியும். இந்த வாகனத்தில் 2 ஹப்லெஸ் டயர் முன்புறத்தில் 1 ஹப்லெஸ் டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டயரின் எடையும் 1 டன் ஆகும்.
இந்த வாகனத்தின் மையத்தில் ஓட்டுநருக்கு ஒரு இருக்கை உள்ளது. வாகனத்தின் பின்புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு ஒரு சிறிய சிறை ஒன்று உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,19,555 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- குருகிராம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனம் இதுவாகும்.
ஜிடி டெக்ஸா (GT Texa) என்கிற பெயரில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,19,555 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குருகிராம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனம் இதுவாகும்.
இந்த எலெக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.
இந்த பைக்கின் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்கும் 3.5kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 120 - 130 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் எனவும் ஜிடி ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை வெறும் 4- 5 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்து விடலாம்.
இந்த எலெக்ட்ரிக் பைக்கின் எடை வெறும் 120 கிலோ மட்டுமே ஆகும். ஆனால் இந்த பைக்கினால் 180 கிலோ எடை வரை சுமக்க முடியும்.
- டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி-இன் AMT வகைகளை அறிமுகப்படுத்தியது.
- இந்தியாவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினுடன் கூடிய முதல் CNG வாகனம் இதுவாகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் அதன் பிரபலமான நெக்சான் காம்பாக்ட் எஸ்.யு.வி.யில் சிஎன்ஜி பவர்டிரெய்னை சேர்க்கும் என்று உறுதி செய்துள்ளது.
வரவிருக்கும் நெக்சான் சிஎன்ஜி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி விழாவில் உற்பத்திக்கு நிகரான நிலையில் (நெக்சான்-ஐ சிஎன்ஜி கான்செப்டாக) காட்சிப்படுத்தப்பட்டது.
நெக்சான் இந்தியாவின் முதல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட சிஎன்ஜி வாகனமாக வெளியாகிறது. நெக்சான் சிஎன்ஜி வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் அதன் ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ளதை போன்றே கொண்டிருக்கும்.
இருப்பினும், சிஎன்ஜி தொடர்பான மெக்கானிக்கல் மேம்பாடுகள் மற்றும் மற்ற மாடல்களில் இருந்து வித்தியாசப்படுவதை குறிக்க இரண்டு இடங்களில் ஐ-சிஎன்ஜி பேட்ஜ்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சிஎன்ஜி-யில் இயங்கும் நெக்சான் பெட்ரோல் மாடல்களில் இருந்து அதே 1.2-லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3-சிலிண்டர் எஞ்சினுடன் வழங்கப்படும். அதாவது இந்தியாவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினுடன் கூடிய முதல் CNG வாகனம் இதுவாகும்.

டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி-இன் AMT வகைகளை அறிமுகப்படுத்தியது. எனவே வரவிருக்கும் நெக்சான் சிஎன்ஜி மாடலிலும் AMT-கியர்பாக்சை கொண்டிருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.
அறிமுகப்படுத்தப்பட்டதும், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட பல எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் கிடைக்கும் இந்தியாவின் ஒரே வாகனமாக நெக்சான் இருக்கும். நெக்சான் சிஎன்ஜி மாடல் இந்தியாவில் பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடலுக்கு போட்டியாக அமையும்.
நெக்சான் சிஎன்ஜியைத் தவிர, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் மற்றும் கர்வ் மாடலை எலக்ட்ரிக் மற்றும் ஐசி எஞ்சின் என இருவித பவர்டிரெயின்களில் அறிமுகப்படுத்தும்.
- இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக சலுகையாக 20,000 ரூபாய் வர பிகாஸ் நிறுவனம் தள்ளுபடி வழங்குகிறது.
- இந்த ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் செய்து ஓட்டினால் 120 கிலோ மீட்டர் வரை ஓட்ட முடியும்.
எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனமான பிகாஸ் நிறுவனம் தனது ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆர்யூவி 350ஐ, ஆர்யூவி 350 ஈஎக்ஸ் மற்றும் ஆர்யூவி 350 மேக்ஸ் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது.
விலை விபரங்கள்:
- பிகாஸ் ஆர்யூவி 350 ஐ - ரூ.1.10 லட்சம்
- பிகாஸ் ஆர்யூவி 350 ஈஎக்ஸ் - ரூ.1.25 லட்சம்
- பிகாஸ் ஆர்யூவி 350 மேக்ஸ் - ரூ.1.35 லட்சம்
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக சலுகையாக 20,000 ரூபாய் வர பிகாஸ் நிறுவனம் தள்ளுபடி வழங்குகிறது.
இந்த பிகாஸ் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 4.69 பிஎச்பி பவரையும் 165 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 3 கிலோ வாட் ஹவர் லித்தியம் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் செய்து ஓட்டினால் 120 கிலோ மீட்டர் வரை ஓட்ட முடியும்.
இந்த ஸ்கூட்டர் 500W சார்ஜருடன் வருகிறது. இது 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டரில் புளூடூத் இணைப்புடன் கூடிய 5-இன்ச் டிஜிட்டல் TFT டிஸ்ப்ளே உள்ளது. .
பிகாஸ் ஆர்யூவி 350 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பிகாஸ் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
தற்போது, இந்தியா முழுவதும் பிகாஸ் டீலர்ஷிப் கடைகள் சுமார் 100 இடங்களில் உள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் டீலர்ஷிப் கடைகளின் எண்ணிக்கையை 200 ஆக விரிவுபடுத்த பிகாஸ் திட்டமிட்டுள்ளது.
- ஜாவா 350 மோட்டார்சைக்கிள்கள் ஒபிசிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரெஸ்ட் ஆகிய 3 புதிய நிறங்களில் கிடைக்கும்.
- அனைத்து நிறங்களிலும் புதிய அலாய் வீல் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது ஜாவா 350 மோட்டார்சைக்கிளை இந்தாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.
அப்போது மெரூன், பிளாக், மிஸ்டேக், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த பைக் விற்பனையானது.
இந்நிலையில், இந்த ஜாவா 350 மோட்டார்சைக்கிள்கள் ஒபிசிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரெஸ்ட் ஆகிய 3 புதிய நிறங்களில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய பைக்குகளின் அனைத்து நிறங்களிலும் புதிய அலாய் வீல் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அப்சிடியன் பிளாக், கிரே, டீப் ஃபாரஸ்ட் நிறங்களில் ஸ்போக் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 1,98,950
அப்சிடியன் பிளாக், கிரே, டீப் ஃபாரஸ்ட் நிறங்களில் அலாய் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,08,950
குரோம் - மெரூன், கருப்பு, வெள்ளை, மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் ஸ்போக் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,14,950
குரோம் - மெரூன், கருப்பு, வெள்ளை, மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் அலாய் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,23,950
இந்த பைக்கில் 334 சிசி லீக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 22.2 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன.
ராயல் என்பீல்ட் கிளாசிக் 350, ஹோண்டா சிபி 350 மற்றும் ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளுக்கு ஜாவா 350 பைக் போட்டியாக வரவுள்ளது.
- மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
- அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) இருக்கின்றது. மேலும், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த கார் மாடல் இருக்கிறது.
மாருதி சுசுகியின் நெக்சா விற்பனை மையங்கள் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் கிராண்ட் விட்டாரா, பிரான்க்ஸ் காம்பாக்ட் எஸ்.யு.வி. மற்றும் XL6 எம்.பி.வி. உள்ளிட்ட கார்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகின்றன.
பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் மாடல்கள் அதே விலையில் தொடர்கின்றன. அதே நேரத்தில் இன்விக்டோ எம்.பி.வி.-க்கு எந்த தள்ளுபடியும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே, மாருதி கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு ரூ.74,000 தள்ளுபடியும், 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ. 66 ஆயிரம் தள்ளுபடி சேர்த்து காரின் விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை குறைந்துள்ளது.
மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சிக்மா மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் முறையே ரூ.34,000 மற்றும் ரூ.14,000 தள்ளுபடி பெறுகின்றன.
இந்தியாவில் கிராண்ட் விட்டாரா மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

இந்த காரின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 103 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதே எஞ்சின் CNG-மேனுவல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 116 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
மாருதி XL6 மீதான தள்ளுபடிகள் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மாடல்களுக்கு ரூ. 40,000 ஆகவும், சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ. 25,000 ஆகவும் உள்ளது. இதன் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.61 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காரில் 103 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த CNG மோடில் இயங்கும் போது 88 ஹெச்.பி. திறன் வழங்குகிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- பழைய கோல்டு ஸ்டார் 650 என்ற ரெட்ரோ பைக் மாடலை இந்த பைக் ஒத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
- ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது.
பிஎஸ்ஏ என்ற நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 என்ற பைக்கை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு தனது கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிப்படுத்தியது. தற்போது இந்த மாடல் வரும் சுதந்திர தினத்தன்று அறிமுகமாகவுள்ளது.
1950 - 1960 வரை விற்பனையான கோல்டு ஸ்டார் 650 என்ற பழைய ரெட்ரோ பைக் மாடலை இந்த பைக் ஒத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பி.எஸ்.ஏ. கோல்டு ஸ்டார் 650 பைக்கின் ஆரம்ப விலை 4.5 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் பிளாட் சீட்டு மற்றும் வயர்டு ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பைக்கில் முன் பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன இந்த புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் 12 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டதாகவும், 213 கிலோ எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
கோல்டு ஸ்டார் மாடலில் 652சிசி, சிங்கில் சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. திறன், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது.
தற்போது பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை கிளாசிக் லெஜண்ட்ஸ் எனும் நிறுவனம் வைத்திருக்கிறது. பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆனந்த் மஹிந்திரா பின்புலமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






