என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • பழைய கோல்டு ஸ்டார் 650 என்ற ரெட்ரோ பைக் மாடலை இந்த பைக் ஒத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
    • ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது.

    பிஎஸ்ஏ என்ற நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 என்ற பைக்கை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு தனது கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிப்படுத்தியது. தற்போது இந்த மாடல் வரும் சுதந்திர தினத்தன்று அறிமுகமாகவுள்ளது.

    1950 - 1960 வரை விற்பனையான கோல்டு ஸ்டார் 650 என்ற பழைய ரெட்ரோ பைக் மாடலை இந்த பைக் ஒத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இந்த பி.எஸ்.ஏ. கோல்டு ஸ்டார் 650 பைக்கின் ஆரம்ப விலை 4.5 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் பிளாட் சீட்டு மற்றும் வயர்டு ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த பைக்கில் முன் பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன இந்த புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் 12 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டதாகவும், 213 கிலோ எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

    கோல்டு ஸ்டார் மாடலில் 652சிசி, சிங்கில் சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. திறன், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது.

    தற்போது பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை கிளாசிக் லெஜண்ட்ஸ் எனும் நிறுவனம் வைத்திருக்கிறது. பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆனந்த் மஹிந்திரா பின்புலமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 மே மாதத்தில் இந்நிறுவனம் 5.08 லட்சம் 2 சக்கர வானங்களை விற்பனை செய்திருந்தது.
    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் ஸ்பிலெண்டர், பேஷன் ப்ரோ, கிளாமர் ஆகிய பைக்குகள் அதிகளவில் விற்பனையாகின்றன.

    மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வாகனங்களின் விலைகளை உயர்த்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் வாகனத்தை பொறுத்து 1500 வரை விலை உயர் வாய்ப்புள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்பிலெண்டர், பேஷன் ப்ரோ, கிளாமர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களையும் இந்த விலையேற்றம் பாதிக்கும்.

    2023 மே மாதத்தில் இந்நிறுவனம் 5.08 லட்சம் 2 சக்கர வானங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் 4.79 லட்சம் 2 சக்கர வானங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 7% குறைவாகும்.

    • ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.
    • ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே தனது மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் பிஎம்டபிள்யூ CE 04 மாடல் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி திறன் 8.9 கிலோ மெகாவாட் ஆகவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இதன் மோட்டார் 31kW திறன் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.6 வினாடிகளில் 0-50 கி.மீட்டரும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லும். இந்த ஸ்கூட்டரை ஸ்டான்டர்டு சார்ஜர் மூலம் 4 மணி நேரம் 20 நிமிடங்களிலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.


    பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன் மற்றும் பின்புறம் 15 அங்குல சக்கரங்களை கொண்டிருக்க்கிறது. இந்த ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது. இதன் எடை 179 கிலோ ஆகும். இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ், புளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட TFT டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    ஒட்டுமொத்தமாக பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பானது எதிர்காலத்திற்கு ஏற்றதாகவும், அதிக வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக, C 400 GT விலையானது ரூ.11.20 லட்சம் எக்ஸ் ஷோரூமில் இந்தியாவில் விற்பனையானது. இதன்அடிப்படையில் பார்த்தால் பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை.
    • இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.

    சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என பொய்யாக விளம்பரப்படுத்தியதால் டி.ஆர். ஆட்டோமொபைல்ஸ் கார் நிறுவனத்திற்கு இத்தாலி அரசு 53 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் கம்பெனி சீன கார் தயாரிப்பாளர்களான செரி, பி.ஏ.ஐ.சி. மற்றும் ஜே.ஏ.சி. தயாரித்த உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து கார்களை தயாரிக்கிறது.

    ஆனால், டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தனது நிறுவனத்தின் கார்கள் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறது. அவற்றின் அசெம்ப்ளி மற்றும் இறுதிப் பணிகள் மட்டுமே இத்தாலியில் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில், "எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆதலால் இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்" என்று டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தெரிவித்துள்ளது.

    • இந்திய சந்தையில் மாருதி சுஸிகியின் பிரான்க்ஸ் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது.
    • பிரான்க்ஸ் விற்பனைக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் மாருதி சுஸிகியின் பிரான்க்ஸ் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. பலேனோ அடிப்படையிலான சொகுசு (SUV) காரான பிரான்க்ஸ் இந்தியாவில் கடந்த ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகப்படுத்தப்ப்டது.

    தற்போது லிமிடெட் வேரியன்ட் உடன் பிரான்ஸ்க் வெலோசிட்டி எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இருந்த போதிலும் 14 வேரியன்ட்ஸ் வகையில் கிடைக்கும் வகையில் வெலோசிட்டி எடிசன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    7.29 லட்சம் ரூபாயில் இருந்து இதன் விலை ஆரம்பமாகிறது. தொடக்கத்தில் டுர்போ டிரிம்ஸ்யோடு மட்டும்தான் கிடைத்தது. தற்போது 1.2லி பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பவர்டிரைன் உடன் கிடைக்கிறது.

    மாருது சுஸிகி பிரான்க்ஸ் வெலோசிட்டி எடிசன் சிக்மா, பிரான்க்ஸ் வெலோசிட்டி எடிசன் டெல்டா, டெல்டா+, டெல்டா+ (ஓ) பெயரில் விற்பனையாகிறது.

    360 டிகிரி வீயூ கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே உடன் 9-இன்ஞ் ஸ்மார்ட் பிரோ+ இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

    பிரான்க்ஸ் விற்பனைக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    • பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது.
    • 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று பிஎம்டபிள்யூ (BMW). பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் BMW நிறுவனத்துக்கு முக்கியமான மார்க்கெட்டாக இந்தியா திகழ்கிறது. இதனாலேயே இங்கு அவ்வப்போது புதுப்புது கார்களை அறிமுகப்படுத்துகிறது BMW நிறுவனம்.

    அந்த வகையில், தற்போது BMW நிறுவனத்தின் 8-வது தலைமுறை 5 சீரிஸ் லாங்க் வீல்பேஸ் (BMW 5 Series Long Wheelbase) மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி தான் இந்த மாடலை அறிமுகம் படுத்தப்படுகிறது. இதற்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள BMW டீலர்கள் அல்லது ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.


    பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. 5 சீரிஸ் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் முன்பு இருந்ததை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • காரின் பின்புறத்தில் முழு அகல எல்இடி விளக்குகளின் மத்தியில் ‘புகாட்டி’ என்ற எழுத்து இடம்பெறுகிறது.
    • டூர்பில்லன் 100 கி.மீ. வேகத்தை 2 வினாடிகளிலும், அதே நேரத்தில் 299 வேகத்தை 10 வினாடிகளிலும் கடந்துவிடும்.

    புகாட்டி நிறுவனத்தின் "டூர்பில்லன்" புதிய ஹைப்பர் கார் உலக சந்தையில் வெளியாகி உள்ளது. புதிய புகாட்டி டூர்பில்லன் மாடல் கார் சிரோனுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் புதிய தோற்றத்தைக் கொண்டுள்ளது.

    இத்துடன் முற்றிலும் புதிய பவர்டிரெய்ன் மற்றும் மெக்கானிக்கல்களையும் கொண்டுள்ளது. இதில் V16 என்ஜின்களைக் கொண்டிருப்பதால் இது புகாட்டியின் முதல் ஹைப்பர்கார் ஆகும். இது சிரோன் மற்றும் வெய்ரோன் ஆகிய இரண்டு கார்களில் வழங்கப்பட்ட W16 எஞ்சினுக்கு மாற்றாக உள்ளது.

    புகாட்டி தனது புதிய ஹைப்பர் காரை வெறும் 250 யூனிட்கள் மட்டும் உற்பத்தி செய்கிறது. இந்த மாடலின் ஆரம்ப விலை 3.2 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.33 கோடி ஆகும். டூர்பில்லன் ஹைப்பர் காரின் முன்புறத்தில் ஒரு பெரிய ஹார்ஸ் ஷூ வடிவ கிரில் உள்ளது. இருபுறமும் குவாட் LED ஹெட்லேம்ப்கள் உள்ளன.

    காரின் பின்புறத்தில் முழு அகல எல்இடி விளக்குகளின் மத்தியில் 'புகாட்டி' என்ற எழுத்து இடம்பெறுகிறது. டூர்பில்லன் முற்றிலும் மாற்றிஅமைக்கப்பட்ட கேபின் மற்றும் டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டுள்ளது.


    இந்த ஹைப்பர் காரில் வி16 ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. IC என்ஜின் மட்டும் 1000 ஹெச்.பி. பவர் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது மூன்று மின்சார மோட்டார்களுடன் இணைந்து, ஹைப்பர் காருக்கு மொத்தமாக 1,800 ஹெச்.பி. பவர் வழங்குகிறது. புதிய பவர்டிரெய்ன் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    டூர்பில்லன் 100 கி.மீ. வேகத்தை 2 வினாடிகளிலும், அதே நேரத்தில் 299 வேகத்தை 10 வினாடிகளிலும் கடந்துவிடும். புகாட்டி டூர்பில்லன் மணிக்கு அதிகபட்சமாக 445 கிமீ/மணி வேகத்தில் செல்லும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

    • சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை யூ, ப்ளஸ் மற்றும் மேக்ஸ் ஆகும்.
    • விவரங்களுக்கு அருகிலுள்ள சிட்ரோயன் டீலரை தொடர்புகொள்ளலாம்.

    பிரான்ஸ் நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனம் சிட்ரோயன். தனது பிரபலமான SUV-வின் மிட் ரேஞ்ச் வேரியண்டுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் புதிய சி3 ஏர்கிராஸ் டோனி மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.11.82, எக்ஸ்-ஷோரூம் ஆகும். சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை யூ, ப்ளஸ் மற்றும் மேக்ஸ் ஆகும்.

    இவற்றில் மிட் ரேஞ்ச் வேரியண்ட் பிளஸ் வகை கார்கள் ரூ.2.62 லட்சம் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி காரின் குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.


    இதற்கு முன்பு சி3 ஏர்கிராஸ் பிளஸ் மாடலின் ஆரம்ப விலையாக ரூ.11.61 லட்சம் என ஷோரூமில் விற்பனையான நிலையில் இனி ரூ.8.99 லட்சமாக விற்பனையாகும்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை டீலருக்கு டீலர் மாறுபடும். இது தொடர்பான விவரங்களுக்கு அருகிலுள்ள சிட்ரோயன் டீலரை தொடர்புகொள்ளலாம்.

    • 4.7 கோடி ரூபாய் பங்குகளை பவிஸ் அகர்வாலால் விற்பனை செய்யப்படும்.
    • 1226.4 கோடி ரூபாய் துணை நிறுவனத்தின் மூலதன செலவினங்களுக்கு பயன்படுத்தும்.

    பவிஷ் அகர்வாலின் ஓலா எலெக்டரிக் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் 5500 கோடி ரூபாய் மூலதனம் பெறுவதற்கான ஐபிஓ-க்கு செபி ஒப்புதல் வழங்கியது. செபியின் ஒப்புதலை பெறும் இந்தியாவின் முதல் ஸ்டார்ட்அப் எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவாகும். இது 9.51 கோடி பங்குகளை கொண்டதாகும்.

    இதில் 4.7 கோடி ரூபாய் பங்குகளை பவிஸ் அகர்வாலால் விற்பனை செய்யப்படும். விளம்பர குரூப்பான இந்தூஸ் டிரஸ்ட் 41.78 லட்ச பங்குகளுக்கான உரிமையை வைத்துக்கொள்ளும்.

    1226.4 கோடி ரூபாய் துணை நிறுவனத்தின் மூலதன செலவினங்களுக்கும், 800 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தது.

    1600 கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான முதலீடு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரூ.350 கோடி இயற்கை வளர்ச்சி முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் விலை தொடர்பான மாடலின் விலையில் 12.5 சதவீதம் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குறைந்த எடை மற்றும் ஒலி ஆகியவற்றாலும் பெரும்பாலும் விரும்பப்பட்டது.
    • RX 100-ன் பஞ்ச் ஆக்ஸலேட்டரை இன்று மீண்டும் உருவாக்குவது சவாலாக இருக்கிறது.

    ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் யமாஹா. இந்நிறுவனம் தயாரித்த RX100 1980 முதல் 1990-க்களில் மிகவும் பிரபலம் ஆகும். இன்றும் இந்த மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிலையில் யமஹா RX100 மாடலை இன்றைய பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் மாற்றி வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்தது.

    இந்த நிலையில், இருசக்கர வாகன பிரியர்களிடம் பிரபலமாக இருக்கும் RX100 மாடலை புதுப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது என்று அந்நிறுவன இந்திய தலைவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


    யமஹாவை விரும்புபவர்கள் RX100 மாடலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என விரும்புகிறார்கள். RX மாடலை மாற்றாமல் புதுப்பிப்பது என்பது கடினமான பணி. RX100-ன் வடிவமைப்பை மிகவும் விரும்பினர். மேலும் அதன் குறைந்த எடை மற்றும் ஒலி ஆகியவற்றாலும் பெரும்பாலும் விரும்பப்பட்டது.

    இந்த இரண்டையும் ஸ்மார்ட் என்ஜினியரிங் மற்றும் டிசைன் மூலம் மாற்ற முடியும் என்றாலும் ஒலி பகுதியை 4-ஸ்டிரோக் என்ஜினுடன் பொருத்துவது கடினம். பழைய RX 100 மாடல் 2-ஸ்டிரோக் மோட்டார் மூலம் இயக்கப்பட்டது. ஆனால் தற்போதைய விதிமுறைகளால் இது சாத்தியப்படாது.

    RX 100-ன் பஞ்ச் ஆக்ஸலேட்டரை இன்று மீண்டும் உருவாக்குவது சவாலாக இருக்கிறது. இருப்பினும் தேவைகளை பூர்த்தி செய்து, RX 100 மாடலை மீண்டும் புதுப்பிக்க நிறுவனம் விரும்புகிறது என்றார்.

    • ஃபெராரி நிறுவனம் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
    • புதிய ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இதர மாடல்களை ஃபெராரி உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

    உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, ஃபெராரி அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் காரின் விலை மற்றும் விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை தோராயமாக ரூ.4.17 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் ஃபெராரியின் Purosangue கார் மாடலின் விலை அமெரிக்காவில் $3,98,350 (ரூ.3.32 கோடி) மற்றும் இந்தியாவில் ரூ.10.5 கோடியில் தொடங்குகிறது.


                                                                            கோப்புப்படம்


    ஃபெராரி அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் கார் இரண்டு இருக்கைகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு மின்சார மோட்டார் கொண்டிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் ஃபெராரி நிறுவனம் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு இத்தாலியில் புதிய தொழிற்சாலையை தொடங்கும் ஃபெராரி தனது வாகனங்களின் ஆண்டு உற்பத்தியை 20,000 யூனிட்டுகளாக உயர்த்த உள்ளது. இந்த ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இதர மாடல்களை ஃபெராரி உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

    • சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
    • இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிட்டராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் எம்.எஸ்.டோனியை கவுரவிக்கும் விதமாக தோனி எடிஷன் சி3 ஏர்கிராஸ் என்ற புதிய காரை சிட்ரோயன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

    இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ.11.82 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சாதாரண சி3 ஏர்கிராஸ் காரின் விலை ரூ.8.99 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சிறப்பு காரில் டோனி கிளவ்ஸ் பெட்டி ஒன்று இருக்கும் என்றும், 100 கார்களில் ஏதேனும் ஒரு காரில் டோனி ஆடோகிராப் போட்ட அவரின் கிளவ்ஸ் ஒன்றும் இருக்கும் என்றும், இது இந்த காரை வாங்கும் டோனி ரசிகரை ஆச்சரியப்படுத்தும் என்று கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×