என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஓலா எலெக்ட்ரிக் துவங்கியது. முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் இந்த ஸ்கூட்டரை வாங்க சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்துவித நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த தகவல் ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதிக நிறங்கள், எல்.இ.டி. லைட்டிங், அசத்தலான தோற்றம் என பல்வேறு அம்சங்கள் இருப்பதால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தும் பட்சத்தில் இந்த ஸ்கூட்டரை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும் என தெரிகிறது.
போர்டு நிறுவனத்தின் பிகோ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட போர்டு பிகோ மாடல் இந்தியாவில் அறிமுகமானது. புதிய பிகோ மாடல் துவக்க விலை ரூ. 7.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பிகோ மாடல்களுடன் இணைகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்டில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் யூனிட் உள்ளது.
இந்த ஆப்ஷன் பிகோ டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. டைட்டானியம் பிளஸ் மாடலின் விலை ரூ. 8.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போர்டு பிகோ புது வேரியண்டில் இகோஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜினுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுவதால், 95 பி.ஹெச்.பி. பவர், 119 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்டில் கூடுதலாக ஸ்போர்ட் மோட் வசதியும் வழங்கப்படுகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்ட் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை பிகோ ஆட்டோமேடிக் மாடலில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரெயின்-சென்சிங் வைப்பர், ரிமோட் கீலெஸ் என்ட்ரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனம் இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் இ டிரான் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன. புதிய இ டிரான் துவக்க விலை ரூ. 99.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்கள் விலை முறையே ரூ. 1.16 கோடி மற்றும் ரூ. 1.17 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
ஆடி விற்பனை மையங்கள் மற்றும் ஆடி இந்தியா வலைதளங்களில் புதிய எலெக்ட்ரிக் மாடல்களின் முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தோற்றத்தில் இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்கள் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன.

ஆடி இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களில் 95kW பேட்டரியும், இ டிரான் 50 மாடலில் 71 kW பேட்டரியுடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரிக் மாடல்கள் 408 பி.ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.
புதிய இ டிரான் சீரிஸ் மாடல்களில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், ஆரஞ்சு நிற பிரேக் கேலிப்பர்கள், 20-இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 359 முதல் 484 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இ டிரான் 50 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 264 முதல் 379 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.
டுகாட்டி நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் மல்டிஸ்டிராடா வி4 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.
டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 விலை ரூ. 18.99 லட்சம், வி4 எஸ் விலை ரூ. 23.10 லட்சம் மற்றும் வி4 எஸ் அவியேட்டர் கிரே விலை ரூ. 23.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாடல்கள் விலையும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய மல்டிஸ்டிராடா வி4 எஸ் ஸ்போர்ட் வேரியண்டாகவும் கிடைக்கிறது. எனினும், இந்த மாடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படவில்லை. இந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகிறது. மல்டிஸ்டிராடா வி4 டுகாட்டி ரெட் நிறத்திலும், வி4 எஸ் மாடல் டுகாட்டி ரெட் மற்றும் அவியேட்டர் கிரே நிறங்களிலும் கிடைக்கின்றன.
புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிள் 1158சிசி வி4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 167 பி.ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டுகாட்டி குவிக் ஷிப்ட் மற்றும் ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச் யூனிட் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் மாடல் உற்பத்தி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெனால்ட் டஸ்டர் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்பட்டு புதிய தலைமுறை டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் டஸ்டர் மாடல் 2012 வாக்கில் களமிறங்கியது.
அறிமுகமானது முதல் இந்திய சந்தையில் புதிய டஸ்டர் மாடல் அமோக வரவேற்பை பெற்றது. பின் பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாவது, புது அப்டேட்களை பெறுவது போன்ற காரணங்களால் டஸ்டர் விற்பனை சரிய துவங்கியது. பி.எஸ். 6 அப்டேட் செய்யப்பட்டதும் டஸ்டர் மாடலில் டீசல் என்ஜின் மற்றும் AWD வேரியண்ட் விற்பனையை ரெனால்ட் நிறுத்தியது.

அந்த வரிசையில், தற்போது விற்பனை செய்யப்படும் டஸ்டர் மாடல் உற்பத்தியை அக்டோபர் 2021 மாதத்தில் நிறுத்த ரெனால்ட் திட்டமிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
புதிய தலைமுறை டஸ்டர் மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இந்த மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய டஸ்டர் மாடல் 1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 154 பி.ஹெச்.பி. பவர், 105 பி.ஹெச்.பி. பவர் வழங்குகின்றன.
யமஹா நிறுவனத்தின் FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
யமஹா நிறுவனம் FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லிமிடெட் எடிஷன் விலை ரூ. 1.36 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய யமஹா FZ25 முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த மாடலின் வினியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது.

புதிய FZ25 மோட்டோ ஜிபி எடிஷனின் பியூவல் டேன்க், சைடு பேனல்களில் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மோடடோ ஜிபி எடிஷன் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும். FZ25 மட்டுமின்றி இதர ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் மோட்டோ ஜிபி எடிஷனை அறிமுகம் செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.
கிராபிக்ஸ் தவிர யமஹா FZ25 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி யமஹா FZ25 மாடலில் 249சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.5 பி.ஹெச்.பி. பவர், 20.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் XUV700 எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய XUV700 மாடலுக்கான அம்சங்கள் ஒவ்வொன்றையும் டீசர் வடிவில் மஹிந்திரா வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த காரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக புதிய தலைமுறை தார் மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்தது. அந்த வகையில் மஹிந்திராவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV700 எஸ்.யு.வி. மாடலை மஹிந்திரா இந்த தினத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய மஹிந்திரா XUV700 பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய XUV700 மாடலில் - பிளஷ் கைப்பிடிகள், ஸ்கை-ரூப் பானரோமிக் சன்ரூப், ஆட்டோ ஹெட்லேம்ப் இன்டென்சிட்டி பூஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இத்துடன் லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம், ரேடார் சார்ந்து இயங்கும் குரூயிஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் வழங்கப்பட இருக்கிறது.
மஹிந்திரா தனது XUV700 மாடலில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டர்போ டீசல் என இருவித என்ஜின்களை வழங்க இருக்கிறது. இவை முறையே 200 பி.ஹெச்.பி. பவர், 185 பி.ஹெச்.பி. பவர் வழங்குகின்றன. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
ஹீரோ நிறுவனத்தின் புதிய கிளாமர் XTEC மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிளாமர் XTEC மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிளாமர் XTEC விலை ரூ. 78,900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்- டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹீரோ கிளாமர் XTEC மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹீரோ கிளாமர் XTEC டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 83,500, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் கிளாசி பிளாக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் மேம்பட்ட கிராபிக்ஸ், எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜர் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

புதிய ஹீரோ கிளாமர் XTEC மோட்டார்சைக்கிளில் 125சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. பவர், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 30எம்.எம். டெலிஸ்கோபிக் யூனிட், பின்புறம் 5 ஸ்டெப் ட்வின் அட்ஜஸ்ட் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.
இந்த மோட்டார்சைக்கிளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் i3S, ஆட்டோ செயில் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய கிளாமர் XTEC மாடலின் இருசக்கரங்களிலும் 18 இன்ச் அலாய் மற்றும் 100/80 டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா நெக்சான் இவி மாடல் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. ஜூன் 2021 மாதத்தில் நெக்சான் இ.வி. மாடல் 650 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 33.7 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் நெக்சான் இவி மட்டும் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 2021 மே மாதத்தில் எம்.ஜி. இசட்.எஸ். 102 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதைத் தொடர்ந்து எம்.ஜி. இசட்.எஸ். இவி மாடல் 250 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த கார் 27.3 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

டாடா டிகோர் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி மாடல்கள் முறையே 8 மற்றும் 7 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமானது முதல் நெக்சான் இ.வி. மாடல் இதுவரை 5500 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. நெக்சான் இவி மாடலில் 30.2kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 127 பி.ஹெச்.பி. பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்ஷன் வழங்கப்படுகிறது.
சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான சுசுகி மோட்டார் கார்ப் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2025 வாக்கில் களமிறங்க இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கென முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் காம்பேக்ட் மாடலை சுசுகி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் காம்பேக்ட் கார்கள் பிரிவில் கவனம் செலுத்த சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக மாருதி சுசுகி இருக்கிறது. இந்திய விற்பனையில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், பலேனோ மற்றும் ஸ்விப்ட் போன்ற மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. எனினும், இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மஹிந்திரா நிறுவனம் கோளாறு ஏற்பட்டதால் டீசல் கார் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த 600 டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது. பாதிக்கப்பட்ட கார்களின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ரீகால் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மாடல்கள் ஜூன் 21 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நாசிக் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

இந்த பாதிப்பு எந்தெந்த மாடல்களில் ஏற்பட்டுள்ளது என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மஹிந்திரா தொடர்பு கொண்டு காரை இலவசமாக சரி செய்து கொடுக்கும். மஹிந்திராவின் நாசிக் ஆலையில் தார், ஸ்கார்பியோ, மராசோ மற்றும் XUV300 போன்ற மாடல்களை உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த வாரம் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ மாடலை அறிமுகம் செய்தது. மேலும் XUV700 எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் C 400 GT ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் C 400 GT ஸ்கூட்டருக்கான முன்பதிவு தேர்வு செய்யப்பட்ட மையயங்களில் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சில பி.எம்.டபிள்யூ. விற்பனையாளர்கள் ஸ்கூட்டருக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

ஏற்கனவே இந்த மேக்சி ஸ்கூட்டர் சர்வதேச ச்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 350சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 139 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் 2021 பி.எம்.டபிள்யூ. C 400 GT விலை ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் வேறு எந்த ஸ்கூட்டரும் விற்பனை செய்யப்படவில்லை.






