என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய வெளியீட்டு விவரம்
Byமாலை மலர்20 July 2021 8:07 AM GMT (Updated: 20 July 2021 8:11 AM GMT)
சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான சுசுகி மோட்டார் கார்ப் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2025 வாக்கில் களமிறங்க இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கென முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் காம்பேக்ட் மாடலை சுசுகி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் காம்பேக்ட் கார்கள் பிரிவில் கவனம் செலுத்த சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக மாருதி சுசுகி இருக்கிறது. இந்திய விற்பனையில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், பலேனோ மற்றும் ஸ்விப்ட் போன்ற மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. எனினும், இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X