search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assault"

    • ஜூன் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

    டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் கோபென்ஹாகென் சென்றிருந்த போது, மர்ம நபரால் தாக்குதலுக்கு ஆளானார். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், பிரதமரை தாக்கிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். கைதாகியுள்ள 39 வயது நபருக்கு ஜூன் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    தாக்கப்பட்ட பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரதமரின் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன், "அன்று நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததேன். எனினும், தற்போது நலமாகவே இருக்கிறேன். எனக்காக குரல் கொடுத்தவர்கள், ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி," என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த சமயத்தில் தனது குடும்பத்தாருடன் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு டென்மார்க்-இன் இளம் வயது பிரதமர் என்ற பெருமையுடன் மேட் ஃப்ரெடெரிக்சன் பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 41. 

    • வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டடவடமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது.
    • தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    அப்பகுதியைச் சேர்ந்த நால்வர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வன்கொடுமை செய்து, போலீசிடம் சென்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

    இந்த விவகாரம் அந்த சமயத்தில் அரசியல் ரீதியாக பூதாகரமாக வெடித்த நிலையில் வழக்கு மீதான விசாரணை இன்று வரை நடந்து வருகிறது. வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணின் குடும்பத்துக்கு உறவினர்கள் மூலமும் ஊர்க்காரர்கள் மூலமும் அழுத்தம் கொடுக்கப்பட்டது வந்தது.

    ஆனால் வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டவட்டமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 18 வயது தம்பியை 9 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்றது. தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் 9 பேர் மீதும் சிறுபான்மையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலையை நேரில் பார்த்த சிறுவனின் உறவினரை கடந்த மே 25 ஆம் தேதி சமாதானம் பேசுவதாக அழைத்து வழக்கில் சம்பந்தமுடையவர்கள் கொலை செய்துள்ளனர்.

    இதைதொடரந்து பாதிக்கபட்ட பெண்ணும் உயிரிழந்த உறவினரின் உடலுடன் கடந்த மே 26 ஞாயிறுக்கிழமை வேனில் வரும்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொடந்து கொலை செய்யப்பட்டு, அந்த பெண்ணும் உயிரிழந்துள்ளது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகம் காட்டியதாக ஆளும் பாஜக கட்சியை எதிரிக்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

    • பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹர்ஷ் ராஜ் என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
    • தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பிகார் தலைநகர் பாட்னாவில் சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்து மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மே 27) பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கு படித்து வந்த ஹர்ஷ் ராஜ் (22) என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

     

    தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹர்ஸ் ராஜை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், கல்லூரியில் உள்ள சிசிடிவி கட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்ததில் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர்.

    இன்று (மே 28) இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் சந்தன் யாதவ் என்ற மாணவனை கைது செய்த்துள்ளனர். அவரின் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு கல்லூரியில் தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதிலிருந்து சின்ன சின்ன உரசாலாக இரு குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையே பூதாகாரமாக மாறி மாணவனின் உயிரைப் பறித்தது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஹர்ஷ் ராஜின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் போரட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநிலத் தலைநகர் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்தே மாணவன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

     

    • ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




     

    ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அருகே உள்ள அம்ரோரா கிராமத்திற்கு அருகே, சரஸ்வதி ராம் என்ற அந்த 60 வயது முதியவர் நேற்று முன்தினம் தனது கால்நடைகளை வண்டியில் ஏற்றி அருகில் உள்ள பன்ஷிதர் நகர் என்ற சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர்ம், முதியவரை மறித்து, மாடு கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரது ஆடைகளைக் களைந்து இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று சிறிதுதூரத்தில் கட்டை அவிழ்த்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சமயம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மூவரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

    • மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • . இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் முங்காளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிளோரா கிராமத்தில் வசித்து வரும் வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    அவர்மீது நேற்று முன்தினம் (மே 17) காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அந்த இளைஞரின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் இன்று (மே 20) அந்த இளைஞரின் வயதான தாய்-தந்தை கிராமத்துக்குள் வந்துள்ளனர்.

    அப்போது அவர்களை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து 10 க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று சரமாரியாக அடித்து துன்புறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி செருப்புகளை கோர்த்து மாலையாக அவர்களின் கழுத்தில் அணிவித்திருக்கிறது.

    இதனையடுத்து அந்த இடத்தில இருந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈவ் டீசிங் அந்த இளைஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசம், தலித், தாக்குதல், கிராமம், போலீஸ், வழக்குப்பதிவு

    • பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    • நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். அவரிடம் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் குழு 4 மணி நேர வாக்குமூலம் பெற்றது.

    இதனைத் தொடர்ந்து பிபவ் குமார் தனது வயிற்றில் காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினார் என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் இல்லத்தில் ஸ்வாதி மலிவால் அனுமதியின்றி நுழைந்து அதிகாரிகளை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு, இது தேர்தல் சமயத்தில் கெஜ்ரிவாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக செய்த சதியே இது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த மொத்த விவகாரத்திலும் அவிழ்க்க முடியாத பல முடுச்சுகள் உள்ள நிலையில் டெல்லி காவல்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதும், இந்த விவகாரம் டெல்லி தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுமே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

    • தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது.
    • இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த மாநிலங்களைவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் கடந்த மே 13 ஆம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தொடக்கத்தில் மௌனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி தாக்கப்பட்டது உணமைதான் எனவும், இந்த விவகாரத்தில் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்திருந்தது. .மேலும் பிபவ் குமார் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பாஜகவினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் நாளை (மே 17) வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

     

    மேலும் பிபவ் குமார் ஆஜராக தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.  

    • ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் அழகி லாண்டி பராகா பெயரும் இடம் பெற்றிருந்தது.
    • அழகி லாண்டி கொலையில் லியாண்டிரோ நாரிரோவின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    குயிட்டோ:

    ஈக்வடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பராகா கோய்புரோ (வயது 23).

    இவர் 2022-ம் ஆண்டு மிஸ் குவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர். இதற்கிடையே லாண்டி பராகா ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் சாப்பிடும் ஆக்டோபஸ் செவிச் உணவு பற்றியும், தனது இருப்பிடம் பற்றியும் இன்ஸ்டாகிராமில் பதிவாக வெளியிட்டார்.

    சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஓட்டலுக்கு 2 வாலிபர்கள் துப்பாக்கியுடன் வந்தனர். இதில் ஒருவர் வாசலிலேயே நின்று கொள்ள, மற்றொருவர் லாண்டி பராகா மற்றும் அவருடன் பேசி கொண்டிருந்த நபர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டார்.

    பின்னர் 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். உடலில் 3 முறை குண்டு பாய்ந்ததில் லாண்டி பராகா உயிரிழந்தார். லாண்டி பராகாவுக்கும், போதை பொருள் கும்பல் தலைவன் லியாண்டிரோ நாரிரோ என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஒரு ஆண்டுக்கு முன் சிறையில் நடந்த கலவரத்தில் லியாண்டிரோ நாரிரோ பலியாகிவிட்டார். இதற்கிடையே ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் அழகி லாண்டி பராகா பெயரும் இடம் பெற்றிருந்தது.

    லாண்டி பராகாவுடனான தொடர்பு குறித்து தனது மனைவிக்கு தெரியக் கூடாது என்று கடத்தல்காரர் லியாண்டிரோ நாரிரோ நினைத்ததாகவும், தனது கணக்காளரிடம் தொலை பேசியில் பேசும்போது , லாண்டி பராகாவுடனான தொடர்பு குறித்து எனது மனைவிக்கு தெரிந்து விட்டால் பிரச்சினை ஆகி விடும் என்று அவர் கூறி பயந்ததாகவும் கோர்ட்டு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அழகி லாண்டி பராகா கொலையில் லியாண்டிரோ நாரிரோவின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
    • நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெங்களூரு நகரில் பட்டப்பகலில் நபர் ஒருவரை நான்கைந்து பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் யார், அவர் ஏன் பொது வெளியில் அப்படியான தாக்குதலுக்கு ஆளானர் என்ற காரணங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த வகையில், இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான நபர் சுரேஷ் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே இவர் அதே நிறுவனத்தை சேர்ந்த உமாசங்கர் மற்றும் வினீஷ் என்ற இரு ஊழியர்களிடம் அதிவேகமாக வேலை செய்ய வலியுறுத்தி வந்துள்ளார்.

    இதன் காரணமாக உமாசங்கர் மற்றும் வினீஷ் இணைந்து வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் கோபமுற்ற இவர்கள் மேலாளரை அடியாட்கள் வைத்து தாக்குதல் நடத்துவதென முடிவு எடுத்தனர். அப்படியாக இருவரும் இணைந்து மேலாளரை தாக்குவதற்கு அடியாட்களை தேர்வு செய்துள்ளனர்.

    இருவரின் வலியுறுத்தலின் பேரிலேயே சம்பவத்தன்று பொது வெளியில் மேலாளரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ அதே பகுதியில் வந்த கார் ஒன்றின் டேஷ் கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சிகளே சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    வீடியோவை வைத்து விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்திய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • கணவர் தற்கொலைக்கு நிர்மலாவே காரணம் என சுரேஷ் கூறி வந்தார்
    • மளமளவென பரவிய தீயால் உடல் வெந்து அங்கேயே நிர்மலா உயிரிழந்தார்

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது ரட்லம் (Ratlam) மாவட்டம்.

    ரட்லம் மாவட்டத்தில் தோதர் (Dhodhar) கிராமத்தில் தனது கணவர் பிரகாஷுடன் வசித்து வந்தவர் நிர்மலா (33). இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சில தினங்களுக்கு முன் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நிர்மலாதான் காரணம் என பிரகாஷின் மூத்த சகோதரர் சுரேஷ் (40) குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் நேற்று சுரேஷ், நிர்மலா வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் மோதலாக மாறிய போது ஆத்திரமடைந்த சுரேஷ், அருகிலிருந்த ஒரு இரும்பு கம்பியால் நிர்மலாவை தாக்கினார். இதில் நிர்மலா நிலைதடுமாறி விழுந்தார். அவர் மீது சுரேஷ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

    மளமளவென பரவிய தீயால் உடல் வெந்து அங்கேயே துடிதுடித்து நிர்மலா உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தில் தங்கள் தாயார் பலியாவதை நிர்மலாவின் குழந்தைகள் கண்டனர்.

    இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்களின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சுரேஷை காவலில் எடுத்தனர்.

    குற்றத்தை ஒப்பு கொண்ட சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் குமார் லோதா தலைமையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 59). இவரது மகன் தமிழ்ச்செல்வன் புதுச்சேரி குருவிநத்தத்தை சேர்ந்த சரண்ராஜிடம் பணம் கடனாகப் வாங்கியது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று லோக சுந்தர், சரண்ராஜ் உள்பட நான்கு பேர் திடீரென்று தமிழ்ச்செல்வன் வீட்டுக்குள் நுழைந்து தமிழ்ச்செல்வனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த தமிழ்ச்செல்வன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் லோக சுந்தர், சரண்ராஜ் மற்றும் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×