என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • ஏர்டெல் வழங்கும் டேட்டா பேக் சலுகையின் விலை ரூ. 301 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய ஜியோ ரூ. 222 விலை சலுகையில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த சலுகையில் அழைப்புகளோ அல்லது வேலிடிட்டி போன்ற பலன்களோ இடம்பெறவில்லை. புதிய கால்பந்து டேட்டா பேக் பிரீபெயிட் சலுகை பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில், இந்த சலுகையை பெறும் முன் ஏற்கனவே ஒரு சலுகையில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய ரூ. 222 சலுகையை ரிலையன்ஸ் ஜியோ "Football World Cup Data Pack" என அழைக்கிறது. எனினும், இந்த சலுகை உலக கோப்பை கால்பந்து தொடர் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து வழங்கப்படும் என்றே தெரிகிறது. எதுவாயினும், இந்த சலுகையை தேர்வு செய்வோர் ஏற்கனவே ரிசார்ஜ் செய்திருக்கும் முதன்மை சலுகை நிறைவு பெறும் போது இதற்கான வேலிடிட்டி முடிந்து விடும்.

    ஜியோ ரூ. 222 4ஜி டேட்டா பேக் விவரங்கள்:

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையில் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை விவரங்கள் மைஜியோ செயலியில் இடம்பெற்று இருக்கிறது. கூடுதல் டேட்டா பயனர் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையில் உள்ள அன்றாட டேட்டா தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணத்தை பொருத்தவரை புது சலுகையில் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 4.44 செலவாகிறது. இது போட்டி நிறுவனங்களை விட குறைவு ஆகும்.

    ஏர்டெல் நிறுவனம் 50 ஜிபி டேட்டாவை ரூ. 301 விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் ரூ. 6.02 ஆகும். ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையை ஆன்லைன் வலைதளம் அல்லது ரிடெயில் ஸ்டோர் சென்று நேரடியாகவும் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனினை எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் டிசம்பர் 09 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான லேண்டிங் பக்கம் அமேசான் தளத்தில் இடம்பெற்று இருந்தது.

    மேலும் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களும் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் சீ கிரீன் மற்றும் ஷேடோ புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, டூயல் கேமரா சென்சார்கள், வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் ணற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 5MP லென்ஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி M04 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேs

    மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

    அதிகபட்சம் 8ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

    13MP பிரைமரி கேமரா

    2MP கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மாடல்கள் உற்பத்தி சீனா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகளவு நடைபெற்று வருகின்றன.
    • ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    சாதனங்களை உற்பத்தி செய்ய சீனாவை சார்ந்து இருப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்ளும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஐபோன் மாடல்கள் உற்பத்தியை பெருமளவு இந்தியாவுக்கு மாற்றி இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன்களை போன்றே ஐபேட் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்து முடிக்க ஏராளமான தடைகளை ஆப்பிள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் மிக முக்கியமானது ஐபேட் மாடல்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப திறன்களை தயார்படுத்துவதும் ஆகும். அந்த வகையில், இதனை சாத்தியப்படுத்துவது பற்றி இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை.

    தனது சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றுவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இடையூறுகளை சரி செய்த பின் ஐபேட் உற்பத்தி இங்கு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2017 முதல் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வந்தது. பின் மெல்ல உற்பத்தி பணிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. அந்த வரிசையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்கள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    • கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
    • கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

    கூகுள் நிறுவனத்தன் பிக்சல் ஃபோல்டு வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். கூகுள் ஃபெலிக்ஸ் (Felix) எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் புதிய கூகுள் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தெரிகிறது. தற்போது இந்த மாடலின் டெஸ்டிங் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஃபெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் பிக்சல் 7 ப்ரோ பெயரிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7 ப்ரோ என இரு மாடல்களிலும் டென்சார் G2 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. கீக்பென்ச் புள்ளிகளின் படி புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பிக்சல் 7 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல் தோற்றத்தில் பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் டூயல் கிளாஸ் பேனல்கள், ஸ்டீல் ஃபிரேம் உள்ளது. இத்துடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். பிக்சல் ஃபோல்டு மாடலில் 8 இன்ச் உள்புற டிஸ்ப்ளே, 6.19 இனஅச் கவர் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் 9.5MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 410 என நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் நடைபெறும் என கூறப்படுகிறது.

    • டெலிகாம் சந்தையில் அதிநவீன புது தொழில்நுட்பம் 5ஜி, உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
    • இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வெளியிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    உலகின் பல்வேறு நாடுகளில் புதிய தலைமுறை டெலிகாம் தொழில்நுட்பான 5ஜி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் பணிகளில் டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 5ஜி என்பது 5th Gen செல்லுலார் நெட்நொர்க்குகளை குறிக்கும்.

    புதிய தொழில்நுட்பம் வெளியாகும் முன்பே இதுபற்றிய வதந்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டன. அந்த வகையில் புதிய 5ஜி தொழில்நுட்பம் பற்றி அதிகம் வெளியாகி இருக்கும் வதந்திகள் மற்றும் அவற்றுக்கு பின்னணியில் உள்ள உண்மை தகவல்கள் பற்றி தொடர்ந்து பாரப்போம்.

    மொபைல் போன்களில் மட்டும் வேலை செய்யும்?

    பெரும்பாலானோரும் 5ஜி தொழில்நுட்பம் மொபைல் போன்களுக்கு மட்டும் தான் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இணைய சேவையை மாற்றிக் கொள்ளும் வகையில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தொழில்துறை பயனர்களுக்கு இது அதிவேக இணையம், லோ-லேடன்சி மற்றும் தலைசிறந்த கனெக்டிவிட்டி வழங்குகிறது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் பரவலான சாதனங்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

    4ஜி - 5ஜி என்ன வித்தியாசம்?

    லேடன்சி, டவுன்லோடு வேகம், பேஸ் ஸ்டேஷன் மற்றும் செல் டென்சிட்டி உள்ளிட்டவை 5ஜி-யில் அதிகளவில் இருக்கும். பயனர்கள் நொடிக்கு அதிகபட்சம் 20 Gb வேகத்தை அனுபவிக்க முடியும். இத்துடன் 1ms லோ லேடன்சி, அதிக தரமுள்ள வீடியோ ஸ்டீரிமிங், ஹை-ரெசல்யூஷன் ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. 5ஜி முந்தைய தலைமுறை 4ஜி நெட்வொர்க்கை விட அதிகளவு அனுபவப்பூர்வமான சேவை ஆகும்.

    5ஜி அதிக மின்திறன் எடுத்துக் கொள்ளும்?

    5ஜி தொழில்நுட்பத்தில் ஆண்டெனாக்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படும் என்பதால் மின் பயன்பாடு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு விடும். தகவல் பரிமாற்றம் செய்யப்படும் போது மட்டுமே இவை பயன்படுத்தப்படும். மேலும் 5ஜி-யில் தகவல் பரிமாற்றம் மற்ற நெட்வொர்க்குகளை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

    உடல் நலத்தை பாதிக்கும்?

    5ஜி நெட்வொர்க்குகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் ஆழமாக பரவி விட்டது. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்றும் இந்த கூற்றை நிரூபிக்கும் சான்று இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். 5ஜி மூலம் வெளிப்படும் ரேடியோ கதிர்களும், சிக்னல்களும் மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    5ஜி பாதுகாப்பற்றது, வை-பை-க்கு மாற்றாக இருக்கிறது?

    5ஜி தொழில்நுட்பம் மேம்பட்ட பாதுகாப்பை வழங்க இருக்கிறது. இதன் மூலம் முற்றிலும் புதிய ஆதெண்டிகேஷன் வழிமுறைகள் மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். 5ஜி தொழில்நுட்பம் அதற்கும் முந்தைய நெட்வொர்க்குகளை விட மிகவும் பாதுகாப்பானது ஆகும். 5ஜி மற்றும் வைபை இரண்டும் முற்றிலும் வித்தியாசமான தொழில்நுட்பங்கள் ஆகும். 5ஜி செல்லுலார் நெட்வொர்க் வழங்கும். வைபை குறுகிய ரேன்ஜ் வரை இணைய சேவையை வழங்கும். அந்த வகையில் 5ஜி எப்போதும் வைபை தொழில்நுட்பத்திற்கு மாற்றாக முடியாது.

    • மும்பையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்ற முதியவர் சைபர் மோசடியில் சிக்கி இருக்கிறார்.
    • இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்கள் 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் சந்தாவை புதுப்பிக்க முயன்று சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மோசடியில் மும்பையை சேர்ந்த முதியவர் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய புகார் மும்பையை அடுத்த ஜூஹூ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    காவல் நிலைய தகவல்களின் படி, முதியவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் ஆட்டோ-ஜெனரேட் செய்த மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிப்பதற்கான நினைவூட்டல் தொடர்பான தகவல் இடம்பெற்று இருந்தது. அதில் அவர் மாதாந்திர கட்டணமான ரூ. 499 செலுத்தி ஸ்டிரீமிங் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மின்னஞ்சலுடன் வந்த இணைய முகவரியை 73 வயதான நபர் க்ளிக் செய்துள்ளார்.

    இவர் க்ளிக் செய்ததும் திறந்த மற்றொரு வலைப்பக்கத்தில் இவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்து நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்-ஐ புதுப்பிக்கலாம் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் இவரது மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒடிபி) அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான குறுந்தகவலில் தொகையை சரியாக பார்க்காமல், முதியவர் ஒடிபி-யை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செய்ததும், அவரின் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் உடனடியாக காணாமல் போய்விட்டது.

    சைபர் செக்யுரிட்டி வல்லுனர்கள், சட்ட நிறுவனங்கள் பொது மக்களிடம் ஒடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி சார்பில் இவ்வளவு பெரிய தொகைக்கான பரிவர்த்தனையை உண்மையில் நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்வியுடன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த அழைப்பில் தான் முதியவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்களை பற்றிய தகவல் தெரிவிக்கும் முனையத்தில் புகார்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஒப்போ போல்டபில் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒப்போ இன்னோ டே நிகழ்வில் தனது முதல் போல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்தது. ஒப்போ ஃபைண்ட் N பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனத்தின் மேம்பட்ட வெர்ஷன் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் என அழைக்கப்பட இருக்கிறது.

    இந்த நிலையில், புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் hands-on வீடியோ வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. அறிமுகம் செய்யப்படாத டெஸ்ட் சாதனங்களை போன்றே ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலிலும் பாதுகாப்பிற்கு கேஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் சிறிய இன்னர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர பன்ச் ஹோல் ரக கட்-அவுட், 32MP செல்ஃபி கேமரா, 6.8 இன்ச் ஃபோல்டிங் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன. இதன் வெளிப்புற டிஸ்ப்ளே மற்ற ஃப்ளிப் ரக போல்டபில் போனை விட பெரியதாக காட்சியளிக்கிறது. அதன்படி புது மாடலில் 3.26 இன்ச் அளவில் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

    வெளிப்புற டிஸ்ப்ளே அருகில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸர், 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • சீன சந்தையில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு சியோமி மற்றும் ஐகூ நிறுவனங்கள் தயாராகி வந்தன.
    • சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் ரத்தப் புற்றுநோய் மற்றும் உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.

    சியோமி மற்றும் ஐகூ நிறுவனங்கள் தங்களின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வந்தன. இந்த நிலையில், புது ஃபிளாக்‌ஷிப் மாடல்களின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக சியோமி மற்றும் ஐகூ நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து இரு நிறுவனங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், சீனா உலக அரங்கில் இத்தனை வளர்ச்சியை அடைய உதவியர் எனும் பெருமைகளுக்கு உரித்தானவர் ஜியாங் ஜெமின். ரத்தப் புற்று நோய் காரணமாக, உடல் உறுப்புகள் செயலிழந்ததை அடுத்து இவர் உயிரிழந்தார். இவருக்கு வயது 96. இவர் உயிரிழந்த தகவல் வெளியானதும், சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போவில் சியோமி 13 சீரிஸ் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

    மேலும் புது ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது. சியோமி வரிசையில் ஐகூ நிறுவனமும் தனது ஐகூ 11 சீரிஸ் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்து இருக்கிறது. ஐகூ நிறுவனமும் தனது புது ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என சரியான தேதியை தற்போது அறிவிக்கவில்லை.

    • தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு, இதறகான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளன.
    • மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்கள் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயனர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பின் கடந்த வாரம் மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது கட்டாயம் என மீண்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஆன்லைன் மற்றும் மின் வாரிய அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகாமை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

    ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

    - முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணைய முகவரியை திறக்க வேண்டும்

    - அடுத்து திரையில் உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும்

    - மொபைல் நம்பரை பதிவிட்டு, அதன் பின் கடவுச்சொல்லை பெற வேண்டும்

    - மொபைல் நம்பருக்கு வந்த கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்

    - மின் இணைப்பை பயன்படுத்துவோர் விவரங்களை பதிவிட வேண்டும்

    - இனி இணைக்க வேண்டியவரின் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்

    - அடுத்து ஆதாரில் உள்ளதை போன்று பெயரை பதிவிட வேண்டும்

    - ஆதார் அட்டை நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    - இறுதியில் படிவத்தை சமர்பித்து விட்டு, பதிவேற்றம் செய்ததற்கான ரசீதை டவுன்லோட் செய்ய வேண்டும்

    • ஐகூ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் அம்சங்கள் டீசர்களில் தெரியவந்துள்ளது.
    • புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஐகூ 11 ஸ்மார்ட்போன் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் தனித்துவம் மிக்க அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.

    அந்த வரிசையில் இன்று வெளியான டீசரில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் முற்றிலும் புதிய மெமரி மற்றும் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போனில் LPDDR5X ரக ரேம், UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த இரு அம்சங்கள் மிகவும் சில ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் அறிமுகமாவதும் உறுதியாகி இருக்கிறது. எனினும், இந்த வெர்ஷனில் சற்றஏ பழைய UFS 3.1 ரக ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

    ஸ்கிரீனை பொருத்தவரை ஐகூ 11 மாடலில் சாம்சங் உற்பத்தி செய்த E6 AMOLED, QHD+ ரெசல்யூஷன், அதிகபட்சம் 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

    • சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
    • முதல் முறையாக சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் கேலக்ஸி S23 வெளியீடு பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார்.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டை 2023 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டின் முதல் அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வு கொரோனா பெருந்தொற்றுக்கு பின் முதல் முறையாக பொது மக்கள் முன்னிலையில் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் இதன் வெளியீடு நடைபெறும்.

    முன்னதாக இதே போன்று வெளியான மற்ற தகவல்களில் சாம்சங் தனது கேலக்ஸி S23 சீரிஸ் பற்றிய அறிவிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் நடைபெற இருக்கும் 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன (CES) நிகழ்வில் வெளியிடலாம் என்றும் கூறப்பட்டது. எனினும், சாம்சங் தனது S சீரிஸ் மாடல்களை இவ்வாறு அறிமுகம் செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அம்சங்களை பொருத்தவரை சர்வதேச சந்தையில் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய கேலக்ஸி S23 பிளாக்‌ஷிப் சீரிஸ் மாடல்களின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் ஏற்கனவே இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    அதன்படி கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் முந்தைய கேலக்ஸி S22 சீரிசில் வழங்கப்பட்டதை விட பெரிய பேட்டரி வழங்கப்படலாம். கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பெசல்கள், 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP கேமரா, 10MP கேமரா மற்றும் 10MP செல்பி கேமரா வழங்கப்படலாம்.

    Photo Courtesy: Onleaks X Digit.in

    • உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது.
    • தற்போது வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    வாட்ஸ்அப் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக உள்ளது. தினந்தோரும் கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் முக்கிய பாலமாக திகழ்கிறது. இத்தனை பிரபலமாக இருக்கும் வாட்ஸ்அப் செயலி அதே அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறது.

    இந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு சுமார் 500 மில்லியன் பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஒருவர் சுமார் 487 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர் விவரங்களை ஹேக்கிங் கம்யுனிட்டியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார் என சைபர்நியூஸ் தெரிவித்து இருக்கிறது.

    இதில் உலகம் முழுக்க 84 நாடுகளை சேரந்த பயனர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் 32 மில்லியன் பயனர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் துருக்கியை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர் விவரங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் 7 ஆயிரம் டாலர்கள் எனும் விலைக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. லண்டன் டேட்டாபேஸ் விவரங்களின் விலை 2 ஆயிரத்து 500 டாலர்களும், ஜெர்மனி விவரங்களின் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் லீக் ஆகி இருக்கும் மொபைல் போன் நம்பர்களை கொண்டு ஏராளமான மோசடிகளை செய்ய முடியும் என்ற வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

    ×