என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மேலும் பல ஆயிரம் பேர் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க், தனது சமூக வலைதளத்தில் புதிதாக இணைவோர் (சைன்-அப்) எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். நவம்பர் 16 ஆம் தேதியில் இருந்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் தினந்தோரும் சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் சைன் அப் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    இது கடந்த ஆண்டு இதே வாரத்துடன் ஒப்பிடும் போது 66 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் பயனர் தளத்தில் செலவிடும் நேரம் வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஏழு நாட்களில் பயனர் தளத்தில் செலவிடும் நேரம் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 8 பில்லியன் நிமிடங்கள் ஆகும். இது கடந்த ஆண்டு இதே வாரத்தை விட 30 சதவீதம் அதிகம் ஆகும்.

    ட்விட்டரில் இருந்து வந்த வேற்றுமை கருத்துக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட இந்த ஆண்டு நவம்பர் மாதம் பெருமளவு சரிவடைந்து இருக்கிறது. ட்விட்டரை வாங்குவதன் மூலம், தனது நீண்ட நாள் கனவு- எல்லாவற்றுக்குமான செயலியான X உருவாக்கும் இலக்கை வேகப்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

    எலான் மஸ்கின் "ட்விட்டர் 2.0 தி எவ்ரிதிங் ஆப்" என்க்ரிப்ட் செய்யப்பட்ட டைரக்ட் மெசேஜ்கள், நீண்ட வடிவம் கொண்ட ட்விட்கள் மற்றும் பேமண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ட்விட்டர் மாதாந்திர பயனர் எண்ணிக்கை பில்லியனை தாண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
    • ஐபோன் மாடல்களுக்கு தேவையான பாகங்களை பல்வேறு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

    சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் OLED சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் சாம்சங்கின் OLED பேனல்களை தனது ஐபோன்களில் பயன்படுத்தி வருகிறது. OLED மட்டுமின்றி ஐபோனில் உள்ள மேலும் சில பாகங்கள் சாம்சங் போன்று மூன்றாம் தரப்பு நிறுவனங்களே உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

    அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 14 சீரிசில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டிஸ்ப்ளே பேனல்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சாம்சங் உற்பத்தி செய்தவை என தெரியவந்துள்ளது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களில் வழக்கமான பேனல்களும், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் LTPO டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது முதன்மை சீரிசில் 120 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சுமார் 80 மில்லியன் யூனிட்களில் சாம்சங் பேனல், 20 மில்லியனுக்கும் மேற்பட்ட யூனிட்களில் LG டிஸ்ப்ளே வழங்கும் ஸ்கிரீன்கள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர BOE பேனல்கள் 6 மில்லியன் யூனிட்களில் வழங்கப்பட இருக்கிறது.

    மீதமுள்ள யூனிட்களுக்கு யார் டிஸ்ப்ளே பேனல்களை வழங்குவது என்ற முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் சாம்சங் மற்றும் எல்ஜி டிஸ்ப்ளே ஐபோன் 14 சீரிசின் நான்கு வேரியண்ட்களுக்கும் டிஸ்ப்ளே பேனல்களை வழங்குகின்றன. BOE வழங்கும் பேனல்கள் ஐபோன் 14 மாடலில் உள்ள 6.1 இன்ச் LTPS OLED-க்கள் ஆகும்.

    • ராக்ஸ்டார் நிறுவனம் உருவாக்கி வரும் GTA 6 உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் கேம் ஆகும்.
    • புதிய GTA 6 வெளியீடு பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    உலக கேமிங் சந்தையில் எப்போதும் பிரபல கேமாக இருப்பது GTA (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) எனலாம். இதன் கடைசி வெர்ஷனான GTA 5 2013 வாக்கில் வெளியிடப்பட்டது. எனினும், இந்த கேம் தற்போதும் அமோக விற்பனையை பதிவு செய்து வருகிறது. எனினும், ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் புதிய GTA 6 வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்க்கும் கேமர்கள் கூட்டமும் காத்துக் கொண்டே தான் இருக்கிறது.

    இந்த நிலையில், GTA 6 வெளியீட்டு விவரத்தை மைக்ரோசாஃப்ட் அம்பலப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆக்டிவிஷன்-பிலிசார்டு நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றும் விவகாரத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தின் CMA அமைப்பு கண்காணித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பார அந்த அமைப்பு விசாரணையை துவங்கி, பில்லியன் டாலர் ஒப்பந்தம் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

    விசாரணையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மிக விரைவாக தனது பதில்களை பதிவிட்டு வருகிறது. அந்த வகையில், மைக்ரோசாஃப்ட் பதிவிட்ட ஆவணம் ஒன்றில் GTA 6 வெளியீடு பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கிறது. ஆவணத்தின் 24-வது பக்கத்தில், "அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 கேம் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மைக்ரோசாஃப்ட் மற்றும் ராக்ஸ்டார் இடையே நிலவும் ஒருமித்த கருத்து காரணமாக இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்றே எடுத்துக் கொள்ளலாம். எனினும், இந்த நிறுவனம் CMA விசாரணையில் உள்ளது. அந்த வகையில் இரு நிறுவனங்கள் இடையேயான பில்லின் டாலர் ஒப்பந்தமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    • ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பெருமளவு ஆபத்தில் சிக்கியும், சீராக இயங்கும் அளவுக்கு தரம் கொண்டிருப்பதற்கு உலகளவில் பெயர் பெற்றுள்ளன.
    • ஒரு வருடத்திற்கு முன் கடலில் விழுந்த ஐபோன் மாடல் கரை ஒதுங்கிய சம்பவம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக மாறி இருக்கிறது.

    ஆகஸ்ட் 2021 வாக்கில் சர்ஃபிங் செய்ய கடலுக்குள் சென்ற கிளார் அட்ஃபீல்டு என்ற பெண் தனது ஐபோனை கடலில் தொலைத்து விட்டார். 39 வயதான கிளார் தற்போது கடலில் விழுந்து காணாமல் போன தனது ஐபோனை கண்டறிந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒரு வருடத்திற்கு பின் மீட்கப்பட்ட ஐபோன் தற்போது சீராக இயங்குகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    கிளார் அட்ஃபீல்டு நீர்புகாத பையில் வைத்திருந்த ஐபோன் 8 பிளஸ் மாடலை கடந்த ஆண்டு கடலில் தொலைத்து விட்டார். கடலில் விழுந்து காணாமல் போன ஐபோன் தற்போது கரை ஒதுங்கி இருக்கிறது. இதனை பிராட்லி காட்டன் என்ற பெயர் கொண்ட நாய் கண்டறிந்து இருக்கிறது. ஐபோன் வைக்கப்பட்டு இருந்த நீர்புகாத பையினுள் அட்ஃபீல்டு தாயாரின் மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டை வைக்கப்பட்டு இருந்தது.

    இதை வைத்தே அட்ஃபீல்டை தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 2021 முதல் சர்ஃபிங் செய்வதை அட்ஃபீல்டு வழக்கமாக கொண்டிருந்தார். எப்போது சர்ஃபிங் செய்யும் போது தனது ஐபோன் அடங்கிய பையினை கழுத்தில் மாட்டிக் கொள்வார். அதே போன்று தான் செய்யும் போது தான் தண்ணீரில் தவறி விழுந்த அட்ஃபீல்டு பையை எப்படியோ தொலைத்திருக்கிறார்.

    தொலைந்து போன ஐபோன் மீண்டும் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என அட்ஃபீல்டு தெரிவித்து இருக்கிறார். மேலும் 450 நாட்கள் கடலில் இருந்த ஐபோன் மீண்டும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • தற்போது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களுக்கு அமேசான் வலைதளத்தில் அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்களுக்கு அமேசான் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஐபோன் 14 (128ஜிபி) மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்குகிறது. எனினும், அமேசான் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 78 ஆயிரத்து 400 என மாறி இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 73 ஆயிரத்து 400 என குறைந்து விடுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 16 ஆயிரத்து 300 வரை தள்ளுபடி பெறலாம். எனினும், இதற்கு பழைய போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அந்த வகையில் வங்கி சலுகை மற்றும் எக்சேன்ஜ் சலுகையை முழுமையாக பெறும் படச்த்தில் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 57 ஆயிரத்து 100 என மாறி விடும்.

    ஐபோன் 14 அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம், ப்ளூடூத், ஜிபிஎஸ், லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.

    • ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
    • ஒப்போ நிறுவனத்தின் இன்னோ டே 2022 சிறப்பு நிகழ்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் "2022 இன்னோ டே" நிகழ்வை அடுத்த மாதம் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ஒப்போ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தெரிவித்து இருக்கிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி 2021 இன்னோ டே நிகவ்வு நடைபெற்றது. இதில் ஒப்போ நிறுவனம் ஏராளமான புது தொழில்நுட்பங்கள் - மரிசிலிகான் X NPU, ஒப்போ ஏர் கிலாஸ், ஒப்போ ஃபைண்ட் N மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை அறிவித்தது. கடந்த ஆண்டை போன்றே இந்த முறையும் ஒப்போ புதிய தொழில்நுட்பங்களை தனது 2022 இன்னோ டே நிகழ்வில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

    டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தனது வெய்போவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஒப்போ இன்னோ டே 2022 நிகழ்வு டிசம்பர் மாத மத்தியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ஏராளமான புது சாதனங்கள் அறிவிக்கப்படும். இதே நிகழ்வில் ஃபைண்ட் N2, ஃபைண்ட் N2 ஃப்ளிப் போன்ற மடிக்கக்கூடிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் 7.1 இன்ச் அளவில் உள்புறமாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 5.5 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4520 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 32MP செல்ஃபி கேமரா, உள்புறத்தில் 32MP கேமரா, 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஃபோல்டபில் ஸ்மார்ட்போனின் எடை 240 கிராம்களுக்கும் குறைவாக இருக்கும் என்றும் இது பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஐபோன் சீரிசாக ஐபோன் SE விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஆப்பளின் புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-இல் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி ஆப்பிள் ஐபோன் SE 4 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகும் என்றும் இது ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் இது ஏராளமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன் SE மாடல்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தன. இவற்றின் விற்பனையும் அதிகளவிலேயே நடைபெற்று வந்தது.

    தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இந்த நிலை விரைவில் மாறும். அதன்படி புதிய ஐபோன் SE சீரிஸ் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதன் தோற்றம் ஐபோன் XR போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோன் SE மாடலில் ஃபேஸ் ஐடி அம்சம் வழங்கப்படலாம்.

    இத்துடன் 6.1 இன்ச் 720 பிக்சல் LCD டிஸ்ப்ளே, IP67 சான்று, 3000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 7.5 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படலாம். இதே பிராசஸர் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ சீரிசில் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 7MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    • பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • இது மட்டுமின்றி தனது பிரீபெயிட் சலுகை மற்றும் அதன் பலன்களையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே வருகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை உயர்த்தி இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட குறைந்தபட்ச ஏர்டெல் சலுகை விலை தற்போது 57 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய விலை ரூ. 155 என மாறி இருக்கிறது. இந்த சலுகை விவரங்கள் ஏர்டெல் ஹரியானா மற்றும் ஒடிசா மாநில வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.

    மேற்படி ரூ. 99 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையை ஏர்டெல் அதிரடியாக நீக்கி இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 200MB டேட்டா, அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது. தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில் ஏர்டெல் குறைந்தபட்ச ரிசார்ஜ் விலை ரூ. 155 ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

    தற்போது சோதனை அடிப்படையில் இந்த சலுகை இரு பகுதிகளில் மட்டும் வழங்கப்படுகிறது. சோதனை முடிவுக்கு ஏற்ப இந்த சலுகை நாடு முழுக்க வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 155-க்கும் குறைந்த விலையில் 28 நாட்கள் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பலன்களை வழங்கும் அனைத்து சலுகைகளையும் நீக்க ஏர்டெல் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய மாற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண்ணை ஆக்டிவேட் செய்த நிலையில் வைத்திருக்க ரூ. 155 விலையில் ரிசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். மாதாந்திர சலுகையில் எஸ்எம்எஸ் சேவையை பெறவாவது ரூ. 155 விலை சலுகையை ரிசார்ஜ் செய்வது அவசியமாகி விடும். 

    • சியோமி நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய சியோமி ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    சியோமி நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடல் சமீபத்தில் தான் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், டிப்ஸ்டர் குபா வொசைசௌஸ்கி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் வெளிப்புறம் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் 855 மோடெம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    "இந்த சாதனத்தின் விவரங்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. எனினும், ஸ்மார்ட்போனின் சில யூனிட்கள் பொது வெளியில் கசிந்துள்ளது," என குபா வொசைசௌஸ்கி தெரிவித்து இருக்கிறார். சியோமி 13 சீரிஸ் வெளியீட்டு பணிகளில் சியோமி தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. புதிய 13 சீரிசில்- சியோமி, 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இவை முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

    இரு புதிய ஸ்மார்ட்போன்களில் சியோமி 13 ப்ரோ விவரங்களை டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருந்தார். அதில், புதிய சியோமி 13 ப்ரோ மாடலில் 6.7 இனஅச் E6 LTPO டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    சியோமி 13 ப்ரோ மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் லெய்கா பிராண்டிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: Onleaks

    • ஆப்பிள் நிறுவத்தின் ஆப்பிள் வாட்ச் மாடல் சர்வதேச ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிகம் விற்பனையாகி வருகிறது.
    • ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ள பாதுகாப்பு அம்சம் பற்றிய உண்மை சம்பவங்கள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன.

    ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அதனை அணிந்திருப்போர் உயிரை காப்பாற்றியதாக உலகம் முழுக்க ஏராளமான சம்பவங்கள் நடைபெறுவதாக வழக்கமான ஒன்று தான். அந்த வரிசையில், இந்தியாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்த ஒருத்தர் 150 அடி ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் 7 மூலம் அவரது குடும்பத்தார் அவரை மீட்டுள்ளனர்.

    இந்திய இளைஞர் ஸ்மித் மேத்தா என்பவர் ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவரை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் அவரை மீட்க உதவி இருக்கிறது. மிகவும் கோரமான ஆபத்தில் சிக்கி, ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவத்தை அந்த இளைஞர் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தார்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மித் மேத்தா தான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். மழை பெய்து கொண்டிருந்த போது அவர் தனது நண்பர்களுடன் மலை ஏற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இவருடன் மூன்று நண்பர்கள் சென்று இருந்தனர். மலை ஏற்றம் முடிந்து திரும்பி கொண்டிருந்த போது பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விட்டார்.

    எனினும், கீழே விழும் போது மரம் மற்றும் பாறை மீது விழுந்ததில் எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்து இருக்கிறார். கடுமையான வலியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை அவரது நண்பர்கள் அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியுடன் காப்பாற்றினர். பின் காயமுற்ற இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்தமைக்காக டிம் குக், ஸ்மித் மேத்தாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • அந்த வகையில் ரியல்மி நறுவனம் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்குவதும் உறுதியாகி இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் துணை தலைவர் சு குய் விரைவில் அறிமுகமாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிவித்து இருக்கிறார்.

    GT சிரிஸ் துவங்கி ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சீரிஸ்களின் மேம்பட்ட வெர்ஷன், முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் இடம்பெற்று இருக்கும். இதுதவிர புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் இனி ஒவ்வொரு ஆண்டும் இரு GT நியோ சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யவும் ரியல்மி தட்டமிட்டுள்ளது.

    இதோடு இரண்டு நம்பர் சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ரியல்மி ஈடுபட்டு வருகிறது. இதில் ஒரு மாடல் ஆண்டின் மத்தியிலும், மற்றொரு மாடல் ஆண்டு இறுதியிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் வழக்கமான GT சீரிஸ் மாடல் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இவை தவிர புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை பட்ஜெட் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வருவது உறுதியாகி இருக்கிறது. எனினும், இந்த மாடல் எப்போது வெளியாகும் என்பது பற்றி ரியல்மி அதிகாரி எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் ரியல்மியின் ஃபோல்டபில் போன் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது.
    • ஜியோ நிறுவனம் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தார் பயணம் செய்ய திட்டமிடுவோருக்கு இந்த சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா பயணம் செய்ய இருக்கும் கால்பந்து ரசிகர்களுக்காக இந்த ரோமிங் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு ஏற்ப சிறந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளை வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து வாங்கிடலாம்.

    புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளின் விலை ரூ. 1,122 என துவங்குகிறது. ஜியோ ரூ. 1122 ரோமிங் சலுகை ஐந்து நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும், டேட்டாவுக்கான கட்டணம் மாறிவிடும்.

    ஜியோ ரூ. 1599 சலுகை 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 150 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், இன்கமிங் அழைப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புகளுக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறிவிடும்.

    ஜியோ ரூ. 3 ஆயிரத்து 999 ரோமிங் சலுகையில், 250 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான வாய்ஸ் கால், 250 நிமிடங்கள் இன்கமிங் அழைப்புகள், 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 5 ஆயிரத்து 122 சலுகையில் 5 ஜிபி டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    ரூ. 6 ஆயிரத்து 799 ஜியோ ரோமிங் சலுகையில் 500 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், 500 நிமிடங்களுக்கு இன்கமிங் அழைப்புகள், 5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறி விடும். 

    ×