என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிசை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்தது.
    • புதிய ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED பேனல் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஐபோன் 14 வாங்க திட்டமிடுகின்றீர்கள் எனில், இந்த சலுகையை தவற விடாதீர்கள். ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தலான வங்கி சலுகைகள் மற்றும் எக்சேன்ஜ் ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி இரு சலுகைகளை சேர்த்து ஐபோன் 14 வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை சேமிக்க முடியும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய ஐபோன் 14 விலை ரூ. 79 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஐபோன் 14 மாடலின் 128 ஜிபி வேரியண்டிற்கானது ஆகும். இதுதவிர ஐபோன் 14 வாங்கும் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய ஐபோன் வைத்திருப்போர் இந்த தொகையை முழுமையாக செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

    தற்போது ஐபோன் 14 விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 79 ஆயிரத்து 900 ஆகும். ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஐபோன் வைத்திருப்பவர்கள் ஐபோன் 14 விலையை மேலும் குறைக்க முடியும். ஐபோன் 11 மாடலை எக்சேன்ஜ் செய்யும் போது ப்ளிப்கார்ட் ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அந்த வகையில் இரு சலுகைகளை சேர்த்தால் ஐபோன் 14 விலை ரூ. 19 ஆயிரம் வரை குறைந்துவிடும்.

    இதோடு ஐபோன் 12 வைத்திருப்பவர்கள் அதனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இரு சலுகைகளை சேர்த்தால் ஐபோன் 14 விலையில் ரூ. 24 ஆயிரம் வரை குறையும். எனினும், எக்சேன்ஜ் சலுகைக்கு பழைய ஐபோன் சீராக வேலை செய்யும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

    ஐபோன் 14 அம்சங்கள்:

    ஆப்பிள் ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம், ப்ளூடூத், ஜிபிஎஸ், லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ அவ்வப்போது சலுகைகளை மாற்றி வருகிறது.
    • நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளிலும் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை முழுமையாக நீக்கிவிட்டது. அக்டோபர் மாதத்தில் இருந்தே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை நீக்க துவங்கியது. இதில் முதற்கட்டமாக ரூ. 499 மற்றும் ரூ. 601 சலுகைகள் நீக்கப்பட்டன.

    இதை அடுத்து இரு சலுகைகளில் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 1,499 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த இரு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இரு சலுகைகளும் ரிலையன்ஸ் ஜியோ வலைதளத்தில் காணப்படவில்லை. இவை மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் தளங்களிலும் பட்டியலிடப்படவிவல்லை.

    அந்த வகையில், இரு சலுகைகளும் சத்தமின்றி நீக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 399, ரூ. 419, ரூ. 499, ரூ. 583, ரூ. 601, ரூ. 783, ரூ. 799, ரூ. 1099 மற்றும் ரூ. 1199 விலை சலுகைகளை நீக்கியது. இவை அனைத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவுக்கு போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) தொடர்ந்து இந்த சேவைகள் அடங்கிய சலுகைகளை வழங்கும் நிலையில், ஜியோ ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தற்போதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் சேவைகள் வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகின்றன.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான வியாகாம் 18 கைப்பற்றி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப முடியாது என்பதால், ஜியோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது.

    • இந்திய டெலிகாம் சந்தையில் புதிய தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி வெளியிடப்பட்டு வருகின்றன.
    • முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

    இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக வி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி வி எந்த தகவலையும் வழங்கவில்லை.

    • எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • மேலும் ட்விட்டர் தளத்தில் ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் எலான் மஸ்க் தனது ஊழியர்கள் தன்னை கேள்வி எழுப்புவதை விரும்பவில்லை என்பது வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏராளமானோர் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், பொறியாளராக பணியாற்றி எரிக் ஃபிரான்ஹோஃபர்-ஐ மட்டும் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் வைத்து பணிநீக்கம் செய்து இருக்கிறார்.

    பொது வெளியில் எலான் மஸ்க்-இடம் வாக்குவாதம் செய்த காரணத்தால் எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். ட்விட்டரில் வாக்குவாதம் செய்த எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, எலான் மஸ்க் ட்விட்டரிலேயே தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது. பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட்-ஐ அவர் அழித்து விட்டார்.

    "பெரும்பாலான நாடுகளில் ட்விட்டர் மிக மோசமாக செயல்படுவதற்கு மன்னிக்கவும். செயலி மிக மோசமாக பேட்ச் செய்யப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட RPC-க்களால் ஹோம் டைம்லைனை ரெண்டர் செய்ய இயலவில்லை" என எலான் மஸ்க் ட்விட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த எரிக், "நான் ஆறு ஆண்டுகளாக ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பணியாற்றி வருகிறேன், இது பொய் என்பதை என்னால் கூற முடியும்." என பதில் அளித்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மற்றும் எரிக் இடையே ட்விட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடையே பொது மக்களும் எலான் மஸ்க் உடன் இணைந்து எரிக் பொது வெளியில் வாக்குவாதம் செய்வது தவறு என கருத்து தெரிவித்தனர். இது தொடர்பான வாக்குவாதத்தில் எலான் மஸ்க் அளித்த பதில் ஒன்றில் எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட் மூலம் அறிந்து கொண்ட எரிக், அதற்கு சல்யுட் அடிக்கும் எமோஜியை பதிலாக பதிவிட்டார். 41 வயதான எரிக் கடந்த எட்டு ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின் இது பற்றி ஃபோர்ப்ஸ்-க்கு எரிக் பேட்டி அளித்து இருக்கிறார். அதில், "எனது லேப்டாப் ஷட் ஆஃப் ஆகி விட்டது தற்போது, அதனை என்னால் இயக்க முடியவில்லை." என்று தெரிவித்து இருக்கிறார்.

    "நிறுவனத்திற்குள் யாரும் யாரையும் நம்புவதில்லை. எப்படி உங்களால் செயலாற்ற முடியும்? ஊழியர்கள் புதிய நிர்வாகத்தை நம்பவில்லை. நிர்வாகமும் ஊழியர்களை நம்பவில்லை. இந்த சூழலில் எப்படி வேலை பார்க்க முடியும்? இதன் காரணமாக தான் ப்ரோடக்‌ஷன் தடைபடுகிறது, துணை தலைவர்களின் அனுமதி இன்றி பணியை மேற்கொள்ள முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்.
    • முன்னதாக ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.

    தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் வரும் நாட்களில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அதிரடியாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. நிர்வாக சீரமைப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட காரணங்களை சொல்லி இந்த நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.

    இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் பணிநீக்க நடவடிக்கை இந்த வாரத்தில் இருந்தே துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 ஆயிரம் பேர் என்பது மூன்று சதவீதம் தான் என கூறப்படுகிறது.

    சர்வதேச அளவில் அமேசான் நிறுவனத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அமேசான் சாதனங்கள், அலெக்சா, சில்லறை பிரிவு மற்றும் மனிதவளங்கள் துறை உள்ளிட்ட பிரிவுகளில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கடந்த சில வாரங்களாக ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது. ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஒட்டுமொத்த ஊழியர்களில் 13 சதவீதம் அதாவது 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

    அமேசானில் பணிநீக்க நடவடிக்கை தொடர்பான தகவல் வெளியாகும் முன்பு தான் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது வாழ்நாள் முடிவதற்குள் ரூ. 10 லட்சத்து 04 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான தொகையை நன்கொடையாக வழங்க விரும்புவதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.  

    • எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து அந்நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
    • முன்னதாக ட்விட்டர் புளூ சந்தாவுடன் எவ்வித வெரிபிகேஷன் இன்றி புளூ டிக் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான் மஸ்க் கடந்த வாரம் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். பணி நீக்கம் பற்றிய முழு விவரங்களை ட்விட்டர் இதுவரை வெளியிடவில்லை.

    இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்களில் பலரை பணிநீக்கம் செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட பணிநீக்க நடவடிக்கையில் 4 ஆயிரத்து 400-இல் இருந்து அதிகபட்சம் 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என கூறப்படுகிறது.

    இம்முறை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த விதமான தகவலோ அல்லது அறிவிப்போ முன்கூட்டியே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களில் பலர் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் செய்வதற்கு முன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அலுவல்பூர்வ மின்னஞ்சல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    ட்விட்டரில் ஊழியர்களை பணியமர்த்த ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனத்திற்கும் பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடைசி நேரத்தில் அனுப்பப்பட்டதாக கூறுப்படுகிறது. இதோடு பணிநீக்கம் ட்விட்டர் நிறுவனத்தின் "சேமிப்பு மற்றும் மறுமதிப்பீடு" நடவடிக்கையின் அங்கமாக நடத்தப்பட்டதாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் கடைசி பணி நாள் நவம்பர் 14 என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் சாதனங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் என எட்டு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கைாயளர்கள் அதிவேக 5ஜி நெட்வொர்கில் இணைந்து கொள்ள முடியும். எனினும், இதற்கு மைஜியோ செயலியில் இன்வைட் பெற்று இருப்பது அவசியம் ஆகும்.

    டிசம்பர் 2023-க்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது. ஜியோ பயனர்கள் தங்களின் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். புதிய தலைமுறை 5ஜி சேவைகளை பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிறப்பு அறிமுக சலுகையை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு 5ஜி சேவையை 500Mbps முதல் 1Gbps வேகத்தில் பயன்படுத்த முடியும்.

    மைஜியோ செயலியில் 5ஜி-யை பயன்படுத்துவதற்கான நோட்டிபிகேஷன் வைத்திருப்பவர்கள், தங்களின் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    - முதலில் ஸ்மார்ட்போனின் "செட்டிங்ஸ்" செல்ல வேண்டும்

    - அடுத்து "மொபைல் நெட்வொர்க்" அல்லது இதே போன்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இனி ஜியோ சிம் ஆப்ஷனில் "பிரெஃபர்டு நெட்வொர்க் டைப்" ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இதில் 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற ஆப்ஷன்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதில் 5ஜி-யை தேர்வு செய்ய வேண்டும்.

    ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்-இல் 5ஜி நெட்வொர்க்-ஐ தேர்வு செய்ததும், ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 5ஜி தெரியும். இனி வழக்கம் போல் மொபைல் டேட்டாவில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.

    தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெற புது சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய 4ஜி சிம் கொண்டு புதிய நெட்வொர்க்கில் இணைய முடியும்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் அவ்வப்போது அதிரடி சலுகைகளை வழங்குவர்.
    • தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மினி மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஐபோன் வாங்கும் திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம். முன்னணி ஆன்லைன் வலைதளமான ப்ளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது. அனைத்து விதமான தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கி சலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூ. 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும்.

    128 ஜிபி ஐபோன் 13 மினி மாடல் ரூ. 64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 9 ஆயிரத்து 910 தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் ஐபோன் 13 மினி விலை ரூ. 54 ஆயிரத்து 990 என மாறி விடும். இத்துடன் ஐபோன் 13 மினி மாடலுக்கு வங்கி சலுகைகள் மற்றும் எக்சேன்ஜ் ஆஃபர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு ரூ. 20 ஆயிரத்து 500 வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளையும் சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 13 மினி விலை ரூ. 34 ஆயிரத்து 490 என மாறிவிடும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக், ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் OLED 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்டு பாதுகாப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஏ15 பயோனிக் பிராசஸர், 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரிஸ ஐஒஎஸ் 16, IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் சில சலுகைகளை அதிரடியாக நீக்கியது.
    • நீக்கிய சலுகைகளுக்கு மாற்றாக சிலவற்றை ஏர்டெல் மாற்றியமைத்து வருகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. முன்னதாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பலன்களை மாற்றியமைத்து மீண்டும் அதே விலையில் அறிவித்து வருகிறது.

    ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையில் தினமும் 1ஜிபி டேட்டா, 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. பின் இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏர்டெல் ரூ. 199 சலுகையில் தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி, 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச ஹெலோ டியூன்ஸ், வின்க் மியூசிக் சந்தா, உள்ளூர் எஸ்எம்எஸ் ரூ. 1, எஸ்டிடி எஸ்எம்எஸ் ரூ. 1.5 பைசாவுக்கு வழங்கப்படுகிறது.

    நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் 1MB-க்கு ரூ. 50 பைசா வசூலிக்கப்படும். மொத்தத்தில் 300 எஸ்எம்எஸ் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. எனினும், இது தினமும் அதிகபட்சம் 100 ஆகவே நிர்ணயம் செய்யப்பட்டு உளள்ளது. சலுகை தீர்ந்ததும், அதன் பலன்கள் தானாகவே காலாவதியாகி விடும். 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • தீபாவளி பண்டிகை துவங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக தசரா பண்டிகை காலத்தில் நாட்டின் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பீட்டா வெளியீடு நடைபெற்று வந்தது.

    பீட்டா சோதனை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் வெளியிடப்பட்டது. பின்னர் தீராவளி சமயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாராவில் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட்டன. எனினும், ஜியோ பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த "ஜியோ வெல்கம் ஆஃபர்"-க்கான இன்வைட் பெற காத்திருக்க வேண்டும். இவ்வாறு இன்வைட் செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.

    முந்தைய அறிவிப்புகளை போன்றே இம்முறையும், வெளியீட்டுக்கு எந்த விதமான கட்டணங்களும் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை. "ஜியோ ட்ரூ 5ஜி சேவை இந்த இரு தொழில்நுட்ப நகரங்களில், இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, மனித குலத்திற்கு சில அதிநவீன தொழில்நுட்பங்களின் உண்மை திறனை உணர செய்யும்." என ஜியோ வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ட்ரூ 5ஜி சேவைகளின் வெளியீடு இந்தியாவில் படிப்படியாக நடைபெறும் என ஜியோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது ஜியோ ட்ரூ 5ஜி சேவையில் பயனர்கள் 500 Mbps முதல் அதிகபட்சம் 1 Gbps வேகத்தில் இணைய சேவைகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து உள்ளது.

    • ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பெருமளவு மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மேலும் ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும் முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் அமலுக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமின்றி புதிய ட்விட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. தற்போது புதிய புளூ சந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக ட்விட்டர் புளூ சந்தாவுக்கான விலை மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது அறிமுக சலுகை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஐஒஎஸ்-இல் ஏற்கனவே ட்விட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்கள் புதிய விலைக்கு அப்டேட் செய்து கொண்டால் புளூ செக்மார்க் வழங்கப்படும்.

    ஆண்ட்ராய்டு மற்றும் வெப் பயனர்களின் புளூ சந்தாவை அவர்களாகவே ரத்து செய்து கொள்ளலாம். மாறாக ட்விட்டர் தரப்பில் பயனர்களுக்கு தகவல் கொடுத்த பின் சேவை ரத்து செய்யப்படும். புது மாற்றங்களின் பழைய ட்விட்டர் விதிகளின் கீழ் வெரிபைடு புளூ செக்மார்க் பெற்றவர்கள் மற்றும் புதிய புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்றவர்கள் என இரண்டு புளூ செக்மார்க்குகள் உள்ளன.

    ட்விட்டர் புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்ற அக்கவுண்ட்களில், புதிய ட்விட்டர் விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது போன்று எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவுகளை முன்கூட்டிய ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
    • எனினும், இந்த வசதி அனைவரும் பயன்படுத்தும் பொதுவான அக்கவுண்ட்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    இன்ஸ்டாகிராம் சேவையில் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை பயனர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களாகவே பதிவுகளை வெளியிடும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பலர் மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தி பதிவுகளை ஷெட்யுல் செய்து வந்தனர்.

    இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள புரோபஷனல் அக்கவுண்ட்ஸ்-களுக்கு மட்டும் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய அம்சம் ஒருவழியாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெட்டா, ட்விட்டர், டிக்டாக் மற்றும் யூடியூப் என பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் தானாக பதிவு செய்ய வைக்கும் ஷெட்யுல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பதிவுகளை ஷெட்யுல் செய்வதோடு, மெட்டா கிரியேட்டர் ஸ்டூடியோ மூலமாகவும் ஷெட்யுல் செய்ய முடியும்.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று போஸ்ட் ஷெட்யுல் அம்சம் ப்ரோபஷனல் பயனர்கள், அதாவது கிரியேட்டர் மற்றும் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் கொண்டு பயனர்கள், போட்டோ, ரீல்ஸ் மற்றும் கரௌசல் போஸ்ட்களை அதிகபட்சம் 75 நாட்களுக்கு முன்பே ஷெட்யுல் செய்யலாம்.

    பதிவுகளை ஷெட்யுல் செய்ய, வழக்கம் போல் பதிவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் போஸ்ட் செய்யும் முன் "அட்வான்ஸ்டு செட்டிங்ஸ்" ஆப்ஷனில் "ஷெட்யுல் திஸ் போஸ்ட்" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி எந்த தேதி மற்றும் நேரத்தில் குறிப்பிட்ட போஸ்ட் வெளியாக வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

    ×