என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
    • முன்னதாக உலக நாடுகளில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    எலான் மஸ்க்-இன் சமூக வலைதளமான ட்விட்டர், சில வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு "Official" லேபல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அடங்கும். இந்த வழிமுறை புதிய 8 டாலர்கள் சந்தா முறை அமலுக்கு வரும் போது பயன்பாட்டுக்கு வரும். ட்விட்டரில் எட்டு டாலர்கள் சந்தா முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ட்விட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் பிரிவு அதிகாரி எஸ்தர் கிராஃபோர்டு ட்விட்டர் புளூ சந்தா முறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை பயனர்களுக்கு வெரிபைடு புளூ டிக் வழங்கும். இவ்வாறு வழங்கும் போது எந்த விதமான சோதனையும் மேற்கொள்ளப்படாது. இந்த வழிமுறைக்கு பலரும் எதிர்ப்பு மற்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    முன்னதாக வெரிபை செய்யப்பட்டு புளூ டிக் பெற்று இருக்கும் அக்கவுண்ட்களுக்கு புதிய "Official" லேபெல் வழங்கப்படாது. எனினும், இதனை பணம் கொடுத்து வாங்கிட முடியாது. இந்த லேபெல் முதன்மையாக அரசாங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரங்கள், முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் சில பொது நபர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது. 

    • ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடாதது பற்றி சாம்சங் சமீபத்தில் கேலி விளம்பரம் வெளியிட்டு இருந்தது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபில் ஐபோன் பற்றிய விவரங்கள் பல ஆண்டுகளாக வெளியாகி வந்தன.

    மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடவில்லை என்பதை கூறி ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்யும் வகையில் சாம்சங் சமீபத்தில் தான் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. இதற்கு ஆப்பிள் தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும், சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

    சீனர் உருவாக்கிய போல்டபில் ஐபோன் மாடல் ஐபோன் V என அழைக்கப்படுகிறது. இது ஒரு கிளாம்ஷெல் வகையிலான போல்டபில் போன் ஆகும். மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய வீடியோ சீனாவை சேர்ந்த வீடியோ தளமான பிலிபிலியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஏராளமான பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதன்படி கேலக்ஸி Z ப்ளிப் மற்றும் மோட்டோ ரேசர் போன்ற மாடல்களில் இருப்பதை போன்று ஐபோனில் உள்ள பாகங்களை இரண்டாக பிரித்து அவற்றை ஒன்றாக இணைத்துள்ளார். போனின் கீழ்புறத்தில் மதர்போர்டு, ரேம், மெமரி போன்ற பாகங்களும், மேல்பாதியில் பேட்டரி, கேமரா சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

    நீண்ட கால உழைப்பின் பலனாக இந்த மடிக்கக்கூடிய ஐபோனை சீனர் உருவாக்கி இருக்கிறார். எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. இவர் உருவாக்கி இருக்கும் போல்டபில் ஐபோனில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், கேமரா மற்றும் இதர அம்சங்கள் உள்ளன. மேலும் இவை அனைத்தும் சீராக இயங்குகின்றன.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • புது பிஎஸ்என்எல் பைபர் பிராட்பேண்ட் சலுகையின் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலை பிராட்பேண்ட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது பழைய பெயரில் கிடைக்கும் புது சலுகை ஆகும். ரூ. 499 சலுகை பிஎஸ்என்எல் பைபர் சேவையின் பேசிக் திட்டம் ஆகும். முன்னதாக இந்த சலுகை ரூ. 449 விலையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 449 பிஎஸ்என்எல் சலுகை அதே பலன்களுடன் வேறு பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய ரூ. 499 சலுகை தற்போது பிஎஸ்என்எல் பைபர் பேசிக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பழைய ரூ. 449 சலுகை பைபர் பேசிக் நியோ என அழைக்கப்படுகிறது. இரு சலுகைகளும் வழங்கப்படும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலையில் பிராட்பேண்ட் சலுகையை வழங்கி வந்துள்ளது. எனினும், கடந்த சில காலமாக இந்த சலுகை நீக்கப்பட்டு இருந்தது.

    தற்போது பிஎஸ்என்எல் ரூ. 499 சலுகையில் 40Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இத்துடன் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் தள்ளுபடி, அதிகபட்சம் ரூ. 500 வரை தள்ளுபடி பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் ரூ. 449 பைபர் பேசிக் நியோ சலுகையில் முன்பை போன்றே 30Mbps வேகத்தில் மாதம் 3.3TB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இரு சலுகைகள் தவிர பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 775 மற்றும் ரூ. 275 போன்ற சலுகைகளை விரைவில் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு சலுகைகளும் சுதந்திர தினத்தை ஒட்டி விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டவை ஆகும்.

    • மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 30 அல்ட்ரா பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை விற்பனை செய்து வருகிறது.
    • புதிய எட்ஜ் 30 அல்ட்ரா 200MP கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 200MP பிரைமரி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா பெற்றது. இந்த நிலையில், மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் மோட்டோ டேஸ் சேலின் அங்கமாக இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. முன்னதாக மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடியுடன் இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இந்த தள்ளுபடி ப்ளிப்கார்ட் மோட்டோ டேஸ் சேல் நிறைவு பெறும் வரை வழங்கப்படுகிறது.

    மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்:

    மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.73 இன்ச் பன்ச் ஹோல் கொண்ட OLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், HDR10+, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 125 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP டெலிபோட்டோ கேமரா, 60MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஒப்போ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    • முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஒப்போ நிறுவனம் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்து இருந்தது.

    ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருந்தது. புதிய பாஸ்ட் சார்ஜிங் வசதியை ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு சந்தைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ரெனோ 9 சீரிஸ் மற்றும் ஒப்போ ஃபைண்ட் X6 சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் எந்த ஸ்மார்ட்போன்களில் இத்தகைய பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    டிப்ஸ்டரான அபிஷேக் யாதவ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஒப்போ நிறுவனம் 240 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக இந்த தொழில்நுட்பத்தை ஒப்போ இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த தொழில்நுட்பம் கொண்டு 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

    முற்றிலும் புதிய 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி எந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒப்போ ரெனோ 9 சீரிசில் - வென்னிலா ஒப்போ ரெனோ 9, ஒப்போ ரெனோ 9 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 32MP செல்பி கேமரா, 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    • இந்திய சந்தையில் பண்டிகை கால விற்பனை குறித்து சாம்சங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
    • பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பண்டிகை காலத்தை ஒட்டி அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தன.

    சாம்சங் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இடைவெளியில் மட்டும் ரூ. 14 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 2022 ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் 99 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

    வருடாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, ஜனவரி முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சாம்சங் நிறுவன 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை 178 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விற்பனை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    "சாம்சங் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு பண்டிகை காலம் சிறப்பாக அமைந்து இருக்கிறது. செப்டம்பர் 1 துவங்கிய 60 நாட்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 14 ஆயிரத்து 400 கோடி வருவாய் கிடைத்துள்ளது," என சாம்சங் இந்திய மூத்த இயக்குனர் மற்றும் விளம்பர பிரிவு தலைவர் ஆதித்யா பாபர் தெரிவித்துள்ளார்.

    இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் பெருமளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் சேவை காரணமாக இந்த அளவுக்கு விற்பனை நடைபெற்று இருக்கிறது என்றும், பண்டிகை காலத்தில் மட்டும் இந்த தளத்தில் பரிவர்த்தனைகள் 10 லட்சத்தை கடந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "கேலக்ஸி S22 மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களால் இந்திய சந்தையில் வேகமாக வளரும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை சாம்சங் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ரூ. 30 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை 99 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது," என்று பாபர் தெரிவித்து இருக்கிறார்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
    • ஐபோன் 14 சீரிசில் மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் டாப் எண்ட் மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 சீரிசில் விலை உயர்ந்த மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், டிசைனர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அதன் விலை காரணமாக ஆடம்பர பொருளாக மாறி இருக்கிறது.

    டிசைனர்கள் உருவாக்கி இருக்கும் புது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் பின்புறத்தில் ரோலெக்ஸ் டேடோனா வாட்ச் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆடம்பர ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களை உருவாக்கி வரும் கேவியர் நிறுவனம் புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்-ஐ ஆடம்பர பொருளாக மாற்றியுள்ளது. இதன் விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 250 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்து 444 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை 128 ஜிபி மாடலுக்கானது ஆகும்.

    இதன் 256 ஜிபி விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 580 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரத்து 550 என்றும் 512 ஜிபி விலை 1 லட்சத்து 35 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 41 ஆயிரத்து 347 என்றும் 1 டிபி மாடல் விலை 1 லட்சத்து 35 ஆயிரத்து 420 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 77 ஆயிரத்து 092 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் பின்புறம் PCD கோட்டிங், ரோலெக்சில் பிளாக் டயல்கள், கேஸ் மற்றும் பிரேஸ்லெட்கள் உள்ளன. இந்த ஐபோனின் பின்புறம் ரோலெக்ஸ் காஸ்மோகிராப் டேடோனா வாட்ச் உள்ளது. இதில் 40mm எல்லோ கோல்டு வாட்ச் பேஸ் மற்றும் டைமண்ட் அக்செண்ட்கள் உள்ளன.

    • நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை அறிமுகம் செய்தது.
    • அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) விலை இந்தியாவில் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இயர் (ஸ்டிக்) ட்ரூ வயர்லெஸ் இயர்போனை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த ஆடியோ சாதனம் ஆகும். எனினும், நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி சலுகை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. நத்திங் நிறுவன ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நவம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கும் லிமிடெட் சேலின் போது இந்த சலுகை தானாக செயல்படுத்தப்பட்டு விடும். இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே அரிவிக்கப்பட்டுளள்ளது. அந்த வகையில் ஓபன் சேல் துவங்கும் நவம்பர் 17 ஆம் தேதியில் இருந்து இந்த சலுகையை பெற முடியாது.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஹால்ஃப்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் இயர் ஒவ்வொன்றிலும் 12.6mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த இயர்போன் AAC மற்றும் SBC கோடிங் சப்போர்ட், பேஸ் லாக் ஆப்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    இத்துடன் ப்ளூடூத் 5.2, IP54 சான்று, இன்-இயர் ரெகக்னிஷன், கூகுள் பாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், நத்திங் X செயலி, கஸ்டமைஸ் EQ மற்றும் மோஷன்ஸ், லோ லேக் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் சமீபத்தில் தான் போஸ்ட்பெயிட் பிரிவில் ரெட்எக்ஸ் சலுகைகளை நீக்கியது.
    • தற்போது போஸ்டபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைக்கும் பணிகளில் வி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    வி (வோடபோன் ஐடியா) சமீபத்தில் தனது ரெட்எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகள் அனைத்தையும் திடீரென நிறுத்தியது. தனது போஸ்ட்பெயிட் சலுகை பலன்களை சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மாற்ற வி முடிவு செய்து இருக்கிறது.

    அந்த வரிசையில் வோடபோன் ஐடியா நிறுவனம் வி மேக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. புதிய வி மேக்ஸ் சலுகைகளின் விலை ரூ. 401-இல் இருந்து துவங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பலன்களின் விலை ரூ. 401-இல் இருந்து துவங்குகிறது.

    பெயருக்கு ஏற்றார் போல் புதிய வி மேக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகளில் அதிக ஒடிடி பலன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இத்துடன் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை வழங்கப்டுகிறது. வி மேக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகளுடன் அதிக டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் சேவைகளுக்கு ஏற்ப கட்டணத்தை சிறப்பாக கையாள முடியும்.

    வி மேக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகைகளில் தற்போது ரூ. 401 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1101 வரை கட்டணங்களில் நான்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் அன்லிமிடெட் காலிங், இலவச ரோமிங், மாதாந்திர எஸ்எம்எஸ் மற்றும் ஒடிடி பலன்கள் வழங்கப்படுகின்றன. போஸ்ட்பெயிட் சலுகை கட்டணத்திற்கு ஏற்ப ஒடிடி பலன்கள் மட்டும் வேறுபடும்.

    வி மேக்ஸ் ரூ. 401 போஸ்ட்பெயிட் சலுகையில் மாதம் 50 ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஒவர் வசதி வழங்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை தினசரி டேட்டா அளவில் எவ்வித பாரபட்சமுமின்றி இணைய சேவைகளை பயன்படுத்தலாம். இத்துடன் மாதம் 3000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 599 மதிப்புள்ள 12 மாத சோனி லிவ் சேவை கிடைக்கும்.

    ரூ. 501 வி மேக்ஸ் சலுகையில் மாதம் 90 ஜிபி டேட்டா, 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் வசதி வழங்கப்படுகிறது. இதில் எஸ்எம்எஸ் மற்றும் காலிங் பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் ஆறு மாதங்களுக்கான இலவச அமேசான் பிரைம் வீடியோ சந்தா, விளம்பர இடைவெளி இல்லா ஹங்காமா மியூசிக், ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.

    வி மேக்ஸ் ரூ. 701 சலுகையில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் மாதம் 3000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா, ஆறு மாதங்களுக்கு தி வால் ஸ்டிரீட் ஜர்னல் டிஜிட்டல் அக்சஸ், விளம்பர இடைவெளி இல்லா ஹங்காமா மியூசிக், ஆயிரத்திற்கும் அதிக கேம்கள் வழங்கப்படுகிறது.

    வி மேக்ஸ் பிரிவில் விலை உயர்ந்த சலுகை ரூ. 1101 ஆகும். இதில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் காலிங், மாதம் 3000 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம் நச்தா, 12 மாதங்களுக்கு சோனி லிவ் சந்தா, 12 மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலைய லாஞ்ச்களில் நான்கு முறை இலவச பயன்பாடு, விமான முன்பதிவுகளுக்கு 6 முதல் 10 சதவீதம் அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி, மேக்மை ட்ரிப் மூலம் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரூ. 2 ஆயிரத்து 999 மதிப்புள்ள சர்வதேச ரோமிங் பேக், ஒரு வருடத்திற்கு தி வால் ஸ்டிரீட் ஜர்னல் டிஜிட்டல் சந்தா, 5 கோல்டு கேம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேம்களை விளையாடும் வசதி, விளம்பர இடைவெளி இல்லா ஹங்காமா மியூசிக் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    • மத்திய அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்தியாவில் எப்போது 4ஜி சேவைகள் வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பிஎஸ்என்எல் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

    பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் 4ஜி வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை கொண்டு 4ஜி சேவைகள் எப்போது வெளியிடப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிட பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருகிறது.

    எனினும், 4ஜி வெளியீட்டில் பிஎஸ்என்எல் ஏராளமான தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. எனினும், எப்போது 4ஜி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டர் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் இந்தியா-வை ட்விட்டரில் டேக் செய்து பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். இவரது கேள்விக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, "சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான காரியம். இதற்கு தேவையான தொழில்நுட்ப உபரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்து இருக்கிறது. 

    • ட்விட்டர் தளத்தில் புளூ டிக் பெற விரும்புவோர் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
    • ட்விட்டர் புளூ சேவைக்கான கட்டண விவரங்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

    ட்விட்டர் தளத்தில் ஏற்கனவே உள்ள ட்விட்டர் புளூ சந்தா முறைக்கு கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் பலன்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதன்படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கு கொடுக்கும் கட்டணத்தில் "புளூ டிக்" வெரிபிகேஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது. வெரிபிகேஷன் வழங்க ஒவ்வொரு மாதமும் 20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. எனினும், தற்போது இந்த கட்டணம் 8 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 660 ஆகும்.

    ட்விட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தும் போது ட்விட்டர் பயனர்களுக்கு புளூ டிக் உள்பட நான்கு பலன்கள் கிடைக்கும். ட்விட்டரில் வருவாய் ஈட்டும் முறையில் விளம்பரதாரர்களை மட்டும் சார்ந்திருக்க முடியாது. ட்விட்டரில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை மோசமானது, கட்டணம் ஒவ்வொரு நாடுக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    புளூ டிக் மட்டுமின்றி ட்விட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வருவதில் பாதி விளம்பரஙகள் மட்டுமே வழங்கப்படும். மேலும் இவர்களால் நீண்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோவை பதிவேற்ற முடியும்.

    ட்விட்டர் புளூ சந்தா பலன்கள்:

    புளூ கட்டணம் மாதம் 8 டாலர்கள்

    ரிப்ளை, மென்ஷன் மற்றும் சர்ச்களில் முக்கியத்துவம்

    நீண்ட வீடியோ, ஆடியோ பதிவேற்றும் வசதி

    பாதி விளம்பரங்கள்

    பப்லிஷர்களுக்கு பேவால் பைபாஸ் வசதி

    புளூ அக்கவுண்ட் ஸ்பேம்/ஸ்கேம் செய்தால் அக்கவுண்ட் உடனடியாக நீக்கப்படும்

    • மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார்.
    • தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார்.

    ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார்.

    ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

    தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    இந்நிலையில், ட்விட்டர் புளூ டிக் சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 8 டாலர்கள் என எலாம் மஸ்க் அறிவித்துள்ளார்.

    ×