என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps
கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 145 செயலிகளில் தீங்கிழைக்கும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-இல் இயங்கக்கூடிய ஃபைல்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை கூகுளிடம் தெரிவிக்கப்பட்டதால், இவை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. மால்வேர் தவிர, இந்த செயலிகள் ஆன்ட்ராய்டு மொபைல் இயங்குதளத்துக்கு தீங்கிழைக்காதவை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீங்கிழைக்கக்கூடிய விண்டோஸ்-இல் இயங்கும் இந்த பைனரிக்கள், மற்ற தளங்களில் இயங்காது என்பதால், இவை ஆன்ட்ராய்டு தளத்தில் தீங்கிழைக்க முடியாது.
இதுபோன்ற செயலிகளை டெவலப்பர்கள் மால்வேர் நிறைந்த விண்டோஸ் சிஸ்டம்களில் உருவாக்குவதாலேயே இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே டெவலப்பர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பாதிக்கப்பட்ட செயலிகள் மற்றும் பாதிப்பு இல்லாத செயலிகள் என இரண்டையும் வழங்குகின்றனர்.
இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், பாதிக்கப்பட்ட செயலிகள் அக்டோபர் 2017 முதல் நவம்பர் 2017 வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை பிளே ஸ்டோரில் ஆறு மாதங்களுக்கும் மேல் இருந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட செயலிகளில் சிலவற்றை சுமார் 1000-க்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட செயலிகளில், ஒரு ஏ.பி.கே. ஃபைலில் அதிகளவு தீங்கிழைக்கும் பி.இ. ஃபைல்கள் வெவ்வேறு லொகேஷன்களில், வெவ்வேறு பெயர்களில் இருக்கும். முக்கியமான இரண்டு பி.இ. ஃபைல்கள் பாதிக்கப்பட்ட அனைத்து செயலிகளிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று இந்த செயலிகளால் நேரடியாக ஆன்ட்ராய்டு ஹோஸ்ட்களில் இயங்க முடியாது, எனினும் ஏ.பி.கே. ஃபைல் அன்பேக் செய்யப்பட்டால் இவை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். #GooglePlayStore #Apps
ஆப்பிள் நிறுவன பங்குகள் 207.05 டாலர்கள் அளவில் அதகரித்ததைத் தொடர்ந்து ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Appletrillion
ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு முதல் முறையாக ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் ஐபோன் விற்பனை மூலம் இத்தகைய இலக்கை எட்டியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பங்குகள் 2.8 சதவிகிதம் அதிகரித்து 207.05 டாலர்களில் நிறைவுற்றது. அந்நிறுவனத்தின் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் ஆப்பிள் பங்குகள் அதிகரிக்க துவங்கின.
அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஒரு லட்சம் கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,87,05,50,00,00,000.00) மதிப்பிடப்பட்ட முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது.
2007-ம் ஆண்டு முதல் ஐபோன் விற்பனை துவங்கிய போது, ஆப்பிள் நிறுவன பங்குகள் சுமார் 1,100% அதிகரித்தது. கடந்த ஆண்டு மும்மடங்கு அதிகரித்தது. 1980-ம் ஆண்டு பங்குச் சந்தையில் இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை ஆப்பிள் பங்குகள் மதிப்பு 50,000% அதிகரித்து இருக்கிறது.

1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் காரேஜில் துவங்கிய ஆப்பிள் நிறுவனம், துவக்க காலத்தில் தனது மேக் கம்ப்யூட்டர்களுக்கு பிரபலமாக அறியப்பட்டது. அதன் பின் ஆப்பிள் ஐபோன்கள் அந்நிறுவன பொருளாதாரத்தை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2011-ம் ஆண்டு மரணித்ததைத் தொடர்ந்து டிம் குக் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று நிறுவனத்தின் லாபத்தை இருமடங்கு அதிகரிக்க செய்தார். 2006-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் 2000 கோடி டாலர்கள் வருவாயும், லாபமாக 200 கோடி டாலர்களை பெற்றது.
கடந்த ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவன விற்பனை 11 மடங்கு 22,900 கோடி டாலர்களாக அதிகரித்து, இதன் மொத்த வருவாய் இருமடங்கு அதிகரித்து 4840 கோடி டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பொது வெளியில் அறிவிக்கப்பட்ட, அமெரிக்காவின் அதிக லாபம் பெறும் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. #Appletrillion #Apple
இந்திய மொபைல் போன் விற்பனையில் ஜியோபோன் முதலிடம் பெற்றிருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone
இந்திய மொபைல் போன் சந்தையில் ஜியோபோன் மட்டும் 27% விற்பனையாகி இருக்கிறது. ஃபீச்சர்போன், ஃபியூஷன் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையில் ஜியோபோன் விற்பனை முன்னணி இடத்தில் இருப்பது சமீபத்திய சி.எம்.ஆர். அறிகக்கையில் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் கடந்த வாரம் விற்பனையான நான்கு மொபைல்களில் ஒன்று ஜியோபோன் ஆகும். இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் ஃபீச்சர் போன் சார்ந்ததாக இருக்கிறது. இங்கு ஸ்மார்ட்போன் விற்பனை முன்னணி நிறுவனங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லை. இந்தியாவில் ஜியோபோன் விலை ரூ.1500 என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அதன் வரவேற்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஜியோபோன் வாங்குவோருக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். ஜியோ வீடியோ மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜியோபோனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டது.
ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி 17% வரை அதிகரித்திருக்கிறது, இதே காலகட்டத்தில் ஃபீச்சர்போன் விற்பனை சரிந்திருக்கிறது. ஜியோபோனும் ஃபீச்சர்போனாக கருத முடியும் என்றாலும், அறிக்கையில் இது ஃபியூஷன் போன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் போன்று இருப்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜியோபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், ஜியோபோன் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பிரிவில் ஹூவாய் ஹானர், ஒப்போ ரியல்மி மற்றும் விவோ மாடல்கள் அதிகளவு விற்பனைக்கு வித்திட்டன.
இத்துடன் சாம்சங் தனது முதலிடத்தை இழந்து சியோமி முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் 30 கோடி யூனிட்கள் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone #MobilePhones
ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு விற்பனை அறிக்கையில் சந்தை எதிர்பார்ப்புகளை தவற விட்டிருந்தாலும், கணிசமான லாபம் ஈட்டியிருக்கிறது. #AppleEarnings
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டு விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட அளவு ஐபோன் விற்பனை இல்லை என்றாலும், அதிக விலை கொண்ட மாடல்களால் ஆப்பிள் லாபம் அதிகளவு பாதிக்கப்படவில்லை.
ஜூன் மாதம் வரையிலான காலாண்டு நிலவரப்படி ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 4.13 கோடி ஐபோன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட வெறும் 1% மட்டுமே அதிகம் ஆகும். சராசரியாக ஐபோன் விற்பனை கட்டணம் எதிர்பார்க்கப்பட்ட 694 டாலர்களை விட அதிகமாக இருந்தது. அந்த வகையில் ஐபோன் சராசரி விற்பனை விலை 724 டாலர்களாக இருந்தன.
இந்த காலாண்டிலும் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் X இருந்தது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலை 999 டாலர்கள் விலையில் அறிமுகம் செய்தது. அதிக விலை காரணமாக ஆப்பிள் லாபத்தை இந்த மாடல் அதிகம் பாதிக்காமல் பார்த்து கொண்டது.

இதுதவிர ஆப்பிள் சேவைகளான ஆப் ஸ்டோர், ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் பே உள்ளிட்டவை ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் 31% வரை அதிகரிக்க காரணங்களாக இருந்தன. ஒட்டுமொத்தமாக ஆப்பிள் நிறுவன வருவாய் இதே கட்டத்தில் கடந்த ஆண்டை விட 17% வரை அதிகரித்துள்ளது. அதன்படி ஜப்பானை தவிர மற்ற பகுதிகளில் இருமடங்கு வளர்ச்சியை ஆப்பிள் பதிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவன வளர்ச்சி 2017 இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது 32% அதிகரித்து 1150 கோடி டாலர்கள் லாபம் பெற்றுள்ளது. நியூ யார்க் பங்கு சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகள் 3% அதிகரித்தது. ஆப்பிள் இந்த காலாண்டு வளர்ச்சி காரணமாக ஆப்பிள் உலகின் அதிக மதிப்பு கொண்ட முதல் நிறுவனமாகி இருக்கிறது, இத்துடன் சந்தையில் ஆப்பிள் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலகட்டத்தில் 15% வளர்ச்சியை பதிவு செய்து உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளராக உயர்ந்து இருக்கிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் உலக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலிடத்தில் சாம்சங் நிறுவனம் இருந்தது. #AppleEarnings #iPhoneX
ஃபேஸ்புக் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை வழங்குகிறது. #WhatsApp
ஃபேஸ்புக் இன் வாட்ஸ்அப் 2018 F8 நிகழ்வில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து சோதனை துவங்கப்பட்டது.
இந்நிலையில் வாய்ஸ் மற்றும் வீடியோ க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை பார்ப்போம்.

- முதலில் ஒரு வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யவும்
- பின் “add participant” பட்டனை க்ளிக் செய்து பயனர்களை சேர்க்கலாம்
- நீங்கள் சேர்க்க வேண்டிய மற்ற கான்டாக்ட்களை சர்ச் பாக்ஸ் மூலம் தேடி, தேர்வு செய்ய வேண்டும்
- க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் வரும் போது உங்களது திரையில் அழைப்பில் இருப்பவர்களை பார்க்க முடியும்
- அழைப்பில் இருப்பவர் மற்றும் பட்டியலிடப்பட்டு இருக்கும் முதல் கான்டாக்ட் தான் உங்களை சேர்த்திருக்க வேண்டும்.
- க்ரூப் வாய்ஸ் கால் செய்யும் போது அதனை வீடியோ கால் ஆக மாற்ற முடியாது.
- க்ரூப் வீடியோ கால் செய்யும் போது கேமராவை ஆஃப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
- க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது கான்டாக்ட்-ஐ எடுக்க முடியாது. கான்டாக்ட் அழைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
- க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் ஹிஸ்ட்ரி அழைப்புகளுக்கான டேபில் பார்க்க முடியும். கால் ஹிஸ்ட்ரியை க்ளிக் செய்து ஒவ்வொரு கான்டாக்ட்டையும் பார்க்க முடியும்.
- க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது உஙக்ளை பிளாக் செய்தவருடன் இருக்க முடியும், ஆனால் நீங்கள் பிளாக் செய்த அல்லது உங்களை பிளாக் செய்தவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது.
குறுந்தகவல்களை போன்றே வாட்ஸ்அப் க்ரூப் அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சிம் கார்டு இல்லாத செல்போன் சேவை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL
இந்தியா முழுக்க சிம்கார்டு இல்லாமல் செல்போன் பேசும் புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்தது. புதிய பி.எஸ்.என்.எல். சேவை விங்ஸ் என அழைக்கப்படுகிறது.
தகவல் தொடர்பு துறையில் தனியாருக்கு போட்டியாக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தற்போது வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இந்த புதிய வசதிக்கு சிம்கார்டு தேவையில்லை. 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். இதற் கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு கட்டணம் செலுத்தியவுடன் 10 இலக்க எண் வழங்கப்படும்.
வை-பை இணைப்பு அல்லது செல்போன் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். இது இண்டர் நெட் ‘புரோட்டோகால்’ மூலம் செயல்படக் கூடியது. எந்த நெட்வொர்க்கிற்கும் பேசலாம். பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை. வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

கோப்பு படம்
மொபைல் போனில் இருந்து லேண்ட்லைனுக்கும் பேசலாம். சிக்னல் மோசமாக உள்ள பகுதியில் கூட இந்த தொழில்நுட்பம் மூலம் பேச முடியும். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எவ்வித கட்டணமின்றி பேசலாம். இப்போது ‘வாட்ஸ்-அப் கால், ஸ்கைப் போன்றவற்றின் மூலம்தான் தொடர்பு கொள்ள முடிகிறது.
ஆனால் சிம்கார்டு இல்லாத இந்த புதிய வசதியின் மூலம் எவ்வித கட்டணமின்றி வெளிநாட்டில் உள்ளவர்கள் நம்நாட்டில் உள்ளவர்களுடன் பேசலாம். இதுதவிர வை-பை வசதி உள்ள பேருந்து நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுவான இடங்களுக்கு செல்லும்போது தங்கு தடையின்றி இந்த வசதியை பெற முடியும்.
இதுகுறித்து சென்னை டெலிபோன்ஸ் துணை பொது மேலாளர் ஜி.விஜயா கூறியதாவது:-
நாட்டிலேயே இந்த புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ். என்.எல்.தான் முதன் முதலில் அறிமுகம் செய்கிறது. இந்த வசதியை பெற பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த நெட்வொர்க் வைத்திருந்தாலும் பதிவு செய்யலாம். சிம்கார்டு இல்லாமல் 10 இலக்க எண் மூலம் பேசலாம்.
வெளிநாட்டில் வசிக்க கூடியவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு கட்டணமின்றி செல்போன் மற்றும் லேண்ட்லைனில் பேச முடியும். இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டது. இதுவரையில் 4000 பேர் இந்த திட்டத்தில் சேர பதிவு செய்துள்ளனர். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் பி.எஸ்.என்.எல். விங்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #Samsung #smartphone
சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியுள்ளது. தற்போதை வளையும் டிஸ்ப்ளேக்களை சுற்றி கண்ணாடி பொருத்தப்பட்டு இருப்பதால், அதிக சேதமடையும் போது அவை உடையும் நிலை உள்ளது. புதிய பேனலில் சேர்க்கப்பட்டிருக்கும் உடைக்கமுடியாத மூலக்கூறு பேனலை உறுதியானதாக மாற்றுகிறது.
உடைக்கமுடியாத ஸ்மார்ட்போன் பேனலை UL அன்டர்-ரைட்டர்ஸ் ஆய்வகத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சம் 6 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை - இது அமெரிக்க ராணுவ தரத்துக்கும் மேல் உறுதியானதாகும்.
புதிய உடைக்கமுடியாத பேனலை ஆட்டோமொபைல், ராணுவ மொபைல் சாதனங்கள், கேம் கன்சோல்கள், டேப்லெட் போன்றவற்றில் பயன்படுத்த முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
தரையில் இருந்து சரியாக 4 அடி உயரத்தில் இருந்து சுமார் 26 முறை தொடர்ச்சியாக கீழே போடப்பட்டது. அதிகபட்சம் 71 டிகிரியும் குறைந்தபட்சம் -32 டிகிரி வெப்ப அளவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சாம்சங் உடைக்கமுடியாத பேனல் முன்புறம், பக்கவாட்டுகள் மற்றும் ஓரங்களில் எவ்வித சேதமும் இன்றி தொடர்ந்து சீராக இயங்கியதாக நிலையில UL தெரிவித்துள்ளது.
புதிய ஃபோர்டிஃபைடு பிளாஸ்டிக் கண்ணாடிகளை உடைக்கமுடியாது என்பது மட்டுமின்றி இவை எடை குறைவாகவும் வழக்கமான கண்ணாடிகளை போன்றே இருக்கும் என்பதாலும் மின்சாதனங்களில் பயன்படுத்த முடியும் என சாம்சங் டிஸ்ப்ளே பிரிவு தகவல் பரிமாற்ற துறை பொது மேளாலர் ஹோஜுங் கிம் தெரிவித்தார். #Samsung #smartphone
சாம்சங் உடைக்கமுடியாத OLED டிஸ்ப்ளே பேனல் வீடியோவினை கீழே காணலாம்..,
கூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் தவறுதலாக மேற்கொள்ளும் பிழைகளை தானாக சரி செய்ய புதிய அம்சத்தை கூகுள் சோதனை செய்து வருகிறது. #googledocs #Apps
கூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் அவர்களுக்கே தெரியாமல் மேற்கொள்ளும் இலக்கண பிழைகளை தானாக சரி செய்யும் புதிய அம்சத்தை கூகுள் சோதனை செய்து வருகிறது. கிராமர் சஜெஷன்ஸ் (grammar suggestions) என்ற பெயரில் உருவாகும் இந்த அம்சம் ஏற்கனவே டாக்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்பெல்-செக்கிங் (spell-checking) அம்சத்துடன் இணைக்கப்படும்.
இவ்வாறு செய்ததும், பயனர் மேற்கொள்ளும் இலக்கிய பிழைகள் தானாக கண்டறியப்பட்டு, அதனை சரி செய்ய கூகுள் தரப்பில் அறிவுறுத்தப்படும். இலக்கியப்பிழைகள் இருப்பின் குறிப்பிட்ட பகுதி நீல நிறத்தில் பிரதிபலிக்கப்படும் என்றும் இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.
எனினும் இந்த அம்சம் தற்சமயம் கூகுளின் Early Adopter Programme திட்டத்தில் பங்கேற்று இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருப்பதாக ஆன்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்சம் முழுமையாக தயாரானதும், பயனர் சொற்றொடரை முழுமையாக டைப் செய்து முடிக்கும் வரை காத்திருந்து அதன் பின் பரிந்துரைகளை வழங்கும்.

பயனர் எழுதும் போதே பரிந்துரைகளை வழங்கும் அம்சத்தை பயனர் விருப்பப்படி சரி செய்யவோ அல்லது அப்படியே தொடரவும் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
ஸ்பெல் செக்கர் மற்றும் நேச்சுரல் லேங்குவேஜ் சர்ச் அம்சத்திற்கு பயன்படுத்தப்படும் கூகுளின் மெஷின் லெர்னிங் அல்காரிதம் சார்ந்து கூகுள் கிராமர் செக்கர் (grammar checker) அம்சமும் இயங்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர் பயன்படுத்தும் போதே இந்த மென்பொருள் தானாக மேம்படுத்திக் கொள்ளும்.
மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் மென்பொருளும் இதே போன்ற கிராமர் செக் அம்சத்தை தனது சேவைகளில் வழங்குகிறது. #googledocs #Apps
இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோரை அச்சுறுத்தும் புதிய விதிமுறையை டிராய் விதித்து இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple
ஆப்பிள் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடையே நிலவி வரும் போட்டி மேலும் சூடுபிடித்து இருக்கிறது. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.
இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.என்.டி. (DND) என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி டி.என்.டி. 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் அனுமதிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை கோருவதால் டிராய் உருவாக்கியிருக்கும் செயலி பயனருக்கு தனியுரிமை பிரச்சனையை ஏற்படுத்தலாம் என ஆப்பிள் கருதுகிறது.

ஐபோன் பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு ஆப்பிள் நிறுவனம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதன் காரணமாக பயனரின் தகவல் மற்றும் விவரங்களை சேகரிக்க கோரும் செயலிகளிடையே கடுமையான கட்டுப்பாடுகளை ஆப்பிள் விதித்து வருகிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்கும் கூகுள் நிறுவனம் இதுபோன்ற விதிமுறைகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை
ஆன்ட்ராய்டு பயனர்கள் டி.என்.டி. செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளே ஸ்டோரில் இந்த செயலிக்கு பயனர்கள் மோசமான விமர்சனங்களையே வழங்கியிருக்கின்றனர். இந்த செயலியை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்வது குறித்து டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையில், நாட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும் தங்களது மொபைல் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். என எவ்வித இயங்குதளம் கொண்டிருந்தாலும் டி.என்.டி. 2.0 செயலியை நிச்சயம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை மொபைல் போன் நிறுவனங்கள் அன்றி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியதாகும்.

"டிராய் விதிமுறைகளின் படி ஒவ்வொரு சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள், தங்களது ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற செயலிகளை இயக்க தேவையான அனுமதியை வழங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "விதிமுறைகளின் படி இதுபோன்ற செயலிகளை அனுமதிக்காத சாதனங்களில் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி சாதனங்களை தங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-இல் இருந்து நீக்க முடியும்."
அந்த வகையில், டி.என்.டி. 2.0 செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் அனுமதிக்காத பட்சத்தில் நாட்டில் விற்பனையாகும் ஐபோன்கள் அனைத்திற்கும் 3ஜி, 4ஜி மற்றும் அடிப்படை டெலிகாம் நெட்வொர்க் சேவையை இழக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
டிராய் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் விவகாரத்தை பொருத்த வரை இரண்டு தரப்புமே ஒரே விஷயத்துக்கு போராடி வருகின்றன. இரண்டு தரப்பும் தனது பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவே நினைக்கின்றன. மொபைல் போன்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை டிராய் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது, ஆப்பிள் நிறுவனமும் இதே நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

எனினும் ஆப்பிள் தனது பயனரின் தனியுரிமை எவ்வித காரணங்களாலும் பறிக்கப்பட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐபோனில் பயனரின் தனியுரிமை தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எவ்வித செயலியாக இருந்தாலும், அது அரசாங்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், பயனரின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க ஆப்பிள் தயாராக இல்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை குறைக்க பல்வேறு ஸ்மார்ட் வழிமுறைகள் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இதனால் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் ஐபோனில் ஸ்பேம் அழைப்புகள் குறைக்கப்படுவதை விளக்கி, டிராய் செயலியை அனுமதிப்பதில் இருந்து விலக்கு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #telecommunications #Apple
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை முடக்க புதிய அம்சங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #WhatsApp
வாட்ஸ்அப் தலைமை அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய நிர்வாக அதிகாரிகள் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் தேர்தல் சமயங்களில் வாட்ஸ்அப் தளத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தியாவில் வரவிருக்கும் தேர்தல் காலத்தில் போலி குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய வசதிகளை வழங்குவது குறித்த பணிகளில் ஈடுபட இருப்பதாக வாட்ஸ்அப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வசதிகள் தேர்தல் துவங்குவதற்கு சரியாக 48 மணி நேரத்திற்கு முன் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற போலி செய்திகளை சரிபார்க்கும் வழிமுறையை இந்திய பொது தேர்தலிலும் வாட்ஸ்அப் கொண்டு வருகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவுற்று இருப்பதாகவும். இதில் வாட்ஸ்அப் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், பொது கொள்கை மற்றும் வியாபார வளர்ச்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கோப்பு படம்
மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வழிமுறையை நடைமுறைப்படுத்த ரகசியம் காக்கவும், செயல்பட துவங்கியதும் அதிக எச்சரிக்கையாக செயல்பட ஒப்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆண்டு இறுதியில் பின்பற்றப்படும் வழிமுறைகளை 2019-ம் ஆண்டு பொது தேர்தல் காலத்தில் மேலும் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் இந்திய குழு இந்திய வங்கிகளை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய வங்கிகளுடன இணைந்து வாட்ஸ்அப் சேவையில் பண பரிமாற்றம் செய்யும் வசதி வழங்க வேண்டியிருப்பதால், இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 2018 வரை வாட்ஸ்அப் சேவையை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியா வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மிக முக்கிய சந்தையாக விளங்குகிறது. மெக்சிகோ தேர்தல்களில் வாட்ஸ்அப் பயன்படுத்திய வெரிஃபிகாடோ மாடல் (சரிபார்க்கும் வழிமுறை) இந்தியாவில் கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்ப் செயலியில் போலி தகவல்கள் மற்றும் சந்தேத்திற்கிடமான பயனர்களை கண்டறிய மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. சமூக வலைத்தள பயன்பாடு தேர்தல் பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க 2014 ஜனவரியில் 14 பேர் கொண்ட குழுவை நியமித்தது. #WhatsApp
கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியனின் அபராத நடவடிக்கைக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதில் அளித்திருக்கிறார். #Google
உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமாக கூகுள் இருக்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள், ஆன்ட்ராய்டு உற்பத்தியாளர்களிடம் தனது செயலிகளை வலுக்கட்டாயமாக புகுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஐரோப்பிய யூனியனில் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு 500 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்பட்டது.

இத்துடன் கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கூறியது.
ஐரோப்பிய யூனியனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளதாவது:-
ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை இலவச-ஆன்ட்ராய்டு வியாபாரத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். பயனர்கள் சராசரியாக 50 செயலிகளை தாங்களாகவே இன்ஸ்டால் செய்கின்றனர். மேலும், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அன்-இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்கள் எங்களது செயலிகளை தங்களது சாதனங்களில் அனுமதிக்காத போது, ஆன்ட்ராய்டு தளத்தை இது பெரிதும் பாதிக்கும். இதுவரை எங்களின் வியாபார யுக்தியானது, மொபைல் போன் உற்பத்தியாளர்களிடம் எங்களது தொழில்நுட்பத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தவோ அல்லது கடினமான விநியோக முறையை பின்பற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தவில்லை.
இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் தனது செயலிகளை சாதனங்களில் வழங்குவதை எவ்வாறு முறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஐரோப்பிய யூனியன் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஒருவேளை, மொபைல் போன் உற்பத்தியாளர்கள் தாங்களாகவே பிரவுசரை வழங்கும் வாய்ப்பு கிடைத்தால், கூகுளின் மொபைல் விளம்பர வருவாயினை அதிகம் பாதிக்கும். கூகுளின் டிஜிட்டல் வருவாயில் விளம்பரங்களில் இருந்து மட்டும் 50% அதிகம் ஆகும்.
ஆன்ட்ராய்டு வியாபார யுக்தி மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூகுள் எச்சரித்துள்ளது. இதன் மூலம் மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை உரிமம் அடிப்படையில் வழங்க துவங்கும். கூகுள் க்ரோம் பிரவுசர் மொபைல் போன்களின் டீஃபால்ட் பிரவுசர் பகுதியில் இருந்து நீக்கப்பட்டாலும், பயனர்கள் இதனை அவர்களாகவே பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்வர் என்றே கூறலாம்.
இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபாளோவர்களை நீக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram
இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரண்டடுக்கு ஆத்தென்டிகேஷன் மற்றும் பொது அக்கவுன்ட்கள் அவர்களின் ஃபாளோவர்களை நீக்கும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
நீண்ட காலமாக பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பப்ளிக் அக்கவுன்ட் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.

புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது, எனினும் இதன் முழுமையான வெளியீடு குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. மேலும் ஃபாளோவர்களை நீக்கும் போது அவர்களுக்கு எவ்வித நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக மே மாதத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு ஒருவரை பின்தொடரும் போது அவர்களது போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை முழுமையாக தவிர்க்க முடியும். புதிய அம்சம் மூலம் இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்வோரை முழுமையாக இயக்க முடியும்.
இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை தெரிந்து கொள்ள, உங்களது ஃபாளோவர்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும். #instagram #Apps






