என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஐபோன் பிராசஸரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வரை பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய மொபைல் சிப்செட் ஐபோனின் பேட்டரியை 40% வரை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் பேட்டரி பேக்கப் ஐபோன்களில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், புதிய பிராசஸர் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக தெரிகிறது. புதிய பிராசஸர் ஆப்பிள் ஏ12 என அழைக்கப்பட இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் மூன்று புதிய ஐபோன்களிலும் ஏ12 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய பிராசஸர் அடிப்படை வடிவமைப்பை முற்றிலும் மாற்றப்படுவதால், இந்த பிராசஸர் ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.



    பிராசஸர்களில் உள்ள டிரான்சிஸ்டர்களில் எலெக்டிரானிக் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மின்சாரம் செல்ல அனுமதிக்கிறது, இதை பொருத்தே ஸ்மார்ட்போன்களில் கம்ப்யூட்டிங் நடைபெறுகிறது. சிப்செட்டில் அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், அதிக கம்ப்யூட்டிங் திறன் கிடைக்கும். 

    கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்து வழங்கிய ஏ11 பிராசஸர்களில் 10 என்.எம். முறையில் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு டிரான்சிஸ்டர் இடையேயான அளவு 10 நானோமீட்டர்கள் ஆக இருந்தது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஏ12 சிப்செட் 7 என்.எம். உற்பத்தி முறையில் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் டிரான்சிஸ்டர்களிடையேயான இடைவெளி 7 நானோமீட்டர்கள் ஆக இருக்கும்.

    புதிய உற்பத்தி முறையால் அதிக டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்த முடியும் என்பதால் ஸ்மார்ட்போனின் வேகம் 20% வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், செயல்திறன் அதிகரிக்காது எனினும் சிப்செட் அதிக சிறப்பாக இயங்கும். மேலும் 7 என்.எம். சிப்கள் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போனில் உள்ள பிராசஸர் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தினால், பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் கிடைக்கும்.
    கேரள மழை வெள்ளத்தில் பாழடைந்து போன ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்து வழங்குவதாக ஹூவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFloodRescue

     

    கேரளாவில் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்றவை அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்து இருக்கிறது. இந்நிலையில், வெள்ள பாதிப்பில் இருந்து அம்மாநில மக்களை மீட்க பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

    பொதுமக்கள், அண்டை மாநிலங்களை சேரந்த அரசு, அரசியல் கட்சிகள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், டெக் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண பொருட்கள், நிதி உதவி கேரள மக்களுக்கு வழங்கப்படுகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பல லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

    அந்த வகையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பாழாகிய ஸ்மார்ட்போன்களை ஹூவாய் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுக்க இயங்கி வரும் சர்வீஸ் மையங்களில் உதிரி பாகங்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப குழுக்களை பிரத்யேகமாக நியமித்துள்ளது.


    கோப்பு படம்

    இதன்மூலம் மக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வேகமாக சரி செய்து வழங்க முடியும் என தெரிகிறது. 

    ''கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஹூவாய் வாடிக்கையாளர் சேவை மைய குழுக்கள் முழு வீச்சில் இயங்கும் என ஹவாய் இந்தியா வணிக வியாபாரங்கள் பிரிவு தலைவர் ஆலென் வாங் தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக சரி செய்து தரப்படும். பலதரப்பு உதவிகள் தொடர்ந்து வருவதால், கேரளா விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு விடும்," என அவர் மேலும் தெரிவித்தார். 

    வெள்ளதத்தில் பாதிக்கப்பட்ட தங்களது சாதனங்கள் சரி செய்ய வாடிக்கையாளர்கள் ஹூவாயின் இலவச அழைப்பு எண் - 1800-209-6555 தொடர்பு கொண்டு இலவசமாக சரி செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ்கள் ஆகஸ்டு 31-ம் தேதி வரை கிடைக்கும் என்றும் கேரளாவில் வசிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்பெற முடியும். #KeralaFloodRescue #KeralaFloods2018
    ஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips


    ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும்.

    இதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் ஸ்மார்ட்போன் சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 



    செல்போன் டவர் மற்றும் மொபைல் போன் இடையேயான இடையூறை எவ்வாறு சரி செய்வது. உங்களது மொபைல் போனில் எந்நேரமும் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும், இவ்வாறான சூழல்களில் பெரும்பாலும் அவை பல்வேறு இடையூறுகளை கடந்தே நம் மொபைலை வந்தடையும். இதுபோன்ற இடையூறுகளை ஓரளவு அகற்ற என்ன செய்யலாம்? 

    • ஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம். 
    • இரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும். 
    • இரும்பு பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் அருகில் இருந்து மொபைல் போனை அகற்ற வேண்டும்.


    பொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும். 

    சில இடங்களில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது, இதனால் திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம்.

    இவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகும். ஒருவேளை சீராகாத பட்சத்தில் புதிய சிம் கார்டு பெறுவது நல்லது. பழைய சிம் கார்டுகள் சேதமடைந்திருந்தால் இவ்வாறு நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் புதிய சிம் பெறுவது பிரச்சனையை சரி செய்யலாம். #techtips
    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apps


    உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்து ஃபோர்ப்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆப்டோப்பியா எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 8500 கோடி நிமிடங்கள் பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று ஃபேஸ்புக் செயலியை சுமார் 3000 கோடி நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். 

    உலகளவில் குறுந்தகவல் அனுப்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஆப்டோப்பியா செய்தி தொடர்பாளர் ஆடம் பிளாக்கர் தெரிவித்தார். தகவல் பரிமாற்ற செயலிகளில் மக்கள் அதிக நேரம் செலவழித்து உள்ளனர் என பிளாக்கர் மேலும் தெரிவித்தார்.



    உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள் பட்டியல் பின்வருமாறு..,

    வாட்ஸ்அப், வீசாட், ஃபேஸ்புக், மெசன்ஜர், பன்டோரா, யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த அறிக்கையில் சீனாவின் மூன்றாம் தரப்பு ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால் வீசாட் மற்றும் சீனாவை சேர்ந்த செயலிகள் முன்னணி இடங்களை பிடித்திருக்கும். எனினும் வீசாட் செயலி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    அதிக நேரம் பயன்படுத்தப்பட்ட பத்து செயலிகளில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை இடம்பிடித்திருக்கின்றன. கூகுளின் யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவையும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதன்மை இடம் பிடித்துள்ளன.

    கேம்களை பொருத்த வரை கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் 3.83 பில்லியன் மணி நேரம் விளையாடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மை டாக்கிங் டாம், கேன்டி கிரஷ் சாகா, ஃபோர்ட்நைட், லார்ட்ஸ் மொபைல், சப்வே சர்ஃபர்ஸ், ஹெலிக்ஸ் ஜம்ப், ஸ்லிதர்.ஐஒ, பப்ஜி மொபைல் மற்றும் ஃபிஷ்டம் உள்ளிட்டவை அதிகம் விளையாடப்படுகின்றன.
    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் வாட்ஸ்அப் சி.இ.ஒ. மற்றும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    இந்தியா வந்துள்ள வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் இன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்திய சட்ட விதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றசம்பவங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

    இவற்றை கருத்தில் கொண்ட வாட்அஸ்அப் தலைமை செயல் அதிகாரியிடம் மூன்று அம்சங்களை செய்ய பரிந்துரை வழங்கியதாக மத்திய மந்திரி தெரிவித்தார். அதன்படி குறைகளை களைய இந்தியாவுக்கான அதிகாரி, கார்ப்பரேட் நிறுவன கட்டமைப்பு மற்றும் இந்திய விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரியுடனான சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு ஏற்படுத்தியிருக்கும் நன்மைகளை விளக்கி அவரிடம் நன்றி தெரிவித்ததாகவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    க்ரிஸ் டேனியல்ஸ் வாட்ஸ்அப் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்ததாக மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
    நோயாளிகளுக்கு இதய நோய் வரவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அப்பல்லோ மருத்துவமனை பயன்படுத்துகிறது. #microsoftai #ApolloHospitals


    உலக தொழில்நுட்ப சந்தையில் வெளிவரும் ஒவ்வொரு சிறுசிறு அறிவிப்பும் என்றோ ஒருநாள் மிகப்பெரும் மாற்றத்தையும், நம்மை வியக்கவைக்கும் வகையிலும் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சிறு அறிவிப்புகள் இன்று பல்வேறு முக்கிய திருப்பங்களுக்கான செய்திகளாகி வருகின்றன. 

    செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டெட் ரியாலிட்டி போன்ற சொற்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை நமக்கு புதிதாய் இருந்த நிலையில், இன்று நமது ஸ்மார்ட்போன்களில் பல்வேறு வசதிகளை வழங்க இரு தொழில்நுட்பங்களும் அவசியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன.

    அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவ துறையில் பல்வேறு புதுமைகளை படைக்க துவங்கியிருக்கிறது. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சமீபத்திய திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் முக்கிய அங்கமாகியுள்ளன.
     


    இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் இந்தியா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து உடல்நலம் சார்ந்த ஏ.ஐ. நெட்வொர்க் எனும் திட்டத்தின் கீழ் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய மென்பொருள் இதயம் சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏ.ஐ. சார்ந்த ஏ.பி.ஐ. மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இதய துடிப்பு நோய் வருவதை முன்கூட்டிய கணிக்க முடியும். மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென்பொருள் இந்தியர்களிடம் இதய நோய் வருவதற்கான ஆபத்தை மிகத்துல்லியமாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இருதய நோய் சார்ந்த பல்வேறு மருத்துவ அறிக்கை விவரங்களை இணைத்து இந்த மென்பொருள் இயங்குகிறது. மேலும் பாதிப்பு மிக அதிகமாகவோ, அதிகமாகவோ அல்லது துவக்க நிலையில் உள்ளதா என்பதையும் இந்த மென்பொருள் கணித்து வழங்குகிறது. #microsoftai #ApolloHospitals
    கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் கூகுள் பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த டூல் பயன்படுத்தி இயற்கை பேரிடரில் சிக்கித்தவிப்போரை கண்டுபிடிக்க முடியும். #keralafloods #personfinder


    கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித்தவித்த சுமார் 1.65 லட்சம் பேர் மீட்கப்பட்டு 1155 மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக சுமார் 2500-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததோடு, சில வீடுகள் முற்றிலும் தரைமட்டமாக இடிந்து விழுந்துள்ளன.

    இயற்கை பேரழிவில் சிக்கித்தவிக்கும் கேரள மக்களுக்கு உதவியாக இருக்கும் நோக்கில், கூகுளின் பெர்சன் ஃபைன்டர் டூல் (Google Person Finder) ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, வெள்ள பாதிப்புகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், கண்டெடுக்கப்பட்டவர் குறித்து தகவல் அளிக்கவும் முடியும்.



    கூகுள் பெர்சன் ஃபைன்டர் டூல் பயன்படுத்துவது எப்படி?

    கூகுளின் பெர்சன் ஃபைன்டர் டூல் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்த முடியும். அவசர சூழ்நிலைகளில் பாதுகாப்பு தகவல்களை எவ்வாறு தேட வேண்டும் என்றும், எப்படி தகவல்களை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து பார்ப்போம்.

    - முதலில் கூகுளின் பெர்சன் ஃபைன்டர் டூல் பயன்படுத்த http://g.co/pf என்ற இணைய முகவரிக்கு சென்று, வலைத்தளத்தின் இடதுபுறம் காணப்படும் பேரழின் பெயயர் (கேரளா வெள்ளம்) தேர்வு செய்ய வேண்டும்.

    - இனி உங்களிடம் தகவல் இருந்தால் அதை வழங்குவதற்கும், யாரேனும் காணாமல் போனது குறித்த தகவல் வழங்க என இரண்டு ஆப்ஷன் காணப்படும்.

    -  காணாமல் போனவரை தேட அதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்து, பெயரை பதிவிட்டு சர்ச் செய்யக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ஒவ்வொருத்தரின் முழு விவரங்களை அறிந்து கொள்ள ஒவ்வொரு பதிவையும் க்ளிக் செய்யலாம்.

    - ஒருவரின் பாதுகாப்பு விவரத்தை அறிந்து கொள்ள முடியும். தகவல்களை தொடர்ந்து பெற (Receive new arrival information of this person by e-mail) ஆப்ஷனை க்ளிக் செய்து, மின்னஞ்சலை பதிவு செய்ய வேண்டும். இனி குறிப்பிட்ட நபர் குறித்து வரும் தகவல்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
    ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டில் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #Apple #iPhone


    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை 6.1 இன்ச், 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் மற்றும் 5.8 இன்ச் ஐபோன் என மூன்று அளவுகளில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 6.1 இன்ச் மாடலின் விலை 550 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், 6.1 இன்ச் எல்.சி.டி. மாடலின் விலை 699 முதல் 749 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஐபோன்களின் விற்பனை குறைந்ததாலேயே இந்த ஆண்டு மாடல்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி காரணமாக குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.



    மேலும் மூன்று ஐபோன்களிலும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்டலாம் என்றும் பட்ஜெட் விலை ஐபோன் மாடல் அதிகம் உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் 5.8 இன்ச் மாடலின் விலை 899 முதல் 949 டாலர்கள் என்றும், 6.5 இன்ச் மாடலின் துவக்க விலை 999 டாலர்கள் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    தற்போதைய ஐபோன் X விலை 999 டாலர்கள் முதல் துவங்குகிறது. 2018 OLED ஐபோன் மாடல்களில் 512 ஜிபி வேரியன்ட் மற்றும் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் கட்டண குறைப்பு சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புகைப்படம் நன்றி - TrendForce
    ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Amazon


    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது 23-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அமேசான் பே உடன் இணைந்து பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. 

    புதிய சலுகையின் படி ரூ.100-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கும், இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்யும் பயனருக்கும் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    இலவசமாக வழங்கப்படும் அமேசான் கிஃப்ட் கார்டு கணக்கில் ஏற்கனவே ரூ.51 சேர்க்கப்பட்டிருக்கும். பயனர்கள் இந்த கார்டு மூலம் அமேசான் பே கணக்கில் பணத்தை சேர்த்துக் கொண்டு அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பொருட்களை வாங்கவோ, ரீசார்ஜ் மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

    கிஃப்ட் கார்டை பெற ஏர்டெல் பயனர்கள் தங்களது மைஏர்டெல் செயலிக்கு சென்று ஏர்டெல் தேங்ஸ் (Airtel Thanks) பேனரை க்ளிகி செய்ய வேண்டும். இனி பேனரை க்ளிக் செய்து கிஃப்ட் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த சலுகையை பெற பயனர் செய்யும் ரீசார்ஜ் ஏர்டெல் செயலி, அமேசான் மற்றும் பேடிஎம் மூலமாகவும் மேற்கொள்ளலாம். 

    அமேசான் பே கிஃப்ட் கார்டை இலவசமாக பெற பயனர்கள் தங்களது ஏர்டெல் எண்களுக்கு ரீசார்ஜ் அல்லது போஸ்ட்பெயிட் சலுகைக்கு அடுத்த 30 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
    வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை ஹேக் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். #WhatsApp #Hacking


    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது. 

    எனினும் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதன்படி செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என தெரியவந்துள்ளது.

    செக் பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பிழை, செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும் என்பது கூடுதல் தகவல். 


    கோப்பு படம்

    இவ்வறு செய்வதால் ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டியபடி தகவல்களை மாற்றியமைப்பதோடு, போலி தகவல்களை பரப்பும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு தீர்வுகள் சார்ந்த நிறுவனமான செக் பாயின்ட் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என வலைதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

    - ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரிவிக்காத தகவல்களை, தெரிவித்ததாக மாற்றியமைக்க முடியும்.

    - க்ரூப்-இல் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.

    - தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் காண்பிக்க செய்ய முடியும். 

    புதிய பிழை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என செக் பாயின்ட் தெரிவித்துள்ளது. #WhatsApp #Hacking
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் மூலம் வீடியோ சாட்டில் இருந்த படி ஏ.ஆர். கேம்களை விளையாட முடியும். #AugmentedReality


    ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மல்டி-பிளேயர் வீடியோ சாட் ஏ.ஆர். கேம்ஸ் என அழைக்கப்படும் புதிய வசதி மெசன்ஜரில் வீடியோ காலிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    அதிகபட்சம் ஆறு பேருடன் வீடியோ கால் மேற்கொண்டு கேமிங் அனுபவத்தை அதிக உரையாடல்களுடன், நிஜமானதாக உணர முடியும். மெசன்ஜரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் எத்தனை நேரம் சிரிக்கமால் உள்ளனர் என்பதை பார்க்கவோ அல்லது விண்வெளியில் அதிரடி போர் விளையாட்டு போன்றவற்றை அனுபவிக்க முடியும்.

    இதுவெறும் துவக்கம் தான் என்றும் விரைவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த புதிய கேம்கள் அடுத்தடுத்து சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பந்தை பின்புறம் பாஸ் செய்யும் விளையாட்டு “பீச் பம்ப்”  (Beach Bump) என்ற பெயரிலும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு “கிட்டன் கிரேஸ்” (Kitten Kraze) என்ற பெயரில் வழங்கப்பட இருக்கிறது. 

    புதிய கேமிங் அனுபவத்தில் திளைக்க அப்டேட் செய்யப்பட்ட மெசன்ஜர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்கள் சாட் விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் திரையின் மேல் வலது புறமாக காணப்படும்.

    பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து மெசன்ஜரில் காணப்படும் ஏ.ஆர். கேம்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். புதிய அனுபவங்கள் ஏ.ஆர். ஸ்டூடியோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிகம் அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும். #Facebook #AugmentedReality
    கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஆன்ட்ராய்டு வெர்ஷனின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #AndroidPie


    கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு 9.0 பி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் பை என அழைக்கப்படுவதாகவும் இதற்கான முதல் ஸ்டேபில் அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் இருந்கு டவுன்லோடு செய்யலாம்.

    இத்துடன் புதிய இயங்குதள அப்டேட் OTA மூலமாகவும் வழங்கப்படுகிறது, பீட்டா திட்டத்திற்கு சைன்-அப் செய்தவர்கள் இதை கொண்டு அப்டேட் செய்து கொள்ளலாம். இத்துடன் ஆன்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ரோஜக்ட் முறையிலும் அப்டேட் வழங்கப்படுகிறது. பிக்சல் போன்றே எசென்ஷியல் போனுக்கும் புதிய இயங்குதள அப்டேட் வழங்கப்படுகிறது.



    ஆன்ட்ராய்டு 9.0 அப்டேட் உடன் ஆகஸ்டு, 2018 ஆன்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் உடன் வழங்கப்படுகிறது. பிக்சல் சி, நெக்சஸ் 5X மற்றும் 6P மாடல்களுக்கும் ஆன்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, எனினும் இது ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்தே இருக்கும்.

    ஆன்ட்ராய்டு பி செக்யூரிட்டி பேட்ச் மூலம் அடாப்டிவ் பேட்டரி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி செயலிகளுக்கு முன்னுரிமை வழங்கும். ஆன்ட்ராய்டு பி பீட்டாவில் சோனி எகஸ்பீரியா XZ2, சியோமி Mi மிக்ஸ் 2எஸ், நோக்கியா 7 பிளஸ், ஒப்போ ஆர்15 ப்ரோ, விவோ X21 / X21UD மற்றும் ஒன்பிளஸ் 6 சாதனங்கள் பதிவு செய்திருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

    அதன்படி புதிய இயங்குதளத்துக்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்ட்ராய்டு 9 அப்டேட் பல்வேறு இதர சாதனங்களுக்கு வழங்க பல்வேறு நிறுவனங்களுடன் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #AndroidPie #Google
    ×