என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கூகுள் மேப்ஸ் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அன்றாட பயணங்களில் பயன்தரும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. #GoogleMaps



    கூகுள் மேப்ஸ் தளத்தில் அன்றாட பயணங்களை கட்டுப்படுத்தும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய கம்யூட் (commute) எனும் டேப் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களை நேரலையில் வழங்கும்.

    புதிய அம்சம் கொண்டு ஒரே கிளிக் செய்து நீங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து நிலவரத்தை நேரலையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களது பயணம் வழக்கமானதாக இருக்குமா அல்லது கூடுதல் நேரம் தேவைப்படுமா என்ற விவரங்களையும் இந்த அம்சம் வழங்குகிறது.

    கம்யூட் டேப் மூலம் நெரிசல் அல்லாத வேறு வழிகளையும் தெரிந்து கொள்ள முடியும். ஆன்ட்ராய்டு தளத்தில் தாமதம் மற்றும் இடையூறு சார்ந்த விவரங்களை நோட்டிபிகேஷன் வடிவில் பெற முடியும். மேலும் வாகனம் ஓட்டுவது அல்லது பொது போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பயணர்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் நேரத்திற்கு சரியாக சென்றடைவதற்கான விவரங்களை வழங்குகிறது.



    இத்துடன் வழித்தடத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் அல்லது அடுத்த ரெயில் கிளம்பும் நேரம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

    உலகம் முழுக்க 80 பகுதிகளில் உள்ள டிரான்சிட் ரைடர்கள், தங்களது பேருந்து மற்றும் ரெயில் எங்கு இருக்கிறது என்பதை நேரலையில் பார்க்க முடியும். சிட்னி நகரில் இந்த வசதியை வழங்க கூகுள் நிறுவனம் நியூ சவுத் வேல்ஸ் உடன் இணைந்துள்ளது. இதை கொண்டு அடுத்து வரும் பேருந்து அல்லது ரெயிலினுள் நெரிசல் எந்தளவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த அம்சம் விரைவில் உலகம் முழுக்க அதிகப்படியான நகரங்களில் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக் மற்றும் கூகுள் பிளே மியூசிக் போன்ற சேவைகள் கூகுள் மேப்ஸ் தளத்தினுள் இயக்க முடியும். இதனால் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் செய்யும் போதே பாட்காஸ்ட்களை கேட்க முடியும். வரும் வாரங்களில் புதிய அம்சங்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்கப்பட இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஐபோன் மாடல்களில் சார்ஜ் ஏறுவதில் கோளாறு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #ChargeGate #iPhoneXS
     


    ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் சீராக சார்ஜ் ஆவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    ஆவலுடன் புதிய ஐபோன் மாடல்களை வாங்கி சென்ற ஆப்பிள் பிரியர்கள் தங்களது புதிய ஐபோன் சரியாக சார்ஜ் ஆவதில்லை, அடிக்கடி ஹேங் ஆகிறது போன்ற குற்றச்சாட்டுகளை ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மையங்கள், ரெடிட், மேக்ரூமர் படிவம், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

    புதிய ஐபோன்களில் பிரச்சனை இருப்பதை பிரபல யூடியூப் சேனலில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல யூடியூபர் லீவிஸ் ஹில்சென்டெகர் கூறும் போது, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் சார்ஜ் ஆவதில்லை என்ற குற்றச்சாட்டை நூற்றுக்கும் அதிகமானோர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில ஐபோன்கள் சார்ஜ் செய்யும் போது ஹேங் ஆவதாகவும், ரீசெட் செய்தால் தான் போன் இயல்பு நிலைக்கு திரும்புவதாக தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    பிரச்சனையை புரிந்து கொள்ள ஹில்சென்டெகர் எட்டு ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை அவற்றுடன் வழங்கப்பட்ட சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தார். எட்டு ஐபோன்களில் வெறும் இரண்டு மாடல்களில் மட்டுமே சரியாக சார்ஜ் ஆனது. மற்ற ஆறு ஐபோன்களில் ஐந்து மாடல்களில் ஸ்கிரீன் வேக்கப் ஆகும் வரை சார்ஜ் ஆகவில்லை. ஒரு ஐபோன் XS மேக்ஸ் எப்படி முயன்றும் சார்ஜ் ஆகவேயில்லை, மேலும் சார்ஜ் செய்ய முயன்ற போது பலமுறை ஹேங் ஆனது. 



    ஆப்பிள் நிறுவனம் பல லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து வரும் நிலையில், பிரச்சனையை சில சோதனைகள் மற்றும் ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே உறுதி செய்ய முடியாது. குறிப்பாக சில பயனர்கள் மாற்றப்பட்ட சாதனங்களிலும் இதே பிரச்சனை எழுவதாக தெரிவித்துள்ளனர்.

    சில பயனர்கள் தங்களது லைட்னிங் கேபிளை சற்று அசைத்தால் சார்ஜ் ஆவதாக தெரிவித்துள்ளனர். எனினும் இப்போதைய சூழலில் வயர்லெஸ் சார்ஜர் மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கிறது. தொடர்ந்து வயர்லெஸ் சார்ஜர் பயன்படுத்தும் போது பேட்டரி ஆயுள் எளிதில் பாழாகி விடும். மேலும் ஆப்பிள் புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களின் பேட்டரியை மாற்ற அதிக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

    தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. மேலும் பிரச்சனை மென்பொருள் அப்டேட் மூலம் சரிசெய்யப்படுமா அல்லது பெரியளவில் விற்பனையான போன்களை திரும்ப பெற்று அவை சரி செய்யப்படுமா என்ற கேள்விகளுக்கு, ஆப்பிள் விளக்கத்தை அறிந்து கொள்ள புதிய ஐபோன் வாங்கியவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

    முன்னதாக ஆப்பிள் டெக் சப்போர்ட் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, போன்களை மாற்றி வழங்க வேண்டி இருக்கும் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய ஐபோன் மாடல்களில் ஹார்டுவேர் கோளாறு இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

    எனினும் ஆப்பிள் இதுகுறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. #ChargeGate #iPhoneXS

    புதிய ஐபோன் கோளாறுகளை விளக்கும் பிரபல யூடியூபரின் வீடியோவை கீழே காணலாம்..,


    இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தினசரி அடிப்படையில் பயன்படுத்தி வரும் டேட்டா விவரங்கள் வெளியாகியுள்ளது. #smartphone



    இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தினமும் 1 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    நெயில்சன் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி சிலகாலத்திற்கு முன் இந்தியர்கள் மாதாந்திர அடிப்படையில் அதிகபட்சம் 4 ஜி.பி. டேட்டா மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் அவர்கள் தினமும் அதிகபட்சம் 90 நிமிடங்களுக்கும் அதிகமாக ஆன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிக குறைந்த விலையில் டேட்டா கிடைப்பதால் உலகளவில் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நெயில்சன் ஸ்மார்ட்போன் 2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "அதிவேக 4ஜி இண்டர்நெட், விலை குறைந்த மொபைல் போன் மாடல்கள் மற்றும் அழைப்பு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கத் துவங்கியது," என நெயில்சன் இந்தியாவின் தலைவர் அபிஜித் மடாகர் தெரிவித்தார். 



    இந்திய சந்தையில் ஏற்படும் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ரூ.5,000 பட்ஜெட்டில் புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

    "திடீரென மலிவு விலை புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமானதால், புதிய பயனர்கள் தங்களது ஃபீச்சர்போன்களை ஸ்மார்ட்போன் மாடல்களாக மாற்றிக் கொண்டனர்," என மடாகர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

    கடந்த 15 முதல் 18 மாதங்களில் டேட்டா பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகபட்ச பயன்பாடு டேட்டா அதிகம் எடுத்துக் கொள்ளும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மெசன்ஜர், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் குரோம் போன்றவற்றில் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #iPhoneXSMax



    ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS சீரிஸ் சுவாரஸ்ய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி இருக்கும் ஐபோன் XS மாடல்களில் உள்ள உதிரிபாகங்கள் முதல் அதில் ஆப்பிள் வழங்கி இருக்கும் சிறப்பம்சங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது போன்ற பல்வேறு விவரங்களை ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் கூர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

    பலகட்ட சோதனைகளை ஐபோன் XS தினந்தோரும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள உதிரி பாகங்களை ஆய்வு செய்யும் வீடியோக்கள் யூடியூபில் வெளியாகி வருகின்றன. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றின் மூலம் ஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் சார்ந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் ஐரோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டணம் சுமார் 443 டாலர்கள் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் X (64 ஜிபி) வேரியன்ட் உற்பத்தி கட்டணத்தை விட வெறும் 50 டாலர்கள் மட்டுமே அதிகம் ஆகும்.

    ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மாடலின் விலை உயர்ந்த பாகமாக 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே பேனல் இருக்கிறது. இது ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை விட பெரிதாகும். இதைத் தொடர்ந்து ஏ12 சிப் விலை 72 டாலர்கள் அளவில் புதிய ஐபோனின் இரண்டாவது விலை உயர்ந்த பாகமாக இருக்கிறது.

    மூன்றாவதாக ஃபிளாஷ் ஸ்டோரேஜ் பாகத்திற்கு ஆப்பிள் 64 டாலர்களை செலவிடுவதாக கூறப்படுகிறது. இவற்றுடன் கேமராக்களுக்கு 44 டாலர்கள் மற்றும் இதர பாகங்களுக்கு 55 டாலர்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஐபோன் X மாடலை விட பெரியது என்பதால், இதன் கட்டமைப்பு கட்டணமும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் யுடிராக் என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஜி.பி.எஸ். பயன்பாட்டிற்கு வருகிறது. #GPS

    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் விரைவில் பயன்பாட்டிற்கு வரயிருக்கிறது. யுடிராக் என பெயரிடப்பட்டுள்ள இந்திய ஜி.பி.எஸ். சேவை இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பில் இருக்கும் விவரங்களை கொண்டு இயங்குகிறது.

    யுடிராக் ஜி.பி.எஸ். சேவை முழுக்க முழுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்களின் திட்டமிடலில் உருவாக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

    இந்தியாவுக்கென சொந்தமாக ஜி.பி.எஸ். சேவை துவங்குவதற்கு முதல் காரணம் அமெரிக்கா தான் எனலாம். கார்கில் போரின் போது குறிப்பிட்ட பகுதியின் ஜி.பி.எஸ். விவரங்களை வழங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. அமெரிக்கா இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், இந்தியாவுக்கென சொந்தமான ஜி.பி.எஸ். சேவை துவங்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.



    இதுவரை பல்வேறு ஜி.பி.எஸ். செயலிகள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஜி.பி.எஸ். அமைப்புகளை சார்ந்து இயங்குகிறது. இந்தியாவின் யுடிராக் சேவையை கொண்டு ராணுவம் மற்றும் கடற்சார் சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு இருவித நேவிகேஷன் சேவைகளை வழங்குகிறது. ஒன்று அனைவருக்குமான ஸ்டான்டர்டு பொசிஷனிங் சேவைகள் மற்றொன்று என்க்ரிப்ட், தடை செய்யப்பட்ட சேவைகள் அனுமதி பெற்ற பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு L5 மற்றும் S ஃப்ரீக்வன்சி பேன்ட்களில் வேலை செய்கிறது. யுடிராக் சேவை மிகவும் துல்லியமாக வழிகாட்டும் என்பதால் பயணிகள் மற்றும் ஹைக்கர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த அமைப்பு ரஷயாவின் GLONASS அமைப்புடன் இணையும் வசதி கொண்டுள்ளது.
    இந்தியாவில் சேவை வழங்கி வரும் அரசு வலைத்தளங்களில் ஹேக்கர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #cryptocurrency #Hacking



    இந்தியாவில் உள்ள அரசு வலைத்தளங்களில் கிரிப்டோ-ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைத்தளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேக்கர்கள் கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைத்தளங்கள் ஹேக் செயய்ப்பட்டு கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்ட்டை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைத்தளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையின்படி அரசு வலைத்தளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இண்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகிறது.



    மொனேரோ எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனேரோ வகையை சேர்ந்த கிரிப்டோகரென்சியை டிராக் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் அரசாங்க வலைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு, இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யப்படாததால் ஹேக்கர்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர். 

    இதேபோன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் மொனேரோ கிரிப்டோகரென்சி மைனிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது முன்னதாக கண்டறியப்பட்டது. 

    புதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிளவு லாபத்தை ஈட்டித்தருகிறது.
    சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஒரு வாரம் முன்னதாகவே கண்டறிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. #ArtificialIntelligence



    சென்னையில் 2015 டிசம்பர் கனமழையின் போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. யாரும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பெருமளவு சேதத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. 

    இந்நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. 

    சென்னை வெள்ள அபாய அமைப்பு (C-Flows அல்லது Chennai Flood Warning System) என அழைக்கப்படும் புதிய வழிமுறையை கொண்டு வெள்ள அபாயங்களை அதிகபட்சம் ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிந்து கொள்ள முடியும். கடலோர ஆய்வுக்கான தேசிய மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த வழிமுறை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், அதற்கு ஏற்றவாரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் செய்து கொள்ள முடியும். எண்ணியல் அடிப்படையில் புவியியல் தகவல் முறைமை எனும் அமைப்பு மூலம் இயங்கும் இந்த வழிமுறை வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பதை பகுதி, தெரு மற்றும் குறிப்பிட்ட கட்டிடம் வரை மிகத்துல்லியமாக கணிப்பதோடு, அங்கிருந்து வெளியேறுவதற்கான வழியையும் காண்பிக்கும்.


    கோப்பு படம்

    இந்த வழிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு வானிலை, கடல் சீற்ற கணிப்பு உள்பட பல்வேறு இதர விவரங்களை கொண்டு வெள்ள பாதிப்புகளை கணிக்கின்றனர். தேவையான விவரங்களை வழங்கிய 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கிவிடும். 

    வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பது குறித்த முடிவுகள் மேப்கள், எழுத்துக்கள் அல்லது நம்பர்கள் வடிவிலோ அல்லது 3D எனப்படும் முப்பறிமான முறையிலும் வழங்கப்படும். இதனால் வெள்ள பாதிப்பு சார்ந்த விவரங்களை மிகத்தெளிவாக முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

     "இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது, வரவிருக்கும் வடகிழக்கு பருவத்தில் இத்திட்டம் சோதனை செய்யப்படும்," என கடலோர ஆய்வுக்கான தேசிய மையத்தின் தலைவர் எம்.வி. ரமனமூர்த்தி தெரிவித்தார்.
    ஐபோன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதி 2018 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS



    ஆப்பிள் ஐபோன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதி 2018 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பொதுவான அம்சமாக டூயல் சிம் வசதி இருக்கிறது. முன்னதாக டூயல் சிம் வசதி மிட்ரேன்ஜ் மற்றும் ஃபிளாக்ஷிப் மாடல்களில் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், ஹூவாய், சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் போன்றவை தங்களது ஃபிளாக்ஷிப் மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட் வழங்க துவங்கின.

    ஐபோன் மாடல்களில் நீண்ட காலமாக வழங்கப்படாத அம்சமாக இருந்தது. இந்நிலையில், ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் டூயல் சிம் வசதி வழங்கியுள்ளது. முன்னதாக ஐபேட் ஏர் 2 செல்லுலார் மாடலில் ஆப்பிள் சிம் வழங்கப்பட்டு இருந்தது.



    ஆப்பிள் சிம் கொண்டு பயனர்கள் சிம் கார்டு இல்லாமலேயே நெட்வொர்க்களை மாற்றிக் கொள்ள முடியும். ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்பெட் செய்யப்பட்ட சிம் அல்லது இசிம் வசதி வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலிலும் இசிம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. இதில் நெட்வொர்க் சேவை வழங்குவோரிடம் டேட்டா திட்டத்தை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இதைகொண்டு ஐபோன் அருகில் இல்லாமலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    அந்த வகையில் இம்முறை இசிம் தொழில்நுட்பம் புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நானோ-சிம் கார்டு ஸ்லாட் மற்றொரு இசிம் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. மொபைல் போன்களில் இசிம் தொழில்நுட்பம் புதிதான ஒன்றாகும். தற்சமயம் இந்த தொழில்நுட்பம் பத்து நாடுகளில் உள்ள நெட்வொர்களில் மட்டுமே வேலை செய்கிறது.



    புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதி

    ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    அனைத்து ஐபோன் மாடல்களும் ஆப்பிளின் ஏ12 பயோனிக் சிப் மற்றும் இன்டெல் மோடெம் கொண்டிருப்பதால், இந்த வசதி சாத்தியமாகி இருக்கிறது.



    இசிம் என்றால் என்ன?

    வழக்கமாக நம்மிடையே பயன்பாட்டில் இருக்கும் சிம் கார்டுகள் மினி, மைக்ரோ மற்றும் நானோ என வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இசிம்கள் புரோகிராம் மூலம் எம்பெட் செய்யப்பட்ட சிம் கார்டுகள் ஆகும். இவற்றை கொண்டு வழக்கமான சிம் ஸ்லாட்டை எடுத்து மெல்லிய சாதனங்களை வடிவமைக்க முடியும். 

    இதன் மூலம் டெலிகாம் நெட்வொர்க் அலுவலகம் சென்று சிம் கார்டை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஆப்பிள் நிறுவனத்திற்கு முன் சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இசிம்களை தங்களது சாதனங்களில் ஏற்கனவே வழங்கி இருக்கின்றன. 



    பிரைமரி மற்றும் இரண்டாவது நம்பர்கள் எவ்வாறு இயங்கும்?

    ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் இரண்டு நம்பர்கள் எவ்வாறு இயங்கும் என ஐ.ஓ.எஸ். 12 தளத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை ஆப்பிள் தெரிவித்துள்ளது. புதிய ஐபோன்களை வாங்கும் போதே முதல் சிம் ஸ்லாட்டில் நானோ சிம் கார்டும், இரண்டாவது இசிம் கொண்டிருக்கிறது. இசிம் சேவையை ஆக்டிவேட் செய்வது எளிமையான காரியம் தான். 

    சிம் பயன்பாட்டை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் இசிம் சேவையை பிரைமரி சிம் போன்று மாற்றிக் கொள்ள முடியும். எனினும் இதற்கு நெட்வொர்க் சப்போர்ட் வழங்க வேண்டும். 

    பிரைமரி சிம் கொண்டு வாய்ஸ், எஸ்.எம்.எஸ்., டேட்டா, ஐமெசேஜ் மற்றும் ஃபேஸ் டைம் போன்றவற்றை பயன்படுத்த முடியும். இரண்டாவது சிம் கொண்டு வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டுமே பயன்படுத்த முடியும். 

    இரண்டாவது சிம் சேவையை டீஃபால்ட் லைனில் வைத்தால், இரண்டாவது நம்பர் கொண்டு வாய்ஸ், எஸ்.எம்.எஸ்., டேட்டா, ஐமெசேஜ் மற்றும் ஃபேஸ் டைம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பிரைமரி சேவையில் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டுமே பயன்படுத்த முடியும்.



    டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை எவ்வாறு வேலை செய்யும்?

    டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை அல்லது DSDS சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது, பெறவது மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை எந்த சிம் கொண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் ஒரே நேரத்தில் ஒரு நம்பரில் இருந்து மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 

    பிரைமரி நம்பர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, இரண்டாவது எண்ணிற்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் ரிங் ஆகாமல் அழைப்பு வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பப்படும். இதேபோன்று டேட்டாவும் ஒரு சமயத்தில் ஒரு சிம் கொண்டு மட்டுமே பயன்படுத்த முடியும். 

    டூயல் வோல்ட்இ வேலை செய்யுமா?

    புதிய ஐபோன் மாடல்களில் டூயல் வோல்ட்இ வசதி மென்பொருள் அப்டேட் மூலம் பின்னர் வழங்கப்படும் என்றும் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க்களில் மட்டுமே வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    உண்மையில் டூயல் சிம் வசதியை வழங்க ஆப்பிள் அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் இந்த அம்சம் ஆப்பிள் பிரியர்களுக்கு சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும்.
    ஸ்மார்ட்போன் கொண்டு வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். #technology



    ஸ்மார்ட்போன் இருந்தால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும் உணர்வு ஏற்படும். ஸ்மார்ட்போன் இல்லாமல் சில நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு நம்மில் பலரும் சிக்கியிருக்கிறோம். ஸ்மார்ட்போன் கொண்டு தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி, பொழுதுபோக்கு, கல்வி என பல்வேறு அம்சங்களை பயன்படுத்த முடியும். 

    இதேபோன்று ஸ்மார்ட்போன் கொண்டு கம்ப்யூட்டரையும் இயக்க முடியும். கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கவோ அல்லது அவற்றில் உள்ள தரவுகளையோ இயக்க வேண்டுமா. இவற்றை செய்ய ரிமோட் டெஸ்க்டாப் கனெக்ஷன் அம்சம் இருக்கிறது. 

    இந்த அம்சம் ஆர்.டி.பி. (RTP) அதாவது ரிமோட் டெஸ்க்டாப் ப்ரோடோகால் மூலம் பயனர்கள் தங்களது சாதனங்களை இயக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ வழி செய்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

    க்ரோம் எக்ஸ்டென்ஷன் மூலம் இயக்கலாம்:

    1. ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தில் அதற்கு உரிய ஆப் ஸ்டோரை திறக்க வேண்டும் 

    2. க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் 

    3. இனி, கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தில் கூகுள் க்ரோமை திறக்க வேண்டும் 

    4. க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் எக்ஸ்டென்ஷனை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் 

    5. இனி அட்ரஸ் பாரில் 'chrome://apps' என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

    6. இனி க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும் 

    7. அடுத்து, 'My Computers' பகுதியில் உள்ள 'Get started' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

    8. இந்த எக்ஸ்டென்ஷன் தானாக டவுன்லோடு ஆகி, இன்ஸ்டால் ஆகும் 

    9. இன்ஸ்டால் ஆகி முடிந்ததும், எக்ஸ்டென்ஷன் பகுதிக்கு சென்று 'Enable Remote Connections' ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும் 

    10. உங்களது இணைப்புக்கு புதிய கடவுச்சொல் பதிவு செய்து 'OK' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

    11. ஸ்மார்ட்போனில் செயலியை திறந்து, 'PC' பெயரை க்ளிக் செய்ய வேண்டும் 

    12. நீங்கள் பதிவிட்ட கடவுச்சொல் பதிவு செய்து, பயன்படுத்த துவங்கலாம்

    ரிமோட் டெஸ்க்டாப் வலைத்தளம் பயன்படுத்தலாம்:

    1. முதலில் கூகுள் க்ரோம் சென்று 'remotedesktop.google.com' வலைத்தளம் செல்ல வேண்டும் 

    2. அடுத்து 'Remote Access' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

    3. இனி, 'Turn On' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

    4. உங்களது கம்ப்யூட்டருக்கு புதிய பெயர் அல்லது ஏற்கனவே இருக்கும் பெயரை பயன்படுத்தலாம் 

    5. இனி 'Next' ஆப்ஷனை க்ளிக் செய்து புததாக கடவுச்சொல் பதிவிட வேண்டும் 

    6. அடுத்து 'Start' பட்டனை க்ளிக் செய்யவும் 

    7. குறிப்பிட்ட ஆப் ஸ்டோர்களில் இருந்து 'Chrome Remote Desktop' செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யவும் 

    8. செயலியை திறந்து, கம்ப்யூட்டர் பெயரை க்ளிக் செய்ய வேண்டும் 

    9. இறுதியில் கடவுச்சொல் பதிவிட்டு பயன்படுத்த துவங்கலாம்
    ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகைகளில் அதிகம் விற்பனையாகும் ரூ.399 ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.100 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. #Jio #offers



    ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக சமீபத்தில் 16 ஜிபி டேட்டாவை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்கியது. 

    கொண்டாட்டத்தின் நீட்சியாக ஜியோவின் அதிகம் விற்பனையாகும் சலுகையை ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.100 தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு ரூ.399 பிரீபெயிட் சலுகையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.50 உடனடி தள்ளுபடி மற்றும் போன்பெ மூலம் பணம் செலுத்தும் போது ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ரூ.399 பிரீபெயிட் சலுகையை பயனர்கள் மாதம் ரூ.100 என்ற கட்டணத்தில் பெற முடியும். ஜியோவின் ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு மாதம் 42 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.



    ஜியோ சலுகையை பெறுவது எப்படி?

    - முதலில் மைஜியோ செயலியில் லாக்-இன் செய்து ரீசார்ஜ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
    - அடுத்து பை (Buy) பட்டனை க்ளிக் செய்து பேமென்ட் பக்கத்திற்கு செல்ல வேண்டும்
    - பேமென்ட் ஆப்ஷனில் போன்பெ சேவையை தேர்வு செய்ய வேண்டும்
    - போன்பெ கணக்கில் சைன்-இன் செய்து உங்களது மொபைல் நம்பரை ஓ.டி.பி. மூலம் உறுதி செய்ய வேண்டும்
    - போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்தி ரூ.50 கேஷ்பேக் பெற முடியும்

    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகை செப்டம்பர் 12-ம் தேதி துவங்கி செப்டம்பர் 21-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பயனர் விவரங்களை சேகரித்து வழங்கிய ஐ.ஓ.எஸ். செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. #iOS



    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இருக்கும் சில செயலிகள் பயனர்களின் லொகேஷன் விவரங்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கியது சூடோ செக்யூரிட்டி குழுமம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் வரி விளம்பரங்கள் சார்ந்தவைகளாக இருக்கின்றன. இவை ப்ளூடூத் எல்.இ. பீக்கன் டேட்டா, ஜி.பி.எஸ். லாங்கிடியூட் மற்றும் லேட்டிடியூட், வைபை எஸ்.எஸ்.ஐடி மற்றும் பி.எஸ்.எஸ்.ஐ.டி. உள்ளிட்டவற்றை கொண்டு பயனரின் லொகேஷன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது.

    சேகரிக்கப்பட்ட விவரங்களை செயலிகள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் பயனர் விவரங்களை விற்று வருகின்றன. சில சமயங்களில் இந்த செயலிகள் செல்லுலார் நெட்வொர்க் எம்.சி.சி./எம்.என்.சி, ஜி.பி.எஸ். ஆல்டிடியூட் மற்றும் பல்வேறு விவரங்களை வாடிக்கையாளர்களிடம் தகவல் கொடுக்காமலேயே எடுத்துக் கொள்கின்றன.



    செயலிகளின் தன்மை சார்ந்து ஜி.பி.எஸ். விவரங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய காரணத்தை மட்டும் குறிப்பிட்டு, அவை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது குறித்த தகவல்களை பயனர்களுக்கு வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. 

    சில செயலிகள் ஜி.பி.எஸ். விவரங்களுடன் அக்செல்லோமீட்டர் விவரங்கள், பேட்டரி சார்ஜ் நிலவரம் மற்றும் ஸ்டேட்டஸ் என பல்வேறு விவரங்களை சேகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிப்பதாக இதுவரை 24 செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



    முன்னதாக வெளியான தகவல்களில் உள்ளூர் மொழிகளில் செய்திகளை வழங்கும் கிட்டத்தட்ட 100 செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஐ.ஓ.எஸ். சாதனங்களில் நீங்கள் டிராக் செய்யப்படாமல் இருக்க செட்டிங்ஸ் -- பிரைவசி -- அட்வெர்டைசிங் ஆப்ஷன் சென்று லிமிட் ஆட் டிராக்கிங் வசதியை இயக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது லொகேஷன் விவரங்கள் சேகரிக்கப்படாமல் இருக்கும். 

    இத்துடன் லொகேஷன் விவரங்களை சேகரிக்கும் செயலிகள் கூடுதல் விவரங்களுக்கு பிரைவசி பாலிசியை பார்க்கக் கோரும் பட்சத்தில் அதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பது நல்லது. 
    ஆன்லைன் வாசிகளின் விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் கூகுள் சாதனம் விற்பனைக்கு வந்தது. புதிய கூகுள் சாதனம் டைட்டன் செக்யூரிட்டி கீ என அழைக்கப்படுகிறது. #Google
     


    கூகுளின் டைட்டன் செக்யூரிட்டி கீ கூகுள் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கூகுள் சாதனம் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களையும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள பல்வேறு சாதனங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் செக்யூரிட்டி கீ சாதனங்கள் சைபர்செக்யூரிட்டி பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

    விற்பனைக்கு வந்திருக்கும் கூகுள் செக்யூரிட்டி கீ, 2017-ம் ஆண்டு முதல் கூகுளில் பணியாற்றும் சுமார் 85,000 ஊழியர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் ஆன்லைன் மற்றும் ஹேக்கர்களிடம் இருந்து எவ்வித பாதிப்புகளிலும் சிக்கவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது.



    கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ பயன்படுத்திய கூகுள் ஊழியர்கள் எவரும் ஃபிஷிங் எனப்படும் ஆன்லைன் அச்சுறுத்தலால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆன்லைனில் ஃபிஷிங் பல்வேறு விதங்களில் மேற்கொள்ளப்படுகிறது, இவற்றை கொண்டு பயனர்களின் விவரங்களை பறிப்பதே ஹேக்கர்களின் நோக்கம் ஆகும்.

    பொதுவாக செக்யூரிட்டி கீ சாதனங்கள் யு.எஸ்.பி. சார்ந்த சாதனங்கள் ஆகும், இவை பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு-அடுக்கு வழிமுறையை செயல்படுத்தும். பொதுவான பாதுகாப்பு வழிமுறையில் பயனர்கள் தங்களின் பாஸ்வேர்டு மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.



    இதுபோன்ற செக்யூரிட்டி கீ சாதனங்கள் இரண்டாவது பாதுகாப்புடன் அவற்றை கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் செருக வேண்டும். இது ஹேக்கர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். கூகுள் ஊழியர்கள் பயன்பாட்டில், மிகவும் கச்சிதமாக வேலை செய்ததைத் தொடர்ந்து கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ விற்பனை இன்னும் துவங்காத நிலையில், அமெரிக்க சந்தையில் இதன் விலை 50 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×