என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கிய போர்டிரெயிட் ஓவியம் ரூ.3.17 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. #ArtificialIntelligence



    கம்ப்யூட்டர் குறியீடுகளால் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) உருவான போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.17 கோடி) விலைக்கு ஏலம் போனதாக பிரபல ஏல நிறுவனமான கிரிஸ்டி அறிவித்துள்ளது.

    ஏலத்தில் ரூ.3.17 கோடி விலையில் ஏலம் போகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த முதல் போர்டிரெயிட் ஓவியம் எட்மான்ட் டி பெலாமி (Edmond De Belamy) என அழைக்கப்படுகிறது. இது 18 அல்லது 19ம் நூற்றாண்டை சேர்ந்தவரின் போர்டிரெயிட் ஆகும். இந்த போர்டிரெயிட்டில் இருக்கும் நபர் கருப்பு வெள்ளை நிற சூட் அணிந்திருக்கும் படி, தங்க நிற ஃபிரேம் கொண்டுள்ளது.

    போர்டிரெயிட்டில் உள்ள முகம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இந்த படம் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. வழக்கமான ஓவியங்களில் ஓவியரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த ஓவியத்தில் கணித கோட்பாடு அச்சிடப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Obvious

    ஆப்வியஸ் எனும் ஃபிரென்ச் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வரைந்த ஓவியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஓவியத்திற்கென பியரி ஃபாட்ரெல் மொத்தம் 15,000 போர்டிரெயிட்களை கம்ப்யூட்டர் மென்பொருளில் பயன்படுத்தி இருக்கிறார். 

    போர்டிரெயிட் வரைவதற்கான வழிமுறைகளை மென்பொருள் புரிந்து கொண்டால், அதுவாகவே போர்டிரெயிட் வரைய துவங்கிடும். இதற்கென கூகுள் ஆய்வாளரான குட்ஃபெல்லோ உருவாக்கிய புதிய அல்காரிதம் பயன்படுத்தப்பட்டது. இதனை பிரென்ச் குழுமம் பெலாமி ஃபேமிலி என அழைக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கிய ஓவியம் ஏலத்தில் 7000 முதல் 10,000 டாலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெலாமி ஃபேமிலி உருவாக்கிய முதல் போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியின் ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் வெப் பதிப்புகளில் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டு, இதற்கான அப்டேட் வழங்கப்படுகின்றன. #Whatsapp



    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த அம்சத்தை உருவாக்கி வரும் வாட்ஸ்அப் ஒருவழியாக பயனர்களுக்கு வழங்கி இருக்கிறது.

    புதிய ஸ்டிக்கர் அம்சத்திற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்படுவதால், அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க சில நாட்கள் ஆகும். இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் ஸ்டோர் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

    முதற்கட்டமாக ஸ்டிக்கர்ஸ் அம்சத்தில் கப்பி என்ற பெயரில் ஒரே பேக் மட்டும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை அன்-இன்ஸ்டால் செய்து, கூடுதலாக கிடைக்கும் ஸ்டிக்கர் பேக்களை இன்ஸ்டால் செய்யலாம். ஸ்டிக்கர்கள் எமோஜி, புகைப்படங்கள் அல்லது ஜிஃப்களை விட வித்தியாசமானவை. இவை இயங்குதளங்கள் அல்லது எமோஜி போன்ற தளங்களின் ஆதரவின்றி கிடைக்கிறது.  

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் ஜிஃப் ஐகானை அடுத்து வலதுபுறத்தில் ஸ்டிக்கர் ஐகான் தெரியும். இதில் பயனர் விரும்பும் ஸ்டிக்கர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஐ.ஓ.எஸ். பயனர்கள் டெக்ஸ்ட் இன்புட் பகுதியில் காணப்படும் ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும்.

    புதிதாக பேக்களை சேர்க்க ஸ்டிக்கர் பகுதியியன் இடது புறத்தில் இருக்கும் பிளஸ் ஐகானஐ கிளிக் செய்து ஸ்டிக்கர் ஸ்டோர் செல்ல வேண்டும். இங்கு அனைத்து ஸ்டிக்கர்களும் இடம்பெற்றிருக்கும். பயனர்கள் ஸ்டிக்கர்களை பிரீவியூ மற்றும் டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மை ஸ்டிக்கர்ஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.
    ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கும் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் வழங்கும் கேஷ்பேக் தொகை வாடிக்கையாளரின் மைஏர்டெல் அக்கவுன்ட்டில் ரூ.50 மதிப்பு கொண்ட 40 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. கேஷ்பேக் மற்றும் கூடுதல் டேட்டா வழங்க ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மொபைல் போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.

    இந்த டிஜிட்டல் கூப்பன்களை தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனர்கள் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளையும் போஸ்ட்பெயிட் பயனர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது டிஜிட்டல் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சலுகையை பெறுவது எப்படி?

    ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை வாங்க வேண்டும்

    அக்டோபர் 31ம் தேதிக்குள் புதிய 4ஜி ஸ்மாரட்போனி்ல் 4ஜி சிம்கார்டினை செருக வேண்டும்

    மைஏர்டெவ் செயலி மூலம் ரீசார்ஜ் அல்லது பில் செலுத்தும் போது கேஷ்பேக் கூப்பன்கள் தானாக சேர்க்கப்படும் 

    டிஜிட்டல் கூப்பன்கள் வாடிக்கையைளருக்கு வழங்கியதில் இருந்து 40 மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது

    ஒரு சமயத்தில் ஒரே கூப்பனை மட்டுமே பயன்படுத்த முடியும்

    முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டினை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கியது. கடந்த வாரம் ஏர்டெல் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலி வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் ஜியோபோன் 2ல் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். #jiophone



    ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதியை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது. ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

    முன்னதாக யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதி ஜியோபோனில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் வசதி மட்டும் வழங்கப்படாமல் இருந்து, தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கான அறிவிப்பு ரிலைன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலியை டவுன்லோடு செய்ய ஜியோஸ்டோர் சென்று இன்ஸ்டால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்ததும் சில நொடிகளில் செயலி டவுன்லோடு ஆகி, இன்ஸ்டால் ஆகும். செயலியை பயன்படுத்த ஜியோபோனின் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- டிவைஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். 



    ஜியோபோனில் வாட்ஸ்அப் செட்டப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது மொபைல் நம்பருக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். ஒ.டி.பி. மூலம் உங்களது மொபைல் நம்பரை உறுதிப்படுத்தியதும் வாட்ஸ்அப் பயன்படுத்த துவங்கலாம்.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்த குறிப்பிட்ட ஐ.எம்.இ.ஐ. நம்பர் லாக் செய்யப்படவில்லை. இதனால் ஜியோபோனில் எந்த ஜியோ சிம் கார்டு நம்பரை கொண்டும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது எழுத்துக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும் என்றாலும் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். தளங்களில் இருப்பதை போன்று ஜியோபோனில் பயன்படுத்த முடியாது. கை ஓ.எஸ்.-இல் இயங்கும் ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளவோ, போட்டோ ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியாது. மேலும் லொகேஷன் ஷேரிங் ஆப்ஷன், சாட் பேக்கப் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது.
    ஃபேஸ்புக் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலக மார்க் சூக்கர்பர்க்கிற்கு அந்நிறுவன பங்குதாரர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சூக்கர்ப்ர்க் விலக வேண்டும் என அந்நிறுவன பங்குதாரர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

    பங்குதாரர்களாக பொருளாலர்கள், மூத்த முதலீட்டு அலுவலர்கள், டிரில்லியம் அசெட் மேனேஜ்மென்ட் எனும் தனியார் நிறுவனம் உள்ளிட்டவை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பதவிகள் பிரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

    ஃபேஸ்புக் நிறுவன துணை நிறுவனரான மார்க் சூக்கர்பர்க் தற்சமயம் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட இரண்டு பொறுப்புகளை வகிக்கிறார்.

    "ஃபேஸ்புக்கின் நிர்வாக அமைப்பு முதலீட்டாளர்களுக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. முதலீட்டாளர் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பங்குதாரர் மதிப்பை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்," என இல்லினியோஸ் மாநில பொருளாலர் மைக்கேல் ஃபிரெரிக்ஸ் தெரிவித்துள்ளார். 



    தொடர் சர்ச்சைகளை ஃபேஸ்புக் கையாண்ட விதம் தான் பங்குதாரர்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கிறது.

    ஃபேஸ்புக் தொடர் சர்ச்சைகளின் துவக்கம் கேம்பிரிட்ஜ் அனாலடிகா விவகாரமாக அமைந்தது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 8.7 கோடி பேரின் விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது அம்பலமானது. இதைத் தொடர்ந்து ஹேக்கர்கள் கைவரிசையால் சுமார் மூன்று கோடி பேரின் விவரங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து திருடப்பட்டது.

    தற்சமயம் எழுந்து இருக்கும் கோரிக்கைக்கான வாக்கெடுப்பு மே 2019 இல் நடைபெற இருக்கும் ஃபேஸ்புக் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் நடைபெறலாம், எனினும் இந்த கோரிக்கை நிறைவேறும் வாய்ப்புகள் குறைவே. சூக்கர்பர்க் மற்றும் சிறு நிறுவனங்கள் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமைகளில் சுமார் 70 சதவிகிதத்தை கொண்டுள்ளனர்.

    முன்னதாக இதேபோன்ற சூழல் கடந்த ஆண்டு ஏற்பட்ட போது சுமார் 51 சதவிகித பங்குதாரர்கள் ஆதரவளித்தனர்.
    அதிக நேரம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கேன உருவாக்கப்பட்டுள்ள யுவர் ஹவர் எனும் செயலியின் அம்சங்களை பார்ப்போம். #androidapps
    ‘காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது’ என்ற பழமொழியை எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் நாம் மறந்து வருகிறோம். எழுந்தவுடன் கண் விழிப்பதே செல்போனில் தான் என்றாகிவிட்டது. நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக போன் பார்ப்பதால் நம்மையும் அறியாமல் நாம் அதற்கு அடிமையாகிறோம்.

    இதனால் நமது வேலையும் பாதித்து, உடல் நலமும் கெடுகிறது. இதிலிருந்து நம்மை விடுவிக்கவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ‘யுவர் ஹவர்’ (your hour) ஆன்ட்ராய்டு செயலி (ஆப்). இந்த செயலியில் இருக்கும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவோரை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்.

    ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தததும், நாம் ஒரு நாளில் எத்தனை முறை ஸ்மார்ட்போனை அன்லாக் செய்திருக்கிறோம், எவ்வளவு நேரம் உபயோகித்து இருக்கிறோம் போன்ற தகவல்களை நமக்கு இந்த செயலி தெரியப்படுத்துகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு நாம் எவ்வளவு நேரம் போனில் நேரம் செலவிட்டு இருக்கிறோம் என்பதையும் கணக்கிட்டு காண்பிக்கிறது.



    ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற மற்ற வலைத்தளங்களில் நாம் செலவிட்ட நேரத்தையும் துல்லியமாக சொல்லிவிடுகிறது. இத்துடன் அதற்கான வரைபடமும் (graph) போட்டு காண்பித்து விடும். இதை வைத்து நாம் போன் உபயோகிப்பதில் எந்த நிலையில் இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த செயலி ஏங்குபவர், எப்போதாவது உபயோகிப்பவர், சார்ந்து இருப்பவர், போனை காதலிப்பவர், அதற்கு அடிமையானவர் என்ற ஐந்து வகைகளில் நாம் எந்த பிரிவில் இருக்கிறோம் என்பதை நமது பயன்பாட்டை வைத்து சொல்லிவிடும். ஏதாவது ஆப் பார்க்க ஆரம்பிக்கும் போது நாம் ஒரு டைமரும் (timer) வைத்துக் கொள்ளலாம். இதனால் அதிக நேரம் போனைப் பார்த்து காலத்தை விரயமாக்காமல் காப்பாற்றும். #androidapps
    ஃபேஸ்புக் தளத்தில் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், உங்களின் விவரம் பறிபோனதா என்பதை அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். #FacebookHack



    ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

    அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது. சமீபத்தில் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்தது. அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டன. 

    இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.



    இவ்வாறு உங்களது தகவலும் திருடப்பட்டு இருப்பின், அதை எவ்வாறு கண்டறிய ஃபேஸ்புக் உதவி பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இந்த பக்கத்தின் கீழ் உங்களது அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும். உங்களது விவரங்கள் திருடப்பட்டது உண்மையெனில் அதை அறிந்து கொள்ளலாம். மேலும் திருடப்படவில்லை எனில், அந்த விவரமும் அறிந்து கொள்ளலாம்.

    வல்லுநர்களின் படி தகவல் பறிகொடுத்த பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஹேக்கர்கள் திருடியிருக்கும் தகவல் கொண்டு போலி அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியும் என்பதால், பயனரின் அக்கவுன்ட் விவரங்களை இயக்க முடியும்.

    ஹேக்கர்கள் திருடிய தகவல்களின் விவரங்களை ஃபேஸ்புக் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தும். 

    மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ஃபேஸ்புக் தளத்தின் நியூஸ் ஃபீடில் வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் புதுவிதமாக போஸ்ட் பதிவிட வழி செய்துள்ளது. #Facebook #SocialMedia



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 3டி படங்களை உருவாக்க முடியும்.

    பயனர்கள் பல்வேறு லேயர்களை உருவாக்கி, அவற்றை மாற்றியமைத்து சோதனை செய்யும் வசதியும், நிறம் மற்றும் டெக்ஸ்ச்சர்களை மாற்றியமைத்து சிறப்பான 3டி அனுபவத்தை பெருமளவு உருவாக்கி கொள்ளலாம்.

    நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனைவரும் 3டி படங்களை பார்க்க முடியும். எனினும் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக ஃபேஸ்புக் 360 தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 3டி படங்களுக்கான தொழில்நுட்பம் பொருள், இடத்தின் முன்பகுதி மற்றும் பின்னணி இடைவெளியை கணக்கிடும்.



    புகைப்படத்தை போர்டிரெயிட் மோடில் எடுத்து, அதனை 3டி போட்டோவாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும். இனி படத்தை ஸ்கிரால், பேன் அல்லது டில்ட் செய்து படத்தை உண்மையான 3டி-யில் பார்க்க முடியும். ஆகுலஸ் கோ பிரவுசர் அல்லது ஃபயர்பாக்ஸ்-இல் ஆகுலஸ் ரிஃப்ட் உள்ளிட்டவற்றில் 3டி புகைப்படங்களை பார்க்கலாம். 

    இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த கருத்துக்களை பயனரிடம் கேட்டறிந்து வருகிறோம், தொடர்ந்து இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கி வருகிறோம் என ஃபேஸ்புக் 360 பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த அம்சம் மே மாதம் நடைபெற்ற எஃப்8 நிகழ்வில் ஃபேஸ்புக் அறிமுகம் செய்தது.
    வாட்ஸ்அப் செயலியில் ஆகஸ்டு மாதம் கண்டறியப்பட்ட பிழை ஒரு வழியாக சரிசெய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் இருந்து வந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பயனர் வீடியோ கால் ஏற்கும் போது ஹேக்கர்கள் செயலியை ஹேக் செய்துவிட முடியும். இந்த பிழையை தொழில்நுட்ப வலைதளங்களான ZDnet மற்றும் தி ரெஜிஸ்டர் உள்ளிட்டவை வெளிப்படுத்தின. 

    வாட்ஸ்அப் ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருந்து வந்த பிழை ஆகஸ்டு மாதத்தில் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாத துவக்கத்தில் சரி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்த விவரங்களை வழங்க ஃபேஸ்புக் மறுத்துவிட்டது. பிழை சரி செய்யப்படும் முன், இவை ஏதேனும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    அழைப்பின் போது ஹேக் செய்வோர் தரப்பில் இருந்து ++ என கிளிக் செய்தாலே வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு விடும் என இந்த பிழையை கண்டறிந்த டிராவிஸ் ஆர்மான்டி தெரிவித்தார். இவர் கூகுளின் பிராஜக்ட் ஜீரோவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பு சாரந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறது. கடந்த வாரம் ஃபேஸ்புக் வரலாற்றில் மிகப்பெரும் பாதுகாப்பு பிழை அரங்கேறியது. இதில் சுமார் ஐந்து கோடி பயனர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டது.
    கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலால், கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. #GooglePlus #Google
    சான் பிரான்சிஸ்கோ:

    உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கூகுள் தேடல் மட்டுமல்லாது, பல்வேறு வகையான வசதிகளையும் நிர்வகித்து வரும் கூகுள், தனது சமூக வலைதளமான கூகுள் ப்ளஸை மூடுவதாக நேற்று அறிவித்தது.

    முன்னதாக கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூகவலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

    500,000-க்கும் மேற்பட்ட கூகுள் பளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்குப் போட்டியாக கூகுள் பிளஸ் வலைத்தளம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

    கூகுள் ப்ளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



    கடந்த மார்ச் மாதத்தில், பாதுகாப்பு தணிக்கைக்குழு வெளியிட்ட தகவல்படி, மென்பொருள் தொழில்நுட்ப பிழை காரணமாக, கூகுள் ப்ளஸ் பயனர்கள், அவர்களது நண்பர்களுடன் மட்டுமே பகிரும் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், எந்தெந்த கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், 500,000-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, எந்த பயனர்களின் கணக்குகளிலும் அதற்கான சாட்சிகளும் இல்லை என்றும் கூகுள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.



    இன்னும் 10 மாதங்களுக்குள் பயனர்ங்கள் தங்களது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ப்ளஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முன்னதாக கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. #GooglePlus #Google

    ட்விட்டர் சமூக வலைதளத்தில் நீங்கள் பதிவிட்ட பழைய ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #Twitter #socialmedia



    ட்விட்டர் துவங்கப்பட்ட காலத்தில், இந்த வலைதளம் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் தளமாக இருக்கும் போல என்ற கருத்து பரவலாக பரவியிருந்தது. 

    பின் படிப்படியாக ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ட்விட்டர் பயன்பாடுகளில் அந்நிறறுவனம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

    ட்விட்டர் பயன்படுத்த துவங்கிய காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் தொடர்ந்து அதிகப்படியான ட்விட்களை பதிவிட்டு, தற்சமயம் அவை அர்த்தமற்றதாக உணர்கிறீர்களா?

    ட்விட்டரில் நீங்கள் பதிவிட்ட ட்விட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சிரமமான காரியமாக தெரிகிறதா, கவலை வேண்டாம். நீங்கள் பதிவிட்ட ட்விட்களை இனியும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளீர்களா?

    அப்படியெனில் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். சமூக வலைதளங்களில் இருந்து சற்று தள்ளியிருக்கவோ அல்லது சில காலம் தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களா. அப்படியெனில் உங்களது ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க பல்வேறு சேவைகள் இருக்கின்றன.

    ட்விட்டர் டைம்லைனில் 3200 ட்விட்கள் மட்டுமே தெரியும் என்றாலும், உங்களது பழைய ட்விட்களை சர்ச் கன்சோலில் இருந்து தேடினால் அவை கிடைக்கும். 



    பழைய ட்விட்களை பேக்கப் செய்வது

    உங்களது அனைத்து ட்விட்களையும் அழிக்க நினைக்கும் பட்சத்தில், அவற்றை டவுன்லோடு செய்து பேக்கப் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் டவுன்லோடு செய்யும் சிப் ஃபைல் அனைத்து ட்விட்கள் மற்றும் ரீட்விட்களையும் கொண்டிருக்கும்.

    உங்களின் ட்விட்டர் ஆர்ச்சிவ் ஃபைலை டவுன்லோடு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

    1) முதலில் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்

    2) கீழ் புறம் ஸ்கிரால் செய்து பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் Request your archive ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

    3) இனி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதில் உங்களது விவரங்கள் இருக்கும் டவுன்லோடு செய்யக்கூடிய ஃபைலாக இடம்பெற்றிருக்கும்



    ட்விட்டெலீட் (TweetDelete) சேவையை கொண்டு உங்களின் அனைத்து ட்விட்களையும் அழிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் பதிவிடும் ட்விட்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து போக செய்ய முடியும். எனினும் மூன்றாம் தரப்பு சேவை என்பதால் சமீபத்தில் பதிவிட்ட 3200 ட்விட்களை மட்டுமே அழிக்க முடியும். 

    உங்களது எதிர்கால ட்விட்களை அழிக்க குறைந்த பட்சம்: ஒரு வாரம், இரண்டு வாரங்கள், ஒரு மாதம், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வருடம் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டெலீட் உங்களின் அக்கவுன்ட்டை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை சரிபார்க்கும். ட்விட்டர் செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்கள் சென்று இதற்கான அனுமதியை மாற்றியமைக்கலாம்.



    ட்விட்டர்இரேசர் (TwitterEraser) கொண்டு உங்களது 3200 ட்விட்களையும் அழிக்க முடியும். எனினும் 6.99 டாலர்கள் செலுத்தி அப்கிரேடு செய்யும் போது அதிகப்படியான ட்விட்களை அழிக்கலாம்.

    உங்களது அனைத்து ட்விட்டர் ஆர்ச்சிவ்களையும் ட்விட்டெலீட்டில் அப்லோடு செய்ய வேண்டும். பின் சர்ச் ஃபில்ட்டர் மூலம் ட்விட்களை தேதி, ஹேஷ்டேக் மற்றும் குறியீட்டு சொல் கொண்டு தேடலாம். 

    பல்வேறு ட்விட்களை அழிக்கும் போது, அந்த மாற்றங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட மாட்டாது. ட்விட்டரில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்விட்களை மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும், இந்த எண்ணி்க்கை ஆயிரங்களை கடக்கும் பட்சத்தில் அதற்கான நேரம் அதிகமாகும். 

    ட்விட்களை அழிக்கும் போது அவற்றை பொது மக்கள் தேடும் போது கிடைக்காமல் போகும். எனினும் நீங்கள் அழிக்கும் ட்விட்களை ட்விட்டர் சர்வெர்களில் இருக்கும். சட்ட ரீதியிலான தேவைகளுக்காக அவை தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக ட்விட்டர் உங்களது ட்விட்களை பேக்கப் வைத்திருக்கும். #Twitter #socialmedia
    வாட்ஸ்அப் செயலியின் ஆன்ட்ராய்டு வெர்ஷனில் பயனுள்ள அம்சம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #WhatsApp #Android



    வாட்ஸ்அப் செயலியில் ஸ்வைப் டு ரிப்லை அம்சம் சமீபத்தில் வழங்கப்பட்டது. தொடர்ந்து புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வரும் வாட்ஸ்அப் இம்முறை மற்றொரு புதிய அம்சத்தை வழங்கி வருகிறது. பிக்சர்-இன்-பிக்சர் மோட் என அழைக்கப்படும் புதிய அம்சம் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியினுள் பார்க்க வழி செய்யும்.

    ஆன்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சமாக பிக்சர்-இன்-பிக்சர் மோட் இருந்தது. வாட்ஸ்அப் புதிய அப்டேட் விவரங்களை வழங்கி வரும் WABetaInfo செயலியில் புதிய அம்சம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு 2.18.301 தளத்தில் புதிய அம்சம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    ஏற்கனவே இந்த வாட்ஸ்அப் பதிப்பை பயன்படுத்துவோர் புதிய அம்சம் கிடைக்கவில்லை எனில், வாட்ஸ்அப் செயலியை பேக்கப் செய்து ரீ-இன்ஸ்டால் செய்யலாம் என கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களின் வீடியோ லின்க்கள் பகிர்ந்து கொள்ளப்படும் போது பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆக்டிவேட் ஆகும். இதை கிளிக் செய்யும் போதே பிக்சர்-இன்-பிக்சர் மோட் தெரியும், இதை கொண்டு தொடர்ந்து சாட் செய்ய முடியும்.

    சாட் ஸ்கிரீனை தொடரும் போது இந்த அம்சம் மறைந்துவிடும். வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் இவ்வாறு இருக்காது என்பதால், ஆன்ட்ராய்டு தளத்திற்கான அம்சம் மாற்றப்படலாம் என தெரிகிறது.
    ×