என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். #Forbes



    ஃபோர்ப்ஸ் பத்திரிகை சார்பில் டெக் உலகின் டாப் 50 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தொழில்நுட்ப சந்தையில் முன்னணி பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

    ஃபோர்ப்ஸ் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பெண் அதிகாரிகள் சைபர்செக்யூரிட்டி, நிறுவனம் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பம், கேமிங், செயற்கை நுண்ணறிவு, ஏரோ-ஸ்பேஸ், பயோடெக் மற்றும் பல்வேறு பிரிவுகளில் தலைமை வகிக்கின்றனர். 

    அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் 2018 பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.



    அவ்வாறு, சிஸ்கோவின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அலுவலரான பத்மஸ்ரீ வாரியர், உபெர் நிறுவன மூத்த தலைவர் கோமல் மங்டானி, உபெர் நிறுவன தொழில்நுட்ப அலுவலர் நேஹா நர்கடெ, டிராபிரெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி காமாக்‌ஷி சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

    அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினி உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பெண் தலைவர்கள் அவரவர் துறைகளில் தங்களை நிரூபித்து வருகின்றனர்.
    அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். #AsusRogphone



    அசுஸ் ரோக் (ROG) போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அசுஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும்.

    புதிய அசுஸ் ரோக் போனில் 6.00 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED HDR டிஸ்ப்ளே, கேமிங் ஹெச்.டி.ஆர்., மொபைல் ஹெச்.டி.ஆர். உள்ளிட்டவை ஸ்னாப்டிராகன் 845 உதவியுடன் பிரத்யேக டிஸ்ப்ளே சிப் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் அசுஸ் ரோக் போனில் கேம்கூல் சிஸ்டம் மூலம் ஸ்மார்ட்போனின் வெப்பம் குறைக்கப்படுகிறது.

    பிரத்யேக அல்ட்ராசோனிக் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது புறம் மற்ரும் இடது புறங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவை லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்டிரெயிட் மோட்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்டன்களை ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    இந்த பட்டன்களை கேமிங் அல்லாத அம்சங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். கேம்களில் ஃபோர்ஸ் ஃபீட்பேக் அம்சத்திற்கென அதிர்வுகளை வழங்க அதிநவீன ஹேப்டிக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் வைஜிக் சான்று பெற்ற 802.11ad 60GHz வைபை, 2x2 MIMO மற்றும் வைபை டைரக்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் போர்ட்டில் ஜிகாபிட் ஈத்தர்நெட் வசதியை சப்போர்ட் செய்யும். பயனர்கள் இதனை யு.எஸ்.பி. டைப்-சி வழியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றுடன் ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.

    அசுஸ் ரோக் போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு 30 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் 0-60% சார்ஜ் ஆக 33 நிமிடங்களும், 85% வரையிலான சார்ஜ் ஆக ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும். ஸ்மார்ட்போனின் பின்புறம் இடம்பெற்று இருக்கும் லோகோ நீங்கள் தேர்வு செய்யும் நிறத்தில் பல்வேறு வகைகளில் மிளரச் செய்யும். 



    அசுஸ் ரோக் போன் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெதச்.டி.+ 18:9 90Hz, AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - கேமிங் ஹெச்.டி.ஆர். மற்றும் மொபைல் ஹெச்.டி.ஆர்.
    - 2.96 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ரோக் கேமிங் X மோட் யு.ஐ.
    - டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 1.4µm பிக்சல், 1/2.55″ சோனி IMX363 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - முன்பக்கம் டூயல் 5-மேக்னெட் ஸ்பீக்கர், டூயல் NXP 9874 ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர், ஹை-ரெஸ் ஆடியோ, டி.டி.எஸ். 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய அசுஸ் ரோக் போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் அசுஸ் ரோக் போன் விலை ரூ.69,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனினை பயனர்கள் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியில் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
    இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கம் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கத்தில் புதிய தோற்றம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் வாரங்களில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மற்றவர்களுடன் எளிதில் இணையும் வகையில் வழிமுறைகளை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னதாகவே, சில பயனர்களின் ப்ரோஃபைல் பக்கத்தின் மேல் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கின்றனர்.

    புதிய மாற்றங்களின் படி புதுவித ஐகான்கள், பட்டன்கள் மற்றும் டேப்கள் செயலியின் தோற்றம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் தெரிகிறது. புதிய அப்டேட் பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ப்ரோஃபைல் க்ரிட்டில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாது.



    அடுத்த சில வாரங்களில் இதுபோன்று பல்வேறு மாற்றங்களை இன்ஸ்டாகிராம் செயலியில் பார்க்க முடியும். அந்த வகையில் ஐகான்கள், பட்டன்கள் மற்றும் டேப்களிடையே நேவிகேட் செய்யும் முறைகளில் மாற்றம் செய்யப்படலாம். இவை செயலியின் தோற்றத்தை சுத்தமாகவும் பயன்பாட்டை எளிமையாக்கும் படி இருக்கும்.

    செயலியின் புதிய மாற்றங்களை வெவ்வேறு கட்டங்களில் இன்ஸ்டாகிராம் சோதனை செய்யும் என்றும், இவற்றை வெவ்வேறு இணைப்புகளில் சோதனை செய்து, பயனர் வழங்கும் கருத்துக்களின் அடிப்படையில் அனுபவத்தை மேம்படுத்தும்.

    முன்னதாக இந்த வாரத்தில் போலி பின்தொடர்பாளர்கள் மற்றும் ஸ்பேமர்களை முடக்க செயலியில் முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலி செயலிகளை பயன்படுத்தி ஃபாளோ, லைக், கமென்ட் உள்ளிட்டவற்றை பெறும் பயனர்களின் அக்கவுன்ட்களை முடக்கத் துவங்கியது. 

    மேலும் இன்ஸ்டா பயனர்கள் தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுல்ளது. இதன் மூலம் பயனர்களின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படவோ அல்லது ஸ்பேம் அக்கவுன்ட் போன்று பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு.
    இந்தியாவிலேயே முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. #Jio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ கே.கே.டி.ஐ. நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம் கே.கே.டி.ஐ. நிறுவனம் தனது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் வோல்ட்இ சேவையை வழங்கும் முதல் ஜப்பான் நிறுவனமாக இருக்கிறது.

    இதன் மூலம் வோல்ட்இ சர்வதேச ரோமிங் சேவையை வழங்கும் உலகின் நான்கு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஜியோ சேவையை பல்வேறு நாடுகளுக்கும் வழங்கும் திட்டத்தின் ஒருபகுதியாக புதிய சேவையை வழங்கி இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது. 

    வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் மூலம் சர்வதேச பயணர்கள் ஜியோவின் உலகத்தரம் வாய்ந்த அனைத்து IP நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் என தெரிவித்துள்ளது.



    கடந்த 20 மாதங்களாக ஜியோவின் அதிவேக நெட்வொர்க் என்றும், ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 20.06 எம்.பி. ஆக இருக்கிறது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஜியோவின் டவுன்லோடு வேகம் ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்திய பயனர்கள் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்லும் அனைத்து பயனர்களுக்கும் அதிவேக டேட்டா மற்றும் வாய்ஸ் அனுபவத்தை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கே.கே.டி.ஐ. வாடிக்கையாளர்களை ஜியோ நெட்வொர்க்கிற்கு வரவேற்கிறோம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
    ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் செயலி மாரடைப்பு ஏற்பட இருக்கும் அபாயத்தை கண்டறிந்து தெரிவிக்கும். #smartphone #Apps



    அமெரிக்காவில் இயங்கி வரும் இன்டர்மவுன்டெயின் மருத்துவ மையம் மற்றும் இதய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

    மருத்துவ மையங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கண்டறிய நடத்தப்படும் இ.சி.ஜி. சோதனைக்கு நிகராக மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கும் செயலியை இன்டர்மவுன்டெயின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். புதிய செயலியை கொண்டு பலரது உயிர்களை காப்பாற்ற முடியும். 

    ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய செயலி ஒருவரின் இதய நடவடிக்கையை டிராக் செய்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறியும். இந்த செயலி ஒருவரின் இதயத்தின் ரத்தக்குழாயில் நிரந்தர அடைப்பு ஏற்படுவதை கண்டறியும் தன்மை கொண்டுள்ளது.





    ஸ்டெமி மாரடைப்புக்கு பின் வழங்கப்படும் சிகிச்சை மூலமாக பலரது உயிரை காப்பாற்ற முடியும் என்றும் தற்சமயம் வரை கிடைத்து இருக்கும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடத்தக்க நன்மையை வழங்கும் வகையில் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 204 நோயாளிகள் வழக்கமான இ.சி.ஜி. பரிசோதனையும், கார்டியா (Kardia) செயலி மூலம் சோதனை செய்து கொண்டனர். இது இரு வயர் இணைக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போனிலேயே கண்காணிக்கப்பட்டது. வயர் இணைக்கப்பட்ட நிலையில் செயலி ஸ்டெமி மற்றும் நான்-ஸ்டெமி இ.சி.ஜி. சோதனையை மிகத்துல்லியமாக கண்டறிந்தது.

    இந்த செயலி மாரடைப்பை மிகத்துல்லியமாக கண்டறிந்தது, மேலும் மாரடைப்பு ஏற்படாத போது இந்த செயலி எவ்வித அறிகுறியையும் தெரிவிக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் முஹ்லெஸ்டெயின் தெரிவித்தார். 



    மாரடைப்பை கண்டறியும் செயலி மற்றும் இரண்டு வயர் எக்ஸ்டென்ஷனுக்கான கட்டணம் மிகவும் குறைவு தான். இதை கொண்டு ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கும் அனைவராலும் இ.சி.ஜி. பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

    கார்டியா ஆப் பயன்படுத்த முதலில் ஸ்மார்ட்போனில் கார்டியா அப் சென்று, சாதனத்தை ஸ்மார்ட்போனின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி விரல் நுனியை சாதனத்தில் சில நொடிகள் வரை மென்மையாக வைக்க வேண்டும். முப்பது நொடிகள் பதிவானதும், உங்களுக்கான பரிசோதனை அறிக்கையை ஸ்மார்ட்போனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மாரடைப்பு அபாயத்தை கண்டறியும் கார்டியா ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (ரூ.7,181) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதள வெர்ஷன் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

    புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான க்ரூப் ஃபேஸ்டைம் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை பல வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டிருந்ததாக அறிவித்தது.

    ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தை அப்டேட் செய்த ஐ.ஓ.எஸ். பயனர்கள் அதிகபட்சம் 32 பேருடன் ஒரே சமயத்தில் ஃபேஸ்டைம் மூலம் பேச முடியும். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.



    1 -  ஃபேஸ்டைம் ஆப் சென்று வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் ADD பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - மேல்புறம் இருக்கும் ஆப்ஷனில் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களின் பெயர் அல்லது நம்பர்களை பதிவு செய்ய வேண்டும்.

    3 - இங்கு Add Contact ஆப்ஷனை கிளிக் செய்தும் கான்ட்க்ட் ஆப் மூலம் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களை தேர்வு செய்யலாம்.

    4 - வீடியோ ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் அல்லது ஆடியோ ஐகானை கிளிக் செய்து ஃபேஸ்டைம் ஆடியோ கால் மேற்கொள்ள முடியும்.



    க்ரூப் மெசேஜஸ் உரையாடல்களில் இருந்தும் க்ரூப் ஃபேஸ்டைம் கால் துவங்கலாம். மெசஞ்சரில் சாட் செய்யும் நபருடன் அப்படியே கால் செய்து பேச முடியும்.

    1 - சாட் ஸ்கிரீனில் ப்ரோஃபைல் புகைப்படம் அல்லது மை அக்கவுன்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் உரையாடல்களின் மேல்பக்கம் இடம்பெற்றிருக்கும்.

    2 - ஃபேஸ்டைம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் ஃபேஸ்டைம் கால் செய்யும் போது பயனர்கள் இடையே மற்றொரு நபரையும் சேர்க்க முடியும். இதை செய்ய:

    1 - ஸ்கிரீனினை கிளிக் செய்து Moreஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - இனி Add Person ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    3 - அடுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், ஆப்பிள் ஐ.டி. அல்லது போன் நம்பர் போன்றவற்றில் ஒன்றை பதிவிட வேண்டும்.

    4 - அல்லது Add பட்டன் கிளிக் செய்து மற்றவர்களை கான்டாக்ட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம்.

    5 - இறுதியில் ஃபேஸ்டைமில் அந்த நபரை சேர்க்கலாம்.

    க்ரூப் ஃபேஸ்டைம் மேற்கொள்ளும் போது யாரேனும் உங்களுக்கு அழைப்பு விடுத்தால், உங்களுக்கு சைலன்ட் நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ் வரும். கால் ஆக்டிவாக இருக்கும் போது நோட்டிஃபிகேஷனை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் உரையாடலில் இணைந்து கொள்ளலாம்.

    குறிப்பு:

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 12.1 குறிப்பில் க்ரூப் ஃபேஸ்டைம் வீடியோ கால்கள் ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபேட் ஏர், ஐபேட் மினி 2, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 4 மற்றும் 6ம் தலைமுறை ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிவித்திருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களில் உங்களது புகைப்படத்தை சேர்ப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். #whatsappstickers



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப் மற்றும் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஸ்டிக்கர் வசதி வழங்கப்படுகிறது. 

    ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு சில ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் பிளேவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது புகைப்படங்களையும் ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

    முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் 2.18 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன் கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இல்லாதபட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

    இனி உங்களுக்கு பயன்படுத்த வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.

    தேர்வு செய்த புகைப்படங்களை PNG ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் பின்னணியில் எதுவும் இருக்கக் கூடாது. 

    ஸ்மார்ட்போனில் இவ்வாறு செய்ய கூகுள் பிளே ஸ்டோர் சென்று பேக்கிரவுன்டு இரேசர் (Background Eraser) செயலிகளை பயன்படுத்தலாம். 

    இனி நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும். பேக்கிரவுன்டை அழிக்க ஆட்டோ, மேஜிக் அல்லது மேனுவல் டூல் பயன்படுத்தலாம்.



    புகைப்படம் ஸ்டிக்கர் போன்று காட்சியளிக்க ஏதுவாக கிராப் செய்ய வேண்டும். புகைப்படத்தை PNG வடிவில் சேவ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் உங்களது புகைப்படம் ஸ்டிக்கர் போன்று மாறிவிடும். 

    இதேபோன்று குறைந்த பட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களில் குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்கள் இருக்க வேண்டும்.

    இனி பிளேஸ்டோர் சென்று ‘Personal Stickers for WhatsApp’ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலி நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை தானாக தேடி பயன்படுத்திக் கொள்ளும்.

    செயலியில் உள்ள ‘Add’ பட்டனை கிளிக் செய்து மீண்டும் ‘Add’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும், சாட் விண்டோ திறந்து, ஸ்மைலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஜிஃப் ஆப்ஷனுக்கு அருகில் இருக்கும் ஸ்டிக்கர்ஸ் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய போட்டோ ஸ்டிக்கரை கிளிக் செய்து அனுப்பலாம். 

    நீங்கள் உருவாக்கிய தனிப்பட்ட ஸ்டிக்கர்கள் உங்களது ஸ்டிக்கர் பேங்கில் அப்படியே இருக்கும். அடுத்த முறை புதிய ஸ்டிக்கர்களை உருவாக்க மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்திருக்கும் ஆட்டம் வயர்லெஸ் ஸ்பீக்கர் விமர்சனம். #ATOM #bluetoothspeaker



    வயர்லெஸ் ஸ்பீக்கர் சாதனங்கள் சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வயர்லெஸ் ஆடியோ சாதனங்களில் ஹோம் தியேட்டர் சிஸ்டம்களும் கிடைக்கின்றன. வயர்லெஸ் ஸ்பீக்கர்களை செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே எடுத்துச் செல்லலாம் என்பதால் இவை அதிக பிரபலமாகி வருகின்றன.

    அதிக பிரபலமாகி வருவதால் பல்வேறு நிறுவனங்களும் வயர்லெஸ் ஆடியோ சாதனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருக்கிறது.

    ஆட்டம் (Atom) என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிம்னி விளக்கு தோற்றம் கொண்டிருக்கும் புதிய ஆட்டம் ஸ்பீக்கர் விமர்சனத்தை தொடர்ந்து பார்ப்போம்.



    அழகிய தோற்றம்:

    ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பார்க்க சிம்னி விளக்கு போன்ற தோற்றம் மற்றும் அனுபவத்தை வழங்குகிறது. முட்டை வடிவம் கொண்ட வடிவமைப்பு சிம்னி விளக்கை நினைவூட்டுகிறது. ஸ்பீக்கரில் 60 எல்.இ.டி. விளக்குகள் வழங்கப்பட்டு இருப்பதால், மின்விளக்கு உண்மையான தீ எரிவது போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

    பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர் கருப்பு நிறம் மற்றும் ஸ்பீக்கர் முழுக்க சீரான கிரில் கொண்டிருக்கிறது. ஸ்பீக்கர் கிரில் மின்விளக்கின் கீழ் பகுதியில் காணப்படுகிறது. ஸ்பீக்கரின் பின்புறம் ரப்பர் ஸ்டிராப் வழங்கப்பட்டுள்ளது. இதை திறந்ததும், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. முன்பக்கம் வால்யூம் கன்ட்ரோல்கள் மற்றும் மின்விளக்கை ஆன், ஆஃப் செய்யும் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டன்களும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை தொடும் போது பிளாஸ்டிக் உணர்வு ஏற்படுகிறது. 340 கிராம் எடை கொண்டிருக்கும் ஸ்பீக்கர் மெல்லியதாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. இதனை ஸ்பீக்கர் மட்டுமின்றி படுக்கையறை மின்விளக்ககாகவும் பயன்படுத்தலாம்.



    எளிய கனெக்டிவிட்டி:

    மற்ற ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்றே, ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ஸ்பீக்கரை ஸ்மார்ட்போனுடன் மிக சுலபமாக இணைக்க முடியும். இதில் ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும், பின் ஸ்பீக்கரில் உள்ள பவர் பட்டனை அழுத்தி பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் பட்டன்களில் சிறிய மின்விளக்குகள் தொடர்ச்சியாக ஆன், ஆஃப் ஆகும். இனி ஸ்மார்ட்போனில் ZEB-ATOM என்ற ப்ளூடூத் ஆப்ஷன் தெரியும்.

    ஆடியோ தரம்:

    ஆடியோ தரத்தை பொறுத்த வரை, ஜெப்ரானிக்ஸ் ஸ்பீக்கர் தெளிவான மற்றும் அதிக சத்தமாக இருக்கிறது. எனினும் முழு சத்தத்தை வைக்கும் போது மெல்லிய இரைச்சல் ஏற்படுகிறது. ஸ்பீக்கரில் பேஸ் இல்லை என்பதால், ஆடியோ தரம் மிக உயர்ந்த ரகங்களில் இருக்கும் உணர்வு ஏற்படவில்லை. மற்றப்படி ஸ்பீக்கரை இயக்குவது எளிமையாக இருக்கிறது. வால்யூப் அப் மற்றும் டவுன் பட்டன்களை அழுத்திப்பிடித்தால், வால்யூம் அதிகரிக்கவும், குறையவும் செய்யும்.

    ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கரின் லைட்னிங் மென்மையாக இருக்கிறது. இதனால் இதனை படுக்கையறை மின்விளக்கிற்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். பேட்டரி பேக்கப் நேரத்தை பொறுத்த வரை மின்விளக்கு எரியும் போதும் நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஸ்பீக்கர் கொண்டு தொடர்ச்சியாக திரைப்படம் மற்றும் பாடல் உள்ளிட்டவற்றை இடைவெளியின்றி பயன்படுத்தலாம்.



    பயன்பாடு:

    படுக்கையறையை அழகாக்கும் மின்விளக்கு மற்றும் ஸ்பீக்கர் என இருவித பயன்பாடுகளை ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ஸ்பீக்கர் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மட்டுமின்றி மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு இருப்பதால், மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலமாகவும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். எனினும் இதில் எஃப்.எம். ரேடியோ வசதி வழங்கப்படவில்லை.

    பண்டிகை கால ஸ்பீக்கர் என்ற வகையில் இதன் ஆடியோ தரம் மேம்பட்டு இருக்கலாம், எனினும் கொடுக்கும் விலையில் இதமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. மொத்தத்தில் இயல்பான பயன்பாட்டிற்கு ஏற்ற சுவாரஸ்ய சாதனமாக ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ஸ்பீக்கர் இருக்கிறது.

    இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கரின் அன்பாக்சிங் வீடியோவை கீழே காணலாம்..,

    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் ரிப்ளை பிரைவேட்லி என்ற பெயரில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #WhatsApp #Apps



    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் ரிப்ளை பிரைவேட்லி (Reply privately) என்ற பெயரில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு க்ரூப்களில் அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு தனியே பதில் அனுப்ப முடியும்.

    ரிப்ளை பிரைவேட்லி ஆப்ஷனை கிளிக் செய்ததும், வாட்ஸ்அப் குறிப்பிட்ட கான்டாக்ட் உடன் பிரைவேட் சாட் திரையை தானாக திறக்கும். இந்த அம்சம் கொண்டு க்ரூப்களில் உள்ள பழைய சாட்களுக்கும் தனியே மெசேஜ் அனுப்ப முடியும். புதிய அம்சம் வாட்ஸ்அப் 2.18.335 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருப்பதால், புதிய அப்டேட்டை டவுன்லோட் செய்ய வேண்டும்.

    புதிய 2.18.338 அப்டேட்டில் யுனிகோட் 11 எமோஜி சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் 66 புதிய எமோஜிக்கள் சேர்க்கப்படுகிறது. இதில் சாஃப்ட்பால், கங்காரு, பார்டியிங் ஃபேஸ், பேரட் மற்றும் பல்வேறு இதர எமோஜிக்கள் கிடைக்கும். வாட்ஸ்அப் பிரைவேட் ரிப்ளை அம்சம் மூலம் க்ரூப்பில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாமல் ஒருவருக்கு மட்டும் தனியே பதில் அனுப்ப முடியும்.



    தற்சமயம் ஆன்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    வாட்ஸ்அப் பிரைவேட் ரிப்ளை அம்சத்தை பயன்படுத்த, பயனர் குறிப்பிட்ட மெசஜை அழுத்தி பிடிக்க வேண்டும், இனி திரையில் தோன்றும் மூன்று புள்ளி மெனு ஆப்ஷனை கிளிக் செய்து ரிப்ளை பிரைவேட்லி அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும். 

    வாட்ஸ்அப் பீட்டா செயலியில் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் பீட்டா பதிப்பில் சைன்-இன் செய்தால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும்.
    2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CES2019



    2019ம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா துவங்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இவ்விழாவில் எதிர்பார்க்கப்படும் சாதஎனங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது.

    அந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கூடிய வசதி கொண்ட OLED டி.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய டி.வி. பார்க்க இதுவரை வெளியான எல்.ஜி. டிஸ்ப்ளே ப்ரோடோடைப்களை போன்றே காட்சியளிக்கிறது.

    மேலும் புதிய தொழில்நுட்பம் உண்மையான சாதனம் போன்றே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மடிக்கக்கூடிய மொபைல் போன் ஒன்றையும் எல்.ஜி. அறிமுகம் செய்யலாம் என பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தெரிவித்து இருந்தார்.

    சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், முதலில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடும் நிறுவனம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டுகளை போன்றே எல்.ஜி. நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் மூன்றாவது காலாண்டில் மட்டும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. #Xiaomi



    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2018 மூன்றாவது காலாண்டில் சியோமி நிறுவனம் மட்டும் சுமார் 29.8 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்த காலாண்டில் மட்டும் சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது.

    கடந்த ஆண்டு இதே காலாண்டில் சாம்சங் நிறுவனம் முன்னணி இடம் பிடித்திருந்த நிலையில், இம்முறை சியோமி முதலிடம் பிடித்திருக்கிறது. கனாலிஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் ஸ்மார்ட்போன் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    கனாலிஸ் அறிக்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையை பொருத்த வரை இதே காலாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2017 மூன்றாவது காலாண்டில் மொத்தம் 4.08 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்தம் 4.04 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கிறது.



    சியோமி மற்றும் விவோ நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையில், முதல் ஐந்து இடங்களில் அல்லாத நிறுவனங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் அம்சங்கள் தொடர்ந்து சிறப்பாகி வரும் நிலையில், பலர் பிரீமியம் போன் மாடல்களை வாங்கவே விரும்புகின்றனர். 

    இதனால் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து இருக்கின்றன. எனினும் ரியல்மி போன்ற பிரான்டுகளின் வரவு காரணமாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களும் கணிசமான வளர்ச்சியை பெற்று இருக்கின்றன.

    மொபைல் டேட்டா கட்டணம் குறைந்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு எளிமையாகி இருக்கிறது. எனினும், ஃபீச்சர் போன் பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் துவக்க விலை ரூ.1500 முதல் கிடைக்கும் நிலையில், பலர் இதனை வாங்குகின்றனர். இத்துடன் ஜியோபோன் வாங்குவோருக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
    கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் கேமிங் திறன் கொண்ட புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. #ALIENWARE



    கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் கணினி உபகரணங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெல் சமீபத்தில் கேமிங் திறன் கொண்ட புதிய ஏலியன்வேர் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்தது. 

    ஏலியன்வேர் லேப்டாப்கள் என்றாலே தடிமனாக இருக்கும் என நமக்கு தெரியும், எனினும் இம்முறை டெல் இந்த வழக்கத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது. அந்த வகையில் புதிய ஏலியன்வேர் லேப்டாப் மெலிதாகவும், எளிதில் கையாளும் வகையிலும் இருக்கிறது. 

    புதிய எம்15 மாடல் நவீன வடிவமைப்பு, குறைந்த பெசல்கள் மற்றும் மெலிதாக இருக்கிறது. புதிய லேப்டாப்பின் சேசிஸ் மக்னீசியம் அலாய் மற்றும் காப்பர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏலியன்வேர் எம்15 மாடலில் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 4கே 60ஹெர்ட்ஸ் பேனல் கொண்டுள்ளது. 



    லேப்டாப்பினுள் சக்திவாய்ந்த அம்சங்கள், அதிகளவு கிராஃபிக்ஸ் பயன்பாட்டை தாங்கும் படி வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இன்டெல் கோர் ஐ5 அல்லது ஐ7 பிராசஸர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம், என்விடியா ஜிடிஎக்ஸ் 1060 ஓசி அல்லது 1070 மேக்ஸ் கியூ கிராஃபிக்ஸ் கார்டுகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். இந்த லேப்டாப் 32 எம்.பி. ரேம் மற்றும் அதிகபட்சம் டிபி எஸ்.எஸ்.டி டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது. 

    ஏலியன்வேர் எம்15 லேப்டாப் 60Whr பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும். மேலும் பயனர்கள் 90Whr பேட்டரியை தேர்வு செய்யும் பட்சத்தில் 17 மணி நேர பேக்கப் பெறலாம். எம்15 கேமிங் லேப்டாப் எடை 2.18 கிலோவாக இருக்கிறது. முந்தைய ஏலியன்வேர் லேப்டாப் எடை 2.63 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 



    டெல் ஏலியன்வேர் எம்15 சிறப்பம்சங்கள்:

    - 15.6 இன்ச் ஸ்கிரீன் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 90 வாட் மற்றும் 60 வாட் பேட்டரி
    - 8-ம் தலைமுறை / 6-ம் தலைமுறை இன்டெல் பிராசஸர் 
    - மேக்ஸ் கியூ கிராஃபிக்ஸ்
    - ஏலியன்வேர் கிராபிக்ஸ் ஆம்பிளிபயர்
    - 16 ஜி.பி. ரேம் 
    - 1000 ஜி.பி. மெமரி 
    - யு.எஸ்.பி. போர்ட்

    டெல் ஏலியன்வேர் எம்15 கேமிங் லேப்டாப் பேஸ் வேரியன்ட் விலை 1299 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.95,586) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 25-ம் தேதி துவங்குகிறது. எனினும் என்விடியா ஜிடிஎக்ஸ் 1050 டிஐ கிராஃபிக்ஸ் கார்டு வேரியன்ட் நவம்பர் மாத மத்தியில் கிடைக்கும்.
    ×