search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனை ஏற்படாது
    X

    2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனை ஏற்படாது

    2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஐபோன் பிராசஸரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வரை பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய மொபைல் சிப்செட் ஐபோனின் பேட்டரியை 40% வரை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் பேட்டரி பேக்கப் ஐபோன்களில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், புதிய பிராசஸர் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக தெரிகிறது. புதிய பிராசஸர் ஆப்பிள் ஏ12 என அழைக்கப்பட இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் மூன்று புதிய ஐபோன்களிலும் ஏ12 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய பிராசஸர் அடிப்படை வடிவமைப்பை முற்றிலும் மாற்றப்படுவதால், இந்த பிராசஸர் ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.



    பிராசஸர்களில் உள்ள டிரான்சிஸ்டர்களில் எலெக்டிரானிக் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மின்சாரம் செல்ல அனுமதிக்கிறது, இதை பொருத்தே ஸ்மார்ட்போன்களில் கம்ப்யூட்டிங் நடைபெறுகிறது. சிப்செட்டில் அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், அதிக கம்ப்யூட்டிங் திறன் கிடைக்கும். 

    கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்து வழங்கிய ஏ11 பிராசஸர்களில் 10 என்.எம். முறையில் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு டிரான்சிஸ்டர் இடையேயான அளவு 10 நானோமீட்டர்கள் ஆக இருந்தது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஏ12 சிப்செட் 7 என்.எம். உற்பத்தி முறையில் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் டிரான்சிஸ்டர்களிடையேயான இடைவெளி 7 நானோமீட்டர்கள் ஆக இருக்கும்.

    புதிய உற்பத்தி முறையால் அதிக டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்த முடியும் என்பதால் ஸ்மார்ட்போனின் வேகம் 20% வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், செயல்திறன் அதிகரிக்காது எனினும் சிப்செட் அதிக சிறப்பாக இயங்கும். மேலும் 7 என்.எம். சிப்கள் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போனில் உள்ள பிராசஸர் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தினால், பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் கிடைக்கும்.
    Next Story
    ×