search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுகிறது.


    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் அளவில் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஐபோன் 12 மினி அறிவிக்கப்பட்டதும் சியோமி இதேபோன்ற மாடலை வெளியிட திட்டமிட்டது. எனினும், அசுஸ் நிறுவனம் சென்போன் 8 அறிமுகம் செய்து சியோமியை பின்னுக்கு தள்ளியது. இதைத் தொடர்ந்து எல்3 மற்றும் எல்3ஏ எனும் மாடல் நம்பர்கள் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. 

     சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி நீண்ட காலமாக உருவாக்கி வரும் இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் எல்3 மாடல் நம்பர் கொண்டு உருவாகி வரும் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சியோமியின் எல்3 மற்றும் எல்3ஏ மாடல்கள் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நிறுவன பொது மேலாளர் லு வெய்பிங் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் பற்றி வெய்போவில் பேசியிருந்தார்.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனினை (6ஜிபி+128ஜிபி) இந்தியாவில் ரூ. 21,999 துவக்க விலையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி மாடல் வெளியாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் விலை ரூ. 23,499 ஆகும். 

    இந்த வேரியண்ட் ஆசம் பிளாக், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ32

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ32 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3, புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது.


    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 500 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். 

    தற்போது இதன் தினசரி டேட்டா அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இதே விலை கொண்ட சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சற்றே கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. 

     ஏர்டெல்

    கூடுதல் டேட்டாவினை பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதே சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் டிரையல் ஒரு மாதத்திற்கும், ஷா அகாடமி சந்தா ஒரு வருடத்திற்கும், இலவச ஹலோ டியூன் சந்தா, வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்தது.


    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இது ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    இதே ஸ்மார்ட்போன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி பெயரில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் தோற்றத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.6 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட்மி நோட் 11டி 5ஜி

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 50 எம்பி+8 எம்பி பிரைமரி கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டீரியஸ் பிளாக், மில்கிவே புளூ மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    ஒப்போ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்த மாதத்தில் அறிமுகமாகிறது.

    ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும் இதுபோன்ற சாதனம் உருவாக்கப்படுவதாகவும் ஒப்போ சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 'பீகாக்' எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
     
     ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒப்போ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ரெனோ 7 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம்.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் ஒப்போ நிறுவனம் மற்றொரு ஸ்மார்ட்போனினை  உயர் ரக அம்சங்களுடன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 'பட்டர்பிளை' எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.


    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.

    அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

     கோப்புப்படம்

    பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா அம்சங்கள் பற்றிய புது தகவல்கள் ட்விட்டரில் இடம்பெற்று இருக்கிறது.

    அதன்படி புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் மேம்பட்ட 108 எம்பி கேமரா மோட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டு உருவாகிறது. இது ஐசோசெல் ஹெச்.எம்.4 அல்லது ஐசோசெல் ஹெச்.எம்.5 சென்சார்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

     சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ்

    மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை விட புதிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2200 சிப்செட், ஆர்.டி.என்.ஏ. 2 கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    மோட்டோராலா நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் பீச்சர் போன் மாடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பீச்சர் போன் மாடல்கள் மோட்டோ ஏ10, மோட்டோ ஏ50 மற்றும் மோட்டோ ஏ70 பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஏ10 மற்றும் மோட்டோ ஏ50 மாடல்களில் 1.8 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் எம்டி6261டி சிப்செட், ஆட்டோ கால் ரெக்கார்டிங், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

     கோப்புப்படம்

    இத்துடன் புதிய மோட்டோ ஏ சீரிஸ் மாடல்களை ஐந்து இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. மோட்டோ ஏ50 பேக் பேனலில் கேமரா மற்றும் டார்ச் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் மோட்டோ ஏ10 மாடலில் வழங்கப்படவில்லை. இரு மாடல்களிலும் டூயல் சிம் வசதி மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்படுகிறது.

    மோட்டோ ஏ70 மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, யுனிசாக் சிப்செட், விஜிஏ கேமரா, எல்.இ.டி. டார்ச் வழங்கப்படுகிறது. இந்த மொபைலில் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அதிகபட்சம் 2 ஆயிரம் காண்டாக்ட்களை ஸ்டோர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் போட்டோ மற்றும் காண்டாக்ட்களுக்கு ஐகான்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

     கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

    நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
    சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் சியோமி பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போனும் அதன்பின் ரெட்மி பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போனும் வெளியிடப்பட இருக்கிறது. இரு மாடல்களும் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகிறது.

    சியோமியின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.

     குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

    புகைப்படங்களை எடுக்க 108 எம்பி அல்லது 50 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் எம்1 மேக்ஸ் சிப்செட் கொண்ட புது மேக்புக் ப்ரோ மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் புதிய தலைமுறை ஐமேக் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐமேக் மாடல் ஐமேக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகும் என தெரிகிறது. ப்ரோ பிராண்டிங் மூலம் ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த 24 இன்ச் ஐமேக் மாடலை வித்தியாசப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய ஐமேக் ப்ரோ மாடல்களில் எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் அறிமுகம் செய்த மேக்புக் ப்ரோ மாடல்களிலும் எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     ஆப்பிள் ஐமேக்

    ஆப்பிள் தனது எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்களை சமீபத்திய நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு சிப்செட்களும் சமீபத்திய மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் லேப்டாப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    முன்னணி ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் கேமிங் சந்தையில் களமிறங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மொபைல் கேமிங் சந்தையில் களமிறங்கியது. ஏற்கனவே இதுபற்றிய அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட நிலையில், தற்போது ஐந்து மொபைல் கேம்களை நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வெளியிட்டு உள்ளது. 

    ஐந்து கேம்களையும் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய முடியும். கேம்கள் அனைத்தும் நெட்ப்ளிக்ஸ் செயலியின் கேம்ஸ் -- டெடிகேடெட் கேம்ஸ் பிரிவில் தோன்றும். இங்கிருந்து கேம்களை நேரடியாக பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.

    கேம்களை விளையாட நெட்ப்ளிக்ஸ் சந்தா மட்டுமே போதுமானது. இதில் விளம்பரங்களோ, கூடுதல் கட்டணமோ, இன் ஆப் பர்சேஸ் என எதுவும் இருக்காது. 

     நெட்ப்ளிக்ஸ் கேம்ஸ்

    நெட்ப்ளிக்ஸ் மொபைல் கேம் பட்டியல்

    - ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 1984
    - ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 3 - தி கேம்
    - ஷூட்டிங் ஹாப்ஸ்
    - கார்ட் பிளாஸ்ட்
    - டீட்டர் அப்

    அனைவருக்கும் ஏற்றவாரு எதையாவது வழங்கும் நோக்கில் அதிக கேம்களை வெளியிட விரும்புவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்த கேம்கள் அனைத்தும் பெரியவர்களுக்கானவை. இதனால் கேம்கள் குழந்தைகளுக்கான ப்ரோபைல்களில் இயங்காது. வரும் மாதங்களில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு அதிக கேம்களை வழங்க இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் தெரிவித்து இருக்கிறது.
    ×