என் மலர்

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா
    X
    மோட்டோரோலா

    மூன்று ஏ சீரிஸ் மொபைல் போன்களை விரைவில் வெளியிடும் மோட்டோரோலா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மோட்டோராலா நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் பீச்சர் போன் மாடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பீச்சர் போன் மாடல்கள் மோட்டோ ஏ10, மோட்டோ ஏ50 மற்றும் மோட்டோ ஏ70 பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஏ10 மற்றும் மோட்டோ ஏ50 மாடல்களில் 1.8 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் எம்டி6261டி சிப்செட், ஆட்டோ கால் ரெக்கார்டிங், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

     கோப்புப்படம்

    இத்துடன் புதிய மோட்டோ ஏ சீரிஸ் மாடல்களை ஐந்து இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. மோட்டோ ஏ50 பேக் பேனலில் கேமரா மற்றும் டார்ச் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் மோட்டோ ஏ10 மாடலில் வழங்கப்படவில்லை. இரு மாடல்களிலும் டூயல் சிம் வசதி மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்படுகிறது.

    மோட்டோ ஏ70 மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, யுனிசாக் சிப்செட், விஜிஏ கேமரா, எல்.இ.டி. டார்ச் வழங்கப்படுகிறது. இந்த மொபைலில் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அதிகபட்சம் 2 ஆயிரம் காண்டாக்ட்களை ஸ்டோர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் போட்டோ மற்றும் காண்டாக்ட்களுக்கு ஐகான்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×