search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 2022 செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. 2.0 வேகத்தில் லைட்னிங் போர்ட் வழங்கி வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

     ஐபோன்

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ப்ரோ-ரெஸ் வீடியோக்களை படமாக்கும் போது அதிகளவு ஸ்டோரேஜை எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஐபோன்களில் இருந்து ப்ரோ-ரெஸ் வீடியோக்களை கணினியில் டிரான்ஸ்பர் செய்ய அதிக நேரம் ஆகிறது. 

    லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி பயன்படுத்தினால் சிறிது நேரமே ஆகும். ஐபோன்கள் உள்பட அனைத்து சாதனங்களிலும் யு.எஸ்.பி. சி போர்ட் வழங்க ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வருகிறது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பட்சத்தில் நிறுவனங்கள் அபராதம் செலுத்த நேரிடும். இதன் காரணமாக ஆப்பிள் புதிய ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. சி போர்ட் வழங்கலாம் என தெரிகிறது.
    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 சீரிஸ் மாடல்களின் பாஸ்ட் சார்ஜிங் வசதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வழங்கி இருக்கிறது.


    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் அதிகளவு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. தற்போது கூகுள், தனது புதிய பிளாக்‌ஷிப் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் சார்ஜர் வழங்கப்படுவதில்லை. எனினும், கூகுள் 30 வாட் பாஸ்ட் சார்ஜரை தனியாக விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து பலரும் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

     கூகுள் பிக்சல் 6

    தற்போது கூகுள் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய பிக்சல் 6 மாடலில் 21 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 23 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது. 

    "பேட்டரி செல், சிஸ்டம் டிசைன், டெம்பரேச்சர், சிஸ்டம் யூசேஜ் மற்றும் ஸ்டேட் ஆப் சார்ஜ் உள்ளிட்ட காரணிகளே சார்ஜிங் ரேட்டை நிர்ணயிக்கிறது. எனினும், போனின் பேட்டரி குறையும் போது 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும்." என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    ரியல்மியின் புதிய ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கெண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடலில் எல்.பி.டி.டி.ஆர்.5 ரேம், யு.எப்.எஸ். 3.1 பிளாஷ் மெமரி, 6.51 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

     ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி, 8 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா சென்சார்கள், முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆட்டோபோக்கஸ், ஓ.ஐ.எஸ். மற்றும் இ.ஐ.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சியோமி 12 அல்ட்ரா அந்நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் சியோமி 12 அல்ட்ரா 50 எம்பி பிரைமரி கேமரா, அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    முன்னதாக சியோமி 12 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் லோகி மற்றும் தார் எனும் குறியீட்டு பெயர்களில் இரு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவை சியோமி 12 அல்ட்ரா மற்றும் சியோமி 12 அல்ட்ரா என்ஹான்ஸ்டு பெயர்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

     சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி 12 அல்ட்ரா மாடலில் 50 எம்பி சாம்சங் ஜி.என்.5 சென்சாருன் குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இத்துடன் 2எக்ஸ் ஜூம் வசதியுடன் 48 எம்பி கேமரா, 5 எக்ஸ் ஜூம் வசதியுடன் 48 எம்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது.
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி என இரு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை புது சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், 8 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது.

    இத்துடன் 50 எம்பி பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ12

    சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே 
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
    - மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு 
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கோர் 3.1
    - டூயல் சிம் 
    - 50 எம்பி பிரைமரி கேமரா
    - அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - டெப்த் / மேக்ரோ கேமரா 
    - 8 எம்பி செல்பி கேமரா 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
    மோட்டோரோலா நிறுவனத்தின் 2022 மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

     மோட்டோ ஜி பவர் 2022

    புதிய மோட்டோ ஜி பவர் 2022 ஸ்மார்ட்போன் விலை 199.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 14,840 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமெரிக்காவில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ ஜி பவர் 2022 மாடலின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
    ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய திட்டத்தில் பயனர்கள் தங்களின் ஐபோனை தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.


    ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தங்களின் ஆப்பிள் சாதனங்களை சர்வீஸ் செண்டர் செல்லாமல் தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.

    இந்த திட்டம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள், டூல்கள், மேனுவல் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது. 

      ஆப்பிள் செல்ப் சர்வீஸ்

    முதலில் பயனர்களுக்கு ரிப்பேர் மேனுவல் வழங்கப்படும். இதனை வாசித்து சாதனத்தை சரி செய்யும் நம்பிக்கை பயனருக்கு ஏற்படும் பட்சத்தில், அவர்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்களை வாங்க முன்பதிவு செய்யலாம். சரி செய்த பின் பாழாகி போன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய பயனர்கள் ஆப்பிளிடம் திரும்ப வழங்கலாம்.

    ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களின் டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் கேமரா சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய வைக்க ஆப்பிள் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200 தனித்தனி உதிரிபாகங்களை வாங்கிட முடியும். ஐபோனை தொடர்ந்து எம்1 மேக் மாடல்களை சரிசெய்யும் வசதியையும் ஆப்பிள் வழங்க இருக்கிறது.

    வெளிப்புறம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட புது ஸ்மார்ட்போனினை ரியல்மி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
      

    அண்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பரவலாக வெளியாக துவங்கிவிட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது ரியல்மி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. 

    ரியல்மி நிறுவன அதிகாரியின் பதிவில் இதனை உணர்த்தும் தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன. அடுத்த ஆண்டு அண்டர் ஸ்கிரீன் கேமரா மற்றும் மடிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் புதிய உச்சத்தை தொடும் என ரியல்மி நிறுவன அதிகாரி பதிவிட்டுள்ளார். ரியல்மி இந்த தொழில்நுட்பம் அடங்கய சாதனங்களை அறிமுகம் செய்வதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

     கோப்புப்படம்

    ரியல்மியின் தாய் நிறுவனமான ஒப்போ வெளிப்புறம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரியல்மி நிறுவனமும் இதை போன்ற சாதனத்தை உருவாக்கலாம் என கூறப்படுகிறது. 

    ஒருவேளை ஒப்போ மற்றும் ரியல்மி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பட்சத்தில், இரு நிறுவனங்களும் ஏற்கனவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் ஹூவாய், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் வரிசையில் இடம்பிடிக்கும்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


    மோட்டோ வாட்ச் 100 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

     மோட்டோ வாட்ச் 100

    இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடல் அதிரடி தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. புதிய ஐபோன் 13 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து பழைய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விலை பண்டிகை காலக்கட்டத்தின் போது அதிரடியாக குறைக்கப்பட்டன. 

    அதிக விலை காரணமாக ஐபோன் 13 மாடலை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில், புதிய ஐபோன் 13 வாங்க சரியான நேரம் வந்துள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் ரூ. 24 ஆயிரம் வரை குறைந்த விலையில் கிடைக்கிறது.

     ஐபோன் 13

    ஆப்பிள் விற்பனையாளரான ஐஸ்டோர் இந்தியா ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மாத தவணையில் ஐபோனை வாங்குவோருக்கும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பழைய ஐபோன்களை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும். அந்த வகையில் ஐபோன் 13 மாடலை கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை சேர்த்து ரூ. 55,900 விலையில் வாங்கிடலாம்.
    சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மாரட்போனிற்கு ஒருவழியாக புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.


    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி வருகிறது. முன்னதாக இதே அப்டேட் சீன சந்தையில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சியோமி ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு அப்டேட் அதிகளவு புது அம்சங்களை வழங்குவதில்லை. 

    இதனால் புது அப்டேட் ரெட்மி நோட் 8 மாடலில் புது அம்சங்களை கொண்டுவராது. இந்த அப்டேட் 12.0.1.RCOINXM எனும் வெர்ஷன் நம்பர் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்கும். புது அப்டேட் செக்யூரிட்டி பேட்ச் உடன் வழங்கப்படுகிறது.

     ரெட்மி நோட் 8

    ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12.5 அப்டேட் பெற இருக்கிறது. அந்த வகையில், இந்த அப்டேட் வெளியாகும் போது ரெட்மி நோட் 8 மாடலில் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 வழங்கும் அம்சங்கள் கிடைக்கும்.

    பொறியியல் மாணவர் மறு உருவாக்கம் செய்த ஐபோன் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.


    யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் மாடல் 80 ஆயிரத்து 1 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 59,51,074) விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பொறியியல் மாணவர் ஒருவர் பழைய ஐபோன் எக்ஸ் மாடலை மறுஉருவாக்கம் செய்து அதில் யு.எஸ்.பி. சி போர்ட்-ஐ பொருத்தினார்.

    நல்ல வேளையாக ஐபோனும் ஆப்பிள் தயாரித்ததை போன்றே சரியாக இயங்குகிறது. மாணவர் முயற்சியில் யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் என்ற பெருமையுடன், இந்த மாடல் ஏலத்தில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. முன்னதாக இதுபோன்ற மாடிபிகேஷன்கள் பலமுறை ஐபோன்களில் செய்யப்பட்டு இருக்கின்றன.

     ஐபோன்

    எனினும் பாஸ்ட் சார்ஜிங், டேட்டா டிரான்ஸ்பர், ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் இதர அம்சங்களை இதுவரை யாரும் வெற்றிகரமாக மாற்றியமைக்கவில்லை. அந்த வரிசையில், யு.எஸ்.பி. சி மாட் கொண்ட இந்த ஐபோன்- டேட்டா டிரான்ஸ்பர், பாஸ்ட் சார்ஜிங் மற்றும் இதர பயன்களை வழங்குகிறது. தோற்றத்திலும் இந்த ஐபோனில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை.

    பார்ப்பதற்கும் இது வழக்கமான ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. சி போர்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது. "யு.எஸ்.பி. சி ஐபோனினை ஆப்பிள் வெளியிட காத்திருந்தேன். பொருத்தவரை போதும் என நினைத்து எனக்கென நானே ஒன்றை உருவாக்கி கொண்டேன்," என பொறியியலில் முதுகலை பட்டம் பயின்று வரும் கென் பிலோயல் தெரிவித்தார். 

    ×