search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • மோட்டோரோலா நிறுவனத்தின் G84 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்படுகிறது.
    • மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இது பற்றிய தகவல் ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான டீசரில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது.

     

    அதன்படி மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் oPOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G82 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

     

    இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ, மார்ஷ்மல்லோ புளூ மற்றும் விவா மஜெண்டா என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    ரெட்மி நிறுவனத்தின் புதிய நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    ரெட்மியின் புதிய நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், வேரியபில் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 810 சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெட்மி நோட் 11டி 5ஜி

    ரெட்மி நோட் 11டி 5ஜி அம்சங்கள்

    - 6.6 இன்ச் 1080x2400 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் 
    - மாலி-ஜி57 எம்.சி.2 ஜி.பி.யு.
    - 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி 
    - 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 50 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
    - 16 எம்.பி. செல்பி கேமரா
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார்டஸ்ட் வைட், அக்வாமரைன் புளூ மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 16,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    அறிமுக சலுகையாக ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி சில வாரங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கூடுதலாக வங்கி சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.


    ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ஜாக் டார்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியான பராக் அகர்வால் அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியரான பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.-யில் படித்தவர் ஆவார்.
     
    "நிறுவனர்களிடம் இருந்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நிறுவனம் தயாராகி விட்டதால், நான் ட்விட்டரில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன். ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பராக் மிகச்சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் இவரின் பணி அபாரமாக இருந்துள்ளது. இது அவர் தலைமை வகிப்பதற்கான நேரம்," என ஜாக் டார்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 



    பராக் அகர்வால் 2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியாக பதவியேற்றார். முன்னதாக இவர் யாஹூ, மைக்ரோசாப்ட் மற்றும் ஏ.டி. அண்ட் டி லேப்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஜி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி31 மாடலில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 20 வாட் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மோட்டோ ஜி31

    மோட்டோ ஜி31 அம்சங்கள்

    - 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் ஓ.எல்.இ.டி. மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் 
    - ஏ.ஆர்.எம். மாலி-ஜி52 ஜி.பி.யு.
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 11
    - 50 எம்பி குவாட்பிக்சல் பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா / டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 13 எம்பி செல்பி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 20 வாட் சார்ஜர்

    மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் மெட்டோரிட் கிரே மற்றும் ஸ்டெர்லிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி துவங்குகிறது.
    குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


    குவால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சிப்செட்-ஐ விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 என அழைக்கப்பட இருக்கிறது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல் புதிய பிரசாஸர் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவன மாடல்களில் இந்த பிரசாஸர் முதலில் வழங்கப்படும் என கூறப்பட்டது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    முந்தைய மாடல்களை போன்று இல்லாமல், ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் வளைந்த குவாட் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி வைடு சென்சார், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் சீரிஸ் விற்பனை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யவே இல்லை. இந்த ஆண்டுக்கு பதில் 2022 ஆம் ஆண்டு புதிய நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிரந்தரமாக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. நோட் சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

     கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்

    2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டத்தில் இருந்து கேலக்ஸி நோட் சீரிஸ் நீக்கப்பட்டு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது என தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    2019 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் 1.27 கோடி நோட் சீரிஸ் மாடல்களை விற்பனை செய்து இருந்தது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 97 லட்சம் நோட் சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன. 2022 ஆண்டு கேலக்ஸி இசட் சீரிஸ் விற்பனை இலக்கு 1.3 கோடி யூனிட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை திடீரென உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. தற்போதைய  விலை உயர்வை தொடர்ந்தும் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கட்டணங்களை விட குறைவாகவே இருக்கிறது. 

    புதிய விலை உயர்வை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை துவக்க விலை ரூ. 91 ஆக மாறி இருக்கிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை விலை 21.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகை விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

     ஜியோ சலுகை விலை

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 155 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன சலுகை விலை ரூ. 179 என துவங்குகிறது. இந்த பிரீபெயிட் சலுகைகள் சந்தையில் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது. புதிய விலை டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கின்றன. புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகாது என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

    இந்த நிலையில், கூகுள் பிக்சல் 5ஏ போன்றே பிக்சல் 6ஏ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தோற்றத்தில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் போன்றே காட்சியளிக்கின்றன. 

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனில் இரண்டு கேமரா சென்சார்கள், ஒற்றை எல்.இ.டி. பிளாஷ், பவர் பட்டன், வால்யூம் ராக்கர்கள் உள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 12.2 எம்பி லென்ஸ், 16 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. 

    இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரெட்மி இந்தியா நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனைகளை நடத்தி வருகிறது.


    ரெட்மி இந்தியா நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனையை நடத்தி வருகிறது. 5ஜி சோதனை ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

    இரு நிறுவனங்கள் இணைந்து புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 5ஜி தொழில்நுட்பத்தை பல்வேறு நிலைகளில் சோதனை செய்ததாக தெரிவித்துள்ளன. இதன் மூலம் பயனர்களுக்கு மேம்பட்ட 5ஜி அனுபவம் கிடைக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்து இருக்கின்றன.

     ரெட்மி நோட் 11டி 5ஜி

    புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தத்தில் ஏழு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும். தற்போதைய சோதனைகளில் அதிவேக டவுன்லோட் வேகம் கிடைத்ததாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இது ஏற்கனவே சீன சந்தையில் ரெட்மி நோட் 11 5ஜி பெயரிலும், ஐரோப்பிய சந்தையில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
    நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை மாற்றியமைத்து இருக்கிறது.


    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது. தற்போது ஏர்டெல் பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் விலை ரூ. 99 முதல் துவங்குகின்றன. முன்னதாக ஏர்டெல் தனது ரூ. 49 சலுகையை நீக்கியது. இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படவில்லை.

    எஸ்.எம்.எஸ். பலன்கள் அடங்கிய சலுகை கட்டணங்கள் தற்போது ரூ. 179 முதல் துவங்குகின்றன. முன்னதாக இந்த சலுகை விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 219 சலுகையின் விலை தற்போது ரூ. 265 என மாறி இருக்கிறது. 

     கோப்புப்படம்

    ஏர்டெல் நிறுவனத்தின் பிரபல பிரீபெயிட் சலுகையான ரூ. 598 சலுகை கட்டணம் தற்போது ரூ. 719 என மாறி இருக்கிறது. இதில் பயனர்கள் 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா பெற முடியும். மற்ற பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய விலை பட்டியல் நவம்பர் 26 ஆம் தேதி அமலுக்கு வரும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இதுவரை சலுகை கட்டணங்கள் விலையை உயர்த்துவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் சிறப்பான செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் இசட் ப்ளிப் 3 மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில், சாம்சங் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் இசட் ப்ளிப் 4 மாடல்களின் அம்சங்கள் தற்போதைய மாடல்களில் இருப்பதை விட மேம்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கேலக்ஸி இசட் ப்ளிப் 3

    புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மாடலில் மேம்பட்ட அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு செல்பி கேமராக்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு சென்சார் டிஸ்ப்ளேவின் மேல் மற்றொரு சென்சார் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் எடை முன்பை விட குறைவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    யூடியூப் ஷார்ட்ஸ் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது. கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 

     யூடியூப் ஷார்ட்ஸ்

    யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் பல்வேறு குறு வீடியோ உருவாக்கும் செயலிகளுக்கு கடும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்டாக் தடையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியாவில் 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்று வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. 
    ×