என் மலர்
கணினி
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த 10000 எம்.ஏ.ஹெச். மற்றும் 20000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. #Xiaomi #GST
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 10,000 எம்.ஏ.ஹெச். மற்றும் 20,000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு பவர் பேங்க்-களின் விலை ரூ.100 வரை அதிகரிக்கப்பட்டது.
இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. வரிமுறையில் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து Mi பவர் பேங்க் விலையை குறைப்பதாக சியோமி அறிவித்துள்ளது. தற்போதைய விலை குறைப்புக்கு பின் Mi பவர் பேங்க் விலை 10,000 எம்.ஏ.ஹெச். மாடலுக்கு ரூ.799, 20,000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் 2i விலை ரூ.1,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி அறிமுகம் செய்த போதே பவர் பேங்களின் விலை இதே தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பவர் பேங்க்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான ஜி.எஸ்.டி. 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய Mi பவர் பேங்க் 2i பெயரை தவிர வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பழைய மாடல்களை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதன் அளவுகளில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பவர் பேங்களிலும் இருவித ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் லோ-பவர் மோட் வழங்கப்பட்டிருக்கிறது. பயனர்கள் இதனை ஆக்டிவேட் செய்ய பவர் பட்டனை இருமுறை அழுத்தினால் போதுமானது.
பவர் பேங்க் கொண்டு Mi பேன்ட் மற்றும் Mi ப்ளூடூத் ஹெட்செட்களை சார்ஜ் செய்ய முடியும். 10000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i மாடலில் மெட்டல் வடிவமைப்பும், 20000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i மாடலில் ABS ரக பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பவர் பேங்க் கைகளை விட்டு நழுவாமல் இருக்கும். #Xiaomi #GST
கூகுள் பிளே ஸ்டோரில் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் சமீபத்தில் மாற்றியிருக்கிறது. புதிய மாற்றங்கள் சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GooglePlay
கூகுள் பிளே ஸ்டோர் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன் படி குழந்தைகள் சார்ந்த செயலியில் வன்முறை மற்றும் ஆபாசம் சார்ந்த தீம்கள் அனுமதிக்கப்படாது. இதேபோன்று செயலிகளில் உள்ள ஆபாசம் மற்றும் வன்முறை விவரங்களை உடனடியாக நீக்கபக்படும்.
இத்துடன் வன்முறையை தூண்டுவது, மற்றவர்களின் நிறம், தோற்றம் அல்லது இதர அம்சங்களை வைத்து தீங்கு விளைவிக்கும் வகையிலான தரவுகளை கொண்ட செயலிகளை அனுமதிக்க முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. க்ரிப்டோகரென்சி மைனர்களுக்கு இனி கூகுள் பிளே ஸ்டோரில் இடம் கிடையாது என்பது புதிய விதிமுறைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மைனர்கேட், க்ரிப்டோ மைனர் மற்றும் நியோமைனர் என போன்று பல்வேறு மைனிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. முன்னதாக இதே ஆண்டில் க்ரோம் வெப் ஸ்டோரில் இருந்து க்ரிப்டோ மைனிங் எக்ஸ்டென்ஷன்களை கூகுள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்சமயம் வெடிபொருள் விற்பனை, ஆயுதங்கள் மற்றும் இதர உபகரணங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் செயலிகளை கூகுள் தடை செய்திருக்கிறது. இதேபோன்று ஒரு மாதிரியான பயனர் அனுபவம் மற்றும் ஒரே அம்சங்களை வழங்கும் செயலிகள் மற்றும் ஆட்டோமேட்டெட் டூல் மூலம் உருவாக்கப்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்படுகிறது.
மேலும் அதிகளவு விளம்பரங்களை வழங்குவது மற்றும் பயனர்களை அடிக்கடி திசைதிருப்பும் வகையிலான செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் முடக்கவிருக்கிறது. #GooglePlay #Apps
ஃபேஸ்புக் நிறுவன நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஃபேஸ்புக் இந்த ஆண்டு 42% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #Facebook #socialmedia
ஃபேஸ்புக் நிறுவன நிதிநிலை அறிக்கை ஜூன் 30, 2018 வரையிலான காலக்கட்டத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஃபேஸ்புக் நிறுவனம் 1323 கோடி டாலர்களை வருவாய் ஈட்டியிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் 932 கோடி அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்த நிலையில், மொத்தம் 42% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
ஃபேஸ்புக் மொத்த வருமானத்தில் அதன் விளம்பர பிரிவு மட்டும் 1303 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. ஜூன் 2018, வரையிலான காலக்கட்டத்தில் தினசரி ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 147 கோடியாகும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% அதிகரித்திருக்கிறது.
இதேபோன்று மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜூன் 30, 2918 வரையிலான காலக்கட்டத்தில் 223 கோடி ஆகும். 2018 இரண்டாவது காலாண்டில் மட்டும் ஃபேஸ்புக் மொபைல் விளம்பர பிரிவு வருவாய் அந்நிறுவன விளம்பர வருவாயில் 91% ஆகும். இது 2017 இரண்டாவது காலாண்டில் 87% ஆக இருந்தது.
ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் வியாபாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மக்களை ஒன்றிணைப்பதில் தொடர்ந்து அர்த்தமுள்ள வழிகளை கட்டமைப்பது மற்றும் மக்களை பாதுகாப்பாக வைப்பதில் தொடர்ந்து முதலீடு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையிலும் வியாபாரத்தில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டர் சேவைகள் துவங்கப்பட்டது. இதற்கென பி.எஸ்.என்.எல். நிறுவனம் இரண்டு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. #BSNL #telecom
ஆட்பே மொபைல் பேமென்ட் இந்தியா மற்றும் ப்ளின்ட்ரான் இந்தியா என இரண்டு விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். நிறுவன விர்ச்சுவல் நெட்வொர்க் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு விர்ச்சுவல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் தங்களது சிஸ்டம்களை பி.எஸ்.என்.எல். மொபைல் உள்கட்டமைப்புகளில் இணைத்து பயனர்களுக்கு சேவையை வழங்க இருப்பதாக பி.எஸ்.என்.எல். வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பே நிறுவனம் ஏரோவாய்ஸ் என்ற பிரான்டு பெயரில் இயங்குகிறது. இதன் மூலம் ஊரக பகுதிகளை டிஜிட்டல் முறையில் இணைக்க முடியும். அந்த வகையில் ஏரோவாய்ஸ் சிம் (வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை மட்டும்) மற்றும் ஐ.எஸ்.பி. (இன்டர்நெட் சேவை) சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ப்ளின்ட்ரான் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த சேவைகளை eSIM4Things என்ற பிரான்டு மூலம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் E&Y நிறுவனத்துடன் இணைந்து ரோபோடிக் பிராசஸ் ஆட்டோமேஷனை அறிவித்துள்ளது.
இதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணிகளை குறைந்த கட்டணத்தில் மிகச்சிறப்பாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க வழி செய்யலாம் என கூறப்படுகிறது.
மே 2016-இல் மத்திய டெலிகாம் துறை வெளியிட்ட விதிமுறைகளின் கீழ் விர்ச்சுவல் நெட்வொர்க் சேவையை துவங்கியிருக்கும் முதல் நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான். அந்த வகையில் புதிய விர்ச்சுவல் நெட்வொர்க் சேவையை துவங்குவதில் பி.எஸ்.என்.எல். மகிழ்ச்சியடைகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #BSNL #telecom
சோனி நிறுவனம் உலகின் அதிக ரெசல்யூஷன் கொண்ட ஸ்மார்ட்போன் கேமரா சென்சாரை (IMX586) அறிமுகம் செய்துள்ளது. #Sony #camera
சோனி நிறுவனம் IMX586 என்ற பெயரில் புதிய CMOS இமேஜ் சென்சாரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சென்சாரை அதிக பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வழங்க முடியும் என்பதோடு 0.8μm அளவில் உலகின் முதல் அல்ட்ரா-காம்பேக்ட் பிக்சல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
இதனால் இந்த சென்சாரை 1/2-வகை (8.0 மில்லிமீட்டர் டயகோனல்) சேர்ந்த யூனிட்டில் 48 மெகாபிக்சல்களை வழங்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள குவாட் பேயர் எனும் கலர் ஃபில்ட்டர் புகைப்படங்களை அதிக தரமுள்ளதாகவும், அதிக ரெசல்யூஷனில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியின் எக்ஸ்போஷர் கன்ட்ரோல் தொழில்நுட்பம் மற்றும் சிக்னல் பிராசஸிங் அம்சம் இமேஜ் சென்சாரில் பொருத்தப்பட்டுள்ளதால், கன நேரத்தில் அவுட்புட் வழங்குவதோடு, தலைசிறந்த டைனமிக் ரேன்ஜ் வழங்குகிறது. இது வழக்கமான சென்சார்களை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும்.

சோனி IMX586 சிறப்பம்சங்கள்
பிக்சல் எண்ணிக்கை – 8000 (H) × 6000 (V) 48 மெகாபிக்சல்; படம் அளவு - டயகோணல் 8.000mm (டைப் 1/2)
ஃபிரேம் ரேட் – ஃபுல் – 30fps; திரைப்படம் – 4K (4096×2160) – 90fps, 1080p – 240fps, 720p – 480fps(w/crop)
சென்சிடிவிட்டி (வழக்கமான அளவு: f5.6) – சரியாக. 133LSB
சென்சார் சாட்யூரேஷன் சிக்னல் அளவு (குறைந்தபட்ச அளவு) – சரியாக. 4500e
வோல்டேஜ் – அனலாக் 2.8V, 1.8V; டிஜிட்டல் 1.1V; இன்டர்ஃபேஸ் 1.8V
முக்கிய அம்சங்கள் – இமேஜ் பிளேன் ஃபேஸ்-வித்தியாசம் AF, HDR இமேஜிங்
வெளிப்பாடு – MIPI C-PHY1.0 (3 trio) / D-PHY 1.2 (4 lane)
கலர் ஃபில்ட்டர் அரே – குவாட் பேயர் அரே
படம் வெளிப்பாடு அமைப்பு – பேயர் RAW
சோனி IMX586 சாம்பிள் விலை 3,000 JPY இந்திய மதிப்பில் ரூ.1,860 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு இந்த சென்சார் செப்டம்பர் 2018 முதல் விநியோகம் செயய்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க இணைய வசதியை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Facebook #Athena
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தகவல் பரிமாற்றம் கடந்து நம் வாழ்வில் தவிர்க்க முடியாத டிஜிட்டல் களமாக மாறியிருக்கிறது. பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாய் இண்டர்நெட் வசதியை வழங்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதெனா (Athena) என்ற பெயரில் உருவாகும் ஃபேஸ்புக்கின் செயற்கைக்கோள் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய செயற்கைக்கோள் உலகில் இணைய வசதியில்லாத பகுதிகளில் சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஃஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் பாயின்ட் வியூ டெக் எல்.எல்.சி. என்ற பெயர் கொண்டிருக்கிறது.

புதிய திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம், எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சாஃப்ட் பேங்க்-இன் ஒபன்வெப் போன்ற நிறுவனங்களுடன் இணைகிறது. ஜூலை 2016 தேதியிட்ட மின்னஞ்சல் விவரங்கள் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயற்கைக்கோள் சார்ந்த இண்டர்நெட் திட்டத்தை துவங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இத்துடன் ஜூன் முதல் டிசம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் எஃப்.சி.சி. அதிகாரிகளிடையே பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனமும் அதெனா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.
புதிய திட்டம் குறித்து தற்சமயம் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை பிராட்பேன்ட் உள்கட்டமைப்புகளில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு, பிராட்பேண்ட் இணைப்பு முறையாக கிடைக்காத ஊரக பகுதிகளிலும் சீரான இணைய வசதியை வழங்க முடியும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Facebook #Athena
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்4 சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Samsung #GalaxyTab
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்4 டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய டேப்லெட்டில் சாம்சங் கைரேகை ஸ்கேனர் வழங்காதது தெரியவந்துள்ளது. அந்த வகையில் சாம்சங் தனது புதிய சாதனத்தில் ஐரிஸ் ஸ்கேனரை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் வீடியோவில் டேப் எஸ்4 மாடலில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. கேலக்ஸி எஸ்9 அல்லது எஸ்9 பிளஸ் மாடலில் இன்டெலிஜன்ட் ஸ்கேன் செட்டப் செய்யும் அனிமேஷன் வீடியோவே மீண்டும் கேலக்ஸி டேப் எஸ்4 ஃபர்ம்வேர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
இன்டெலிஜன்ட் ஸ்கேன் அம்சம் ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்கிறது. இரு தொழில்நுட்பங்ளில் ஏதேனும் இயங்காத பட்சத்தில் மற்றொன்று வேலை செய்யும்.

வைபை சான்றின் தகவல்களில் கேலக்ஸி டேப் எஸ்4 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என குறிப்படப்பட்டு இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி டேப் எஸ் 4 ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவிலேயே அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி வாட்ச் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. #Samsung #GalaxyTab
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி வாட்ச் சாதனம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote9 #smartwatch
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் FCC தளத்தில் SM-R815U மாடல் நம்பருடன் சான்று பெற்றிருக்கிறது. இதில் வாட்ச் சாதனம் 51.2 x 43.4 அளவில் 30.2 மில்லிமீட்டர் அல்லது 1.19 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்திருக்கிறது.
சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கியர் எஸ்4 சாதனம் தான் கேலக்ஸி வாட்ச் என்ற பெயரில் வெளியாகலாம் என தெரிவித்திருந்தது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களிலும் கேலக்ஸி வாட்ச் மற்றும் நோட் 9 ஒரே நிகழ்வில் அறிமுகமாகி, விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மட்டும் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக இருப்பதை சாம்சங் டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது.
கேலக்ஸி வாட்ச் சாதனம் டைசன் ஓ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் வெவ்வேறு அளவுகளில், இரண்டு வித வேரியண்ட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இந்த சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட உடல்நலம் சார்ந்த அம்சங்கள், உடற்பயிற்சி சார்ந்த தலைசிறந்த செயலிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கேலக்ஸி வாட்ச் முன்பதிவுகள் ஆகஸ்டு 14-ம் தேதி துவங்கலாம் என கூறப்படுகிறது, இதே தினத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகளும் துவங்கயிருக்கிறது. கேலக்ஸி சீரிஸ் முதல் வாட்ச் என்பதால், இந்த சாதனம் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. #GalaxyNote9 #smartwatch
2017 இறுதி காலாண்டில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் 5.8 கோடி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழு விவரங்களை பார்ப்போம். #Twitter
ட்விட்டர் தளத்தை பாதுகாப்பானதாகவும், இதில் போலி செய்திகளை பரப்பப்படுவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ட்விட்டர் மேற்கொண்டு வருகிறது. இதன் அங்கமாக பல்வேறு அக்கவுண்ட்களை ட்விட்டர் முடக்கி வருகிறது.
கடந்த வாரத்தில் வெளியான பல்வேறு அறிக்கைகளின்படி உலகின் பிரபல அரசியல் பிரமுகர்கள் முதல் பிரபல நட்சத்திரங்களை பின்தொடர்வோர் (ஃபாளோவர்) எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது. அதன்படி டொனால்டு டிரம்ப், ஒபாமா துவங்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரை அனைவரது ஃபாளோவர்களும் குறைந்தது அனைவரும் அறிந்ததே.
2017-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் 5.8 கோடி போலி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அசோசியேட்டெட் பிரெஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோசியேட்டெட் பிரெஸ் வெளியிட்ட தகவல்களுக்கு ட்விட்டர் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.
மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் அக்கவுண்ட்களை முடக்கியிருக்கிறது. ட்விட்டரின் அதிரடி நடவடிக்கையால் ட்விட்டர் ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
ட்விட்டரில் முடக்கப்படும் கணக்குகள் பெரும்பாலும், குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும், இந்த அக்கவுண்ட்கள் மாதாந்திர பயனர் கணக்கில் சேர்க்கப்படாது என கூறப்படுகிறது. எனினும் அக்கவுண்ட்களை முடக்குவதை ட்விட்டர் குறைப்பதாக தெரியவில்லை. #Twitter
90-ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த மெசன்ஜர் செயலி 20 ஆண்டுகளுக்கு பின் மூடுவிழா கண்டது. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #YahooMessenger
தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற மெசன்ஜர் சேவைகள் இன்று புகழின் உச்சியில் இருக்கும் நிலையில், 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த யாஹூ மெசன்ஜர் 20 ஆண்டு சேவையை நிறுத்தியது.
இன்றைய மெசன்ஜர் செயலிகளுக்கு சீனியராக இருக்கும் யாஹூ மெசன்ஜர் ஆப் பயனர்கள் தங்களது சாட் ஹிஸ்ட்ரியை டவுன்லோடு செய்ய ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. வெரிசான் எனும் டெலிகாம் குழுமத்தின் அங்கமாக இருக்கும் ஓத் நிறுவனம் யாஹூவை நிர்வகிக்கிறது.

யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக அந்நிறுவனம் ஸ்கூரில் (Squirrel) எனும் செயலியை உருவாக்கி வருகிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளின் வரவுக்கு பின் யாஹூ மெசன்ஜர் பயன்பாடு குறைய ஆரம்பித்தது.
மார்ச் 9, 1998-ம் ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை 1999-ம் ஆண்டு யாஹூ மெசன்ஜர் என பெயர் மாற்றப்பட்டது. யாஹூ மெசன்ஜர் சேவையை 12.26 கோடி பேர் பயன்படுத்தினர். சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ட்விட்டரில் யாஹூ மெசன்ஜர் நினைவலைகளில் 90-ஸ் கிட்ஸ் மூழ்கினர்.
எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய மாடல்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #SMARTTV
எல்ஜி நிறுவனத்தின் புதிய தொலைகாட்சி மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய டிவி மாடல்கள் OLED, சூப்பர் UHD, UHD மற்றும் ஸ்மார்ட் டிவி பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றில் ஆல்ஃபா 7 மற்றும் ஆல்ஃபா 9 பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. வாய்ஸ் கன்ட்ரோல், வெப் ஓ.எஸ். சப்போர்ட், மொபைல் ரெடி கனெக்ஷன் ஓவர்லே மற்றும் டால்பி அட்மாஸ் சரவுன்டு சவுன்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
அனைத்து எல்ஜி டிவி மாடல்களிலும் புதிய ரிமோட் கன்ட்ரோல் - மேஜிக் ரிமோட் என்ற பெயரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பாயின்ட், க்ளிக், ஸ்கிரால் மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். இன்டர்நெட் வசதி இல்லாமலும் 800-க்கும் அதிகமான வாய்ஸ் கமான்ட்களை புதிய டிவி மாடல்கள் சப்போர்ட் செய்கின்றன. இந்த டிவிக்கள் கேமிங் கன்சோல்களில் இருந்து சவுன்ட் பார் உள்ளிட்டவற்றை செட்டப் செய்யும் வழிமுறைகளுடன் வருகிறது.
இத்துடன் மொபைல் கனெக்ஷன் ஓவர்லே எனும் அம்சம் மொபைல் மற்றும் தொலைகாட்சி திரைகளை ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது. இத்துடன் பயனர்கள் கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றை எல்ஜி டிவியில் கிளவுட் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் ஆப் மூலம் பயன்படுத்த வழி செய்கிறது.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் ப்ளூடூத் அம்சம் கொண்டு பயனர்கள் டிவி ஆடியோக்களை, ப்ளூடூத் வசதி கொண்ட ஆடியோ சாதனம் அல்லது ஸ்மார்ட்போன்களில் கேட்டு ரசிக்க முடியும். மேலும் HDR, டால்பி விஷன், டெக்னிகலரின் மேம்படுத்தப்பட்ட HDR வசதி, HDR 10 ப்ரோ மற்றும் ஹெச்.எல்.ஜி. ப்ரோ உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.
எல்.ஜி.-யின் 2018 OLED டிவி மாடல்களில் ஆல்ஃபா 9 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது நாய்ஸ் ரிடக்ஷன் அம்சம், மேம்படுத்தப்பட்ட கலர் கரெக்ஷன் அல்காரிதம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து, உயர் ரக ஃபிரேம் ரேட் மூலம் நொடிக்கு 120 ஃபிரேம் தரத்தில் அதிக துல்லியமான மோஷன் படங்களை வழங்குகிறது.
எல்ஜி நிறுவனத்தின் 2018 சூப்பர் UHD டிவி மாடல்களில் 4K, தின்க் ஏ.ஐ. (ThinQ AI), ஆல்ஃபா 7 பிராசஸர், டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் நானோ செல் டிஸ்ப்ளே கிட்டத்தட்ட 100 கோடி நிஜ வாழ்க்கை நிறங்களை பிரதிபலிக்கிறது, இது வழக்கமான டிவி மாடல்களை விட 64 மடங்கு தரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு 2018 OLED மற்றும் சூப்பர் UHD டிவி மாடல்களிலும் 4K சினிமா HDR மற்றும் டால்பி அட்மாஸ் சார்ந்த சரவுன்டு சவுன்டு தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
எல்ஜி இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் புதிய டிவி மாடல்கள் 32 இன்ச் முதல் 77 இன்ச் விலை ரூ.32,500-இல் துவங்குகிறது. #SMARTTV
இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான் அம்சம் ஒருவழியாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram
இன்ஸ்டாகிராம் சேவையை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பயனர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய சமூக வலைத்தளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 270 கோடி பயனர்களுடன் ஃபேஸ்புக் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
சீரான இடைவெளியில் புதுப்புது அம்சங்களை வழங்கி வரும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஸ்டிக்கர் மூலம் கேள்விகளை ஸ்டோரியில் கேட்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட் இல் அந்நிறுவனம் அடாப்டிவ் ஐகான் அம்சத்தை சேர்த்து இருக்கிறது.
இத்துடன் இன்ஸ்டா அக்கவுன்ட்களை மிக எளிமையாக வெரிஃபை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் வெரிஃபிகேஷன் செய்வதற்கான விண்ணப்பம் செயலியிலேயே வழங்கி இருக்கிறது.
ஆல்ஃபா ஆன்ட்ராய்டு அப்டேட் 55.0.0.0.33 மூலம் இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்களது சாதனம் வழங்கும் சப்போர்ட்-க்கு ஏற்ப ஐகான் வடிவம் மாறும். முன்னதாக இன்ஸ்டாகிராம் ஐகான் சாதனம் எவ்வித சப்போர்ட் வழங்கினாலும் சதுரங்க வடிவிலேயே இருந்தது. தற்சமயம் அடாப்டிவ் ஐகான் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இன்ஸ்டா ஐகான் வடிவம் மாறும்.
அனைத்து சாதனங்களிலும் புதிய அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும், எனினும் பயனர்கள் ஏ.பி.கே. மிரர் (APK Mirror) மூலம் முன்கூட்டியே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பொது மக்களும் வெரிஃபிகேஷன் பேட்ஜ் பெற விண்ணப்பிக்க எளிமையான வழிமுறையை இன்ஸ்டாகிராம் உருவாக்கி வருவாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சம் உருவாக்கப்படுவதை இன்ஸ்டாகிராம் உறுதி செய்திருப்பதாகவும், "இந்த அம்சம் மூலம் இன்ஸ்டா வாசிகள் தங்களுக்கான வெரிஃபிகேஷனை அவர்களாகவே விண்ணப்பிக்க முடியும் என்றும், இன்ஸ்டாவில் வெரிஃபைடு பெறும் வழிமுறையை புரிந்து கொள்ள முடியும். பொது மக்களுக்கு வெரிஃபிகேஷன் வழங்குவதன் மூலம் இன்ஸ்டாவாசிகளை பாதுகாக்க முடியும்." என இன்ஸ்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது
இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் வெரிஃபிகேஷன் பெற விண்ணப்பிக்கும் படிவம் சேர்க்கப்படுவதாகவும், இந்த படிவம் ஆஸ்திரேலியாவில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும், மேலும் சில பெயர் தெரிவிக்கப்படாத நாடுகளில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அம்சம் வரும் வாரங்களில் மற்ற பகுதிகளில் உள்ள ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #instagram #InstaStories
புகைப்படம்: நன்றி Android Police






