search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yahoo"

    • பணி நீக்க அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    கொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இணைதள தேடிபொறி நிறுவனமான 'யாகூ' 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பொருளாதார நிலைத்தன்மையின்மை காரணமாக செலவை குறைக்க தங்கள் நிறுவனத்தின் 12 சதவிகித ஊழியர்களான 1,000 பேரை யாகூ இந்த வாரம் பணி நீக்கம் செய்ய உள்ளது. அதேபோல், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய யாகூ திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
    நியூயார்க்:

    பிரபல பன்னாட்டு நிறுவனமான ‘யாகூ’ சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது. சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது.

    இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ‘யாகூ’ நிறுவனம் சீனாவில் தற்போது நிலவும் சட்ட ரீதியிலான நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தது.

    அதன்படி ‘யாகூ’ நிறுவனம் தனது சேவையை சீனாவில் உள்ள பயனாளர்களுக்கு நிறுத்தி விட்டது. இதுகுறித்து ‘யாகூ’ நிறுவனம் தரப்பில் கூறும் போது, ‘சீனாவில் தொழில் செய்ய சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவும் சிக்கலான சட்டநிலை காரணமாக ‘யாகூ’வின் அனைத்து சேவைகளும் கடந்த 1-ந் தேதி முதல் சீனாவில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ‘யாகூ’ நிறுவனம் பயனாளர்களின் உரிமைகள் இலவச மற்றும் திறந்த இணையம் ஆகியவற்றில் எப்போதும் உறுதியாக உள்ளது. இதுவரை சீனாவில் எங்களுக்கு ஆதரவு அளித்த வர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளது.

    மைக்ரோ சாப்ட்

    கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது நிறுவனமாக ‘யாகூ’ சீனாவில் இருந்து வெளியேறி உள்ளது.

    90-ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த மெசன்ஜர் செயலி 20 ஆண்டுகளுக்கு பின் மூடுவிழா கண்டது. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #YahooMessenger



    தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற மெசன்ஜர் சேவைகள் இன்று புகழின் உச்சியில் இருக்கும் நிலையில், 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த யாஹூ மெசன்ஜர் 20 ஆண்டு சேவையை நிறுத்தியது.

    இன்றைய மெசன்ஜர் செயலிகளுக்கு சீனியராக இருக்கும் யாஹூ மெசன்ஜர் ஆப் பயனர்கள் தங்களது சாட் ஹிஸ்ட்ரியை டவுன்லோடு செய்ய ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. வெரிசான் எனும் டெலிகாம் குழுமத்தின் அங்கமாக இருக்கும் ஓத் நிறுவனம் யாஹூவை நிர்வகிக்கிறது.



    யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக அந்நிறுவனம் ஸ்கூரில் (Squirrel) எனும் செயலியை உருவாக்கி வருகிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளின் வரவுக்கு பின் யாஹூ மெசன்ஜர் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. 

    மார்ச் 9, 1998-ம் ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை 1999-ம் ஆண்டு யாஹூ மெசன்ஜர் என பெயர் மாற்றப்பட்டது. யாஹூ மெசன்ஜர் சேவையை 12.26 கோடி பேர் பயன்படுத்தினர். சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ட்விட்டரில் யாஹூ மெசன்ஜர் நினைவலைகளில் 90-ஸ் கிட்ஸ் மூழ்கினர்.
    ஓத் இன்க் நிறுவனம் யாஹூ மெசன்ஜர் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஒத் இன்க் நிறுவனம் யாஹூ மெசன்ஜர் சேவை ஜூலை 17-ம் தேதி முதல் இயங்காது என அறிவித்துள்ளது. 

    யாஹூ மெசன்ஜர் உலகின் முதல் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாகும். யாஹூ மெயில் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த யாஹூ ஐடி அப்படியே இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சேவையை நிறுத்துவதை அந்நிறுவனம் முடிவு செய்யவில்லை என்றாலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இதர சாட் செயலிகளின் ஆதிக்கம் காரணாகவே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓத் நிறுவனம் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெசன்ஜர் சேவையை நிறுத்தியது. 

    தகவல் பரிமாற்ற வழிமுறைகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது, வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    கடந்த மாதம் யாஹூ நிறுவனம் ஸ்கூரில் எனும் மெசேஜிங் செயலியை சோதனை செய்து வந்தது. அந்த வகையில் இந்த செயலி யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெசன்ஜர் செயலியின் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறு மாதங்களுக்கு டவுன்லோடு செய்ய முடியும் என அறிவித்துள்ளது. 

    யாஹூ மெசன்ஜர் செயலி மார்ச் 9, 1998-ம் ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு, ஜூன் 21, 1999-ம் ஆண்டு ரீபிரான்டிங் செய்யப்பட்டது. அந்த வகையில் யாஹூ மெசன்ஜர் ஆப் ஜூலை 17, 2018-இல் நிறுத்தப்படுகிறது.
    ×