என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஸ்மா்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • புதிய ஐகூ 15 மாடலில் மிகப்பெரிய 8000மிமீ ஒற்றை அடுக்கு வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

    ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி, சீன சந்தையில் ஐகூ 15 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் 2K+ 144Hz 8T LTPO ஃபிளாட் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இது உலகின் முதல் 2K LEAD OLED தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. குறைந்த மின் நுகர்வு, அதிக பிரகாசம், மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு, மெலிதான வடிவமைப்பு மற்றும் உலகின் முதல் மகிழ்ச்சியான கண் பாதுகாப்பு 2.0 ஆகியவற்றை வழங்குகிறது.

    இந்த ஸ்மா்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கிறது. 16 ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ப்ரோ ரேம் மற்றும் 1 டிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. புதிய ஐகூ 15 மாடலில் மிகப்பெரிய 8000மிமீ ஒற்றை அடுக்கு வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க ஐகூ 15 ஸ்மார்ட்போன் OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 50MPஅல்ட்ரா-வைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 50MP சோனி ப்ரோ-லெவல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன.



    புதிய ஐகூ 15 ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    விலை விவரங்கள்:

    சீன சந்தையில் புதிய ஐகூ 15 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 4199 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,780 என துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • 13 இன்டிகேட்டர்களை அளவிடும் வசதியை வழங்குகிறது.
    • புதிய ஒப்போ வாட்ச் S மாடல் வைப்ரன்ட் கிரீன், ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ வாட்ச் S என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டைலிஷ் வட்ட-வடிவ டயல், மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இது வெறும் 8.9 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இதன் எடை சுமார் 35 கிராம் ஆகும்.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய 16-சேனல் ஆப்டிகல் பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் 8-சேனல் ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய ஒப்போ வாட்ச் S மாடலில் ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் கேஸ், சிறந்த இருப்பிட துல்லியத்திற்கான இரட்டை அதிர்வெண் GPS மற்றும் கொழுப்பை எரிக்கும் பகுப்பாய்வை வழங்கும் AI ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளரையும் கொண்டுள்ளது.

    கூடுதலாக, இது ECG, இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன், மணிக்கட்டு வெப்பநிலை, தூக்கம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட 13 இன்டிகேட்டர்களை அளவிடும் வசதியை வழங்குகிறது.



    புதிய ஒப்போ வாட்ச் S மாடல் வைப்ரன்ட் கிரீன், ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ வாட்ச் S சில்வர் மற்றும் பிளாக் வேரியண்ட்கள் CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ. 16,030) என்றும் டூயல்-டோன் கிரீன் வேரியண்ட் CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ. 18,498) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
    • ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத இறுதியில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதி

    சீனாவின் வெய்போ தள பதிவில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) அறிமுகம் செய்யப்படும் என்று கூறியது.

    இது ஒன்பிளஸ் 15ஐ போன்ற கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ்15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 இரண்டும் ஒப்போ இ-ஷாப், ஜெடி மால் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அக்டோபர் 27 அறிமுகத்திற்குப் பிறகு அவை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 1.5K OLED ஸ்கிரீன் கொண்டிருக்கலாம். இத்துடன் 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 1.5K BOE OLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அண்மையில் நாடு தழுவிய அளவில் BSNL நிறுவனத்தில்'4G' சேவை தொடங்கபட்டது.
    • தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

    இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் அண்மையில் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கியது.

    இதனையடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினர். இந்நிலையில், தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

    அதன்படி ரூ.1 செலுத்தி புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை பெறலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும் என்றும் நவம்பர் 15 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன.
    • M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ சீரிசை அப்டேட் செய்துள்ளது. இவை கடந்த ஆண்டு வெளியான M4 சிப்செட் கொண்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐபேட் ப்ரோ சமீபத்திய M5 சிப்செட் கொண்டிருக்கின்றன.

    இந்த டேப்லெட் வழக்கம் போல் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இவை புதிய M5 சிப்செட் உடன் வருகிறது. இதன் 256GB மற்றும் 512GB மாடல்களில் 9-கோர் CPU உடன் 3 பெர்ஃபார்மன்ஸ் கோர்கள் மற்றும் 12GB RAM உள்ளது. இதன் 1TB மற்றும் 2TB மாடல்களில் 10-கோர் CPU மற்றும் 16GB RAM உள்ளது. இவை இரண்டும் 10-கோர் GPU மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளன.

    ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன. அவை 50% வேகமான செல்லுலார் தரவு செயல்திறனை உறுதியளிக்கின்றன. மேலும் செயலில் உள்ள செல்லுலார் பயனர்களுக்கு, M4 உடன் ஐபேட் ப்ரோவை விட 30% வரை குறைவான மின் பயன்பாட்டை உறுதியளிக்கின்றன என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடலில், வைஃபை 7, ப்ளூடூத் 6 மற்றும் த்ரெட் ஆகியவற்றை இயக்கும் புதிய ஆப்பிள் வடிவமைத்த வயர்லெஸ் நெட்வொர்க்கிங் சிப்: N1 இடம்பெற்றுள்ளது. 5GHz நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது N1 சிறந்த செயல்திறனைக் கொண்டுவருகிறது. மேலும் பெர்சனல் ஹாட்ஸ்பாட் மற்றும் ஏர் டிராப் போன்ற அம்சங்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறதும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.



    M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது. ஆப்பிளின் புதிய 40W டைனமிக் பவர் அடாப்டர், 60W மேக்ஸ் ஆப்ஷனல் யுஎஸ்பி சி பவர் அடாப்டர் பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.

    ஐபேட் ப்ரோ (2025) சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜிபி மாடல் ரூ. 99,900 என்றும், ஐபேட் ப்ரோ 11-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,19,900 என்றும் ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வை-பை) 256 ஜிபி ரூ. 1,29,900 என்றும்

    ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,49,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2025 ஐபேட் ப்ரோ மாடல்கள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

    • உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.
    • சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.

    ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.

    இந்தியாவை சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு சேவை பெரும் வெற்றி பெற்றிருப்பது பெருமையான தருணம் ஆகும். பெர்ப்ளெக்சிட்டி சாதாரண சாட்பாட் சேவையாக மட்டுமின்றி தேடல் (Search), உரையாடல் (Cha), மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக இருக்கிறது.

    மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏஐ செயலியின் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் இதன் வெற்றியை எடுத்துக்காட்டுகின்றன.

    தீபாவளி சீசனில் பெர்ப்ளெக்சிட்டியின் வெற்றி, இந்திய தொழில்நுட்பத் துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.

    • IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.
    • ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.

    சந்தைக்கு புதிதாக வந்திருக்கும் விவோ V60e, பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக, 200MP கேமராவுடன் ரூ.29,999 விலையில் கிடைக்கிறது. AI பெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

    6,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய விவோ V60e ஸ்மார்ட்போன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன் டச் ஓஎஸ் கொண்டிருக்கும் விவோ V60e ஸ்மார்ட்போனிற்கு, ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்டுகள் வழங்குவதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போன்றவை இதன் மதிப்பை உயர்த்துகிறது.

    • இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
    • பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சங்கள் எழுந்தன.

    இந்நிலையில், திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் புதிய நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

    இதன்மூலம் அபாயகரமான மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் உள்ளடக்கங்களை இனி 18 வயதுக்குக் குறைவானவர்களால் பார்க்க முடியாது. அதன்படி பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டை காட்சிகள் அல்லாத வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது

    இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் இந்த நடைமுறை அறிமுகமாகிறது

    • புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது.
    • ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.

    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X300 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ ஸ்மார்ட்வாட்ச் அலுமினிய அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் GT2 என அழைக்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 2.5D வளைந்த 2.07-இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் சதுரங்க டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ப்ளூடூத், இசிம் (eSIM) ஆப்ஷன்களில் வருகிறது.

    விவோ வாட்ச் GT2 மாடல் ப்ளூ ஓஎஸ் 3.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் படிப்புகளுடன் 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது. இந்த வாட்ச் பல்வேறு வண்ணங்களில் வருகிறது. இத்துடன் பொருந்தக்கூடிய வாட்ச் டயல்கள் உள்ளன.

    மேலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது. இசிம் பயன்படுத்தும் பட்சத்தில், இது 8 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.

    விலை விவரங்கள்:

    புதிய விவோ வாட்ச் GT2 புளூ, ஸ்பேஸ் வைட், பிளாக் மற்றும் பின்க் வண்ணங்களில் வருகிறது. இதன் ப்ளூடூத் வேரியண்ட் விலை CNY 499 (இந்திய மதிப்பில் ரூ. 6,220) ஆகவும், இசிம் வேரியண்ட் விலை CNY 699 (இந்திய மதிப்பில் ரூ. 8,710) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு மின்னஞ்சல்கள் வருகின்றன
    • அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

    வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு வரும் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் உங்களின் PIN, கடவுச்சொற்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட ரகசியத் தகவல்களைக் கோராது.

    இந்த மோசடி மின்னஞ்சல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று, உங்களின் நிதித் தகவல்களைத் திருடும் Phishing மோசடியின் ஒரு பகுதியாகும்.

    சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் அல்லது இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.

    எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, புதுப்பிக்கப்பட்ட ஆன்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும்.

    இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை webmanager@incometax.gov.in மற்றும் incident@cert-in.org.in ஆகிய முகவரிகளுக்கு அனுப்பிவிட்டு, உடனடியாக அந்த மின்னஞ்சலை நீக்கிவிடுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.  

    • அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல.
    • ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன.

    ஒப்போ நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி சீன சந்தையில் தனது ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிவிக்க இருக்கிறது. புதிய ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ தவிர, ஒப்போ பேட் 5 டேப்லெட் மற்றும் ஒப்போ வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களையும் ஒப்போ நிறுவனம் இதே நிகழ்வில் வெளியிட உள்ளது.

    இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனி வெளியீட்டு நிகழ்வை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், இந்தியாவில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸில் இந்தியா வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

    ஒப்போ ஃபைண்ட் X9 வெளியீடு

    இந்திய சந்தையில் டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த மாடல்கள் நவம்பரில் நடைபெறும்.

    அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல. சமீபத்திய தகவல்களில் ரியல்மி நிறுவனம் தனது GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடலாம் என்றும், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இரு மாடல்களும் அசத்தலான புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
    • பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.

    இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபாரத் மொபைல் போன்களுக்கான புதிய சேஃப்டி-ஃபர்ஸ்ட் (Safety First) திறனை அறிமுகப்படுத்தியது. இது குடும்ப தகவல் தொடர்பை மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் ஜியோவின் மலிவு விலை 4ஜி தொலைபேசி தளத்திற்குள் ஸ்மார்ட் இணைப்பு மற்றும் டிஜிட்டல் பராமரிப்பை இணைத்து குடும்பங்கள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட உதவுகிறது.

    ஜியோபாரத் சேஃப்டி ஃபர்ஸ்ட் தீர்வு, குடும்பங்கள் குழந்தைகள், வயதான பெற்றோர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்க எளிய, பாதுகாப்பான வழியை வழங்குகிறது, இவை அனைத்தும் அவர்கள் தூரத்திலிருந்து கூட. ஜியோ இந்த பாதுகாப்பு தொகுப்பை "பாதுகாப்பு கேடயம்" என்று குறிப்பிடுகிறது.

    முக்கிய அம்சங்கள்:

    இருப்பிட கண்காணிப்பு: அன்புக்குரியவரின் இருப்பிடம் குறித்த நிகழ்நேர அப்டேட்களை வழங்குகிறது.

    யூசேஜ் மேனேஜர்: யார் அழைக்கலாம் அல்லது செய்தி அனுப்பலாம், தெரியாத எண்களைத் தடுக்கலாம் மற்றும் கவனச் சிதறல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம்.

    சேவை ஆரோக்கியம்: நிலையான இணைப்பை உறுதி செய்வதற்காக பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் வலிமை குறித்த நேரடி விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

    எப்போதும் கிடைக்கும்: அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.

    இந்திய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது

    குழந்தைகளுக்காக: அழைப்பு மற்றும் இருப்பிடக் கட்டுப்பாட்டுடன், சமூக ஊடக வெளிப்பாடு இல்லாமல் பாதுகாப்பான தகவல்தொடர்பை செயல்படுத்துகிறது.

    வயதான பெற்றோருக்கு: மன உறுதிக்காக ஆரோக்கியம் மற்றும் லொகேஷன் அப்டேட்களுடன் கூடிய எளிய இன்டர்ஃபேஸ் வழங்குகிறது.

    பெண்களுக்கு: பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.

    IMC25 இல், ஜியோ இந்த அம்சங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் மன அமைதியை எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் காட்டும் நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளை நிரூபித்தது - ஒவ்வொரு இந்தியருக்கும் தொழில்நுட்பம் என்ற அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    ஜியோபாரத் சேஃப்டி-ஃபர்ஸ்ட் போன்கள் ரூ. 799 விலையில் கிடைக்கின்றன.

    ×