search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் முற்றுகை"

    • காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
    • கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களையும், பயிர்களையும் அழிக்கும் காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி இன்று பாளை பெருமாள்புரத்தில் உள்ள நெல்லை மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் ஆபிரகாம் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியதாவது:-

    நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்துள்ளோம். மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் வன விலங்குகள் ஏற்படுத்தும் சேதங்கள் தான்.

    காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் மானாவாரி பயிர்களை கூட விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறோம்.

    நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட எந்த பயிர்களுக்கும் ஆதார விலை கூட அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை நன்றாகப் பெய்து தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி உள்ளோம்.

    எனவே காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் எவ்வித சிரமமும் இன்றி விவசாயத்தில் ஈடுபட முடியும்.

    100 சதவீதம் நடக்க வேண்டிய விவசாயம் தண்ணீர் இருந்தும் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் 40 சதவீதம் தான் நடக்கிறது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அவை வீணாகி விடுகிறது.

    இந்த கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கொடுவாய், செங்காட்டு பாளையத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வந்தது.
    • திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கொடுவாய், செங்காட்டு பாளையத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தை திருச்சி துறையூரை சேர்ந்த செல்வகுமார், சுந்தரமூர்த்தி மற்றும் கொடுவாய் செங்காட்டு பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் சுமார் 1000- க்கும் மேற்பட்டோர் பால் வழங்கி வந்தனர். மேலும் இந்த நிறுவனம் மாத கணக்கில் பால் கொள்முதலுக்கான பணத்தை வழங்காமல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிறுவனத்தின் முதலாளிகள் திடீரென தலைமறைவாகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பால் கொள்முதல் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் துணை வட்டாட்சியர், பல்லடம் காவல் ஆய்வாளர், அவினாசிபாளையம் போலீசார், தெற்கு அவினாசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகசுந்தரம், மாநில பொது செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் பால் பணம் பாக்கி கொடுக்காமல் வைத்துவிட்டு, பால் பண்ணை மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உரிய தொகை வழங்காததால் கடந்த 6-மாதத்திற்கு முன்பு, அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.
    • இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே வி.கூத்தம்பட்டி வழியாக விருதுநகரிலிருந்து கோயம்புத்தூருக்கு உயர் மின் கோபுரம் செல்கிறது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரக்கல் ஊராட்சியில் வீ.கூத்தம்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி, வடக்கு மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்ததற்கு உரிய தொகை வழங்காததால் கடந்த 6-மாதத்திற்கு முன்பு, அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.

    அதன்பின்னர் அவர் நடவடிக்கை எடுத்ததின் பேரில் விவசாயிகள் சிலருக்கு மட்டும் மின்வாரிய அதிகாரிகள் பணம் வழங்கியுள்ளனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் வீ.கூத்தம்பட்டிக்கு சென்ற மின்வாரிய அதிகாரிகளை இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தி.மு.க. ஒன்றியகுழு உறுப்பினர் வீ.கூத்தம்பட்டியை சேர்ந்த செல்வி காங்கேயன் கூறுகையில் விவசாயிகளிடம் இடம் கேட்க வரும்போது அதிகாரிகள் உங்கள் இடத்திற்குரிய பணத்தை தருகிறோம் என கூறி 3 வருடங்கள் ஆகிறது. இதுநாள்வரை முறையாக உரிய நிவாரண பணம் தரவில்லை. அதனால் இங்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியிடம் புகார் செய்துள்ளோம் என்றார். விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும், பராமரிப்பு முறைகளை மாற்றியும் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் கடந்த 6 மாதங்களாக வேளாண்மை துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது.
    • மர்ம பூச்சியை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் நிலக்கோட்டை வேளா ண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    நிலக்கோட்டை.:

    நிலக்கோட்டை அருகே முருகத்தூரான்பட்டி, சிலுக்குவார்பட்டி, கட்ட க்கூத்தன்பட்டி பள்ளபட்டி, கொடைரோடு, கொங்க பட்டி, ஆவாரம்பட்டி, கல்லடிபட்டி, குரும்பபட்டி, அக்கரகாரபட்டி, காமலாபுரம், அழகம்பட்டி, மைக்கேல் பாளையம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரபரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மல்லிகை பூ செடியில் மர்ம பூச்சி தாக்கு தல் காரணமாக பூக்கள் அரும்பிலேயே கருகி உதிர்கிறது. இதனால் செடிகள் முற்றிலும் கருகி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும், பராமரிப்பு முறைகளை மாற்றியும் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் கடந்த 6 மாதங்களாக வேளாண்மை துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது.

    ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், மல்லிகை பூச்செடியை தாக்கி அழிக்கும் மர்ம பூச்சியை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் நிலக்கோட்டை வேளா ண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து அறிந்ததும் வேளாண்மைத்துறை துணை இயக்குனர் உமா அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வேளாண் ஆராய்ச்சி ஆய்வு மேற்கொண்டு மர்ம பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    • காடையாம்பட்டி அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் குண்டுக்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இந்த சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள், கடந்த 6 ஆண்டு காலமாக பயிர் கடன், நகை கடன், மாடு வாங்க கடன் ஆகிய எந்த லோன் கேட்டாலும் இன்று, நாளை என்று அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ஊர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • வில்லிபாளையம் அருகே உள்ள சுண்ணாம்பு கரட்டையில் திருநாகேஸ்வர் நீரேற்று பாசன சங்கம் உள்ளது.
    • பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி தண்ணீரை பெறுவதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 300 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன நீர் கேட்டு தலா ஒரு லட்சம் வீதம் முன் பணமாக கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, வில்லிபாளையம் அருகே உள்ள சுண்ணாம்பு கரட்டையில் திருநாகேஸ்வர் நீரேற்று பாசன சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக நாமக்கல் தாலுகா, கீரம்பூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2020- ஆம் ஆண்டு ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி காவேரி ஆற்றில் இருந்து நீரேற்று பாசன திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைத்து அதன் மூலம் குச்சிபாளையம், கீரம்பூர், வரப்பாளையம், வில்லியம்பாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி தண்ணீரை பெறுவதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 300 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன நீர் கேட்டு தலா ஒரு லட்சம் வீதம் முன் பணமாக கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பணம் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பாசனத்திற்கான காவேரி தண்ணீரை பெற்றுத்தர எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தண்ணீருக்காக பணம் கொடுத்த விவசாயிகள் பாசன சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு பலமுறை கேட்டுள்ளனர்.ஆனால் பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் நேற்று கீரம்பூரில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் போலீசார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோபாலகிருஷ்ணன் விவசாயிகளிடம் பெற்ற முன் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100- க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    • பட்டா வழங்காததை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிறுவளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான இடம் உளியநல்லூர் கிராமத்தில் உள்ளதாகவும், அந்த இடத் தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்ட இருப்ப தால் அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருவாய்துறையினருக்கு கடந்த சில மாதங்களாக கோரிக்கை வைத்துவந்தனர்.

    இந்நிலையில் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் வருவாய் துறையினரை கண்டித்து பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் சுபாஷ், ராஜமாணிக்கம், சுப்பிரமணி, மணி, ஆதிமூலம், தினகரன், ரவிச்சந்திரன், கிருஷ்ணன், தேவராஜ், நரசிம்மன், சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்
    • 100 நாள் வேலை திட்ட நிதி குறைப்பை கண்டித்து முற்றுகை நடைபெற்றது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 100 நாள் வேலை திட்ட நிதி குறைப்பை கண்டித்தும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பிள்ளையார்நத்தம் 100 நாட்கள் பயனாளி க்கு சம்பளத்தை பாதியாக குறைத்ததை கண்டித்தும் முற்றுகை போராட்டம் சங்க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் வெள்ளைச்சாமி, ஜெயராமன், காசிமாயன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×